வெள்ளி, 26 டிசம்பர், 2025

த.வெ.க உயர் மட்ட குழு மாநில ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்த தேசிய மக்கள் கட்சி நிர்வாகிகள்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

த.வெ.க உயர் மட்ட குழு மாநில ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்த தேசிய மக்கள் கட்சி நிர்வாகிகள்.

தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை ஒட்டி தற்பொழுது தமிழக தேர்தல் களம் தற்பொழுதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் உயர்மட்ட குழு மாநில ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் தமிழக அமைச்சருமான செங்கோட்டையன் அவர்களை ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில், தேசிய மக்கள்  கட்சியின் மாநிலத் தலைவர் சீனிவாசன், தேசிய செயலாளர் அசோக் சாமி மற்றும் தமிழ்நாடு மாநில செயலாளர் ராம்ஜி மற்றும் ஈரோடு மாவட்ட தலைவர் தங்கவேல் உள்ளிட்ட நிர்வாகிகள்  மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
அப்போது செங்கோட்டையன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தியும் பூங்கொத்து கொடுத்தும் மரியாதை செய்த தேசிய மக்கள் கட்சி நிர்வாகிகளுக்கு, பதிலுக்கு செங்கோட்டையன் அவர்களும்  அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி தனது மரியாதையை திரும்ப செலுத்தினார். மரியாதை நிமித்தமாகவும் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு கூட்டணி அமைப்பது தொடர்பாகவும் நடைபெற்ற சிறிய ஆலோசனை கூட்டத்தில்,
இரு கட்சிகளின்  செயல்பாடுகள் குறித்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகவும், இதுபோக பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் தெரிகிறது. இந்த மரியாதை நிமித்த நிகழ்வின் போது தேசிய மக்கள் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் தர்மன் உள்ளிட்ட மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: