Latest

புதன், 28 ஜனவரி, 2026

சேலம் சாரதா கல்லூரியில் 500க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு தமிழக அரசின் மடி கணணிகளை வழங்கிய சுற்றுலாத் துறை அமைச்சர்.

சேலம் சாரதா கல்லூரியில் 500க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு தமிழக அரசின் மடி கணணிகளை வழங்கிய சுற்றுலாத் துறை அமைச்சர்.

சேலம்.
S.K. சுரேஷ் பாபு.

சேலம் சாரதா கல்லூரியில் 500க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு தமிழக அரசின் மடி கணணிகளை வழங்கிய சுற்றுலாத் துறை அமைச்சர்.

தமிழக அரசு சார்பில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக சேலம் சாரதா மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் விழா நடந்தது. நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் கோமதி வரவேற்று பேசினார். மாவட்ட வருவாய் அதிகாரி ரவிக்குமார் தலைமை தாங்கி பேசினார். சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கி சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது. கடந்த ஐந்து ஆண்டுகளில் பள்ளி கல்வித்துறைக்கு 2 லட்சம் கோடி நிதி ஒதுக்கி சிறந்த கல்வியை தமிழக முதல்வர் அளித்து வருகிறார். 

இந்தியாவில் தமிழகம் கல்வியில் சிறந்து விளங்குகிறது. புதுமைப்பெண் திட்டத்தில் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. பெண்கள் கல்வியில் முன்னேற புதுமைப்பெண் திட்டத்தை முதல்வர் செயல்படுத்தி வருகிறார்.
மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறார். காலை உணவு திட்டத்தின் ன் மூலம் 20 லட்சம் மாணவ மாணவிகள் பயன்பெறுகிறார்கள். 10 லட்சம் மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. இன்று இந்த கல்லூரியில் 524 மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. இதனை மாணவிகள் பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றி அடைய மனதார வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் சாரதா கல்வி அறக்கட்டளை இயக்குனர் யதிதீஸ்வரி விநாயக பிரியா அம்பா, செயலாளர் யதீஸ்ஸ்வரி சுகப்பிரியா அம்பா மற்றும் யதீஸ்வரி அம்பாக்கள், துணை மேயர் சாரதா தேவி, மண்டல குழு தலைவர் உமாராணி உள்பட பங்கேற்றனர். முடிவில் கல்லூரி மடிக்கணினி திட்ட அலுவலர் செல்வ லட்சுமி நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் துறை தலைவர்கள் மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

செவ்வாய், 27 ஜனவரி, 2026

உள்நாட்டு வேளாண் கட்டமைப்புகளுக்கும், உற்பத்தியை அதிகரிக்கும் நோக்குடன் மத்திய அரசு போதிய நிதியை கூடுதலாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவர் வேலுச்சாமி அறிக்கையின் வாயிலாக வலியுறுத்தல்.

உள்நாட்டு வேளாண் கட்டமைப்புகளுக்கும், உற்பத்தியை அதிகரிக்கும் நோக்குடன் மத்திய அரசு போதிய நிதியை கூடுதலாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவர் வேலுச்சாமி அறிக்கையின் வாயிலாக வலியுறுத்தல்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

உள்நாட்டு வேளாண் கட்டமைப்புகளுக்கும் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்குடன் மத்திய அரசு போதிய நிதியை கூடுதலாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவர் வேலுச்சாமி அறிக்கையின் வாயிலாக வலியுறுத்தல்.

உழவர் பெருந்தகை நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மத்திய அரசின் 2026-2027 ஆம் ஆண்டிற்கு உண்டான நிதிநிலை அறிக்கை சமீபத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள  நிலையில், ஏற்கனவே மத்திய அரசிடம் அமெரிக்க அரசாங்கம் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் செய்வதற்கு பலமுறை முயற்சித்த போது, உள்நாட்டு உணவு தானியம் வேளாண் சார்ந்த பொருட்கள் இறக்குமதி செய்ய ஒருபோதும் இந்திய அரசு அனுமதிக்காது, உள்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் தான் எனக்கு முக்கியம் என்று தெரிவித்தும், எனது தனிப்பட்ட  நட்பு முறையில் எவ்வளவு நெருக்கடி நிலை வந்தாலும் எதிர்கொள்ள நான் தயார், உள்நாட்டின் வேளாண் கட்டமைப்புகளுக்கும் உற்பத்தியை அதிகரிக்கவும் எவ்வளவு நிதி வேண்டுமானாலும் மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய தயார் என்று
மெரிக்க அரசாங்கத்துக்கு கணத்த குரலோடு படிலடி கொடுத்த மாண்புமிகு இந்திய பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சமீபத்தில் மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ள நிதிநிலை அறிக்கையில் இந்திய விவசாயிகள் நலன் கருதி விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான MSP-யை அமல்படுத்தியும் நாடுமுழுவதும் உள்ள விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகள் மத்திய அரசிடம் வைத்ததை நிறைவேற்றும் வகையிலும் உள்நாட்டு வேளாண் கட்டமைப்புகளுக்கு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்துடன் போதிய நிதியை  மத்திய அரசு கூடுதலாக ஒதிக்கீடு செய்ய வேண்டும் என உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் மத்திய அரசை இந்த அறிக்கையின் வாயிலாக வலியுறுத்துகிறது என்றும் அறிக்கையின் வாயிலாக தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். 


அருந்ததியர் மக்கள் வாழ்வில் வளர்ச்சி பெற தமிழக முதல்வர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக, சேலம் ஓமலூரில் அமைச்சர் எ.வ. வேலு பெருமிதம்.

அருந்ததியர் மக்கள் வாழ்வில் வளர்ச்சி பெற தமிழக முதல்வர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக, சேலம் ஓமலூரில் அமைச்சர் எ.வ. வேலு பெருமிதம்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

அருந்ததியர் மக்கள் வாழ்வில் வளர்ச்சி பெற தமிழக முதல்வர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக, சேலம் ஓமலூரில் அமைச்சர் எ.வ. வேலு பெருமிதம். 

இந்திய விடுதலை சுதந்திர போராட்ட மாவீரன் பொல்லான் அவர்களுக்கு திருவுருவ சிலையுடன் கூடிய நினைவகம் அமைத்துக் கொடுத்த தமிழக முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் ஆதித்தமிழர் பேரவை மற்றும் அருந்ததியர் மக்கள் சார்பில் நடைபெற்றது. சேலம் மாவட்டம் ஓமலூரில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனர் அதியமான் தலைமை தாங்கினார். ஆதித்தமிழர் பேரவையின் மாநில துணை பொது செயலாளர் ஏ.டி.ஆர்.சந்திரன் வரவேற்புரை நிகழ்த்த, மாநில மகளிர் அணி துணை செயலாளர் மகேஸ்வரி, தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச்செயலாளர் யுவராஜ் மற்றும் வடக்கு மாவட்ட செயலாளர் ஏசுராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்த நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டத்தில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் ராஜேந்திரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பொதுக்கூட்டத்தை சிறப்பித்தனர். 
தொடர்ந்து நடைபெற்ற நன்றி அறிவிப்பு பொது  கூட்டத்தில் பேசிய அமைச்சர் பெருமக்கள், இந்திய விடுதலை போராட்ட மாவீரன் கொல்லானின் வீர வீரன் குறித்து பட்டியலிட்டு பேசி அவர்கள் அவரை பெருமைப்படுத்தும் விதமாக திருஉருவச் சிலையுடன் கூடிய நினைவகம் அமைத்துக் கொடுத்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்பு செய்துள்ளார் என்றும் குறிப்பிட்டனர். தமிழக மக்களின் நலன் கருதி அடித்தட்டு மக்களும் வாழ்வில் முன்னேற்றம் அடைய தமிழக அரசு செயல்படுத்திய திட்டங்கள் குறித்தும் பட்டியல் இட்ட அவர்கள் அருந்ததியர் மக்களுக்கு என்றும் உறுதுணையாக இருப்பது திமுக தான் என்றும் அவர்களுக்கு மூன்று சதவிகித இட ஒதுக்கீடு வழங்கி அவர்கள் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்ற முதல்வர் பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருவது காரணம் என்றும் பெருமைப்பட தெரிவித்தனர். 
இந்த நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை மாவட்டத் தலைவர் மாரியப்பன் உட்பட மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

மனைவியின் தவறான சகவாசத்தால் கொலை மிரட்டலுக்கு அஞ்சி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட தம்பதியினர். சேலம் வேடுகத்தாம்பட்டியில் நான்கு குழந்தைகள் அனாதையான சோகம்.. கொலை மிரட்டல் விடுத்த குடும்பத்தினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க தமிழக வாழ்வுரிமை கட்சியினர் சேலம் காவல் ஆணையரிடம் புகார் மனு.

மனைவியின் தவறான சகவாசத்தால் கொலை மிரட்டலுக்கு அஞ்சி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட தம்பதியினர். சேலம் வேடுகத்தாம்பட்டியில் நான்கு குழந்தைகள் அனாதையான சோகம்.. கொலை மிரட்டல் விடுத்த குடும்பத்தினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க தமிழக வாழ்வுரிமை கட்சியினர் சேலம் காவல் ஆணையரிடம் புகார் மனு.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

மனைவியின் தவறான சகவாசத்தால் கொலை மிரட்டலுக்கு அஞ்சி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட தம்பதியினர். சேலம் வேடுகத்தாம்பட்டியில் நான்கு குழந்தைகள் அனாதையான சோகம்.. கொலை மிரட்டல் விடுத்த குடும்பத்தினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க தமிழக வாழ்வுரிமை கட்சியினர் சேலம் காவல் ஆணையரிடம் புகார் மனு. 

சேலத்தை அடுத்துள்ள வேடுகத்தாம்பட்டி சங்கோதி வட்டம் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநகர் மாவட்ட அமைப்பாளர் செந்தில் உள்ளிட்டவர்களுடன் புகார் மனு கொடுப்பதற்காக சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.  பழனிச்சாமி மற்றும் செந்தில் உள்ளிட்டோர் வழங்கிய புகார் மனுவில் பழனிச்சாமி எனும் நானும் எனது குடும்பத்தாரும் சங்கோதி வட்டம் பகுதியில் வசித்து வருகிறோம். எனது தம்பி தனபால் அவரது மனைவி பிரியா ஆகியோர் அவர்களது நான்கு குழந்தைகளுடன் வசித்து வந்தனர். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சுபாஷ் என்பவருக்கும் எனது தம்பி மனைவிக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் தனியாக அடிக்கடி பேசி பழகி வந்துள்ளனர். 
இந்த விஷயம் எனது தம்பிக்கு தெரிய வரவே, இதுகுறித்து சுபாஷிடம் கேட்டபோது சுபாஷும் அவரது மனைவி மற்றும் அவர்களது மகன் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து எனது தம்பியையும் அவர்களது நான்கு குழந்தைகளையும் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டல் விடுத்து அனுப்பிவிட்டனர். இதில் மன உளைச்சலில் இருந்த தனபால் மற்றும் மனைவி பிரியா ஆகியோர் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதில் எனது தம்பி மனைவி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்ட நிலையில், எனது தம்பி தனபால் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது சேலம் கொண்டலாம்பட்டி காவல் துறையினரிடம் மரண வாக்குமூலமாக இந்த சம்பவத்திற்கு சுபாஷ் அவரது மனைவி கலைச்செல்வி மற்றும் அவரது மகன் 3 பேரும் தான் காரணம் என மரண வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதற்கு உண்டான வீடியோவையும் காவல்துறையினர் பதிவும் செய்து உள்ளனர். அதன் பின் சிகிச்சை பலனின்றி எனது தம்பி தனபால் இறந்துவிட்டார். இந்த இருவரும் இறந்ததற்கு காரணமான சுபாஷ் மற்றும் குடும்பத்தினர் மூன்று பேர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். தாய் தந்தையரை இழந்து தற்போது தனியாக இருக்கும் இந்துமதி மோனிகா ஸ்ரீ சுமிதா மற்றும் திலீப் ஆகிய நான்கு குழந்தைகளும் அனாதையாக வாழும் நிலையில் உள்ளனர். அனாதை ஆக்கப்பட்டுள்ள நான்கு குழந்தைகளுக்கும் உதவி செய்யுமாறு கனம் சேலம் மாநகர காவல் துறை ஆணையரை கேட்டுக்கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டிருந்தனர். இந்த சம்பவம் சேலம் வேடுகத்தாம்பட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிகழ்வின்போது தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட துணை தலைவர் வசந்த் உட்பட பாதிக்கப்பட்டுள்ள நான்கு குழந்தைகள் மற்றும் உறவினர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

திங்கள், 26 ஜனவரி, 2026

சேலம் மேற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் 77 வது குடியரசு தின விழா கொண்டாட்டம். மகாத்மா மற்றும் கர்மவீரர் ஆகியோரது திருவருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை.

சேலம் மேற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் 77 வது குடியரசு தின விழா கொண்டாட்டம். மகாத்மா மற்றும் கர்மவீரர் ஆகியோரது திருவருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் மேற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் 77 வது குடியரசு தின விழா கொண்டாட்டம். மகாத்மா மற்றும் கர்மவீரர் ஆகியோரது திருவருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை. 

இந்திய திருநாட்டின் 77 வது குடியரசு தின விழா நாடு முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக சேலம் மேற்கு மாவட்ட தமிழ் மாநில கட்சியின் சார்பில் நாட்டின் 77 வது குடியரசு தின விழாவை கொண்டாடும் விதமாக ஓமலூர் பேருந்து நிலையம் அருகே உள்ள மகாத்மா காந்தி மற்றும் கர்மவீரர் காமராஜர் ஆகியோரது திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ததோடு அனைவருக்கும் இனிப்புகளும் வழங்கப்பட்டன. ஓமலூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த நிகழ்விற்கு சேலம் மேற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்கள் சுசீந்திரகுமார் மற்றும் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். 
ஓமலூர் நகர  தலைவர் மணிகண்டன் வரவேற்புரை ஆற்றிய இந்த நிகழ்வில், வட்டார தலைவர்கள் சேதுராமன், அபி மன்னன், தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாநில ஒருங்கிணைப்பாளர் ரகு நந்தகுமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து,  தீண்டாமை ஒழிப்பு, தீவிரவாத ஒழிப்பு, மத நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு போன்ற உறுதிமொழிகள் ஏற்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் அஜித் குமார், ராஜேந்திரன், கணேசன், மாரியப்பன், முத்து, ரமேஷ், முருகேசன் சரவணன் செந்தில்குமார் மனோஜ் குமார் விஜய் கூலிட்டு ஐம்பத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதே போல கருப்பூர் பேருந்து நிலையத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தியடிகள் மற்றும் கர்மவீரர் காமராஜரின் திரு உருவப்படத்திற்கு கருப்பூர் நகர தலைவர் அரவிந்த் குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்ட நிகழ்ச்சியில் அனைவருக்கும் இனிப்புகளும் வழங்கப்பட்டன.
புதிய பாதையில் காங்கிரஸ் கட்சி பயணத்தை தொடரும்... சேலத்தில் நடந்த காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் பதவி ஏற்பு விழாவில் முன்னாள் தலைவர் தங்கபாலு தெரிவித்தார்....

புதிய பாதையில் காங்கிரஸ் கட்சி பயணத்தை தொடரும்... சேலத்தில் நடந்த காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் பதவி ஏற்பு விழாவில் முன்னாள் தலைவர் தங்கபாலு தெரிவித்தார்....

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

புதிய பாதையில் காங்கிரஸ் கட்சி பயணத்தை தொடரும்... சேலத்தில் நடந்த காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் பதவி ஏற்பு விழாவில் முன்னாள் தலைவர் தங்கபாலு தெரிவித்தார்....

சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் மூன்று மாவட்டங்களில் புதிய தலைவர்கள் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட முன்னாள் மத்திய அமைச்சரும் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஆன தங்கபாலு நிருபர்களிடம் கூறுகையில், தமிழக காங்கிரசுக்கு புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் காங்கிரஸ் புதிய பயணத்தை தொடர் உள்ளது. 
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தமிழக முற்பட 14 மாநிலங்களில் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் உட்பட பல்வேறு பதவிகளில் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. 
அதன்படி தமிழகத்தில் புதிய காங்கிரஸ் தலைவர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் கட்சியின் வளர்ச்சி மற்றும் திட்டங்களை செயல்படுத்துவார்கள். 
தமிழக அரசியலில் இதுவரை நடக்காததெல்லாம் நடக்கிறது. யாருக்கும் யாரு எதிரி அல்ல. 
சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழகத்தில் 6000 பேர் விண்ணப்பித்துள்ளனர். 
அவர்களில் தகுதியானவர்கள் போட்டியிடும் வாய்ப்பை பெறுவார்கள். 
தமிழகத்தில் தொடர்ந்து திமுகவினர் காமராஜரையும், காங்கிரஸ் கீழ்மட்ட தலைவர்களையும் அவமதிக்கும் நிலையில், இரண்டாம் கட்ட தலைவர்கள் மௌனம் காப்பது ஏன், தற்போது சேலம் மாநகர காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சாரதா தேவியை அரசு விழாவில் திமுகவினர் புறக்கணித்ததும் அவமதித்த செயலும் அரங்கேறியது என்ற கேள்விக்கு, காங்கிரஸ் கட்சி அகில இந்திய அளவில் ஆட்சி அமைப்பது தான் முக்கியம் அதற்காக சில தியாகங்களை செய்துதான் ஆக வேண்டும். 
சில இடங்களில் தனி மனிதனை நாம் பார்க்க கூடாது கட்சியை தான் பார்க்க வேண்டும். 
தனிப்பட்ட காரணங்களுக்காக சிலர் அவமதிப்பதை காங்கிரஸ் கட்சி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. 
சில நேரங்களில் இதற்கு நாம் கண்டனம் எதிர்ப்பை தெரிவித்துதான் வந்துள்ளோம். 
தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைய வேண்டும் என்பது காங்கிரஸ் தொண்டர்களுக்கு ந ஆசை இருக்கத்தான் செய்கிறது. அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு அகில இந்திய அளவு தான் முக்கியத்துவம். 
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் காலம் கனிந்து தான் வருகிறது. காமராசரின் காங்கிரஸ் ஆட்சி விரைவில் அமையும் என எதிர்பார்ப்போம். இவ்வாறு அவர் கூறினார். 
பேட்டியின் போது, சேலம் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் சாரதா தேவி உட்பட நிர்வாகிகள் பலருடன் இருந்தனர். 


சேலத்தில் விஜய ஸ்ரீ பில்டர்ஸின் புதிய வைஷ்ணவி பேலஸ் அபார்ட்மெண்ட் பூமி பூஜை

சேலத்தில் விஜய ஸ்ரீ பில்டர்ஸின் புதிய வைஷ்ணவி பேலஸ் அபார்ட்மெண்ட் பூமி பூஜை

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சேலத்தில் விஜய ஸ்ரீ பில்டர்ஸின் புதிய வைஷ்ணவி பேலஸ் அபார்ட்மெண்ட் பூமி பூஜை 

சேலம் அம்மாபேட்டை வித்யா மந்திரி பள்ளி அருகில் விஜய ஸ்ரீ பில்டர்ஸின் புதிய வைஷ்ணவி பேலஸ் அப்பார்ட்மெண்ட் பூமி பூஜை நடைபெற்றது. பூமி பூஜை விழாவிற்கு விஜயஸ்ரீ கன்ஸ்டிரக்ஷன் உரிமையாளர்  டாக்டர் டி ஜே ராஜேந்திரன் அவர்கள் தலைமை தாங்கினார். தொடர்ந்து புதிய வைஷ்ணவி பேலஸ் அப்பார்ட்மெண்ட் குறித்து விஜயஸ்ரீ பில்டர்ஸ் நிர்வாகத்தினர பாலசுப்பிரமணியம், மாலினி‌ ஆகியோர் கூறியதாவது, புதிய வைஷ்ணவி பேலஸ் அப்பார்ட்மெண்ட்ல் 2 பி ஹெச் கே மற்றும் 3 பி ஹெச் கே என 35 வீடுகள் உள்ளன. இங்கு குழந்தைகளுக்கு ஏற்ற விளையாட்டு அரங்கம், நடைபயிற்சி ஏரியா, அவுட்டோர் ஜிம் மற்றும் யோகா திடல் போன்ற அரங்கங்கள் உள்ளன. 24 மணி நேர குடிநீர் வசதி, தார் சாலை வசதி, சிசிடிவி கேமரா செக்யூரிட்டி வசதிகள் உள்ளன என்றும் தெரிவித்தனர். 
மேலும் புதிய லைசன்ஸ் பேலஸ் அப்பார்ட்மெண்டில் வீடு வாங்க கனரா வங்கி, இந்தியன் வங்கி, சவுத் இந்தியன் வங்கி, ஐசிஐசிஐ பேங்க், ஹெச்டிஎஃப்சி ஹோம், லோன் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் uco bank போன்ற முன்னணி வங்கிகளில் லோன் வசதி ஏற்பாடு செய்து தரப்படும். தொடர்ந்து பூமிபுரியில் கலந்து கொண்டு அட்வான்ஸ் செலுத்தி புக்கிங் செய்யும் முதல் ஐந்து வாடிக்கையாளருக்கு மாடுலர் கிச்சன் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்தார்கள். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விஜயஸ்ரீ பில்டர்ஸ் நிர்வாகத்தினர் மற்றும் பணியாளர்கள் செய்தனர்.