Latest

திங்கள், 31 ஆகஸ்ட், 2026

சேலம் அருகே மூதாட்டிக்கு கால் மாற்றி அறுவை சிகிச்சை செய்த அரசு மருத்துவர். தவறிழைத்த மருத்துவர், வெளியில் கூறினாள்  கொலை மிரட்டல் விடுவதாக, பாதிக்கப்பட்ட மூதாட்டி மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் புகார்.

சேலம் அருகே மூதாட்டிக்கு கால் மாற்றி அறுவை சிகிச்சை செய்த அரசு மருத்துவர். தவறிழைத்த மருத்துவர், வெளியில் கூறினாள் கொலை மிரட்டல் விடுவதாக, பாதிக்கப்பட்ட மூதாட்டி மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் புகார்.

சேலம், 
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் அருகே மூதாட்டிக்கு கால் மாற்றி அறுவை சிகிச்சை செய்த அரசு மருத்துவர். தவறிழைத்த மருத்துவர், வெளியில் கூறினாள்  கொலை மிரட்டல் விடுவதாக, பாதிக்கப்பட்ட மூதாட்டி மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் புகார். 

நாமக்கல் மாவட்டம் குமார பாளையத்தை சேர்ந்தவர் காலம் சென்ற மாதேஸ்வரன். இவரது மனைவி கோமதி. இவரது ராதிகாவை சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த ராஜேஷ்குமார் என்பவருக்கு திருமணம் முடித்து கொடுத்துள்ளார். இந்த நிலையில் சுமார் 60 வயதுக்கு மேலான கோமதிக்கு வலது காலில் ஏற்பட்ட மூட்டு வலி காரணமாக மிகவும் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனை அடுத்து மூதாட்டி கோமதி மகள் மற்றும் மருமகன் உதவியோடு சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, அரசு  மருத்துவர் பாலாஜி என்பவரை அணுகி உள்ளனர். பரிசோதித்த மருத்துவர் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி அதற்கான காலக்கடுவையும் நிர்ணயித்ததாகவும் தெரிகிறது. இதற்காக கடந்த 2022 ஆம் ஆண்டு மூதாட்டி கோமதிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாகவே முடிந்துள்ளது. ஆனால் மயக்கம் தெளிந்து பார்த்த மூதாட்டி கோமதி மற்றும் அவரது குடும்பத்தாருக்கு அதிர்ச்சி மட்டுமே காத்திருந்தது. காரணம் ஒரு அரசு மருத்துவர் வலது காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு பதிலாக இடது காலில் அறுவை சிகிச்சை செய்த அவலம் வெளியே தெரிய வந்தது. 
இதுகுறித்து அரசு மருத்துவரான பாலாஜி என்பவரை பாதிக்கப்பட்ட கோமதி மற்றும் அவரது குடும்பத்தார் அணுகியபோது, மருத்துவர்களுக்கான கோட்ரசிற்கு வரவழைத்து இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் என் மானம் மரியாதை போய்விடும் அதனால் வெளியில் யாரிடமும் கூறி விடாதீர்கள் இதற்கு நன்றிக்கடன் ஆக நான் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் தங்களுக்கு வழங்குவதாக கூறி வீடியோ எடுத்துக் எடுத்துக் கொண்டது மட்டுமல்லாமல், படுபாதகச் செயலில் ஈடுபட்ட அரசு மருத்துவர் பாலாஜி வீடியோவை கட் செய்து விட்டு பாதிக்கப்பட்ட கோமதியை கண்மூடித்தனமாக மிரட்டியதோடு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இது சம்பந்தமாக எடப்பாடி காவல் நிலையத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் எடப்பாடி காவல் துறையினரும் சம்பந்தப்பட்ட அரசு மருத்துவர் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வேதனையின் உச்சம். நிலைமை இப்படி இருக்கு ஏற்கனவே பாதிக்கப்பட்ட வலது காலிருக்கும் மாறாக இடது காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டதன் அடிப்படையில் நாள்தோறும் தனது அன்றாட அத்தியாவசிய தேவைகளையும் காலை கடன்களையும் கூட பூர்த்தி செய்ய முடியாமல் மூதாட்டி தவித்து வந்துள்ளார். 
அதன் பிறகு சம்பந்தப்பட்ட அரசு மருத்துவர் பாலாஜியை தங்களால் பார்க்கவே முடியவில்லை என்பது பாதிக்கப்பட்ட மூதாட்டியின் வேதனையாக இருந்து வந்த நிலையில், மகள் ராதிகா மற்றும் மருமகன் ராஜ்குமார் ஆகியோரின் உதவியுடன் கோமதி வழக்கறிஞர் கலைச்செல்வன் என்பவரை அணுகி உள்ளார். வழக்கறிஞர் கலைச்செல்வனின் அறிவுறுத்தலின் பேரில், சேலம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து இன்று புகார் மனு ஒன்றினையும் பாதிக்கப்பட்ட மூதாட்டி கோமதி மற்றும் அவரது குடும்பத்தார் வழங்கினர். இதனிடையே வழக்கறிஞர் கலைச்செல்வன் இந்த அறுவை சிகிச்சையால் மூதாட்டி கோமதிக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்தும், அவருக்கு அரசு மருத்துவரால் ஏற்படுத்தப்பட்ட அநீதி குறித்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உலக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சம்பந்தப்பட்ட கோமதி இழைக்கப்பட்ட கொடுமை குறித்து விசாரணை குழு அமைத்து உரிய விசாரணை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட கோமதிக்கு உரிய தீர்வு ஏற்படுத்தி தரவேண்டும் என்று சேலம் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனருக்கு உத்தரவினையும் பிறப்பித்திருந்தது. 
இந்த நிலையில் மீண்டும் அந்த விசாரணைக்காக சேலம் மாவட்ட ஆட்சியரை சந்தித்த மூதாட்டி கோமதி நம்மிடையே கூறியது வேதனையை ஏற்படுத்துவதாகவே இருந்தது. மேலும் தனக்கு தவறான சிகிச்சை செய்து அநீதி இழைத்த அரசு மருத்துவர் மீது துரை ரீதியான நடவடிக்கை எடுத்து எனக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்குவதோடு மட்டுமல்லாமல் எனக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை சரி செய்து தர வேண்டும் என்றும் கண்ணீர் மல்க கோரிக்கை முன்வைத்தார்.
பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு 44 ரூபாய் என தமிழக முதல்வரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் R. வேலுச்சாமி அறிவிப்பு.

பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு 44 ரூபாய் என தமிழக முதல்வரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் R. வேலுச்சாமி அறிவிப்பு.

நாமக்கல், 
S.K. சுரேஷ்பாபு.

பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு 44 ரூபாய் என தமிழக முதல்வரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் R. வேலுச்சாமி அறிவிப்பு.

இதுகுறித்து உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் R. வேலுச்சாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 
தமிழ்நாடு அரசு ஆவின் நிறுவனம் மூலம் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் தமிழக விவசாயிகளிடம் இருந்து தற்போது கொள்முதல் செய்யும் பாலுக்கு கட்டுப்படியான விலை இல்லை. பால் உற்பத்தி செய்ய பசுந்தீவனம் மற்றும் உலர் தீவனம் பராமரிப்பு செலவு பலமடங்கு உயர்ந்துள்ள காரணத்தை முன்வைத்து தவெக அரசு பால் கொள்முதல் விலையை தேர்தல் அறிக்கையில் கூறியது போல்  உயர்த்தி வழங்க கோரி விவசாயிகள் சங்க அமைப்புகள் சார்பிலும் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கம் சார்பிலும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை முழுமையாக தமிழ்நாடு அரசு ஏற்கவில்லை, அதன் பின்னர் தமிழகம் முழுவதும் விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் அனைவரும் இணைந்து கடந்த வாரம் 24.8.2026 முதல் தமிழகம் முழுவதும் ஆவின் நிறுவனத்திற்கு பால் அனுப்பாமல் பால் நிறுத்த போராட்டம் நடத்தப்பட்டது. தவெக அரசு பால் உற்பத்தியாளர்கள் மற்றும் தமிழக விவசாயிகள் நலன் கருதி விரைவில் தமிழ்நாடு அரசு ஆவின் நிறுவனம் மூலம் கொள்முதல் விலை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் தெறிவிக்கப்பட்டு பால் உற்பத்தியாளர்கள் மற்றும் தமிழக விவசாயிகள் அனைவரும் இணைந்து பால் நிறுத்த போராட்டம் கைவிட வேண்டும் என அறிவிக்கப்பட்ட பின்னர் தற்காலிகமாக பால் நிறுத்தும் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள விவசாயிகள் சங்க அமைப்புக்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கம் இணைந்து நடத்திய போராட்டத்தை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு ஜோசப் விஜய் இன்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் ஆவின் நிறுவனம் மூலம் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் தமிழக விவசாயிகள் இடம் இருந்து கொள்முதல் செய்யும் பால் தற்போது விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.35 ல் இருந்து கொள்முதல் விலையாக லிட்டர் ஒன்றுக்கு ரூ.4 விலை உயர்த்தி ரூ 39  என அறிவிப்பு வெளியிட்டு,  அதனுடன் பால் கொள்முதல் விலையுடன் சேர்த்து ஊக்கத் தொகையாக ரூ.5 என நிர்ணயம் செய்து, பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.44 என தமிழக முதல்வர் அவர்கள் இன்று அறிவிப்பு வெளியிட்டதை உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் வரவேற்பதாக தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் R.வேலுச்சாமி செய்தி குறிப்பில் தகவல் தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2026

சேலத்தில் விமர்சையாக நடைபெற்ற ராஜகணபதி திருக்கோவில் கும்பாபிஷேக விழா. காவல்துறையினரின் பலத்த பாதுகாப்பிற்கு இடையே பக்த கோடிகளுக்கான அனைத்து அத்தியாவசிய தேவைகளும் பூர்த்தி செய்து தரப்பட்டுள்ளது. அனைத்து திருக்கோவில் பாதுகாப்பு சங்கத்தினர் பெருமிதம்.

சேலத்தில் விமர்சையாக நடைபெற்ற ராஜகணபதி திருக்கோவில் கும்பாபிஷேக விழா. காவல்துறையினரின் பலத்த பாதுகாப்பிற்கு இடையே பக்த கோடிகளுக்கான அனைத்து அத்தியாவசிய தேவைகளும் பூர்த்தி செய்து தரப்பட்டுள்ளது. அனைத்து திருக்கோவில் பாதுகாப்பு சங்கத்தினர் பெருமிதம்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலத்தில் விமர்சையாக நடைபெற்ற ராஜகணபதி திருக்கோவில் கும்பாபிஷேக விழா. காவல்துறையினரின் பலத்த பாதுகாப்பிற்கு இடையே பக்த கோடிகளுக்கான அனைத்து அத்தியாவசிய தேவைகளும் பூர்த்தி செய்து தரப்பட்டுள்ளது. அனைத்து திருக்கோவில் பாதுகாப்பு சங்கத்தினர் பெருமிதம். 

சேலம் மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ராஜகணபதி திருக்கோயில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான  திருக்கோயில். மூலவர் விநாயகர் பெருமான் ஒவ்வொரு நாளும் ராஜ அலங்காரத்துடன் பக்தர்களுக்குக் காட்சியளிப்பதால், இவருக்கு 'ராஜகணபதி' என்ற திருநாமம் ஏற்பட்டது. சேலம் பகுதி மன்னர்கள் காலத்தில் காடுகளும் மலைகளும் சூழ்ந்த பகுதியாக இருந்ததால் 'சைலதேசம்' என்று அழைக்கப்பட்டது. அப்போது மன்னர்கள் விநாயகப் பெருமானைத் தங்களைத் தீமைகளிலிருந்து காக்கும் காவல் தெய்வமாகக் கருதி வழிபட்டனர். சேலம் நகரின் மையத்தில் முதல் அக்ராஹாரத்தில் தேரடி (Car House) சந்திப்புக்கு அருகில் சுகவனேஸ்வரர் திருக்கோயிலுக்கு மிக அருகில் இக்கோயில் அமைந்துள்ளது. புதிய தொழில் தொடங்குதல், திருமணப் பத்திரிகைகள் வைத்தல், வாகனப் புத்தாண்டு சாவிகள் மற்றும் முக்கியமான ஆவணங்களை விநாயகர் விக்ரகத்தின் அடியில் வைத்து வழிபடுதல் இங்கு சிறப்பு. மேலும், உலகப் புகழ்பெற்ற வல்லப கணபதி திருமண வரவேற்பு கோலத்தில் காட்சியளிப்பது இத்தலத்தின் மகா கும்பாபிஷேக விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.
திருக்கோவில் வளாகத்தில் ஆகம விதிமுறைப்படி அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில் நான்கு கால பூஜைகள் பூர்த்தியானதை தொடர்ந்து புனித நீர் கலச ஊர்வலம் நடைபெற்றன. தொடர்ந்து ஸ்ரீ ராஜகணபதி திருக்கோவிலில் கோபுர கலசத்திற்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து புனித நீர் ஊற்றி திருக்கோவில் சிவாச்சாரியார்கள் குடமுழுக்கு விழாவினை வெகு விமர்சையாக நடத்தி வைத்தனர். தமிழக வெற்றி கழகத்தின் சேலம் மாவட்ட செயலாளர் தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான விஜய் தமிழன் பார்த்திபன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ராஜகணபதி திருக்கோவிலின் கும்பாபிஷேக விழாவினை சிறப்பித்தார். பின்னர் குடமுழுக்கு விழா நடைபெற்றதை தொடர்ந்து விழாவில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. மேலும் திருக்கோவிலின் சார்பில் மகா அன்னதான நிகழ்வும் நடைபெற்றன. இது தவிர பல்வேறு அமைப்புகளின் சார்பில் ஆங்காங்கே பக்தர்களின் நலனுக்காக சிற்றுண்டிகள் குடிநீர் பாட்டில்களும் வழங்கப்பட்டன. திருக்கோவில் திரு குடமுழுக்கு விழாவிற்காக கடைவீதி முதல் அக்ரகாரம் இரண்டாவது அக்ரஹார பகுதிகள் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டு மாற்று பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. 
இந்த குடமுழுக்கு விழாவில் சேலம் மாநகரம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏன் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இரட்சகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ ராஜ கணபதியின் அருள் பெற்று சென்றனர். இந்த கும்பாபிஷேக விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் சேலம் மாநகர காவல் துறை மிகச் சிறப்பாக செய்திருந்ததாகவும் இந்த விழாவிற்காக வருகை தந்த ஏராளமான பக்தர்களின் நலன் கருதி அனைத்து திருக்கோவில் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் அன்னதானம் மற்றும் குடிநீர்  பாட்டில்கள் வழங்கப்பட்டுள்ள தோடு தொடர்ச்சியாக நடைபெற உள்ள மண்டல பூஜைகளில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கும் அதனை தொடர்ந்து வரும் விநாயகர் சதுர்த்தி விழா வரை பக்தர்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய உதவிகளும் செய்து தரப்பட உள்ளதாகவும், கும்பாபிஷேக விழாவை தொடர்ந்தஅ நடைபெற உள்ள மண்டல பூஜை மற்றும் அதனைத் தொடர்ந்து வரும் விநாயகர் சதுர்த்தி விழா உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு வரும் பக்தர்கள் தங்களது உடைமைகளை பத்திரமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூட்டத்தை பயன்படுத்தி சமூக விரோதிகள் சிலர் பொதுமக்களின் உடமைகளை களவாடவும் வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் ஒவ்வொரு பக்தர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளனர், அனைத்து திருக்கோவில் பாதுகாப்பு சங்கத்தின் மாநில இணை செயலாளர் சண்முகவேல் மற்றும் மாவட்ட செயலாளர் சண்முகம் ஆகியோர் தெரிவித்தனர். இந்த விழாவில் திருக்கோவிலில் அறங்காவலர் குழு தலைவரும் சோனா கல்வி குழுமத்தின் தலைவருமான வள்ளியப்பா மற்றும் திருமதி வள்ளியப்பா உள்ளிட்டோர் குடும்பத்தாருடன் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த சேலம் அருள்மிகு ஸ்ரீ ராஜகணபதி திருக்கோவில் கும்பாபிஷேக விழாவை ஒட்டி சேலம் மாநகரமே விழாக்கோலம் பூந்துள்ளது என்பது மட்டும் நிதர்சனம்.

சனி, 29 ஆகஸ்ட், 2026

சேலம் சோனா தொழில்நுட்ப கல்லூரியின் 25வது பட்டமளிப்பு விழாவில், 1380 மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி கௌரவிப்பு

சேலம் சோனா தொழில்நுட்ப கல்லூரியின் 25வது பட்டமளிப்பு விழாவில், 1380 மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி கௌரவிப்பு

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

சேலம் சோனா தொழில்நுட்ப கல்லூரியின் 25வது பட்டமளிப்பு விழாவில், 1380 மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி கௌரவிப்பு

சேலம் சோனா தொழில்நுட்ப கல்லூரியின் பட்டமளிப்பு விழா கல்லூரியின் கல்லூரியின் சிறப்பு அரங்கத்தில்  நடைபெற்றது. கல்லூரி தலைவர் திரு.வள்ளியப்பா தலைமையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் துணைத்தலைவர்கள் திரு.சொக்குவள்ளியப்பா, திரு.தியாகுவள்ளியப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதனை தொடர்ந்து கல்லூரி முதல்வர் எஸ்.ஆர்.ஆர்.செந்தில்குமார் அனைவரையும் வரவேற்று பட்டமளிப்பு விழா அறிக்கையை சமர்பித்தார். சிறப்பு விருந்தினராக சென்னை, ஹெக்ஸாவேர் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின், தலைமை வழிகாட்டியான கிருஷ்ணா பாலகுருநாதன் அவர்கள் கலந்து கொண்டு 15 பட்டதாரிகளுக்கு முனைவர் பட்டங்களையும், சிறந்த தரவரிசை பட்டியலில் இடம் பிடித்த 31 மாணவ மாணவிகள் மற்றும் இளநிலை பட்டதாரிகள் 1070, முதுநிலை பட்டதாரிகள் 310 பேர் உட்பட 1380 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். 
இதனைதொடர்ந்து சிறப்புவிருந்தினர்கள் பேசும்பொழுது, சிறப்பான கல்வி சேவையை அர்ப்பனித்த பேராசிரியர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து மேலும் சிறந்த உள் கட்டமைப்பு, மாணவர்களை சிறந்தவர்களாக தயார்படுத்துதல், ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில் சோனா கல்லூரி சிறந்து விளங்குவதால்தான் பல விருதுகளை பெற்றுள்ளது என்றனர். மேலும் சர்வதேச தரத்தில் செயல்பட்டுவரும் சோனா தொழில்நுட்பக் கல்லூரியின் மாணவர்கள் எங்கு சென்றாலும் தனிச்சிறப்போடு விளங்கி கல்லூரிக்கு நற்பெயரை பெற்றுத்தந்து வருகிறார்கள் என்றும் இத்தகைய கல்லூரியில் பயிலும் வாய்ப்பு கிடைத்ததற்கு மாணவர்கள் பெருமைபட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
சோனா கல்விக் குழுமத்தின் தலைவர் திரு.வள்ளியப்பா பேசும்பொழுது சவால்கள் நிறைந்த இன்றைய சூழலில் நவீனத் தொழில்நுட்பங்களை அறிந்து அதற்குகேற்ப தங்களின் ஆற்றலை நாள்தோறும் வளர்த்து கொண்டு திறம்பட செயலாற்ற வேண்டும் என தெரிவித்தார். 
இந்த விழாவில் சோனா கல்விக்குழுமத்தின்  முதல்வர்கள், இயக்குனர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026

சேலம் SKS மகளிர் நல மையத்தில், பிரத்யேக 'காஸ்மெட்டிக் கைனகாலஜி' (Cosmetic Gynecology) மற்றும் உயர்தர மகப்பேறு மருத்துவப் பிரிவுக்கான தொடக்க விழா

சேலம் SKS மகளிர் நல மையத்தில், பிரத்யேக 'காஸ்மெட்டிக் கைனகாலஜி' (Cosmetic Gynecology) மற்றும் உயர்தர மகப்பேறு மருத்துவப் பிரிவுக்கான தொடக்க விழா

