வெள்ளி, 2 ஜனவரி, 2026

ஈரோட்டில் தனியார் குடோனில் தீ விபத்து!!!


ஈரோடு சுல்தான்பேட்டை வீதியில் உள்ள ஜெஃப்ரி என்பவருக்கு சொந்தமான நேஸ்கோ பிளாஸ்டிக் குடோனில் திடீர் தீ விபத்து... 

குடோனில் பணியாற்றிக் கொண்டிருந்த ஊழியர் அவசர அவசரமாக வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்...

குடோனில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அட்டை பெட்டிகள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதம்....


ஈரோட்டை சேர்ந்த ஜெஃப்ரி என்பவர் "நேஸ்கோ பிளாஸ்டிக்" என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார், 

இவர் பிளாஸ்டிக் பொருட்கள்,  பிளாஸ்டிக் பைகள், வீட்டு உபயோக பொருட்கள் என பல்வேறு வகையான பொருட்களை விற்பனை செய்வதற்காக ஈரோடு மாநகரின் பல்வேறு பகுதிகளில் கடைகளை நடத்தி வருகிறார், 

இந்நிலையில், ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட கடைவீதி அருகே உள்ள சுல்தான்பேட்டை வீதியில் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் அட்டை பெட்டிகள் பொருட்களை அடுக்கி வைக்கப்பட்டிருந்த குடோனில் இன்று காலை ஊழியர் ஒருவர் திறந்து பணியாற்றிக் கொண்டிருந்தபோது,, எதிர்பாராதவிதமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டது, உடனடியாக குடோனிலிருந்து அவசர அவசரமாக வெளியேறிய ஊழியர், கடையின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்து, தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: