Latest

திங்கள், 5 ஜனவரி, 2026

சேலம் மாவட்ட வன்னியர் நல அறக்கட்டளை நிர்வாகத்திற்கு எதிராக, போலி ஆவணம் மூலம் VSA கல்வி அறக்கட்டளை இடத்தை அபகரிக்க முயற்சி செய்வதாக, நிர்வாக அறங்காவலர் மலர்விழி வீரபாண்டி ராஜா புகார் உண்மைக்கு புறம்பானது. சேலம் மாவட்ட வன்னியர் நல அறக்கட்டளை தலைவர் சிவலிங்கம் ஆதாரப்பூர்வமாக விளக்கம்..

சேலம் மாவட்ட வன்னியர் நல அறக்கட்டளை நிர்வாகத்திற்கு எதிராக, போலி ஆவணம் மூலம் VSA கல்வி அறக்கட்டளை இடத்தை அபகரிக்க முயற்சி செய்வதாக, நிர்வாக அறங்காவலர் மலர்விழி வீரபாண்டி ராஜா புகார் உண்மைக்கு புறம்பானது. சேலம் மாவட்ட வன்னியர் நல அறக்கட்டளை தலைவர் சிவலிங்கம் ஆதாரப்பூர்வமாக விளக்கம்..

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சேலம் மாவட்ட வன்னியர் நல அறக்கட்டளை நிர்வாகத்திற்கு எதிராக, போலி ஆவணம் மூலம் VSA கல்வி அறக்கட்டளை இடத்தை அபகரிக்க முயற்சி செய்வதாக, நிர்வாக அறங்காவலர் மலர்விழி வீரபாண்டி ராஜா புகார் உண்மைக்கு புறம்பானது. சேலம் மாவட்ட வன்னியர் நல அறக்கட்டளை தலைவர் சிவலிங்கம் ஆதாரப்பூர்வமாக விளக்கம்..

சேலத்தில் போலி ஆவணம் மூலம் வி.எஸ்.ஏ கல்வி அறக்கட்டளை இடத்தை அபகரிக்க முயற்சிப்பதாக நிர்வாக அறங்காவலர் மலர்விழி ராஜா புகார் கூறியிருந்தார். சேலம் விஎஸ்ஏ கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் மலர்விழி வீரபாண்டி ராஜா  செய்தியாளர்களை  சந்தித்தபோது, 
சேலத்தில் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு, சிறந்த கல்வி வழங்கும் நோக்குடன், கடந்த 2008 ஆம் ஆண்டு விஎஸ்ஏ கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை தொடங்கப்பட்டது. தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு மாவட்ட முனிசிபல் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், சர்வே நிலம் அறக்கட்டளைக்கு கிரயம் செய்யப்பட்டது. அதன் பின்னர், கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வன்னியர் நல அறக்கட்டளை சார்பில், 2020 ஆம் ஆண்டு இதற்கு அருகில் உள்ள சர்வே எண் 121-1பி என்ற நிலத்தை வாங்கியுள்ளனர். 
இதனிடையே கடந்த 2023 ஆம் ஆண்டு போலி ஆவணங்கள் மற்றும் உறுதிமொழி பத்திரத்தை தயாரித்து, விஎஸ்ஏ கல்வி அறக்கட்டளையின் நிலத்திற்குண்டான சர்வே எண்ணில், முறைகேடாக பட்டா பெற்றுள்ளனர். இதனை முறையாக விசாரிக்காமல், ஒரே நாளில் பதிவுத்துறை மற்றும் வருவாய்த்துறையைச் சேர்ந்த 6 அதிகாரிகள் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளனர் என்று வன்னியர் அறக்கட்டளை தலைவர் சிவலிங்கம் உட்பட சுமார் 10 பேரின் மீது ஏற்கனவே குற்றம் சாட்டி  இருந்தார். 
இந்த நிலையில், சேலம் மாவட்ட வன்னியர் நல அறக்கட்டளையின் தலைவர் சிவலிங்கம் கூறுகையில் சேலம் மாவட்டம் வீரபாண்டி வட்டம் உத்தமசோழபுரம் கிராமத்தில் வன்னிய அறக்கட்டளைக்கு சொந்தமாக சர்வே எண் 121 / 1B, 1B, 121 / 1A, 1A2 ஆகிய 81 செண்ட் நிலம் சொந்தமாக உள்ளது. சம்பந்தப்பட்ட நிலத்திற்கு ஆதாரமாக கரைய பத்திரங்கள் வருவாய்த்துறை வழங்கிய பட்டா, சிட்டா, ஆகிய ஆவணங்களும் எங்களிடம் உள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட இடம் கடந்த ஐந்து வருடங்களாக அறக்கட்டளை சுவாதீனத்தில் இருந்து வருகிறது. VSA கல்வி நிறுவனம் மற்றும் அறக்கட்டளையின் உறுப்பினர் மகேஸ்வரி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் W.P.NO 20286 OF 2025 மற்றும் W.P.NO 22876 OF 2025 என்ற ரெட் மனு ஒன்றினை வன்னியர் அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தின் பட்டாவை ரத்து செய்யும் படியும் கிரயத்தை ரத்து செய்யும் படியும் தாக்கல் செய்த ரெட் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 11.12.2025 ஆம் ஆண்டு தள்ளுபடி செய்துவிட்டது. மேற்படி வன்னிய குல அறக்கட்டளையின் நிலம் தமிழ்நாடு வன்னிய சத்திரிய அறக்கட்டளை நல வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. 
அதற்கு அரசு ஆணையும் உள்ளது. அறக்கட்டளைக்கு சொந்தமான நிலம் தமிழ்நாடு வன்னிய குல சத்திரிய அறக்கட்டளை நல வாரியத்திற்கு சொந்தமானதும் அதன் கட்டுப்பாட்டிலும் உள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட இடத்தில் திருமண மண்டபம் மற்றும் ஏழை எளிய மாணவர்களுக்கு இலவசமாக UPSC, TNPSC, TNUSRB மற்றும் இதர போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கவும் 55 ஆயிரம் சதுர அடிக்கு மாடி கட்டிடம் கட்ட தமிழ்நாடு அரசு அரசாங்கத்திடம் அனுமதி பெற்றுள்ளதாகவும் அனைத்து ஆதாரங்களுடன் நிரூபித்தார். மேலும் தங்களிடம் தகராறு செய்து ஜாதி கழகம் கலவரம் விளைவித்து தங்களது அறக்கட்டளை உறுப்பினர்கள் மீது ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த குண்டர்களை வைத்து SC/ ST.s பிரிவில் வழக்கு பதிவு செய்ய திட்டம் தீட்டியுள்ளதாகவும், இது போன்ற செயலுக்கு VSA அறக்கட்டளை உறுப்பினர் மகேஸ்வரி மற்றும் பூலாவரியை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வீரபாண்டி ராஜா அவர்களின் மகள் மருத்துவர் மலர்விழி ஆகியோர்தான் பொறுப்பு என்றும் தெரிவித்தார். மேலும் குண்டர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து வன்னியர் நல அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் வேண்டுமென்றே விஎஸ்ஏ கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான பேருந்துகளை அகற்றி அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் திருமண மண்டபம் கட்டுமான பணிகள் மேற்கொள்ள பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்ட சிவலிங்கம், வி எஸ் ஏ கல்வி அறக்கட்டளை நிர்வாகத்தின் இந்த செயலை கண்டித்து சம்பந்தப்பட்ட இடத்தில் போராட்டம் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்த அவர், 
சம்பந்தப்பட்ட இடத்தினை கடந்த 1956 ஆம் ஆண்டு முதல் யார் யார் வசம் இருந்தது இதே போல கடந்த 2020 ஆம் ஆண்டு வன்னியர் நல அறக்கட்டளைக்கு சம்பந்தப்பட்ட இடத்தை தாங்கள் பெற்றது வரை அனைத்து மூல பத்திரங்கள் பத்திரங்கள் தாய்பத்திரங்கள் பட்டா சிட்டா மற்றும் தமிழக அரசால் வழங்கப்பட்ட அனைத்து ஆவணங்களும் தங்களிடம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தால் வி எஸ் ஏ கல்வி அறக்கட்டளை நிர்வாகத்தினரின் மனுவை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையிலும், சேலம் கொண்டலாம்பட்டி காவல் துறையினரிடம் புகார் அளித்தும் சி எஸ் ஆர் மட்டுமே பதிவு செய்தனர் என்றும் எஃப் ஐ ஆர் பதிவிட மறுத்துவிட்டு வன்னியர் நல அறக்கட்டளை நிர்வாகத்தினர் கூறிய புகார் மனு மீது எந்த விதமான நடவடிக்கையும் தற்போது வரை எடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.  
அந்த நிகழ்வின் போது சேலம் மாவட்ட வன்னியர் நல அறக்கட்டளை நிர்வாகிகள் மோகன் முத்துமாணிக்கம் பழனிச்சாமி பாலசுப்பிரமணி ரத்தினம் மற்றும் வடிவேல் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
 
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சேலம் தெற்கு மாவட்ட செயலாளராக திருமதி காயத்ரி அவர்களை நியமித்து விடுதலை சிறுத்தை கட்சி அறிவிப்பு. பொறுப்பேற்ற பிறகு சேலம் வந்த அவருக்கு அம்மாபேட்டை பகுதியில் அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு. தொடர்ந்து அம்பேத்கர் மற்றும் பெரியார் உள்ளிட்டோரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து சேலம் தெற்கு மாவட்ட விசிக செயலாளர் திருமதி காயத்ரி.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சேலம் தெற்கு மாவட்ட செயலாளராக திருமதி காயத்ரி அவர்களை நியமித்து விடுதலை சிறுத்தை கட்சி அறிவிப்பு. பொறுப்பேற்ற பிறகு சேலம் வந்த அவருக்கு அம்மாபேட்டை பகுதியில் அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு. தொடர்ந்து அம்பேத்கர் மற்றும் பெரியார் உள்ளிட்டோரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து சேலம் தெற்கு மாவட்ட விசிக செயலாளர் திருமதி காயத்ரி.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு. 

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சேலம் தெற்கு மாவட்ட செயலாளராக திருமதி காயத்ரி அவர்களை நியமித்து விடுதலை சிறுத்தை கட்சி அறிவிப்பு. பொறுப்பேற்ற பிறகு சேலம் வந்த அவருக்கு அம்மாபேட்டை பகுதியில் அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு. தொடர்ந்து அம்பேத்கர் மற்றும் பெரியார் உள்ளிட்டோரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து சேலம் தெற்கு மாவட்ட விசிக செயலாளர் திருமதி காயத்ரி.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளராக  கி.காயத்ரி  விடுதலை சிறுத்தை கட்சி அறிவித்து இருந்தது. அதன் அடிப்படையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சேலம் தெற்கு மாவட்ட செயலாளராக
திருமதி. காயத்ரி அவர்களை அறிவித்து விடுதலை சிறுத்தை கட்சி அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் அறிவிப்பினை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சி தமிழர் தொல். திருமாவளவன் அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து சேலம் அம்மாபேட்டை பகுதிக்கு வருகை தந்த சேலம் தெற்கு தொகுதி மாவட்ட செயலாளர் திருமதி. காயத்ரிக்கு அவர்களுக்கு அப்பகுதி பொதுமக்கள் மேளதாளம் முழங்க பட்டாசுகள் வெடித்தும் இனிப்பு வழங்கையும் கொண்டாடினர். மேலும் ஆளுயர மாலையை அணிவித்து மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து சேலம் மாவட்ட மைய நூலகம் அருகே அமைந்துள்ள இந்திய அரசியலமைப்பின் தலைவர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வதற்காக தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக வந்து மிகப்பிரமாண்ட மாலையை சட்ட மாமேதை புரட்சியாளர் அம்பேத்கரின் ஆளுயர திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர், தொடர்ந்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைக்கப்பட்டுள்ள தந்தை பெரியாரின் திருவுருவ சிலைக்கு மேளதாளங்கள் முழங்க ஆதரவாளர்களின் புடை சூழ ஊர்வலமாக சென்ற அவர் அதேபோன்று பிரம்மாண்ட மாலை அணிவித்து மரியாதை செய்தார். தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கியும் தனக்கு பொறுப்பு வழங்கிய கட்சி தலைமைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் இனிப்புகளை வழங்கி கொண்டாடி மகிழ்ந்தார் திருமதி காயத்ரி. 
சேலம் தெற்கு மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் ஒரு அடிப்படை தேவை என்றால் கூட காயத்ரி அவர்கள் செய்து தந்ததாகவும் பொது மக்களின் தேவை அறிந்து தொடர்ந்து பொது சேவையையும் பலவிதமான சமூகப் பணிகளையும் செய்து வந்த செயலுக்கு தற்போது அவருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியில் சேலம் தெற்கு மாவட்ட பகுதிக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது எங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், மாவட்ட பொறுப்பாளர்கள், தொகுதி நிர்வாகிகள் உள்ளிட்ட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஞாயிறு, 4 ஜனவரி, 2026

திமுக அரசு தனது நிதிநிலை அறிக்கையில் அறிவித்தபடி ஒன்பது மாதங்களாகியும் கரும்பு டன் போன்றிருக்கு 4000 ரூபாய் உயர்த்தி வழங்காதது கண்டிக்கத்தக்கது. வரும் பத்தாம் தேதி மோகனூர் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கரும்பு விவசாயிகள் பெரும் திரளாக பங்கேற்க வேண்டும். உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி அறிக்கையின் வாயிலாக அழைப்பு.

திமுக அரசு தனது நிதிநிலை அறிக்கையில் அறிவித்தபடி ஒன்பது மாதங்களாகியும் கரும்பு டன் போன்றிருக்கு 4000 ரூபாய் உயர்த்தி வழங்காதது கண்டிக்கத்தக்கது. வரும் பத்தாம் தேதி மோகனூர் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கரும்பு விவசாயிகள் பெரும் திரளாக பங்கேற்க வேண்டும். உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி அறிக்கையின் வாயிலாக அழைப்பு.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

திமுக அரசு தனது நிதிநிலை அறிக்கையில் அறிவித்தபடி ஒன்பது மாதங்களாகியும் கரும்பு டன் போன்றிருக்கு 4000 ரூபாய் உயர்த்தி வழங்காதது கண்டிக்கத்தக்கது. வரும் பத்தாம் தேதி மோகனூர் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கரும்பு விவசாயிகள் பெரும் திரளாக பங்கேற்க வேண்டும். உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி அறிக்கையின் வாயிலாக அழைப்பு. 

இது தொடர்பாக அவர் வெளியில் உள்ள தனது அறிகையில், தமிழக அரசு 2025 மற்றும் 2026 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மானிய கோரிக்கையின் போது தமிழகத்தில் கரும்பு சாகுபடி செய்த விவசாயிகளின் நலன் கருதி கரும்பு தன் ஒன்றிற்கு நான்காயிரம் ரூபாய் உயர்த்தி வழங்கப்படும் என்று கடந்த 9 மாதங்களுக்கு முன்பு அறிவித்து இருந்தது. தற்பொழுது வரை இந்த அறிவிப்பு தொடர்பான அரசாணை வெளியிடப்படவில்லை. தற்பொழுது இந்த ஆண்டிற்கு உண்டான கரும்பு அறுவை பருவம் தொடங்கி உள்ள நிலையில் கரும்பை வெட்டி சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்ப விவசாயிகளுக்கு ஆளை நிர்வாகம் விவசாயிகளுக்கு பழைய கிரைய தொகையான 3, 290.50 மட்டுமே தான் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை வழங்கி வருகிறது. 
கரும்பு டன் கொண்டு இருக்கு நான்காயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்து ஒன்பது மாதங்கள் ஆகியும் இதுவரை வழங்கப்படவில்லை என்பது வேதனையின் உச்சம். இது தமிழக கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஏமாற்றமே என்பது மட்டும் நிதர்சனமான உண்மை. தமிழக அரசின் இந்த செயலை கண்டித்து வரும் பத்தாம் தேதி காலை 11 மணியளவில் நாமக்கல் மாவட்டம் மோகனூர் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலயம் முன்பாக முதற்கட்டமாக உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்களின் தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு சப்ளை செய்த செய்து வரும் அனைத்து விவசாய பெருங்குடி மக்களும் பங்கேற்க வேண்டும் என்று உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்களின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி அறிக்கை வாயிலாக அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழர் திருநாளை முன்னிட்டு திராவிட பொங்கல் 2026 என்ற தலைப்பில் மாபெரும் விளையாட்டு விழா. வீரபாண்டி ஒன்றிய திமுக செயலாளர் திருமதி வெண்ணிலா சேகர் தொடங்கி வைத்தார்.

தமிழர் திருநாளை முன்னிட்டு திராவிட பொங்கல் 2026 என்ற தலைப்பில் மாபெரும் விளையாட்டு விழா. வீரபாண்டி ஒன்றிய திமுக செயலாளர் திருமதி வெண்ணிலா சேகர் தொடங்கி வைத்தார்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

தமிழர் திருநாளை முன்னிட்டு திராவிட பொங்கல் 2026 என்ற தலைப்பில் மாபெரும் விளையாட்டு விழா. வீரபாண்டி ஒன்றிய திமுக செயலாளர் திருமதி வெண்ணிலா சேகர் தொடங்கி வைத்தார். 

தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு சேலம் கிழக்கு மாவட்ட தெற்கு ஒன்றிய திமுக சார்பில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் சேலத்தை அடுத்துள்ள பெரிய சீரகாப்பாடி ராஜாஜி பாலிடெக்னிக் கல்லூரியில் ஒன்றிய அளவிலான கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது. இந்த நிலையில் ஒன்றிய அளவிலான கைப்பந்து போட்டிகள் சேலம் உத்தமசோழபுரத்தில் உள்ள வி எஸ் ஏ பொறியியல் கல்லூரியில் தொடங்கியது. 
ஒன்றிய அளவில் ஆறு அணிகள் பங்கேற்ற இல்ல துவக்கு விழாவிற்கு சேலம் கிழக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு பிரிவின் மாவட்ட  அமைப்பாளர் பிரண்ட்ஸ் ரமேஷ் தலைமை வகித்தார். விழாவில் சேலம் வீரபாண்டி ஒன்றிய திமுக செயலாளர் திருமதி வெண்ணிலா சேகர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திராவிட பொங்கல் விளையாட்டு விழாவினை தொடங்கி வைத்தார். போட்டியில் பங்கேற்ற அணி வீரர்கள் தங்களது முழு திறமைகளை வெளிப்படுத்தி  விளையாடினர். தொடர்ந்து கோகோ மற்றும் கபடி போட்டிகள் நடத்தப்பட உள்ளதாகவும், முதல் மூன்று இடங்களை பிடித்து வெற்றி பெறும் அணிகளுக்கு நினைவு பரிசு உள்ளிட்டவை வழங்கப்படுவதோடு, இவர்கள் மாவட்ட அளவிலும் பின்னர் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து வெற்றி பெற்று தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் கைகளால் பரிசு பொருட்களை பெற உள்ளனர் என்று வீரபாண்டி ஒன்றிய திமுக செயலாளர் திருமதி வெண்ணிலா சேகர் தெரிவித்தார். 
இந்த துவக்க விழாவில், ஒன்றிய துணைச் செயலாளர் செந்தில்குமார், மாணவர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் வேங்கையன், ஒன்றிய விளையாட்டு பிரிவு துணை அமைப்பாளர் ஆத்துக்காரர் ரமேஷ் சூர்யா தினேஷ் மற்றும் கிளைச் செயலாளர் செல்வம் உடையார் கலந்து கொண்டனர்.

சனி, 3 ஜனவரி, 2026

போலி ஆவணம் மூலம் கல்வி அறக்கட்டளை இடத்தை அபகரிக்க முயற்சி: நிர்வாக அறங்காவலர் மலர்விழி வீரபாண்டி ராஜா பகிரங்க  புகார்

போலி ஆவணம் மூலம் கல்வி அறக்கட்டளை இடத்தை அபகரிக்க முயற்சி: நிர்வாக அறங்காவலர் மலர்விழி வீரபாண்டி ராஜா பகிரங்க புகார்

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

போலி ஆவணம் மூலம் கல்வி அறக்கட்டளை இடத்தை அபகரிக்க முயற்சி: நிர்வாக அறங்காவலர் மலர்விழி வீரபாண்டி ராஜா பகிரங்க  புகார்

சேலத்தில் போலி ஆவணம் மூலம் வி.எஸ்.ஏ கல்வி அறக்கட்டளை இடத்தை அபகரிக்க முயற்சிப்பதாக நிர்வாக அறங்காவலர் மலர்விழி ராஜா புகார் கூறினார். சேலம் விஎஸ்ஏ கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் மலர்விழி வீரபாண்டி ராஜா  செய்தியாளர்களை சந்தித்தார்.  
அப்போது, அவர் கூறுகையில்,
சேலத்தில் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு, சிறந்த கல்வி வழங்கும் நோக்குடன், கடந்த 2008 ஆம் ஆண்டு விஎஸ்ஏ கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை தொடங்கப்பட்டது. தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு மாவட்ட முனிசிபல் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், சர்வே நிலம் அறக்கட்டளைக்கு கிரயம் செய்யப்பட்டது. அதன் பின்னர், கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வன்னியர் நல அறக்கட்டளை சார்பில், 2020 ஆம் ஆண்டு இதற்கு அருகில் உள்ள சர்வே எண் 121-1பி என்ற நிலத்தை வாங்கியுள்ளனர். 
இதனிடையே கடந்த 2023 ஆம் ஆண்டு போலி ஆவணங்கள் மற்றும் உறுதிமொழி பத்திரத்தை தயாரித்து, விஎஸ்ஏ கல்வி அறக்கட்டளையின் நிலத்திற்குண்டான சர்வே எண்ணில், முறைகேடாக பட்டா பெற்றுள்ளனர். இதனை முறையாக விசாரிக்காமல், ஒரே நாளில் பதிவுத்துறை மற்றும் வருவாய்த்துறையைச் சேர்ந்த 6 அதிகாரிகள் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளனர். 
இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டதன் பேரில், உரிய விசாரணை நடத்த ஆர்டிஓவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவ்வாறு விசாரணை நடத்தினால், அவர்கள் போலியாக பட்டா பெற்றது தெரிந்துவிடும். இதனையடுத்து அதனை திசைதிருப்பும் முயற்சியாக, என் மீதும், கல்வி அறக்கட்டளையின் மீதும் திட்டமிட்டே அவதூறு பரப்பி வருகின்றனர். இதனை சட்டப்படி எதிர்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேலும், முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். 
பேட்டியின் போது, விஎஸ்ஏ கல்லூரி சிஇஓ ராஜேந்திரன், முதல்வர் பிரபு ஆகியோர் உடனிருந்தனர்.
சேலம் குகை காஸ்வே சாலை ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருவிழாவையொட்டி கோலாகலமாக நடைபெற்ற பண்டாரம் கொண்டு வருதல் நிகழ்ச்சி. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.

சேலம் குகை காஸ்வே சாலை ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருவிழாவையொட்டி கோலாகலமாக நடைபெற்ற பண்டாரம் கொண்டு வருதல் நிகழ்ச்சி. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் குகை காஸ்வே சாலை ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருவிழாவையொட்டி கோலாகலமாக நடைபெற்ற பண்டாரம் கொண்டு வருதல் நிகழ்ச்சி. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு. 

சேலம் குகை காசுவே சாலை சொசைட்டி அருகில் உள்ள ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் தேவாங்க குளம் செழிக்கவும் குலவிருத்தி அடைய வேண்டியும் குழந்தைகள் கல்வி சிறக்கவும் தொழில் வளம் பெருகவும் அனைவருக்கும் ஆயுள் ஆரோக்கியம் பெற்று நலமுடன் வளமுடன் வாழவும் நீர் வளம் நிலவலம் மேன்மை அடைய வேண்டி விழா நடத்தப்படுவது வழக்கம். மூக்கனூர் டாக்டர் வெங்கடேசன் அவர்களின் செட்டுமை தனத்தில் கடந்த மாதம் பத்தாம் தேதி முகூர்த்தக்கால் மற்றும் கொடியேற்றுதல் நிகழ்வுகளுடன் 2026 ஆம் ஆண்டிற்கான விழா தொடங்கியது. தொடர்ந்து நாள்தோறும் அமலுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் அன்று மாலை பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில் விழாவில் முக்கிய நிகழ்வான பண்டாரம் பெறுதல் நிகழ்ச்சி இன்று பக்தர்களின் சரண கோஷங்களுடன் வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றது. 
ஏலக்காடு குடும்பத்தார் சார்பாக திருவேங்கடம் சாலையில் இருந்து அம்மன் திருவிழாவிற்கு பண்டாரம் கொண்டு வருதல் நிகழ்ச்சி அந்த பகுதியை முக்கிய வீதிகளின் வழியாக நடைபெற்றன. அப்போது விழாவில் கலந்து கொண்ட ஏராளமான பக்தர்கள் அம்மனின் சரணகோஷங்கள் முழங்க ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து வரும் 5 ம் தேதி பண்டாரம் கொடுத்து அழைத்தல் நிகழ்ச்சியும் ஏழாம் தேதி வெள்ளகோட்டை அச்சு வெல்லம் பெறுதல் நிகழ்ச்சியும், வரும் 14ஆம் தேதி அம்மனுக்கு பண்டாரம் கட்டி அழைத்து வருதல் நிகழ்ச்சியும் தொடர்ந்து அன்று மாலை விக்னேஷ்வர பூஜை வாஸ்து சாந்தியுடன் திருவிழா பந்தலில் நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து வரும் 15ஆம் தேதி விழாவின் முக்கிய நிகழ்வான ஸ்ரீ மகா சக்தி அழைப்பு தொடர்ந்து 16ஆம் தேதி மகா சாமுண்டி அழைப்பு அதனை தொடர்ந்து 17ஆம் தேதி திருமஞ்சனம் மற்றும் பானக மெரவனை நிகழ்ச்சியும் தொடர்ந்து அன்று மாலை ஸ்ரீ மகா ஜோதி அழைப்பு நிகழ்வுடன் மகா தளிகை பூஜை பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகவும் விழாவின் இறுதியாக வரும் 18ஆம் தேதி காலை 10:30 மணி அளவில் மஞ்சள் நீர் மெரவனை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளதாக திருவிழா நிர்வாக குழு நிர்வாகிகள் தெரிவித்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில் திருவிழா நிர்வாக குழு தலைவர் மல்லேசன் செட்டியார் செயலாளர் ஜெகநாதன் பொருளாளர் சீதாராமன் துணை செயலாளர்கள் மல்லிகார்ஜுனன் கோயில் மளிகை விசுவநாதன் வனவாசி சரவணன் உள்ளிட்டோர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

வெள்ளி, 2 ஜனவரி, 2026

ஈரோட்டில் தனியார் குடோனில் தீ விபத்து!!!

ஈரோட்டில் தனியார் குடோனில் தீ விபத்து!!!


ஈரோடு சுல்தான்பேட்டை வீதியில் உள்ள ஜெஃப்ரி என்பவருக்கு சொந்தமான நேஸ்கோ பிளாஸ்டிக் குடோனில் திடீர் தீ விபத்து... 

குடோனில் பணியாற்றிக் கொண்டிருந்த ஊழியர் அவசர அவசரமாக வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்...

குடோனில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அட்டை பெட்டிகள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதம்....


ஈரோட்டை சேர்ந்த ஜெஃப்ரி என்பவர் "நேஸ்கோ பிளாஸ்டிக்" என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார், 

இவர் பிளாஸ்டிக் பொருட்கள்,  பிளாஸ்டிக் பைகள், வீட்டு உபயோக பொருட்கள் என பல்வேறு வகையான பொருட்களை விற்பனை செய்வதற்காக ஈரோடு மாநகரின் பல்வேறு பகுதிகளில் கடைகளை நடத்தி வருகிறார், 

இந்நிலையில், ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட கடைவீதி அருகே உள்ள சுல்தான்பேட்டை வீதியில் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் அட்டை பெட்டிகள் பொருட்களை அடுக்கி வைக்கப்பட்டிருந்த குடோனில் இன்று காலை ஊழியர் ஒருவர் திறந்து பணியாற்றிக் கொண்டிருந்தபோது,, எதிர்பாராதவிதமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டது, உடனடியாக குடோனிலிருந்து அவசர அவசரமாக வெளியேறிய ஊழியர், கடையின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்து, தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.