Latest

சனி, 14 ஜூன், 2025

உலக ரத்தக் கொடையாளர்கள் தினம். குருவிக்கொடை வழங்கி அசத்திய பார்பி குயின் ஊழியர்கள்.

உலக ரத்தக் கொடையாளர்கள் தினம். குருவிக்கொடை வழங்கி அசத்திய பார்பி குயின் ஊழியர்கள்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு.

உலக ரத்தக் கொடையாளர்கள் தினம். குருவிக்கொடை வழங்கி அசத்திய பார்பி குயின் ஊழியர்கள். 

உலக சுகாதார நிறுவனத்தால் ஆண்டுதோறும் ஜூன் 14ஆம் தேதி உலக ரத்த கொடையாளர்கள் தினமாக உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி உலக கொடையாளர்கள் தினமான இன்று சேலத்தில் பிரபல உணவகமான பார்பி குயின் நிறுவனம் மற்றும் சேலம் ரத்த வங்கி இணைந்து மாபெரும் ரத்ததான முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சேலம் குகை கிளை உணவகத்தில் நடைபெற்ற இந்த உலக இரத்த  கொடையாளர்கள் தினத்தில் சேலம் மாநகரம் சுற்றியுள்ள பார்பி குயின் நிறுவன ஊழியர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது குருவிகளை தானமாக வழங்கினர். திரைப்பட காமெடி மற்றும் குணச்சித்திர நடிகர் பெஞ்சமின் துவக்கி வைத்த இந்த முகாமில், குருதி கொடையாளரான பார்பி குயின் ஊழியர்களுக்கு நிர்வாகத்தின் சார்பில் நினைவு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந்த நிகழ்வில் பார்பி குயின் நிர்வாகத்தினர் ருத்ரகோடி, உமர் முக்தர், பீர் மைதீன் மற்றும் ரத்த வங்கியின் நிர்வாக இயக்குனர் மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வெள்ளி, 13 ஜூன், 2025

மண்டல அளவிலான வேளாண் கண்காட்சியில் அலை மோதிய விவசாயிகள் பொதுமக்கள் கூட்டம்..!

மண்டல அளவிலான வேளாண் கண்காட்சியில் அலை மோதிய விவசாயிகள் பொதுமக்கள் கூட்டம்..!


மண்டல அளவிலான வேளாண் கண்காட்சியில் அலை மோதிய விவசாயிகள் பொதுமக்கள் கூட்டம்..!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் சுங்கசாவடி அருகே வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் மண்டல அளவிலான வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கினை நேற்று முன்தினம்  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

இந்த கண்காட்சியானது வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடைத்துறை, சர்க்கரைத்துறை, வேளாண் பொறியியல் துறை என 13 தலைப்புகளின் கீழ் 218 அரங்குகள் அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 
இந்நிலையில், 3-வது நாள் மற்றும் நிறைவு நாளான இன்று கண்காட்சி காலை 8 மணிக்கு தொடங்கியது. 

இதில், காலை முதலே ஈரோடு மாவட்டம் மட்டும் அல்லாது கோவை, திருப்பூர், நீலகிரி, கரூர், சேலம், திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருச்சி போன்ற தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் அவர்களது குடும்பத்தினருடனும் வந்து ஆர்வமுடன் பார்வையிட்டனர். 
இதுதவிர வேளாண் கல்லூரி மாணவ-, மாணவிகள், பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் திரளாக வந்து கண்காட்சியினை பார்வையிட்டனர். 

முகப்பில் நவீன முறையில் சோளப்பயிர் சாகுபடி, விதவிதமான நெல் விதைகளுடன் சாகுபடி தொழில் நுட்ப காட்சி திடல், நகர்த்தி வைத்து கொள்ளும் வகையிலான மாட்டு பட்டி, கரும்பை வெட்டி, கட்டாக்கி லாரி, டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் ஏற்றும் இயந்திரம், வேலையாட்கள் பற்றாக்குறையை சமாளிக்கும் பல்வேறு நவீன இயந்திரங்களை பார்வையிட்டதுடன், செயல்பாடுகளை விவசாயிகளும், பொதுமக்களும் வேளாண் துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறிந்தனர்.


நெல், மஞ்சள், வாழை, முருங்கை உட்பட பல்வேறு பயிர்களில் குறைந்த நாட்களில் அதிக மகசூல் பெறும் ரகங்களை காட்சிப்படுத்தியதுடன், விதைகளையும் விற்பனை செய்தனர். 


பட்டன் காளான், சிப்பி களான் என காளான் வளர்ப்பு, பெர்ரி, புளூபெர்ரி பசுமை கூடில் உற்பத்தி, சின்ன வெங்காயம், பெரிய வெங்காய உற்பத்தி உயர்வுக்கான தொழில்நுட்ப விளக்க திடல், தென்னை மரம், நீரா பான உற்பத்தி என 60க்கும் மேற்பட்ட உழவர் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் அவர்களது உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்தி இருந்தனர். 


இயற்கை மற்றும் பழங்களில் உருவாக்கப்பட்ட ஐஸ்கிரீம், நீரா, டின்களில் இளநீர், கரும்பு சாறு போன்ற மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனை செய்து வருவது குறித்தும் காட்சிப்படுத்தினர். 


வேளாண் கண்காட்சியின் ஒவ்வொரு அரங்கிலும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு உரிய விளக்கம் அளித்து, அதற்கான துண்டு பிரசுரங்களையும் அலுவலர்கள் வழங்கினர். இதில், பாரம்பரிய நெல், மஞ்சள் பயிர்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்த அரங்கும், காளாண் வளர்ப்பு கூடில், பசுமை குடிலில் புளூ பெர்ரி வளர்ப்பு, முருங்கையில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்திக்கான அரங்குகள் விவசாயிகளின் கவனத்தை ஈர்த்தது. 


மண்டல அளவிலான வேளாண் கண்காட்சி இன்று மாலை 7 மணியுடன் நிறைவு பெறுவதால், விவசாயிகள், பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் ஏராளமான போலீசார், தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

வியாழன், 12 ஜூன், 2025

டாக்டர் ஐயாவை விட்டு விலகி அண்ணன் அன்புமணி அவர்களுடன் துணை நிற்கப் போவதாக விலகல் கடிதம். பசுமைத்தாயக மாநில இணை செயலாளர் சத்திரிய சேகரின் அறிக்கையால் சேலம் பாமகவினர் இடையே பரபரப்பு.

டாக்டர் ஐயாவை விட்டு விலகி அண்ணன் அன்புமணி அவர்களுடன் துணை நிற்கப் போவதாக விலகல் கடிதம். பசுமைத்தாயக மாநில இணை செயலாளர் சத்திரிய சேகரின் அறிக்கையால் சேலம் பாமகவினர் இடையே பரபரப்பு.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

தங்களது செயல்களால் பல லட்சக்கணக்கானோர் தங்களது மனதில் இருந்து விலகி உள்ள நிலையில், நீங்கள் நீக்கும் முன்பாக நானாக தங்களிடம் இருந்து விளக்குகிறேன். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸிற்கு சேலம் பசுமைத்தாயக நிர்வாகி அறிக்கையால் பரபரப்பு.


டாக்டர் ராமதாஸ் அவர்களுக்கும், டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கும் சமீபகாலமாக பனிப்போர் நிலவி வருவது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் ஆதரவாளர்களை மாவட்ட முழுவதும் உள்ள முக்கிய பொறுப்புகளில் இருந்து டாக்டர் ராமதாஸ் விளக்கி உள்ளது பாமகவினர் இடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உங்களது. இந்த நிலையில் சேலத்தைச் சேர்ந்த பசுமைத்தாயகம் அமைப்பின் மாநில இணை செயலாளர் சத்ரிய சேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஐயா, தங்களது செயல்களால் பல லட்சக்கணக்கானோர் உங்கள் மனதில் இருந்து விலகிய நிலையில் நீங்கள் நீக்கும் முன்பாக, நானாக உங்களிடம் இருந்து விலகிக் கொள்கிறேன். நன்றி .. நன்றி ..

கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும் என்று ஆழ்ந்த நம்பிக்கையோடு இருந்தோம்.
அதே நம்பிக்கையோடு  மாமல்லபுரத்தில் நடைபெற்ற இளைஞர் பெருவிழா மாநாட்டில் கலந்து கொண்டு மாநாட்டை இந்தியாவே வியந்து பார்க்கும் வகையில் "சின்ன அய்யா"அண்ணன் அன்புமணியால் வெற்றி பெறச் செய்தோம். அதற்குப் பிறகு ஏதேனும் நல்லது நடக்கும் என எண்ணியிருந்தோம். ஆனால் சட்டரீதியாக நீங்கள் சொன்ன அனைத்து பணிகளையும் சிறப்புடன் செய்து முடித்த, அருமை சகோதரர் வழக்கறிஞர் பாலு அவர்களை  கட்சிப் பொறுப்பில் இருந்து விடுவித்து ஐயா அவர்கள் அறிக்கை வெளியிட்ட பின்பு கடந்த காலங்களைப் போல, இந்த முறை கடந்து போக முடியலை. 
எதிர்கால பாட்டாளி மக்கள் கட்சி வளர்ச்சி பணிகளை கருத்தில் கொண்டு, மேலும் 10.5% இட ஒதுக்கீடு உள்ளிட்ட, மருத்துவர் ஐயா அவர்களின் பல்வேறு கனவுகளை நனவாக்கிட அண்ணன் மருத்துவர் அன்புமணி அவர்களுக்கு துணையாக இருப்போம்...
பல்லாயிரக்கணக்கான நண்பர்கள், பல்வேறு கட்சியினர் நேரிலும் மற்றும் தொலைபேசி வாயிலாகவும் தொடர்பு கொண்டு லட்சக்கணக்கான தொண்டர்களின் தியாகத்தில் உருவான இந்த இயக்கத்தை வளர்த்த ஐயா அவர்களே அழிவிற்கு பாதை வகுப்பது போல போல தெரிகிறதே என்றெல்லாம் கேட்கிறார்கள்.
மனம் மிகுந்த வேதனையோடு உள்ளது .. ஆனால் மக்கள் காவலர் தமிழின போராளி மருத்துவர் ஐயா அவர்களால் உருவாக்கப்பட்ட இந்த இயக்கத்தை, என்னை போன்று  லட்சக்கணக்கான தொண்டர்கள் இருக்கும் வரை,அழிக்க யாராலும் முடியாது. அதே நம்பிக்கையோடு அதை உறுதிப்படுத்தும் வகையில் அண்ணன் அன்புமணி அவர்களது கரங்களை,வலுவாக,  இறுகப்பற்றி இயக்கத்தை வலுப்படுத்துவோம் ... "சின்ன அய்யா" அண்ணன் அன்புமணி தலைமையில் எதிர்காலத்தில் ஆளும் அதிகாரத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியை கொண்டு செல்வோம். பெற்ற மகனுக்கு, ஒரே ஒரு செல்ல மகனுக்கு,மிகவும் திறமையான,"சின்னையா" அன்புமணி அவர்களுக்கே இந்த நிலை என்றால் நாங்கள் எல்லாம் எம்மாத்திரம்... வக்கீல் பாலு உள்ளிட்ட இந்த இயக்கத்தை வலுவாக்கிட உழைத்த எத்தனையோ மாவட்ட செயலாளர்கள் தலைவர்கள் நீக்கம் என்று சொல்லும் போது நாங்கள் எல்லாம் எம்மாத்திரம்...
கடந்த சுமார் 45 ஆண்டுகளுக்கும் மேலாக உங்களோடு பயணம் செய்த அந்த நினைவுகளோடு,கனத்த இதயத்தோடு, மீதி நான் இருக்கும் அந்த காலத்தையும் கடந்து செல்வேன்.நன்றி...
        சத்ரியசேகர். சி. பெ.
என்று குறிப்பிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையால் சேலம் மாநகரம் உட்பட மாவட்டம் முழுவதும் உள்ள பாமகவினுடைய கடும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. 





மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு ஜூன் 12 குறித்த காலத்தில்  இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார்...மேட்டூர் அணையின் வரலாற்றில் 92 வது முறையாக காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு.

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு ஜூன் 12 குறித்த காலத்தில் இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார்...மேட்டூர் அணையின் வரலாற்றில் 92 வது முறையாக காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு ஜூன் 12 குறித்த காலத்தில்  இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார். மேட்டூர் அணையின் வரலாற்றில் 92 வது முறையாக காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

,மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். இதன் மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் சுமார்  16.40 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
முதலில் குறுவைக்கும் பிறகு சம்பா, தாளடி  சாகுபடி என முப்போக விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கப்படும். 
5.30 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடியும், 8.90 லட்சம் ஏக்கரில் சம்பாவும், 4. 20லட்சம் ஏக்கரில் தாளடியும் சாகுபடி செய்யப்படும்.
காவிரி டெல்டா பாசனத்திற்கு குறிப்பிட்ட நாளான ஜூன் 12-ல் 19 முறையும், காலதாமதமாக 61 முறையும், ஜூன் 12 க்கு முன்பாக 11 முறை என இதுவரை  91 ஆண்டுகள் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் குறிப்பிட்ட நாளான ஜூன் 12-ல் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. நடப்பாண்டில் குறிப்பிட்ட காலகட்டமான 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்துள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பொதுப்பணித்துறை துறை அமைச்சர் ஏ. வா வேலு சுற்றுலா துறை அமைச்சர் ராஜேந்திரன் வேளாண்மை துறை அமைச்சர் எம்ஆர் கே. பன்னீர் செல்வம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர்
சேலம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டிஎம் செல்வகணபதி மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மணி   சேலம் மாவட்டம் ஆட்சியர் பிருந்தாதேவி உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

புதன், 11 ஜூன், 2025

சேலத்தில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி. வெற்றி முனையுடன் அசத்திய மாணாக்கர்கள்.

சேலத்தில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி. வெற்றி முனையுடன் அசத்திய மாணாக்கர்கள்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சேலத்தில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி. வெற்றி முனையுடன் அசத்திய மாணாக்கர்கள்.

தி ப்ரோ ஆக்சன் ஸ்போர்ட்ஸ் சார்பில் சேலம் மாவட்டத்தில் 4 roads அமைந்துள்ள தனியார் பள்ளியில்  ஆண் பெண் இருபாலரும் கலந்து கொண்ட சதுரங்க விளையாட்டுப் போட்டி  9, 13, 15 ஆகிய வயது   பிரிவுகளின் கீழ் நடைபெற்றது.  ஆண்பாலரில் முதல் 20 இடங்களை பிடித்தவர்களுக்கும் பெண்பாலரில் முதல் 15 இடங்கள் பிடித்தவருக்கும் மூன்று பிரிவுகளிலும் பதக்கங்களுடன் கோப்பைகள்  சேலம் மாவட்ட சதுரங்க விளையாட்டு சங்கத்தின் தலைவர் பாலகிருஷ்ணன் வழங்கினார்.  தி ப்ரோ ஆக்சன் ஸ்போர்ட்ஸ் நிறுவனர் நாகராஜ் உடன் இருந்தார். 15 வயதுக்கு மேற்பட்ட 99 வயது வரை உள்ள பிரிவில் கலந்து கொண்டு முதல் 10 இடங்களை பிடித்தவர்களுக்கு மொத்த பரிசுத்தொகையாக ரூபாய் 6000 பகிர்ந்து அளிக்கப்பட்டது.

செவ்வாய், 10 ஜூன், 2025

ஈரோடு பெருந்துறையில் இன்று மண்டல அளவிலான விவசாய கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

ஈரோடு பெருந்துறையில் இன்று மண்டல அளவிலான விவசாய கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்


ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே, மண்டல அளவிலான விவசாய கண்காட்சி மற்றும் கருத்தரங்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 11) தொடங்கி வைக்கிறார்.


சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வரும் திரு. ஸ்டாலின், திருப்பூரில் நடைபெறும் கட்சி நிர்வாகியின் குடும்ப வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பின்னர் பெருந்துறைக்குச் செல்வார். மதியம் 12.30 மணிக்கு கண்காட்சியைத் தொடங்கி வைத்து, விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, கூட்டத்தில் உரையாற்றுவார்.

தோட்டக்கலை மற்றும் தோட்டப் பயிர்கள் துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இரண்டு நாள் நிகழ்வில் 10 மாவட்டங்களைச் சேர்ந்த அரசுத் துறைகள் மற்றும் விவசாயிகள் பங்கேற்பார்கள். கண்காட்சியில் நவீன மற்றும் பாரம்பரிய விதைகள், பழச் செடிகள், தட்டு நாற்றுகள், பதப்படுத்தப்பட்ட விவசாய பொருட்கள், உரங்கள், பயிர் பாதுகாப்பு ரசாயனங்கள், நவீன விவசாய இயந்திரங்கள் மற்றும் நுண்ணீர் பாசன உபகரணங்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் அதிகாரிகள் மற்றும் கட்சியினர் செய்துள்ளனர்.

இதில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.சி சந்திரகுமார், திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளர் தோப்பு வெங்கடாசலம், தெற்கு மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார், செல்லப்பொன்னி, பொதுக்குழு உறுப்பினர் குமாரசாமி, மணிராசு, பகுதி செயலாளர் முருகேசன், ஒன்றிய செயலாளர் கேபி சாமி உள்ளிட்ட பலர் பங்கேற்று முழு வீச்சில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

A two-day free training camp will be held in Salem on the 28th and 29th for the 3-rd Asian Chess Boxing Championship to be held in Kolkata in July.

A two-day free training camp will be held in Salem on the 28th and 29th for the 3-rd Asian Chess Boxing Championship to be held in Kolkata in July.

சேலம்,
S.K.Suresh Babu.

A two-day free training camp will be held in Salem on the 28th and 29th for the 3-rd Asian Chess Boxing Championship to be held in Kolkata in July.

invitation for Asian and Indian Open ChessBoxing Championship. Tamilnadu Players and Previous Medalist.  and Tamilnadu State ChessBoxing Association arenge 2 Days  Free ChessBoxing Training Camp in June  28/29Salem:  
Player's and Coaches Can Participate in Tournament
Following the Player's 
Selection in the Asian and Indian Open Championship in July 10 to 12th Kolkata 
 Registration Your Name in tnscbaoffice@gmail.com chessboxingtn@gmail.com.
Contact: Mr  R. FAIZAHAMED General Secretary. Tamilnadu State ChessBoxing Association International Referee and Coach WCBO: Mobile number 9944154083/9944954083.