சேலம்,
S. K.சுரேஷ்பாபு.
சேலம் - ஓமலூர் சுங்கச்சாவடி நிர்வாகத்தின் சட்டவிரோதக் கட்டண வசூலைக் கண்டித்து, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருள் தலைமையில் சாலை மறியல் போராட்டம்.
சேலம் மாநகராட்சியின் நுழைவாயிலாக அமையும் ஓமலூர் சுங்கச்சாவடி, விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டுள்ளது. உண்மையில், தோப்பூரிலிருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள மல்லூருக்கு அப்பால், நாமக்கல் மாவட்ட நுழைவாயிலில் அமைக்கப்பட்டிருக்க வேண்டிய இந்தச் சுங்கச்சாவடி, ஓமலூரில் அமைக்கப்பட்டுள்ளதாகப் புகார்கள் உள்ளன. உள்ளூர் வாகனங்களுக்கான கட்டணம் ரூ.15-லிருந்து ரூ.60-ஆகவும், கனரக வாகனங்களுக்கான கட்டணம் ரூ.25-லிருந்து ரூ.200-ஆகவும் (ஒன்பது மடங்கு) உயர்த்தப்பட்டதை அறிந்ததும், சேலம் மேற்கு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஐ. அருள் தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் சுங்கச்சாவடி மற்றும் அதன் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையின்போது, டெல்லியில் உள்ள உயர் அதிகாரிகளிடம் பேசி கட்டணத்தைக் குறைக்க நடவடிக்கை எடுப்பதாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய (NHAI) திட்ட இயக்குநர் உறுதியளித்தார். இருப்பினும், உள்ளூர் மக்களுக்குக் கட்டணச் சலுகை வழங்கப்படாவிட்டால் விதிமுறைகளின்படி ஓமலூர் சுங்கச்சாவடி மூடப்பட வேண்டும் என்று வலியுறுத்திய போராட்டக்காரர்கள், ஒரு மாத கால அவகாசம் அளித்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் கோவிந்தன், இளைஞரணிச் செயலாளர் தமிழன் துரை செந்தில்குமார், மாங்கனி பாலு, மாவட்டச் செயலாளர் இளம்பிள்ளை பச்சமுத்து, செல்லப்பிள்ளைக்குட்டை கோவிந்தராஜ், கோணகப்பாடி ரத்தினவேல், விஜயராயா, என். சேகர், மகாதேவன், சக்தி, மணிகண்டன், கரிசல் குணா, சித்திவேல்முருகன், ஐ. தங்கம், மா. கோகிலா, மணி, கார்த்தி, சின்னசாமி, அருண், நிர்மல் மற்றும் பிற நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


