சனி, 3 ஆகஸ்ட், 2024

தமிழக அரசின் சார்பில் மாவீரன் தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்ட சங்ககிரியில் அமைப்பிற்கு நேரு மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி மலர் அஞ்சலி.

தமிழக அரசின் சார்பில் மாவீரன் தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்ட சங்ககிரியில் அமைப்பிற்கு நேரு மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி மலர் அஞ்சலி.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சேலம் மாவட்டம் சங்ககிரியில் சுதந்திர போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலையின் 219 வது நினைவு தினத்தை முன்னிட்டு அரசு சார்பில்  அமைச்சர் கே.என். நேரு நாடாளுமன்ற உறுப்பினர்கள்  செல்வகணபதி, மாதேஸ்வரன் ஆகியோர் சங்ககிரி மலைக்கோட்டை மற்றும் மணிமண்டபத்தில் அவரது திருவுருவ படத்திற்கு மலர்வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது .


சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவை போற்றும் வகையில் ஆண்டுதோறும் அரசு  சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது அவரது 219 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்டம் சங்ககிரி மலைக்கோட்டை உயிரோடு பிரிவு நினைவு மணி மண்டபத்தில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது திருவுருவப் படத்திற்கு அமைச்சர் கே.என் நேரு, சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி எம் செல்வகணபதி, நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன்,  சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, சேலம் மாவட்ட கண்காணிப்பாளர் அருண்கபிழன் மலர்மாலை வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது அரசு அதிகாரிகள் திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தியாகி தீரன் சின்னமலைக்கு தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரும் ஆகிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நினைவேந்தல்

தியாகி தீரன் சின்னமலைக்கு தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரும் ஆகிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நினைவேந்தல்

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சேலம் மாவட்டம் சங்ககிரியில் விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 219 ஆவது நினைவு தினத்தையொட்டி சங்ககிரி மலைக்கோட்டையிலும், அவரது நினைவு மணி மண்டபத்திலும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி தீரன் சின்னமலையின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சேலம் மாவட்டம் சங்ககிரியில் சுதந்திரப் போராட்ட தியாகி தீரன் சின்னமலை அவர்களின் 219 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தமிழக முன்னாள் முதலமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி சங்ககிரி மலைக்கோட்டை மற்றும் ஈரோடு பிரிவு சாலை பகுதியில் உள்ள அவரது நினைவு மணி மண்டபத்தில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தீரன் சின்னமலை அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் வளையம் வைத்து, வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அப்போது முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா,  உறுப்பினர்கள் சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் சுந்தரராஜன், ஓமலூர் மணி  மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகரன் உட்பட அதிமுக நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர் ...
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முதல் வீரன் தியாகி தீரன் சின்னமலையின் 219 ஆவது நினைவு தினம்

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முதல் வீரன் தியாகி தீரன் சின்னமலையின் 219 ஆவது நினைவு தினம்

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

இந்திய சுதந்திரத்தின் முதல் போராட்ட வீரன் தியாகி தீரன் சின்னமலையின் 219 ஆவது நினைவு தினம். சேலம் மேற்கு மாவட்ட த.மா.க தலைவர் சுசீந்திரகுமார் மாலை அணிவித்து மரியாதை...

இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை. இவர் இந்திய சுதந்திர போராட்டம் தொடங்குவதற்கு முன்பாக ஆங்கிலேயர்கள் தமிழக வசூலித்த வரிப்பணத்தை அபகரித்ததோடு மட்டுமல்லாமல்,  சிவன்மலைக்கும் சென்னிமலைக்கும் இடையே சின்னமலை பறித்துக் கொண்டான் என்று ஆங்கிலேயரிடம் கூறுங்கள் என்று கொக்கரித்தவர் தான் தீரன் சின்னமலை கவுண்டர்.
அவ்வாறு அபகரித்த வசூல் பணத்தை மீண்டும் மக்களுக்கே திருப்பி கொடுத்தார். இவரின் 219 - வது நினைவு தினம் தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 3 - ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக சேலம் கொங்கு வேளாளர் கவுண்டர்கள் சங்கத்தின் சார்பில் சேலம் குரங்கு சாவடி பகுதியில் மாவீரன் தீரன் சின்னமலைக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. த.மா.க சேலம் மாவட்ட தலைவர் சுசீந்திரகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தியாகி தீரன் சின்னமலையின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செய்தார். 
இந்த நிகழ்ச்சியில் சேலம் கொங்கு வேளாளர் கவுண்டர்கள் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் த.மா.க மாநில நிர்வாகி ரகு நந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஐயா தீரன் சின்னமலைக்கு மரியாதை செலுத்தினர்.

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2024

ஈரோட்டில் ரூ.22 கோடியில் 4 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர் உதயநிதி

ஈரோட்டில் ரூ.22 கோடியில் 4 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர் உதயநிதி

ஈரோடு மாவட்டம் ஆர்.என்.புதூர் பிளாட்டினம் மஹாலில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள 225 கிராம ஊராட்சிகளுக்கு 383 கலைஞர் விளையாட்டு உபகரணங்கள், கரூர் மாவட்டத்தில் உள்ள 157 கிராம ஊராட்சிகளுக்கு 250 கலைஞர் விளையாட்டு உபகரணங்கள், பல்வேறு துறைகளின் சார்பில் 4 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.22 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள், ரூ.34.39 கோடி மதிப்பில் புதிய மற்றும் முடிவுற்றப் பணிகளை அடிக்கல் நாட்டி திறந்து வைக்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமை தாங்கினார்.

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, கரூர் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு ஈரோடு மற்றும் கரூர் மாவட்டத்தை சார்ந்த 382 கிராம ஊராட்சிகளுக்கு 633 எண்ணிக்கையிலான கலைஞர் விளையாட்டு உபகரணங்களையும், பல்வேறு துறைகளின் சார்பில் 4 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.22 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளையும், ரூ.34.39 கோடி மதிப்பில் புதிய மற்றும் முடிவுற்றப் பணிகளை அடிக்கல் நாட்டியும், திறந்தும் வைத்தார்.

இந்த விழாவில், அமைச்சர் உதயநிதி பேசியதாவது, ஒவ்வொரு முறையும் ஈரோட்டுக்கு வரும் போது ஒரு தனி புத்துணர்ச்சி ஏற்படும் அதற்கு காரணம் தந்தை பெரியார் பிறந்த மண் இந்த ஈரோடு மண். பெரியாருடைய ஈரோடு குருகுலம் தான். கலைஞருடைய குருகுலமும், அவரை உருவாக்கியதும் இந்த மண் தான். அப்படிப்பட்ட பெரியாருடைய ஈரோடு மாநகரில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பெயரில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அரசு நலத் திட்டம் உதவிகளை வழங்குவதில் நான் மிகுந்த பெருமையடைகின்றேன் மகிழ்ச்சியடைகின்றேன்.

இந்த ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களை சேர்ந்த 382 ஊராட்சிகளுக்கு இந்த மேடையிலே கலைஞர் விளையாட்டு உபகரணங்களை வழங்கப்பட்டன. அதேபோல, தமிழ்நாடு அரசினுடைய வருவாய்த்துறை, சுகாதரத்துறை, மகளிர் திட்டம், கூட்டுறவுத்துறை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் தொகை, மாற்றுதிறனாளிகள் நலத்துறை உள்ளிட்டத் துறைகளின் சார்பாக கிட்டத்தட்ட 4000 பேருக்கு சுமார் ரூ. 22 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டன.

தமிழ்நாட்டில் இருக்கக் கூடிய அனைத்து 12,525 கிராம ஊராட்சிகளுக்கும் ரூ. 86 கோடி மதிப்பிட்டில் விளையாட்டு உபகரணங்களை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் திட்டத்தை மதுரையில் கடந்த பிப்ரவரி மாதம் துவங்கி வைத்தோம். பல மாவட்டங்களில் இந்த விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. தற்போது, ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளுக்கு 33 வகையான விளையாட்டு உபகரணங்கள் கொண்ட தொகுப்பை வழங்கப்பட்டது.

ஈரோடு மற்றும் கரூர் மாவட்டம் தொழில்துறைக்கு மட்டும் அல்ல. விளையாட்டுத் துறைக்கும் பல பங்களிப்பை செய்து உள்ளது. இங்கு கூட நிறைய விளையாட்டுத் துறை சாதனையாளர்கள் இந்த மேடையில் அமர்ந்து இருக்கிறார்கள். குறிப்பாக பாரா பாட்மிட்டன் வீரர் ரித்திக் ரகுபதி இங்கு வருகை தந்திருக்கிறார்கள். ரித்திக் ரகுபதி தன்னுடைய திறமையினாலும், உழைப்பாலும் இன்றைக்கு பல்வேறு சாதனைகள் படைத்து வருகிறார்கள். ஜப்பானில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கல பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும். பெருமை சேர்த்து இருக்கிறார்.

ஆசிய பாரா ஒலிம்பிக் போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் அவருடைய வெற்றி பயணம் இந்த ஈரோடு மாவட்டத்தில் இருந்து இன்னும் பல விளையாட்டு வீரர்களை உருவாக்கட்டும் என்று நான் கேட்டுக் கொள்கின்றேன். அதைபோல ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மகேஸ்வரி வாலிபால் போட்டியில் சர்வதேச அளவில் முத்திரை பதித்து வருகிறார். அவரும் இங்கே வருகை தந்திருக்கிறார். இலங்கையில் நடைபெற்ற ஆசிய கடற்கரை கையுந்து பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றவர் தான் மகேஸ்வரி.

சர்வதேச அளவில் அவர் பெற்றுவரும் வெற்றிகள் பெண்கள். மாற்றுதிறனாளிகள் பலரையும் விளையாட்டுத்துறையை நோக்கி வர செய்து கொண்டிருக்கிறது. அவருக்கும் நாம் அனைவரும் நம்முடைய சார்பில் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இங்கு வந்திருக்கக் கூடிய அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக உந்து சக்தியாக முன்உதாரணமாக இருக்கிறார்கள். விளையாட்டு மேம்பாட்டுத் துறை எடுத்து வரும் பல முயற்சிகளை பாராட்டி CII - Confederation of Indian Industries அமைப்பு 'Best State Promoting Sports' நம்முடைய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு அளித்து இருந்தது.

அதைபோல The Hindu Sportstar பத்திரிக்கை சார்பாக 'Best State for Promotion of Sports' என்ற உயரிய விருதையும் நம்முடைய தமிழ்நாடு அரசுக்கும். நம்முடைய விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கும் அளித்து கவுரவித்து இருக்கிறது. தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை தொடங்கி அதன் மூலம் ஏராளமான ஏழை எளிய மாற்றுத்திறன் கொண்ட விளையாட்டு வீரர்களுக்கு தொடர்ந்து உதவிகளை செய்து வருகின்றோம். இதுவரை ஏராளமான வீரர்களுக்கு தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலமாக ரூ. 9 கோடி அளவுக்கு நிதி உதவி அளித்து இருக்கின்றோம். அதேபோல் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையில் நிதி உதவி பெற விரும்பும் விளையாட்டு வீரர்கள் www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

சர்வதேச மற்றும் தேசிய அளவிலானப் போட்டிகளில் பதக்கங்களை வெல்லும் நம்முடைய வீரர், வீராங்கனைகளுக்கு தொடர்ந்து உயரிய ஊக்கத் தொகை (High Cash) வழங்கி வருகிறோம். 2 நாட்களுக்கு முன்பு கூட சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 600 வீரர்களுக்கு ரூ. 14 கோடி உயரிய ஊக்கத்தொகை வழங்கி இருக்கின்றோம். நம்முடைய சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இங்கே பேசும்போது, தன்னுடைய பேத்திக்கு ரூ. 9 லட்சம் உயரிய ஊக்கத் தொகை வழங்கியது என்று எடுத்துக் கூறினார்.

