வெள்ளி, 28 மார்ச், 2025
விலையில்லா வேஷ்டி சேலை உற்பத்தியின் நெசவுக் கூலியை 10 சதவீதம் உயர்வு: முதலமைச்சருக்கு தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு நன்றி தெரிவித்து தீர்மானம்
பெருந்துறை அருகே பள்ளி சிறுவன் மீது போக்சோ வழக்கு
பெருந்துறை அருகே 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 17 வயது பள்ளி மாணவன் மீது போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில், 17 வயது சிறுவன் 12ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் 14 வயது சிறுமி ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இருவரும் கடந்த இரண்டு மாதங்களாக பழகி வந்துள்ளனர்.
இந்நிலையில், சிறுவன் இருசக்கர வாகனத்தில் சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், காஞ்சிக்கோவில் போலீசார் சிறுவன் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
அந்தியூர் அருகே பர்கூர் வனப்பகுதியில் தீ வைத்தவர் கைது
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மேற்கு மலைப்பகுதி வேலம்பட்டி பகுதியில் தட்டகரை வனச்சரகர் ராமலிங்கம் தலைமையில் வனத்துறையினர் நேற்று மதியம் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் இருந்து புகை வந்தது.
உடனே அங்கு சென்று பார்த்தபோது ஒருவர் மரங்களுக்கு தீ வைத்து கொண்டிருந்தார். அவரை பிடித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் வேலம்பட்டி பகுதியைச் சேர்ந்த மாதேவன் (வயது 38) என்பதும், விவசாயியான அவர் வனப்பகுதிக்குள் நுழைந்து அங்குள்ள மரங்களுக்கு தீ வைத்ததும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரை வனத்துறையினர் கைது செய்தனர்.


