வெள்ளி, 5 டிசம்பர், 2025

தமிழக விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றாத தமிழக அரசுக்கு நடைபெற உள்ள 2026 சட்டமன்ற தேர்தலில் தக்க பாடம் புகட்டி வீட்டிற்கு அனுப்புவார்கள். உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க தலைவர் வேலுச்சாமி அறிக்கை.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு.

தமிழக விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றாத தமிழக அரசுக்கு நடைபெற உள்ள 2026 சட்டமன்ற தேர்தலில் தக்க பாடம் புகட்டி வீட்டிற்கு அனுப்புவார்கள். உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க தலைவர் வேலுச்சாமி அறிக்கை. 

திமுக தலைமையிலான தமிழக அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் விவசாயிகளித்த வாக்குறுதியை எதுவும் தற்போது தற்பொழுது வரை நிறைவேற்றவில்லை என்பது தமிழக விவசாயிகளின் குற்றச்சாட்டாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். 
அந்த அறிக்கையில், 
தமிழக விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து, தமிழ்நாடு அரசு ஆவின் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யும் பாலின் விலையை உயர்த்தி அறிவிக்க கோரி வைத்த கோரிக்கையை நிறைவேற்றதாத திமுக அரசுக்கு தமிழக விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் வருகின்ற 2026 ல் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் சமட்டி அடி கொடுத்து வீட்டுக்கு அனுப்புவார்கள் என உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் இந்த அறிக்கையின் மூலம் திமுக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன் என சங்கத்தின் மாநில தலைவர் வேலுச்சாமி தெரிவித்துள்ளார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: