Latest

செவ்வாய், 15 செப்டம்பர், 2026

டெல்டா பாசனத்திற்கு திறக்கப்பட்ட காவிரி நீர் கடை மடையான மயிலாடுதுறையை அடைந்தது. குருவை சாகுபடி பொய்த்த நிலையில் 45 நாள் தண்ணீர் தரப்பு என்பது போதுமானதாக இருக்காது என்பதால், காவிரி பங்கீட்டு நீரை கர்நாடகாவிடம் முறையாக பேசி தமிழக முதலமைச்சர் பெற்று தர வேண்டும். மயிலாடுதுறையில் காவிரி நீரை வரவேற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி தமிழக முதல்வருக்கு கோரிக்கை....

டெல்டா பாசனத்திற்கு திறக்கப்பட்ட காவிரி நீர் கடை மடையான மயிலாடுதுறையை அடைந்தது. குருவை சாகுபடி பொய்த்த நிலையில் 45 நாள் தண்ணீர் தரப்பு என்பது போதுமானதாக இருக்காது என்பதால், காவிரி பங்கீட்டு நீரை கர்நாடகாவிடம் முறையாக பேசி தமிழக முதலமைச்சர் பெற்று தர வேண்டும். மயிலாடுதுறையில் காவிரி நீரை வரவேற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி தமிழக முதல்வருக்கு கோரிக்கை....

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

டெல்டா பாசனத்திற்கு திறக்கப்பட்ட காவிரி நீர் கடை மடையான மயிலாடுதுறையை அடைந்தது. குருவை சாகுபடி பொய்த்த நிலையில் 45 நாள் தண்ணீர் தரப்பு என்பது போதுமானதாக இருக்காது என்பதால், காவிரி பங்கீட்டு நீரை கர்நாடகாவிடம் முறையாக பேசி தமிழக முதலமைச்சர் பெற்று தர வேண்டும். மயிலாடுதுறையில் காவிரி நீரை வரவேற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி தமிழக முதல்வருக்கு கோரிக்கை....

