சனி, 21 டிசம்பர், 2024

பவானி: அம்மாபேட்டை அருகே குடிசை வீடு தீப்பிடித்து விபத்து; நகை, பணம் பொருட்கள் எரிந்து சேதம்

பவானி: அம்மாபேட்டை அருகே குடிசை வீடு தீப்பிடித்து விபத்து; நகை, பணம் பொருட்கள் எரிந்து சேதம்

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த அம்மாபேட்டை அருகே உள்ள அட்டவணைப்புதூர் கோனமூப்பனூர் பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல் (வயது 50). இவர், ஓலையில் குடிசை வீடு அமைத்து அதற்கு மேல் தகரச் சீட்டுகளை போட்டிருந்தார்.

இந்த நிலையில், இன்று (டிச.21) காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென வீடு தீப்பற்றி எரிந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அந்தியூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. எனினும் வீட்டுக்குள் இருந்த ரூ.1 லட்சம் ரொக்கம், 5½ பவுன் நகை, டிவி, குளிர்சாதனப் பெட்டி, மளிகை பொருட்கள், துணிகள் எரிந்து நாசமாகிவிட்டதாக கூறப்படுகிறது.

தீயணைப்பு வீரர்களும், அம்மாபேட்டை போலீசாரும் நடத்திய விசாரணையில் விட்டில் உள்ள மின் ஒயரில் கசிவு ஏற்பட்டு, அதனால் ஏற்பட்ட தீப்பொறி மேற்கூரையில் உள்ள ஓலையில் பட்டு தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று தெரிய வருகிறது. எனினும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. 
ஈரோடு ரயில்வே காவல் நிலையத்தில் கோவை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஆய்வு

ஈரோடு ரயில்வே காவல் நிலையத்தில் கோவை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஆய்வு


ஈரோடு ரயில் நிலைய 3வது நடைமேடையில் ரயில்வே காவல் நிலையம் உள்ளது. இந்த காவல் நிலையத்தில் கோவை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பாபு இன்று (டிச.21) வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வில், நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை விரைந்து முடிப்பது குறித்தும், ரயிலில் நடைபெறும் குற்றச் சம்பவங்களை தடுப்பது குறித்தும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும், போலீசாருக்கு அரசு வழங்கிய சீருடை உள்ளிட்ட பொருட்களின் பயன்பாடு குறித்து ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, ரயில்வே காவல் ஆய்வாளர் பிரியா சாய்ஸ்ரீ மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் உட்பட போலீசார் உடனிருந்தனர்.
ஈரோடு அருகே 40 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த 20 சென்ட் இடம் மீட்பு

ஈரோடு அருகே 40 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த 20 சென்ட் இடம் மீட்பு

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பெருந்துறை செல்லும் சாலையில் அமைந்துள்ள கீழ்திண்டல் பகுதியில் அரசுக்கு சொந்தமான 20 சென்ட் இடம் ஆக்கிரமிப்பில் இருந்தது. இதுகுறித்து, அறிந்த வருவாய்த்துறையினர் அப்பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வீடுகள் ஆகியவற்றை அளவீடு செய்தனர்.

அப்போது சொந்தமான 20 சென்ட் இடத்தை அதைப் பகுதியைச் சேர்ந்த 4 பேர் 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பு செய்து கடைகள் அமைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, அவர்களிடம் எடுத்து கூறியும் அவர்கள் ஆக்கிரமிப்புகளை காலி செய்ய மறுப்பு தெரிவித்து வந்தனர்.

மேலும், இது தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இடத்தை மீட்டு வருவாய்த்துறை ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து அவர்களுக்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற 7 மாத கால அவகாசம் கொடுக்கப்பட்டது. எனினும் அவர்கள் ஆக்கிரமிப்புகளை காலி செய்ய மறுத்து வந்தனர்.

இந்நிலையில், இன்று (டிச.21) காலை ஆக்கிரமிப்பு இடத்தை அகற்ற வருவாய் துறையினர் முடிவு செய்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வருவாய்த் துறையினர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கடைகள் மற்றும் வீடுகளை அகற்றினர். இதற்காக பணியாளர்கள் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் கடைகள், வீடுகளை இடித்தனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. மேலும், மீட்கப்பட்ட அந்த இடம் மீட்கப்பட்டு இந்து அறநிலையத் துறைக்கு ஒப்படைக்கப்பட உள்ளது.
மக்கள் சட்ட உரிமைகள் கழகம் சார்பில் முப்பெரும் விழா. ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்.

மக்கள் சட்ட உரிமைகள் கழகம் சார்பில் முப்பெரும் விழா. ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு.

மக்கள் சட்ட உரிமைகள் கழகம் சார்பில் முப்பெரும் விழா. ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள். 

மக்கள் சட்ட உரிமைகள் கழகம் மற்றும் சேலம் மக்கள் சேவை இயக்கத்தின் சார்பில் மனித உரிமைகள் தினம், பாரதியார் பிறந்த தினம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா சேலம் தாதகாப்பட்டி பகுதியில் நடைபெற்றது. 
மக்கள் உரிமைகள் கழகத்தின் மாநில இளைஞரணி நிர்வாகச் செயலாளர் ஆர்வி பாபு தலைமையில் நடைபெற்ற விழாவில் சேலம் மாநகர மேயர் ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி விழாவில் சிறப்புரையாற்றினார். விழாவில் சேலம் கொண்டலாம்பட்டி மண்டல குழு தலைவர் அசோக், தொழிலதிபர் ஓ.டெக்ஸ் இளங்கோவன் மற்றும் ஆரிய வைசிய முன்னேற்ற பேரவையில் தலைவர் டாக்டர் நாகா அரவிந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பணிக்குச் செல்லும் பெண்களின் பாதுகாப்பு மற்றும் அதிலிருந்து அவர்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்தான கருத்தரங்கம்.

பணிக்குச் செல்லும் பெண்களின் பாதுகாப்பு மற்றும் அதிலிருந்து அவர்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்தான கருத்தரங்கம்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு.

பணிக்குச் செல்லும் பெண்களின் பாதுகாப்பு மற்றும் அதிலிருந்து அவர்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்தான கருத்தரங்கம். 

சேலம் கிராமிய பெண்கள் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் திருப்பூர் சமூக கல்வி மற்றும் முன்னேற்ற மையம் ஆகியவை இணைந்து நடத்திய ஜவுளி தொழிலில் வளரினம் பெண்கள் மற்றும் பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் கொடுமை சங்கங்களின் பங்கு என்ற தலைப்பில் கருத்தரங்கம் சேலத்தில் நடைபெற்றது. சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் நடைபெற்ற இந்த கருத்தரங்க நிகழ்ச்சிக்கு கருத்தரங்கனை இணைந்து நடத்திய அமைப்புகளை சார்ந்த திருமதி அலமேலு மற்றும் நம்பி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு முதன்மை ஒருங்கிணைப்பாளர் சரஸ்ராம் ரவி, மாதர் சங்க சேலம் மாவட்ட பொறுப்பாளர் பரமேஸ்வரி, செல்ல செல்வகுமார், வழக்கறிஞர் திவ்யா, எச் எம் எஸ் கணேசன், ஐ ஆர் டி எஸ் என் ஜி ஓ தலைவர் ஜெயவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, பணிக்கு செல்லும் பெண்களின் நிலை குறித்தும் அவர்களுக்கு ஏற்படும் அசவ் கரியங்கள், அதிலிருந்து அவர்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பன போன்ற ஜவுளி தொழிலில் வளரிலும் பெண்களுக்கு உண்டான பாதுகாப்பு குறித்து விரிவாக பட காட்சிகளுடன் எடுத்துரைக்கப்பட்டது.
மேலும் ஜவுளி தொழில் அன்றும் இன்றும் ஒரு பார்வை, ஜவுளி தொழிலில் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் சவால்கள் உரிமை மீறல்கள், தொழிலாளர் நலச் சட்டங்களின் தற்போதைய நிலை புதிய தொழிலாளர் குறியீடுகள் தொகுப்புகளின் தாக்கம் மற்றும் பெண் தொழிலாளர்களின் நலனை பாதுகாப்பதில் கொடுமை சமூக அமைப்புகளின் பங்கு உத்திகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விரிவாக அந்தந்த அமைப்பை சேர்ந்தவர்களால் விளக்கம்  அழிக்கப்பட்டது.
இந்த கருத்தரங்கத்தில் பல்வேறு கொடுமைச் சமூக அமைப்புகளின் நிர்வாகிகள் வளரிளம் பணிக்கு செல்லும் பெண்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

வெள்ளி, 20 டிசம்பர், 2024

ஆன்லைன் வர்த்தகத்தில் 5 லட்சம் ரூபாய் மோசடி புகார் விவகாரம். முத்தரப்பு பேச்சு வார்த்தையில் சுமூக முடிவு. முதலீடு செய்த பணம் திரும்ப கிடைக்க தவறும் பட்சத்தில் ஆன்லைன் வர்த்தக நிறுவனர் மீது புகார் அளிக்கவும் முடிவு.

ஆன்லைன் வர்த்தகத்தில் 5 லட்சம் ரூபாய் மோசடி புகார் விவகாரம். முத்தரப்பு பேச்சு வார்த்தையில் சுமூக முடிவு. முதலீடு செய்த பணம் திரும்ப கிடைக்க தவறும் பட்சத்தில் ஆன்லைன் வர்த்தக நிறுவனர் மீது புகார் அளிக்கவும் முடிவு.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

ஆன்லைன் வர்த்தகத்தில் 5 லட்சம் ரூபாய் மோசடி புகார் விவகாரம். முத்தரப்பு பேச்சு வார்த்தையில் சுமூக முடிவு. முதலீடு செய்த பணம் திரும்ப கிடைக்க தவறும் பட்சத்தில் ஆன்லைன் வர்த்தக நிறுவனர் மீது புகார் அளிக்கவும் முடிவு.

சேலம் மற்றும் நாமக்கல் பகுதிகளை சேர்ந்து ஓய்வு பெற்று அரசுத்துறை அதிகாரிகள் ஆன்லைன் வர்த்தகத்தில் 5 லட்சம் ரூபாய் பண முதலீடு செய்து மோசடி மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த  ஆன்லைன் வர்த்தகம் குறித்து அறிவுறுத்திய  மனோகரன்  மற்றும் கந்தசாமி  ஆகியோர் மீது  நடவடிக்கை எடுக்க  கோரி நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்த விவகாரம். இது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட மனோகரன் மற்றும் கந்தசாமி, தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு முதன்மை ஒருங்கிணைப்பாளர் சரஸ்ராம் ரவி மற்றும் பணம் கொடுத்து பாதிக்கப்பட்டவர்கள் என கலந்து கொண்ட முத்தரப்பு பேச்சு வார்த்தை கூட்டம் சேலம் சின்ன திருப்பதி பகுதியில் நடைபெற்றது. பணம் முதலீடு செய்தது முதலீடு செய்த தொகையில் ஏற்கனவே அவர்கள் லாபம் பெற்றது, 
இதனை அடுத்து சம்பந்தப்பட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனம் முதலீடு செய்த பணத்தை திருப்பி கொடுக்காமல் முடங்கியது, இது தொடர்பாக நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்தது என்பன உள்ளிட்ட பாதிக்கப்பட்டவர்களின் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. அப்பொழுது ஆன்லைன் வர்த்தகம் குறித்து அறிவுறுத்திய மனோகரன் மற்றும் கந்தசாமி ஆகியோர் தங்களது தரப்பில் உள்ள விளக்கங்களை தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், சம்பந்தப்பட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனர் இடம் பேச்சுவார்த்தை நடத்தியதன் மூலம் வரும் 30ம் தேதிக்குள் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் திரும்ப வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். அதுமட்டுமில்லாமல் ஆன்லைன் வர்த்தகம் என்பது நம்பகத்தன்மை அற்ற ஒரு வர்த்தகம் என்பதாலும் தாங்கள் கூறியதன் அடிப்படையில் தாங்கள் முதலீடு செய்ததற்கு உண்டான அனைத்து பணிகளையும் நாங்கள் இருவரும் செய்து கொடுத்துள்ளதாகவும் இதன் காரணமாக சில பலன்களை தாங்கள் பெற்றுள்ளதாகவும் தெரிவித்த அவர்கள் இந்த நிலையில் ஆன்லைன் வர்த்தக நிறுவனம் முடங்கிய பின்னர் ஆன்லைன் வர்த்தக நிறுவனர் மீது புகார் அளிக்காமல் தங்கள் மீது புகார் அளித்தது எந்த விதத்தில் நியாயம் என்று பலவாறு தங்களது தரப்பு நியாயங்களை கேள்விகளாக கேட்டுள்ளனர். இதனை அடுத்து பேசிய கூட்டு நடவடிக்கை குழு முதன்மை ஒருங்கிணைப்பாளர் சரஸ்ராம் ரவி, தற்பொழுது நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் பாதிக்கப்பட்டவர்களுக்கான முதலீடு ஒரு குறிப்பிட்ட காலத்தில் கிடைக்கும் என ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்த பணம் அதன் உரிமையாளரால் வழங்கப்பட உள்ளதாக, அறிவுறுத்தியவர்கள் அறிவித்துள்ளதால் மனோகரன் மற்றும் கந்தசாமி ஆகியோர் மீது நாமக்கல் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் கொடுக்கப்பட்ட புகார் மனுவை விசாரணை இல்லாமல் நிறுத்தி வைப்பது, குறிப்பிட்ட காலகடுவுக்குப் பிறகும் இதே நிலை நீடித்தால் ஆன்லைன் வர்த்தக உரிமையாளர் மீது புகார் அளிப்பது எனவும் முடிவு செய்வதாக தெரிவித்தார். 
இதன் காரணமாக அமேசர் வர்த்தக  முதலீட்டில் பாதிக்கபட்ட ரவிகுமார், ராஜசேகரன், ஜெகதாம்பாள். சிவ பரகாஷ், ராஜ்குமார் ஆகியோரின். காவல் துறை புகார் குறித்து  சம்பந்தபட்ட நபர்கள் மனோகரன் மற்றும்  கந்தசாமி  ஆகியோர் இணைந்து நடத்திய பேச்சு வார்த்தை மூலம் சமூக தேர்வு எட்டபட்டது.
ஈரோடு மாவட்டத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட 8 புதிய அறிவிப்புகள்!

ஈரோடு மாவட்டத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட 8 புதிய அறிவிப்புகள்!

ஈரோட்டில் இன்று (டிச.20) நடைபெற்ற அரசு விழாவில் வளர்ச்சி திட்டப் பணிகளை துவக்கி வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின், மாவட்டத்திற்கு 8 புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு சோலாரில் இன்று (டிச.20) நடைபெற்ற அரசு விழாவில், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

பின்னர், விழா மேடையில் பேசிய அவர், ஈரோடு, இந்த மண் தான் தமிழ்நாட்டின் புதிய வரலாற்றுக்கான தொடக்கம்! காரணம், தந்தை பெரியாரைக் கொடுத்த மண் இந்த மண்! தந்தை பெரியார் அவர்கள் நமக்கு பேரறிஞர் அண்ணாவையும், முத்தமிழறிஞர் கலைஞரையும் கொடுத்திருக்கிறார். அவர்கள் இல்லாமல், திராவிட இயக்கம் இல்லை! இன்றைய வளர்ச்சி நிறைந்த அறிவார்ந்த தமிழ்நாடும் இல்லை! நாமும் இல்லை! 

சில நாட்களுக்கு முன்புதான், ‘ஈரோட்டு பூகம்பம்’ தந்தை பெரியார் நிகழ்த்திக் காட்டிய, வைக்கம் புரட்சியின் நூற்றாண்டு நிறைவு விழாவைக் கேரளத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடினோம். கேரள மக்கள் நம்முடைய திராவிட மாடல் ஆட்சியைப் பார்த்து பாராட்டுகிறார்கள்.

இந்த ஈரோடு மண்ணின் மைந்தரான தந்தை பெரியார் அமைத்த அடித்தளம் தான் அதற்குக் காரணம். பல புரட்சிகரமான தொடக்கம் விளைந்த இந்த ஈரோட்டு மண்ணில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்; பெருமைப்படுகிறேன்; பூரிப்படைகிறேன்; புலங்காகித உணர்வோடு இங்கே நான் உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன். 

உங்களையெல்லாம் பார்த்து நான் மகிழ்ச்சி அடைந்தாலும், இந்த நேரத்தில் ஒரு சோகம் எனக்குள் இருந்து வேதனையை தந்து கொண்டுதான் இருக்கிறது! கடந்த வாரம் நம்முடைய ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய திரு. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள் நம்மை விட்டு பிரிந்த சோகம்தான் அது! தந்தைப் பெரியாரின் பேரன் அவர்.

மத்திய அமைச்சராக, நாடாளுமன்ற உறுப்பினராக, சட்டமன்ற உறுப்பினராக, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக மிகச் சிறப்பாக செயல்பட்டவர், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். அவருடைய இழப்பு ஈரோடு தொகுதி மக்களுக்கு மட்டுமல்ல. தமிழ்நாட்டிற்கும் மிகப்பெரிய இழப்பு. இன்றைக்கு அவர் நம்மோடு இந்த மேடையில் இருந்திருந்தால் நம்முடைய திராவிட மாடல் அரசின், சாதனைகளை செயல்திட்டங்களைப் பற்றி எடுத்துச் சொல்லியிருப்பார். அவருக்கு இந்தக் கூட்டத்தின் வாயிலாகவும் என்னுடைய அஞ்சலியை நான் செலுத்திக் கொண்டிருக்கிறேன்.

இந்த விழாவின் மூலமாக ரூ.951 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான 559 புதிய திட்டங்கள் திறப்பு விழா நடைபெற்றிருக்கிறது. ரூ.133 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பிலான 222 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது. ரூ.284 கோடியே 2 லட்சம் ரூபாய் அளவுக்கான நலத்திட்ட உதவிகள் 50 ஆயிரத்து 88 பேருக்கு வழங்கப்படவிருக்கிறது. மொத்தமாக சொன்னால், ஆயிரத்து 368 கோடியே 88 இலட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டங்களின் விழாவாக, இதனை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கக்கூடிய ஈரோட்டின் நல்முத்து அமைச்சர். முத்துசாமி அவர்களை பாராட்டுகிறேன்; வாழ்த்துகிறேன். 

பரபரப்பும், ஆர்ப்பாட்டமும் இல்லாமல் நினைத்த செயலை வெற்றிகரமாக நிகழ்த்திக்காட்டக் கூடியவர் நம்முடைய அருமை சகோதரர் முத்துசாமி அவர்கள். இந்த நிகழ்வை இவ்வளவு பிரம்மாண்டமாக நிகழ்த்திக் காட்டியிருக்கக்கூடிய அமைச்சருக்கும், அதேபோல் மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் மாவட்ட அரசு அலுவலர்கள் அனைவருக்கும் என்னுடைய பாராட்டுக்கள் வாழ்த்துகள்.

கடந்த மூன்றாண்டு காலத்தில், ஈரோடு மாவட்டத்திற்கு நம்முடைய திராவிட மாடல் அரசு செய்திருக்கும் பணிகளின் பட்டியல் மிக மிக நீளமானது. அவற்றில் சிலவற்றை மட்டும் உங்களிடம் நினைவுபடுத்த விரும்புகிறேன். மேற்கு மண்டல மக்களின் நீண்டகால கோரிக்கையான அத்திக்கடவு அவினாசி திட்டத்தை, கடந்த ஆகஸ்ட் மாதம் 17-ஆம் நாள் தொடங்கி வைத்தோம்.

இதன்கீழ் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 357 ஏரிகளுக்கு நீர் வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்ட நகர்ப் பகுதிகளில், 70 ஆண்டு காலமாக குடியிருந்து வரும் 4 ஆயிரத்து 191 நபர்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டிருக்கிறது. நத்தம் நிலவரித்திட்டப் பணிகளுக்கான புதிய அரசாணையின்படி, 2 ஆயிரத்து 922 பட்டா வழங்கப்பட்டு, இன்னும் அந்தப் பணி தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஈரோடு மாவட்ட விளையாட்டு அரங்கில், 400 மீட்டர் சிந்தெட்டிக் ஓடுதள பாதையுடன் கூடிய கால்பந்து மைதானம் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. 

தந்தைப் பெரியார் மருத்துவமனையில், 80 கோடியே 81 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய பல்நோக்கு மருத்துவமனை கட்டடம் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. அந்தியூர், பர்கூர், தாளவாடி, தலமலை மற்றும் ஆசனூர் ஊராட்சிகளுக்கு உட்பட்ட 9 கிராமங்களில் வசிக்கும் மலைவாழ் மக்கள் வசதிக்காக, 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இணைப்புச் சாலைகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, இப்போது 3 பணிகள் முடிக்கப்பட்டு, மீதமுள்ள 6 பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மலைவாழ் மக்களின் பொருளாதார மேம்பாட்டை கணக்கில் கொண்டு தாளவாடி மற்றும் பர்கூர் மலைப்பகுதிகளில், 5 கோடியே 64 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தலா 500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதன சேமிப்புக் கிடங்கு கட்டப்பட்டு, தற்போது உழவர்கள் மற்றும் வியாபாரிகளால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எட்டு புதிய சமுதாயக் கூடங்கள், புதிய மாவட்ட மைய நூலகம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது.

அந்தியூர், சத்தியமங்கலம், தாளவாடி வட்டங்கள் மலைப்பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டு, அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்களுக்கு, மலைவாழ் படி மற்றும் குளிர்காலப் படி வழங்க ஆணையிடப்பட்டிருக்கிறது. ஈரோடு, கோபி, சத்தியமங்கலம் மற்றும் பெருந்துறை ஆகிய 4 இடங்களில் அறிவுசார் மையம் அமைக்கப்பட்டிருக்கிறது. நம்பியூர் வட்டாரத்தில், ரூ.6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகிறது. 

ஈரோட்டில் மஞ்சள் பொது வசதி மையம், கரட்டுப்பாளையத்தில் ஜிம்னாஸ்டிக் அரங்கம் அமைக்கப்பட இருக்கிறது. ஈரோட்டில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைப்பதற்கான இடம் கண்டறியப்பட்டு, விரைவில் அங்கு ஐ.டி. பார்க் அமைக்கப்படும். அதுமட்டுமல்ல, இன்று சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்தின் நீண்ட நாள் கோரிக்கையான 22 கிராம ஊராட்சிகளில் இருக்கும் 434 ஊரக குடியிருப்புகளுக்கு, ரூ.482 கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பிலான கூட்டுக் குடிநீர் திட்டம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது.

ஈரோடு மாநகராட்சி, சோலார் பகுதியில் காய்கறி மளிகை சந்தை உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகள் இன்று தொடங்கப்பட்டிருக்கிறது. விடுதலைப் போராட்ட மாவீரர்களை, மக்களுக்காக உழைத்த தியாகிகளை தொடர்ந்து போற்றி வரும் அரசு நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசு. அதற்கு அடையாளமாகதான், தமிழ்நாடு முழுவதும் முன்னாள் முதல்வர் கலைஞரால் அமைக்கப்பட்ட தியாகிகளின் திருவுருவச் சிலைகளும், நினைவுச் சின்னங்களும் அமைக்கப்பட்டது.

அந்த வரிசையில், பவானிசாகரில் உத்தமர் தியாகி ஐயா ஈஸ்வரனுக்கு முழு திருவுருவச் சிலையுடன் கூடிய அரங்கத்தை நான் திறந்து வைத்திருக்கிறேன். அதேபோல், 18-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய, தீரன் சின்னமலையின் போர்ப்படையிலும், ஒற்றர் படையிலும் தளபதியாக பணிபுரிந்து, ஆங்கிலேயர்களால் சுட்டுக் கொல்லப்பட்டவர் மாவீரன் பொல்லான். மாவீரன் பொல்லானுக்கு மணிமண்டபம் அமைக்க ரூ.1 கோடியே 82 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, ஜெயராமபுரத்தில், மாவீரன் பொல்லானின் முழு திருவுருவச் சிலையுடன் அரங்கம் அமைக்க இன்றைக்கு நான் அடிக்கல் நாட்டியிருக்கிறேன். 

அடுத்து, நாட்டின் விடுதலைக்காக, தனது இன்னுயிரை ஈந்த தியாகி திருப்பூர் குமரன் நினைவைப் போற்றும் வகையில், சென்னிமலையில் மணிமண்டபம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு திறப்புவிழாவும் நடைபெறவிருக்கிறது. அதேபோல், இந்த ஈரோடு மாவட்டம், சின்னியம்பாளையத்தில் பிறந்து, நாட்டு விடுதலைக்காக பாடுபட்டதோடு, தன்னுடைய அயராத முயற்சிகளால் பால் உற்பத்தியைப் பெருக்கி, தமிழ்நாட்டில் வெண்மைப் புரட்சிக்கு வித்திட்ட பால்வளத் தந்தை எஸ்.கே.பரமசிவனுக்கு திருவுருவச்சிலை, ஈரோடு பால் பண்ணையில் நிறுவப்படும் என்பதையும் இந்த நிகழ்ச்சியில் மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், கொடுமணல் தொல்லியல் களத்தின் வரலாற்றுச் சிறப்பை அடுத்த தலைமுறைக்கும் கொண்டுசெல்ல அருங்காட்சியகம் அமைக்க அறிவிக்கப்பட்டு, அதற்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டிருக்கிறது. இப்படி ஏராளமான திட்டங்களை நாம் செயல்படுத்திக் கொண்டு வருகிறோம். அந்த உறுதியோடு இன்றைய நிகழ்ச்சியின் வாயிலாக இன்னும் சில அறிவிப்புகளை நான் வெளியிட விரும்புகிறேன்.

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் உங்கள் அரசின் முதல் அறிவிப்பாக நான் சொல்வது, ஈரோடு மாநகராட்சி, அந்தியூர், கோபி, மொடக்குறிச்சி, பெருந்துறை போன்ற பகுதிகளில் இருக்கக்கூடிய சாலைகள் ரூ.100 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும். 

இரண்டாவது அறிவிப்பு - ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு ரூ.15 கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் கட்டடமும், ஈரோடு மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை அலுவலகத்திற்கு ரூ.8 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டடங்களும் கட்டப்படும்.

மூன்றாவது அறிவிப்பு - சென்னிமலை ஒன்றியத்திற்குட்பட்ட 50 கிராமங்கள், சென்னிமலை, சித்தோடு, நசியனூர், கே.சி.பாளையம் பேரூராட்சிகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம் ரூ.15 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும். இதுமட்டுமல்லாமல், சத்தியமங்கலம் மற்றும் நம்பியூர் ஒன்றியங்களுக்கான கூட்டுக்குடிநீர்த் திட்டம், ரூ.27 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், பவானிசாகர் ஒன்றியத்திற்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம் ரூ.12 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் மேம்படுத்தப்படும்.

நான்காவது அறிவிப்பு - அந்தியூர் ஒன்றியத்திலுள்ள கத்திரிமலைப் பகுதி மலைகிராம மக்களின் நீண்டகாலக் கனவை நிறைவேற்றும் வகையில், ரூ.2 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், மின் இணைப்பு வசதிகள் வழங்கப்படும்.

ஐந்தாவது அறிவிப்பு – மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி வட்டத்தில் குரங்கன்பாளையம் நீர்ப்பாசன அமைப்புத் திட்டத்தின்கீழ் பயன்பெறும் உழவர்களுக்கு பலனளிக்கும் வகையில், ரூ.15 கோடி ரூபாய் செலவில், இந்தத் திட்டம் மேம்படுத்தப்படும்.

 அடுத்து, ஆறாவது அறிவிப்பு - உயர்கல்வித் துறையின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ள சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில், ரூ.10 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், உலகத் தரத்திலான விளையாட்டு மைதானம், நூலக வசதிகள் மற்றும் குடிமைப் பணிகள் தேர்வுக்கான பயிற்சி மையம் அமைக்கப்படும்.
ஏழாவது அறிவிப்பு - ஈரோடு மாவட்டத்தில் வாடகை கட்டடத்தில் இயங்கிக் கொண்டிருக்கக்கூடிய 15 துணை சுகாதார நிலையங்களுக்கு, ரூ.6 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சொந்தக் கட்டடங்கள் கட்டித் தரப்படும்.

எட்டாவது அறிவிப்பு - பவானியில் உள்ள சங்கமேஸ்வரர் கோயில், கொடுமுடியில் உள்ள மகுடேஸ்வரர் கோயில் மற்றும் வீர நாராயணப் பெருமாள் கோயில் பக்தர்களுக்கான வசதிகள், ரூ.10 கோடி ரூபாய் செலவில் அமைத்துத் தரப்படும். 

இவை எல்லாம் விரைவில் நிறைவேற்றப்படும்! வெறும் அறிவிப்புகளை வெளியிட்டுவிட்டு, கண்டுகொள்ளாமல் போகும் முந்தைய அரசு இல்லை இது. சொன்னதை செய்வோம் என்று செய்து காட்டிய முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் நடக்கும் உங்கள் ஸ்டாலினுடைய திராவிட மாடல் அரசு இது! 

நேற்று, நான் ஈரோட்டிற்கு வந்தவுடன், இந்த மாவட்டத்தில், நடந்துகொண்டிருக்கக்கூடிய பணிகள் என்னென்ன என்பதை ஆய்வு செய்ததோடு, மாவட்ட ஆட்சியருடன் பல்வேறு நலத் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தேன். அதுமட்டுமல்ல, இன்றைய நாளேடுகளை நீங்கள் பார்த்தால் தெரியும். முதல்வரின் கவனத்திற்கென்று சில பிரச்சனைகள் என்று தலைப்பிட்டு அதில் கட்டுரையாக எழுதியிருந்தார்கள்.

அதை தற்போது மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி கவனிக்க சொல்லியிருக்கிறேன். இப்படி தொடர்ந்து ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு மக்களுக்கான நலத் திட்டங்களை செயல்படுத்திக் கொண்டு வருகிறோம். நேற்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், நம்முடைய அரசின் நலத்திட்டங்களால் பயனடையும் தகவல்களையும் மாவட்ட ஆட்சியரிடம் வாங்கி பார்த்தேன்.

அந்த தகவல் எனக்கு பெருமையாகவும், மலைப்பாகவும் உண்டாக்கியது. ஆச்சரியமாக இருந்தது. இவ்வளவு செய்திருக்கிறோமா! நம்முடைய திராவிட மாடல் அரசின் முத்தாய்ப்பான திட்டங்களை, அவைகள் எல்லாம் முழுமையாக சொல்வதற்கு நேரமில்லை. டேட்டாவை மட்டும், சுருக்கமாக உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

பெண்களின் பொருளாதார விடுதலைக்காக நம்முடைய அரசு வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம். அந்தத் திட்டத்தில், இந்த மாவட்டத்தைப் பொறுத்தவரைக்கும், 4 இலட்சத்து 90 ஆயிரம் மகளிர் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை பெறுகிறார்கள்! அதேபோல, பள்ளிக் குழந்தைகளுக்கு சுவையான – சத்தான காலை உணவு வழங்கும் திட்டத்தில், 46 ஆயிரத்து 355 மாணவர்கள் வயிறார சாப்பிடுகிறார்கள்! மாணவிகளின் உயர்கல்வி கனவுக்கு உறுதுணையாக இருக்கும் புதுமைப்பெண் திட்டத்தில் 10 ஆயிரம் மாணவிகள் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பெறுகிறார்கள்! 

அதேபோல், மாணவர்களின் உயர்கல்விக்கு துணை நிற்கும் ’தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தில் 12 ஆயிரத்து 407 மாணவர்கள் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பெறுகிறார்கள்! மாணவர்களின் திறனை மேம்படுத்தும் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் மட்டும் 1 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றிருக்கிறார்கள். 

கடந்த 3 ஆண்டுகளில் 67 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, பல்வேறு நிறுவனங்கள் மூலமாக இதுவரை 7 ஆயிரத்து 630 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்திருக்கிறது. நேற்று நான் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில், இரண்டு கோடியாவது பயனாளிக்கு மருந்து பெட்டகம் வழங்கினேன். அந்தத் திட்டத்தின் மூலம் இந்த மாவட்டத்தில் மட்டும் 6 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது.

அதுமட்டுமல்ல, மாவட்டம் முழுவதும் 39 ஆயிரத்து 762 பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டிருக்கிறது. அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் ஆயிரத்து 528 பேருக்கு வங்கிக் கடன் வழங்கப்பட்டிருக்கிறது. 78 ஆயிரத்து 235 உழவர்களுக்கு 3 ஆயிரத்து 484 கோடி ரூபாய் பயிர்க் கடன் வழங்கப்பட்டிருக்கிறது. 

அடுத்த பட்டியல், மாவட்ட உட்கட்டமைப்பு திட்டங்கள், நெடுஞ்சாலைத்துறை சார்பில் மட்டும், இதுவரை 830 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைப்பணிகள், ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. கடந்த மூன்றரை ஆண்டுகளில் 73 பாலங்கள் கட்டும் பணிகள், 201 கோடி ரூபாய் மதிப்பீட்டுத் தொகையில் மேற்கொள்ளப்பட்டு, இதுவரை 71 பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. மீதமுள்ள பணிகளும் நடைபெற்று வருகிறது.  

75 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது. இப்படி தொடர் திட்டங்களை தருகின்ற காரணத்தினால்தான், மக்களாகிய நீங்களும் எங்களுக்கு தொடர் வெற்றிகளை தந்து கொண்டிருக்கிறீர்கள் என்றார்.