சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக விவசாயிகளின் பக்கம் அரசியல் கட்சிகளின் கவனம் திரும்பும் வகையில், 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள தமிழக விவசாயிகள் சங்கத்தின் மகாசபை கூட்டம்.
உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மகாசபை கூட்டம் திருவண்ணாமலை மாவட்டம் தோக்கவாடியில் நடைபெற்றது. தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் வேலுச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த மகாசபை கூட்டத்தில், மாநிலத் துணைத் தலைவர்கள் மூர்த்தி, ராஜா பெருமாள், மாநில பொதுச்செயலாளர் ஏழுமலை, மாநில பொருளாளர் மோகன் குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து நடைபெற்ற மகாசபை கூட்டம் நடைபெற்றது.
உழவர் பெருந்தகை நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கத்தின் வளர்ச்சி பணிகள் குறித்தும் தமிழக விவசாயிகளின் எதிர்கால நலன் மற்றும் தேவைகள் குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்ட இந்த மகாசபை கூட்டத்தில், தமிழக விவசாயிகள் சங்கத்தின் சில நிர்வாகிகள் மாற்றம் குறித்தும் சங்க பைலாவில் உள்ள சில விதிமுறைகளை திருத்தம் செய்வது சம்பந்தமாகவும் தமிழக விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கைகளை வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சியினரிடம் தேர்தல் வாக்குறுதிகள் பெறுவது சம்பந்தமாக விவசாயிகளின் கோரிக்கைகளை அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று அரசியல் கட்சியை தலைவர்களை ஈர்க்கும் வகையில் நடைபெற்ற மகாசபை கூட்டத்தில் 32 தீர்மானங்கள் கொண்டு வந்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் வேலுச்சாமி முன்மொழிந்தார். அதன் பின்னர் தீர்மானங்கள் நிறைவேற்றுவது சம்பந்தமாக நிர்வாகிகள் அனைவரும் விவாதித்து ஏக மனதாக 32 தீர்மானங்களும் திருவண்ணாமலையில் நடைபெற்ற மகாசபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
32 தீர்மானங்களில் முக்கிய மூன்று தீர்மானங்களாக, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் ஏற்றம் பெற நாடு முழுவதும் விவசாயிகள் உற்பத்தி செய்த வழி பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும், அமெரிக்காவுடன் உணவு தானியங்கள் மற்றும் வேளாண் சார்ந்த பொருட்களுக்கு தடையற்ற ஒப்பந்தம் செய்ய மத்திய அரசு மீண்டும் முயற்சித்தால் நாடு முழுவதும் ஒரே அணியாக திரண்டு மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் மேற்கொள்ளவும் தயங்க மாட்டோம் மற்றும் தமிழக விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பெற்ற பயிர் கடன் மற்றும் பண்ணை சாரா கடன்களை தமிழக அரசு முழுவதும் தள்ளிப்படை செய்ய வேண்டும் இதே போல மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் தமிழக விவசாயிகள் பெற்ற பயிர் கடன்கள் மற்றும் பண்ணை சாரா கடன்களையும் மத்திய அரசு முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உட்பட தமிழக விவசாயிகளின் நலன் கருதி 32 முக்கிய தீர்மானங்கள் இந்த மகாசபை கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன. 2026 சட்டமன்ற தேர்தல் தேதி தற்போது வரை அறிவிக்கப்படாத நிலையிலேயே தமிழக தேர்தல்களும் தற்பொழுது சுட்டெரிக்க தொடங்கியுள்ள வெயிலை காட்டிலும் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் தற்போது தமிழக விவசாயிகளின் மகாசபை கூட்டம் அனைத்து அரசியல் கட்சிகளின் கவனத்தையும் ஈர்க்கும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை.



0 coment rios: