சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை, சேலம் மாவட்டத்தை சேர்ந்த ரஜினி ரசிகர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சந்தித்து ஆதரவு தெரிவித்த நிகழ்வு.
அகில உலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர பக்தரான சேலம் பாரப்பட்டி கனகராஜ் தனது ஆதரவாளர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருடன் சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து, வரும் சட்டமன்ற தேர்தலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் தீவிர ரசிகர்களான தங்களின் ஆதரவை தெரிவித்தனர். முன்னதாக கந்தம்பட்டி பைபாஸ் பகுதியில் இருந்து ஆயிரத்திற்கும் அதிகமான தனது ஆதரவாளர்கள் உடன் ஊர்வலமாக வந்த ரஜினி பக்தன் கனகராஜ் நெடுஞ்சாலை நகரில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களை சந்தித்து தங்களது முழு ஆதரவினை 11 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வழங்கினர்.
பொன்னாடை போர்த்தியும் பூங்கொத்து கொடுத்தும் ஆதரவு கடிதத்தினை வழங்கிய பாரப்பட்டி கனகராஜ் அவர்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்துகளை தெரிவித்தார். அப்போது அவர் செய்தியாளரிடம் கூறுகையில், அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து ஒரு வருடத்திற்கு முன்பு முடிவெடுத்து தலைமைக்கு கடிதம் அனுப்பி உள்ளதாகவும், இது தன்னுடைய தனிப்பட்ட முடிவு என்றும், சேலம் மாவட்டத்தில் மட்டும் 11 தொகுதிகளிலும் ரஜினி ரசிகர்கள் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் கனகராஜ் தெரிவித்தார்.


