Latest

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2026

சேலம் இந்திய கைத்தறி தொழில்நுட்ப நிறுவனம் (IIHT) சார்பில் 12வது தேசிய கைத்தறி தின விழா சிறப்பாக நடைபெற்றது.

சேலம் இந்திய கைத்தறி தொழில்நுட்ப நிறுவனம் (IIHT) சார்பில் 12வது தேசிய கைத்தறி தின விழா சிறப்பாக நடைபெற்றது.

சேலம்,
S. K.சுரேஷ்பாபு.

சேலம் இந்திய கைத்தறி தொழில்நுட்ப நிறுவனம் (IIHT) சார்பில் 12வது தேசிய கைத்தறி தின விழா சிறப்பாக நடைபெற்றது.

சேலம், இந்திய கைத்தறி தொழில்நுட்ப நிறுவனம் (IIHT) சார்பில் 12வது தேசிய கைத்தறி தின விழா, இன்று (07.08.2026) சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
விழாவையொட்டி காலை 8.00 மணிக்கு, முனைவர் டாக்டர் பி. தென்னரசு அவர்கள் கைத்தறி தின விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணி சேலம் நகர சாலைகளில் நடைபெற்றது. இதில் மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் உற்சாகமாக பங்கேற்று, கைத்தறி நெசவாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கைத்தறி ஆடைகளின் முக்கியத்துவத்தையும், கைத்தறிப் பொருட்களை பயன்படுத்த வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தி விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பினர்.
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், தேசிய கைத்தறி விருது பெற்ற திரு. வி. மோகனசுந்தரம் (கோபிச்செட்டிபாளையம், ஈரோடு) மற்றும் மாநில கைத்தறி விருது பெற்ற திரு. கே. அப்புசாமி (சென்னிமலை, ஈரோடு) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். விருந்தினர்கள் மாணவர்கள் தயாரித்திருந்த சுவரொட்டி, கலை மற்றும் கைவினைப் பொருட்கள், துணி ஓவியம் ஆகிய கண்காட்சிகளை பார்வையிட்டு மாணவர்களை பாராட்டினர். இதனைத் தொடர்ந்து குத்துவிளக்கு ஏற்றுதல், மாணவர்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சி, கலைநிகழ்ச்சி, பேச்சுப்போட்டி மற்றும் பட்டிமன்றம் ஆகியவை நடைபெற்றன.
பின்னர் நடைபெற்ற விழாவில் பேராசிரியர் டாக்டர் ஜெ. பாலாஜி வரவேற்புரை வழங்கினார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முனைவர் டாக்டர் பி. தென்னரசு அவர்கள் தேசிய கைத்தறி தினத்தின் முக்கியத்துவம், கைத்தறி நெசவாளர்களின் பங்களிப்பு மற்றும் கைத்தறி தொழிலின் வளர்ச்சி குறித்து சிறப்புரையாற்றினார். தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் தங்களது அனுபவங்களையும், கைத்தறி தொழிலின் எதிர்கால வளர்ச்சி குறித்த கருத்துகளையும் மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.
இறுதியாக, இளநிலை விரிவுரையாளர் (ஜவுளித்துறை) திரு. பர்மார் தர்மேந்திர குமார் அவர்கள் நன்றியுரை வழங்கினார். தேசிய கீதத்துடன் 12வது தேசிய கைத்தறி தின விழா இனிதே நிறைவுற்றது.

வியாழன், 6 ஆகஸ்ட், 2026

சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோவில் ஆடி பெருவிழாவில் அம்மன் திருத்தேர் விழாவை ஒட்டி மாபெரும் அன்னதானம். அனைத்திந்திய இந்து திருக்கோவில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு மகா அன்னதானம்.

சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோவில் ஆடி பெருவிழாவில் அம்மன் திருத்தேர் விழாவை ஒட்டி மாபெரும் அன்னதானம். அனைத்திந்திய இந்து திருக்கோவில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு மகா அன்னதானம்.

சேலம், 
S.K. சுரேஷ் பாபு. 

சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோவில் ஆடி பெருவிழாவில் அம்மன் திருத்தேர் விழாவை ஒட்டி மாபெரும் அன்னதானம். அனைத்திந்திய இந்து திருக்கோவில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு மகா அன்னதானம். 

சேலத்தில் உள்ள எட்டு பட்டிகளுக்கும் காவல் தெய்வம், நவகிரகங்களின் நாயகி மற்றும் கிரகண காலங்களில் திருக்கோவில் நடையை அடைக்காமல் சிறப்பு பூஜை மேற்கொள்ளும் திருத்தலம் என்பன உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கிய பிரசித்தி பெற்ற சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் திருக்கோவில் ஆடி பெருவிழாவை முன்னிட்டு விழாவின் முக்கிய நிகழ்வான அம்மனின் திருத்தேர் ஊர்வலம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. 
விழாவினை ஒட்டி கோட்டை பெரிய மாரியின் திருத்தேர் விழா பவணியை காண வந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு மகா அன்னதானம் வழங்கும் நிகழ்வுக்கு அனைத்திந்திய இந்து திருக்கோவில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாநில இணை செயலாளர் வி கே ஆர் சண்முகவேல் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், சேலம் மாவட்ட செயலாளர் சண்முகம் முன்னிலை வகித்தார்.
இந்த மகா அன்னதான விழாவில், தேசியத் தலைவர் குருஜி அருள்வேலன், கௌரவ தலைவர்கள் சுவாமி இராமானந்தா மற்றும் ஸ்ரீலஸ்ரீ தண்டபாணி தேசிகர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, ஆடி பெருவிழாவில் சேலம் கோட்டை மாரி, சேலம் மாநகரின் முக்கிய வீதிகள் வழியாக பவனி வரும் திருத்தேர் விழாவினை காண வந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானங்களை வழங்கி மகிழ்ந்தனர். 
காலை 10:30 மணி அளவில் தொடங்கிய இந்த மகா அன்னதானம் பிற்பகல் 2 மணி வரை நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை அமைப்பின் சேலம் மாவட்ட செயலாளர் சண்முகம், மாநில மகளிர் அணி செயலாளர் ஷர்மிளா சரவணன், மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் செவ்வாய் ஜே கே சுதன், எஸ் எஸ் ரியல் எஸ்டேட் நிறுவனத்தை  சேர்ந்த சரவணன் மற்றும் விஸ்வநாதன் உள்ளிட்டோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மிகவும் சிறப்பாக செய்திருந்தனர்.
தமிழக  விவசாயிகளின் கோரிக்கையை முழுமையாக ஏற்று அறிவிப்பு வெளியிடாதது, தமிழக விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளதாக TVK அரசுக்கு தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி கருத்து.

தமிழக விவசாயிகளின் கோரிக்கையை முழுமையாக ஏற்று அறிவிப்பு வெளியிடாதது, தமிழக விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளதாக TVK அரசுக்கு தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி கருத்து.

நாமக்கல், 
S.K. சுரேஷ்பாபு. 

தமிழக  விவசாயிகளின் கோரிக்கையை முழுமையாக ஏற்று அறிவிப்பு வெளியிடாதது, தமிழக விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளதாக TVK அரசுக்கு தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி கருத்து. 

தமிழக வேளாண் பட்ஜெட்டை,  தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ஆனந்த் இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். சுமார் 2 மணி நேரம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்த நிலையில் எதிர்க்கட்சிகளான திமுக, அதிமுக மற்றும் தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர். இந்த நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புடன் பல்வேறு கோரிக்கைகளை ஏற்கனவே முன்வைத்து அதில் ஒரு கோரிக்கை கூட தமிழக அரசால் இந்த விவசாயிகளின் நிதிநிலை அறிக்கையில் இடம் பெறாதது குறித்து உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ஆர்.  வேலுச்சாமி தனது வரவேற்பு மற்றும் ஏமாற்றம் குறித்து அறிக்கையின் வாயிலாக பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், 
தமிழகத்தில் தவெக அரசின் 2026 -2027 ஆம் ஆண்டிற்கு உண்டான இடைக்கால வேளாண் நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த பட்ஜெட்டில்,  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சாக்கோட்டையில் இயற்கை வேளாண் கல்லூரி மற்றும் மாணவர்கள் பட்டையபடிப்பு வசதியும் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பும்,  கோவை மற்றும் திருச்சி பகுதியை மையமாக கொண்டு வேளாண் பொருட்களை பதப்படுத்தி ஏற்றுமதிக்கு அனுப்பும்  மண்டலம் உருவாக்கும் வகையில் அறிவிப்பு வெளியிட்டதை உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் வரவேற்கிறோம்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் தவெக  தமிழக விவசாயிகளுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதிப் படி கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4500/ம் நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3500/ ம்  வழங்கப்படும், கூட்டுறவு பயிர் கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும் என்பன பற்றிய எந்த அறிவிப்பும் இன்று நடைபெற்ற நிதிநிலை அறிக்கையில் இல்லை, மேலும் கூட்டுறவு பயிர் கடன் வழங்க கடந்த ஆண்டை விட ‌இந்த ஆண்டு ரூ.2000/கோடி குறைத்து அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதேப்போல காவிரி டெல்டா பகுதியில் பாசனத்திற்கும் தூர் வாருவதற்கும் கடந்த ஆண்டு ஒதுக்கிய அதே தொகையான ரூ.125 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது, கூடுதல் ஒதுக்கீடு எதுவும் இடம்பெறவில்லை. தவெக அரசு விவசாயிகளின் கோரிக்கையை முழுமையாக ஏற்று அறிவிப்பு வெளியிடாதது, தமிழக விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி தெரிவித்துள்ளார்.

புதன், 5 ஆகஸ்ட், 2026

ஆணவக் கொலைகள் தடுப்புச் சட்டத்திற்கான ஆணையத்திடம் சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லுாரி சார்பில் பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டது.

ஆணவக் கொலைகள் தடுப்புச் சட்டத்திற்கான ஆணையத்திடம் சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லுாரி சார்பில் பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டது.

சேலம், 
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் சட்டக் கல்லூரியில் மாதிரி பாராளுமன்ற போட்டி. ஆணவக் கொலைகள் தடுப்புச் சட்டத்திற்கான நீதியரசர் கே என் பாட்ஷா தலைமையிலான ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு பரிசளித்து விழாவினை சிறப்பித்தனர்.

சேலம் மத்திய சட்டக் கல்லூரி, கௌரவக் கொலைகள் தடுப்பு ஆணையத்துடன் ஒரு உயர்மட்ட கலந்துரையாடல் அமர்வுடன், கல்லூரி அளவிலான ஒரு விறுவிறுப்பான மாதிரி நாடாளுமன்றப் போட்டியையும் நடத்தியது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், புகழ்பெற்ற சட்ட வல்லுநர்களும் நிர்வாகப் பிரமுகர்களும் கலந்துகொண்டனர். ஆணையத்தின் தலைவர் மாண்புமிகு நீதிபதி கே.என். பாஷா அவர்களின் வருகை இந்நிகழ்வின் சிறப்பம்சமாக அமைந்தது. இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற ஒரு விரிவான அமர்வின் போது, ​​பேராசிரியர்களும் மாணவர்களும் கௌரவக் குற்றங்களை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்ட விரிவான பரிந்துரைகளையும் ஒரு மாதிரிச் சட்டத்தையும் முன்வைத்தனர். சேலம் மத்திய சட்டக் கல்லூரியின் தலைவர் திரு. சரவணன் தனபாலன், இந்த அதிகாரப்பூர்வத் தொகுப்பை நீதிபதி கே.என். பாஷாவிடம் வழங்கினார். சட்ட சீர்திருத்தத்திற்காக மாணவர் மற்றும் பேராசிரியர்களின் கருத்துக்களை முன்முயற்சியுடன் திரட்டிய தமிழ்நாட்டின் முதல் நிறுவனம் என்ற வகையில் மத்திய சட்டக் கல்லூரியை ஆணையம் பாராட்டியதுடன், இது சமூகப் பொறுப்பின் ஒரு முன்மாதிரியான வெளிப்பாடு என்றும் புகழ்ந்தது. மாதிரி நாடாளுமன்றத்தின் நிறைவு விழாவில் உரையாற்றிய மாண்புமிகு நீதிபதி கே.என். பாஷா, தனது நிறைவுரையில், நீதித்துறை அனுபவம், அரசியலமைப்பு அறநெறி மற்றும் குடிமைக் கடமை ஆகியவற்றில் வேரூன்றிய ஒரு தொலைநோக்குப் பார்வையைப் பகிர்ந்துகொண்டார். தற்போதைய அரசியலமைப்பு உத்தரவாதங்கள், 2 ஆண்டுகள் 11 மாதங்கள் மற்றும் 18 நாட்கள் நீடித்த கடினமான விவாதங்களின் மூலம் உருவாக்கப்பட்டன என்பதை அவர் மாணவர்களுக்கு நினைவூட்டினார். மேலும், இந்தக் கட்டமைப்பைப் பாதுகாப்பது சட்ட சமூகத்தின் இன்றியமையாத கடமை என்பதையும் அவர் வலியுறுத்தினார். ஜனநாயகம் என்பது எழுதப்பட்ட சட்டத் தொகுப்புகள் அல்லது தேர்தல்களை விட மேலானது என்று நீதிபதி பாஷா குறிப்பிட்டார். அது, குணநலன், அறநெறித் துணிவு மற்றும் தனிப்பட்ட லட்சியங்களுக்கு மேலாகப் பொதுநலனை முன்னிறுத்துதல் ஆகியவற்றைச் சார்ந்த ஒரு நீடித்த உடன்படிக்கையாகும். உண்மையான தலைமை என்பது, வெறும் ஆரவாரத்தாலோ அல்லது உணர்ச்சிகரமான சொல்லாட்சியாலோ அல்ல, மாறாக பகுத்தறிவு, சரிபார்க்கப்பட்ட உண்மை மற்றும் அசைக்க முடியாத கண்ணியம் ஆகியவற்றால் வரையறுக்கப்படுகிறது என்று அவர் வலியுறுத்தினார். ஒழுக்கமற்ற அதிகாரம் குழப்பத்திற்கு வழிவகுக்கும் என்றும், மனசாட்சியால் வழிநடத்தப்படும் பேச்சு ஒரு நீதியான சமூகத்தை