Latest

வெள்ளி, 22 மே, 2026

தமிழக விவசாயிகளின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் மீறி மேகதாட்டில் அணை கட்டினால் தகர்த்தெறிவோம். கர்நாடக துணை முதலமைச்சர் டி கே சிவகுமாருக்கு தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி கடும் எச்சரிக்கை.

தமிழக விவசாயிகளின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் மீறி மேகதாட்டில் அணை கட்டினால் தகர்த்தெறிவோம். கர்நாடக துணை முதலமைச்சர் டி கே சிவகுமாருக்கு தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி கடும் எச்சரிக்கை.

சேலம், 
S.K. சுரேஷ்பாபு. 

தமிழக விவசாயிகளின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் மீறி மேகதாட்டில் அணை கட்டினால் தகர்த்தெறிவோம். கர்நாடக துணை முதலமைச்சர் டி கே சிவகுமாருக்கு தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி கடும் எச்சரிக்கை. 

நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி அறிக்கையின் வாயிலாக கர்நாடகா அரசுக்கு கடுமையான எச்சரிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். 
அதில் கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க தமிழ்நாட்டிற்கு எந்தவித உரிமையும் உரிமையும் இல்லை என்று கூறிய கர்நாடக துணை முதல்வர் டி கே சிவக்குமார் அவர்களுக்கு உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் பதிலடி கொடுப்பது என்னவென்றால், தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி பங்கேற்று தண்ணீரை கர்நாடக அரசு அங்கு உள்ள அணைகளில் தேக்கி வைக்க எந்த தார்மீக உரிமையும் கிடையாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்திற்கு உண்டான காவிரி பங்கேற்று தண்ணீரை தினம்தோறும் விகிதாச்சார அடிப்படையில் திறக்க வேண்டும். மேலும் தமிழகத்தை பொறுத்தவரை காவிரி ஆற்றின் பாசனப்பகுதி பெரும்பாலும் குருவை, சம்பா மற்றும் தாளடி இரு போகத்தை சாகுபடி பொருத்தவரை ஆண்டுக்கு சுமார் 20 லட்சம் ஏக்கருக்கும் மேல் பாசன பகுதி உள்ளது. காவிரி ஆற்றின் பொருத்தமட்டில் முழு உரிமையும் தமிழ்நாட்டிற்கே உள்ளது. என கர்நாடகா அரசு நன்கு உணர வேண்டும். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சி செய்து அதற்கான பணி தொடங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டால் தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்க தமிழக விவசாயிகள் ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம். இதற்காக இரத்தம் சிந்தவும் தயங்க மாட்டோம். மேலும் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் தலைமையிலான தமிழக விவசாயிகளின் மிகப்பெரிய அளவில் ஒன்று திரட்டி வந்து மேகதாட்டில் அணை கட்டினால் தகர்த்தெறிவோம் என்று அறிக்கையின் வாயிலாக கர்நாடகா அரசை மிகக் கடுமையாக எச்சரிக்கின்றேன் என்று தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி பதிவிட்டுள்ளார்.

செவ்வாய், 19 மே, 2026

சேலம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் இரா.அருள் த.வெ.க வில் இணைவது உண்மையல்ல எந்த கட்சிக்கும் செல்லவில்லை. சேலம் மாவட்ட பாமக இளைஞரணி செயலாளர் விஜயகுமார் திட்டவட்டம்.

சேலம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் இரா.அருள் த.வெ.க வில் இணைவது உண்மையல்ல எந்த கட்சிக்கும் செல்லவில்லை. சேலம் மாவட்ட பாமக இளைஞரணி செயலாளர் விஜயகுமார் திட்டவட்டம்.

சேலம், 
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் இரா.அருள் த.வெ.க வில் இணைவது உண்மையல்ல எந்த கட்சிக்கும் செல்லவில்லை. சேலம் மாவட்ட பாமக இளைஞரணி செயலாளர் விஜயகுமார் திட்டவட்டம். 


சேலம் மாணவர் மாவட்ட பாமக மாவட்ட செயலாளராக இருப்பவர் இரா அருள். இவர் ஏற்கனவே பாமகவில் பிளவு ஏற்படாத பட்சத்தில் சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதியில் பாமக சார்பில் போட்டியிட்டு மகத்தான வெற்றி பெற்றார். இதனை எடுத்து பாமகவில் ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாக கட்சியில் பிளவு ஏற்பட்டது. இதனை அடுத்து கட்சியை நிறுவனர் ராமதாஸ் தலைமையில் சிலர் மேற்கு தொகுதியில் குக்கர் சின்னத்தில் ஏற்கனவே போட்டியிட்டு வெற்றி பெற்ற இரா அருள் மீண்டும் களம் கண்டார். ஏற்கனவே தொகுதி மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வீடு தேடி சென்று கோரிக்கைகளை பெற்று நிவர்த்தி செய்தது உள்ளிட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து இருந்தாலும் கூட அவர் வெற்றிவாக சுடவில்லை. இந்த நிலையில் தமிழகத்தில் வீசிய சூறாவளியில் தமிழக வெற்றி கழகம் அனைத்து திராவிட கட்சிகள் உட்பட பெரும்பாலான கட்சிகளை சின்னாபின்னமாகி இன்று மிகப்பெரும் கட்சியாக தமிழகத்தில் உருவெடுத்து அதன் கட்சியின் தலைவர் முதலமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளார். இந்த நிலையில் சேலம் மாநகர் மாவட்ட பாமக செயலாளர் முன்னாள் சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான இரா அருள் கட்சியை விட்டு விலகுவதாக நேற்று செய்திகள் வெளியாகின. இதை எடுத்து சில ஊடகங்கள் யூகத்தின் அடிப்படையில் பாமகவிலிருந்து விலகிய இரா அருள் தமிழக வெற்றி கழகத்தில் இணைவார் என்ற செய்தியை வெளிப்படுத்தி வந்த வண்ணமே இருந்தது. இதற்கு இன்று முற்றுப்புள்ளி வைத்துள்ள சேலம் மாநகர் மாவட்ட பாமக இளைஞரணி செயலாளர் விஜயகுமார். அவர் கூறியிருப்பதாவது, அரசியல் கட்சி மாற்றம் க
குறித்து எந்தவிதமான அறிவிப்பும் வெளியிடப்படாத நிலையில், அவர் கட்சி மாறுகின்றார் என்ற தகவல் உண்மைக்கு புறம்பானது என்று மாவட்ட இளைஞரணி செயலாளர் விஜயகுமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

திங்கள், 18 மே, 2026

தேசிய ஒடுக்கபட்ட மக்கள் குடியரசு ( இந்தியா ) இயக்கத்திற்கு அந்த வாய்ப்பு கொடுத்தால் தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் நிகழ்ந்து கொண்டு இருக்கும் ஊழல் புகார்களை, உண்மை அறியும்  குழ ( FACT FINDING COMMITTEE )  அமைத்து மாதம் ஒரு உண்மை ஊழல் அறிக்கை தமிழக முதல்வருக்கு நேர்மையாக உண்மையாக அளிக்கபடும். தமிழக முதல்வருக்கு தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு நிறுவனரும் தலைவருமான சரஸ்ராம் ரவிராமசாமி வேண்டுகோள்.

தேசிய ஒடுக்கபட்ட மக்கள் குடியரசு ( இந்தியா ) இயக்கத்திற்கு அந்த வாய்ப்பு கொடுத்தால் தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் நிகழ்ந்து கொண்டு இருக்கும் ஊழல் புகார்களை, உண்மை அறியும் குழ ( FACT FINDING COMMITTEE ) அமைத்து மாதம் ஒரு உண்மை ஊழல் அறிக்கை தமிழக முதல்வருக்கு நேர்மையாக உண்மையாக அளிக்கபடும். தமிழக முதல்வருக்கு தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு நிறுவனரும் தலைவருமான சரஸ்ராம் ரவிராமசாமி வேண்டுகோள்.

சேலம்,
S.K. சுரேஷ் பாபு.

தேசிய ஒடுக்கபட்ட மக்கள் குடியரசு ( இந்தியா ) இயக்கத்திற்கு அந்த வாய்ப்பு கொடுத்தால் தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் நிகழ்ந்து கொண்டு இருக்கும் ஊழல் புகார்களை, உண்மை அறியும்  குழ ( FACT FINDING COMMITTEE )  அமைத்து மாதம் ஒரு உண்மை ஊழல் அறிக்கை தமிழக முதல்வருக்கு நேர்மையாக உண்மையாக அளிக்கபடும். தமிழக முதல்வருக்கு தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு நிறுவனரும் தலைவருமான சரஸ்ராம் ரவிராமசாமி வேண்டுகோள். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அருகில், தமிழக முதல்வர் அவர்களே, தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களிலும் கல்வி, மருத்துவம்,  அரசு  துறைகளில் ஊழல் மலிந்து போய் உள்ளது. இதை தடுக்க பதியதாக ஊழல் தடுப்பு துறை  உருவாக்கபட வேண்டும். திரு சகாயம் போல் நேர்மையான அதிகாரிகளை நியமித்து 38 மாவட்ட குழ அமைக்கபட வேண்டும். மாதம் ஒரு முறை குழ கூடி அந்தந்த மாவட்ட ஊழல் விசயங்களை ஆதாரத்துடன் பட்டியலிட்டு அறிக்கை முதல்வருக்கு அளிக்கபட வேண்டும். என தேசிய ஒடுக்கபட்ட மக்கள் குடியரசு ( இந்தியா ) இயக்கத்திற்கு அந்த வாய்ப்பு கொடுத்தால் 38 மாவட்டங்களில்  உண்மை அறியும்  குழ ( FACT FINDING COMMITTEE )  அமைத்து மாதம் ஒரு உண்மை ஊழல் அறிக்கை தமிழக முதல்வருக்கு நேர்மையாக  உண்மையாக அளிக்கபடும் என்றும் கோரிக்கையின் வாயிலாக தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு நிறுவனரும் தலைவருமான சரஸ்ராம் ரவி ராமசாமி பதிவுத்துள்ளார்.

சனி, 16 மே, 2026

முதலைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம், நடிகர் சூர்யா நடித்த படத்தை பின்னுக்கு தள்ளி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. தன்னுடைய படத்தின் டைட்டிலை தனுஷ் திரைப்படத்திற்கு வைத்துள்ளது குறித்து வழக்கு போட்டுள்ளேன் என படத்தின் தயாரிப்பாளர் வேங்கை அய்யனார் சேலத்தில் பேட்டி

முதலைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம், நடிகர் சூர்யா நடித்த படத்தை பின்னுக்கு தள்ளி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. தன்னுடைய படத்தின் டைட்டிலை தனுஷ் திரைப்படத்திற்கு வைத்துள்ளது குறித்து வழக்கு போட்டுள்ளேன் என படத்தின் தயாரிப்பாளர் வேங்கை அய்யனார் சேலத்தில் பேட்டி

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

முதலைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம், நடிகர் சூர்யா நடித்த படத்தை பின்னுக்கு தள்ளி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. தன்னுடைய படத்தின் டைட்டிலை தனுஷ் திரைப்படத்திற்கு வைத்துள்ளது குறித்து வழக்கு போட்டுள்ளேன் என படத்தின் தயாரிப்பாளர் வேங்கை அய்யனார் சேலத்தில் பேட்டி

தயாரிப்பாளர் சங்கம் என்பது ஒரு தலைப்பட்சமாகவும் பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே சங்கமாக உள்ளது
 மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்த திரைப்படத்தின் பெயர்பதிவு செய்யப்பட்டது ஆனால் தனுஷ் படத்திற்கு இதனை பயன்படுத்தி விட்டதாகவும் குற்றம் சாட்டி  வழக்கு....

சேலம் மாவட்டம் மல்லூர் பேரூராட்சி சேர்ந்தவர் வேங்கை ஐயனார் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மல்லூர் பேரூராட்சியில் சுயேட்சையாக போட்டியிட்டு அவர் துணைத் தலைவராகவும் அவரது மனைவி தலைவராகவும் உள்ளனர். 30 ஆண்டுகளுக்கு மேலாக மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களையும் அவர்களுக்கான உதவிகளையும் செய்து வருகின்றனர் மக்கள் பணி போக தற்பொழுது திரைத்துறையில் அவர்களது பணியும் வந்துள்ளது குறிப்பாக ஏற்கனவே வெட்டு திரைபடம் வெளியானது.  இதனை தொடர்ந்து இந்த சமுதாயத்தில் தவறு செய்பவர்களை கண்டறிந்து அவர்களது உடல் அங்கங்களை வெட்டி முதலைக்கு வீசி தனது பலியை தீர்த்துக் கொள்ளும் நபர் ஒருவரை மையமாகக் கொண்டு படம் தயாரிக்க வேண்டும் என அடிப்படையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இந்த கரா திரைப்படம் தயாரிக்கப்பட்டது. 
தொடர்ந்து இன்று தமிழக முழுவதும் இந்த திரைப்படம் வெளியான நிலையில் மக்கள்
குழந்தைகளுடன் சென்று ஆர்வமாக இந்த முதலை மையமாக வைத்து வெளிவந்த படத்தை பார்த்து வருகின்றனர்.
சேலத்தில் உள்ள திரையரங்குகளில்
மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று நமது ஊரை சேர்ந்தவர் தயாரித்த படம் பார்க்க வேண்டும் என்ற மகிழ்ச்சியில் ஆரவாரத்துடன் சென்று படத்தை பார்த்து வருகின்றனர்.
தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளர் வேங்கை அய்யனார் கூறுகையில், தமிழ் திரைப்பட வரலாற்றில் முதலை மட்டும் மையமாக வைத்து இதுவரை திரைப்படம் எடுக்கப்படவில்லை இந்த திரைப்படம் மிகவும் அருமையாக வந்துள்ளது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் பிடித்த படமாக வெளிவந்துள்ளது. 
இந்த சூழலில் இன்று வெளியான நடிகர் சூர்யாவின் திரைப்படத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு தமிழக முழுவதும்  தற்பொழுது மக்கள் வரவேற்பு அதிகரித்ததை எடுத்து மேலும் 100 திரையரங்குகள் அதிகரிப்பதற்கான பணிகளும் தொடங்கியுள்ளது என்றும் இந்தத் திரைப்படத்தின் டைட்டில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தான் தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்துவிட்டேன். ஆனால் தன்னுடைய படத்தின் டைட்டிலை நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்துள்ள கர என்ற படத்திற்கு
பயன்படுத்தி உள்ளனர். இது குறித்து வழக்கு தொடர்ந்து உள்ளேன். இந்த திரைப்படத்தின் டைட்டில் முழுமையாக என்னை பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற அடிப்படையில் நான் தற்பொழுது இந்த திரைப்படத்தை வெளியிட்டுள்ளேன் என்றார். பழக்கடை சோதனைகளுக்கு பிறகு வெளிவந்துள்ள இந்த திரைப்படத்தினை தொடர்ந்து என்டர் தி டிராகன், தாலி மற்றும் தோனி பாய்ஸ் படங்களுக்கான பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அஜித் மற்றும் தனுஷ் ஆகியோரை வைத்து படம் இயக்க வேண்டும் என்ற ஆவலும் உள்ளதாகவும் அதற்கான காலம் நேரம் சூழல் அமைய வேண்டும் என்று குறிப்பிட்ட வேங்கை அய்யனார், 
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் என்பது ஒரு தலைவச்சமாகவும் குறிப்பாக அரசியல் சார்ந்தவர்களுக்கும் பணம் பலம் படைத்தவர்களுக்குமான தயாரிப்பாளர் சங்கமாகவே உள்ளது என்றும் குற்றம் சாட்டினார்.  இந்த திரைப்படத்தை தயாரித்து வெளியில் கொண்டு வருவதற்குள் மிகப்பெரிய சவாலாகவே இருந்தது எங்கு எடுத்தாலும் தடைகள் அச்சுறுத்தல்கள் என பல்வேறு தடைகளை கடந்து தான் இந்த திரைப்படம் தற்பொழுது வெளிவந்துள்ளது
மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது என்றார்.


வியாழன், 14 மே, 2026

அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலை வைத்து விற்பனை செய்தால் கடை பணியாளர்கள் மீது மிகக் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை. டாஸ்மாக் லிமிடெட் நிறுவனத்தின் சேலம் மாவட்ட மேலாளர் பன்னீர்செல்வம் கடும் எச்சரிக்கை.

அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலை வைத்து விற்பனை செய்தால் கடை பணியாளர்கள் மீது மிகக் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை. டாஸ்மாக் லிமிடெட் நிறுவனத்தின் சேலம் மாவட்ட மேலாளர் பன்னீர்செல்வம் கடும் எச்சரிக்கை.

சேலம், 
S.K. சுரேஷ்பாபு. 

அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலை வைத்து விற்பனை செய்தால் கடை பணியாளர்கள் மீது மிகக் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை. டாஸ்மாக் லிமிடெட் நிறுவனத்தின் சேலம் மாவட்ட மேலாளர் பன்னீர்செல்வம் கடும் எச்சரிக்கை. 

தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு அமைந்த உடன் தமிழக முழுவதும் 917 மதுபான கடைகள் மூடப்படுவது என முடிவு செய்து அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை அடுத்து தமிழ்நாடு அரசு மதுபான கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யும் பணியாளர்களை கண்டு கொள்ளாத மாவட்ட மேலாளர்கள் மீது மிகக் கடுமையான துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று இன்று தமிழக அரசு உத்தரவு ஒன்றினை பிறப்பித்தது. இது தொடர்பாக சேலம் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், 
மதுபான சில்லறை விற்பனை கடைகளில் தமிழக அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலை வைத்து விற்பனை செய்வதாக புகார்கள் தலைமை அலுவலகத்திற்கு வந்த வண்ணம் உள்ளது. கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யும் பணியாளர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் பார்வையில் காணும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் தலைமை அலுவலக சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட மேலாளரும் சேலம் மாவட்ட துணை ஆட்சியருமான பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார். எனவே சேலம் மாவட்டத்தில் இயங்கி வரும் மதுபான சில்லறை விற்பனை கடைகளில் பணியாற்றும் பணியாளர்கள் அனைவரும் தலைமை அலுவலக சுற்றறிக்கையை மீறி மதுபானங்களை அரசு நிர்ணயித்த விலையை விட ுதல் விலைக்கு விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட கடை பணியாளர்கள் மீது மிகக் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அனைத்து கடை பணியாளர்களுக்கும் தெரிவிக்கப்படுவதாக சேலம் மாவட்ட மேலாளர் பன்னீர்செல்வம் தனது சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 
கடந்த திமுக ஆட்சி காலத்தில் இதேபோன்று பலமுறை அப்போதைய அமைச்சராக இருந்த முத்துசாமி பல்வேறு வகையான எச்சரிக்கைகள் விடுத்தும், கண்டுகொள்ளாத ஒவ்வொரு மாவட்ட மேலாளர்களும் மாவட்டங்களில் பணியாற்றும் பணியாளர்களும், தற்பொழுது புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசின் உத்தரவை எவ்வாறு செயல்படுத்த போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

புதன், 13 மே, 2026

மருத்துவ காப்பீட்டி சுமார் 6 கோடி ஊழல் செய்த ஊழியரை மிரட்டி பறிமுதல் செய்த தரூன் மருத்துவ நிர்வாகம். பாதிக்கபட்ட சிகிச்சை பெற்ற அனைவருக்கும் திரும்ப கொடுக்க வேண்டும் தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு நிறுவனரும் தலைவர் ஆன சரஸ்ராம் ரவி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தல்.

மருத்துவ காப்பீட்டி சுமார் 6 கோடி ஊழல் செய்த ஊழியரை மிரட்டி பறிமுதல் செய்த தரூன் மருத்துவ நிர்வாகம். பாதிக்கபட்ட சிகிச்சை பெற்ற அனைவருக்கும் திரும்ப கொடுக்க வேண்டும் தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு நிறுவனரும் தலைவர் ஆன சரஸ்ராம் ரவி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தல்.

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

மருத்துவ காப்பீட்டி சுமார் 6 கோடி ஊழல் செய்த ஊழியரை மிரட்டி பறிமுதல் செய்த 
தரூன் மருத்துவ நிர்வாகம். பாதிக்கபட்ட சிகிச்சை பெற்ற அனைவருக்கும் திரும்ப கொடுக்க வேண்டும் தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு நிறுவனரும் தலைவர் ஆன சரஸ்ராம் ரவி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தல். 


சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே அமைந்துள்ள தரூன் சிறப்பு மருத்துவமனையில், நிகழ்ந்து வரும் மருத்துவ காப்பீட்டு ஊழல் குறித்து தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு அமைப்பின் நிறுவனரும் தலைவருமான சரஸ்ராம் ரவி அவர்களுக்கு பலகட்ட புகார்கள் வந்ததன் அடிப்படையில், அமைப்பின் தலைவர் சரஸ்ராம் ரவி தலைமையிலான உண்மை கண்டறியும் குழுவினர் அதிரடி விசாரணையில் இறங்கினர். இது குறித்து சரஸ்ராம் ரவி நம்முடைய கூறுகையில், கடந்த பல ஆண்டுகளாக சேலம் சீலநாயக்கன்பட்டி தருண் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெற்ற ஆயிரகணக்கான நோயாளிகளின் மருத்துவ சிகிச்சை செலவை அவர்களது காப்பீடு mediclaim Insurer T.P.A வாயிலாக பெறபட்டதுடன், சில மருத்துவமனை மருத்துவர்,  ஊழியர்கள் இன்சூரன்ஸ் தொகைக்கு மேலாக ஒவ்வொரு உள் சிகிச்சை பெற்ற நோயாளிகளிடமும் அதிகமான பணத்தை வாங்கி  உள்ளதாக தகவல் கிடைத்ததாகவும். அதன் அடிப்படையில் பல கோடி பணம் காப்பீட்டில் ஊழல் நடந்துள்ளதாக தெரிகிறது என்று குறிப்பிட்ட அவர், சில நாட்களுக்கு முன் மருத்துவமனை Audit செய்தபோது ஒரு ஊழியர் மட்டும் 6 கோடிகள் வரை பொது மக்கள் அதாவது தரூன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பொதுமக்களிடம் இன்சூரன்ஸ் தொகைக்கு மேலாக பணம் பெறபட்டு மருத்துவ மனை நிர்வாகத்தை ஏமாற்றி ஊழல் செய்திருப்பதை internal Audit நிர்வாகம்  கண்டுகிடிக்கபட்டுள்ளது என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். 
மேலும் சுமார் 6 கோடி ஊழல் செய்த ஒரு ஊழியரை மிரட்டி அவர் செய்த ஊழல் பணத்தில் வாங்கிய வீடு,  விவசாய நிலம், வங்கி ரொக்கம் சுமார் 50 லட்சம்  ஆக சுமார் 5 கோடி திரும்ப பெற்ற தரூன் மருத்துவ நிர்வாகம் அதை பாதிக்கபட்ட சிகிச்சை பெற்ற அனைவருக்கும் திரும்ப கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு அமைப்பின் நிறுவனரும் தலைவருமான சரஸ்ராம் ரவி தலைமையிலான உண்மை கண்டறியும் விசாரணை குழுவினர் நேற்று மருத்துவமனை நிர்வாகத்திடம் முறையிட்ட போது ஒரு நாள் கால அவகாசம் கேட்டுள்ளதாகவும் தவறும் பட்சத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை வேறு மாதிரியாக இருக்கும் என்றும் சரஸ்ராம்ரவி நமது தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 12 மே, 2026

சேலத்தில் பேரன்களின் ஆசைகளை நிறைவேற்றும் விதமாக இனிப்புகளை வழங்கி கொண்டாடி நிறைவேற்றிய தாத்தா. தமிழக விவசாயிகளின் பிரதான கோரிக்கையான காவிரி கோதாவரி இணைப்பு திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். தமிழக முதல்வர் விஜய் அவர்களுக்கு தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் சிவபெருமாள் வேண்டுகோள்.

சேலத்தில் பேரன்களின் ஆசைகளை நிறைவேற்றும் விதமாக இனிப்புகளை வழங்கி கொண்டாடி நிறைவேற்றிய தாத்தா. தமிழக விவசாயிகளின் பிரதான கோரிக்கையான காவிரி கோதாவரி இணைப்பு திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். தமிழக முதல்வர் விஜய் அவர்களுக்கு தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் சிவபெருமாள் வேண்டுகோள்.

சேலம், 
S.K. சுரேஷ்பாபு. 

சேலத்தில் பேரன்களின் ஆசைகளை நிறைவேற்றும் விதமாக இனிப்புகளை வழங்கி கொண்டாடி நிறைவேற்றிய தாத்தா. தமிழக விவசாயிகளின் பிரதான கோரிக்கையான காவிரி கோதாவரி இணைப்பு திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். தமிழக முதல்வர் விஜய் அவர்களுக்கு தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் சிவபெருமாள் வேண்டுகோள். 

தமிழகத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய சூறாவளியில் சிக்கி பிரதான கட்சிகளான திமுக அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளையும் சின்னாபின்னமாக்கி, தமிழக முதல்வராக பொறுப்பேற்றார் கட்சியின் தலைவர் விஜய். ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாத போதும் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் மற்றும் விசிக ஒலிக்க கட்சிகளின் ஆதரவால் தமிழக முதலமைச்சராக விஜய் நேற்று முன்தினம் பொறுப்பேற்றார். இந்த நிகழ்வை தமிழக முழுவதும் உள்ள விஜய் ரசிகர்களால் வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வந்த நிலையில், சேலத்தில் தமிழக விவசாயிகளின் சங்க மாநில தலைவர் சிவபெருமாள் அவர்களின் பேரன்களும் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றத்தை கொண்டாடும் விதமாக இனிப்புகளை வழங்கி கொண்டாட வேண்டும் என்று தனது தாத்தாவிடம் கேட்டுள்ளனர். 
இதற்கு இசைவு தெரிவித்து தமிழக விவசாயிகளின் சங்க மாநில தலைவர் சிவபெருமாள், சேலம் அழகாபுரம் பகுதியில் உள்ள உணவு விடுதி ஊழியர்கள், அந்த பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள், தேநீர் கடைக்காரர்கள் மற்றும் காவல் துறையினர் என அனைவருக்கும் இனிப்புகளை வழங்கி கொண்டாடி பேரண்களின் ஆசையை பூர்த்தி செய்து வைத்த நிகழ்வு அந்தப் பகுதியில் இடையே மிகுந்த வரவேற்பினை பெற்றுள்ளது. இது குறித்து தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் சிவபெருமாள் நம்முடைய கூறுகையில், 17 வது தமிழக சட்டப்பேரவைக்கான முதல் அமைச்சராக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அவர்கள் முதலமைச்சராக பொறுப்பேற்றதற்கு முதற்கண் தங்களது அமைப்பான தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் இதனை வரவேற்கும் விதமாக இன்று இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டதாகவும் தெரிவித்தார். 
மேலும் தமிழக விவசாயிகளின் தீர்க்கப்படாத கோரிக்கைகள் பல தற்பொழுது வரை தீர்க்கப்படாமல் இருப்பதாகவும், தற்பொழுது உள்ள சூழலில் தமிழக முதலமைச்சர் அவர்களையும் தமிழக விவசாயத்துறை அமைச்சர் அவர்களையும் சந்திக்கும் ஒரு தருவாய் கிடைக்கும் பட்சத்தில் அவர்களிடம் மூன்று பிரதான முக்கிய கோரிக்கைகளை முன்வைக்க உள்ளதாக தெரிவித்த சிவபெருமாள், தமிழக விவசாயிகளின் பிரதான கோரிக்கையான காவிரி கோதாவரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்றினால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து என்பது எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும் என்றும் ஆகவே கர்நாடகாவிடம் பாசன நீருக்காக கையேந்தும் அவசியம் தமிழக விவசாயிகளுக்கு ஏற்படாது என்று குறிப்பிட்டதோடு மேகதாதுவேல் கர்நாடகா அரசு அணை கட்டினால் என கட்டவில்லை என்றால் என்ற ஒரு சூழலும் உருவாகும் ஆகவே தமிழக முதல்வரையும் தமிழக விவசாயத் துறை அமைச்சரையும் சந்திக்கும் தருவாயில் இந்த கோரிக்கையை முன்வைக்கப்பட உள்ளதாக தெரிவித்த அவர் 100 நாள் வேலை திட்டத்தில் 124 நாட்கள் என  மாறுதல்கள் செய்த போதிலும்  குறிப்பாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளையும் சேர்க்க வேண்டும் கூலி குறைவு என பல சிக்கல்கள் உள்ளதால் தமிழக விவசாயிகளுக்கு 124 வேலை திட்டத்தில் பணி வழங்குவதோடு அவர்கள் ஏற்கனவே பணியாற்றும் பணியிடத்தில் பணியாற்றும்போது அவர்களுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் இதற்கு தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும் மற்றும் தமிழக விவசாயிகள் விளைவிக்கும் காய்கறி கனி வகைகளுக்கு உரிய விலை கிடைப்பது இல்லை சார்பாக கத்தரி தக்காளி செடி விதைகளை இலவசமாக தமிழகம் முழுவதும் வழங்க வேண்டும் இது தமிழக விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது என்றும் சிவபெருமாள் தெரிவித்தார்.