Latest

ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2025

உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக இடிந்து விழும் நிலையில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும். தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக இடிந்து விழும் நிலையில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும். தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக இடிந்து விழும் நிலையில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும். தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு. 

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சியின் சார்பில் அதன் மாநில தலைவர் பூமொழி தலைமையிலான கட்சி நிர்வாகிகள் கோரிக்கை மனு அளிப்பதற்காக வந்திருந்தனர். அந்த மனுவில் சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள வெள்ளாள குண்டம் சந்தைப்பேட்டை பகுதியில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கட்டிடம் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது என்றும் இந்த கட்டிடத்தில் முதலில் ஆசிரியர்கள் தங்கும் விடுவியாகவும் பிறகு கால்நடை மருத்துவமனையாகவும் செயல்பட்டு வந்த நிலையில் தற்பொழுது சுமார் 18 ஆண்டுகளாக பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இதில் இரண்டு ஊழியர்கள் பணியாற்றுகின்றதாகவும் பால் உற்பத்தியாளர்கள் நாள்தோறும் காலையிலும் மாலையிலும் பால் சுமார் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த சங்கத்திற்கு வந்து பால் ஊற்றி செல்வதாகவும் தெரிவித்திருந்த மனுவில் சம்பந்தப்பட்ட கட்டிடம் மிகவும் மோசமான நிலையில் சீதளம் அடைந்து எப்போது வேண்டுமானாலும் விழுந்து விடும் நிலையில் உள்ளதாகவும் இதனால் அங்கு பணியாற்றும் ஊழியர்களின் உயிர்களுக்கும் அங்கு வந்து செல்லும் பால் உற்பத்தியாளர்களின் உயிர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் பாதுகாப்பற்ற சூழல் உள்ளதாக தெரிவித்திருந்தனர். அதுமட்டுமில்லாமல் உடனடியாக இந்த கட்டிடத்தை எடுத்து புதிய கட்டிடத்தை கட்டி தர வேண்டுமாக தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சியின் சார்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் அவர்களை கேட்டுக் கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்போது கட்சி நிர்வாகிகள் மாநில செயலாளர் ஐயப்பன் மாவட்ட தலைவர் ஜெகதீசன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

சனி, 30 ஆகஸ்ட், 2025

தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில் 65-வது பட்டமளிப்பு விழா. 681 மாணவ மாணவியருக்கு பட்டயச் சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு.

தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில் 65-வது பட்டமளிப்பு விழா. 681 மாணவ மாணவியருக்கு பட்டயச் சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில் 65-வது பட்டமளிப்பு விழா. 681 மாணவ மாணவியருக்கு பட்டயச் சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு.

சேலம், தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியின் 65-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது. சோனா கல்விக் குழுமங்களின் தலைவர் வள்ளியப்பா  விழாவிற்கு தலைமையேற்றார். 
திரிவேணி எர்த்மூவர்ஸ் மற்றும் இன்ஃப்ரா பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றின் நிர்வாக இயக்குநர் கார்த்திகேயன்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, முதல் ஐந்து இடங்களைப் பெற்ற 60 மாணவ மாணவியர் உட்பட 681 மாணவ, மாணவியர்களுக்கு பட்டையச் சான்றிதழ்கள்  வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
கல்லூரியின் முதல்வர் Dr.கனகராஜ் அவர்கள் தமது உரையில், மாணவ, மாணவிகளுக்கு வருடத்திற்கு 8.5 லட்சம் ஊதியம் பெறும் வகையில் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது என்றும், மேலும் 450-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு, 120-க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் நிறுவனங்களில் வருடத்திற்கு ரூ.5.00 லட்சம் வரையிலான ஊதியத்தில் 1036-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பு பணி நியமன ஆணைகள், வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். மேலும்,100-க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் நிறுவனங்களுடன் இணைந்து, மாணவர்களுக்கு தொழில் துறை சார்ந்த பயிற்சிகள் சிறப்பாக பயிற்றுவிக்கப்படுகிறது என்றும்  அவர் கூறினார்.
கல்லூரியின், தலைவர் வள்ளியப்பா  பட்டமளிப்பு விழாவின் தலைமையுரையில், இக்கல்லூரி 67 வருடங்களாக சிறப்பான கல்வியை வழங்கி, பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு வழிகாட்டியுள்ளது என்று பெருமிதத்துடன் தெரிவித்தார். இக்கல்லூரியில் பயின்ற அனைவரும் தொழிற் கல்வியுடன் ஒழுக்கத்தையும் கற்று நாட்டின் தலைசிறந்த குடிமகன்களாக திகழ வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இறுதியாக விழாவில் சான்றிதழ் பெற்ற மாணவ, மாணவியர், கல்லூரியின் துணை தலைவர்கள் சொக்கு வள்ளியப்பா, தியாகு வள்ளியப்பா, முதல்வர், துறைத்தலைவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தங்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

  

வெள்ளி, 29 ஆகஸ்ட், 2025

சேலத்திற்கு வந்த வாக்கு பதிவு சரி பார்ப்பு கூட்டம். சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தேசிய மற்றும் மாநில கட்சி நிர்வாகிகளுடன் தேசிய மக்கள் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் ராம்ஜி பங்கேற்பு.

சேலத்திற்கு வந்த வாக்கு பதிவு சரி பார்ப்பு கூட்டம். சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தேசிய மற்றும் மாநில கட்சி நிர்வாகிகளுடன் தேசிய மக்கள் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் ராம்ஜி பங்கேற்பு.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சேலத்திற்கு வந்த வாக்கு பதிவு சரி பார்ப்பு கூட்டம். சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தேசிய மற்றும் மாநில கட்சி நிர்வாகிகளுடன் தேசிய மக்கள் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் ராம்ஜி பங்கேற்பு.

தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. இதற்காக சேலம் மாவட்டத்தில் பயன்படுத்தப்படக் கூடிய வாக்குப்பதிவு இயந்திரங்கள், பெங்களூரூவிலிருந்து வரப்பெற்றது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் பிருந்தா தேவி தலைமையில், தேசிய மற்றும் மாநில கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரி பார்த்து கூட்டம் நடைபெற்றது. 
தேசிய மற்றும் மாநில அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சேலம் மாவட்ட ஆட்சியாளர் தேர்தல் பிரிவு தனி வட்டாட்சியர்  அனைவரின் முன்னரே பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்து  சீல் வைக்கப்பட்டன.
தேசிய மற்றும் மாநில கட்சி நிர்வாகிகளுடன், தேசிய மக்கள் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் ராம்ஜி, சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ்மற்றும் விவசாய அணையின் மாவட்ட தலைவர் ராமன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். 





 

வியாழன், 28 ஆகஸ்ட், 2025

கந்தனுக்கு உகந்த வளர்பிறை கந்த சஷ்டி தினத்தில் பக்தர்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் ராஜ அலங்காரத்தில் அருள் பாலித்த சேலம் பள்ளப்பட்டி ஸ்ரீ ராஜரிஷி ஆசிரமம் பழனி ஸ்ரீ பாலதண்டாயுதபாணி.

கந்தனுக்கு உகந்த வளர்பிறை கந்த சஷ்டி தினத்தில் பக்தர்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் ராஜ அலங்காரத்தில் அருள் பாலித்த சேலம் பள்ளப்பட்டி ஸ்ரீ ராஜரிஷி ஆசிரமம் பழனி ஸ்ரீ பாலதண்டாயுதபாணி.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு.

கந்தனுக்கு உகந்த வளர்பிறை கந்த சஷ்டி தினத்தில் பக்தர்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் ராஜ அலங்காரத்தில் அருள் பாலித்த சேலம் பள்ளப்பட்டி ஸ்ரீ ராஜரிஷி ஆசிரமம் பழனி ஸ்ரீ பாலதண்டாயுதபாணி.

தமிழ் கடவுள் ஆன முருகப் பெருமானுக்கு  உகந்த தினமாக கந்த சஷ்டி தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில்  வளர்பிறை கந்த சஷ்டி தினமான இன்று சேலம் பள்ளப்பட்டியில் உள்ள பழனி ஸ்ரீ ராஜரிஷி ஆசிரம  ஸ்ரீ பால  தண்டாயுதபாணி திருக்கோவிலில்  எம்பெருமான் முருகப்பெருமானுக்கு இன்று காலை முதல் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
குறிப்பாக பால் மஞ்சள் குங்குமம் இளநீர் திருமஞ்சனம் உள்ளிட்ட மங்கள பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து எம்பெருமான் பழனி ஸ்ரீ பால தண்டாயுதபாணிக்கு ராஜ அலங்காரம் மேற்கொள்ளப்பட்டு பல்வேறு மலர்களால் சிறப்பு அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட்டு மகாதீப ஆராதனைகள் நடைபெற்றன. இந்த சிறப்பு பூஜையில் பள்ளப்பட்டி,  சினிமா நகர், அரிசிபாளையம்,  சாமிநாதபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு எம்பெருமான் முருகப்பெருமானை வழிபட்டு சென்றனர். வளர்பிறை கந்த சஷ்டி பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் ஆசிரம நிர்வாகத்தின் சார்பில் பிரசாதங்களும் வழங்கப்பட்டன.
சேலம் பள்ளப்பட்டி ராஜரிஷி ஆசிரமம் தலைவர் ராஜரிஷி பாபு, நிர்வாகிகள் சுதன் வாசுகி வசியா சரவணன் மற்றும் விக்ரம் உள்ளிட்டோர் வளர்பிறை சஷ்டி சிறப்பு பூஜைக்கான  ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

ஈரோடு மத்திய மாவட்ட திமுகவில் தொடர்ந்து இணையும் மாற்று கட்சியினர் - திமுக தொண்டர்கள் உற்சாகம்

ஈரோடு மத்திய மாவட்ட திமுகவில் தொடர்ந்து இணையும் மாற்று கட்சியினர் - திமுக தொண்டர்கள் உற்சாகம்


மத்திய மாவட்ட திமுகவில் மாற்றுக் கட்சியினர் பெருமளவில் இணைந்து வருவதால் தொண்டர்கள் மத்தியில் உற்சாகம்..!

ஈரோடு மத்திய மாவட்டம், பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சியை சேர்ந்த பல்வேறு மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணைந்தனர்.

முன்னாள் அமைச்சரும், மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளருமான தோப்பு என்.டி. வெங்கடாசலம் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாஜக ஒன்றிய தலைவர் அருணா சிவப்பிரகாஷ் தலைமையில், அகில இந்திய நாடார் மக்கள் பேரவை மாநில அமைப்பு செயலாளர் மகாராஜா, சமத்துவ மக்கள் கட்சியின் ஒன்றிய துணைச் செயலாளர் சபீர், பாஜக நகர துணைத் தலைவர் பாண்டியன் உள்ளிட்டோர் தங்களது ஆதரவாளர்களுடன் இன்று திமுகவில் இணைந்தனர், 

மாற்றுக் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தவர்களை திமுக துண்டு அணிவித்து வரவேற்றார்,


இவ்விழாவில் பெருந்துறை பேரூராட்சி தலைவர் ஓ.சி.வி. ராஜேந்திரன், கருமாண்டி செல்லிபாளையம் பேரூர் செயலாளர் மூர்த்தி, முன்னாள் இயக்குநர் நாகராஜன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்று புதிதாக இணைந்தவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.


பெருந்துறை மற்றும் பவானி பகுதிகளில் திமுக வலுசேர்க்கும் விதமாக நடைபெறும் இவ்வகை தொடர்ச்சியான இணைவுகள், கட்சித் தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதன், 27 ஆகஸ்ட், 2025

விநாயகர் சதுர்த்தியை ஓட்டி சேலம் செவ்வாய்பேட்டை லாரி மார்க்கெட் திடலில் ஐந்தாயிரம் பேருக்கு சமபந்தி விருந்து. சேலம் செவ்வாய்பேட்டையில் பக்தர்களுக்கு அருள் பாலித்த குபேர விநாயகர்.

விநாயகர் சதுர்த்தியை ஓட்டி சேலம் செவ்வாய்பேட்டை லாரி மார்க்கெட் திடலில் ஐந்தாயிரம் பேருக்கு சமபந்தி விருந்து. சேலம் செவ்வாய்பேட்டையில் பக்தர்களுக்கு அருள் பாலித்த குபேர விநாயகர்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு.

விநாயகர் சதுர்த்தியை ஓட்டி சேலம் செவ்வாய்பேட்டை லாரி மார்க்கெட் திடலில் ஐந்தாயிரம் பேருக்கு சமபந்தி விருந்து. சேலம் செவ்வாய்பேட்டையில் பக்தர்களுக்கு அருள் பாலித்த குபேர விநாயகர். 

சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சேலம் செவ்வாய்பேட்டை ஆர்ஆர் நண்பர்கள் குழுவின் சார்பாக முதலாம் ஆண்டு படைப்பாக விநாயகர் சதுர்த்தி விழா வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சேலம் செவ்வாய்பேட்டை லாரி மார்க்கெட் திடலில் பிரம்மாண்டமாக  விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு காலை முதல் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு சமபந்தி விருந்து வழங்கும் நிகழ்வுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நண்பர்கள் குழுவின் தலைவர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நிர்வாகிகள் சேகர் ஆனந்த் உள்ளிட்டோர்  
முன்னிலை வகித்தனர். இந்த அன்னதான  நிகழ்வில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொது மக்களுக்கான சமபந்தி விருதினை தொடங்கி வைத்தார். அறுசுவையுடன் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்ட  சதுர்த்தி விழா மாலை நிறைவு பெற்றது. இந்த நிகழ்வில் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநகர அமைப்பாளர் பி எஸ் மணிகண்டன், 28வது கோட்ட திமுக செயலாளர் சங்கர், நடேசன், மணி, சரவண சங்கரநாராயணன் மற்றும் மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதே போல, சேலம் செவ்வாய்பேட்டை அரசமர அப்புசிட்டி தெருவில் ஸ்ரீ அரசமர விநாயகர் சதுர்த்தி விழா கமிட்டியின் சார்பாக 32 வது ஆண்டு படைப்பாக சதுர்த்தி விழாவையொட்டி குபேரபுரியில் குபேரன் மற்றும் லட்சுமியுடன் அருள் பாலித்த ஸ்ரீ குபேர கணபதி. இன்று தொடங்கிய இந்த விழா வரும் 29ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாகவும் நாள்தோறும் சிறப்பு பூஜைகளுடன் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வும் வரும் 29ஆம் தேதி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு சிறப்பு அன்னதானம் வழங்க உள்ளதாகவும் தொடர்ந்து மாலை 6 மணி அளவில் சுவாமி திருவிதி விழாவும் நடைபெற உள்ளதாக விழா கமிட்டியினர்  தெரிவித்தனர். ஸ்ரீ அரசு மர விநாயகர் சதுர்த்தி விழா கமிட்டி தலைவர் பாலாஜி தலைமையில் நடைபெறும் இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை செயலாளர் ரவிக்குமார் பொருளாளர் சத்திய நாராயணன் மற்றும் துணை பொருளாளர் சீனிவாசன் உள்ளிட்டவர்  சிறப்பாக செய்து வருகின்றனர்.
சேலம் கிச்சிப்பாளையத்தில் சதுர்த்தி நாளில் ஸ்ரீ வழிகாட்டும் கணபதியாக பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

சேலம் கிச்சிப்பாளையத்தில் சதுர்த்தி நாளில் ஸ்ரீ வழிகாட்டும் கணபதியாக பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் கிச்சிப்பாளையத்தில் சதுர்த்தி நாளில் ஸ்ரீ வழிகாட்டும் கணபதியாக பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 

கஜமுகனின் ஜனன தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சேலத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ராஜகணபதி திருக்கோவில் உட்பட பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் முழு முதல் கடவுளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் எது விமர்சையாக நடைபெற்ற வண்ணம் உள்ளன. இதன் ஒரு பகுதியாக சேலம் கிச்சிப்பாளையத்தில் உள்ள ஸ்ரீ அங்கு அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் வீட்டு அலங்கார பந்தலில் ஸ்ரீ வழிகாட்டும் கணபதி பிரதிஷ்டை செய்யப்பட்டு முந்தி முதல்வனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மேற்கொள்ளப்பட்டும் பல்வேறு மலர்கள் கொண்டு சிறப்பு அலங்காரமும் மேற்கொள்ளப்பட்டன. ஸ்ரீ அங்கு அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் நிர்வாக தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் தொடர்ந்து கண நாதனுக்கு மகா தீபாராதனைகள் நடைபெற்றன.  விழாவை ஒட்டி விழா பந்தலுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் கருப்பா கருப்பா அழகா என்று கோஷமிட்டு வழிபட்டது விண்ணை பிளக்கும் வகையில் அமைந்திருந்தது. தொடர்ந்து திருக்கோவிலின் சார்பில் பிரசாதங்களும் வழங்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மிகவும் சிறப்பாக செய்திருந்தனர்.