சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் கோட்டை மேல் தெரு புதிய பள்ளிவாசல் திறப்பு. அமைச்சர் ராஜேந்திரன் மற்றும் மேயர் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை.
சேலம் மாநகரம் கோட்டை மேல் தெரு பகுதியில் சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் புதுப்பிக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது. நூறாண்டு பழமை வாய்ந்த இந்த பள்ளிவாசல் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு ஜமாத்தின் முத்தவல்லி அமான் என்கின்ற நாசர்கான் என்கிற அம்மன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர். புதிய பள்ளிவாசலை முஸ்லிம் எஜுகேஷனல் சொசைட்டி பொதுச் செயலாளர் கே ஜியாவுதீன் அஹமத் திறந்து வைத்தார். இதில் இஸ்லாமிய பெருமக்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் பலரும் பங்கேற்றனர்.



0 coment rios: