Latest

திங்கள், 25 மே, 2026

தமிழகத்தில் பாகுபாடு இன்றி அனைத்து விவசாயிகளுக்கும் கடந்த காலங்களைப்போல்  பாகுபாடு இன்றி அனைத்து விவசாயிகளின் பயிர் கடன் முழுவதுமாக தள்ளுபடி  செய்ய வேண்டும். தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி தமிழக முதலமைச்சருக்கு அறிக்கையின் வாயிலாக கோரிக்கை.

தமிழகத்தில் பாகுபாடு இன்றி அனைத்து விவசாயிகளுக்கும் கடந்த காலங்களைப்போல் பாகுபாடு இன்றி அனைத்து விவசாயிகளின் பயிர் கடன் முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டும். தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி தமிழக முதலமைச்சருக்கு அறிக்கையின் வாயிலாக கோரிக்கை.

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

தமிழகத்தில் பாகுபாடு இன்றி அனைத்து விவசாயிகளுக்கும் கடந்த காலங்களைப்போல்  பாகுபாடு இன்றி அனைத்து விவசாயிகளின் பயிர் கடன் முழுவதுமாக தள்ளுபடி  செய்ய வேண்டும். தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி தமிழக முதலமைச்சருக்கு அறிக்கையின் வாயிலாக கோரிக்கை.

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி கோரிக்கை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், 
தமிழ்நாடு அரசு, விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் வாங்கிய பயிர் கடனை இன்று தள்ளுபடி செய்துள்ளது. இதில் சிறு, குறு, பெரு விவசாயிகள் என்று பிரித்தாலும் சூழ்ச்சியுடன் பயிர் கடன் தள்ளுபடி செய்ததை, தமிழ்நாடு அரசு மறு பரிசீலனை செய்து பாகுபாடு இன்றி அனைத்து விவசாயிகளுக்கும் கடந்த காலங்களைப்போல்  பாகுபாடு இன்றி அனைத்து விவசாயிகளின் பயிர் கடன் முழுவதுமாக தள்ளுபடி  செய்ய வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை இந்த அறிக்கையின் மூலம் வலியுறுத்துகிறேன் என்றும் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி குறிப்பிட்டுள்ளார்.


வெள்ளி, 22 மே, 2026

மேகதாது அணை - மத்திய அரசு தலையிட்டு தமிழக விவசாயிகளை காக்க வேண்டும். தமிழக முதல்வர், மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசு தொடர்ந்து அடம்பிடித்தால், தமிழக அமைச்சரவையில் உள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களை வாபஸ் பெற வேண்டும் என தமிழக மக்கள் சார்பில் கோருகிறோம். தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசின் நிறுவனரும் தேசிய ஒருங்கிணைப்பாளருமான சரஸ்ராம் ரவிராமசாமி வலியுறுத்தல்

மேகதாது அணை - மத்திய அரசு தலையிட்டு தமிழக விவசாயிகளை காக்க வேண்டும். தமிழக முதல்வர், மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசு தொடர்ந்து அடம்பிடித்தால், தமிழக அமைச்சரவையில் உள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களை வாபஸ் பெற வேண்டும் என தமிழக மக்கள் சார்பில் கோருகிறோம். தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசின் நிறுவனரும் தேசிய ஒருங்கிணைப்பாளருமான சரஸ்ராம் ரவிராமசாமி வலியுறுத்தல்

சேலம், 
S.K. சுரேஷ் பாபு.
மேகதாது அணை - மத்திய அரசு தலையிட்டு தமிழக விவசாயிகளை காக்க வேண்டும். தமிழக முதல்வர், மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசு தொடர்ந்து அடம்பிடித்தால், தமிழக அமைச்சரவையில் உள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களை வாபஸ் பெற வேண்டும் என தமிழக மக்கள் சார்பில் கோருகிறோம். தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசின் நிறுவனரும் தேசிய ஒருங்கிணைப்பாளருமான சரஸ்ராம் ரவிராமசாமி வலியுறுத்தல்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள தனது செய்தி குறிப்பில், இந்தியா ஒரு கூட்டாட்சி குடியரசு நாடு. மாநிலங்கள் அனைத்தும் அரசியலமைப்புச் சட்டத்திற்கும், உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பதே இந்தியாவின் அடிப்படைத் தத்துவம். கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் முயற்சி, 2018 உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. இந்த அணை கட்டப்பட்டால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் 20 லட்சம் ஏக்கர் பாசன விவசாயம் முற்றிலும் அழிந்து, குடிநீர் பஞ்சம் ஏற்படும்.
கர்நாடக துணை முதல்வர் திரு. டி.கே. சிவக்குமார் அவர்களின் தமிழ்நாட்டிற்கு தடுக்க உரிமை இல்லை" என்ற பேச்சு, கூட்டாட்சி தத்துவத்திற்கும், மாநிலங்களுக்கு இடையேயான நல்லுறவுக்கும் எதிரானது. இந்த பொறுப்பற்ற பேச்சை அவர் உடனடியாக திரும்பப் பெற வேண்டும். தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு இயக்கத்தின் முக்கிய கோரிக்கைகளையும் பதிவிட்டுள்ளார்,. அதில்,
1. மத்திய அரசு, மேகதாது அணைக்கு அனுமதி வழங்கக் கூடாது. காவிரி மேலாண்மை ஆணையத்தை வலுப்படுத்தி, உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு உரிய நீரை உறுதி செய்ய வேண்டும்.

2. காங்கிரஸ் கட்சி தலைமை  திரு. மல்லிகார்ஜுன கார்கே, திரு. ராகுல் காந்தி அவர்கள் கர்நாடக அரசை கட்டுப்படுத்த வேண்டும். கூட்டணி தர்மத்தை காப்பாற்ற வேண்டும். இல்லையெனில் தமிழக மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு தக்க பாடம் புகட்டுவார்கள். 3. தமிழக முதல்வர், மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசு தொடர்ந்து அடம்பிடித்தால், தமிழக அமைச்சரவையில் உள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களை வாபஸ் பெற வேண்டும் என தமிழக மக்கள் சார்பில் கோருகிறோம்.
மாநிலங்கள் ஒன்றுக்கொன்று விட்டுக்கொடுத்து, வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே இந்திய ஜனநாயகத்தின் உயிர்நாடி. அதை கர்நாடக அரசு மறந்து விடக்கூடாது. நதிநீர் பிரச்சினையை அரசியலாக்கி மக்களை மோதவிடும் போக்கை காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட தேசிய கட்சிகள் கைவிட வேண்டும் என்றும்
சரஸ்ராம் ரவிராமசாமி  
தேசிய ஒருங்கிணைப்பாளர் & நிறுவனர் தனது அறிக்கையில் பதிவிட்டுள்ளார். 


தமிழக விவசாயிகளின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் மீறி மேகதாட்டில் அணை கட்டினால் தகர்த்தெறிவோம். கர்நாடக துணை முதலமைச்சர் டி கே சிவகுமாருக்கு தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி கடும் எச்சரிக்கை.

தமிழக விவசாயிகளின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் மீறி மேகதாட்டில் அணை கட்டினால் தகர்த்தெறிவோம். கர்நாடக துணை முதலமைச்சர் டி கே சிவகுமாருக்கு தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி கடும் எச்சரிக்கை.

சேலம், 
S.K. சுரேஷ்பாபு. 

தமிழக விவசாயிகளின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் மீறி மேகதாட்டில் அணை கட்டினால் தகர்த்தெறிவோம். கர்நாடக துணை முதலமைச்சர் டி கே சிவகுமாருக்கு தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி கடும் எச்சரிக்கை. 

நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி அறிக்கையின் வாயிலாக கர்நாடகா அரசுக்கு கடுமையான எச்சரிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். 
அதில் கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க தமிழ்நாட்டிற்கு எந்தவித உரிமையும் உரிமையும் இல்லை என்று கூறிய கர்நாடக துணை முதல்வர் டி கே சிவக்குமார் அவர்களுக்கு உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் பதிலடி கொடுப்பது என்னவென்றால், தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி பங்கேற்று தண்ணீரை கர்நாடக அரசு அங்கு உள்ள அணைகளில் தேக்கி வைக்க எந்த தார்மீக உரிமையும் கிடையாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்திற்கு உண்டான காவிரி பங்கேற்று தண்ணீரை தினம்தோறும் விகிதாச்சார அடிப்படையில் திறக்க வேண்டும். மேலும் தமிழகத்தை பொறுத்தவரை காவிரி ஆற்றின் பாசனப்பகுதி பெரும்பாலும் குருவை, சம்பா மற்றும் தாளடி இரு போகத்தை சாகுபடி பொருத்தவரை ஆண்டுக்கு சுமார் 20 லட்சம் ஏக்கருக்கும் மேல் பாசன பகுதி உள்ளது. காவிரி ஆற்றின் பொருத்தமட்டில் முழு உரிமையும் தமிழ்நாட்டிற்கே உள்ளது. என கர்நாடகா அரசு நன்கு உணர வேண்டும். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சி செய்து அதற்கான பணி தொடங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டால் தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்க தமிழக விவசாயிகள் ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம். இதற்காக இரத்தம் சிந்தவும் தயங்க மாட்டோம். மேலும் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் தலைமையிலான தமிழக விவசாயிகளின் மிகப்பெரிய அளவில் ஒன்று திரட்டி வந்து மேகதாட்டில் அணை கட்டினால் தகர்த்தெறிவோம் என்று அறிக்கையின் வாயிலாக கர்நாடகா அரசை மிகக் கடுமையாக எச்சரிக்கின்றேன் என்று தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி பதிவிட்டுள்ளார்.

செவ்வாய், 19 மே, 2026

சேலம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் இரா.அருள் த.வெ.க வில் இணைவது உண்மையல்ல எந்த கட்சிக்கும் செல்லவில்லை. சேலம் மாவட்ட பாமக இளைஞரணி செயலாளர் விஜயகுமார் திட்டவட்டம்.

சேலம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் இரா.அருள் த.வெ.க வில் இணைவது உண்மையல்ல எந்த கட்சிக்கும் செல்லவில்லை. சேலம் மாவட்ட பாமக இளைஞரணி செயலாளர் விஜயகுமார் திட்டவட்டம்.

சேலம், 
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் இரா.அருள் த.வெ.க வில் இணைவது உண்மையல்ல எந்த கட்சிக்கும் செல்லவில்லை. சேலம் மாவட்ட பாமக இளைஞரணி செயலாளர் விஜயகுமார் திட்டவட்டம். 


சேலம் மாணவர் மாவட்ட பாமக மாவட்ட செயலாளராக இருப்பவர் இரா அருள். இவர் ஏற்கனவே பாமகவில் பிளவு ஏற்படாத பட்சத்தில் சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதியில் பாமக சார்பில் போட்டியிட்டு மகத்தான வெற்றி பெற்றார். இதனை எடுத்து பாமகவில் ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாக கட்சியில் பிளவு ஏற்பட்டது. இதனை அடுத்து கட்சியை நிறுவனர் ராமதாஸ் தலைமையில் சிலர் மேற்கு தொகுதியில் குக்கர் சின்னத்தில் ஏற்கனவே போட்டியிட்டு வெற்றி பெற்ற இரா அருள் மீண்டும் களம் கண்டார். ஏற்கனவே தொகுதி மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வீடு தேடி சென்று கோரிக்கைகளை பெற்று நிவர்த்தி செய்தது உள்ளிட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து இருந்தாலும் கூட அவர் வெற்றிவாக சுடவில்லை. இந்த நிலையில் தமிழகத்தில் வீசிய சூறாவளியில் தமிழக வெற்றி கழகம் அனைத்து திராவிட கட்சிகள் உட்பட பெரும்பாலான கட்சிகளை சின்னாபின்னமாகி இன்று மிகப்பெரும் கட்சியாக தமிழகத்தில் உருவெடுத்து அதன் கட்சியின் தலைவர் முதலமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளார். இந்த நிலையில் சேலம் மாநகர் மாவட்ட பாமக செயலாளர் முன்னாள் சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான இரா அருள் கட்சியை விட்டு விலகுவதாக நேற்று செய்திகள் வெளியாகின. இதை எடுத்து சில ஊடகங்கள் யூகத்தின் அடிப்படையில் பாமகவிலிருந்து விலகிய இரா அருள் தமிழக வெற்றி கழகத்தில் இணைவார் என்ற செய்தியை வெளிப்படுத்தி வந்த வண்ணமே இருந்தது. இதற்கு இன்று முற்றுப்புள்ளி வைத்துள்ள சேலம் மாநகர் மாவட்ட பாமக இளைஞரணி செயலாளர் விஜயகுமார். அவர் கூறியிருப்பதாவது, அரசியல் கட்சி மாற்றம் க
குறித்து எந்தவிதமான அறிவிப்பும் வெளியிடப்படாத நிலையில், அவர் கட்சி மாறுகின்றார் என்ற தகவல் உண்மைக்கு புறம்பானது என்று மாவட்ட இளைஞரணி செயலாளர் விஜயகுமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

திங்கள், 18 மே, 2026

தேசிய ஒடுக்கபட்ட மக்கள் குடியரசு ( இந்தியா ) இயக்கத்திற்கு அந்த வாய்ப்பு கொடுத்தால் தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் நிகழ்ந்து கொண்டு இருக்கும் ஊழல் புகார்களை, உண்மை அறியும்  குழ ( FACT FINDING COMMITTEE )  அமைத்து மாதம் ஒரு உண்மை ஊழல் அறிக்கை தமிழக முதல்வருக்கு நேர்மையாக உண்மையாக அளிக்கபடும். தமிழக முதல்வருக்கு தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு நிறுவனரும் தலைவருமான சரஸ்ராம் ரவிராமசாமி வேண்டுகோள்.

தேசிய ஒடுக்கபட்ட மக்கள் குடியரசு ( இந்தியா ) இயக்கத்திற்கு அந்த வாய்ப்பு கொடுத்தால் தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் நிகழ்ந்து கொண்டு இருக்கும் ஊழல் புகார்களை, உண்மை அறியும் குழ ( FACT FINDING COMMITTEE ) அமைத்து மாதம் ஒரு உண்மை ஊழல் அறிக்கை தமிழக முதல்வருக்கு நேர்மையாக உண்மையாக அளிக்கபடும். தமிழக முதல்வருக்கு தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு நிறுவனரும் தலைவருமான சரஸ்ராம் ரவிராமசாமி வேண்டுகோள்.

சேலம்,
S.K. சுரேஷ் பாபு.

தேசிய ஒடுக்கபட்ட மக்கள் குடியரசு ( இந்தியா ) இயக்கத்திற்கு அந்த வாய்ப்பு கொடுத்தால் தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் நிகழ்ந்து கொண்டு இருக்கும் ஊழல் புகார்களை, உண்மை அறியும்  குழ ( FACT FINDING COMMITTEE )  அமைத்து மாதம் ஒரு உண்மை ஊழல் அறிக்கை தமிழக முதல்வருக்கு நேர்மையாக உண்மையாக அளிக்கபடும். தமிழக முதல்வருக்கு தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு நிறுவனரும் தலைவருமான சரஸ்ராம் ரவிராமசாமி வேண்டுகோள். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அருகில், தமிழக முதல்வர் அவர்களே, தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களிலும் கல்வி, மருத்துவம்,  அரசு  துறைகளில் ஊழல் மலிந்து போய் உள்ளது. இதை தடுக்க பதியதாக ஊழல் தடுப்பு துறை  உருவாக்கபட வேண்டும். திரு சகாயம் போல் நேர்மையான அதிகாரிகளை நியமித்து 38 மாவட்ட குழ அமைக்கபட வேண்டும். மாதம் ஒரு முறை குழ கூடி அந்தந்த மாவட்ட ஊழல் விசயங்களை ஆதாரத்துடன் பட்டியலிட்டு அறிக்கை முதல்வருக்கு அளிக்கபட வேண்டும். என தேசிய ஒடுக்கபட்ட மக்கள் குடியரசு ( இந்தியா ) இயக்கத்திற்கு அந்த வாய்ப்பு கொடுத்தால் 38 மாவட்டங்களில்  உண்மை அறியும்  குழ ( FACT FINDING COMMITTEE )  அமைத்து மாதம் ஒரு உண்மை ஊழல் அறிக்கை தமிழக முதல்வருக்கு நேர்மையாக  உண்மையாக அளிக்கபடும் என்றும் கோரிக்கையின் வாயிலாக தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு நிறுவனரும் தலைவருமான சரஸ்ராம் ரவி ராமசாமி பதிவுத்துள்ளார்.

சனி, 16 மே, 2026

முதலைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம், நடிகர் சூர்யா நடித்த படத்தை பின்னுக்கு தள்ளி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. தன்னுடைய படத்தின் டைட்டிலை தனுஷ் திரைப்படத்திற்கு வைத்துள்ளது குறித்து வழக்கு போட்டுள்ளேன் என படத்தின் தயாரிப்பாளர் வேங்கை அய்யனார் சேலத்தில் பேட்டி

முதலைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம், நடிகர் சூர்யா நடித்த படத்தை பின்னுக்கு தள்ளி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. தன்னுடைய படத்தின் டைட்டிலை தனுஷ் திரைப்படத்திற்கு வைத்துள்ளது குறித்து வழக்கு போட்டுள்ளேன் என படத்தின் தயாரிப்பாளர் வேங்கை அய்யனார் சேலத்தில் பேட்டி

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

முதலைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம், நடிகர் சூர்யா நடித்த படத்தை பின்னுக்கு தள்ளி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. தன்னுடைய படத்தின் டைட்டிலை தனுஷ் திரைப்படத்திற்கு வைத்துள்ளது குறித்து வழக்கு போட்டுள்ளேன் என படத்தின் தயாரிப்பாளர் வேங்கை அய்யனார் சேலத்தில் பேட்டி

தயாரிப்பாளர் சங்கம் என்பது ஒரு தலைப்பட்சமாகவும் பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே சங்கமாக உள்ளது
 மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்த திரைப்படத்தின் பெயர்பதிவு செய்யப்பட்டது ஆனால் தனுஷ் படத்திற்கு இதனை பயன்படுத்தி விட்டதாகவும் குற்றம் சாட்டி  வழக்கு....

சேலம் மாவட்டம் மல்லூர் பேரூராட்சி சேர்ந்தவர் வேங்கை ஐயனார் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மல்லூர் பேரூராட்சியில் சுயேட்சையாக போட்டியிட்டு அவர் துணைத் தலைவராகவும் அவரது மனைவி தலைவராகவும் உள்ளனர். 30 ஆண்டுகளுக்கு மேலாக மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களையும் அவர்களுக்கான உதவிகளையும் செய்து வருகின்றனர் மக்கள் பணி போக தற்பொழுது திரைத்துறையில் அவர்களது பணியும் வந்துள்ளது குறிப்பாக ஏற்கனவே வெட்டு திரைபடம் வெளியானது.  இதனை தொடர்ந்து இந்த சமுதாயத்தில் தவறு செய்பவர்களை கண்டறிந்து அவர்களது உடல் அங்கங்களை வெட்டி முதலைக்கு வீசி தனது பலியை தீர்த்துக் கொள்ளும் நபர் ஒருவரை மையமாகக் கொண்டு படம் தயாரிக்க வேண்டும் என அடிப்படையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இந்த கரா திரைப்படம் தயாரிக்கப்பட்டது. 
தொடர்ந்து இன்று தமிழக முழுவதும் இந்த திரைப்படம் வெளியான நிலையில் மக்கள்
குழந்தைகளுடன் சென்று ஆர்வமாக இந்த முதலை மையமாக வைத்து வெளிவந்த படத்தை பார்த்து வருகின்றனர்.
சேலத்தில் உள்ள திரையரங்குகளில்
மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று நமது ஊரை சேர்ந்தவர் தயாரித்த படம் பார்க்க வேண்டும் என்ற மகிழ்ச்சியில் ஆரவாரத்துடன் சென்று படத்தை பார்த்து வருகின்றனர்.
தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளர் வேங்கை அய்யனார் கூறுகையில், தமிழ் திரைப்பட வரலாற்றில் முதலை மட்டும் மையமாக வைத்து இதுவரை திரைப்படம் எடுக்கப்படவில்லை இந்த திரைப்படம் மிகவும் அருமையாக வந்துள்ளது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் பிடித்த படமாக வெளிவந்துள்ளது. 
இந்த சூழலில் இன்று வெளியான நடிகர் சூர்யாவின் திரைப்படத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு தமிழக முழுவதும்  தற்பொழுது மக்கள் வரவேற்பு அதிகரித்ததை எடுத்து மேலும் 100 திரையரங்குகள் அதிகரிப்பதற்கான பணிகளும் தொடங்கியுள்ளது என்றும் இந்தத் திரைப்படத்தின் டைட்டில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தான் தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்துவிட்டேன். ஆனால் தன்னுடைய படத்தின் டைட்டிலை நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்துள்ள கர என்ற படத்திற்கு
பயன்படுத்தி உள்ளனர். இது குறித்து வழக்கு தொடர்ந்து உள்ளேன். இந்த திரைப்படத்தின் டைட்டில் முழுமையாக என்னை பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற அடிப்படையில் நான் தற்பொழுது இந்த திரைப்படத்தை வெளியிட்டுள்ளேன் என்றார். பழக்கடை சோதனைகளுக்கு பிறகு வெளிவந்துள்ள இந்த திரைப்படத்தினை தொடர்ந்து என்டர் தி டிராகன், தாலி மற்றும் தோனி பாய்ஸ் படங்களுக்கான பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அஜித் மற்றும் தனுஷ் ஆகியோரை வைத்து படம் இயக்க வேண்டும் என்ற ஆவலும் உள்ளதாகவும் அதற்கான காலம் நேரம் சூழல் அமைய வேண்டும் என்று குறிப்பிட்ட வேங்கை அய்யனார், 
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் என்பது ஒரு தலைவச்சமாகவும் குறிப்பாக அரசியல் சார்ந்தவர்களுக்கும் பணம் பலம் படைத்தவர்களுக்குமான தயாரிப்பாளர் சங்கமாகவே உள்ளது என்றும் குற்றம் சாட்டினார்.  இந்த திரைப்படத்தை தயாரித்து வெளியில் கொண்டு வருவதற்குள் மிகப்பெரிய சவாலாகவே இருந்தது எங்கு எடுத்தாலும் தடைகள் அச்சுறுத்தல்கள் என பல்வேறு தடைகளை கடந்து தான் இந்த திரைப்படம் தற்பொழுது வெளிவந்துள்ளது
மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது என்றார்.


வியாழன், 14 மே, 2026

அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலை வைத்து விற்பனை செய்தால் கடை பணியாளர்கள் மீது மிகக் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை. டாஸ்மாக் லிமிடெட் நிறுவனத்தின் சேலம் மாவட்ட மேலாளர் பன்னீர்செல்வம் கடும் எச்சரிக்கை.

அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலை வைத்து விற்பனை செய்தால் கடை பணியாளர்கள் மீது மிகக் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை. டாஸ்மாக் லிமிடெட் நிறுவனத்தின் சேலம் மாவட்ட மேலாளர் பன்னீர்செல்வம் கடும் எச்சரிக்கை.

சேலம், 
S.K. சுரேஷ்பாபு. 

அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலை வைத்து விற்பனை செய்தால் கடை பணியாளர்கள் மீது மிகக் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை. டாஸ்மாக் லிமிடெட் நிறுவனத்தின் சேலம் மாவட்ட மேலாளர் பன்னீர்செல்வம் கடும் எச்சரிக்கை. 

தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு அமைந்த உடன் தமிழக முழுவதும் 917 மதுபான கடைகள் மூடப்படுவது என முடிவு செய்து அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை அடுத்து தமிழ்நாடு அரசு மதுபான கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யும் பணியாளர்களை கண்டு கொள்ளாத மாவட்ட மேலாளர்கள் மீது மிகக் கடுமையான துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று இன்று தமிழக அரசு உத்தரவு ஒன்றினை பிறப்பித்தது. இது தொடர்பாக சேலம் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், 
மதுபான சில்லறை விற்பனை கடைகளில் தமிழக அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலை வைத்து விற்பனை செய்வதாக புகார்கள் தலைமை அலுவலகத்திற்கு வந்த வண்ணம் உள்ளது. கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யும் பணியாளர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் பார்வையில் காணும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் தலைமை அலுவலக சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட மேலாளரும் சேலம் மாவட்ட துணை ஆட்சியருமான பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார். எனவே சேலம் மாவட்டத்தில் இயங்கி வரும் மதுபான சில்லறை விற்பனை கடைகளில் பணியாற்றும் பணியாளர்கள் அனைவரும் தலைமை அலுவலக சுற்றறிக்கையை மீறி மதுபானங்களை அரசு நிர்ணயித்த விலையை விட ுதல் விலைக்கு விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட கடை பணியாளர்கள் மீது மிகக் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அனைத்து கடை பணியாளர்களுக்கும் தெரிவிக்கப்படுவதாக சேலம் மாவட்ட மேலாளர் பன்னீர்செல்வம் தனது சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 
கடந்த திமுக ஆட்சி காலத்தில் இதேபோன்று பலமுறை அப்போதைய அமைச்சராக இருந்த முத்துசாமி பல்வேறு வகையான எச்சரிக்கைகள் விடுத்தும், கண்டுகொள்ளாத ஒவ்வொரு மாவட்ட மேலாளர்களும் மாவட்டங்களில் பணியாற்றும் பணியாளர்களும், தற்பொழுது புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசின் உத்தரவை எவ்வாறு செயல்படுத்த போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.