சேலம்,
S.K. சுரேஷ்பாபு.
சேலத்தில் பேரன்களின் ஆசைகளை நிறைவேற்றும் விதமாக இனிப்புகளை வழங்கி கொண்டாடி நிறைவேற்றிய தாத்தா. தமிழக விவசாயிகளின் பிரதான கோரிக்கையான காவிரி கோதாவரி இணைப்பு திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். தமிழக முதல்வர் விஜய் அவர்களுக்கு தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் சிவபெருமாள் வேண்டுகோள்.
தமிழகத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய சூறாவளியில் சிக்கி பிரதான கட்சிகளான திமுக அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளையும் சின்னாபின்னமாக்கி, தமிழக முதல்வராக பொறுப்பேற்றார் கட்சியின் தலைவர் விஜய். ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாத போதும் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் மற்றும் விசிக ஒலிக்க கட்சிகளின் ஆதரவால் தமிழக முதலமைச்சராக விஜய் நேற்று முன்தினம் பொறுப்பேற்றார். இந்த நிகழ்வை தமிழக முழுவதும் உள்ள விஜய் ரசிகர்களால் வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வந்த நிலையில், சேலத்தில் தமிழக விவசாயிகளின் சங்க மாநில தலைவர் சிவபெருமாள் அவர்களின் பேரன்களும் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றத்தை கொண்டாடும் விதமாக இனிப்புகளை வழங்கி கொண்டாட வேண்டும் என்று தனது தாத்தாவிடம் கேட்டுள்ளனர்.
இதற்கு இசைவு தெரிவித்து தமிழக விவசாயிகளின் சங்க மாநில தலைவர் சிவபெருமாள், சேலம் அழகாபுரம் பகுதியில் உள்ள உணவு விடுதி ஊழியர்கள், அந்த பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள், தேநீர் கடைக்காரர்கள் மற்றும் காவல் துறையினர் என அனைவருக்கும் இனிப்புகளை வழங்கி கொண்டாடி பேரண்களின் ஆசையை பூர்த்தி செய்து வைத்த நிகழ்வு அந்தப் பகுதியில் இடையே மிகுந்த வரவேற்பினை பெற்றுள்ளது. இது குறித்து தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் சிவபெருமாள் நம்முடைய கூறுகையில், 17 வது தமிழக சட்டப்பேரவைக்கான முதல் அமைச்சராக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அவர்கள் முதலமைச்சராக பொறுப்பேற்றதற்கு முதற்கண் தங்களது அமைப்பான தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் இதனை வரவேற்கும் விதமாக இன்று இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும் தமிழக விவசாயிகளின் தீர்க்கப்படாத கோரிக்கைகள் பல தற்பொழுது வரை தீர்க்கப்படாமல் இருப்பதாகவும், தற்பொழுது உள்ள சூழலில் தமிழக முதலமைச்சர் அவர்களையும் தமிழக விவசாயத்துறை அமைச்சர் அவர்களையும் சந்திக்கும் ஒரு தருவாய் கிடைக்கும் பட்சத்தில் அவர்களிடம் மூன்று பிரதான முக்கிய கோரிக்கைகளை முன்வைக்க உள்ளதாக தெரிவித்த சிவபெருமாள், தமிழக விவசாயிகளின் பிரதான கோரிக்கையான காவிரி கோதாவரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்றினால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து என்பது எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும் என்றும் ஆகவே கர்நாடகாவிடம் பாசன நீருக்காக கையேந்தும் அவசியம் தமிழக விவசாயிகளுக்கு ஏற்படாது என்று குறிப்பிட்டதோடு மேகதாதுவேல் கர்நாடகா அரசு அணை கட்டினால் என கட்டவில்லை என்றால் என்ற ஒரு சூழலும் உருவாகும் ஆகவே தமிழக முதல்வரையும் தமிழக விவசாயத் துறை அமைச்சரையும் சந்திக்கும் தருவாயில் இந்த கோரிக்கையை முன்வைக்கப்பட உள்ளதாக தெரிவித்த அவர் 100 நாள் வேலை திட்டத்தில் 124 நாட்கள் என மாறுதல்கள் செய்த போதிலும் குறிப்பாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளையும் சேர்க்க வேண்டும் கூலி குறைவு என பல சிக்கல்கள் உள்ளதால் தமிழக விவசாயிகளுக்கு 124 வேலை திட்டத்தில் பணி வழங்குவதோடு அவர்கள் ஏற்கனவே பணியாற்றும் பணியிடத்தில் பணியாற்றும்போது அவர்களுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் இதற்கு தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும் மற்றும் தமிழக விவசாயிகள் விளைவிக்கும் காய்கறி கனி வகைகளுக்கு உரிய விலை கிடைப்பது இல்லை சார்பாக கத்தரி தக்காளி செடி விதைகளை இலவசமாக தமிழகம் முழுவதும் வழங்க வேண்டும் இது தமிழக விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது என்றும் சிவபெருமாள் தெரிவித்தார்.


