Latest

திங்கள், 3 ஆகஸ்ட், 2026

சேலத்தில் ஆடிப்பெருக்கு நன்னாளில் அம்மனுக்கு தாலி மாற்றி சிறப்பு வழிபாடு.. அங்காளம்மனின் அதி தீவிர பக்தரின் சிறப்பு வழிபாட்டால் பக்தர்கள்  நெகிழ்ச்சி....

சேலத்தில் ஆடிப்பெருக்கு நன்னாளில் அம்மனுக்கு தாலி மாற்றி சிறப்பு வழிபாடு.. அங்காளம்மனின் அதி தீவிர பக்தரின் சிறப்பு வழிபாட்டால் பக்தர்கள் நெகிழ்ச்சி....

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

சேலத்தில் ஆடிப்பெருக்கு நன்னாளில் அம்மனுக்கு தாலி மாற்றி சிறப்பு வழிபாடு.. அங்காளம்மனின் அதி தீவிர பக்தரின் சிறப்பு வழிபாட்டால் பக்தர்கள்  நெகிழ்ச்சி....

ஆடிப்பெருக்கு (ஆடி 18) நன்னாளில் சுமங்கலிப் பெண்கள் தாலிக் கயிறு மாற்றுவது கணவரின் ஆயுளைக் கூட்டி, மாங்கல்ய பலத்தை பலமடங்கு பெருக்கும் என்பது முதன்மையான ஆன்மீக நம்பிக்கையாகும். இந்த சுபநாளில் செய்யப்படும் காரியங்கள் அனைத்தும் பலமடங்கு பெருகும் என்பதால், தாலி பிரித்துக் கோர்க்கும் வைபவத்திற்கு இந்நாள் மிகவும் உகந்ததாகக் கருதப்படுகிறது.
தாலி மாற்றும் வைபவத்தின் ஆன்மீக முக்கியத்துவம் மாங்கல்ய பலம் பெருகுதல். ஆடி 18 அன்று நதிக்கரைகளிலோ அல்லது வீட்டிலோ வழிபாடுகள் செய்து தாலிக்கயிறு மாற்றுவதால் கணவருக்கு நீண்ட ஆயுளும், குடும்பத்திற்கு வற்றாத செல்வமும் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த நிலையில் நவகிரகங்களுக்கும் நாயகிகளான அங்காளம்மன், மாரியம்மன், மற்றும் காளியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு இந்த புனித நாளில் தாலி மாற்றி சிறப்பு பூஜை மேற்கொண்ட சேலம் கிச்சிபாளையம் கொறகூடை அங்கு அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் திரு வீட்டில் இதற்கான சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
திருக்கோவில் மற்றும் திருக்கோவில் வீட்டின் நிறுவனரும் மிகச்சிறந்த ஆன்மீகவாதியும் தீவிர சிவன் அடியாரான பன்னீர்செல்வம் சுவாமி ஜி ஏற்பாட்டின் பேரில், முன்னதாக திருக்கோவில் வீட்டில் மிகப் பிரம்மாண்டமான முறையில் அலங்கரிக்கப்பட்டிருந்த அம்மனுக்காக ஐந்துக்கும் மேற்பட்ட சுமங்கலி பெண்கள் மங்களப் பொருட்களை ஊர்வலமாக எடுத்து வந்து சிறப்பு பூஜைகளை மேற்கொண்டனர். தொடர்ந்து திருக்கோவிலில் சிவாச்சாரியார் பன்னீர்செல்வம் தலைமையில், ஆடிப்பெருக்கு திருநாளில் சுமங்கலி பெண்களுக்கு தாலி மாற்றும் வைபவம் ஒருபுறம் இருந்தாலும் அம்மனுக்கே திருமாங்கல்யத்தை மாற்றி சிறப்பு பூஜை மேற்கொண்டார். இந்த மாங்கல்யம் மாற்றும் சிறப்பு பூஜைகளுக்கான அனைத்து சேவைகளும் முடிந்ததன் பிறகு மகா தீபாராதனை காட்டும் போது திருக்கோவில் வீட்டில் உள்ள அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டு இருள் சூழ்ந்த நேரத்தில் மகாதேவாரனை காட்டப்பட்டது பக்தர்களிடையே மிகப் பெரிய ஒரு பரவசத்தை ஏற்படுத்தியது என்றே கூறலாம்.
இதனை அடுத்து இந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் மங்களப் பொருட்களுடன் பிரசாதங்களும் வழங்கப்பட்டன. இதுகுறித்து சேலம் கிச்சிபாளையம் கொறகூடை அங்கு அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் தலைவர் பன்னீர்செல்வம் நம்மிடையே கூறுகையில், வழக்கமாக சுமங்கலி பெண்கள் மேற்கொள்ளும் இந்த பூஜை ஒரு புறம் இருந்தாலும் நவகிரகங்களின் நாயகிகள் ஆக விளங்கும் அம்மனுக்கே திருமாங்கல்யம் மாற்றி சிறப்பு பூஜை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இனிவரும் காலங்களில், தமிழகத்தில் விவசாயத் தொழில் முற்றிலும் பொய்த்துப் போகாமல் இருக்க நல்ல மழை பெய்து எப்பொழுதும் வற்றாத காவிரி ஆறாக மாறி தமிழக விவசாயிகளின் நலனை பெரிதும் பாதுகாக்கும் என்பதில் ஐயமில்லை என்றும் குறிப்பிட்டார்.

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2026

காவிரி தாயே வாழ்க வளமுடன்...என ஆடிப்பெருக்கு நல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி.

காவிரி தாயே வாழ்க வளமுடன்...என ஆடிப்பெருக்கு நல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி.

நாமக்கல், 
S.K. சுரேஷ்பாபு. 

காவிரி தாயே வாழ்க வளமுடன்...என ஆடிப்பெருக்கு நல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி. 

நதிகளை காப்போம்,  விவசாய பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை காப்போம் என்ற நல்ல நோக்குடன், தமிழக விவசாய பெருங்குடி மக்களுக்கு தனது ஆடிப்பெருக்கு நல் வாழ்த்துக்களை உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ஆர். வேலுச்சாமி செய்தி குறிப்பின் வாயிலாக தெரிவித்துள்ளார்.
அதில் காவிரி தாயே வாழ்க வளமுடன் என்று தொடங்கியுள்ள அவர் நதிநீர் உழவர்  உரிமை என்றும் நீரை தடுக்காதே விவசாயிகளை வாட்டாதே காவிரியை காப்போம்,  விவசாய பெருங்குடி மக்களின் வாழ்க்கை வாழ்வாதாரத்தை காப்போம் என்று பதிவிட்டுள்ள வேலுச்சாமி, தமிழ் மக்களின் பண்பாட்டோடும் உழவர் பெருமக்களின் வாழ்வியலோடும் இரண்டறக் கலந்த புனித நாளான ஆடிப்பெருக்கு நல் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் தமிழக விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் என்பதில் பெருமகிழ்ச்சி அடைவதாகவும், காவிரி உள்ளிட்ட நதிகள் பெருக்கெடுத்து ஓடுவதைப் போல விவசாய பெருங்குடி மக்களின் வாழ்விலும் மகிழ்ச்சியும் வளமும் பெருகிட வேண்டும் என தனது வாழ்த்துச் செய்தியில் பகிர்ந்துள்ளார் வேலுச்சாமி. 
ஆறுகளில் பெருகிவரும் நீரை வரவேற்கும் விதமாக மேற்கொள்ளப்படும் நீர் வழிபாடான  ஆடிப்பெருக்கு விழா காவிரி படுகைகள் அனைத்தும் வறண்ட நிலையில் கலை இழந்து கொண்டாட்டம் என்பதும்   ஆற்றில் தண்ணீர் இல்லாததால் குளக்கரைகளில்  ஆடிப்பெருக்கை முன்னிட்டு பெண்கள் வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 31 ஜூலை, 2026

மேகதாது மற்றும் காவிரி நீர் பங்கீட்டு விவகாரம். தமிழகத்திற்கு துரோகம் இழைத்து வரும் கர்நாடக அரசை கண்டித்து வரும் 13-ஆம் தேதி கர்நாடகாவில் இருந்து தமிழகம் வழியாக செல்லும் அனைத்து அத்தியாவசிய சேவைகளும் தடுத்து நிறுத்தும் மிகப்பெரிய போராட்டம். தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி மிகக் கடுமையான எச்சரிக்கை.

மேகதாது மற்றும் காவிரி நீர் பங்கீட்டு விவகாரம். தமிழகத்திற்கு துரோகம் இழைத்து வரும் கர்நாடக அரசை கண்டித்து வரும் 13-ஆம் தேதி கர்நாடகாவில் இருந்து தமிழகம் வழியாக செல்லும் அனைத்து அத்தியாவசிய சேவைகளும் தடுத்து நிறுத்தும் மிகப்பெரிய போராட்டம். தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி மிகக் கடுமையான எச்சரிக்கை.

நாமக்கல்,
S.K. சுரேஷ்பாபு.

மேகதாது மற்றும் காவிரி நீர் பங்கீட்டு விவகாரம். தமிழகத்திற்கு துரோகம் இழைத்து வரும் கர்நாடக அரசை கண்டித்து வரும் 13-ஆம் தேதி கர்நாடகாவில் இருந்து தமிழகம் வழியாக செல்லும் அனைத்து அத்தியாவசிய சேவைகளும் தடுத்து நிறுத்தும் மிகப்பெரிய போராட்டம். தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி மிகக் கடுமையான எச்சரிக்கை.

தமிழகத்திற்கு தொடர் துரோகத்தை இழைத்து வரும் கர்நாடக அரசுக்கு எதிராக உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி மிகக் கடுமையான எச்சரிக்கை அறிக்கையினை வெளியிட்டுள்ளார். 
அந்த அறிக்கையில், கர்நாடகா அரசு இந்த ஆண்டுக்கான காவிரி உரிமை பங்கீட்டு தண்ணீரை தமிழ்நாட்டிற்கு தர மறுக்கிறது. அதேபோல் காவிரியின் குறுக்கே மேகதாட்டில் அணை கட்டும்  பணி குறித்தத முயற்சியை  கர்நாடகா அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. கர்நாடகா அரசு தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி உரிமை பங்கீட்டு உயிர் தண்ணீரை தரததால் தமிழகத்தில் கடுமையான வறட்சியின் காரணமாக தொழில் வளம் இல்லாமல் வளர்ச்சி  முற்றிலும் முடங்கும்  வாய்ப்பு   உள்ளது.டெல்டா விவசாயிகளுக்கு இந்த ஆண்டு பாசன வசதி இல்லாதால் ஒருகோடி லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.  தமிழகத்தில் உள்ள 22 மாவட்டத்தில் இனிவரும் காலங்களில் குடிநீர் தட்டுபாடு ஏற்படும் அபாயம் உருவாகும். காவிரி ஆயக்கட்டு பாசன விவசாயிகள் மற்றும் காவிரி ஊற்றுநீர் பாசன விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாசன வசதி இல்லாமால்  தற்போது முடங்கிப்போய் உள்ளது .
தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி உரிமை உயிர் பங்கீட்டு தண்ணீரை கர்நாடகா அணைகளில் இருந்து கர்நாடகா அரசை விடுவிக்க கோரி காவிரி ஒழுங்காற்றுகுழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்தும் அந்த உத்தரவை கர்நாடகா அரசு செய்படுத்த தொடர்ந்து மறுத்து வருகிறது.
தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படும் கர்நாடகா அரசுக்கு உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் எடுத்துறைபது என்னவென்றால் கர்நாடகாவின் தொழில் வளம் வளர்சிக்காக தமிழ்நாட்டில் உற்பத்தி செய்துதான் மின்சாரம் கர்நாடகா செல்கிறது அதேபோல் தமிழ்நாட்டின் வழியாகத்தான் கேரள மாநிலத்தில் இருந்து  எரிவாயு  செல்கிறது. 
கர்நாடகா மாநிலம் வளர்ச்சி நோக்கி செல்வதற்கு மிகப்பெரிய பங்கு என்னவென்றால் சென்னை துறைமுகம் அதேபோல் தூத்துக்குடி துறைமுகம் மற்றும் கேரள மாநிலத்தில் உள்ள கொச்சின் துறைமுகம் ஆகியவைகளில் கர்நாடகா உற்பத்தி செய்யும்  பொருட்கள் கனரக வாகனங்கள் மற்றும் சரக்கு ரயில்கள் மூலம்தான் தமிழகம் வழியாக துறைமுகம் செல்ல வேண்டிய நிலைமை கர்நாடகாவிற்கு உள்ளது. இதை அங்கு கன்னட அரசியல் கட்சி தலைவர்கள் உணராமல் தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி உரிமை உயிர் பங்கீட்டு தண்ணீரை கர்நாடகா அணைகளில் தற்போது போதிய தண்ணீர் இருப்பு வைத்துக்கொண்டு தவறான முறையில் கர்நாடகாவில் கடும் வறட்சி என்று தவறான தகவல்  கூறி  மறுப்பதாலும் தமிழ்நாட்டின் உரிமையை முற்றிலும் பறிக்கும் திட்டத்தோடும்,  மேலும் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டில் அணை கட்டியே தீருவோம் என்று கூறி முழக்கம்மிட்டு கர்நாடகாவில் உள்ள அரசியல் கட்சிகள் தமிழ்நாட்டிற்கு எதிராக வருகின்ற 13 ந் அன்று கர்நாடகாவில் பந்து என்று அறிவித்துள்ளது. 
இந்த நிலையில் அதே நாளில் வருகின்ற 13 ந் தேதி முதல் கர்நாடகாவில் இருந்து சரக்கு ரயில் மூலம் தமிழகம் வழியாக துறைமுகம் பகுதிக்கு ஏற்றுமதி செய்ய செல்லும் சரக்கு ரயில்கள் மற்றும்  வெளிநாட்டில் இருந்து துறைமுகம் வழியாக கர்நாடகவிற்கு செல்லும் சரக்குகள் மற்றும் கர்நாடகா மாநிலம் வளர்சிக்காக செல்லும் சரக்கு ரயில்கள் மேலும் தமிழகம்  வழியாக பயணிகளை ஏற்றி செல்லும் விரைவு ரயில்கள் தமிழ்நாட்டில் இருந்து உற்பத்தி செய்து கர்நாடகா செல்லும் மின்சாரம் கொச்சின் கேரள மாநிலத்தில் இருந்து தமிழகம் வழியாக கர்நாடகா செல்லும் எரிவாயு ஆகியவற்றை தொடர்ந்து கர்நாடகாவிற்கு செல்ல விடாமல் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகள் சங்க அமைப்புக்கள் மற்றும் விவசாயிகளையும் மிகப்பெரிய அளவில் ஒன்று திரட்டி கர்நாடகாவிற்கு எதிராக வருகின்ற 13 ந் தேதி அன்று முதல் தமிழகம் தழுவிய மிகப்பெரிய தொடர் போராட்டம் நடத்தப்படும் என உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கர்நாடகா அரசுக்கு இந்த அறிக்கையின் மூலம் எச்சரிக்கை விடுக்கிறேன்.

வியாழன், 30 ஜூலை, 2026

கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என கை விரிப்பு.கர்நாடகா அரசு மேல் முறையீடு செய்வதால் எந்த ஒரு பலனும் இல்லை,.  தமிழ்நாடு அரசு தான் விரைந்து உச்சநீதிமன்றம் நாட வேண்டும். டி.கே.சிவகுமாருக்கு தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி பதிலடி.

கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என கை விரிப்பு.கர்நாடகா அரசு மேல் முறையீடு செய்வதால் எந்த ஒரு பலனும் இல்லை,. தமிழ்நாடு அரசு தான் விரைந்து உச்சநீதிமன்றம் நாட வேண்டும். டி.கே.சிவகுமாருக்கு தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி பதிலடி.

நாமக்கல்,
S.K.சுரேஷ்பாபு.

கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என கை விரிப்பு.கர்நாடகா அரசு மேல் முறையீடு செய்வதால் எந்த ஒரு பலனும் இல்லை,.  தமிழ்நாடு அரசு தான் விரைந்து உச்சநீதிமன்றம் நாட வேண்டும். டி.கே.சிவகுமாருக்கு தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி பதிலடி.

மேகதாது விவகாரம், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காதது, மத்திய அரசிற்கு ஒத்துழைக்காதது, காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை உதாசீனப்படுத்துவது என நாளுக்கு நாள் கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் அவர்களின் போக்கு சொல்லொனா துயரத்தை தமிழக விவசாய பெருங்குடி மக்களுக்கு ஏற்படுத்தி உள்ளது என்பதை யாராலும் மறுத்து விடவும் மறந்து விடவும் முடியாது. அந்த வகையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தொடர் உத்தரவுகளை உதாசீனப்படுத்தும் கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமாரின் செயலால் பாய்ந்தோடிய காவிரி, மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்டங்கள் வரை பாலைவனமாக காட்சி அளித்து வருகின்றன என்பது வேதனையின் உச்சம். 
இது காவிரியை மட்டுமே நம்பி முப்போகங்களை விளைவித்து வரும் டெல்டா மாவட்ட விவசாய பெருங்குடி மக்களின் மனதை நொறுக்கி விட்டு உள்ளது என்றே கூறலாம். இந்த விவகாரம் தொடர்பாக உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி கர்நாடக அரசின் செயலுக்கு அவ்வப்போது எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களையும் மேற்கொண்டு வருகின்றார்.
இந்த நிலையில், ஏற்கனவே காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு  தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து இருந்த நிலையில்,  கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என கை விரித்த நிலையில்,  மீண்டும் இன்று காவிரி மேலாண்மை ஆணைய அவசர கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், காவிரி மேலாண்மை ஆணையம் அடுத்த கட்ட உத்தரவு பிறப்பிக்கும் என்ற எதிர்பார்ப்பு தமிழக விவசாய பெருங்குடி மக்கள் இடையே ஒட்டுமொத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், கர்நாடக முதல்வர் இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்து இருப்பது தமிழக விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது மட்டும் நிதர்சனம். 
நிலைமை இப்படி இருக்கு கர்நாடக முதலமைச்சரின் இந்த அறிவிப்பிற்கு நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி பதிலடி கொடுத்துள்ளதோடு தமிழக அரசுக்கு சில வழிமுறைகளையும் கூறியுள்ளார். 
அதில், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை மதிக்காமல், அதனை செயல்படுத்தாமல், கர்நாடகா அரசு மேல் முறையீடு செய்வதால் எந்த ஒரு பலனும் இல்லை என்று குறிப்பிட்டுள்ள தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி, தமிழக அரசு  தான் விரைந்து உச்சநீதிமன்றம் நாட வேண்டும் என்றும் வழிமுறை கூறியுள்ளார்.
தமிழக விவசாயிகளின் நலனுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கும் கர்நாடக அரசை கண்டித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் சங்க தலைவர் தொல், திருமாவளவன் உள்ளிட்டோர் தங்களது கண்டனத்தை பதிவிட்டு உள்ள நிலையில், வரும் 3-ம் தேதி பெங்களூர் செல்ல உள்ள நிலையில் தமிழகத்தில் திமுக சார்பில் கர்நாடகாவிற்கு எதிராகவும் தமிழக அரசுக்கு எதிராகவும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் போராட்ட அறிவிப்பை அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கர்நாடக விளைப் பொருட்களை ஏற்றி வரும் லாரிகளை தடுத்து நிறுத்தும் போராட்டத்திற்கு, காவல்துறை அனுமதி மறுக்கப்பட்ட நிலையில்,  சாலையை மறித்து  ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற  தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுசாமியை போலீசார் கைது ஆக சொல்லி வற்புறுத்தியதால் பரபரப்பு.

கர்நாடக விளைப் பொருட்களை ஏற்றி வரும் லாரிகளை தடுத்து நிறுத்தும் போராட்டத்திற்கு, காவல்துறை அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், சாலையை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுசாமியை போலீசார் கைது ஆக சொல்லி வற்புறுத்தியதால் பரபரப்பு.

நாமக்கல்,
S.K. சுரேஷ்பாபு. 

கர்நாடக விளைப் பொருட்களை ஏற்றி வரும் லாரிகளை தடுத்து நிறுத்தும் போராட்டத்திற்கு, காவல்துறை அனுமதி மறுக்கப்பட்ட நிலையில்,  சாலையை மறித்து  ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற  தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுசாமியை போலீசார் கைது ஆக சொல்லி வற்புறுத்தியதால் பரபரப்பு. 
 
கர்நாடகா அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டில் அணை கட்டி தமிழ்நாட்டின் உரிமை பங்கீட்டு தண்ணீரை தடுத்து நிறுத்தும் முயற்சிக்கு கர்நாடகா அரசுக்கு பதிலடி கொடுக்கும் வகையில்  கர்நாடாகாவில் இருந்து உற்பத்தி செய்து வரும் பூக்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் தானிய வகைகள் தமிழ்நாட்டில் விற்பனை செய்வதற்காகவும் மற்ற தேவைக்கா வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிக்காக பொருட்களை கேரள மாநிலம் கொச்சின் துறைமுகம் கொண்டு வரும் வாகனங்களை தமிழ்நாட்டில் தடுத்து நிறுத்துவோம் என  உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழ்நாட்டில் போராட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது.

        ( கோப்பு புகைப்படம் )

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி அவர்கள் தலைமையில் இன்று நடைபெற இருந்த போராட்டத்திற்கு, காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தமிழக விவசாயிகளின் உரிமையை பாதுகாக்க, சாலையை மறித்து ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றனர். 
தமிழக உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுசாமி உட்பட அங்கு திரண்டிருந்த விவசாய பெருங்குடி மக்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி,  போலீசார் கைது ஆக சொல்லி வற்புறுத்தியதால் சம்பவ பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு காணப்பட்டது. இதனை அடுத்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜய ராகவன், துணை காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் ( பொறுப்பு ) தலைமையில் போலீசார் பாதுகாப்புக்காக நின்று இருந்த நிலையில்,  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துவிட்டு தமிழக விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவர் வேலுச்சாமி தலைமையிலான விவசாய பெருங்குடி மக்கள் அங்கிருந்து களைந்து சென்றனர். 
இதனால் பரமத்தி வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

புதன், 29 ஜூலை, 2026

சேலம் மாமன்ற கூட்டத்தில், திமுக மேயரால் தொடர்ச்சியாக அவமதிக்கப்படும் பெண் துணை மேயர் சாரதா தேவி மாணிக்கம். சேலம் மாநகர மேயர் இன் அநாகரிக செயல் குறித்து தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று புகார் அளிக்க உள்ளதாகவும் வேதனை.

சேலம் மாமன்ற கூட்டத்தில், திமுக மேயரால் தொடர்ச்சியாக அவமதிக்கப்படும் பெண் துணை மேயர் சாரதா தேவி மாணிக்கம். சேலம் மாநகர மேயர் இன் அநாகரிக செயல் குறித்து தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று புகார் அளிக்க உள்ளதாகவும் வேதனை.

சேலம், 
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் மாமன்ற கூட்டத்தில், திமுக மேயரால் தொடர்ச்சியாக அவமதிக்கப்படும் பெண் துணை மேயர் சாரதா தேவி மாணிக்கம். சேலம் மாநகர மேயர் இன் அநாகரிக செயல் குறித்து தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று புகார் அளிக்க உள்ளதாகவும் வேதனை.

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் துணை மேயருக்கான இருக்கையை கீழே இறக்கி போட்ட மேயரின் செயலை கண்டித்து கடந்த முறை நடைபெற்ற கூட்டத்தில் இரந்து துணை மேயர் திருமதி சாரதா தேவி மாணிக்கம் புறக்கணித்து வெளிநடப்பு செய்தார். இந்த நிலையில், காங்கிரஸ் நிர்வாகிகளுக்கான கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக துணைமேல் திருமதி சாரதா தேவி மாணிக்கம் சென்னை சென்றுள்ள நிலையிலும் கூட, இன்றும் சேலத்தில் நடைபெற்ற மாமன்ற இயல்பு கூட்டத்தில், பெண் துணை மேயர் என்றும் பாராமல், மாமன்றத்தின் மாண்பையும் மீறி சேலம் மாநகர மேயர் ராமச்சந்திரனின் தூண்டுதலின் பெயரில் மீண்டும் துணை மேயர் சாரதா தேவி மாணிக்கம் அவர்களின் நாற்காலி கீழே போடப்பட்ட அவலம். 
           ( பழைய புகைப்படம் )
           ( புதிய புகைப்படம் )
இதற்கு சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி உட்பட 3 மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். சேலம் மாநகராட்சி மேயரின் இந்த செயலுக்கு துணை மேயர் சாரதா தேவி மாணிக்கம் கடுமையான கண்டனம் தெரிவித்ததோடு இது சம்பந்தமாக, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் அவர்கள் மற்றும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று, சேலம் மேயர் மீது புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

செவ்வாய், 28 ஜூலை, 2026

நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பெற்று மாங்கனி மாநகருக்கு பெருமை சேர்த்த சிற்ப ஸ்தபதி. சேலம் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் சந்தித்து மரியாதை

நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பெற்று மாங்கனி மாநகருக்கு பெருமை சேர்த்த சிற்ப ஸ்தபதி. சேலம் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் சந்தித்து மரியாதை

சேலம், 
S.K. சுரேஷ்பாபு. 

நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பெற்று மாங்கனி மாநகருக்கு பெருமை சேர்த்த சிற்ப ஸ்தபதி. சேலம் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் சந்தித்து மரியாதை

சேலம் கன்னங்குறிச்சியை சார்ந்தவர் ராஜா என்கின்ற சிற்ப கலைஞர். இவர் பாலமுருகன் சிற்பக் கலைக்கூடம் என்ற பெயரில் அதே பகுதியில் ஸ்தாபனம் ஒன்றை நிறுவி கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, பஞ்சலோக சிலைகள், கோவில் திருப்பணிகள், கற்சிற்பங்கள், மரச் சிற்பங்கள் மேற்கண்ட சிற்பக்கலை சார்ந்த பணி வேலைகள் அனைத்து சிற்ப சாஸ்திர ஆகம விதிமுறைப்படி மேற்கொண்டு முதன்மை கலைஞராக தமிழக அளவில் திகழ்ந்து வந்தவர் என்ற பெருமைக்குரியவர் ராஜாஸ்தபதி. இவரது சிற்பக்கலை திருப்பணிகளை போற்றி ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு இந்திய திருநாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பெறுவதற்கு தேர்வு செய்யப்பட்டு அதற்கான அறிவிப்பையும் சமீபத்தில் வெளியிட்டது. 
அதன் அடிப்படையில் புது தில்லியில் நடைபெற்ற விழா ஒன்றில் இந்திய குடியரசுத் தலைவர் மேதகு த்ரௌபதி முர்மு  பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தார். இந்திய திருநாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பெற்று மாங்கனி மாநகரான சேலத்திற்கு பெருமை சேர்த்த மண்ணின் மைந்தர் ராஜா ஸ்தபதிக்கு கடந்த இரண்டு நாட்களாக சேலத்தில் மாணவரின் முக்கிய பிரமுகர்களும் உற்றார் உறவினர்களும் தொடர்ச்சியாக தங்களது வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் நமது செய்தி குழு நேரில் அவரை அணுகி வாழ்த்துக்களை தெரிவித்த போது, கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக சிற்ப கலை துறையில் என்னை சிறந்த மனிதராக தேர்ந்தெடுத்து அதற்கான பத்மஸ்ரீ விருதையும் அறிவித்து கௌரவித்த இந்திய குடியரசு தலைவருக்கும் பாரத பிரதமருக்கும் தன்னை தேர்வு செய்த தேர்வு குழுவினருக்கும் முதற்கண் தனது  நன்றியை உரித்துதாக்குவதாக தெரிவித்துக் கொண்ட அவர், இளைஞர்கள் மத்தியில் சிற்ப கலையை ஊக்குவிக்கும் வகையில் எதிர்காலத்தில் மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மட்டுமல்லாமல், தமிழகத்தில் நலிவடைந்த நிலையில் உள்ள சிற்பக் கலைஞர்களின் நலனை ஊக்குவிக்க அதற்கான திட்டங்களை வகுத்து அவர்களை காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கை இணையும் முன் வைத்தார்.
இந்த நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் சேலம் மேற்கு மாவட்ட தலைவர் சுசீந்திரகுமார், மாநில சிறப்பு செயற்குழு உறுப்பினர் அஸ்தம்பட்டி விஷ்ணுகுமார் மற்றும் தொழிலதிபர் ஜான் பால் உள்ளிட்டோர் மத்திய அரசின் விருது பெற்று சேலம் மாநகரக்கு பெருமை சேர்த்த மண்ணின்  மைந்தரை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். போற்றுதலுக்குரிய ஸ்தபதியை  பாராட்டுவது  முக்கிய பிரமுகர்களையும் கடந்து பள்ளி மாணக்கர்களும் நேரில் சந்தித்து வாழ்த்து கூற வயதில்லை என்றாலும் அவரிடம் ஆசி பெற்று சென்ற வண்ணம் உள்ளனர் என்பது மட்டும் நிதர்சனம்.