சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 11 லட்சம் ரூபாய் ஓய்வு பெற்ற அரசு ஊழியரிடமே வாங்கி ஏமாற்றிய சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறையில் பணியாற்றும் ஊழியர்களான பால்ராஜ் பால்ராஜ் மற்றும் கதிர்வேலன். ஆட்சியரின் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக வாதிக்கப்பட்ட ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வேதனையுடன் ஆதங்கம்.
சேலம் கன்னங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த அறிவழகன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவருக்கு சரோஜா என்ற மனைவியும்,
மகனும் உள்ளனர். இவர்களின் மகனின் அரசு பணிக்காக சேலம் மாவட்ட வருவாய் துறையில் பணி புரிந்து வரும் பால்ராஜ்( வட்டாச்சியர் - ஆவண காப்பகம் - மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ) மற்றும் அவரது சகோதரர் கதிர்வேல் ஆகியோர் அரசு பணி வாங்கி தருவதாக நம்ப வைத்து ரூ 11,00,000/ எங்களிடம் பெற்று 7 ஆண்டுகள் கடந்தும், பணம் திருப்பி தராமல் மோசடி செய்த அவரை துறை வாரிய விசாரணைக்கு உத்தரவிட்டு நீதி வழங்கிட கோரி வேதனையின் உச்சத்தில் ஆதங்கப்பட்டது சேலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் அரசு வேலை வாங்கி தந்துள்ளதாக ஆசை வார்த்தை கூறி நம்ப வைத்து ரூபாய் 11லட்சம் எங்களிடம் பெற்றனர். வேலை ஏதும் பெற்று தராமல், பணத்தையும் திரும்ப கொடுக்காமல் கடந்த 7 ஆண்டுகளாக ஏமாற்றி வருகின்றனர். தொடர்ந்து அவர்களை பணத்தை திருப்பி கொடுக்க வற்புறுத்தியதால் ரூ 4.50 லட்சம் சில ஆண்டுகளுக்கு முன் அளித்தனர். மீதி 6.50,000 ரூபாய் வேலைக்கு நேர்காணல் கடிதம் வந்து விடும் இல்லை என்றால் பணத்தை தந்து விடுவதாக கூறினர். ஆனால் காலம் கடந்த போதும், சேலம் மாவட்ட ( ஆவண காப்பக அதிகாரி ) பால்ராஜ.மற்றும் அவரது சகோதரர் கதிர்வேல் இருவரும் ஏமாற்றி அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் , எங்களிடமும் பண மோசடி செய்து வருவது மிக வேதனை அடைகின்றோம். கடன் வாங்கி கொடுத்த பணத்திற்கு வட்டி கட்டி மீள முடியவில்லை. என்பதை மிக மிக வருத்ததுடன் தங்களிடம் தெரிவித்து கொள்கின்றோம்.
இந்த அரசு அதிகாரி தனது அதிகார துஷ்பிரயோகம் செய்து பல நபர்களை பண மோசடி செய்து வரும் பால்ராஜ் மற்றும் அவரது சகோதரர் கதிர்வேல் ஆகியவரது மீதும், இந்த பண மோசடி புகார் மனு மீது உரிய விசாரணை மேற்கொண்டு, சேலம் மாவட்ட கோட்டாச்சியர், ( RDO) (அ) மாவட்ட வருவாய் அதிகாரி ( DRO )அவர்களின் விசாரணைக்கு உத்தரவிட கோருவதாகவும் தவறும் பட்சத்தில்,
அதற்கான ஆவணம்/ ஆடியோ சாட்சியங்களை அளிக்கின்றோம் என்றும் குறிப்பிட்டுள்ள ஓய்வு பெற்ற அரசு ஊழியரான அறிவழகன் தவறும் பட்சத்தில் வரும் திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் திருமதி டாக்டர் பிருந்தா தேவி அவர்களால் நடத்தப்படும் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் குடும்பத்தாருடன் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளது சேலம் மாவட்ட அரசு துறை அதிகாரிகள் வட்டத்தில் மிகுந்த பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.