உருவாக்கும் என்றும் அவர் எச்சரித்தார். நாளைய நீதியின் பாதுகாவலர்களாகச் செயல்படுமாறு இளம் சட்ட அறிஞர்களை வலியுறுத்திய அவர், வசதிக்காக ஒருபோதும் உண்மையின் மீது சமரசம் செய்துகொள்ள வேண்டாம் என்றும், அவநம்பிக்கை தங்களது இலட்சியவாதத்தைக் குலைக்க அனுமதிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார். மேலும், தனிநபர்கள் தங்களது நேர்மையைத் தீவிரமாகப் பாதுகாக்க வேண்டும், ஏனெனில் அது ஒருமுறை சமரசம் செய்யப்பட்டால் ஒருபோதும் முழுமையாக மீட்டெடுக்க முடியாத ஒரே சொத்து என்றும் அவர் கூறினார். நீதிபதிகள் வி.ஆர். கிருஷ்ண ஐயர் மற்றும் பி.என். பகவதி போன்ற சட்ட மேதைகளை முன்னிலைப்படுத்திய அவர், மாணவர்கள் தொழில்முறைச் சிறப்பிற்காகப் பாடுபடவும், இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி மோகனா போன்ற முன்னோடிகளைப் பின்பற்றவும் ஊக்குவித்தார். 
இந்த விழாவில் மற்ற முக்கியத் தலைவர்களின் ஆழ்ந்த உரைகளும் இடம்பெற்றன. திரு. சரவணன் தனபாலன் ஆற்றிய தலைமை உரையில், அரசியல் கட்சித் தாவல் மற்றும் தேர்தல்களின் போது நிலவும் சமமற்ற களங்கள் போன்ற ஜனநாயக செயல்முறைகளில் உள்ள முக்கிய சவால்களை எடுத்துரைத்ததோடு, பாரபட்சமற்ற நிர்வாகத்தின் முக்கியப் பங்கையும் அவர் வலியுறுத்தினார். பொது மன்றங்கள். வழக்கறிஞர் செல்வாகோமதி, ஹன்சா மேத்தா உள்ளிட்ட அரசியலமைப்புச் சபையின் 15 பெண் உறுப்பினர்களின் பங்களிப்புகளை நினைவு கூர்ந்ததோடு, மாணவர்கள் மனித உரிமைப் பாதுகாவலர்களாக முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தி, அனைவருக்கும் மாதவிடாய் விடுப்பு வழங்குவது குறித்த மாதிரி நாடாளுமன்றத்தின் மாதிரி மசோதாவைப் பாராட்டினார். ஆணைய உறுப்பினர்களான திரு. ராமநாதன் ஐபிஎஸ் மற்றும் திரு. பழனிகுமார் ஐஏஎஸ் ஆகியோரும், தொகுதி மறுவரையறைச் சட்டம் மற்றும் வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டம் போன்ற சிக்கலான தலைப்புகளில் மாணவர்களின் விவாதத் திறனைப் பாராட்டினர். மாதிரி நாடாளுமன்றப் போட்டியில் சிறந்து விளங்கிய செல்வி கோபிகா, செல்வி மெர்லின் சோபியா மற்றும் திரு. யஷ்வந்த் ஆகியோருக்கு விருதுகள் வழங்கி நிகழ்ச்சி நிறைவடைந்தது. 
உதவிப் பேராசிரியர் ஜெசிந்தாவின் வரவேற்புரை மற்றும் சுவாமிநாதனின் நன்றியுரையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. மாண்புமிகு நீதிபதி கே.என். பாஷா, திரு. ராமநாதன் ஐ.பி.எஸ், திரு. பழனிகுமார் ஐ.ஏ.எஸ், நீதிபதி திரு. ரவீந்திர போஸ், உறுப்பினர் செயலாளர் மற்றும் வழக்கறிஞர் செல்வி செல்வகோமதி ஆகியோர் கலந்துகொண்ட முக்கிய பிரமுகர்களில் அடங்குவர்.






செவ்வாய், 4 ஆகஸ்ட், 2026

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது. சேலம் அரியானூரில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர். சேலம் கோவை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு.

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது. சேலம் அரியானூரில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர். சேலம் கோவை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு.

சேலம், 
S.K. சுரேஷ்பாபு. 

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது. அரியானூரில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர். 

தமிழக விவசாயிகளின் நலன் கருதி நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலின் போது  டி.வி.கே. கொடுத்த வாக்குறுதிகள் அமுல்படுத்துவதிலேயே பல்வேறு குளறுபடிகள். தமிழக விவசாயிகளின் எதிர்பார்ப்பை ஏமாற்றி முழுமையாக செயல்படுத்தவில்லை என்பது ஒரு புறம் இருக்கட்டும். தமிழக விவசாயிகளின் நலன், கூட்டுறவு வங்கிகளில் அவர்கள் பெற்று பயிர் கடன்கள் அனைத்தையும் முழுமையாக ரத்து செய்ய வேண்டும் மற்றும் காவிரி உரிமை பங்கிட்டு நீர் பிரச்சனை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  தஞ்சையில் நேற்று தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மிகப் பிரம்மாண்டமான அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்களைக் குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசியதாக ஏழு பிரிவுகளின் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்பொழுது விசாரணைக்காக தஞ்சைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். இதன் காரணமாக தமிழகம் முழுவதும் திமுகவினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 
இதன் ஒரு பகுதியாக சேலம் கிழக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார் தலைமையில் திரண்ட திமுகவினர், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கழுதை கண்டித்து அரியானூர் சேலம் கோவை  தேசிய நெடுஞ்சாலையில்சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வீரபாண்டி ஒன்றிய திமுக செயலாளர் வெண்ணிலா சேகர், ஆட்டையாம்பட்டி பேரூர் கழக செயலாளர் முருக பிரகாஷ், கல்வியாளர் அணி இணைச் செயலாளர் மலர்விழி வீரபாண்டி ராஜா, இளைஞர் அணி பொறுப்பாளர் ஃபிரண்ட்ஸ் ரமேஷ் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட திமுகவினர் சேலம் கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரியனுர் பகுதியில் டி வி கே தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஜோசப் விஜய்யை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பொய் வழக்கு போட்டு கைது செய்த தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை விடுதலை செய்ய வேண்டும் என்றும் மறியல் போராட்டத்தின் போது வலியுறுத்தினர். இந்த போராட்டத்தின் காரணமாக அரியானூர் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பும் பரபரப்பும் காணப்பட்டது.
தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் உரிமைக்காக தமிழக முதல்வர் ஆர்வம் காட்டாமல்,  எதிர்க்கட்சி தலைவர் மற்றும் எதிர் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை கைது செய்வதில் மட்டும் ஏன் இத்தனை ஆர்வம் காட்டுவது ஏன் ??? .தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி தமிழக முதலமைச்சருக்கு சரமாரி கேள்வி. இதுகுறித்து தமிழக  விவசாயிகளுக்கு பதில் கூற வேண்டும் என்றும் முதல்வருக்கு வலியுறுத்தல்.

தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் உரிமைக்காக தமிழக முதல்வர் ஆர்வம் காட்டாமல், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் எதிர் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை கைது செய்வதில் மட்டும் ஏன் இத்தனை ஆர்வம் காட்டுவது ஏன் ??? .தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி தமிழக முதலமைச்சருக்கு சரமாரி கேள்வி. இதுகுறித்து தமிழக விவசாயிகளுக்கு பதில் கூற வேண்டும் என்றும் முதல்வருக்கு வலியுறுத்தல்.

நாமக்கல்.
S.K. சுரேஷ்பாபு.

தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் உரிமைக்காக தமிழக முதல்வர் ஆர்வம் காட்டாமல்,  எதிர்க்கட்சி தலைவர் மற்றும் எதிர் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை கைது செய்வதில் மட்டும் ஏன் இத்தனை ஆர்வம் காட்டுவது ஏன் ??? .
தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி தமிழக முதலமைச்சருக்கு சரமாரி கேள்வி. இதுகுறித்து தமிழக  விவசாயிகளுக்கு பதில் கூற வேண்டும் என்றும் முதல்வருக்கு வலியுறுத்தல்.

தமிழக விவசாயிகளின் நலன் கருதி நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலின் போது  டி.வி.கே. கொடுத்த வாக்குறுதிகள் அமுல்படுத்துவதிலேயே பல்வேறு குளறுபடிகள். தமிழக விவசாயிகளின் எதிர்பார்ப்பை ஏமாற்றி முழுமையாக செயல்படுத்தவில்லை என்பது ஒரு புறம் இருக்கட்டும். தமிழக விவசாயிகளின் நலன், கூட்டுறவு வங்கிகளில் அவர்கள் பெற்று பயிர் கடன்கள் அனைத்தையும் முழுமையாக ரத்து செய்ய வேண்டும் மற்றும் காவிரி உரிமை பங்கிட்டு நீர் பிரச்சனை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  தஞ்சையில் நேற்று தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மிகப் பிரம்மாண்டமான அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்களைக் குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசியதாக ஏழு பிரிவுகளின் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்பொழுது விசாரணைக்காக தஞ்சைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். இதன் காரணமாக தமிழகம் முழுவதும் திமுகவினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க தலைவர் ஆர்.வேலுச்சாமி, டி.வி.கே. தலைவரும், தமிழக முதலமைச்சருமான ஜோசப் விஜய்க்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியும்,  இதற்கான விளக்கத்தை கேட்டும் கண்டன பதிவு ஒன்றினை  வெளியிட்டுள்ளார். 
அந்த பதிவில்,  தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் அரசு நாட்டின் முதுகெழும்பாக உள்ள தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் பெருக காவிரி பங்கீட்டு உரிமை உயிர் தண்ணீரை  இந்த ஆண்டு முறையாக கர்நாடகா அரசிடம் இருந்து பெற்று தர தவெக அரசு தவறிவிட்டது. தவெக கட்சி தேர்தல் வாக்குறுதி படி தமிழக விவசாயிகளின் பயிர் கடன் தள்ளுபடி செய்ததில் தற்போது முறையாக நடக்கவில்லை, தமிழகத்தில் தற்போது கடுமையான வறட்சி தலை விரித்தாடுகிறது.
தமிழகத்தில் தவெக கட்சிக்கு வாக்களித்து ஆட்சி கட்டிலில் அமர வைத்த தமிழ்நாடு மக்களுக்கும் மற்றும் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றி கொடுக்க கோரி தற்போது தமிழகம் முழுவதும் போராடிக்கொண்டிருக்கும் நிலையில்  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உரிய நேரத்தில் செயல்படாமல் மௌன அரசாக இருந்து விட்டு, நாளை தமிழக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய உள்ள நிலையில் தமிழக விவசாயிகளின் கோரிக்கைக்காக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழக எதிர்கட்சி தலைவர் குரல் எழுப்புவார் என்று அஞ்சி, நேற்று தஞ்சையில் திமுக சார்பில், காவிரி உரிமையில் தவெக அரசின் மெத்தன போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடை பெற்றதில் தமிழக எதிர்கட்சி தலைவர்  உதயநிதி ஸ்டாலினை,  தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவதூறாக பேசியதாக கூறி சினிமா பாணியில் நடப்பது போல் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இதனை  உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் உரிமைக்காக  தமிழக முதல்வர் ஆர்வம் காட்டவில்லை மாறாக  எதிர்க்கட்சி தலைவர் மற்றும் எதிர் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை கைது செய்வதில் மட்டும் ஏன் இத்தனை ஆர்வம் என்று விவசாயிகளுக்கு பதில் கூற வேண்டும் என உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் தனது கண்டன பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

திங்கள், 3 ஆகஸ்ட், 2026

சேலத்தில் ஆடிப்பெருக்கு நன்னாளில் அம்மனுக்கு தாலி மாற்றி சிறப்பு வழிபாடு.. அங்காளம்மனின் அதி தீவிர பக்தரின் சிறப்பு வழிபாட்டால் பக்தர்கள்  நெகிழ்ச்சி....

சேலத்தில் ஆடிப்பெருக்கு நன்னாளில் அம்மனுக்கு தாலி மாற்றி சிறப்பு வழிபாடு.. அங்காளம்மனின் அதி தீவிர பக்தரின் சிறப்பு வழிபாட்டால் பக்தர்கள் நெகிழ்ச்சி....

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

சேலத்தில் ஆடிப்பெருக்கு நன்னாளில் அம்மனுக்கு தாலி மாற்றி சிறப்பு வழிபாடு.. அங்காளம்மனின் அதி தீவிர பக்தரின் சிறப்பு வழிபாட்டால் பக்தர்கள்  நெகிழ்ச்சி....

ஆடிப்பெருக்கு (ஆடி 18) நன்னாளில் சுமங்கலிப் பெண்கள் தாலிக் கயிறு மாற்றுவது கணவரின் ஆயுளைக் கூட்டி, மாங்கல்ய பலத்தை பலமடங்கு பெருக்கும் என்பது முதன்மையான ஆன்மீக நம்பிக்கையாகும். இந்த சுபநாளில் செய்யப்படும் காரியங்கள் அனைத்தும் பலமடங்கு பெருகும் என்பதால், தாலி பிரித்துக் கோர்க்கும் வைபவத்திற்கு இந்நாள் மிகவும் உகந்ததாகக் கருதப்படுகிறது.
தாலி மாற்றும் வைபவத்தின் ஆன்மீக முக்கியத்துவம் மாங்கல்ய பலம் பெருகுதல். ஆடி 18 அன்று நதிக்கரைகளிலோ அல்லது வீட்டிலோ வழிபாடுகள் செய்து தாலிக்கயிறு மாற்றுவதால் கணவருக்கு நீண்ட ஆயுளும், குடும்பத்திற்கு வற்றாத செல்வமும் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த நிலையில் நவகிரகங்களுக்கும் நாயகிகளான அங்காளம்மன், மாரியம்மன், மற்றும் காளியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு இந்த புனித நாளில் தாலி மாற்றி சிறப்பு பூஜை மேற்கொண்ட சேலம் கிச்சிபாளையம் கொறகூடை அங்கு அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் திரு வீட்டில் இதற்கான சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
திருக்கோவில் மற்றும் திருக்கோவில் வீட்டின் நிறுவனரும் மிகச்சிறந்த ஆன்மீகவாதியும் தீவிர சிவன் அடியாரான பன்னீர்செல்வம் சுவாமி ஜி ஏற்பாட்டின் பேரில், முன்னதாக திருக்கோவில் வீட்டில் மிகப் பிரம்மாண்டமான முறையில் அலங்கரிக்கப்பட்டிருந்த அம்மனுக்காக ஐந்துக்கும் மேற்பட்ட சுமங்கலி பெண்கள் மங்களப் பொருட்களை ஊர்வலமாக எடுத்து வந்து சிறப்பு பூஜைகளை மேற்கொண்டனர். தொடர்ந்து திருக்கோவிலில் சிவாச்சாரியார் பன்னீர்செல்வம் தலைமையில், ஆடிப்பெருக்கு திருநாளில் சுமங்கலி பெண்களுக்கு தாலி மாற்றும் வைபவம் ஒருபுறம் இருந்தாலும் அம்மனுக்கே திருமாங்கல்யத்தை மாற்றி சிறப்பு பூஜை மேற்கொண்டார். இந்த மாங்கல்யம் மாற்றும் சிறப்பு பூஜைகளுக்கான அனைத்து சேவைகளும் முடிந்ததன் பிறகு மகா தீபாராதனை காட்டும் போது திருக்கோவில் வீட்டில் உள்ள அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டு இருள் சூழ்ந்த நேரத்தில் மகாதேவாரனை காட்டப்பட்டது பக்தர்களிடையே மிகப் பெரிய ஒரு பரவசத்தை ஏற்படுத்தியது என்றே கூறலாம்.
இதனை அடுத்து இந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் மங்களப் பொருட்களுடன் பிரசாதங்களும் வழங்கப்பட்டன. இதுகுறித்து சேலம் கிச்சிபாளையம் கொறகூடை அங்கு அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் தலைவர் பன்னீர்செல்வம் நம்மிடையே கூறுகையில், வழக்கமாக சுமங்கலி பெண்கள் மேற்கொள்ளும் இந்த பூஜை ஒரு புறம் இருந்தாலும் நவகிரகங்களின் நாயகிகள் ஆக விளங்கும் அம்மனுக்கே திருமாங்கல்யம் மாற்றி சிறப்பு பூஜை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இனிவரும் காலங்களில், தமிழகத்தில் விவசாயத் தொழில் முற்றிலும் பொய்த்துப் போகாமல் இருக்க நல்ல மழை பெய்து எப்பொழுதும் வற்றாத காவிரி ஆறாக மாறி தமிழக விவசாயிகளின் நலனை பெரிதும் பாதுகாக்கும் என்பதில் ஐயமில்லை என்றும் குறிப்பிட்டார்.