தமிழகத்தின் பாசன பகுதிகளான டெல்டா மாவட்டங்களின் விவசாய  தேவையை பூர்த்தி செய்யும் அணையாக சேலம் மாவட்டத்தில் மேட்டூர் அணை விவசாயிகளின் உயிர்நாடியாக விளங்கி வருகிறது. அதன் அடிப்படையில் மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்ட பிறகு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12 ந் தேதி முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை தண்ணீர் திறக்கப்பட வேண்டும் என்பது நிர்ணயிக்கப்பட்ட விதி. மேட்டூர் அணையில் நீர் வரத்து அதிகரித்து அணை முழு கொள்ளளவை எட்டியிருக்கும் நிலையில் ஜூன் 12க்கு முன்பாகவே மேட்டூர் அணை திறக்கப்படுவதும், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 80 அடிக்கும் மேலாக இருக்கும் போது நீர்வரத்து என்பது அதிகமாக உள்ள நிலையில் நிர்ணயிக்கப்பட்ட தேவையான ஜூன் 12 மேட்டூர் அணை திறப்பதும், இதே போல அணையின் நீர்மட்டம் எதிர்பார்த்த அளவு இல்லாமல் நீர்வரத்து என்பது குறைந்து காணப்படும் நிலையில் காலம் தாழ்த்தி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவது தற்பொழுது வரை நடைமுறையில் இருந்து வருகிறது. அந்த வகையில் 2026 ஆவது நடப்பாண்டான கடந்த ஜூன் மாதத்தில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து இருந்த நிலையில் நீர்வரத்து என்பது மிக மிக குறைந்த அளவில் இருந்ததாலும், இதனிடையே கர்நாடக அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி பங்கீட்டு தண்ணீரை முறையாக ‌ வழங்காததாலும் ஜூன் 12 மேட்டூர் அணை திறப்பது தள்ளிப்போனது. இதனை அடுத்து காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியதும்,
உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகளில் சங்கம் உட்பட தமிழகத்தில் உள்ள பல்வேறு விவசாய அமைப்புகள் தொடர்ச்சியாக தமிழக முதலமைச்சர் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில், தமிழக அரசின் முயற்சியாலும், உச்ச நீதிமன்ற உத்தரவு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அறிவுறுத்தல் ஆகியவற்றின் பெயரில் கர்நாடக அரசு தமிழகத்திற்கு திறக்க வேண்டிய முழுமையான நீரை திறக்காவிட்டாலும் குறைந்த அளவு தண்ணீரை திறந்து விட்டது. இதனை அடுத்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து நீர்வரத்து அதிகரித்த நிலையில், தமிழக முதலமைச்சர் மேட்டூர் அணைக்கு நேரில் சென்று கடந்த 1.9.2026 அன்று டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அனையை டெல்டா பாசத்திற்கு திறந்துவிட்ட நிலையில், காவிரியின் கடைமடை மாவட்டமான மயிலாடுதுறை பகுதிக்கு வந்தடைந்தது.  14.9.2026 அன்று விவசாயிகள் பாசனத்திற்கு தண்ணீர் வந்தடைந்தது. 
இதனை 15.9.2026 ஆன இன்று உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் R.வேலுசாமி பார்வையிட்டு வணங்கினார். இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் R. வேலுச்சாமி கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் பாசனத்திற்கு ஜூன் 12 தண்ணீர் திறக்கப்பட வேண்டும் ஆனால் மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் தண்ணீர் திறப்பு என்பது கடந்த செப்டம்பர் 1 - ம் தேதி காலம் தாழ்த்தி திறக்கப்பட்டது.  இதன் காரணமாக முப்போக விளைச்சல் மேற்கொள்ளப்படும் டெல்டா மாவட்டங்களில் குருவை சாகுபடி என்பது முற்றிலும் பொய்த்து போன நிலையில்,  எஞ்சியுள்ள சம்பா மற்றும் தாளடி போகங்களை விவசாயிகள் உற்சாகமாக மேற்கொள்ளலாம் என்ற கனவு நிறைவேறுமா என்பதன் அடிப்படையில் தொடர்ந்து 45 நாட்களுக்கு மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்து இருந்தார். 
ஏற்கனவே குருவை பொய்த்து போன நிலையில், எச்சியுள்ள சம்பா மற்றும் தாளடி ஆகிய போகங்களை முழுமையாக மேற்கொள்ள முடியாது என்பது போன்ற பல்வேறு கருத்துக்கள் தமிழக விவசாயிகள் சங்கங்களின் சார்பில் தமிழக அரசுக்கு முன் வைக்கப்பட்டது. 45 நாள் தண்ணீர் தரப்பு என்பது எஞ்சியுள்ள இரண்டு பாகங்களுக்கு போதுமானதாக இருக்காது என்பதாலும், ஏற்கனவே தமிழகத்திற்கு கர்நாடக அரசு வழங்க வேண்டிய காவிரி பங்கீட்டு தண்ணீரை முறையாக வழங்காமல் ஏமாற்றி வருவதாலும் தமிழக முதலமைச்சர் விரைவில் கர்நாடக முதல்வரிடம் பேசி காவிரி பங்கீட்டு தண்ணீரை முறையாக பெற்றால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிக்கும் என்பதும் எஞ்சியுள்ள இரண்டு போக விளைச்சலையும் தமிழக டெல்டா மாவட்ட விவசாயிகள் பெறுவார்கள் என்றும் கூறிய உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் R. வேலுச்சாமி,
தமிழக அரசு துரித நடவடிக்கை மேற்கொண்டு,  எஞ்சியுள்ள இரண்டு போக விளைச்சல் முழுமை அடைய வழிவகை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

திங்கள், 14 செப்டம்பர், 2026

சேலத்தில் திருமண கோலத்தில் சித்தி புத்தி விநாயகர் நவீன கால சீர்வரிசைகளுடன் பக்தர்களுக்கு அருள் பாலிப்பு..... எலைட் அசோசியேஷன் அமைப்பின் 46 ஆவது ஆண்டு படைப்பு பக்தர்களிடையே மிகுந்த வரவேற்பு.

சேலத்தில் திருமண கோலத்தில் சித்தி புத்தி விநாயகர் நவீன கால சீர்வரிசைகளுடன் பக்தர்களுக்கு அருள் பாலிப்பு..... எலைட் அசோசியேஷன் அமைப்பின் 46 ஆவது ஆண்டு படைப்பு பக்தர்களிடையே மிகுந்த வரவேற்பு.

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

சேலத்தில் திருமண கோலத்தில் சித்தி புத்தி விநாயகர் நவீன கால சீர்வரிசைகளுடன் பக்தர்களுக்கு அருள் பாலிப்பு..... எலைட் அசோசியேஷன் அமைப்பின் 46 ஆவது ஆண்டு படைப்பு பக்தர்களிடையே மிகுந்த வரவேற்பு.

இந்துக்களின் முக்கிய பண்டிகைளில் ஒன்று விநாயகர் சதுர்த்தி, இந்த பண்டிகை உலகம் முழுவதும் உள்ள அணைத்து இந்துக்களும் மிகச்சிறப்பாக கொண்டாடி வருகின்றனர் குறிப்பாக வட மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி பத்து நாட்களுக்கு மிகச்சிறப்பாக கொண்டாடி மகிழ்கின்றனர், தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி மூன்று நாட்கள் கொண்டாடப்படுகிறது, சேலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலை வைத்து உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் சேலம் செவ்வாய் பேட்டை பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது, எலைட் அசோசியேஷன் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக கொண்டாடி வருகின்றனர், ஒவொரு ஆண்டும் பல்வேறு வடிவங்களில் புராண இதிகாசங்கள் உணர்த்தும் வகையில் விநாயகர் சிலை அமைக்கபட்டு கொண்டாடி வருகின்றனர் குறிப்பகாக கைலாச கணபதி, செல்வகணபதி கண்ணாடி கணபதி, சங்கு கணபதி, பனிலிங்க கணபதி என பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலையை பல லட்ச ருபாய் மதிப்பில் அமைக்கபட்டு பக்தர்களின் தரிசனத்திற்காக மூன்று நாட்கள் வைக்கபடுகிறது, அதே போல 46வது ஆண்டாக திருமண கோலத்தில் ஸ்ரீ சித்தி புத்தி விநாயகர் பெருமான் திருமண மணி மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள் பாதிப்பது போல அலங்கராம் செய்யப்பட்டு இருந்தது மண்டபத்தின் நுழை வாயிலில் அரண்மனை முகப்பு போன்று அமைக்கபட்டு, பின்னர் உள்ளே நுழையும் போது வண்ணமிகு வரவேற்பு அலங்காரங்களுடன் வடிமைக்கபப்டு இருந்தது. 
காண்பவரை பரவசத்தில் மட்டுமல்லாமல் மகிழ்ச்சியை ஏறபடுத்தி உள்ளது. மேலும் திருமண மணி  மண்டபத்தின்  விநாயகர் திருமண கோலத்தில் அமர்ந்திருந்து  வேண்டியதை அளிக்கும் ராஜாவாக அமர்திருப்பது விண்ணுலகில் நடக்கும் காட்சிபோலவே மண்ணுலகில் அமைக்கபட்டு இருந்தது தத்ருபமாக காட்சி தருவது போல வடிவமைக்கபட்டு இருந்தது. அதுமட்டுமில்லாமல் திருக்கல்யாண வைபவத்தில் மணமக்களுக்கு சீர்வரிசை வழங்குவதை போன்று தற்காலத்திற்கு ஏற்றார் போன்று ஏசி, ரெஃப்ரிஜிரேட்டர், வண்ண தொலைக்காட்சி, நவீனரக மின்விசிறி, வாஷிங் மெஷின், இண்டக்ஷன் ஸ்டவ், பட்டுப்புடவைகள் வேட்டி சேலை, உட்பட தங்க ஆபரணங்கள், புறா தானே உணவு பொருட்கள் உள்ளிட்டவைகளும் சீர்வரிசைகளாக அடுக்கப்பட்டு இருந்தது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தும் விதமாகவே அமைந்திருந்தது.
இந்த திருக்கல்யாண உற்சவ வைபவம் முதன்முதலாக விநாயகப் பெருமான் திருமண கோலத்தில் வீற்றிருப்பதை காண ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.  இதுகுறித்து நிகழ்ச்சி அமைப்பாளர் சேகர் கூறும்போது, தொடர்ந்து மூன்று நாட்களுக்கு பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ள இந்த நிகழ்வு, 46 ஆண்டாக தங்களது எலைட் அசோசியேசன் சார்பில் திருமண கோலத்தில் சித்தி புத்தி விநாயகர் பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலிப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான புராண விளக்கத்தையும் கூறிய அவர்,  விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடி வருகிறோம். 
ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு இதிகாசங்கள் உணர்த்தும் வகையில் விநாயகர் சிலை அமைக்கபடும் அதே போல இந்த ஆண்டும் விண்ணுலகில் நடப்பது போலவே அமைந்திருந்தது. 
பேட்டி: சேகர் எலைட் அசோசியேஷன் தலைவர்

வெள்ளி, 11 செப்டம்பர், 2026

இந்தியாவிலேயே முதன்முறையாக ‘FUJIFILM Echelon Smart MRI’ ஜான்சன்ஸ் ஹெல்த்தில் பயன்பாட்டுக்கு வந்தது

இந்தியாவிலேயே முதன்முறையாக ‘FUJIFILM Echelon Smart MRI’ ஜான்சன்ஸ் ஹெல்த்தில் பயன்பாட்டுக்கு வந்தது

ஈரோட்டில் மருத்துவத் துறைக்கு புதிய மைல்கல்..!


இந்தியாவிலேயே முதன்முறையாக ‘FUJIFILM Echelon Smart MRI’ — ஜான்சன்ஸ் ஹெல்த்தில் பயன்பாட்டுக்கு வந்தது

ஈரோடு: இந்தியாவிலேயே முதன்முறையாக மேம்பட்ட மருத்துவப் படப்பிடிப்பு தொழில்நுட்பத்துடன் கூடிய ‘FUJIFILM Echelon Smart MRI’ கருவி ஈரோடு ஜான்சன்ஸ் ஹெல்த் சென்டரில் நிறுவப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.


FUJIFILM இந்தியா நிறுவனம் மற்றும் ஜான்சன்ஸ் ஹெல்த் சென்டர் இணைந்து மேற்கொண்டுள்ள இந்த புதிய முயற்சியின் மூலம், ஈரோடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு மேம்பட்ட MRI பரிசோதனை வசதிகள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் அதிநவீன MRI
இந்த புதிய MRI கருவியில் Deep Learning Reconstruction (DLR) எனப்படும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது. 


இதன் மூலம் மருத்துவப் படங்களில் ஏற்படும் தேவையற்ற சத்தத்தை குறைத்து, தெளிவான மருத்துவப் படங்களை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறைந்த நேரத்தில் பரிசோதனைகளை மேற்கொள்ள முடிவதால் நோயாளிகளின் நேரம் கணிசமாக மிச்சமாகும் என்றும், மருத்துவர்கள் துரிதமாக நோயைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க இந்த தொழில்நுட்பம் உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளுக்கு பயன்பாடு
நரம்பியல், எலும்பு மற்றும் தசை, முதுகெலும்பு, வயிற்றுப் பகுதி உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளுக்கு இந்த மேம்பட்ட MRI தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடியும்.


நோயாளிகளின் வசதியை கருத்தில் கொண்டு, MRI பரிசோதனையின்போது ஏற்படும் மனஅழுத்தத்தைக் குறைக்கும் வகையிலும் இந்த கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஜான்சன்ஸ் ஹெல்த்தில் மருத்துவ வசதி மேலும் வலுவடைந்தது

ஜான்சன்ஸ் ஹெல்த்தில் ஏற்கனவே FUJIFILM Supria 32 CT கருவி பயன்பாட்டில் உள்ள நிலையில், தற்போது Echelon Smart MRI நிறுவப்பட்டிருப்பது ஈரோடு பகுதியில் மேம்பட்ட மருத்துவப் பரிசோதனை வசதிகளை மேலும் வலுப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

மேலும், FUJIFILM நிறுவனத்தின் Synapse 3D மேம்பட்ட காட்சிப்படுத்தல் மற்றும் படப்பகுப்பாய்வு தளமும் மருத்துவப் பணிகளுக்கு துணையாக செயல்படுகிறது. 


இதன் மூலம் கதிரியக்கவியல், இதயவியல், அறுவை சிகிச்சை மற்றும் புற்றுநோயியல் உள்ளிட்ட துறைகளில் மருத்துவர்களுக்கு உதவும் வகையில் 3D மாதிரியாக்கம் மற்றும் படப்பகுப்பாய்வு வசதிகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

துவக்க விழாவில் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு

இந்த புதிய FUJIFILM Echelon Smart MRI துவக்க விழாவில் ஜான்சன் குரூப் ஆஃப் கம்பெனிஸ் தலைவர் நடராஜன், FUJIFILM நிறுவனத்தின் சீனியர் மேனேஜர் யோசிடா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் மருத்துவத் துறை சார்ந்த பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் புதிய MRI கருவியின் தொழில்நுட்ப சிறப்பம்சங்கள் மற்றும் அதன் மருத்துவப் பயன்பாடுகள் குறித்து விளக்கப்பட்டது.

“மருத்துவர்களுக்கு துரிதமான நோயறிதல்”

இதுகுறித்து சபா நியூஸ் தமிழுக்கு பேட்டியளித்த ஜான்சன்ஸ் ஹெல்த் சென்டரின் நிர்வாக இயக்குனர் டி.என். திருக்குமார், 


புதிய MRI தொழில்நுட்பத்தின் மூலம் பொதுமக்களுக்கு பரிசோதனை நேரம் குறைவதுடன், மருத்துவர்கள் துரிதமாக நோயைக் கண்டறிந்து, நோயாளிகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க ஏதுவாக அமையும் என தெரிவித்தார்.

மேலும், மேம்பட்ட தொழில்நுட்பத்தின் மூலம் நோயறிதலில் மருத்துவர்களுக்கு கூடுதல் உதவி கிடைப்பதுடன், ஈரோடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு அருகிலேயே நவீன மருத்துவப் பரிசோதனை வசதி கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே முதன்முறையாக ஈரோட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘FUJIFILM Echelon Smart MRI’, ஈரோட்டின் மருத்துவத் துறையில் புதிய தொழில்நுட்ப அத்தியாயத்தை தொடங்கி வைத்துள்ளது.

புதன், 9 செப்டம்பர், 2026

தமிழகத்தில்நடைபெறவுள்ள இடைத்தேர்தலில்  தமிழக விவசாயிகளை மிகப்பெரிய அளவில் ஒன்று திரட்டி இரு தொகுதியிலும் தவெக கட்சியை தோற்கடிப்பதற்காக பிரச்சாரம் மிகக் கடுமையான மேற்கொள்வோம். தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ஆர். வேலுச்சாமி தமிழக அரசுக்கு கடும் எச்சரிக்கை.

தமிழகத்தில்நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் தமிழக விவசாயிகளை மிகப்பெரிய அளவில் ஒன்று திரட்டி இரு தொகுதியிலும் தவெக கட்சியை தோற்கடிப்பதற்காக பிரச்சாரம் மிகக் கடுமையான மேற்கொள்வோம். தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ஆர். வேலுச்சாமி தமிழக அரசுக்கு கடும் எச்சரிக்கை.

நாமக்கல், 
S.K. சுரேஷ்பாபு.

தமிழகத்தில்நடைபெறவுள்ள இடைத்தேர்தலில்  தமிழக விவசாயிகளை மிகப்பெரிய அளவில் ஒன்று திரட்டி இரு தொகுதியிலும் தவெக கட்சியை தோற்கடிப்பதற்காக பிரச்சாரம் மிகக் கடுமையான மேற்கொள்வோம். தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ஆர். வேலுச்சாமி தமிழக அரசுக்கு கடும் எச்சரிக்கை. 


இது குறித்து, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி கடும் எச்சரிக்கை பதிவினை தமிழக அரசுக்கு வெளியேற்றுள்ளார், அந்த அறிக்கையின் அடிப்படையில், ஏற்கனவே,  ஏற்கனவே, தமிழக விளையாட்டு துறை அமைச்சர் சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் இந்தியாவின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயத்தை காட்டிலும் விளையாட்டுத்துறை மட்டுமே மேம்பட்டது என்று பெருமைப்பட பேசியது மிகப் பெரிய சர்ச்சைக்குரிய விஷயமாகவே தமிழகம் உட்பட அனைத்து மாநில விவசாயிகள் தரப்பிலும் நாள்தோறும் செய்திகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. இந்த நிலையில், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ஆர் வேலுச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் தவெக கட்சி சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், தமிழக விவசாயிகள் கூட்டுறவு தொடக்க வேளாண்மை கடன் சங்கங்களில் வாங்கிய பயிர் கடன் சிறு ,குறு விவசாயிகளுக்கு முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படும்  பெரு விவசாயிகள் வாங்கிய பயிர் பயிர் கடன் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என கவர்ச்சிகரமாக வாக்குறுதி கொடுத்து ஆட்சி பொறுப்பிற்கு வந்தவுடன் பல்வேறு நிபந்தனைகளை விதித்து முறையாக முழுமையாக பயிர் கடன் தள்ளுபடி செய்யவில்லை.
இது  தமிழக விவசாயிகளிடம் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சமீபத்தில் உண்டாகியுள்ள கடுமையான வறட்சியின் பொருட்டு அனைத்து விவசாயிகளும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் வாங்கிய பயிர் கடனை பாகுபாடின்றி முழுமையாக தள்ளுபடி செய்ய கோரி, 
தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளின் ஒட்டுமொத்த குரலாக தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாய சங்கங்கள் மற்றும் தமிழக அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தவெக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். தமிழக விவசாயிகள் இரவு பகல் என்றும் பாராமல் கடுமையான உழைப்பின் மூலம் உடல் ரத்தத்தை வியர்வையாக சிந்தி உழைக்கும் தமிழக விவசாயிகளுக்கு தவெக கட்சி கடந்த சட்டமன்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாததையும் சமீபத்தில் தமிழகம் முழுவதும் கடுமையான வறட்சியின் காரணமாக விவசாயிகளுக்கு வருவாய் இழப்பை காரணத்தை கருத்தில் கொண்டு தமிழக விவசாயிகள் அனைவரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் வாங்கிய பயிர் கடன் முழுவதும் தள்ளுபடி செய்ய கோரி வைத்த கோரிக்கையை நிறைவேற்ற தவறிய தவெக அரசுக்கு தமிழக விவசாயிகள் சார்பில் அதற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் அடுத்த மாதம் தமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இரு தொகுதியிலும் தேர்தலில் தமிழக விவசாயிகளை மிகப்பெரிய அளவில் ஒன்று திரட்டி தவெக கட்சி இடைத்தேர்தலில் போட்டியிட்டால்  இரு தொகுதியிலும் தவெக கட்சியை தோற்கடிப்பதற்காக  பிரச்சாரம் மேற்கொள்வோம் என்பதை உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் இந்த அறிக்கையின் வாயிலாக தவெக கட்சிக்கு எச்சரிக்கை விடுக்கிறேன் என்றும் இந்தியாவின் முதுகெலும்பாக உள்ள விவசாயத் தொழிலை கொச்சைப்படுத்தி, தமிழக விவசாயிகளின் நலனில் எந்த அக்கறையும் செலுத்தாமல், தேர்தலில் அறிவித்த அறிக்கையை எதையும் செயல்படுத்தாமல், உட்பட எவ்வளவோ உள்ளது விவசாயிகளை பாதிக்கும் செயல். இவற்றை அனைத்தையும் ஒருங்கிணைத்து கேவலப்படுத்தி விளையாட்டு துறையை மேம்படுத்தும் விதமாக ஆதவ் அர்ஜுனா வின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் கண்டனம் தெரியாமல் வருத்தம் தெரிவிக்காமல் நாளை துபாய் சைடுல உள்ள தமிழக முதல்வர். 
 

திங்கள், 7 செப்டம்பர், 2026

சேலம் அருகே நிகழ்ந்து கொண்டிருக்கும் மணல் கொள்ளையை தடுக்க அரசு அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. கண்ணில் கருப்பு துணி கட்டிக் கொண்டு சேலம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க வந்த பாஜக நிர்வாகிகள் பரபரப்பு.

சேலம் அருகே நிகழ்ந்து கொண்டிருக்கும் மணல் கொள்ளையை தடுக்க அரசு அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. கண்ணில் கருப்பு துணி கட்டிக் கொண்டு சேலம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க வந்த பாஜக நிர்வாகிகள் பரபரப்பு.

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

சேலம் அருகே நிகழ்ந்து கொண்டிருக்கும் மணல் கொள்ளையை தடுக்க அரசு அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. கண்ணில் கருப்பு துணி கட்டிக் கொண்டு சேலம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க வந்த பாஜக நிர்வாகிகள் பரபரப்பு. 

சேலம்
சன்னியாசி குண்டு விநாயகர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் பூபதி. இவர் தமிழக பாஜகவின் மாநில செயற்குழு உறுப்பினராக இருந்து வருகின்றார். இந்த நிலையில் கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு புகார் மனு ஒன்றினை இன்று நடைபெற்ற சேலம் மாவட்ட ஆட்சியரின் குறைதீர்ப்பு நாள் கூட்டத்திற்கு மனு வழங்குவதற்காக வந்திருந்தார். இதற்கென ஏற்கனவே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சேலம் டவுன் காவல் துறையினர் மற்றும் சேலம் செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு மீட்பு படை குறையினர் பரபரப்பிற்கு உள்ளாகினர். இதுகுறித்து அவரிடம் விசாரிக்கையில் தான் புகார் மனு கொடுப்பதற்காக வந்துள்ளதாகவும் பலமுறை புகார் தெரிவித்தும் அரசுத்துறை அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை வலியுறுத்தும் விதமாக கண்களில் கருப்பு துணி கட்டி புகார் மனு அளிக்க வந்துள்ளதாக கூறியதன் அடிப்படையில் நிலைமை அங்கு சற்று கொஞ்சம் நிம்மதி அடைந்தது. சேலம் சன்னியாசி குண்டு பகுதியைச் சேர்ந்த பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் தனது புகார் மனுவில், 
சேலம் மாவட்டம், அயோத்தியாபட்டினம், மாசிநாயக்கன்பட்டி ஏரி அருகிலுள்ள காட்டுவளவு பகுதியில் இயங்கி வரும் பிளாஸ்டிக்/ஸ்டிக் பேப்பர் உருக்கும் ஆலை மற்றும் தேங்காய் ஓடு எரிக்கும் ஆலை தொடர்பாக,  சுற்றுச்சூழல் விதிமீறல், விவசாய நிலங்கள் மற்றும் ஏரிக்கு பாதிப்பு, தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வசதிகள் இல்லாமை மற்றும் தேவையான அரசு அனுமதிகள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தொடர்புடையது அவரது கோரிக்கை மனுவும். அந்த கோரிக்கை மனுவில் பூபதி என்பவர் குறிப்பிட்டுள்ளதாவது, சேலம் மாவட்டம், அயோத்தியாபட்டினம் பகுதியில் உள்ள மாசிநாயக்கன்பட்டி ஏரி அருகிலுள்ள காட்டுவளவு பகுதியில், சீனிவாசன் என்பவர் பிளாஸ்டிக்/ஸ்டிக் பேப்பர் உருக்கும் ஆலை மற்றும் தேங்காய் ஓடு எரிக்கும் ஆலையை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி ஆலையில் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருவதாகவும், அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் முறையாக வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் தொழிலாளர்களின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படக்கூடிய சூழ்நிலை உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், ஆலையிலிருந்து வெளியேறும் கழிவுகள் மற்றும் பிற பொருட்கள் அருகிலுள்ள விவசாய நிலங்களுக்கும், மாசிநாயக்கன்பட்டி ஏரிக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செல்வதாகவும், கழிவுகள் ஏரியில் கலக்கப்படுவதாகவும் புகார் தெரிவிக்கப்படுகிறது. இதனால் விவசாய நிலங்கள், விவசாயப் பயிர்கள், நீர்நிலைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் பூபதி சம்பந்தப்பட்ட புகார் மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.
சேலம் ஆத்தூரில் 2 கோடி ரூபாய் மதிப்பீடான இரண்டு ஏக்கர் நிலத்தை லஞ்சம் பெற்றுக் கொண்டு சரவணன் என்பவருக்கு போலி பட்டா மூலம் விற்பனை செய்து கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வன்.

சேலம் ஆத்தூரில் 2 கோடி ரூபாய் மதிப்பீடான இரண்டு ஏக்கர் நிலத்தை லஞ்சம் பெற்றுக் கொண்டு சரவணன் என்பவருக்கு போலி பட்டா மூலம் விற்பனை செய்து கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வன்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் ஆத்தூரில் 2 கோடி ரூபாய் மதிப்பீடான இரண்டு ஏக்கர் நிலத்தை லஞ்சம் பெற்றுக் கொண்டு சரவணன் என்பவருக்கு போலி பட்டா மூலம் விற்பனை செய்து கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வன்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள  ராமநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் குழந்தைவேலு. இவர் தனது குடும்பத்தாருடன் சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு புகார் மனு கொடுப்பதற்காக வந்திருந்தார். அந்த புகார் மனுவில், விவசாயியான தனக்கு மனைவி மற்றும் மகன்கள் மகள்கள் உள்ளனர். மகன்களுக்கும் மகள்களுக்கும் திருமணம் செய்து கொடுத்து விட்ட நிலையில், சம்பந்தப்பட்ட கிராமத்தில்  குத்தகை மற்றும் அனுபவத்தின் மூலம் நான் சுமார் 4 ஏக்கர் விவசாய நிலத்தை நிர்வகித்து வருகிறேன். அதே நிலத்தில் வீடு கட்டி, எனது மனைவி துளசி மற்றும் மகன்கள் பாலமுருகன், தர்மர் ஆகியோருடன் வசித்து விவசாயம் செய்து வருகிறேன். ராமநாயக்கன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகரின் மனைவியான கனகம் என்பவர், நான் தான் அவருடைய கணவர் என்று பொய்யான தகவலைக் கூறி எனக்குப் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தி வருகிறார். 
தற்போது முல்லைவாடி கிராமத்திcன் கிராம நிர்வாக அலுவலராக (VAO) உள்ள மேற்கூறிய கனகம், எனக்குச் சொந்தமானதும் நான் 50 ஆண்டுகளாக அனுபவத்தில் வைத்திருப்பதுமான ராமநாயக்கன்பாளையம் வடக்கு 9-ல் உள்ள விவசாய நிலத்திற்கு, போலியான பட்டா (பட்டா எண் 1109) மற்றும் ஆத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆவண எண் 1370/2025-ன் கீழ் ஒரு பத்திரப் பதிவையும் தயார் செய்துள்ளார். இதன் மூலம் அவர் எனது நிலத்தைக் அபகரிக்க முயற்சிக்கிறார். மேற்கூறிய நிலம் 50 ஆண்டுகளாக எனது அனுபவத்தில் உள்ளது என்பது கிராமத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும். இந்நிலையில், எனக்குப் படிப்பறிவு இல்லாததால், எனது நிலம் வேறொருவர் பெயரில் 'அ' பதிவேட்டில் (A-Register) பதிவு செய்யப்பட்டது குறித்த விவரங்கள் எனக்குத் தெரியவில்லை. எனது அறியாமையைப் பயன்படுத்தி, மேற்கூறிய கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வன் லஞ்சம் பெற்றுக்கொண்டு இந்த முறையற்ற செயலைச் செய்துள்ளார்.
மேற்கூறிய பட்டா மற்றும் உரிமைப் பத்திரத்திற்குத் தேவையான அசல் ஆவணங்கள் அல்லது அனுபவ ஆதாரம் எதுவும் அந்த நபரிடம் இல்லாதபோதிலும், கிராம நிர்வாக அலுவலர் பணம் பெற்றுக்கொண்டு எனக்கு அந்தப் பட்டாவை வழங்கியுள்ளார். எனது நிலத்தை நேரில் வந்து அளக்காமலும், எனக்கு எந்தத் தகவலும் தெரிவிக்காமலும், மோசடியான போலியான பட்டாவைப் பயன்படுத்தி நிலத்தைப் உட்பிரிவு (subdivision) செய்து எனக்கு வழங்கியுள்ளார்.  மேற்கூறிய போலியான பட்டாவை ரத்து செய்யவும், அந்தப் போலியான பட்டாவை வழங்கிய கிராம நிர்வாக அலுவலர் (VAO) கலைச்செல்வன் மற்றும் நிலத்தை உட்பிரிவு செய்த நில அளவர் ஆகியோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவும் பணிவுடன் கேட்டுக் கொள்வதாக அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். 
இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயி குழந்தைவேலு நம்மிடையே கூறுகையில், வரும் 19ஆம் தேதி பட்டா நிலத்திற்கான அனைத்து ஆவணங்களையும் எடுத்து வர சேலம் மாவட்ட காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளதாகவும், தங்களுக்கு சொந்தமான நிலத்தை மீட்டு தங்களுக்கு வழங்க வேண்டும் என்பதே தங்களது கோரிக்கை என்றும் வேதனையுடன் விவசாய குடும்பத்தினர் தெரிவித்தனர்.

ஞாயிறு, 6 செப்டம்பர், 2026

சேலத்தில் புதிய வெளிச்சம் சேவை அறக்கட்டளையின் சார்பில் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம்.

சேலத்தில் புதிய வெளிச்சம் சேவை அறக்கட்டளையின் சார்பில் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம்.

சேலம், 
S.K. சுரேஷ்பாபு. 

சேலத்தில் புதிய வெளிச்சம் சேவை அறக்கட்டளையின் சார்பில் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம்.

சேலத்தில் புதிய வெளிச்சம் சேவை அறக்கட்டளை மற்றும் அன்னபூர்ணா மருத்துவமனை ஆகியவற்றின் சார்பில்  மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அமைப்பின் நிறுவனத் தலைவர் தனபால் தலைமை தாங்கினார். தொழிலதிபர்கள் கோல்டு தேவராஜ் மற்றும் ரவிவர்மா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு இலவச பொது மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தனர். சேலம் அன்னபூர்ணா மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்ட இந்த பொது மருத்துவ முகாமில் அனைத்து விதமான நோய்களுக்கும் சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இந்த முகாமில் பொன்னம்மாபேட்டை அம்மாபேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்று சென்றனர். இந்த பொது மருத்துவ முகாம் குறித்து புதிய வெளிச்சம் சேவை அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் தனபால் செய்தியாளர்களிடம் கூறுகையில், எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் மக்களின் நலனுக்காகவே  கடந்த 30 ஆண்டுகளாக அனைத்து விதமான சேவைகளை பொதுமக்களுக்கு செய்து வருவதாகவும், தற்பொழுது இரண்டாவது ஆண்டாக இந்த பொது மருத்துவம் முகாம் நடத்தி வருவதாக தெரிவித்தார். தனியார் அமைப்புகளின் சார்பில் பல்வேறு ஆதரவற்றோர் இல்லங்கள் இருந்தாலுமே கூட தற்பொழுதும் சாலையில் ஆதரவின்றி தவித்து வரும் பொது மக்களின் நலன் கருதி விரைவில் தங்களது அமைப்பின் சார்பில் இலவச சேவை ஆதரவற்றோர் இல்லம் தொடங்குவதே தங்களது அமைப்பின் தலையாய நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருவதாகவும் இதற்கு தமிழக அரசு தங்களுக்கு போதுமான ஒத்துழைப்பும் உதவிகளையும் வழங்க வேண்டும் என்றும் தனபால் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார். 
இந்த பொது மருத்துவ முகாமில் புதிய வெளிச்சம் சேவை அறக்கட்டளை நிர்வாகிகள் அன்பு சரவணன் ரமேஷ் மணிவண்ணன் சரவணன் சாந்தகுமார் சாரதி சின்னத்தம்பி மற்றும் பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.