சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் நடந்து வரும் அத்துமீறல்கள், இன்னல்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் தொழிலாளர் இணை ஆணையர் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசின் நிறுவனர் சரஸ்ராம் ரவி வலியுறுத்தல்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சேலம் ஜங்ஷன் இரயில்வே சரக்கு லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் + ஓட்டுநர்கள் + கூலி தொழிலாளர்கள் பல்வேறு இன்னல்கள் கொடுமைகள் , அத்து மீறல்கள் குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் உடனடியாக தொழிலாளர் இணை ஆணையர் விசாரணைக்கும், அங்கு நிலவும் அத்துமீறல் குறித்து சேலம் கோட்டாச்சியர் அவர்களின் விசாரணைக்கு உத்தரவு வழங்கி நீண்ட நாள் நிலவி வரும் சட்டத்திற்கு பறம்பான, தொழிலாளர்களுக்கு எதிரான, கலவரத்தை, சட்ட ஒழங்கை பாதுகாத்திட சேலம் கோட்டம் இரயில்வே நிர்வாகத்தை அழைத்து விசாரித்து வெள்ளை அறிக்கை வெளியிட தேசிய ஒடுக்கபட்ட மக்கள் குடியரசு ( இந்தியா ) வலியுறுத்துகின்றது.
மேலும் இது குறித்து உண்மை அறியும் குழ ( Fact Finding Committee ) அங்கே சென்று விசாரணை செய்து முழு அறிக்கை மாவட்ட ஆட்சியர் மற்றும் சேலம் மாநகர காவல் ஆணையரிடம் அறிக்கை சமர்ப்பிக்கும் என்றும் தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு நிறுவனங்கள் மற்றும் தலைவருமான சரஸ்ராம் ரவி, வழக்கறிஞர். எழமலை
( மாநில தலைவர் - தமிழ்நாடு ), சி.அறிவழகன்
சி.நல்லநம்பி
அ சத்தியபிரியன்
ஜங்ஷன்ஜான்பீட்டர், வழக்கறிஞர்.TK ரமேஷ்குமார்
வழக்கறிஞர்.பூமொழி.
வழக்கறிஞர்.விஜயகுமார் உள்ளிட்டோரியின் சார்பாக செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.



0 coment rios: