சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலத்தில் குடிநீர் குழாயில் சாக்கடை கழிவு நீர். வேறு இடத்திற்கு மாற்றித் தர விடுதலை சிறுத்தைகள் கட்சி மனு.
பொதுமக்கள் பயன்படுத்தி வரும் குடிநீர் குழாயில் சாக்கடை கழிவுநீர் கலந்து வருவதால் குடிநீர் குழாயை வேறு இடத்திற்கு மாற்றி தர வேண்டும் எனவும் தெரு விளக்குதி அமைத்து தர வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சேலம் மாநகர மாவட்டம் சார்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
சேலம் மாநகரம் ஐம்பதாவது டிவிஷனுக்கு உட்பட்ட பகுதிகளில் எண்ணற்ற குடும்பங்கள் வசித்து வருகின்றனர் குறிப்பாக இங்கு பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீர் குழாயில் சாக்கடை கழிவுநீர் சேர்ந்து வருவதால் சுகாதார சீர்கேடு நிலவி வருவதாகவும் குறிப்பாக பெண்கள் முதியவர்கள் குழந்தைகள் பாதிப்பு ஏற்படுகிறது.இது சம்பந்தமாக மாநகராட்சி அதிகாரிகளிடம் மன அழுத்தம் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்தனர், மேலும் பகுதியில் உள்ள தெருவிளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைவதாக தெரிவித்து உடனடியாக மாவட்ட நிர்வாகம் சார்பில் பிரச்சனைகளை சீர்படுத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர மாவட்ட செயலாளர் காயத்ரி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.



0 coment rios: