புதன், 31 டிசம்பர், 2025

சேலத்தில் தமிழ்நாடு அணி திரட்டும் அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் நலச்சங்க அலுவலகம் திறப்பு விழா.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலத்தில் தமிழ்நாடு அணி திரட்டும் அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் நலச்சங்க அலுவலகம் திறப்பு விழா. 

சேலத்தில் தமிழ்நாடு அணி திரட்டும் அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் நலச்சங்கம் தொழிலாளர்களின் நலன் கருதி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவ்வப்போது பல்வேறு போராட்டங்களை மேற்கொள்ளப்படுவதோடு அவர்களுக்கான தேவையும் பூர்த்தி செய்து தருகிறது. இந்த அமைப்பிற்கான அலுவலகம் திறப்பு விழா இன்று சேலத்தில் நடைபெற்றது. UTUC தொழிற்சங்கத்தின் மாநில தலைவர் ராஜேந்திரன் வரவேற்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் புரட்சிகர சோசலிஸ்ட்  கட்சியின் மாநில செயலாளர் ஜீவானந்தம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி புதிய அலுவலகத்தை தொடங்கி வைத்தார். 
மேலும் அமைப்பின் செயல்பாடுகள் குறித்தும் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் இனி மேற்கொள்ள போகும் நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்ட சிறிய இந்த கூட்டத்தில், சேலம் மாவட்ட ஆட்டோ தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம், பி.எஸ்.பி மாவட்ட குழு உறுப்பினர் ராஜகுரு, சாம்ராஜ், Ryf நிர்வாகிகள் தினேஷ், குமார் மற்றும் வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: