சேலம்.
S.K. சுரேஷ்பாபு
சேலம் சிறுமலர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்று அசத்தல். வெற்றியாளர்களுக்கு ஆசிரியர் பெருமக்கள் வாழ்த்து.
சேலம் சிறுமலர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு மத்தியில் நடத்தப்பட்ட இளம் வயது தடகள வீரர்களுக்கான கண்டுபிடிப்பு போட்டியில் 100 மீட்டர், 200 மீட்டர் ,400 மீட்டர் ஓட்டத்திலும் மற்றும் 600 மீட்டர் ஓட்டத்திலும், நீளம் தாண்டுதல் ,உயரம் தாண்டுதல் ,குண்டேறிதல் வட்டு எறிதல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்கள், பதக்கங்களை முன்னாள் மாணவரும், மாநில வருவாய்த்துறை துணைத் தலைவரும் அர்த்தநாரி அவர்கள் மாணவர்களுக்கு வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
மற்றும் மாவட்ட தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் யுதிஷ்டன் குண்டு எறிதல் போட்டியில் முதலிடம், வட்டு எறிதல் போட்டியில் இரண்டாம் இடம், உயரம் தாண்டுதலில் உதயகுமார் இரண்டாம் இடமும் பெற்று மாநில அளவிலான குடியரசு தின போட்டிக்களிலும் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கான பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர். இப்பள்ளியின் தலைமையாசிரியர் அருட்திரு ஜோதி பெர்னாண்டோ உதவி தலைமை ஆசிரியர் அருட்திரு டேவிட் கலந்துகொண்டு மாணவர்களை பாராட்டினர். பள்ளியின் உடற்கல்வி இயக்குனர் ராபர்ட் அவர்களும், உடற்கல்வி ஆசிரியர்கள் சுவாமிநாதன்,அல்போன்ஸ், அந்தோணி ராஜ் ஆகியோர் ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.வெற்றி பெற்ற மாணவர்களை ஆசிரியர்கள் மாணவர்கள் ஆகியோர் பாராட்டினர்.



0 coment rios: