சனி, 3 மே, 2025

17-அம்சம் கோரிக்கைகளை வலியுறுத்தி மே 20 ஆம் தேதி நாடு தலைவிய அளவில் போராட்டம். சேலத்தில் நடைபெற்ற HMS கூட்டத்தில் முடிவு.

17-அம்சம் கோரிக்கைகளை வலியுறுத்தி மே 20 ஆம் தேதி நாடு தலைவிய அளவில் போராட்டம். சேலத்தில் நடைபெற்ற HMS கூட்டத்தில் முடிவு.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு.

17-அம்சம் கோரிக்கைகளை வலியுறுத்தி மே 20 ஆம் தேதி நாடு தலைவிய அளவில் போராட்டம். சேலத்தில் நடைபெற்ற HMS கூட்டத்தில் முடிவு.

மதிய அரசின்  தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் மே மாதம் 20ஆம் தேதி நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்துவது தொடர்பான ஹிந்த் மஸ்தூர் சபா தமிழ்நாடு மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள்  ஆலோசனைக் கூட்டம் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் நடைபெற்றது. ஹிந்த் மஸ்தூர் சபாவின் மாநில தலைவர் சுப்பிரமணி தலைமையில் நடைபெற்ற இந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் ஹெச் எம் எஸ் செயல் தலைவர் சுப்பிரமணி பிள்ளை, மாநிலத் துணைத் தலைவர் கணேசன் மாநில செயலாளர் கோவிந்தன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தன. கூட்டத்தில் ஹெச் எம் எஸ் மாநில பொதுச் செயலாளரும், தேசிய தலைவருமான ராஜா ஸ்ரீதர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அமைப்பின் செயல்பாடுகள் குறித்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. 
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் காஷ்மீர் மாநிலம் பகல்காம் பகுதியில் தீவிரவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த இந்திய சகோதர சகோதரிகளுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பது, இந்தியாவில் நடைபெறும் இது போன்ற தீவிரவாத சம்பவத்திற்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் மற்றும் இந்தியாவில் தீவிரவாதத்தை பயன்படுத்தி மத வெறியை தூண்டும் மத்திய அரசு தவிர்க்க வேண்டும் என்பதோடு மோடி அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. இது குறித்து அந்த சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் அகில இந்திய தலைவருமான ராஜா ஸ்ரீதர் கூறுகையில்,  தொடர்ச்சியாக தொழிலாளர்களின் விரோத போக்கை கடைப்பிடிக்கும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் மே இருபதாம் தேதி நாடுதளவில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.
நாடு தழுவிய போராட்டம் குறித்த இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில மற்றும் சேலம் மாவட்ட நிர்வாகிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
 

வெள்ளி, 2 மே, 2025

சத்தியமங்கலம்: கடம்பூர் அருகே பெய்த பலத்த மழையால் பெருக்கெடுத்து ஓடிய காட்டாற்று வெள்ளம்!

சத்தியமங்கலம்: கடம்பூர் அருகே பெய்த பலத்த மழையால் பெருக்கெடுத்து ஓடிய காட்டாற்று வெள்ளம்!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் அருகே உள்ள மாக்கம்பாளையத்தை சுற்றியுள்ள கரளயம், ஏலஞ்சி, காடகநல்லி, எக்கத்தூர் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் திப்பநாயக்கனூர் எக்கத்தூர் பள்ளத்தில் காட்டாறு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

கடம்பூர்- மாக்கம்பாளையம் செல்லும் வழியில் சர்க்கரை பள்ளம், குறும்பூர் பள்ளங்களிலும் மழை வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. அதேபோல் காடகநல்லி எக்கத்தூர் பகுதியில் பெய்த கனமழை காரணமாக "ஆரேதள்ளம்" பள்ளத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து மாக்கம்பாளையம் - கோம்பையூர் செல்லும் தரைப்பாலத்தை மூழ்கடித்து செல்கிறது. இதனால் மாக்கம்பாளையம் கோம்பைதொட்டி செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் நாளை (மே.4ம் தேதி) 12 மையங்களில் நீட் தேர்வு: 4,162 மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர்!

ஈரோடு மாவட்டத்தில் நாளை (மே.4ம் தேதி) 12 மையங்களில் நீட் தேர்வு: 4,162 மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர்!

தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அமைப்பு சார்பில் நீட் தேர்வுகள் ஒருங்கிணைத்து நடத்தப்படுகின்றன. இத்தேர்வுகள் இளநிலை மருத்துவப்படிப்புகளுக்காக நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் 21 லட்சம் மாணவ, மாணவிகள் இத்தேர்வை எதிர்கொள்ளவுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் 4,162 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதவுள்ளனர். இத்தேர்வு நாளை (மே.4ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 முதல் 5 மணி வரை நடைபெறவுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் நீட் தேர்வுக்காக பன்னீர்செல்வம் பூங்கா அருகே காந்திஜி சாலையில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, கலைமகள் கல்வி நிலையம், மீனாட்சி சுந்தரனார் சாலையில் உள்ள செங்குந்தர் மேல்நிலைப் பள்ளி, ரங்கம்பாளையம் ஈரோடு கலை அறிவியல் கல்லூரி, வீரப்பன்சத்திரத்தில் உள்ள சிக்கய்ய அரசு கலை அறிவியல் கல்லூரி, திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரி, பெருந்துறை பவானி சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, சித்தோடு அருகே உள்ள அரசு பொறியியல் கல்லூரி (ஐஆர்டிடி), கோபி கரட்டடிபாளையத்தில் உள்ள கோபி கலை அறிவியல் கல்லூரி என 12 மையங்கள் தயார் நிலையில் உள்ளன.
ஈரோட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்ற பிரம்மாண்டமான மேதின பேரணி...

ஈரோட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்ற பிரம்மாண்டமான மேதின பேரணி...

பாட்டாளி தொழிற்சங்கம் சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர் கலந்து கொண்ட மே தின பேரணி ...

தொழிலாளர்களின் உழைப்பை போற்றும் வகையில் நாடு தோறும் மே தினம் விழா விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஈரோடு பாட்டாளி தொழிற்சங்கம் சார்பில்  முனியப்பன், ரங்கநாதன் தலைமையில் மே தின பேரணி நடைபெற்றது.

இப்பேரணியானது, ஈரோடு சிக்கயநாயக்கர் அரசு கல்லூரியில் இருந்து துவங்கி வீரப்பன்சத்திரம், பேருந்து நிலையம், சத்தி சாலை, மணிக்கூண்டு, வழியாக வந்து இறுதியாக ஈஸ்வரன் கோவில் அருகே நிறைவடைந்தது. இந்த பேரணியை பாமக மத்திய மாவட்ட செயலாளர் எஸ் ஆர் ராஜு கொடியசைத்து துவக்கி வைத்தார். 

இதில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் பேண்ட் வாதிய இசைக்களுக்கு ஏற்ப உற்சாகமாக கலந்து கொண்டனர்.

பேரணியில் கலந்து கொண்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் பாட்டாளி தொழிற்சங்கம் சார்பில் அசைவ உணவு வழங்கப்பட்டது.

இப்பேரணியில் மாநகர் மாவட்டத் தலைவர் பிரபு, மாநில செயற்குழு உறுப்பினர் மணிகண்டன், மாநில துணைத் தலைவர்கள் எஸ்.எல் பரமசிவம், எம்பி வெங்கடாசலம், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் செல்வராஜ், மாவட்ட பொருளாளர் அய்யம்மாள், மாவட்ட துணை செயலாளர் மூர்த்தி, முருகன் கணேஷ் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

ஈரோட்டில் வரும் மே.4ம் தேதி அங்கக விளை பொருட்களுக்கான வேளாண் சந்தை!

ஈரோட்டில் வரும் மே.4ம் தேதி அங்கக விளை பொருட்களுக்கான வேளாண் சந்தை!

தமிழ்நாடு அரசின் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் ஈரோடு மாநகராட்சி வ.உ.சி பூங்கா மைதானத்தில் உள்ள வாக்கர்ஸ் கிளப்பில் அங்கக வேளாண் சந்தை வரும் 4ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் 9 மணி வரை நடைபெறவுள்ளது.

அங்கக முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள் மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட வேளாண் விளை பொருட்கள், மஞ்சள் தூள், எண்ணெய் வகைகள், போன்றவை விவசாயிகளால் விற்பனை செய்யப்பட உள்ளது.

எனவே, அங்கக சான்று பெற்று விளைவித்த வேளாண் விளை பொருட்களை விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகளும், நஞ்சு இல்லா காய்கறிகள், பழங்கள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட வேளாண் விளை பொருட்களை வாங்கிட விரும்பும் நுகர்வோர்கள் அங்கக வேளாண் சந்தையில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

இந்த அங்கக வேளாண் சந்தையில் பங்கு பெற்று விளைபொருட்களை விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள் தங்கள் வட்டாரத்தில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தினை தொடர்பு கொள்ளலாம்.
ஈரோடு மாவட்டத்தில் அடுத்தடுத்து கொலைகள்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

ஈரோடு மாவட்டத்தில் அடுத்தடுத்து கொலைகள்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டுவலசு கிராமத்தில் தனியாக வசித்து வந்த ராமசாமி- பாக்கியம் தம்பதியினர் படுகொலை செய்யப்பட்டு, 15 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

காவல்துறை மானியக் கோரிக்கையின் போது, "சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது" என்று பெருமை பேசிய மு.க.ஸ்டாலின் அவர்களே- இது தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் லட்சணமா? தி.மு.க. ஆட்சிக்கு வந்தது முதல் இதே பகுதியில் நடைபெற்ற சில கொலை சம்பவங்களை பட்டியலிட விழைகிறேன்:

1 மே 2022- ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே முதியவரை கடப்பாரையால் தாக்கி கொலை; 27 சவரன் நகை கொள்ளை.

9 செப்டம்பர் 2023- ஈரோடு மாவட்டம் சென்னி மலை அருகே கொடூர ஆயுதங்களால் வயதான தம்பதி அடித்துக் கொலை; 15 சவரன் நகை மற்றும் 60 ஆயிரம் ரூபாய் கொள்ளை.

29 நவம்பர் 2024- திருப்பூர் மாவட்டம் பல்ல டம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் அடித்துக் கொலை.

13 மார்ச் 2025- திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே வயதான தம்பதி வெட்டிக் கொலை.

14 ஏப்ரல் 2025- ஈரோடு மாவட்டம் தாளவாடியில் பாட்டி மற்றும் பேரன் அடித்துக் கொலை.

இது போன்ற தொடர் கொலை, கொள்ளை சம்பவங்களை "தனிப்பட்ட ஒன்று இரண்டு விஷயங்கள்” என்பதற்கு இந்த ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசுக்கு வெட்கமாக இல்லையா?.

தமிழ்நாட்டு மக்கள் இரவில் நிம்மதியாக தூங்க முடியாமல் உயிரைக் கையில் பிடித்து வைத்திருக்கும் அச்ச நிலைக்கு தள்ளிய ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசுக்கு எனது கடும் கண்டனம்.

இந்த கொலை- கொள்ளையில் தொடர்பு உள்ள குற்றவாளிகள் அனைவர் மீதும் கடுமை யான சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், இனியேனும் மாய உலகில் இருந்து வெளி வந்து, சட்டம்-ஒழுங்கைக் காக்கும் தன் முதற்பணியை முறையாக செய்ய வேண்டும் என தி.மு.க. அரசின் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
ஈரோடு: சிவகிரி அருகே வயதான தம்பதியை கொலை செய்து 12 பவுன் நகை கொள்ளை!

ஈரோடு: சிவகிரி அருகே வயதான தம்பதியை கொலை செய்து 12 பவுன் நகை கொள்ளை!

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விலாங்காட்டுவலசு, மேகரையான் தோட்டத்தைச் சேர்ந்தவர் ராமசாமி (வயது 75). இவரது மனைவி பாக்கியம் (65). இவர்களுக்கு கவிசங்கர் என்ற மகனும், பானுமதி என்ற மகளும் உள்ளனர். மகன் கவிசங்கர் முத்தூரில் மோட்டார் விற்பனை நிலையம் வைத்து நடத்தி வருகிறார்.
மகள் பானுமதிக்கு திருமணம் ஆகி கணவருடன் முத்தூர் அருகே சர்க்கரை பாளையத்தில் வசித்து வருகிறார். ராமசாமி தனது மனைவி பாக்கியத்துடன் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்தார். தினமும் ராமசாமி தனது மகன், மகளுடன் போனில் பேசி வந்துள்ளார்.

கடந்த 4 நாட்களாக தங்களது வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்துள்ளனர். இந்நிலையில் கவிசங்கர் பெற்றோருக்கு போன் செய்துள்ளார், ஆனால் அவர்கள் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் இதுகுறித்து மேகரையான் தோட்டத்து பகுதியில் வசித்து வரும் தங்களது உறவினர்களை செல்போனில் அழைத்து பெற்றோர் வீட்டிற்கு சென்று பார்க்க சொல்லி உள்ளார்.

இதனையடுத்து கவிசங்கரின் உறவினரான நதியா மற்றும் நல்லசிவம் ஆகியோர் ராமசாமி வீட்டிற்கு சென்று உள்ளனர். அப்போது அவரது வீட்டின் முன் பகுதியில் ராமசாமியும், வீட்டுக்குள்ளே பாக்கியமும் படுகொலை செய்யப்பட்டு இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் அவர்களது உடல்கள் அழுகிய நிலையில் கடும் துர்நாற்றம் வீசியது. எனவே அவர்கள் இறந்து கிட்டத்தட்ட 4 நாட்களுக்கு மேல் இருக்கும் என தெரிய வந்தது. இதுகுறித்து சிவகிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற ஐ.ஜி செந்தில் குமார், டி.ஐ.ஜி சசிமோகன், ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா ஆகியோர் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பாக்கியம் அணிந்திருந்த 7 பவுன் தாலிகொடி, 5 பவுன் வலையல், மோதிரம் என 12 பவுன் நகை கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது. சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடியது.

ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதேபோல் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர். கொலை நடந்த வீடு தனியாக உள்ள தோட்டத்து வீடாகும். இதன் அருகே வீடுகள் இல்லை. சற்று தொலைவில் வீடுகள் இருந்துள்ளன.

இதனை சாதகமாக்கி கொண்ட மர்ம கும்பல் தங்களது திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. மேலும் ராமசாமி வீட்டில் ரத்தக்கரை படிந்திருந்தது. நகைக்காக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.