வெள்ளி, 20 டிசம்பர், 2024

ஈரோட்டில் ரூ.1,085 கோடியில் வளர்ச்சி திட்டப் பணிகளை துவக்கி வைத்து, ரூ.284 கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்

ஈரோட்டில் ரூ.1,085 கோடியில் வளர்ச்சி திட்டப் பணிகளை துவக்கி வைத்து, ரூ.284 கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்

ஈரோடு மாவட்டத்தில் ரூ.951.20 கோடி மதிப்பிலான 559 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, ரூ.133.66 கோடி மதிப்பீட்டிலான 222 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.284.02 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 50,088 பயனாளிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.20) வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஈரோடு சோலாரில் இன்று (டிச.20) நடைபெற்ற அரசு விழாவில், ரூ.951 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 559 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, ரூ.133 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 222 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், 50,088 பயனாளிகளுக்கு ரூ.284 கோடியே 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


இதன்படி, ஈரோடு மாவட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்தின் 22 கிராம ஊராட்சிகளில் உள்ள 434 ஊரக குடியிருப்புகளுக்கு ரூ.482 கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பில் கூட்டுக்குடிநீர் திட்டம், வைராபாளையம் உரக்கிடங்கில், ரூ.1 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பில் திடக் கழிவுகளை எரியூட்டும் இயந்திரம் இரண்டாவது அலகு, ஈரோட்டில் சுதந்திர தின வெள்ளி விழா பேருந்து நிலையத்தில் ரூ.45 கோடியே 33 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வாகன நிறுத்தத்துடன் கூடிய வணிக வளாகம் மற்றும் பேருந்து நிழற்கூடங்களுடன் கூடிய மேம்பாட்டுப் பணிகளை திறந்து வைத்தார்.
கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் ரூ.6 கோடியே 99 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் மதிப்பில் தினசரி அங்காடி கட்டடம், அந்தியூர் பேரூராட்சி பேருந்து நிலையத்தில் ரூ.91 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பேருந்து நிறுத்தத்துடன் கூடிய கடைகள், ரூ.6 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 28 பூங்காக்கள், ரூ.1 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 5 பொது நூலகக் கட்டடங்கள், ரூ.71 கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 107 இடங்களில் சாலைப் பணிகளை திறந்து வைத்தார்.

உயர்கல்வித் துறை சார்பில், ஈரோடு அரசு பொறியியல் கல்லூரியில் ரூ.1 கோடி ரூபாய் செலவில் அயல்நாட்டு மொழிகள் கற்பித்தல் மையம் மற்றும் ரூ.8 கோடியே 54 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் மதிப்பில் உள்விளையாட்டரங்கத்தை திறந்து வைத்தார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், ரூ. 44 கோடியே 42 லட்சத்து 81 ஆயிரம் ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட 179 பணிகளை திறந்து வைத்தார்.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில், ரூ.24 கோடியே 78 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் செலவில் 36 உயர் வருவாய் பிரிவு பன்னடுக்கு மாடி குடியிருப்புகள், 6 வாரிய வாடகை கடைகள் மற்றும் அலுவலக வளாகக் கட்டடம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், பவானி சாலை பகுதி-1 நிலை-2 திட்டப்பகுதியில் ரூ.33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்தார்.


கோபி வட்டம், ஜெ ஜெ நகர் கொளப்பலூர் திட்டப்பகுதியில், ரூ.9 கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அடுக்குமாடி குடியிருப்புகள், நேதாஜி நகர் திட்டப்பகுதியில் ரூ.53 கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 528 அடுக்குமாடி குடியிருப்புகள், பெருமுகை திட்டப்பகுதியில் 13 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 144 அடுக்குமாடி குடியிருப்புகள், செம்பான்கரடு திட்டப் பகுதியில் ரூ.27 கோடியே 53 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 272 அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்தார்.

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில், உத்தமத் தியாகி அய்யா ஈஸ்வரனுக்கு பவானிசாகரில் ரூ.3 கோடியே 4 லட்சம் ரூபாய் மதிப்பில் முழு திருவுருவச் சிலையுடன் கூடிய அரங்கம், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில், கணக்கம்பாளையம் கரிவரதராஜ பெருமாள் கோயிலில் ரூ.35 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் புதிய திருக்குளம், தங்கமேடு  தம்பிகலை ஐயன் சுவாமி கோயிலில் ரூ.26 லட்சம் ரூபாய் மதிப்பில் வணிக வளாகமத்தை திறந்து வைத்தார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், வடக்கு புதுப்பாளையம், கொரவம்பாளையத்தில் ரூ.65 லட்சம் ரூபாய் மதிப்பில் துணை சுகாதார நிலையக் கட்டடங்கள், பள்ளிக் கல்வித் துறை சார்பில், சத்தியமங்கலம் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் ரூ.2 கோடியே 13 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பில் பத்து வகுப்பறைகள் கொண்ட கூடுதல் கட்டடம், தொட்டம்பாளையம், குஜ்ஜம்பாளையம், தாசப்பகவுண்டன் புதூர் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.64 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்களை திறந்து வைத்தார்.

நெடுஞ்சாலைகள் துறை சார்பில், ஈரோடு வெளிவட்ட சுற்றுசாலையில் ரூ.59 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பில் குறுக்கு வடிகால், தடுப்புச் சுவர், மையத் தடுப்பானுடன் இருவழித் தடத்திலிருந்து நான்கு வழித்தடமாக அகலப்படுத்தப்பட்ட பணிகள், ஈரோடு - கரூர் சாலையில் ரூ.20 கோடி ரூபாய் மதிப்பில் புதிய சிறுபாலத்துடன் இருவழித் தடத்திலிருந்து நான்கு வழித்தடமாக அகலப்படுத்தப்பட்ட பணிகளை திறந்து வைத்தார்.


வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், சித்தோடு, நம்பியூர், தாளவாடி ஆகிய இடங்களில் ரூ.11 கோடியே 32 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் மதிப்பில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், புஞ்சைகாளமங்கலம் கிராமம், சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், சித்தோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் ஆகிய இடங்களில் ரூ.6 கோடி ரூபாய் மதிப்பில் 1000 மெ.டன் கிடங்குகள், வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், வெள்ளாங்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், சித்தோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் ஆகிய இடங்களில் ரூ.5 கோடியே 89 லட்சம் ரூபாய் மதிப்பில் 250 மெ.டன் குளிர்பதனக் கிடங்குகளை திறந்து வைத்தார்.

புத்தூர் புதுப்பாளையத்தில் ரூ.2 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த விதைச் சான்றளிப்பு மற்றும் உயிர்மச் சான்றளிப்பு அலுவலக வளாகம், அந்தியூரில் ரூ.2 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம், பர்கூர், கேர்மாளம் ஆகிய இடங்களில் 1 கோடி ரூபாய் செலவில் துணை வேளாண்மை விரிவாக்க மையங்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், பூலப்பாளையம், ஜி.எஸ்.காலனி, அந்தியூர் காலனி ஆகிய அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளிகளில் ரூ.1 கோடியே 28 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள், தலமலை கிராமம் மாவனத்தம் பழங்குடியினர் நல காலனியில் 81 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் மதிப்பில் தார் சாலை என மொத்தம், 951 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 559 முடிவுற்றப் பணிகளை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
தொடர்ந்து, ஈரோடு மாவட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், சோலார் பகுதியில் ரூ.18 கோடியே 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த காய்கறி மற்றும் மளிகை வணிக வளாகம், சத்தியமங்கலம் நகராட்சிக்கு ரூ.10 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கூடுதல் குடிநீர் மேம்பாட்டு பணிகள், மொடக்குறிச்சி பேரூராட்சியில் ரூ.6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், வடுகப்பட்டி பேரூராட்சியில் ரூ.1 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அலுவலகக் கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டினார்.


நீர்வளத்துறை சார்பில், கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் ரூ.2 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தடப்பள்ளி, அம்மாபாளையம் கிளை வாய்க்கால் புனரமைக்கும் பணி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில், ஈரோடு, ரங்கம்பாளையம் டாக்டர் அம்பேத்கர் ஆதிதிராவிடர் நலக் கல்லூரியில்  ரூ.9 கோடியே 73 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் தங்கும் விடுதிக் கட்டடம், எம்மாம்பூண்டியில் ரூ.1 கோடியே 27 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கிராம பயிற்சி மையக் கட்டடத்தை திறந்து வைத்தார்.

அவல்பூந்துறை, எண்ணமங்கலம், எரங்காட்டூர், அம்மாபேட்டை, கொந்தளம், கூத்தம்பாளையம், பச்சாம்பாளையம், திகினாரை எர்ணகள்ளி ஆகிய இடங்களில் ரூ.6 கோடியே 23 லட்சத்து 12 ஆயிரம் மதிப்பீட்டில் கிராம பயிற்சி மையக் கட்டடங்கள், பர்கூர் பழங்குடியினர் நல மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.1 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நான்கு வகுப்பறைகள், பள்ளிக்கல்வித் துறை சார்பில், ஈரோட்டில் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாவட்ட மைய நூலகம் கட்ட அடிக்கல் நாட்டினார்.

ஆ.புதுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.3 கோடியே 76 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், அ.செம்புளிச்சாம்பாளையம் அரசு மேல் நிலைப்பள்ளியில் ரூ.2 கோடியே 82 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், பவானி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புஞ்சை புளியம்பட்டி கெம்பண்ணா ஓதிமலை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, ஓடத்துறை சோமசுந்தரம் நினைவு அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கூடுதல் கட்டிடத்திற்கு ரூ.7 கோடியே 6 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும் அடிக்கல் நாட்டினார்.

கணபதிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.2 கோடியே 82 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், சித்தோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.2 கோடியே 35 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், டி.ஜி. புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.1 கோடியே 64 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், மலையப்பாளையத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.1 கோடியே 41 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும் கூடுதல் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.


குமலன்குட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.2 கோடியே 82 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், சிக்கராசம்பாளையம் அரசு உயர் நிலைப் பள்ளியில் ரூ.47 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள், வெள்ளி திருப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.3 கோடியே 91 இலட்சத்து 24 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கூடுதலாக பதினான்கு வகுப்பறை கட்டடங்கள் மற்றும் அறிவியல் ஆய்வகக் கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டினார்.

கும்மக்காளி பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ரூ.1 கோடியே 64 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், மணியக்காரன்புதூர் அரசு உயர் நிலைப்பள்ளி, நீச்சாம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி, சுண்டக்காம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளிகளில் ரூ.6 கோடியே 35 லட்சத்து ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள், ஆண்கள் மற்றும் பெண்கள் கழிவறைக் கட்டடங்கள் மற்றும் குடிநீர் வசதிக்கு அடிக்கல் நாட்டினார்.

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில், ஜெயராமபுரத்தில் ரூ.4 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மாவீரன் பொல்லானின் முழு திருவுருவச் சிலையுடன் கூடிய அரங்கம், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில், ரூ.95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பவானி சங்கமேஸ்வரர் கோயிலின் காவேரிக் கரை படித்துறையை மேம்படுத்தும் பணி, பெண்கள் உடை மாற்றும் அறை மேம்படுத்துதல் மற்றும் புதிதாக கழிவறை கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

 மகுடேஸ்வரர் மற்றும் வீரநாராயணப்பெருமாள் கோயிலில் ரூ.26 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கருணை இல்லம் மராமத்து மற்றும் மறுசீரமைக்கும் பணிகள், சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோயில் ரூ.9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஸ்ரீ பாலதேவராயர் மற்றும் ஸ்ரீ அருணகிரிநாதர் அருளாளர்களுக்கு தனி சன்னதி கட்டும் பணிகள், சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் ரூ.74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவரங்கம் மண்டபம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
பவானி சங்கமேஸ்வரர் கோயிலில் ரூ.12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சரக ஆய்வாளர் அலுவலகம் கட்டும் பணி, பவானி சங்கமேஸ்வரர் கோயிலில் ரூ.12 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கூடுதுறை பகுதியில் கூடுதலாக மின் விளக்குகள் பொருத்தும் பணிகள், கஸ்பாபேட்டை சத்தீஸ்வரர் கோயிலில் ரூ.99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தையல்நாயகி தாயார் சன்னதி திரும்ப கட்டும் பணிகள், சத்தியமங்கலம் வட்டம் பண்ணாரி மாரியம்மன் கோயிலில் 1 கோடியே 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அன்னதானக் கூடம் விரிவுப்படுத்தும் பணி மற்றும் கருணை இல்லம் மேம்பாட்டுப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், 15-வது நிதிக்குழு மானியம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டம், தேசிய கிராம சுயாட்சித் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், மாநில நிதிக்குழு மானியம், பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் வளர்ச்சித் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, குடிநீர் குழாய் விஸ்தரிப்பு செய்தல், தடுப்பு சுவர் அமைத்தல், தார் சாலைகள் அமைத்தல், பேருந்து நிழற்குடை, பாலம் அமைத்தல் என ரூ.15 கோடியே 30 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 177 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.


மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், சத்தியமங்கலம் அரசு அண்ணா மருத்துவமனையில் ரூ.5 கோடியே 11 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் தாய்சேய் நலப் பிரிவுக் கட்டடம், கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் ரூ.3 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் கட்டடம் என மொத்தம், ரூ.133 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 222 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

இதனையடுத்து, மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், 7,600 பயனாளிகளுக்கு பட்டாக்கள் வழங்குதல் மற்றும் 422 பயனாளிகளுக்கு சமத்துவபுரம் திட்டத்தில் வீடுகள் வழங்குதல், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 3,803 பயனாளிகளுக்கு நுண்ணீர் பாசனம், விவசாய இடுபொருட்கள் வழங்குதல், அடமானக் கடன், சோலார் பம்புகள் வழங்குதல், வேளாண்மை இயந்திரமயமாக்கல் திட்டத்தில் உதவிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்பில் 877 பயனாளிகளுக்கு சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில்முனைவோர் திட்டத்தின் கீழ் மானியக்கடன்களை அவர் வழங்கினார்.

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில், பயிர் கடன், சிறு வியாபாரிகளுக்கான கடன், வீட்டுக்கடன் உள்ளிட்ட பல்வேறு கடனுதவிகள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், சத்யவாணிமுத்து அம்மையார் இலவச தையல் இயந்திர திட்டம், திருமண உதவித் திட்டம், முதலமைச்சர் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் உதவிகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மோட்டார் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர், சக்கர நாற்காலிகள் என பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 50,088 பயனாளிகளுக்கு ரூ.284 கோடியே 2 லட்சம் ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 
இந்த விழாவில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்தியூர் ப. செல்வராஜ், கே.இ.பிரகாஷ் (ஈரோடு), கே.சுப்பராயன் (திருப்பூர்), சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.ஜி. வெங்கடாசலம் (அந்தியூர்), சி. சரஸ்வதி (மொடக்குறிச்சி), ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பதவி நீக்கம் செய்து, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் அடுத்த கட்ட போராட்டம் மிகப்பெரிய அளவிலான ரயில் மறியல் போராட்டம் இருக்கும் என்று அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் மாநில தலைவர் ஜங்ஷன் அண்ணாதுரை கடும் எச்சரிக்கை.

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பதவி நீக்கம் செய்து, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் அடுத்த கட்ட போராட்டம் மிகப்பெரிய அளவிலான ரயில் மறியல் போராட்டம் இருக்கும் என்று அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் மாநில தலைவர் ஜங்ஷன் அண்ணாதுரை கடும் எச்சரிக்கை.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு.

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பதவி நீக்கம் செய்து, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் அடுத்த கட்ட போராட்டம் மிகப்பெரிய அளவிலான ரயில் மறியல் போராட்டம் இருக்கும் என்று அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் மாநில தலைவர் ஜங்ஷன் அண்ணாதுரை கடும் எச்சரிக்கை.

இந்திய திருநாடு சுதந்திரம் அடைந்தது முதல் சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் இயற்றிய சட்ட வடிவங்களில் இன்றைய அளவும் எந்தவிதமான மாற்றங்களையும் செய்யாமல் அப்படியே இந்திய திருநாட்டில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சட்டத்தின் விடிவெள்ளி என்று போற்றப்படும் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் இயற்றிய சட்டங்கள் இன்றிய அளவிலும் பல்வேறு உலக நாடுகளில் தற்பொழுது வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இப்படி போற்றுதலுக்குரிய புரட்சியாளர் அம்பேத்கரை நடுவன அரசினுடைய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான அமித்ஷா கடந்த சில தினங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில், அவரது புகழை சீர்குலைக்கும் வகையில் அவதூறாக பேசியுள்ளார். இது நாடு அறிந்த விஷயமே. இதற்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோதி சப்பை கட்டு கட்டி அமித்ஷா அவர்களை காப்பாற்றும் நோக்கோடு  அதற்கான விளக்கத்தை சுட்டி காட்டியதை வேடிக்கையை ஒன்றாக உள்ளது என கூறி நாடு முழுவதும் மத்திய அரசுக்கு எதிராகவும் அமிர்தாவுக்கு எதிராகவும் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் ஒரு பகுதியாக அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் சார்பில் அம்பேத்கரிய, பெரியாரியாரிய உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
சேலம் ஜங்ஷன் ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் மாநில தலைவர் ஜங்ஷன் அண்ணாதுரை தலைமை தாங்கினார். அம்பேத்கரின் திருவுருவப்படத்தை ஏந்தியும் கண்களில் கருப்பு துணிகளை கட்டியும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், அருந்ததியர் மக்கள் இயக்கத்தின் மாநில இளைஞரணி துணை செயலாளர் ஏ டி ஆர் சந்திரன், மனித உரிமைகள் கட்சியின் தலைவர் பூமொழி, மக்கள் தேசம் கட்சியின் மாநில செயலாளர் சுலைமான் உள்ளிட்டோர்  முன்னிலை வகித்தனர். அண்ணல் அம்பேத்கரை இழிவு படுத்தி பேசிய நடுவன அரசினுடைய  உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பதவி நீக்கம் செய்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். 
செய்ய தவறும் பட்சத்தில் தங்களது அடுத்த கட்ட போராட்டம் மிகப்பெரிய அளவில் ரயில் மறியல் போராட்டமாக இருக்கும் என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்ணல் அம்பேத்கர் குறித்து இழிவு படுத்தி பேசிய அமித்ஷா மற்றும் நடுவன அரசுக்கு எதிராக கடுமையான கண்டன கோஷங்களை எழுப்பினர். 
ஆர்ப்பாட்டம் குறித்து அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் மாநில தலைவர் ஜங்ஷன் அண்ணாதுரை கூறுகையில், அம்பேத்கர் இயற்றிய சட்டத்தின் காரணமாகத்தான் இன்று அமித்ஷா அந்த பொறுப்பில் இருந்து வருவதாகவும் அது தெரியாமல் அவரது வரலாற்றுச் சாதனைகள் தெரியாமல் கண்மூடித்தனமாக நாடாளுமன்றத்தில் பேசியது கடுமையான கண்டனத்திற்கு உரியது என்றும், ஏற்கனவே நடுவுன அரசின் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில் தற்பொழுது அமைச்சர் பேசியுள்ளது இந்திய திருநாட்டில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும், அமித் ஷாவை கைது செய்து அவரது பதவியை நீக்கி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடுவனரசு கைது செய்ய தவறும் பட்சத்தில் அடுத்த கட்ட போராட்டங்களாக மிகப்பெரிய அளவில் ரயில் மறியல் போராட்டம் இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். 
சேலம் ஜங்ஷன் ரயில் நிலையப் பகுதியில் நடைபெற்ற எந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கடுமையான பரபரப்பு காணப்பட்டது.




இன்னும் 24 மணி நேரத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கைது செய்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் அடுத்த கட்ட போராட்டம் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்று சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் ஜெ.மு. இமயவர்மன் கடும் எச்சரிக்கை.

இன்னும் 24 மணி நேரத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கைது செய்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் அடுத்த கட்ட போராட்டம் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்று சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் ஜெ.மு. இமயவர்மன் கடும் எச்சரிக்கை.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு.

இன்னும் 24 மணி நேரத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கைது செய்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் அடுத்த கட்ட போராட்டம் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்று சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் ஜெ.மு. இமயவர்மன் கடும் எச்சரிக்கை. 

இந்திய திருநாடு சுதந்திரம் அடைந்தது முதல் சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் இயற்றிய சட்ட வடிவங்களில் இன்றைய அளவும் எந்தவிதமான மாற்றங்களையும் செய்யாமல் அப்படியே இந்திய திருநாட்டில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சட்டத்தின் விடிவெள்ளி என்று போற்றப்படும் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் இயற்றிய சட்டங்கள் இன்றிய அளவிலும் பல்வேறு உலக நாடுகளில் தற்பொழுது வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இப்படி போற்றுதலுக்குரிய புரட்சியாளர் அம்பேத்கரை நடுவனஅரசினுடைய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான அமித்ஷா கடந்த சில தினங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில், அவரது புகழை சீர்குலைக்கும் வகையில் அவதூறாக பேசியுள்ளார். 
இது நாடு அறிந்த விஷயமே. இதற்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோதி சப்பை கட்டு கட்டி அமித்ஷா அவர்களை காப்பாற்றும் நோக்கோடு  அதற்கான விளக்கத்தை சுட்டி காட்டியதை வேடிக்கையை ஒன்றாக உள்ளது என கூறி நாடு முழுவதும் மத்திய அரசுக்கு எதிராகவும் அமிர்தாவுக்கு எதிராகவும் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 
இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தில் சார்பில் வழக்கறிஞர்கள் இன்று அண்ணல் அம்பேத்கரை இழிவு படுத்தி பேசிய நடுவன அரசினுடைய  உள்துறை அமைச்சர் அமித் ஷாவை 24 மணி நேரத்திற்குள் அவரை பதவி நீக்கம் செய்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய தவறும் பட்சத்தில் தங்களது அடுத்த கட்ட போராட்டம் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் ஜெ.மு. இமயவரம்பன் தலைமையில் நீதிமன்ற நுழைவு வாயில் பகுதியில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் வழக்கறிஞர்கள் என திரளானோர் கலந்து கொண்டு அண்ணல் அம்பேத்கர் குறித்து இழிவு படுத்தி பேசிய அமித்ஷா மற்றும் நடுவன அரசுக்கு எதிராக கடுமையான கண்டன கோஷங்களை எழுப்பினர். 
ஆர்ப்பாட்டம் குறித்து சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் இமயவர்மன் கூறுகையில், அம்பேத்கர் இயற்றிய சட்டத்தின் காரணமாகத்தான் இன்று அமித்ஷா அந்த பொறுப்பில் இருந்து வருவதாகவும் அது தெரியாமல் அவரது வரலாற்றுச் சாதனைகள் தெரியாமல் கண்மூடித்தனமாக நாடாளுமன்றத்தில் பேசியது கடுமையான கண்டனத்திற்கு உரியது என்றும், ஏற்கனவே நடுவுன அரசின் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில் தற்பொழுது அமைச்சர் பேசியுள்ளது இந்திய திருநாட்டில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும், இன்னும் 24 மணி நேரத்தில் அமித் ஷாவை கைது செய்து அவரது பதவியை நீக்கி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடுவனரசு கைது செய்ய தவறும் பட்சத்தில் அடுத்த கட்ட போராட்டங்களாக மிகப்பெரிய அளவில் வழக்கறிஞர்கள் போராட்டம் இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். 
சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த நுழைவாயில் ஆர்ப்பாட்டத்தின் காரணமாக நீதிமன்ற பணிகள் துவங்கும் பொழுது பெரும் பரபரப்பு காணப்பட்டது. 
இந்த ஆர்ப்பாட்டத்தில் சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் பொதுக்குழு உறுப்பினர்கள் செயற்குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

வியாழன், 19 டிசம்பர், 2024

ஈரோடு மாவட்டத்தில் நாளை (டிச.21ம் தேதி) பல்வேறு இடங்களில் மின்தடை அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் நாளை (டிச.21ம் தேதி) பல்வேறு இடங்களில் மின்தடை அறிவிப்பு

ஈரோடு மாவட்டம் ஈரோடு, அந்தியூர், பவானி, சென்னிமலை, கொடுமுடி, எழுமாத்தூர், கோபி கரட்டுப்பாளையம் மற்றும் நல்லகவுண்டன்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (டிசம்பர் 21ம் தேதி) சனிக்கிழமை நடக்கிறது. இதனால், நாளை கீழ்க்கண்ட இந்தப் பகுதிகளில் குறிப்பிட்ட நேரம் மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ஈரோடு துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- ஈரோடு நகர் முழுவதும், வீரப்பன்சத்திரம், இடையன்காட்டுவலசு, முனிசிபல்காலனி, டீச்சர்ஸ்காலனி, சூரம்பட்டி, சூரம்பட்டிவலசு, பெரியார்நகர், திருநகர்காலனி, ஈரோடு பேருந்து நிலையம், காந்திஜிரோடு, ஈ.விஎன்.,ரோடு, ஆர்.கே.வி.,ரோடு, பிரப்ரோடு, வீரப்பன்சத்திரம், பெருந்துறை ரோடு, மேட்டூர் ரோடு, சம்பத் நகர், வெட்டுகாட்டுவலசு, மாணிக்கம்பாளையம், பாண்டியன்நகர், சக்திநகர், வக்கீல்தோட்டம், பெரியவலசு, பாப்பாத்திக்காடு, பாரதிதாசன்வீதி, முனியப்பன்கோவில்வீதி, நாராயணவலசு, டவர்லைன்காலனி, திருமால்நகர், கருங்கல்பாளையம், கே.என்.கே.ரோடு, மூலப்பட்டறை, சத்தி ரோடு, நேதாஜி ரோடு, சென்னிமலை ரோடு, ஈ.எம்.எம்.வீதி, மணல்மேடு, கரிமேடு, சிட்கோ இண்டஸ்ரியல்எஸ்டேட், கே.கே.நகர், சுப்ரமணியநகர், ஸ்ரீகார்டன், ரங்கம்பாளையம், சேனாதிபதி பாளையம், கப்பல் தோட்டம், இரணியன் வீதி, பெரியசடையம் பாளையம், மரப்பாலம், தங்கப்பெருமாள் வீதி, ஈஸ்வரன்பிள்ளை வீதி. கள்ளுக்கடைமேடு மற்றும் பழைய‌ ரயில் நிலையப் பகுதிகள்.

அந்தியூர் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- அந்தியூர், தவிட்டுப்பாளையம், மைக்கேல்பாளையம், வெள்ளையம்பாளையம் பிரம்மதேசம், தோட்டக்குடியாம்பாளையம் காட்டூர், செம்புளிச்சாம்பாளையம், பருவாச்சி, பச்சாம்பாளையம், புதுப்பாளையம், சங்கராபாளையம், எண்ணமங்கலம், கோவிலூர், வெள்ளித்திருப்பூர், கெட்டிச்சமுத்திரம் மற்றும் பர்கூர் மலைப்பகுதி.

பவானி ஊராட்சிக்கோட்டை துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- பவானி நகர் முழுவதும், மூன்ரோடு, ஊராட்சிக்கோட்டை, ஜீவா நகர், செங்காடு, குருப்பநாயக்கன் பாளையம், நடராஜபுரம், ராணா நகர், ஆண்டிகுளம், என்.ஜி.ஜி.ஓ., காலனி, கூடுதுறை, வி.மேட்டுப் பாளையம், சன்னியாசிபட்டி, வரதநல்லூர், சங்கரகவுண்டன் பாளையம், மொண்டி பாளையம், கன்னடிபாளையம், மைலம்பாடி, ஆண்டிபாளையம், சக்தி நகர், கொட்டுக்காட்டு புதூர், மோளகவுண்டன் புதூர், செலம்பகவுண்டன் பாளையம் மற்றும் வாய்க்கால் பாளையம்.

சென்னிமலை துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):-

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- சென்னிமலை நகர் பகுதி முழுவதும், பூங்கா நகர், ஊத்துக்குளி ரோடு, ஈங்கூர் ரோடு, குமராபுரி, சக்தி நகர், பெரியார் நகர், நாமக்கல்பாளையம், அறச்சலூர் ரோடு, குப்பிச்சி பாளையம், திப்பம்பாளையம், அம்மாபாளையம், அசோகபுரம், புதுப்பாளையம், ராமலிங்கபுரம், ஒரத்துப்பாளையம், அய்யம்பாளையம், கொடுமணல், சென்னிமலைபாளையம், வெப்பிலி. கே.ஜி.வலசு, பசுவபட்டி மற்றும் முருங்கத்தொழுவு.
கொடுமுடி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- கொடுமுடி, சாலைப்புதூர், குப்பம்பாளையம், ராசாம்பாளையம், பிலிக்கல்பாளையம், தளுவம்பாளையம், வடக்கு மூர்த்திபாளையம், அரசம்பாளையம், சோளக்காளிபாளையம் மற்றும் நாகமநாயக்கன்பாளையம்.

எழுமாத்தூர் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- எழுமாத்தூர், மண்கரடு, செல்லாத்தாபாளையம், பாண்டிபாளையம், எல்லக்கடை, காதக்கிணறு, குலவிளக்கு, மொடக்குறிச்சி. குளூர், வடுகபட்டி, 60 வேலம்பாளையம், மணியம் பாளையம், வெள்ளபெத்தாம்பாளையம், வே.புதூர், கணபதிபாளையம், ஆனந்தம்பாளையம், எரப்பம்பாளையம், மின்னகாட்டுவலசு, வெப்பிலி, பூந்துறை, சேமூர் மற்றும் 88 வேலம்பாளையம்.

கோபி கரட்டுப்பாளையம் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- எலத்தூர், வெட்டையம்பாளையம், குருமந்தூர், ஊஞ்சபாளையம், கோரமடை, உடையாக்கவுண்டன்பாளையம், ஆயிபாளையம், காரப்பாடி, செட்டிபாளையம், ஆண்டிபாளையம், சிங்கிரிபாளையம் மற்றும் கோட்டுபுள்ளாம்பாளையம்,

கோபி நல்லகவுண்டம்பாளையம் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- ல.கள்ளிப்பட்டி, தமிழ் நகர், மின்நகர், வாய்க்கால் ரோடு, செல்லப்பா நகர், கிருஷ்ணா நகர், திருமால் நகர், வேலுமணி நகர், கலைஞர் நகர், ஐயப்பா நகர், பெரியார்திடல், அரசு மருத்துவமனை வீதி, நல்லகவுண்டன்பாளையம், தொட்டிபாளையம், கலிங்கியம், அவ்வையார்பாளையம், வெளாங்காட்டுபாளையம், மூலவாய்க்கால், அயலூர், செம்மாண்டம்பாளையம், பாலப்பாளையம், வெள்ளைகவுண்டன்புதூர், உருமம்பாளையம் மற்றும் கரட்டடிபாளையம்.


முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்

ஈரோடு காலிங்கராயன் விருந்தினர் மாளிகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் நேற்று (டிச.19) நடைபெற்றது. 

இக்கூட்டத்தில், ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள், அறிவிப்புகள், சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் ஆகியவற்றின் தற்போதைய நிலைகள் குறித்து அதிகாரிகளிடம் முதல்வர் கேட்டறிந்தார்.
இக்கூட்டத்தில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ், ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, ஈரோடு மாநகராட்சி ஆணையர் மரு. மனிஷ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ஈரோட்டில் விசைத்தறி கூடங்களில் ஆய்வு மேற்கொண்டு, நெசவாளர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்த முதல்வர்

ஈரோட்டில் விசைத்தறி கூடங்களில் ஆய்வு மேற்கொண்டு, நெசவாளர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்த முதல்வர்

தமிழ்நாட்டில் விசைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ள விசைத்தறி நெசவாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட விசைத்தறி நெசவாளர்களுக்கு விலையில்லா மற்றும் மானியத்துடன் கூடிய மின்சாரம் வழங்கும் திட்டத்தின் கீழ், 750 அலகுகள் வரை வழங்கப்பட்டு வந்த விலையில்லா மின்சாரம் கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் 3ம் தேதி முதல் 1,000 அலகுகளாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

மின்னணு விசைப் பலகைகள் உற்பத்தியின் போது நூல்கள் அறுந்து விழுவதை தடுக்கவும், சாதாரண விசைத்தறிகளில் சீராகவும் மற்றும் நிலையான தரத்துடனும் துணிகள் உற்பத்தி செய்யப்படுவதை உறுதிப்படுத்தவும் 50 விழுக்காடு அரசு மானியத்துடன் 5,000 விசைத்தறியில் மின்னணு விசைப் பலகைகள் நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டு, 6 கோடி ரூபாய் அரசால் ஒப்பளிப்பு செய்யப்பட்டு, விசைத்தறி செறிவு மிக்க பகுதிகளில் 5,000 விசைத்தறிகளில் மின்னணு விசைப் பலகைகள் பொருத்தப்பட்டது போன்ற பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
விசைத்தறி தொழில் மேம்பாட்டிற்காகவும், இப்பணியில் ஈடுபட்டு வரும் நெசாவாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திடவும், விசைத்தறி கூடத்திற்கு நேரில் சென்று அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்திடும் விதமாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (டிச.19) ஈரோடு மாவட்டம், பிச்சாண்டம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் இயங்கி வரும் இரண்டு விசைத்தறி கூடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்தும், நெசவாளர்களின் தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