அது அவருடைய பேத்திக்கு மட்டும் வழங்கப் படவில்லை. 600க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்களுக்கு ரூ. 14 கோடி அளவில் நம்முடைய முதலமைச்சர் உத்தரவின் பேரில் வழங்கப்பட்டது என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல அரசு மற்றும் அரசு பொதுத் துறை நிறுவனங்களில் விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பு, அரசு வேலைவாய்ப்புகளில் 3 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று உங்களை போன்ற பல வீரர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

திமுக அரசு அமைந்த பிறகு முதலமைச்சர் எடுத்த சீரிய நடவடிக்கையின் பேரில் முதற்கட்டமாக 100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வாய்ப்பை வழங்க நம்முடைய முதலமைச்சர் உத்தரவிட்டு இருக்கிறார்கள். இந்தியாவில் விளையாட்டுத் துறை என்றால் அது தமிழ்நாடு தான் என்கிற வகையில் தொடர்ந்து புதுப்புது முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். அதில் மிக முக்கியமானது தான் இந்த கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் திட்டம். விளையாட்டுத் துறை வளர்ச்சி என்பது நகரங்கள் மட்டும் தேங்கி விடக் கூடாது.

அது கிராமங்களில் இருந்து வரவேண்டும் என்பதற்கான முயற்சிதான் இந்த கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் திட்டம். கிராமங்களிலிருந்து நிறைய விளையாட்டுத் துறை திறமையாளர்கள் வர வேண்டும் என்ற அடிப்படையில்தான் இந்தத் திட்டத்தை முதலமைச்சர் துவங்கி வைத்தார். இந்த விளையாட்டு உபகரணங்களைப் பயன்படுத்தி கிராமங்களில் இருக்கக்கூடிய இளைஞர்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், புத்துணர்ச்சியுடனும் இருக்க வேண்டும் என்று நான் விருப்பப்படுகின்றேன், கேட்டுக் கொள்கிறேன். கலைஞர் பெயரால் எத்தனையோ திட்டங்கள் இருக்கின்றன.

எத்தனையோ திட்டங்கள் இருந்தாலும் விளையாட்டுத்துறை சார்பாக முதன் முறையாக கலைஞர் அவர்கள் பெயரால் ஒரு திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றால் அது கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் திட்டம் தான். ஒரு விளையாட்டு வீரனுக்கு என்னென்ன திறமைகள் வேண்டும். நல்ல எனர்ஜி வேண்டும். கூர்மையான அறிவுத்திறன் வேண்டும். துல்லியமான கணக்கிடுதல் வேண்டும். தோல்வியிலும் துவண்டு விடாத மனத்திடம் வேண்டும். நல்ல டீம் ஒர்க் வேண்டும். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இந்த திறமைகள் அனைத்தையும் கொண்டவர்தான் கலைஞர்.

அதனால் தான் இந்த திட்டத்திற்கு கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் திட்டம் என்று பெயர் வைத்தோம். அத்தகைய கலைஞருடைய பெயரால் வழங்கப்படும் விளையாட்டு உபகரணங்கள் பெறக் கூடிய இளைஞர்களை நான் கேட்டுக் கொள்வதெல்லாம். கலைஞர் அவர்களுக்கு இருந்த அந்த குணங்களையும், திறமைகளையும் நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் பெற இந்த ஈரோடு மற்றும் கரூர் மாவட்டத்தின் அத்தனை ஊராட்சிகளையும் அந்த ஊராட்சி ஒன்றிய முகங்களாக இங்கே வந்திருக்கக்கூடிய விளையாட்டு வீரர்களையும், மாணவர்களையும், இளைஞர்களையும் நான் வாழ்த்துகிறேன்.

அதேபோல் இன்றைக்கு இந்த மேடையில் கிட்டத்தட்ட 1800 பேருக்கு வீட்டுமனைப் பட்டாவை வழங்கியிருக்கின்றோம். இதில் பெருமையாக குறிப்பாக சொல்லவேண்டுமென்றால், தந்தை பெரியாருடைய இடத்திற்கு அவருடைய பேரன். ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவனிடம் அந்தப் பட்டாவை வழங்கியிருக்கின்றோம். பெரியாருடைய பேரனுக்கு பட்டாவை வழங்கியிருக்கிறோம். பெரியாருடைய கொள்ளுப் பேத்திக்கு உயரிய ஊக்கத்தொகையும் வழங்கியிருக்கிறோம் என்றால், அதுதான் திராவிட மாடல் அரசு. பட்டா கிடைக்க வேண்டும் என்பது பலருக்கு நெடுநாள் கனவு.

அதனை முதலமைச்சர் அவர்கள் நிறைவேற்றி உள்ளார். இன்று முதல் உங்களுடைய வீட்டில் நீங்கள் நிம்மதியாக உறங்கலாம். உங்கள் இடத்தின் மீதான சட்டபூர்வமான உரிமையையும் திமுக அரசு நிறைவேற்றியுள்ளது. அதேபோல் இந்த நிகழ்ச்சியில் வங்கிக்கடன் இணைப்பைப் பெற்றுள்ள மகளிர் சுயஉதவிக் சகோதரிகள். பல்வேறு நலத்திட்டங்கள் பெற்றுள்ள மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள் என அனைவருக்கும் இந்திய அரசின் சார்பாக விளையாட்டு துறையின் சார்பாக என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். ஏனென்றால், திமுக அரசு என்றைக்கும் உங்களோடு பக்கபலமாக துணையாக நிற்கும். உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தான் இந்த அரசினுடைய கடமை என்றும் நாங்கள் என்றும் உங்களுக்காக பணியாற்றிக் கொண்டே இருப்போம்.

முதலமைச்சரை பொறுத்தவரை தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அரசின் ஒவ்வொரு சேவையும் சென்றடைய வேண்டும். ஒவ்வொரு தனிநபரும் திமுக அரசால் பயன்பெற வேண்டும் என்று தொடர்ந்து செயல்பட்டு வருகின்றார்கள். அதன் வெளிப்பாடாகத்தான் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி, விடியல் பயணத் திட்டம், மாணவியருக்கு புதுமைப் பெண் திட்டம், மாணவர்களுக்கு வருகின்ற 9ம் தேதி முதல் தமிழ்ப் புதல்வன் திட்டம்.

முதலமைச்சருடைய காலை உணவுத் திட்டம், மக்களை தேடி மருத்துவம், நம்மை காக்கும் நாற்பத்தெட்டு, இல்லம் தேடி கல்வி, மக்களுடன் முதல்வர் போன்ற எண்ணற்ற திட்டங்களை நம்முடைய திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வருகின்றது. இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக ஒரு திட்டம் என்றால் அதுதான் முதலமைச்சர் வெற்றிகரமாக செயல்படுத்தி உள்ள கலைஞர் மகளிர் உரிமை திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இந்த ஜூலை வரை 1.16 கோடியே பதினாறு லட்சம் மகளிருக்கு தலா மாதம் ஒன்றுக்கு 1,000 ரூபாய் என்கிற வகையில் மொத்தம் 11,000 ரூபாய் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் மூலம் வழங்கப்பட்டுள்ளது.

இப்படி அனைத்து தரப்பு மக்களுக்குமான திட்டங்களை நம்முடைய திராவிட மாடல் அரசு வழங்கி வருகின்றது. இந்தத் திட்டங்களின் காரணத்தால் தமிழ்நாடு அரசு இன்றைக்கு வறுமை ஒழிப்பு. மகளிர் முன்னேற்றம், தரமான கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட 13 துறைகளில் இந்தியாவே நம்பர். 1 இடத்தைப் பிடித்திருக்கிறது. இதனை ஒன்றிய அரசின் நிதி ஆயோக் அமைப்பே புள்ளி விவரத்தோடு அளித்துள்ளது. இனியும் தொடர்ந்து உங்களுக்காக உழைக்க முதலமைச்சர் தயாராக இருக்கிறார். எனவே இந்தத் திட்டங்களின் பயனாளிகள் என்ற அளவில் இல்லாமல் அவற்றின் பங்கேற்பாளர்கள் என்ற உணர்வோடு நீங்கள் இருக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

திமுக அரசின் திட்டங்களை உங்களுடைய உற்றார். உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் எடுத்துச் செல்லுங்கள். நம்முடைய திராவிட மாடல் அரசினுடைய திட்டங்களுக்கு தூதுவராக வந்திருக்கக்கூடிய பயனாளிகளாக நீங்கள்தான் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் திட்டத்தை ஈரோடு மற்றும் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிராம ஊராட்சிகளுக்கும் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளை பெறும் அனைத்து பயனாளிகளுக்கும் என்னுடைய அன்பையும், வாழ்த்தையும் தெரிவித்து, வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன் என்று பேசினார்.

