சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
இந்திய அரசியல் அமைப்பு தந்தையின் 69 வது நினைவு தினம். மக்கள் தேசம் கட்சியின் சார்பில் பாபா சாகேப் அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.
இந்திய அரசியலமைப்பின் தலைவரும் சட்ட மாமேதையும் பாபாசாகேப் என்று அனைவராலும் போற்றப்படும் அண்ணல் அம்பேத்கரின் 69 ஆவது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனைத்து அரசியல் கட்சியினராலும் அனுஷ்டிக்கப்பட்டது. அதன்படி மக்கள் தேசம் கட்சியின் சார்பில் சட்ட மாமேதையின் நினைவு தினத்திற்கு மரியாதை செய்யும் நிகழ்வு சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் சி கலைவாணன் தலைமை தாங்கி, ஓமலூர் பேருந்து நிலையம் அருகே உள்ள சட்ட மாமேதியின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தார்.
தொடர்ந்து சேலம் மாநகர மாவட்டத்தின் செயலாளர் வீராணம் அம்பேத்கர் அவர்கள் தலைமையில் சேலம் மாவட்டம் மைய நூலகத்தின் அருகே அமைக்கப்பட்டுள்ள இந்திய அரசியல் அமைப்பின் தலைவர் சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வுகளில் சேலம் மாவட்ட நிர்வாகிகள் மேற்கு மாவட்ட மாநகர நிர்வாகிகள், பிர்தீவ், L.K.ராஜ், அன்வர், தர்ஷன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



0 coment rios: