சனி, 14 செப்டம்பர், 2024
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுகள்: ஈரோடு மாவட்டத்தில் 6,532 பேர் ஆப்சென்ட்
ஈரோடு மாவட்டத்தில் வரும் 17ம் தேதி மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு
வெள்ளி, 13 செப்டம்பர், 2024
கடந்த 2015 ஆம் ஆண்டு நரேந்திர மோடியின் உருவம் பொம்மை எரிக்கப்பட்ட வழக்கு. 9 ஆண்டுகளுக்குப் பிறகு சாட்சியங்கள் நிரூபிக்கப்படாததால் 14 காங்கிரஸ் சார் விடுதலை.
ஈரோட்டில் செப்.20ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்
முதலமைச்சர் கோப்பை காண கூடை பந்து போட்டியில் சேலம் சிறுமலர் பள்ளி அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை.
செப்.18ம் தேதி பவானி வட்டத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்
தமிழ்நாடு முதலமைச்சர் மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வுகாண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் என்ற புதிய திட்டத்தினை அறிவித்துள்ளார்.
இந்த திட்டத்தின் படி, ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், ஒவ்வொரு மாதமும் மூன்றாவது புதன் கிழமை ஒரு நாள் வட்ட அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் சேவைகளும், தங்குதடையின்றி மக்களைச் சென்றடைவதை உறுதி செய்யவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
இதன்படி, ஈரோடு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான இதர உயர் அலுவலர்கள் பவானி வட்டத்தில் வரும் 18ம் தேதியன்று காலை 9 மணி முதல் மறுநாள் (19ம் தேதி) காலை 9 மணி வரை தங்கி, பல்வேறு அரசுத் துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்ட சேவைகளின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
கள ஆய்வின்போது பெறப்படும் கருத்துக்களின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர், மேம்பட்ட சேவைகள் வழங்குதல், திட்டங்களை விரைவுப்படுத்துதல் தொடர்பாக உரிய தீர்வு காண உள்ளார். மேலும், 18ம் தேதி மாலை 4.30 மணிமுதல் 6 மணி வரை பவானி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற உள்ளார்.
எனவே, அரசின் சேவைகளை எளிதாகவும், விரைவாகவும் பெற்றிட ஏதுவாக இந்த முகாமினை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