தொடர்ந்து, ரூ.10.67 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சென்னை புதிய தலைமை அலுவலக கட்டிடம் மற்றும் ரூ.20 கோடி மதிப்பீட்டில் சேலம் பன்னோக்கு விளையாட்டு வளாகக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். மேலும், கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த ஆய்வகக் கட்டடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டியும், அந்தியூர் வட்டாரம், பள்ளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா ரூ.1.05 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 50 குழந்தைகள் தங்கும் பள்ளிக் கட்டணத்தையும் திறந்து வைத்தார்.

மேலும், அந்தியூர் வட்டாரம், தேவர்மலையில் தரம் உயர்த்தப்பட்ட அரசு உயர்நிலைப்பள்ளியில் ரூ.71.57 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 3 வகுப்பறை கட்டடங்கள், உத்தண்டியூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ரூ.21.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஒரு வகுப்பறை கட்டடம், அந்தியூர் வட்டம், தேவர்மலையில் ரூ.53.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கால்நடை மருந்தகக் கட்டடம், நம்பியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சித்த மருத்துவக் கட்டடம் ஆகியவற்றினை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, ஈரோடு மற்றும் கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் கொண்டு செல்லும் வாகனத்தை கொடியசைத்து அமைச்சர் உதயநிதி துவக்கி வைத்தார்.

இவ்விழாவில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, ஈரோடு மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர். ப. செல்வராஜ். ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் ஈவிகேஎஸ் இளங்கோவன், ஏ.ஜி.வெங்கடாசலம், ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் நாரணாவாரே மனிஷ் சங்கர்ராவ், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாதரெட்டி, ஈரோடு மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் நவமணி கந்தசாமி, பாரா பாட்மிட்டன் வீரர் ரித்திக் ரகுபதி, கையுந்து பந்து வீராங்கனை மகேஸ்வரி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ஈரோட்டில் ரூ.7.57 கோடியில் செயற்கை ஓடுதளத்துடன் கூடிய கால்பந்து மைதானம் திறப்பு

ஈரோட்டில் ரூ.7.57 கோடியில் செயற்கை ஓடுதளத்துடன் கூடிய கால்பந்து மைதானம் திறப்பு

ஈரோடு வ.உ‌சி. விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மத்திய அரசின் கேலோ இந்தியா திட்டத்தின் கீழ், ரூ.7.57 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட புதிய செயற்கை இழை ஓடுதளத்தினை திறந்து வைக்கும் விழா இன்று (2ம் தேதி) நடைபெற்றது.
இந்த விழாவிற்கு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமை தாங்கினார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு ரூ.7.57 கோடியில் புனரமைக்கப்பட்ட 400 மீ செயற்கை இழை ஓடுதள பாதையுடன் கூடிய கால்பந்து மைதானத்தையும், கல்வெட்டினையும் திறந்து வைத்தார்.

இவ்விழாவில், மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர்.ப.செல்வராஜ், கரூர் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அமைச்சர் உதயநிதி தலைமையில் ஈரோடு மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்

அமைச்சர் உதயநிதி தலைமையில் ஈரோடு மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்

ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில், முதல்வரின் முகவரி, மக்களுடன் முதல்வர் -ஊரகம், இசேவை சான்றிதழ்கள், பட்டா மாறுதல், பட்டா மேல்முறையீடு, சாலை விபத்துக்களுக்கான நிவாரணம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில், குடிநீர் விநியோகம், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் கலைஞரின் கனவு இல்லம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் குறித்து அமைச்சர் உதயநிதி ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், 15-வது ஒன்றிய நிதி குழு - பணி முன்னேற்றம், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராத மாணவர்கள், மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் பாலின விகிதம், குறைந்த எடையுடன் பிறந்த குழந்தைகள், தாய்மார்கள் இறப்பு, குழந்தைகள் இறப்பு விகிதம், இளம் வயதில் கர்ப்பமடைதல், மக்களைத் தேடி மருத்துவம், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் குறித்தும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, இன்னுயிர் காப்போம் திட்டம் - நம்மைக் காக்கும் -48, RBSK திட்டத்தின் கீழ் 7 முக்கிய அறுவை சிகிச்சைகளின் செயல்திறன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் அங்கன்வாடி உட்கட்டமைப்பு, புதுமைப் பெண் திட்டம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் உழவர் சந்தைகளின் செயல்பாடுகள், உழவர் உற்பத்தியாளர்கள் குழு செயல்பாடுகள், ஆவின் கூட்டுறவு சங்கங்களின் செயல் திறன், சினை பரிசோதனைகள் குறித்தும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளி மற்றும் விடுதிகள், தாட்கோ, அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம், அண்ணல் அம்பேத்கார் தொழில் முன்னோடிகள் திட்டம், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, நெடுஞ்சாலைத்துறை, சாலை பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக துறை அலுவலர்களுடன் விரிவாக ஆய்வு மேற்கொண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ள அரசின் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு உடனடியாகவும், விரைவாகவும் சென்றடையும் வகையில் அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில், ஈரோடு மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர்.ப.செல்வராஜ், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் ஈவிகேஎஸ் இளங்கோவன் (ஈரோடு கிழக்கு), ஏ.ஜி.வெங்கடாசலம் (அந்தியூர்), சரஸ்வதி (மொடக்குறிச்சி), மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, சிறப்பு திட்டச் செயலாக்கத்துறை அரசு செயலாளர் தாரேஸ் அஹமத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் நாரணாவாரே மனிஷ் சங்கர்ராவ், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், ஈரோடு மாநகராட்சி துணை மேயர் வே.செல்வராஜ், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் நவமணி கந்தசாமி, துணைத் தலைவர் கஸ்தூரி உட்பட அனைத்துத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ஹாலிவுட் திரை உலகில் வில்லன்களாக சித்தரிக்கப்பட்ட ஏலியன் என்ற கதாபாத்திரம்.. சேலம் அருகே ஏலியன் சித்தர் என்ற பெயரில் கோவிலை கட்டி வரும் சித்தர்....

ஹாலிவுட் திரை உலகில் வில்லன்களாக சித்தரிக்கப்பட்ட ஏலியன் என்ற கதாபாத்திரம்.. சேலம் அருகே ஏலியன் சித்தர் என்ற பெயரில் கோவிலை கட்டி வரும் சித்தர்....

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

ஹாலிவுட் திரை உலகில் வில்லன்கள் கதாபாத்திரத்தில்  மக்களை கவரும் விதமாக சித்தரிக்கப்பட்ட ஏலியன் என்ற கதாபாத்திரத்திற்கு சேலத்திற்கு அருகே நிலத்தடியில் திருக்கோவில்... சிவபெருமானால் உருவாக்கப்பட்டவர் என்றும் ஏலியன் சித்தர் என்ற பெயரில் கோவிலை உருவாக்க தனக்கு பணித்ததாகவும் சித்தர் பாக்யா  விளக்கம்...60விதமான பரிகாரங்களை தீர்க்கும் ஏலியன் சித்தர் கோவில் ஒரு சிறப்பு செய்தி தொகுப்பு.

சேலம் மாவட்டம் இரும்பாலை சாலையில் உள்ள புது ரோடு இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் மல்லமூப்பம்பட்டி செல்லும் வழியில் மூலக்கடை பேருந்து நிறுத்தம் அருகே கிராம கவுண்டனூர் பகுதியில் அமைந்துள்ளது ஏலியன் சித்தர் கோவில் இந்தக் கோவிலை நிறுவியவர் அதே பகுதியை சேர்ந்த லோகநாதன் என்கிற சித்தர் பாக்யா இரட்டை ஆருடை சிவலிங்கம் என்னும் திருக்கோவிலை முக்கால் ஏக்கர் பரப்பளவு நிலம் கொண்ட இடத்தில் இரட்டை ஆருடை சிவலிங்கம் அமைத்துள்ளார் சிவலிங்கத்திலிருந்து பூமிக்கு அடியில் 11 அடி ஆழத்தில் இவருடைய குருநாதரான சித்தர் பாக்யா ஜீவசமாதி அருகே ஏலியன் சித்தர் மற்றும் அகஸ்தியர் ஆகியோருடைய சிலை வைக்கப்பட்டுள்ளது. தினந்தோறும் இரட்டை ஆறுடை சிவலிங்கத்திற்கும் ஏலியன் சித்தர் அகஸ்தியர் ஆகியோருக்கு மாதந்தோறும் தேய்பிறை மற்றும் வளர்பிறை பஞ்சமி திதியில் மாலை 6 மணி அளவில் பூஜைகள் நடைபெறும் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
இது குறித்து லோகநாதன் என்னும் சித்தர் பாக்யா என்பவர் இது குறித்து கூறும் போது சக்தி தேவி பார்வதி தேவி சிவன் ஆகிய மூன்று தெய்வங்களும் ஒருங்கிணைந்த இரட்டை ஆருடை சிவலிங்கம் இங்கு அமைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வந்தன அப்போது ஏலியன் சித்தர் எனது உடலில் தோன்றி சிலை அமைக்க உத்தரவு வழங்கியதாகவும் அதன் பின்னரே எனது குருநாதர் ஆன சித்தர் பாக்யா ஜீவசமாதி அடைந்த அதே இடத்தில் ஏலியன் சித்தர் மற்றும் அகஸ்தியர் ஆகியோரை நிறுவி உள்ளதாக தெரிவித்தால் இதுவரை ஏலியன் சித்தர் உலகத்திலேயே எங்கும் கிடையாது தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் இங்கு நிறுவி இருப்பது தனி சிறப்பு உண்டு. ஏலியன் சித்தரை தரிசனம் செய்து அவர் முன் அமர்ந்தால் அனைத்துவித சகல வியாதிகளும் நீங்கி 60 விதமான பரிகாரங்களும் நீங்கி சிறப்புற்று செல்வர் மேலும் இந்த திருக்கோவிலில் நாலுமுக முருகன் ஐந்துமுக காளி ஜடாமுனி பெண்ரூபத்தில் காமதேனும் காலபைரவர் ராமர் நந்தி தாமரை மலத்தில் பலிபீடம் உலகில் வேறு எங்கும் கண்டிராத அளவிற்கு கருங்கற்களால் செய்யப்பட்ட இரட்டைக் கொடிமரம் ஆகியவை நிறுவப்பட்டுள்ளது கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த திருக்கோவில் பணிகள் நடைபெற்று வந்தன என்றும் இன்னும் இரண்டு வருடங்களில் திருப்பணிகள் முடிவுற்ற கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது எனவும் தெரிவித்தார் தற்போது பக்தர்கள் வந்து கொண்டுள்ளனர் ஒவ்வொரு கோவில்களுக்கும் வேண்டிய வரத்தை பெற தனித்தனியாக தான் செல்ல வேண்டும் ஆனால் இங்கு வந்தால் குழந்தை பாக்கியம் திருமண தடை தொழில் தடை  வாழ்வில் பிரச்சனை குடும்ப பிரச்சனை உள்ளிட்ட 60 வகையான பரிகாரங்கள் இங்கு உள்ள இரட்டை ஆருட சிவலிங்கம் மற்றும் ஏலியன் சித்தர் அகஸ்தியர் ஆகியவரிடம் தியானம் செய்தாலே 60 வகையான பரிகாரங்கள் தீர்க்கப்பட்டு வாழ்வில் சகல செல்வமும் பெற்று குடும்பம் மகிழ்வித்து இருக்கும் தற்போது திருப்பலிகள் நடைபெற்று வருவதால் குறைந்த அளவே பூஜைகள் நடைபெற்று வருகின்றன கும்பாபிஷேகத்திற்கு பிறகு அனைத்து வித பூஜைகளும் செய்யப்படும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை இதை அனைவரும் உணர்ந்துள்ளனர்.