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

சேலம் SKS மகளிர் நல மையத்தில், பிரத்யேக 'காஸ்மெட்டிக் கைனகாலஜி' (Cosmetic Gynecology) மற்றும் உயர்தர மகப்பேறு மருத்துவப் பிரிவுக்கான தொடக்க விழா

சேலம் ஃபேர்லேண்ட்ஸ், பிருந்தாவன் சாலையில் இயங்கி வரும் புகழ்பெற்ற SKS மகளிர் நல மற்றும் கருத்தரிப்பு மையம் (SKS Women's Health Clinic & Fertility Center), பெண்களின் முழுமையான நல்வாழ்வை உறுதி செய்வதில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. பெண்களின் ஆரோக்கியம், தன்னம்பிக்கை மற்றும் அழகியல் ஆகியவற்றை மையமாகக் கொண்ட 'காஸ்மெட்டிக் கைனகாலஜி', மகப்பேறு மருத்துவம் மற்றும் மகளிர் நலனுக்கான பிரத்யேக மருத்துவப் பிரிவின் தொடக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில், SKS மருத்துவமனையின் தலைவர் திருமதி ஸ்ரீ வசந்தா, நிர்வாக இயக்குநர் டாக்டர் சுரேஷ் விஸ்வநாதன், இயக்குநர் திருமதி சோமா நந்தா சுரேஷ், தலைமை நிர்வாக அதிகாரி (CEO) டாக்டர் சில்பி மணி மற்றும் கருத்தரிப்பு மற்றும் மகளிர் நல மருத்துவர் கவிதா நாகராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர். புதிய மருத்துவப் பிரிவின் ரிப்பன் வெட்டும் நிகழ்வை, நிர்வாக இயக்குநரின் குழந்தைகளான ஷைலின் மற்றும் ஷனாயா ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர். இது குறித்து SKS மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் சுரேஷ் விஸ்வநாதன் கூறுகையில், "சென்னை மற்றும் கோயம்புத்தூர் போன்ற பெருநகரங்களில் கிடைக்கும் உலகத்தரம் வாய்ந்த சிகிச்சைகளைச் சேலம் மக்களுக்கும் இங்கேயே வழங்குவதே எங்கள் நோக்கமாகும். பெண்களுக்கு உடல் ஆரோக்கியம் மட்டுமல்லாது, மனரீதியான தன்னம்பிக்கையும் மிகவும் முக்கியமானது," என்று தெரிவித்தார். மேலும் காஸ்மெட்டிக் கைணகாலஜி மற்றும் மம்மி மேக் ஓவர், விரிவான கர்ப்பகால பராமரிப்பு, அதிக ஆபத்துள்ள கர்ப்ப கால பராமரிப்பு மற்றும் நவீன கருத்தரிப்பு சிகிச்சை முறைகள் குறித்து விரிவாக விளக்கமளித்தார் மருத்துவமனையில் நிர்வாக இயக்குனர்.
சேலம் ஜோயாலுக்காஸ் ஷோரூமில்,  ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 13, 2026 வரை 'பில்லியன்ஸ் டைமண்ட் ஜூவல்லரி ஷோ' (Brilliance Diamond Jewellery Show)

சேலம் ஜோயாலுக்காஸ் ஷோரூமில், ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 13, 2026 வரை 'பில்லியன்ஸ் டைமண்ட் ஜூவல்லரி ஷோ' (Brilliance Diamond Jewellery Show)

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

சேலம் ஜோயாலுக்காஸ் ஷோரூமில்,  ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 13, 2026 வரை 'பில்லியன்ஸ் டைமண்ட் ஜூவல்லரி ஷோ' (Brilliance Diamond Jewellery Show)

சேலம் உலகின் மிகவும் விரும்பப்படும் நகை நிறுவனமான ஜோயாலுக்காஸ், தனது சேலம் கிளையில் 'பில்லியன்ஸ் டைமண்ட் ஜூவல்லரி ஷோ' மூலம் சேலம் மக்களைக் கவரத் தயாராகிவிட்டது. ஆகஸ்ட் 28, 2026 அன்று தொடங்கும் இந்த மிகவும் எதிர்பார்க்கப்படும் கண்காட்சி, வைர நகைகளின் நேர்த்தியான கலைத்திறன், அழகு மற்றும் புதுமை ஆகியவற்றின் மறக்க முடியாத கொண்டாட்டமாக அமையவுள்ளதது. திருமணங்களுக்கான பிரம்மாண்டமான நகை சேகரிப்புகள் முதல் அன்றாட பயன்பாட்டிற்கான நவீன வைர நகைகள் வரை, இந்தக் கண்காட்சி காலத்தால் அழியாத பாரம்பரியம் மற்றும் நவீன அழகியல் ஆகியவற்றின் சங்கமத்தை வழங்குகிறது. இதில் உள்ள ஒவ்வொரு வடிவமைப்பும் ஒரு கலைப்படைப்பாகும்; இவை கண்காட்சி நடைபெறும் காலத்தில் மட்டுமே கிடைக்கும். இது குறித்து ஜோயாலுக்காஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஜோய் ஆலுக்காஸ் கூறியதாவது: "வைரங்கள் மீதான எங்கள் பெருமை மற்றும் நகை வடிவமைப்பில் முழுமைக்கான எங்கள் அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்கு இடையேயான பிணைப்பை 'பில்லியன்ஸ் டைமண்ட் ஜூவல்லரி ஷோ' வெளிப்படுத்துகிறது. எங்கள் இதயத்தில் சேலத்திற்கு ஒரு சிறப்பான இடம் உண்டு. பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இந்தக் கண்காட்சி நடத்தப்படுகிறது. அழகு, தனித்துவம் மற்றும் சிறந்த கைவினைத்திறனைப் பிரதிபலிக்கும் பிரத்யேக வடிவமைப்புகளைக் கண்டறிய வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பை வழங்கும். இந்தச் சிறப்பான நிகழ்வைக் கொண்டாடும் விதமாக, கண்காட்சிக் காலத்தில் ₹1 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்பிலான வைர நகைகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவச தங்க நாணயம் வழங்கப்படும்; இது அவர்களின் ஷாப்பிங் அனுபவத்தை மேலும் சிறப்பாக்கும். 'பில்லியன்ஸ் டைமண்ட் ஜூவல்லரி ஷோ' சேலம் ஷோரூமில் மட்டுமே செப்டம்பர் 13, 2026 வரை நடைபெறும். ஆடம்பரம், அன்பு மற்றும் காலத்தால் அழியாத அழகின் கதைகளைச் சொல்லும் வைரங்களின் அற்புதமான உலகத்தைக் காணவும் ரசிக்கவும் அனைத்து வாடிக்கையாளர்களும் அன்புடன் அழைக்கப்படுகிறார்கள். கவர்ச்சியின் கதையைச் சொல்லும் வைர நகைகளின் அற்புதமான உலகத்திற்கு அனைவரையும் வரவேற்கிறோம் என்றும் தெரிவித்தார்.

வியாழன், 27 ஆகஸ்ட், 2026

சேலத்தில் திருமணிமுத்தாற்றின் புனிதத்தை மீட்டெடுக்க, சேலம் மாவட்ட அனைத்து திருக்கோவில் பாதுகாப்பு சங்கத்தினர் சிறப்பு வழிபாடு.

சேலத்தில் திருமணிமுத்தாற்றின் புனிதத்தை மீட்டெடுக்க, சேலம் மாவட்ட அனைத்து திருக்கோவில் பாதுகாப்பு சங்கத்தினர் சிறப்பு வழிபாடு.

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

சேலத்தில் திருமணிமுத்தாற்றின் புனிதத்தை மீட்டெடுக்க, சேலம் மாவட்ட அனைத்து திருக்கோவில் பாதுகாப்பு சங்கத்தினர் சிறப்பு வழிபாடு.

சேலம் மாநகரின் ஊடாகப் பாய்ந்து, நாமக்கல் மாவட்டம் நஞ்சை எடையார் கிராமத்தில் காவிரியில் கலக்கும் ஒரு முக்கிய துணை நதியே திருமணிமுத்தாறு ஆகும். சேலம் மாவட்டம் சேர்வராயன் மலைத்தொடர் ( ஏற்காடு மலை ) பகுதியில் திருமணிமுத்தாறு உருவாகிறது. 
சேலம்  மாநகர் மற்றும் பல ஊர்கள் வழயாகப் பாய்ந்து, சுமார் 120 கிலோமீட்டர் தூரப் பயணத்திற்குப் பிறகு நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே நஞ்சை எடையார் என்னும் இடத்தில் காவிரி ஆற்றில் கலக்கிறது. வரலாற்றுச் சிறப்பு மிக்க  திருமணிமுத்தாற்றின் கரையில் புகழ்பெற்ற, கோட்டை அருள்மிகு ஸ்ரீ பெரிய மாரியம்மன்,  உத்தமசோழபுரம் கரபுரநாதசுவாமி கோயில் போன்ற பழமையான வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில்கள் அமைந்துள்ளன. 
இப்பகுதியில் உள்ள சாய ஆலை மற்றும் தொழிற்சாலைக் கழிவுகள் ஆற்றில் கலப்பதால், மழைக்காலங்களிலும் சரி, மற்ற காலங்களிலும் ஆற்று நீர் மாசடைந்து வெள்ளை நிற நுரை பொங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் நிலத்தடி நீர் மாசடைவதுடன், பொதுமக்களின் சுகாதாரமும் பாதிக்கப்படுவதாகக் கிராம மக்கள் தொடர் வேதனை தெரிவித்து வருகின்றனர். இதைக் கட்டுப்படுத்த பல்வேறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கைகளும் மனுக்களும் அளித்து வருகின்றனர். 
இந்த நிலையில் திருமணிமுத்தாற்றின் பெருமைகளை மீட்டெடுக்கவும், ஆட்டின் புனித தன்மையை காக்கவும் மற்றும் இனி வரும் காலங்களில் குப்பையில் மற்றும் கழிவுகளை கொட்டுவதை தடுத்து நிறுத்தவும் சேலம் மாவட்ட திருக்கோவில் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் வளாகத்தில் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சங்கத்தின் மாநில இணை செயலாளர் சண்முகவேல் தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு வழிபாட்டில் மாவட்ட செயலாளர் சண்முகம், மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சத்ய சுதன், கோக் ரவி, மாவட்டத் துணைச் செயலாளர் நேதாஜி, மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் சர்மிளா சரவணன், கவிதா பேபி ரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணிமுத்தாற்றின் கரையில் ஆகம விதிமுறைப்படி அகழ்விளக்குகளை இயக்கியும் கைகளில் அகல் விளக்குகளை ஏற்றியும் புனித வழிபாட்டில் ஈடுபட்டனர். 
இதனை அடுத்து சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதங்களும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வு குறித்து அனைத்து திருக்கோவில் பாதுகாப்பு சங்கத்தின் மாநில இணை செயலாளர் சண்முகவேல் நமது கூறுகையில், 
பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளைக் கொண்டது இந்த மணிமுத்தாறு என்றும் இந்த புனித ஆற்றில் முத்து குளித்து எடுக்கப்பட்ட முத்து இன்றும் சுகவனேஸ்வரர் திருக்கோவிலில் உள்ள ஸ்வர்ணாம்பிகை அம்மனின் மூக்கில் இருப்பதாகவும் இப்படி பெருமைமிகு முத்தாறு இன்று இந்த பகுதியில் உள்ள மார்க்கெட்டில் மிகுதியாகும் கழிவுகளை கொட்டும் குப்பை தொட்டியாகவும் சாயக்கழிவு நீர் கலந்து மாசடைந்து துர்நாற்றம் வீசும் பகுதியாக மாறியுள்ளது வேதனைக்குரியதாக உள்ளது என்றும் குறிப்பிட்டார். மேலும் இந்த புனித ஆரை பாதுகாக்க இனிவரும் காலங்களில் மணிமுத்தாறு செல்லும் பகுதியில் உள்ள மார்க்கெட் வர்த்தக வணிக நிறுவனங்களில் இருந்து கொட்டப்படும் கழிவுகளை தடுக்க அமைப்பின் சார்பில் முயற்சி மேற்கொள்ள உள்ளதோடு இது சம்பந்தமாக கூடிய விரைவில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு வழங்க உள்ளதாகவும் சண்முகவேல் தெரிவித்தார்.