Latest

வெள்ளி, 28 நவம்பர், 2025

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் கரட்டூர் பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அலுவலகம் முன்பு வைத்திருந்த பிளக்ஸ் போர்டு புதிதாக மாற்றம்...

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் கரட்டூர் பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அலுவலகம் முன்பு வைத்திருந்த பிளக்ஸ் போர்டு புதிதாக மாற்றம்...

*ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் கரட்டூர் பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அலுவலகம் முன்பு வைத்திருந்த பிளக்ஸ் போர்டு புதிதாக மாற்றம்...*

முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா படங்களுடன் தமிழக வெற்றிக்காக பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டுள்ளது,

கடந்த நவம்பர் 1 ஆம் தேதி அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதற்கு பிறகு காலை செய்தியாளர்கள் சந்திப்பிற்கு முன்பு கரட்டூர் பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அலுவலகம் முன்பு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் புகைப்படத்தை மறைத்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படம் ஒட்டப்பட்டிருந்த நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பிற்கு பின் முழுவதுமாக பிளக்ஸ் போர்டு மாற்றப்பட்டுள்ளது.
அன்று காலையில் வைத்திருந்த பிளக்ஸ் போர்டில் அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அலுவலகம் என்ற வாசகங்கள் இருந்த நிலையில் மதியம் புதிதாக வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் போர்டில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் என குறிப்பிடப்பட்டுள்ளது,

புதிதாக வைக்கப்பட்ட பிளக்ஸ் போர்டில் அண்ணா, முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் ஜெயலலிதா படங்கள் மட்டும் இடம்பெற்றிருந்தன, இந்த நிலையில் நேற்று முன்தினம் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து நேற்று தமிழக வெற்றி கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

தமிழக வெற்றிக்கான கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு அதேபோல கொங்கு மண்டல அமைப்பு செயலாளர் பொறுப்பும் வழங்கப்பட்டு இருந்தன
இந்த நிலையில் கோபிசெட்டிபாளையம் கரட்டூர் பகுதியில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் போர்டு முழுமையாக மாற்றப்பட்டுள்ளது

தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த பிறகு முன்னாள் அமைச்சர் கே ஏ செங்கோட்டையனின் அலுவலகம் முன்பு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் புகைப்படத்துடன் முன்னாள் முதல்வர்கள் எம் ஜி ஆர் ஜெயலலிதா ஆகியோரின் படங்களும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது,
ஈரோடு மாவட்டத்தில், 19.97 லட்சம் வாக்காளர்களில், 14 லட்சம் படிவங்கள் திரும்ப பெறப்பட்டதாக மாவட்ட ஆட்சித் தலைவர் ச.கந்தசாமி தெரிவித்தார்...

ஈரோடு மாவட்டத்தில், 19.97 லட்சம் வாக்காளர்களில், 14 லட்சம் படிவங்கள் திரும்ப பெறப்பட்டதாக மாவட்ட ஆட்சித் தலைவர் ச.கந்தசாமி தெரிவித்தார்...

*ஈரோடு மாவட்டத்தில், 19.97 லட்சம் வாக்காளர்களில், 14 லட்சம் படிவங்கள் திரும்ப பெறப்பட்டதாக மாவட்ட ஆட்சித் தலைவர் ச.கந்தசாமி தெரிவித்தார்...*

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சித் தலைவர்  ச.கந்தசாமி, நிருபர்களிடம்...

கடந்த, 4 முதல் எஸ்.ஐ.ஆர்., படிவம் வழங்கப்பட்டு டிச., 4 வரை திரும்ப பெறப்படும். வரும், 30க்குள் படிவங்களை பெற்று, பதிவேற்றப்பணிகளை நிறைவு செய்ய திட்டமிடப்படுகிறது. இம்மாவட்டத்தில், 19.97 லட்சம் வாக்காளர்களில், 1 சதவீதம் தவிர மற்றவர்களுக்கு படிவங்கள் வழங்கப்பட்டுவிட்டன. அப்படிவங்களும் இரு தினங்களில் வழங்கப்பட்டுவிடும். இதுவரை, 14 லட்சம் படிவங்கள் பூர்த்தி செய்து திரும்ப பெறப்பட்டு, பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 1,946 படிவங்கள் ஆன்லைனில் நிரப்பி அனுப்பி உள்ளனர்.
பெறப்பட்ட, 73 சதவீத படிவங்களில் கடந்த, 2002 வாக்காளர் விபரத்துடன் பூர்த்தி செய்த அல்லது பி.எல்.ஓ.,க்களால் உறுதி செய்த, 25 சதவீத வாக்காளர் (4.95 லட்சம்) விபரம் பதிவேற்றி, உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களது உறவினர்கள், குடும்ப உறுப்பினர்கள் என, 26 சதவீதம் (5.22 லட்சம்) பேர் படிவமும் உறுதி செய்து, 51 சதவீத படிவங்கள் இடம் பெறும்.
‘ஆள் இல்லை, இடமாற்றம், இறந்துவிட்டார்’ என்ற, 3 இனங்களில், 58,875 படிவங்கள் (2.95 சதவீதம்) உள்ளன. ‘நோ மேட்ச்’ என்ற இனங்களில் கடந்த, 2002 வாக்காளர் பட்டியல் விபரம், உறவினர் வாக்காளர் பட்டியல் இணைப்பு விபரம் வழங்காதவர்களை நீக்கம் செய்யவில்லை.

டிச., 4க்குள் பெறப்படும் அனைத்து படிவங்களும் பதிவேற்றம் செய்து, டிச., 9 ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இதன் இடம் பெற்றவர்கள் தவிர, இடம் பெறாதவர்களுக்கு ஆவணங்கள் மூலம் மீண்டும் வாக்காளராக படிவம் வழங்கி திரும்ப பெறப்படும். 

அதுபோல, 18 வயது பூர்த்தியான புதிய வாக்காளரும் படிவம்–6ஐ வழங்கி இணையலாம். இவ்வாறானவர்கள் தங்களது ஆவணங்களை வழங்கி, அதன் மூலம் பிப்., 7 ல் வெளியிடப்படும் இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெறுவர்.
இடம் பெயர்ந்தோர், விடுபட்டோர், தாங்கள் வசிக்கும் பகுதியில் உரிய படிவங்களை வழங்கி, ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்கலாம்.
படிவம் பூர்த்தி செய்வதில் சந்தேகத்துக்கு அந்தந்த பகுதி பி.எல்.ஓ.,க்கள், உதவி மையங்கள், ெஹல்ப் டெஸ்க், தேர்தல் ஆணைய இணைய தளம் மூலம் தீர்வு பெறலாம்.

பீகார் உட்பட பிற மாநிலங்களில் இருந்து வந்தவர்களாக இருந்தாலும், இங்கு வெகு காலமாக இருந்து, படிவத்தில் கேட்கப்பட்ட விபரம் சரியாக இருந்தால் சேர்க்கப்படுவர் என தெரிவித்தார்.
டி.ஆர்.ஓ., சாந்தகுமார், தேர்தல் பிரிவு தாசில்தார் சங்கர்கணேஷ், மாவட்ட ஆட்சித் தலைவர்  நேர்முக உதவியாளர் (பொது) முகமது குதுரத்துல்லா ஆகியோர் உடனிருந்தார்.
ஈரோட்டில் கண்ணாடி கடை உரிமையாளரின் வங்கி கணக்கில் இருந்து 1.10 கோடி ரூபாய் வரை சுருட்டிய ஊழியரான உத்திரபிரதேசத்தை சேர்ந்த வாலிபரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்...

ஈரோட்டில் கண்ணாடி கடை உரிமையாளரின் வங்கி கணக்கில் இருந்து 1.10 கோடி ரூபாய் வரை சுருட்டிய ஊழியரான உத்திரபிரதேசத்தை சேர்ந்த வாலிபரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்...

ஈரோடு :  

*ஈரோட்டில் கண்ணாடி கடை உரிமையாளரின் வங்கி கணக்கில் இருந்து 1.10 கோடி ரூபாய் வரை சுருட்டிய ஊழியரான உத்திரபிரதேசத்தை சேர்ந்த வாலிபரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்...*

உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் முகிம்கான் (45). இவர், ஈரோடு பார்க் சாலையில் முகிம் கிளாஸ் ஹவுஸ் என்ற பெயரில் கண்ணாடி கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் உத்திரபிரதேசத்தை சேர்ந்த சதாம்கான் மகன் ஆதில்கான் (35) என்பவர் கணக்காளராகவும், சூப்பர்வைசராகவும் வேலை பார்த்து வந்தார். ஆதில்கான் நன்றாக வேலை பார்த்ததால், அவருக்கு கடையின் வங்கி கணக்கையும், சொந்த வங்கி கணக்கின் வரவு செலவுகளை மேற்பார்வையிடும் பணியை முகிம்கான் வழங்கியிருந்தார். 
மேலும், கடையின் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது, கொள்முதல் செய்யும் பொருட்களுக்கு பணம் அனுப்புவது போன்ற பணிகளையும் ஆதில்கான் மேற்பார்வையிட்டு வந்தார். 

இதற்கிடையில் கடந்த சில மாதங்களுக்கு மன் ஆதில்கான் வேலைக்கு வராமல் தலைமறைவானார். 

இந்நிலையில், முகிம்கான் கடந்த அக்டோபர் மாதம் அவரது வங்கி கணக்கை ஆய்வு செய்தபோது, பல லட்சம் ரூபாய் வெவ்வேறு வங்கி கணக்கிற்கு பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பதும், அவரது காசோலையில் அவர் கையெழுத்து இல்லாமலேயே லட்ச கணக்கான ரூபாய் ஆதில்கான் வங்கி கணக்கிற்கு மோசடியாக பரிமாற்றம் செய்ததையும் அறிந்து அதிர்ச்சி அடைந்தார். 

தொடர்ந்து ஆதில்கானை தேடியும் கிடைக்காததால், இதுகுறித்து ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவில் கடந்த அக்டோபர் மாதம் புகார் அளித்தார். 

இதன்பேரில், போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கடையின் உரிமையாளரான முகிம்கான் வங்கி கணக்கின் செயலி மூலமும், காசோலையில் போலியாக கையெழுத்திட்டும் ரூ.1.10 கோடி வரை ஏமாற்றி, ஆதில்கான் அவரது சொந்த வங்கி கணக்கிற்கும், அவரது உறவினர்கள் வங்கி கணக்கிற்கும் பண பரிமாற்றம் செய்து மோசடி செய்திருப்பது உறுதி செய்தனர். 
இதையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி சண்முகசுந்தரம் உத்தரவின்பேரில், எஸ்ஐ ஜாஸ்மின், ஆதில்கான் மீது வழக்கு பதிவு செய்து, போலீசார் தேடி வந்தனர். 

இந்நிலையில், ஆதில்கான் உத்திரபிரதேசத்தில் இருந்து பல்வேறு மாநிலங்களுக்கு தப்பி சென்று, தலைமறைவாக இருப்பது கண்டுபிடித்தனர். 

தொடர்ந்து நேற்று  கடலூர் மாவட்டத்தில் பதுங்கியிருப்பதாக வந்த தகவலின்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ஆதில்கானை கைது செய்து, முறைகேடாக வங்கி கணக்கில் பரிமாற்றம் செய்த பணம் குறித்தும், அதில் வாங்கப்பட்ட சொத்துக்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டியின் கழுத்தை அறுத்து கொலை..

ஈரோட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டியின் கழுத்தை அறுத்து கொலை..

*ஈரோட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு மூதாட்டி அணிந்திருந்த ஐந்து சவரன் தங்க நகையை திருடிச் சென்ற மர்ம நபரை  தற்போது காவல்துறையினர் கோயம்புத்தூரில் வைத்து பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது*


ஈரோடு மாவட்டம் சூலை எல் வி ஆர் காலனி சேர்ந்தவர் கமலா இவரது கணவர் மணிகண்டன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக உயிரிழந்த நிலையில் தற்போது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார் 

இவரது மகன் மகேந்திர சேனாதிபதி பாண்டிச்சேரியில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார் 
இந்த நிலையில் தினந்தோறும் தாயாருக்கு தொலைபேசி மூலம் பேசி வந்த மகன் மகேந்திர சேனாதிபதி சம்பவத்தன்று வெகு நேரம் தொலைபேசியில் தாயாரை அனைத்தும் தொலைபேசி எடுக்காவிட்டதால் சந்தேகம் அடைந்து அக்கம்பக்கத்தினரிடம் தகவல் கொடுத்து தாயார் சென்று பார்த்து சொல்லி உள்ளார் 

இதனை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் ஒன்று சேர்ந்து கமலா வாசித்து வந்த வீட்டிற்கு சென்று பார்த்த போது வீட்டின் முன் பகுதியில் கொடூரமான முறையில் கழுத்தறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கலந்துள்ளார் 

பின்பு இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் மகன் மகேந்திர சேனாதிபதிக்கும், வீரப்பன் சத்திரம்  காவல் நிலைய போலீசருக்கும் தகவல் கொடுத்துள்ளனர் 

தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் கமலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து குற்றவாளியை 05 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர் 

இந்த நிலையில்  மதுரை மாவட்டத்தை சேர்ந்த ராமர் என்பவர் அதே பகுதியில் தங்கியிருந்து மார்க்கெட்டிங் வேலை செய்து வந்ததாகவும், பல நாட்களாக மூதாட்டி கமலா வீட்டில் தனியாக வசித்து வந்ததை நோட்டமிட்டு  வந்ததாக கூறப்படுகிறது


தனியாக வசித்து வருவதை தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்ட ராமர் கமலா வீட்டினுள் சென்று கமலாவின் கழுத்தை அறுத்து கொடூரமான முறையில் கொலை செய்து கமலா அணிந்திருந்த 5 சவர நகையை கொள்ளையடித்துக் கொண்டு கமலாவின் தொலைபேசியின் எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார் 
இது தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர தேடுதல் பணியில் கமலாவின் தொலைபேசி எண் கடைசியாக சுவிட்ச் ஆப் செய்த லொகேஷனை வைத்து இந்த சம்பவத்திற்கு தொடர்புடையதாக கூறும் ராமர் என்ற நபரை போலீசார் கோயம்புத்தூரில் வைத்து மடக்கி பிடித்துள்ளனர் 

உன் வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டியை கொடூரமான முறையில் கொலை செய்து அணிந்திருந்த தங்க நகையை கொள்ளையடித்து சென்ற நபரை காவல்துறையினர் கோயம்புத்தூரில் வைத்து மடக்கி  பிடித்த சம்பவம் தற்போது பெருவாம் பரபரப்பு ஏற்படுகிறது..
பெருந்துறை மேற்கு ஒன்றியத்தில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திமுகவில் இணைந்தனர்..!

பெருந்துறை மேற்கு ஒன்றியத்தில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திமுகவில் இணைந்தனர்..!

பெருந்துறை மேற்கு ஒன்றியத்தில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திமுகவில் இணைந்தனர்..!

முன்னாள் அமைச்சரும் ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளர் தோப்பு எண்.டி. வெங்கடாச்சலம் முன்னிலையில், தமிழக முதலவர் மு.க. ஸ்டாலினின் நல்லாட்சிக்கு வலுசேர்க்கும் வகையில் இளைஞர்கள் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்
சோலி பிரகாஷ் ஏற்பாட்டில், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் தீபக் டெண்டுல்கர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஒன்றிய மற்றும் பேரூர் கழகச் செயலாளர்கள், கழக இளைஞர்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
தமிழக துணை முதல்வர் பிறந்த நாள் விழா. சேலம் மத்திய மாவட்ட திமுக கோட்டை பகுதி சார்பில் ஏழை எளியவர்களுக்கு மதிய உணவு  வழங்கி உற்சாக கொண்டாட்டம்.

தமிழக துணை முதல்வர் பிறந்த நாள் விழா. சேலம் மத்திய மாவட்ட திமுக கோட்டை பகுதி சார்பில் ஏழை எளியவர்களுக்கு மதிய உணவு வழங்கி உற்சாக கொண்டாட்டம்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

தமிழக துணை முதல்வர் பிறந்த நாள் விழா. சேலம் மத்திய மாவட்ட திமுக கோட்டை பகுதி சார்பில் ஏழை எளியவர்களுக்கு மதிய உணவு  வழங்கி உற்சாக கொண்டாட்டம்.

தமிழக துணை முதலமைச்சரும்,  திராவிட நாயகரும் மற்றும் திமுகவின் இளம் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் 49 வது  பிறந்தநாள் விழா திமுகவினரால் இன்று தமிழக முழுவதும் வெகு உற்சாகத்துடனும் எழுச்சியுடனும் ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக சேலம் மத்திய மாவட்ட திமுக 31வது கோட்ட கோட்டை பகுதி சார்பில்  ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சருமான வழக்கறிஞர் ராஜேந்திரன் ஆணையின்படி சேலம் கோட்டை அண்ணா நகர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, சேலம் ஜாமியா மசூதியின் முன்னாள் மூத்தவல்லியும், திமுக மாநில பொதுக்குழு உறுப்பினருமான அமான் என்கின்ற நாசர் கான் தலைமை தாங்கினார். 
நிகழ்ச்சியில் 31 வது கோட்ட குகை பகுதி திமுக செயலாளர் சையது இப்ராஹிம் மற்றும் திமுக நிர்வாகி அஸ்மத் கான் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பேசிய அமான் என்கின்ற நாசர் கான், தமிழக அரசின் சாதனைகள் குறித்து பட்டியலிட்டு பேசிய அவர் ஏழை எளியவர்கள் உட்பட அனைத்து தரப்பினரில் நலன் காக்கும் அரசாக திமுக அரசு விளங்குவதாக பெருமிதம் தெரிவித்தார். தமிழகம் உட்பட s.i.r என்ற பெயரில்    நாடு முழுவதும் கோடிக்கணக்கான வாக்காளர்களை நீக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் இதனை சேர மத்திய மாவட்ட வாக்காளர்கள் விழிப்புடன் செயலாற்றி விழித்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகள் உட்பட 234 தொகுதிகளிலும் திமுக அமோக வெற்றி பெற்று மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைய அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். தொடரி நடைபெற்ற நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவினை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அன்னதான நிகழ்வில் காத்திருந்த ஏழை எளிய பொதுமக்களுக்கு முட்டையுடன் கூடிய பிரியாணி அன்னதானமாக வழங்கி மகிழ்ந்தார். நிகழ்ச்சியில்
31வது கோட்ட திமுக செயலாளர் அப்துல் ரசாக், 29ஆவது கோட்ட திமுக செயலாளர் சிவகுமார் மற்றும் 32 வது கோட்ட திமுக செயலாளர்  கபீர் மற்றும் பகுதி இளைஞரணி அமைப்பாளர் திலீபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

வியாழன், 27 நவம்பர், 2025

தமிழக துணை முதல்வர் பிறந்த நாள் விழா. சேலம் மாநகர திமுக இளைஞர் அணி சார்பில் பல்வேறு இடங்களில்  இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி உற்சாக கொண்டாட்டம்.

தமிழக துணை முதல்வர் பிறந்த நாள் விழா. சேலம் மாநகர திமுக இளைஞர் அணி சார்பில் பல்வேறு இடங்களில் இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி உற்சாக கொண்டாட்டம்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

தமிழக துணை முதல்வர் பிறந்த நாள் விழா. சேலம் மாநகர திமுக இளைஞர் அணி சார்பில் பல்வேறு இடங்களில்  இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி உற்சாக கொண்டாட்டம்.

தமிழக துணை முதலமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா திமுகவினரால் இன்று தமிழக முழுவதும் வெகு உற்சாகத்துடனும் எழுச்சியுடனும் ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக சேலம் மாநகர திமுக இளைஞர் அணி சார்பில் பல்வேறு நிகழ்ச்சிக்கு  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன் ஒரு பகுதியாக சேலம்  பழைய பேருந்து நிலையத்தில் அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர்கள் நடத்துனர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சேலம் மாநகர திமுக இளைஞரணி செயலாளர் கேபிள் சரவணன் இனிப்புகளை வழங்கி கொண்டாடி மகிழ்ந்தார். இதே போல அம்மாபேட்டை காந்தி மைதானம் பகுதியில் திமுக இளைஞரணி சார்பில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டதோடு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வுகளில் திமுக நிர்வாகிகள் இளைஞர் அணி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.