சனி, 31 ஜனவரி, 2026

குடியரசு கல்வி கலைக்கூடம் ரீபப்ளிக் எஜிகேசன் அகாடமி சேலத்தில் திறப்பு... எதிர்காலத்தில் தமிழக முழுவதும் 38 மாவட்டங்களிலும் விரிவுபடுத்த உள்ளதாக அகாடமியின் நிறுவனர் சரஸ்ராம் ரவி தகவல்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

குடியரசு கல்வி கலைக்கூடம் 
ரீபப்ளிக் எஜிகேசன் அகாடமி சேலத்தில் திறப்பு... எதிர்காலத்தில் தமிழக முழுவதும் 38 மாவட்டங்களிலும் விரிவுபடுத்த உள்ளதாக அகாடமியின் நிறுவனர் சரஸ்ராம் ரவி தகவல்.

சேலம் மாநகரம் அஸ்தம்பட்டி பகுதியில் தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு கட்சியின் சேலத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் குடியரசு கல்வி கலைக்கூடம் திறப்பு விழா நடைபெற்றது. ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி முன்னேற்றத்திற்காக ரிபப்ளிக் எஜுகேஷனல் அகாடமி என்ற புதிய அமைப்பை நிறுவனரும் தலைவருமான சரஸ்ராம் ரவி ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். அமைப்பின் மாநில மற்றும் மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டத்தில், அமைப்பின் செயல்பாடுகள் குறித்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டன. தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் குடியரசு கல்வி கலைக்கூடத்தின் நிறுவனரும் தலைவருமான சரஸ்ராம் ரவி செய்தியாளர்களை சந்தித்தபோது, ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கான கல்வி திறனை மேம்படுத்தும் வகையில் குறிப்பாக யுபிஎஸ்சி டிஎன்பிஎஸ்சி வங்கி ரயில்வே இன்சூரன்ஸ் பொதுத்துறை போன்ற வேலைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது மேலும் உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கான கவுன்சிலிங் பாடமுறை கல்வி தாட்கோ கடன் வசதி அனைத்து வங்கி கடன் வசதி வாகன காப்பீடு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் எனவும், 
தற்போது அனைத்தும் தனியார் மையமாக மாற்றப்படுவதால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமையை நிலைநாட்டும் போரிட்டு தனியார் பணியிடங்களில் இட ஒதுக்கீடு முறை அமல்படுத்தப்படவில்லை எனவும் இட ஒதுக்கீட்டை பயன்படுத்தி ஒடுக்கப்பட்ட மற்றும் சாதாரண ஏழை எளிய மக்களின் வாழ்வாதார தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளதாகவும்,
தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் பயிற்சி மையங்கள் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர் மேலும் முதற்கட்டமாக சேலம் கோவை செங்கல்பட்டு மதுரை ஆகிய நான்கு மாவட்டங்களில் பயிற்சி மையங்கள் துவங்கப்பட்டுள்ளது எனவும் தொடர்ந்து பயிற்சிகள் வழங்க உள்ளதாக அமைப்பின் நிறுவனர் சரஸ்ராம் ரவி தெரிவித்தார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: