S.K.சுரேஷ்பாபு.
மேகதாது விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் அனைத்து கட்சி கூட்ட வேண்டும். விவசாய சங்க பிரதிநிதிகளின் கருத்துகளை கேட்டு அதன் அடிப்படையில் தமிழகத்தின் உரிமையை கர்நாகாவிடம் இருந்து நிலைநாட்ட வேண்டும். தமிழகம் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி தமிழக முதல்வருக்கு வலியுறுத்தல்.
தமிழக விவசாயிகளின் குறிப்பாக டெல்டா மாவட்ட விவசாய பெருங்குடி மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் மீறி மேகதாதுவில் அணை கட்டிய தீருவேன் என்பது கர்நாடக அரசின் கொள்கை முடிவாகவே இருந்து வருகிறது. இது தொடர்பாக தமிழக அரசின் சார்பில் மத்திய அரசிடம் புகார் அளித்தும் கை விரித்த நிலையில் உச்ச நீதிமன்றம் மேகதாது விவகாரம் தொடர்பாக தமிழக அரசுக்கு ஆதரவாக தீர்ப்பு அளித்தது ஆனால் அந்தத் தீர்ப்பினை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவகுமார் மேகதாதில் அணை கட்டிய தீருவோம் என்பதில் உறுதியாக இருந்து அதற்கான முன்னேற்பாடு பணிகளையும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். கர்நாடக முதல்வரின் இந்த செயல் தமிழக விவசாயிகளிடையே மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்திய எடுத்து தமிழக கர்நாடக எல்லையான ஓசூர் பகுதியில் நாள்தோறும் பதற்றமான சூழலே இருந்து வருகிறது.
இதனையே இந்த விவகாரம் தொடர்பாக உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி ஒவ்வொரு நாளும் கர்நாடகா அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை அறிவித்து அதனை முன்னெடுத்தும் நிகழ்த்தி வருகின்றார். இது ஒரு புறம் இருக்க இன்று தமிழக கர்நாடக எல்லையில் கர்நாடக விவசாயிகள் மேற்கொள்ளும் போராட்டத்தின் காரணமாக தமிழகத்திலிருந்து கர்நாடகா செல்லும் பேருந்துகள் அனைத்தும் ஓசூர் வரை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இது ஒரு புறம் இருக்க, மேதாது அணை விவகாரம் தொடர்பாகவும் காவிரியில் தமிழகத்திற்கு உண்டான பங்கீட்டு நீரை வழங்குவது தொடர்பாக ஆகஸ்ட் 3ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்த கர்நாடகாவிற்கு வருமாறு தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை ஏற்று தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆகஸ்ட் 3ஆம் தேதி கர்நாடக மாநில தலைநகர் பெங்களூர் செல்ல உள்ளதாக தமிழக அமைச்சரும் உறுதிப்படுத்தினார். இந்த நிலையில், மேகதாது விவகாரம் தொடர்பாக, கர்நாடக முதல்வரை தமிழக முதல்வர் சந்திக்கக் கூடாது என்று தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக தமிழக எதிர் கட்சி தலைவர், மு.க. ஸ்டாலின், பாமக தலைவர் அன்புமணி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன், விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர் பாண்டியன், நாம் தமிழர் கட்சி நிர்வாகி உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்த வண்ணம் உள்ளனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு எதுவும் செய்யாத நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் மீறி, மேகதாதுவில் அணை கட்டியே தீருவேன் என்று ஒற்றை காலில் நிற்கும் டி.கே. சிவக்குமாரிடம் என்ன பேச வேண்டி உள்ளது என்பது அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களின் ஒட்டுமொத்த கேள்வியாகவே உள்ளது. இரு மாநில முதல்வர்கள் சந்திப்பு நடைபெறக்கூடாது, இது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக முதல்வர் கூட்ட வேண்டும் என்று கோரிக்கையும் எழுந்துள்ளது.
இது குறித்து உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி தெரிவிக்கையில், இந்த விவகாரம் சம்பந்தமாக தமிழக முதல்வர் அவர்கள் அனைத்து கட்சி கூட்டம் கூட்டி, ஒட்டுமொத்த தமிழக விவசாயிகளின் கருத்துகளை கேட்டு, அதன் அடிப்படையில் தமிழகத்தின் உரிமையை கர்நாகாவிடம் நிலைநாட்ட வேண்டும் என்றும் தமிழக விவசாயிகள் சங்க தலைவர் வேலுச்சாமி வலியுறுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் தமிழக விவசாயிகளின் நலன் மற்றும் கர்நாடக முதல்வரின் செயல்பாடு குறித்தும் பல்வேறு கோரிக்கை அடங்கிய மனுவை நேற்றைய தினம் தமிழக விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரிடம் வழங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.


