சனி, 14 பிப்ரவரி, 2026

அரசு பணிகளில் பார்வையற்றவர்களுக்கான உள் இட ஒதுக்கீடு சதவிகிதத்தை தமிழக அரசு முயற்சி தர வேண்டும். பார்வையற்ற ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் அரசுக்கு கோரிக்கை.

சேலம். 
S.K. சுரேஷ் பாபு. 

அரசு பணிகளில் பார்வையற்றவர்களுக்கான உள் இட ஒதுக்கீடு சதவிகிதத்தை தமிழக அரசு முயற்சி தர வேண்டும். பார்வையற்ற ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் அரசுக்கு கோரிக்கை.

தமிழ்நாடு பார்வையற்ற ஆசிரியர்கள் சங்கத்தில் நிர்வாகிகள் கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு பார்வையற்ற ஆசிரியர்கள் சங்கத்தின் சேலம் கிளை தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்க, பேராசிரியர் ஜாகிர் உசேன், மதுரை கிளை முருகேசன், பாலாஜி மற்றும் சேலம் கிளை பொருளாளர் கருணாநிதி போலிட்டோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் சேலம் கிளை செயலாளரும் தமிழ்நாடு பார்வையற்றோர் ஆசிரியர்கள் சங்க பொதுச் செயலாளருமான ரஜினிகாந்த் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், சங்கத்தின் செயல்பாடுகள் குறித்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்ட கூட்டத்தில்,  பார்வையற்ற ஆசிரியர்களுக்கான கோரிக்கைகள் குறித்து பல்வேறு பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன. 
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், தங்களது நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண் நிர்ணயம் தொடர்பான சிக்கல்களை எதிர்கொண்டு வருவதாகவும் தமிழ்நாடு அரசு கடந்த ஜனவரி மாதம் 28ஆம் தேதி வெளியிட்ட அரசாணையில் மாற்றுத்திறனாளி தேர்வுகளுக்கு டெட் தேர்வில் 50 சதவீதம் குறைந்தபட்ச மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் மேலும் தமிழ்நாடு அரசு கடந்த 25 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி வெளியிட்ட அரசானையில் சிறுபான்மையினர் பணிநிலை தொடர்ச்சி மற்றும் பதவி உயர்விற்காக டெட் தேர்வு எழுத தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பார்வையற்ற திறன் குறைபாடு உடையவர்களுக்கான கல்வி பயிற்சி மற்றும் தாமதமான வேலை வாய்ப்பு ஆகியவை தங்களது வாழ்க்கையில் மிகவும் கடினமான நிலைக்கு தள்ளியுள்ளதாக வேதனை தெரிவிக்கப்பட்ட கூட்டத்தில் தங்களது பல்வேறு கோரிக்கைகள் குறித்து தமிழக அரசிடம் பலமுறை போராட்டங்கள் மாநாடு வாயிலாக தெரிவிக்கப்பட்ட போதும் தமிழக அரசால் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றும் தமிழக அரசை வலியுறுத்தும் வகையில் அனைத்து ஜனநாயக முறையிலும் போராட்டங்களில் ஈடுபடுவோம் என்பதை தெரிவித்துக் கொள்வதாக சங்க நிர்வாகிகளால் தெரிவிக்கப்பட்டது. 
ஏற்கனவே தங்களுக்கு பல்வேறு கோரிக்கைகள் தமிழக அரசால் தற்பொழுது வரை நிறைவேற்றப்படாமல் உள்ளதாகவும், குறிப்பாக பார்வையற்ற ஆசிரியர்களுக்கான அரசு உள் இட ஒதுக்கீட்டில் தற்போது உள்ள சதவிகிதத்தில் இருந்து கூடுதல் சதவிகிதம் வழங்கினால் மேலும் உள்ள தகுதியான நபர்கள் பயன் பெறுவார்கள் என்றும் வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, புதிதாக அமையும் அரசின் முதலமைச்சர் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் என்றும் தங்களது நம்பிக்கையை வெளிப்படுத்தினர். 
இந்த நிர்வாகிகள் கூட்டத்தில் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: