சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி மீது போடப்பட்டுள்ள குண்டர் தடுப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும். தவறும் பட்சத்தில் தமிழக முழுவதும் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். புரட்சித் தமிழகம் கட்சியின் சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆசைத்தம்பி கடும் எச்சரிக்கை.
தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புரட்சி தமிழகம் கட்சியின் சேலம் மாவட்டத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு புரட்சி தமிழகம் கட்சியின் பறையர் பேரவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆசை தம்பி தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட செயலாளர் சாம்பவர் சிவா தெற்கு மாவட்ட செயலாளர் விஜயகுமார் ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் முருகேசன் மாநில முதன்மை செயலாளர் வழக்கறிஞர் ராஜேந்திரன் மற்றும் மாநில இளைஞரணி தலைவர் சரத்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பாட்டாளி மக்கள் கட்சியின் சேலம் மாணவர் மாவட்ட செயலாளர் கதிர் ராசரத்தினம் புதிய புரட்சி கழகத்தின் சேலம் மாவட்ட செயலாளர் முருகேசன் தமிழ் தேசிய மலையநாடு மக்கள் கட்சி மாநில தலைவர் ராமசாமி இந்து மக்கள் கட்சியை பாரதி மற்றும் மாவட்ட தலைவர் பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றுகின்றனர்.
தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், புரட்சித் தமிழகம் கட்சியின் பட்டியல் இன தலைவர் டாக்டர் ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் மீது பொய்யான வழக்குகளை பதிவு செய்து குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்துள்ளார் தமிழக அரசு உடனடியாக அந்த சட்டத்தை திரும்ப பெற்று அவரை விடுதலை செய்ய வேண்டும் மற்றும் பட்டியலென பழங்குடி மக்களுக்கான சிறப்பு உட்கூறு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 73 ஆயிரத்து 888 நிதியை நான்கு வருடமாக செலவிடாமல் திருப்பி அனுப்பியதை கண்டிப்பது உட்பட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். மேலும் பொய் வழக்குகளின் வாயிலாக குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள புரட்சி தமிழகம் கட்சியின் தலைவர் மூர்த்தி அவர்களை தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் தவறும் பட்சத்தில் தமிழகம் முழுவதும் அனைத்து பட்டியலின மக்களையும் ஒன்று இணைத்து மிகப் பெரிய அளவிலான உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்ததோடு, எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் பட்டியலின மக்களின் நலன் காக்கும் வகையில் உறுதிமொழிகளை கொடுக்கும் கட்சிகளுக்கு மட்டுமே தங்களது ஆதரவு இருக்கும் என்றும் ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக புரட்சி தமிழகம் கட்சியின் பறையர் பேரவை சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆசை தம்பி தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஓமலூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் கந்தசாமி, தாரமங்கலம் ஒன்றிய செயலாளர் செல்வம் பூபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


