வெள்ளி, 1 மே, 2026

மே-1 தொழிலாளர் தின வாழ்த்துக்களுடன், சேலத்தில் சாதனையாளர்களுக்கு குடியரசு சிறப்பு விருதுகள் வழங்கி கௌரவிப்பு.

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

மே-1 தொழிலாளர் தின வாழ்த்துக்களுடன், சேலத்தில்  சாதனையாளர்களுக்கு குடியரசு  சிறப்பு விருதுகள் வழங்கி கௌரவிப்பு. 

உலக தொழிலாளர் தினத்தை ஒட்டி, தேசிய ஒடுக்கபட்ட மக்கள் குடியரசு மற்றும் மத்திய- மாநில அரசு & பொதுதுறை ஊழியர்கள்  தொழிலாளர்கள் ஓய்வூதியர்கள் கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பாக பல்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்திய  சமூக சேவையாளர்களுக்கு  குடியரசு விருதுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.  
சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு, தேசிய ஒடுக்கபட்ட மக்கள் குடியரசு நிறுவன தலைவரும், மத்திய, மாநில மற்றும் அரசு  பொதுதுறை ஊழியர்கள்  தொழிலாளர்கள் ஓய்வூதியர்கள் கூட்டமைப்பு முதன்மை ஒருங்கிணைப்பாளருமான சரஸ்ராம் ரவி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில்,
அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்தும் மேற்கொள்ளப்பட்ட வரும் நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பல்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் இடம் பிடித்த சமூக செய்வதற்கு குடியரசு விருதுகள் வழங்கி அமைப்புகளின் தலைவர் சரஸ்ராம் ரவி வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். இந்த நிகழ்வில் அமைப்புகளின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் சேலம் மாநகரின் முக்கிய பிரமுகர்கள் என  திரளானவர்கள் பங்கேற்றனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: