வியாழன், 5 செப்டம்பர், 2024

சேலத்தில் பூமியை பாதுகாப்போம் - வருங்கால தலைமுறைக்காக " என்ற தலைப்பில்  சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட இருசக்கர வாகனப் விழிப்புணர்வு பேரணி..

சேலத்தில் பூமியை பாதுகாப்போம் - வருங்கால தலைமுறைக்காக " என்ற தலைப்பில் சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட இருசக்கர வாகனப் விழிப்புணர்வு பேரணி..

சேலம்.
S.K. சுரேஷ் பா.

பூமியை பாதுகாப்போம் - வருங்கால தலைமுறைக்காக " என்ற தலைப்பில்  இருசக்கர வாகனப் விழிப்புணர்வு பேரணி..

சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரியின் 
இருநூறுக்கும் மேற்பட்ட மாணவர்களும், ஆசிரியர்களும் "பூமியை பாதுகாப்போம் - வருங்கால தலைமுறைக்காக" என்ற தலைப்பில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றனர்.
இதில் சிறப்பு விருந்தினராக சேலம்  பாராளுமன்ற உறுப்பினர்       திரு.டி .எம்.செல்வகணபதி அவர்கள் பேரணியை துவங்கி வைத்தார். 
இந்த பேரணி சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் இருந்து தொடங்கி, கோரிமேடு, சேலம் மாவட்ட நீதிமன்றம், அஸ்தம்பட்டி, சாரதா கல்லூரி சாலை, 5 சாலை, AVR ரவுண்டானா, கொண்டலம்பட்டி ரவுண்டானா, சீலநாய்க்கன்பட்டி ரவுண்டானா, அம்மாப்பேட்டை, மிலிட்டரி ரோடு, TMS ஷெட், மேம்பாலம், 7 ஆர்ட்ஸ்  கலைக் கல்லூரி ஆகிய முக்கிய இடங்களை கடந்து மீண்டும் சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் நிறைவுற்றது. இது சுற்றுச்சூழல் விழிப்புணர்வை மேம்படுத்தி, நிலைத்தன்மை வாய்ந்த மாற்றுகளைப் பயன்படுத்தும்படி ஊக்குவிக்கும் என்பதற்காக இந்த பேரணி நடைபெற்றது. 
இதனிடையே நடைபெற்ற நிகழ்ச்சியில், கல்லூரியின் தலைவர் திரு.த.சரவணன் அவர்கள் பேசும்போது ஏற்காடு மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள் திடக்கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளால் அதன் செழுமையை இழந்து நாளுக்கு நாள் சீரழிந்து வருகிறது, உடைந்த மதுபாட்டில்களின் துண்டுகள் ஏற்காடு சுற்றுலாத் தலங்களின் பாதைகளில் குவிந்து கிடப்பதால், வன விலங்குகளும், சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர் மக்களுக்கும் பெரிதளவில் பாதிக்கப்படுகின்றனர். சுற்றுசூழல் பாதிப்பு அடையும்போது அதனால் மக்களே அதிகம் பாதிப்படைகின்றனர். பொதுவாக காடுகளில் முன்பெல்லாம் அதிகமான காட்டு விலங்குகள் வசித்து வந்தன, மரங்கள் வெட்டப்படுவதும் பிளாஸ்டிக் பயன்பாடும் அதிகரித்து வருவதால் இயற்கை மாசு அடைந்து வருகிறது ஆதலால் விலங்குகளின் வாழ்வதற்கான அமைவிடம் தேடி வேறு இடத்திற்கு சென்றுவிட்டன. ஆதலால் தற்போது அதன் எண்ணிக்கைகள் குறைந்து கொண்டே வருகின்றன. இதுவரை பூமியில் சுமார் 1500 கோடிகளுக்கு மேலான மரங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. இதனால் மனிதர்களின் வாழ்வாதராமும் பாதிக்கப்படுகிறது. இனிவரும் காலங்களில் நாம் இயற்கையை பாதுகாத்தால் மட்டுமே இனிவரும் சந்ததியினருக்கு மாசு இல்லாத காற்று மற்றும் சுத்தமான குடிநீர் கிடைக்கும்    என்றும்  கூறி நீர்நிலைகள் குறைந்து வீட்டுமனைகளாக  மாறிவருகின்றன. இதனை தடுக்க வேண்டும் என்றும், தமிழர்களாகிய நாம் இயற்கையை சார்ந்தே அனைத்து பண்டிகைகளையும் கொண்டாடி வருகிறோம் ஆதலால் இனிவரும் காலங்களில் இயற்கையை பாதுகாக்க முக்கிய பங்காற்றவேண்டும் என்றும் கூறினார்.  இதனை தொடர்ந்து ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலாதலங்கலில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தடை செய்ததைப்போல ஏற்காட்டிலும் முற்றிலுமாக தடை செய்ய வலியுறுத்தி ஆயிரத்து நானூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கையொப்பமிட்ட நகலை இனைத்து சிறப்பு விருந்தினர் திரு.டி.எம்.செல்வகணபதி அவர்களிடம் கடிதம் வழங்கினார்.
சிறப்பு விருந்தினர் திரு.செல்வகணபதி அவர்கள் பேசும்போது இயற்கையை பாதுகாக்கவும், இயற்கை முறையில் விவசாயம் செய்யவும் அரசாங்கம் தனி கவனம் செலுத்தி வருகின்றது என்றும், இயற்கையை அளித்து வருவதால் மனிதர்கள் அதிகமாக நோய் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர் இயற்கை விவசாயம் செய்யாமல் அதில் உரம், பூச்சிகொல்லி மருந்து போன்றவைகளை பயன்படுத்தி பயிர்கள் விளைவிப்பதால் அதனை உண்டு மக்கள் புற்று நோய் மற்றும் குழந்தையின்மை போன்ற பிரச்சினைகள் அதிகமாகி வருகின்றனர். அதே போல மக்கள் தற்போது துரித உணவு மற்றும் பாக்கெட்டில் அடைத்த உணவுகளை அதிகம் உண்பதாலும் புற்று நோய்கள் அதிகமாகி வருகின்றன. தற்போது குளத்தில் உள்ள நீரில் கூட மாசு கலந்துள்ளது என்றும் அதனால் வண்டல் மண் பாதிப்படைந்து வருகின்றது என்றும் இதனால் விவசாயம் பாதிக்கப்படுகிறது என்றும் கூறினார். தொழிற்சாலைகள் மூலமாக வெளிவரும் கழிவுகளின் மூலம் சுற்றுசூழல் பாதிப்படைகின்றது என்றும் மரங்களை வெட்டுவதால் இயற்கை அதிகம் பாதிக்கப்படுகின்றது  என்றும் ஆதலால் விலங்குகளின் எண்ணிக்கை குறைந்து வருகின்றது, இந்நிலையை மாற்ற அவசியம் மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும் என்றும் அந்த விழிப்புணர்வு இந்த இருசக்கர வாகன பேரணியின் மூலம் வாய்ப்பாக கிடைக்கும் என்றும் கூறினார். 

இந்த நிகழ்வு, பிளாஸ்டிக்குகளை தவிர்ப்பது, துணிப் பைகளை பயன்படுத்துவது, மறுசுழற்சி கொள்கைகளை பின்பற்றுவது மற்றும் விநாயகர் பூஜைக்காக பிளாஸ்டர் ஆப் பாரிஸால் ஆன விநாயகர் சிலைகளுக்கு மாறாக களிமண்ணால் ஆன சிலைகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கருத்துகளின் முக்கியத்துவத்தை முன்னிறுத்தி நடைபெற்றது. இதில் மாணவர்கள் தமிழக அரசு துவக்கி வைத்த “என் குப்பை என் பொறுப்பு” என்ற வாசகம் அடங்கிய பேனருடன் மக்களுக்கு சுற்றுபுறத்தூய்மையை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதற்கான விரிவான ஏற்பாடுகளை கல்லூரியின்   சுற்றுச்சூழல் குழு உறுப்பினர்களும்,  இளம் செஞ்சிலுவை குழு உறுப்பினர்களும் இணைந்து சிறப்பாக  செய்திருந்தனர்.
நல்லாசிரியர்களுக்கு வெள்ளி நாணயங்கள் வழங்கி கௌரவித்து ஆசிரியர் தின விழா கொண்டாடிய சிந்தி இந்து அரசு உதவி பெறும் பள்ளி நிர்வாகம்.

நல்லாசிரியர்களுக்கு வெள்ளி நாணயங்கள் வழங்கி கௌரவித்து ஆசிரியர் தின விழா கொண்டாடிய சிந்தி இந்து அரசு உதவி பெறும் பள்ளி நிர்வாகம்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

ஆசிரியப் பெருமக்களுக்கு வெள்ளி நாணயங்களை வழங்கி கௌரவித்து, சேலம் சிந்தி இந்து அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியர் தின விழா உற்சாகம். 

ஆசிரியராக தனது பணியை தொடங்கி பேராசிரியராக உயர்ந்து, நாளடைவில் இந்திய குடியரசுத் தலைவராக அலங்கரித்த டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் விழாவை நாடு முழுவதும் ஆசிரியர் தின விழாவாக, ஆண்டுதோறும்  செப்டம்பர்-5ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சேலம் குச்சிபாளையம்  நாராயண நகர் பகுதியில் உள்ள ஹிந்தி இந்து அரசு உதவி பெறும் பள்ளியில் தேசிய ஆசிரியர் தின விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. ஸ்ரீ சிந்தி கல்வியா அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்ற இந்த விழாவிற்கு, பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி லதா தலைமை தாங்கினார். விழாவில் பள்ளியின் தலைவர் ராம்சந்த் கிங்கர், தாளாளர் நரேஷ் கிங்கர் மற்றும் பொருளாளர் தீபக் கதீஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கினை ஏற்றி வைத்தும்,  டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தும் விழாவை சிறப்பித்தனர். 
தொடர்ந்து நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியப் பெருமக்களின் பணி சிறக்கவும் அவர்களது பணியை பாராட்டியும் ஒவ்வொரு ஆசிரியர் பெருமக்களுக்கும் வெள்ளி நாணயங்களை வழங்கி கௌரவித்தனர். தொடர்ந்து நடைபெற்ற முறை இந்த பள்ளியின் பவள விழா ஆண்டில் பள்ளிக்கு அதிக நன்கொடை வசூலித்துக் கொடுத்த தலைமை ஆசிரியர் திருமதி லதா, ஆசிரியர் திரு. ஜெகதீஸ்வரன் மற்றும் திருமதி மேகலை ஆகியோருக்கு நினைவு பரிசுகளை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தனர். இதனை அடுத்து நடைபெற்ற பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு முன்னாள் குடியரசுத் தலைவர் காலம் சென்ற டாக்டர் ராதாகிருஷ்ணன் குறித்து பேசியது அனைவரின் பாராட்டுகளையும் பெற்றது. தொடர்ந்து சிறப்பாக ஆசிரியர் பெருமக்கள் குறித்து பாராட்டி பேசிய மாணவ மாணவிகளுக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் நினைவு பரிசுகளை வழங்கி பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர். 
இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் உட்பட ஆசிரியப் பெருமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.