சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் மாவட்ட வன்னியர் நல அறக்கட்டளை நிர்வாகத்திற்கு எதிராக, போலி ஆவணம் மூலம் VSA கல்வி அறக்கட்டளை இடத்தை அபகரிக்க முயற்சி செய்வதாக, நிர்வாக அறங்காவலர் மலர்விழி வீரபாண்டி ராஜா புகார் உண்மைக்கு புறம்பானது. சேலம் மாவட்ட வன்னியர் நல அறக்கட்டளை தலைவர் சிவலிங்கம் ஆதாரப்பூர்வமாக விளக்கம்..
சேலத்தில் போலி ஆவணம் மூலம் வி.எஸ்.ஏ கல்வி அறக்கட்டளை இடத்தை அபகரிக்க முயற்சிப்பதாக நிர்வாக அறங்காவலர் மலர்விழி ராஜா புகார் கூறியிருந்தார். சேலம் விஎஸ்ஏ கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் மலர்விழி வீரபாண்டி ராஜா செய்தியாளர்களை சந்தித்தபோது,
சேலத்தில் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு, சிறந்த கல்வி வழங்கும் நோக்குடன், கடந்த 2008 ஆம் ஆண்டு விஎஸ்ஏ கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை தொடங்கப்பட்டது. தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு மாவட்ட முனிசிபல் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், சர்வே நிலம் அறக்கட்டளைக்கு கிரயம் செய்யப்பட்டது. அதன் பின்னர், கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வன்னியர் நல அறக்கட்டளை சார்பில், 2020 ஆம் ஆண்டு இதற்கு அருகில் உள்ள சர்வே எண் 121-1பி என்ற நிலத்தை வாங்கியுள்ளனர்.
இதனிடையே கடந்த 2023 ஆம் ஆண்டு போலி ஆவணங்கள் மற்றும் உறுதிமொழி பத்திரத்தை தயாரித்து, விஎஸ்ஏ கல்வி அறக்கட்டளையின் நிலத்திற்குண்டான சர்வே எண்ணில், முறைகேடாக பட்டா பெற்றுள்ளனர். இதனை முறையாக விசாரிக்காமல், ஒரே நாளில் பதிவுத்துறை மற்றும் வருவாய்த்துறையைச் சேர்ந்த 6 அதிகாரிகள் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளனர் என்று வன்னியர் அறக்கட்டளை தலைவர் சிவலிங்கம் உட்பட சுமார் 10 பேரின் மீது ஏற்கனவே குற்றம் சாட்டி இருந்தார்.
இந்த நிலையில், சேலம் மாவட்ட வன்னியர் நல அறக்கட்டளையின் தலைவர் சிவலிங்கம் கூறுகையில் சேலம் மாவட்டம் வீரபாண்டி வட்டம் உத்தமசோழபுரம் கிராமத்தில் வன்னிய அறக்கட்டளைக்கு சொந்தமாக சர்வே எண் 121 / 1B, 1B, 121 / 1A, 1A2 ஆகிய 81 செண்ட் நிலம் சொந்தமாக உள்ளது. சம்பந்தப்பட்ட நிலத்திற்கு ஆதாரமாக கரைய பத்திரங்கள் வருவாய்த்துறை வழங்கிய பட்டா, சிட்டா, ஆகிய ஆவணங்களும் எங்களிடம் உள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட இடம் கடந்த ஐந்து வருடங்களாக அறக்கட்டளை சுவாதீனத்தில் இருந்து வருகிறது. VSA கல்வி நிறுவனம் மற்றும் அறக்கட்டளையின் உறுப்பினர் மகேஸ்வரி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் W.P.NO 20286 OF 2025 மற்றும் W.P.NO 22876 OF 2025 என்ற ரெட் மனு ஒன்றினை வன்னியர் அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தின் பட்டாவை ரத்து செய்யும் படியும் கிரயத்தை ரத்து செய்யும் படியும் தாக்கல் செய்த ரெட் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 11.12.2025 ஆம் ஆண்டு தள்ளுபடி செய்துவிட்டது. மேற்படி வன்னிய குல அறக்கட்டளையின் நிலம் தமிழ்நாடு வன்னிய சத்திரிய அறக்கட்டளை நல வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
