சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் சர்க்கார் கொல்லப்பட்டியில் ஸ்ரீ மாரியம்மனின் கணவரின் இறந்த தூக்கம் தாளாமல் திருத்தேர் தூக்கி வழிபாடு செய்த நூதனத் திருவிழா. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட ஊர்வலம்.
சேலத்தை எடுத்துள்ள சர்க்கார் கொல்லப்பட்டியில் ஆண்டுதோறும் மாசி மாத துவக்கத்தில் அங்குள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் விழா எடுப்பது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டிற்கான திருவிழா இன்று தொடங்கியது. சர்க்கார் கொல்லப்பட்டி மேட்டுக்காடு தண்ணீர் டேங்க் அருகே அலங்கரிக்கப்பட்ட மலர் பள்ளத்தில் அம்மனின் கணவர் இறந்ததைப் போன்று சித்தரித்து, சேலம் தாரமங்கலம் பிரதாத சாலையின் வழியாக ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட அம்மனின் கணவனாக கருதப்படும் இந்த வினோத ஊர்வலத்தில் ஏராளமான ஆண் பெண் பக்தர்கள் கலந்து கொண்டு வண்ணத்தில் வண்ண வண்ண பொடியை பூசிக்கொண்டும், வழி நெடுங்கிடும் சவ ஊர்வலத்தில் என்னென்ன சாங்கிய சம்பிரதாயங்கள் செய்வார்களோ அதன்படி மேற்கொண்டு இந்த விழா நடைபெற்றது.
இந்த தேர்த்துக்கும் விழாவானது இறுதியில் சர்க்கார் கூறப்பட்டிய ஸ்ரீ மாரியம்மன் கோவிலை அடைந்ததும் அங்குள்ள ஒரு முச்சந்தியில் இதற்கான சாங்கிய சம்பிரதாயங்கள் அனைத்தையும் செய்து அனைவரும் விடை பெற்றனர் என்பது இந்த விழாவின் நிதர்சனம். இந்த விழாவை பொருத்தவரை கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பகுதியில் இந்த விழா முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இந்த விழாவில் கலந்து கொள்பவர்கள் அனைவருக்கும் அதாவது எந்த விதமான தீட்டும் இல்லாமல் சுத்தபத்தமாக கலந்து கொள்ளும் மக்களுக்கு அம்மனின் அருளால் அத்துணை செல்வ வளங்களும் கிடைக்கும் என்பதால் அதீத ஆர்வத்துடன் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொள்வதாக அந்த திருக்கோவிலை சேர்ந்த நிர்வாகியும் அந்தப் பகுதியை சேர்ந்த மூத்தவருமான கோபால் நம்மிடையே தெரிவித்தார். தேர் தூக்கும் நண்பர்கள் குழுவின் சார்பாக 56 ஆவது ஆண்டாக நடத்தப்படும் இந்த விழா மிக சிறப்புடன் காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புடன் நடத்தப்பட்டதாக அந்த தேர் தூக்கும் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த கோபால், இளங்கோ ராமமூர்த்தி கண்ணன் மற்றும் சென்ராயன் என்பவர்களால் தெரிவிக்கப்பட்டது.



0 coment rios: