வியாழன், 12 மார்ச், 2026

மத்திய மற்றும் தமிழக அரசுகளுக்கு தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு கோரிக்கை. இதனை  ஊக்குவிக்கும் 38 மாவட்ட டாஸ்மாக்  மேலாளர்கள் மற்றும், டாஸ்மாக் கடை ஊழியர்கள்  மீதும் குண்டர் சட்டம் பதிய வேண்டும் அமைப்பின் நிறுவனத் தலைவர் சரஸ்ராம் ரவி வலியுறுத்தல்.

மத்திய மற்றும் தமிழக அரசுகளுக்கு தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு கோரிக்கை. இதனை ஊக்குவிக்கும் 38 மாவட்ட டாஸ்மாக் மேலாளர்கள் மற்றும், டாஸ்மாக் கடை ஊழியர்கள் மீதும் குண்டர் சட்டம் பதிய வேண்டும் அமைப்பின் நிறுவனத் தலைவர் சரஸ்ராம் ரவி வலியுறுத்தல்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

மத்திய மற்றும் தமிழக அரசுகளுக்கு தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு கோரிக்கை. இதனை  ஊக்குவிக்கும் 38 மாவட்ட டாஸ்மாக்  மேலாளர்கள் மற்றும், டாஸ்மாக் கடை ஊழியர்கள்  மீதும் குண்டர் சட்டம் பதிய வேண்டும் அமைப்பின் நிறுவனத் தலைவர் சரஸ்ராம் ரவி வலியுறுத்தல்.

தமிழகத்தில் உள்ள பட்டியலின,  பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, மற்றும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபினரின் பிரச்சனைக்காகவும் அவர்களது கோரிக்கைகளுக்காகவும் மற்றும் அவர்களது முன்னேற்றத்திற்காகவும் பல கட்ட போராட்டங்களை மேற்கொண்டு பட்டியலின மக்களின் போராளி என பெயர் பெற்றவர் தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு அமைப்பின் நிறுவனத் தலைவர் சரஸ்ராம் ரவி. தமிழக அரசு நிறுவனமான டாஸ்மாக் மதுபான கடைகளில் நிகழும் ஏராளமான முறைகேடுகள் குறித்து அவ்வப்பொழுது அரசின் கவனத்திற்கும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களின் கவனத்திற்கும் ஒரு பொழுதும் கொண்டு செல்லாமல் இல்லை. இந்த நிலையில், 
சரஸ்ராம் ரவி தற்பொழுது வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், 
டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெறும் அனைத்து குற்றங்களுக்கும் போலி சரக்கு விற்பனை  தண்ணீர் கலந்து மக்களை ஏமாற்றுவது சட்டத்திற்கு புறம்பாக தமிழகம் முழுவதும் பல லட்சம் சந்து கடைகள் வியபாரத்தை அரசுக்கு எதிராக சட்டவிரோதமாக ஊக்குவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழகம் முழுவதும் 3 லட்சம் சந்து கடைகளுக்கு மேலாக இருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், குடிமகன்களுக்கு  விடிய விடிய கள்ள  மார்கெட்டில் பல கோடி ரூபாய் மதிப்புடைய மது வகைகளை விற்பனை செய்து வருவதாக டாஸ்மாக் ஊழியரகள் ஊழியர்கள் மீது குற்றம் சாட்டியுள்ளார். அரசுக்கு எதிரான முறைகேடான சொந்த லாபத்திற்காக, சட்டவிரோத மது விற்பனையை டாஸ்மாக் விற்பனையாளர்கள் வாயிலாக  ஊக்குவிக்கும் 38 மாவட்டங்களைச் சேர்ந்த டாஸ்மாக்  மேலாளர்கள் மற்றும் டாஸ்மாக் கடை ஊழியர்கள்  மீதும் குண்டர் சட்டம் பதிவு செய்து அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று தனது அறிக்கையின் வாயிலாக தமிழக அரசுக்கு தனது கண்டனத்தை வெளிப்படுத்தி உள்ளார் சரஸ்ராம் ரவி.
அப்போதுதான் டாஸ்மாக் நிர்வாகம் சீர்படும் என்றும் தமிழக அரசின் கொள்கைகள் ஈடேறுவதுடன் டாஸ்மாக் நிறுவனங்கள் தொடர்பான அரசின் மீது உண்டான குற்றச்சாட்டுகள் முழுமையாக நீங்கும் என்றும் தமிழக அரசை வலியுறுத்தி  உள்ளார் தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசின் நிறுவனத் தலைவரும் வழக்கறிஞருமானசரஸ்ராம் ரவி. தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசின் இந்த வேண்டுகோளையும் அறிவுறுத்தலையும் தமிழக அரசு தனிக் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமா பொறுத்திருந்து பார்ப்போம் என்று பதிவிட்டுள்ள தனது அறிக்கையில், டாஸ்மாக் தொடர்பாக புதிய  விதிமுறைகளை தமிழக அரசு அமல்படுத்திட வேண்டும், பொது மக்களின் நலன் கருதி பொதுமக்களின்  வாழ்வாதாரத்தை காப்பாற்றிட வேண்டும் என்றும்
பல கோடி ரூபாய் அளவிற்கு கல்லாக கட்டும்  கள்ள சந்தை சந்து கடை ஊழலை தடுத்து தடுத்து நிறுத்துவது தமிழக அரசின் தலையாய கடமை என்றும் சரஸ்ராம் ரவி தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
 

செவ்வாய், 10 மார்ச், 2026

பார்பிகுயின் மற்றும் நிக்கா பிரியாணி உணவகங்களில்  தற்காலிக சேவை புதுப்பிப்பு.

பார்பிகுயின் மற்றும் நிக்கா பிரியாணி உணவகங்களில் தற்காலிக சேவை புதுப்பிப்பு.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

பார்பிகுயின் மற்றும் நிக்கா பிரியாணி உணவகங்களில்  தற்காலிக சேவை புதுப்பிப்பு.

நாடு முழுவதும் வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டர் பற்றாக்குறை காரணமாக, பார்பிகுயின் சுவையான உணவுகளின் அன்பு என்ற தாரக மந்திரத்துடன் இயங்கிக் கொண்டிருக்கும் சேலம் பார்பிகுயின் உணவக கிளை நிறுவனங்கள் அனைத்திலும்  உணவகம் உணவு சேவை நடவடிக்கைகளில் தற்காலிக மாற்றத்தை அறிவித்துள்ளது.
தற்போதைக்கு, முழு வழக்கமான மெனுவிற்கு பதிலாக, தேர்ந்தெடுக்கப்பட்ட மெனு உணவுகள் மட்டுமே கிடைக்கும். இக்கட்டான மற்றும் தவிர்க்க முடியாத சூழ்நிலை இருந்தபோதிலும், சிறந்த உணவு அனுபவத்தை உறுதி செய்வதற்காக எங்கள் குழு செயல்பட்டு வருகிறது. எல்பிஜி விநியோகம் இயல்பு நிலைக்குத் திரும்பியதும் முழு மெனு சேவை மீண்டும் தொடங்கும். வாடிக்கையாளர்களின் புரிதலுக்கும் தொடர்ந்த ஆதரவிற்கும் நன்றி. என நிறுவனத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதே போல 
பார்பி குயின் இணை நிறுவனமான நிகா பிரியாணி நிறுவனத்திலும் சேவை புதுப்பிப்பு.
நாடு முழுவதும் வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டர்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை காரணமாக, நிகா பிரியாணி தனது சமையலறை செயல்பாடுகளை தற்காலிகமாக சரிசெய்து வருகிறது. இந்தக் காலகட்டத்தில், முழுமையான மெனுவிற்குப் பதிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட உணவுகள் மட்டுமே கிடைக்கும். உங்கள் பொறுமைக்கும் ஆதரவிற்கும் நாங்கள் மனதாரப் பாராட்டுகிறோம்.
எல்பிஜி விநியோகம் இயல்பு நிலைக்குத் திரும்பியவுடன் வழக்கமான சேவை மீண்டும் தொடங்கும். என்றும் இதற்கு வாடிக்கையாளர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் மாநில இணை செயலாளராக சேலத்தைச் சேர்ந்த இமாம் மொஹிதீன் நியமனம். மாநிலத் தலைவர் முன்மொழிந்ததை தொடர்ந்து தேசிய தலைவர் நியமித்ததற்கு, இமாம் மொஹிதீன் நன்றி.

அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் மாநில இணை செயலாளராக சேலத்தைச் சேர்ந்த இமாம் மொஹிதீன் நியமனம். மாநிலத் தலைவர் முன்மொழிந்ததை தொடர்ந்து தேசிய தலைவர் நியமித்ததற்கு, இமாம் மொஹிதீன் நன்றி.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் மாநில இணை செயலாளராக சேலத்தைச் சேர்ந்த இமாம் மொஹிதீன் நியமனம். மாநிலத் தலைவர் முன்மொழிந்ததை தொடர்ந்து தேசிய தலைவர் நியமித்ததற்கு, இமாம் மொஹிதீன் நன்றி. 

சேலத்தைச் சேர்ந்தவர் இமாம் மொஹிதீன். தொழிலதிபரான இவர், சிறந்த சமூக சேவகரும் கூட. இந்த நிலையில் அகில இந்திய தேசிய மஜ்லிஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு கட்சிப் பணியும் செவ்வனை செய்து வந்தார். கட்சியின் செயல்பாடுகளையும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளையும் தங்குதலையின்றி செவ்வனே செய்து வந்துள்ளார் இமாம் மொஹிதீன். 
கட்சி பணிகளின்  சேவையை பாராட்டி, மாநிலத் தலைவர் வக்கீல் அகமது அவர்கள் தேசிய தலைமைக்கு முன்மொழிந்ததை அடுத்து தேசிய தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான  அசதுத்தீன் உவைசி அவர்கள் சேலத்தை சேர்ந்த இமாம் மொஹிதீனை அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் மாநில இணை செயலாளராக நியமனம் செய்து அதற்கான கடிதத்தையும் வெளியிட்டுள்ளார். மாநில இணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள இமாம் மொஹிதீனுக்கு, மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உட்பட கட்சியினர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ள இமாம் மொஹிதீனுக்கு மாநில பொதுச்செயலாளர் உட்பட மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

வெள்ளி, 6 மார்ச், 2026

ஈரோடு மாவட்ட அரசியலில் புதிய அலை… ஈரோட்டில் இளைஞரணிக்கு வாய்ப்பு… திமுகவில் திருவாசகம் பெயர் தீவிர பரிசீலனை..!

ஈரோடு மாவட்ட அரசியலில் புதிய அலை… ஈரோட்டில் இளைஞரணிக்கு வாய்ப்பு… திமுகவில் திருவாசகம் பெயர் தீவிர பரிசீலனை..!

ஈரோடு மாவட்டத்தை குறி வைக்கும் திமுக.. இளைஞரணிக்கு சீட் கிடைக்குமா.? 

சட்டமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், திமுகவில் வேட்பாளர் தேர்வு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை தக்கவைக்க திமுக தலைமையகம் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது.

குறிப்பாக, அதிமுகவின் ஆதிக்கம் அதிகம் காணப்படும் கொங்கு மண்டலமான ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மக்கள் செல்வாக்குள்ள புதிய முகங்களை களமிறக்க திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன் ஒரு பகுதியாக, ஈரோடு கிழக்கு மற்றும் மேற்கு தொகுதிகளில் பழைய வேட்பாளர்களுக்கு பதிலாக இளம் தலைமுறையை களமிறக்க திமுக தலைமை ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஈரோடு தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் ஜெ.திருவாசகத்திற்கு இந்த முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கலாம் என கட்சியினர் மத்தியில் பேசப்படுகிறது.


நீட் எதிர்ப்பு உண்ணாவிரத போராட்டம் முதல் இளைஞரணி அமைப்பை வலுப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகள் வரை தொடர்ந்து செயல்பட்டு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் நம்பிக்கையை பெற்றவராக திருவாசகம் பார்க்கப்படுகிறார்.

மேலும், நாடாளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் பிரகாஷ் அவர்களின் வெற்றிக்காக மாவட்டம் முழுவதும் இளைஞர்களை ஒருங்கிணைத்து பணியாற்றியதாலும் அவர் கட்சியினரிடையே கவனம் பெற்றுள்ளார்.

இளைஞர்களுக்கான விளையாட்டு போட்டிகள், அரசு தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், இயற்கை பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு உதவி செய்வது போன்ற சமூக பணிகளின் மூலம் ஈரோடு மாவட்ட இளைஞர்கள் மத்தியில் திருவாசகம் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.

சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு திருவாசகம் செயல் பட்டாலும்,  முதலியார் சமூக வாக்குகள் இவருக்கு கணிசமாக உள்ள நிலையில், திருவாசகம் போட்டியிட்டால் முதலியார் சமூகம் மட்டுமின்றி பல சமூகங்களின் ஆதரவும் அவருக்கு கிடைக்கும் என கட்சியினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.


மேலும், முதுநிலை பொறியியல் பட்டப்படிப்புடன் எம்.பி.ஏ. படித்துள்ள இளைஞரான திருவாசகம் கல்வி தகுதியும், சமூகப் பணிகளும் இணைந்தவராக பார்க்கப்படுகிறார். 

இதனால், இளம் தலைமுறையை முன்னிறுத்தும் வகையில் அவருக்கு இந்த முறை சீட் கிடைப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

எட்டு வயது முதல் மொழிப் போராட்டம், ஈழத் தமிழருக்கான ஆதரவு போராட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் மற்றும் சமூக இயக்கங்களில் தொடர்ந்து களத்தில் செயல்பட்டு வருவதும் அவருக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.


இதனால், ஈரோடு கிழக்கு அல்லது ஈரோடு மேற்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் ஒன்றை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவாசகத்திற்கு நிச்சயம் பெற்றுக் கொடுப்பார் என்பது ஈரோடு மாவட்ட இளைஞர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

அதுமட்டுமின்றி மாவட்ட செயலாளரும், ஈரோடு மாவட்ட  அமைச்சருமான சு.முத்துசாமியின் ஆதரவும் திருவாசகத்திற்கு இருப்பதாக கூறப்படுவதால், இந்த முறை ஈரோடு கிழக்கு அல்லது ஈரோடு மேற்கு தொகுதிகளில் ஒன்றில் அவர் போட்டியிட வாய்ப்பு அதிகம் என திமுக வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதைத் தொடர்ந்து, இளைஞரணியை சேர்ந்த திருவாசகத்திற்கு இந்த முறை சட்டமன்ற தேர்தலில் சீட் கிடைக்குமா?! என்பது இளைஞர் அணியினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதன், 4 மார்ச், 2026

நாட்டின் முதுகெலும்பாக திகழும்  விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் ஏற்கும் கட்சிகள் மட்டுமே தமிழகத்தில் ஆட்சி பொறுப்பில் அமைய முடியும். தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி அரசியல் கட்சியினருக்கு அறிவுறுத்தல்.

நாட்டின் முதுகெலும்பாக திகழும் விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் ஏற்கும் கட்சிகள் மட்டுமே தமிழகத்தில் ஆட்சி பொறுப்பில் அமைய முடியும். தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி அரசியல் கட்சியினருக்கு அறிவுறுத்தல்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

நாட்டின் முதுகெலும்பாக திகழும்  விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் ஏற்கும் கட்சிகள் மட்டுமே தமிழகத்தில் ஆட்சி பொறுப்பில் அமைய முடியும். தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி அரசியல் கட்சியினருக்கு அறிவுறுத்தல்.

தமிழக விவசாயிகளின் நலன் கருதியும் அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் அழிந்து வரும் விவசாய தொழிலை பாதுகாக்கவும் தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தமிழக அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் முன்வைத்தும் தற்பொழுது வரை நிறைவேற்றப்படவில்லை என்பது மாநிலத் தலைவர் வேலுச்சாமியின் ஒட்டுமொத்த குற்றச்சாட்டாகவே தற்போது வரை உள்ளது. இந்த நிலையில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் திருவண்ணாமலையில் தனது 27ஆம் தேதி நடைபெற்ற மகாசபை கூட்டத்திலும் கூட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிறுத்தி அரசியல் கட்சிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. இந்த நிலையில், எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தல் சம்பந்தமாக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினருக்கும் அறிக்கையின் வாயிலாக உழவர் பெருந்தலைவர்  நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி அறிகையின் வாயிலாக கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளார். 
அதன் அடிப்படையில், தமிழகத்தில் 2026ல் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் தமிழக அரசியல் கட்சிகள் வெற்றி பெற்று, ஆட்சி பொறுப்பில் அமர வேண்டும் என்றால் நாட்டின் முதுகெலும்பாக திகழும் தமிழக விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் ஏற்க வேண்டும். விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் ஏற்கும் அரசியல் கட்சி மட்டுமே ஆட்சி பொறுப்பில் அமர முடியும் என உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் தமிழக அரசியல் கட்சி தலைவர்களுக்கு இந்த அறிக்கையின் வாயிலாக நினைவுபடுத்துகிறது என்று உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுசாமி அறிக்கையின் வாயிலாக வலியுறுத்தி உள்ளார்.



திங்கள், 2 மார்ச், 2026

சேலம் சோனா வள்ளியப்பா பப்ளிக் பள்ளியின் ஆண்டு விளையாட்டு விழா. பல்வேறு போட்டுகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு மகிழ்ந்து கிரிக்கெட்டர் சாய் கிஷோர்.

சேலம் சோனா வள்ளியப்பா பப்ளிக் பள்ளியின் ஆண்டு விளையாட்டு விழா. பல்வேறு போட்டுகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு மகிழ்ந்து கிரிக்கெட்டர் சாய் கிஷோர்.

சேலம்.
S.K. சுரேஷ் பாபு.

சேலம் சோனா வள்ளியப்பா பப்ளிக் பள்ளியின் ஆண்டு விளையாட்டு விழா. பல்வேறு போட்டுகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு மகிழ்ந்து கிரிக்கெட்டர் சாய் கிஷோர்.

சோனா வள்ளியப்பா பப்ளிக் பள்ளியின் ஆண்டு விளையாட்டு விழாவானது, சோனா கல்லூரி விளையாட்டு மைதானத்தில் மிக உற்சாகத்துடன் நடைபெற்றது. சோனா கல்வி நிறுவனத்தின் தலைவர் வள்ளியப்பா தலைமையில் நடைப்பெற்ற இந்த நிகழ்வில் துணைத்தலைவர்கள் சொக்கு வள்ளியப்பா, தியாகு வள்ளியப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  
இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கிரிக்கெட்டர் சாய் கிஷோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து மாணவர்களின் விளையாட்டுத் திறனை வெளிப்படுத்தும் விதமாக அமைந்த இந்த விழாவில் வீரர்களின் அணிவகுப்பு மற்றும் தடகளப் போட்டிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.
விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர் கிரிக்கெட்டர் சாய் கிஷோர் பரிசுக் கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி, கல்வியோடு விளையாட்டும் இணையும் போது தான் ஒரு மாணவனின் தன்னம்பிக்கையும் ,போட்டி மனப்பான்மையும் வளர்கிறது என்று கூறி அவர் மாணவர்களை வெகுவாக பாராட்டினார். இந்த விளையாட்டு விழாவில் சோனா வள்ளியப்பா பப்ளிக் பள்ளியின் தாளாளர் திருமதி .சீதா வள்ளியப்பா, திருமதி விசாலாட்சி சொக்கு, இயக்குநர் கார்த்திகேயன், பள்ளியின் முதல்வர் திருமதி.இ.ஜெ.கவிதா, ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என திரளாக கலந்து கொண்டனர்.

ஞாயிறு, 1 மார்ச், 2026

தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் சமூக கூட்டமைப்பு திமுக கூட்டணிக்கு முழு ஆதரவு.

தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் சமூக கூட்டமைப்பு திமுக கூட்டணிக்கு முழு ஆதரவு.

சேலம். 
S.K. சுரேஷ் பாபு. 

தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் சமூக கூட்டமைப்பு திமுக கூட்டணிக்கு முழு ஆதரவு. 

2026 சட்டமன்றத்திற்கான தேர்தல் ஏப்ரல் இறுதி மற்றும் மே முதல் வாரத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள பிரதான கட்சிகள் ஒவ்வொரு தலைப்புகளில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவிற்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்து தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையும் அவ்வப்போது நடைபெற்று கொண்டு உள்ளது. இந்த நிலையில் தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் சமூக கூட்டமைப்பு மற்றும் ஆரிய வைசிய முன்னேற்ற பேரவையின் மாநில தலைவர் நாகா.அரவிந்தன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திமுக அரசு செயல்படுத்திய திட்டங்கள், தமிழக மக்களிடம் பெற்ற வரவேற்பு ஆகியவற்றை பட்டியலிட்டு கூறிய அவர் தமிழகத்தில் நடைபெற உள்ள 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான வெற்றி கூட்டணிக்கு தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் சமூக கூட்டமைப்பு தங்களது முழு ஆதரவை வழங்குகிறது என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஆக மீண்டும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களை ஆட்சி கட்டிலில் அமர்த்த கூட்டமைப்பு தமிழக முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்ளும் என்றும் தெரிவித்தார். இதுவரை நடைபெற்று முடிந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது சேலத்தில் பல்வேறு நடிகர் மற்றும் நடிகைகளை அழைத்து வந்து தாங்கள் ஆதரவு தெரிவித்த கட்சிகளுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டதை போலவே இந்த தேர்தலிலும் தங்களது பிரச்சாரம் என்பது புதிய யுக்தியை பின்பற்றி இருக்கும் என்று குறிப்பிட்ட நாகா அரவிந்தன், சேலம் மாவட்டத்தை பொருத்தவரை 11 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்களே வெற்றி பெறுவார்கள் என்றும் குறிப்பாக எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் அதிமுகவின் பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான பழனிச்சாமி டெபாசிட் இழப்பார் என்றும் ஆருடம் தெரிவித்தார்.
மேலும் திமுகவுக்கு தங்களது முழு ஆதரவு என்றும் இந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தங்களது அமைப்பிற்கு சீட் கேட்க போவதில்லை என்று கூறியதோடு மட்டுமல்லாமல் நிபந்தனை அற்ற ஆதரவு திமுகவிற்கு வழங்குவதாகவும் நாகா.அரவிந்தன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பலமுறை அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்திருந்த தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் சமூக கூட்டமைப்பின் மாநில தலைவர் நாகா.அரவிந்தன் தற்பொழுது, எடப்பாடி தொகுதியில் பழனிச்சாமி அவர்கள் டெபாசிட் இழப்பார் என்று தெரிவித்துள்ளது சேலம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.