அதற்கு அரசு ஆணையும் உள்ளது. அறக்கட்டளைக்கு சொந்தமான நிலம் தமிழ்நாடு வன்னிய குல சத்திரிய அறக்கட்டளை நல வாரியத்திற்கு சொந்தமானதும் அதன் கட்டுப்பாட்டிலும் உள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட இடத்தில் திருமண மண்டபம் மற்றும் ஏழை எளிய மாணவர்களுக்கு இலவசமாக UPSC, TNPSC, TNUSRB மற்றும் இதர போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கவும் 55 ஆயிரம் சதுர அடிக்கு மாடி கட்டிடம் கட்ட தமிழ்நாடு அரசு அரசாங்கத்திடம் அனுமதி பெற்றுள்ளதாகவும் அனைத்து ஆதாரங்களுடன் நிரூபித்தார். மேலும் தங்களிடம் தகராறு செய்து ஜாதி கழகம் கலவரம் விளைவித்து தங்களது அறக்கட்டளை உறுப்பினர்கள் மீது ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த குண்டர்களை வைத்து SC/ ST.s பிரிவில் வழக்கு பதிவு செய்ய திட்டம் தீட்டியுள்ளதாகவும், இது போன்ற செயலுக்கு VSA அறக்கட்டளை உறுப்பினர் மகேஸ்வரி மற்றும் பூலாவரியை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வீரபாண்டி ராஜா அவர்களின் மகள் மருத்துவர் மலர்விழி ஆகியோர்தான் பொறுப்பு என்றும் தெரிவித்தார். மேலும் குண்டர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து வன்னியர் நல அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் வேண்டுமென்றே விஎஸ்ஏ கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான பேருந்துகளை அகற்றி அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் திருமண மண்டபம் கட்டுமான பணிகள் மேற்கொள்ள பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்ட சிவலிங்கம், வி எஸ் ஏ கல்வி அறக்கட்டளை நிர்வாகத்தின் இந்த செயலை கண்டித்து சம்பந்தப்பட்ட இடத்தில் போராட்டம் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்த அவர்,
சம்பந்தப்பட்ட இடத்தினை கடந்த 1956 ஆம் ஆண்டு முதல் யார் யார் வசம் இருந்தது இதே போல கடந்த 2020 ஆம் ஆண்டு வன்னியர் நல அறக்கட்டளைக்கு சம்பந்தப்பட்ட இடத்தை தாங்கள் பெற்றது வரை அனைத்து மூல பத்திரங்கள் பத்திரங்கள் தாய்பத்திரங்கள் பட்டா சிட்டா மற்றும் தமிழக அரசால் வழங்கப்பட்ட அனைத்து ஆவணங்களும் தங்களிடம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தால் வி எஸ் ஏ கல்வி அறக்கட்டளை நிர்வாகத்தினரின் மனுவை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையிலும், சேலம் கொண்டலாம்பட்டி காவல் துறையினரிடம் புகார் அளித்தும் சி எஸ் ஆர் மட்டுமே பதிவு செய்தனர் என்றும் எஃப் ஐ ஆர் பதிவிட மறுத்துவிட்டு வன்னியர் நல அறக்கட்டளை நிர்வாகத்தினர் கூறிய புகார் மனு மீது எந்த விதமான நடவடிக்கையும் தற்போது வரை எடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அந்த நிகழ்வின் போது சேலம் மாவட்ட வன்னியர் நல அறக்கட்டளை நிர்வாகிகள் மோகன் முத்துமாணிக்கம் பழனிச்சாமி பாலசுப்பிரமணி ரத்தினம் மற்றும் வடிவேல் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.