இந்த விசைத்தறி கூடங்களில் 24 விசைத்தறிகள் மூலம் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருவதுடன். 5 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிகழ்வின் போது, மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ், ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியில், சேலம் புத்தா டிரஸ்ட் தலைவர் ராம்ஜி சேலம் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தலை வெட்டி முனியப்பன் கோவில் தொடர்பாக சென்னை உயர் நதிமன்ற தீர்ப்பு குறித்த கோரிக்கை மனுவினை வழங்கினார்.

சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியில், சேலம் புத்தா டிரஸ்ட் தலைவர் ராம்ஜி சேலம் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தலை வெட்டி முனியப்பன் கோவில் தொடர்பாக சென்னை உயர் நதிமன்ற தீர்ப்பு குறித்த கோரிக்கை மனுவினை வழங்கினார்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா நலத்திட்டவர் உதவி வழங்கும் நிகழ்ச்சியில், சேலம் புத்தா டிரஸ்ட் தலைவர் ராம்ஜி சேலம் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தலை வெட்டி முனியப்பன் கோவில் தொடர்பாக சென்னை உயர் நதிமன்ற தீர்ப்பு குறித்த கோரிக்கை மனுவினை வழங்கினார்.

சேலம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் பிருந்தா தேவி தலைமையில் நடைபெற்ற விழாவில் சிறுபான்மையினர் நலத்துறை அதிகாரிகள் பலரும் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து நடைபெற்ற விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினர் மற்றும் சீர் மரபினரை சார்ந்த பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து நடைபெற்ற விழாவில் சேலம் புத்தா டிரஸ்ட் தலைவர் ராம்ஜி சேலம் கோட்டை மைதானம் அருகே உள்ள தலை வெட்டி முனியப்பன் கோவிலில் இருப்பது புத்தர் சிலை தான் என்று உயர்நீதிமன்ற தீர்ப்பு சம்பந்தமாக கோரிக்கை மனு ஒன்றினை வழங்கினார். 
அந்த மனுவில் சென்னை உயர்நீதிமன்றம் சேலம் கோட்டை பகுதியில் உள்ள புத்தர் சிலை குறித்து முக்கியமான தீர்ப்பினை அளித்துள்ளது. மேற்கண்ட சிற்பம் புத்தரின் சிலை தான் என்றும் தலை வெட்டி முனியப்பன் கோவில் அல்ல என்று தவறாக புரிந்து கொல்லப்பட்டுள்ளது என்றும் தீர்ப்பளித்துள்ளது. மேற்கண்ட புத்தர் சிலை சம்பந்தமாக அதன் முந்தைய நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்றும் சிலையில் உள்ள நிலப்பரப்பில் இது புத்தர் சிலை தான் என்றும் ஒரு போர்டு வைக்கப்பட வேண்டும் என்றும் பொதுமக்கள் வந்து பார்வையிடலாம் என்றும் அறிவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது. 
மேற்கண்ட தீர்ப்பினை மதிக்காமல் இந்து அறநிலையத்துறையினர் கூலிக்கு ஆட்களை வைத்து புத்தர் சிலைக்கு மஞ்சள் பூசியும் குங்குமம் வைத்தும் பூமாலை அணிவித்தும் இந்து முறைப்படி சடங்கு செய்தும் புத்தர் சிலையை இழிவு செய்து வருகின்றனர். எனவே இது நீதிமன்றத்திற்கு எதிரான செயல். மேலும் இந்து தலை விட்டு முனியப்பன் கோவில் என்ற பெயர் பலகையை நீக்கி புத்த விகார் என்ற பெயர் பலகையை நிறுவிட முன்வர வேண்டும். புத்த மதத்திற்கு தியானம் செய்திட வழிவகை செய்திட வேண்டும். மேலும் ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை பள்ளி ஆவணங்களில் இந்து கிறிஸ்துவர் முஸ்லிம் என்ற அடையாளங்கள்  நிறுவப்பட்டுள்ளன அதனைத் தொடர்ந்து புத்த மதத்தினையும் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பணிவன்புடன் கேட்டுக் கொள்வதாக குறிப்பிடப்பட்டிருந்தது. 
மனுவினை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 
இந்த விழாவில் சிறுபான்மையினர் நலத்துறை அதிகாரிகள் உட்பட பயனாளிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.