Latest

சனி, 25 ஜூலை, 2026

மேகதாது விவகாரம் தொடர்பாக  தமிழக முதல்வர்  அனைத்து கட்சி கூட்ட வேண்டும். விவசாய சங்க பிரதிநிதிகளின்  கருத்துகளை கேட்டு அதன் அடிப்படையில் தமிழகத்தின் உரிமையை கர்நாகாவிடம் இருந்து நிலைநாட்ட வேண்டும். தமிழகம் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி தமிழக முதல்வருக்கு வலியுறுத்தல்.

மேகதாது விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் அனைத்து கட்சி கூட்ட வேண்டும். விவசாய சங்க பிரதிநிதிகளின் கருத்துகளை கேட்டு அதன் அடிப்படையில் தமிழகத்தின் உரிமையை கர்நாகாவிடம் இருந்து நிலைநாட்ட வேண்டும். தமிழகம் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி தமிழக முதல்வருக்கு வலியுறுத்தல்.

நாமக்கல்,
S.K.சுரேஷ்பாபு.

மேகதாது விவகாரம் தொடர்பாக  தமிழக முதல்வர்  அனைத்து கட்சி கூட்ட வேண்டும். விவசாய சங்க பிரதிநிதிகளின்  கருத்துகளை கேட்டு அதன் அடிப்படையில் தமிழகத்தின் உரிமையை கர்நாகாவிடம் இருந்து நிலைநாட்ட வேண்டும். தமிழகம் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி தமிழக முதல்வருக்கு வலியுறுத்தல். 

தமிழக விவசாயிகளின் குறிப்பாக டெல்டா மாவட்ட விவசாய பெருங்குடி மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் மீறி மேகதாதுவில் அணை கட்டிய தீருவேன் என்பது கர்நாடக அரசின் கொள்கை முடிவாகவே இருந்து வருகிறது. இது தொடர்பாக தமிழக அரசின் சார்பில் மத்திய அரசிடம் புகார் அளித்தும் கை விரித்த நிலையில் உச்ச நீதிமன்றம் மேகதாது விவகாரம் தொடர்பாக தமிழக அரசுக்கு ஆதரவாக தீர்ப்பு அளித்தது ஆனால் அந்தத் தீர்ப்பினை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவகுமார் மேகதாதில் அணை கட்டிய தீருவோம் என்பதில் உறுதியாக இருந்து அதற்கான முன்னேற்பாடு பணிகளையும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். கர்நாடக முதல்வரின் இந்த செயல் தமிழக விவசாயிகளிடையே மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்திய எடுத்து தமிழக கர்நாடக எல்லையான ஓசூர் பகுதியில் நாள்தோறும் பதற்றமான சூழலே இருந்து வருகிறது. 
இதனையே இந்த விவகாரம் தொடர்பாக உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி ஒவ்வொரு நாளும் கர்நாடகா அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை அறிவித்து அதனை முன்னெடுத்தும் நிகழ்த்தி வருகின்றார். இது ஒரு புறம் இருக்க இன்று தமிழக கர்நாடக எல்லையில் கர்நாடக விவசாயிகள் மேற்கொள்ளும் போராட்டத்தின் காரணமாக தமிழகத்திலிருந்து கர்நாடகா செல்லும் பேருந்துகள் அனைத்தும் ஓசூர் வரை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இது ஒரு புறம் இருக்க, மேதாது அணை விவகாரம் தொடர்பாகவும் காவிரியில் தமிழகத்திற்கு உண்டான பங்கீட்டு நீரை வழங்குவது தொடர்பாக ஆகஸ்ட் 3ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்த கர்நாடகாவிற்கு வருமாறு தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை ஏற்று தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆகஸ்ட் 3ஆம் தேதி கர்நாடக மாநில தலைநகர் பெங்களூர் செல்ல உள்ளதாக தமிழக அமைச்சரும் உறுதிப்படுத்தினார். இந்த நிலையில், மேகதாது  விவகாரம் தொடர்பாக, கர்நாடக முதல்வரை தமிழக முதல்வர் சந்திக்கக் கூடாது என்று தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக தமிழக எதிர் கட்சி தலைவர், மு.க. ஸ்டாலின், பாமக தலைவர்  அன்புமணி, அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிச்சாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன், விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர் பாண்டியன், நாம் தமிழர் கட்சி நிர்வாகி உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்த வண்ணம் உள்ளனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு எதுவும் செய்யாத நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் மீறி, மேகதாதுவில் அணை கட்டியே தீருவேன் என்று ஒற்றை காலில் நிற்கும் டி.கே. சிவக்குமாரிடம் என்ன பேச வேண்டி உள்ளது என்பது அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களின் ஒட்டுமொத்த கேள்வியாகவே உள்ளது. இரு மாநில முதல்வர்கள் சந்திப்பு நடைபெறக்கூடாது, இது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக முதல்வர் கூட்ட வேண்டும் என்று கோரிக்கையும் எழுந்துள்ளது. 
இது குறித்து உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி தெரிவிக்கையில், இந்த விவகாரம்  சம்பந்தமாக தமிழக முதல்வர் அவர்கள் அனைத்து கட்சி கூட்டம் கூட்டி, ஒட்டுமொத்த தமிழக விவசாயிகளின்  கருத்துகளை கேட்டு, அதன் அடிப்படையில் தமிழகத்தின் உரிமையை கர்நாகாவிடம்  நிலைநாட்ட வேண்டும் என்றும் தமிழக விவசாயிகள் சங்க தலைவர் வேலுச்சாமி வலியுறுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் தமிழக விவசாயிகளின் நலன் மற்றும்  கர்நாடக முதல்வரின் செயல்பாடு குறித்தும் பல்வேறு கோரிக்கை அடங்கிய மனுவை நேற்றைய தினம் தமிழக விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்  மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரிடம் வழங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
சேலம் மத்திய சட்டக் கல்லூரியில் நுகர்வோர் நீதிமன்றங்களுக்குப் பதிலாக சிறப்பு மருத்துவத் தீர்ப்பாயங்களை அமைத்தல் தொடர்பாக சேலம் முக்கிய கொள்கை சீர்திருத்தத்தை முன்னெடுத்தல் நிகழ்வு.

சேலம் மத்திய சட்டக் கல்லூரியில் நுகர்வோர் நீதிமன்றங்களுக்குப் பதிலாக சிறப்பு மருத்துவத் தீர்ப்பாயங்களை அமைத்தல் தொடர்பாக சேலம் முக்கிய கொள்கை சீர்திருத்தத்தை முன்னெடுத்தல் நிகழ்வு.

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

சேலம் மத்திய சட்டக் கல்லூரியில் நுகர்வோர் நீதிமன்றங்களுக்குப் பதிலாக சிறப்பு மருத்துவத் தீர்ப்பாயங்களை அமைத்தல் தொடர்பாக சேலம் முக்கிய கொள்கை சீர்திருத்தத்தை முன்னெடுத்தல் நிகழ்வு.

சேலம் மத்திய சட்டக் கல்லூரி, 'மருத்துவத் தீர்ப்பாயத்தின் தேவை' என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு, 2026 ஆம் ஆண்டுக்கான கல்லூரிகளுக்கு இடையேயான கொள்கை வரைவுப் போட்டியை நடத்தியது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிறைவு விழா, கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய மத்திய சட்டக் கல்லூரியின் தலைவர் திரு. சரவணன் தனபாலன், சிறப்பு மருத்துவத் தீர்ப்பளிப்பின் அவசியத்தை எடுத்துரைத்துத் தனது தலைமை உரையை ஆற்றினார். நுகர்வோர் பாதுகாப்பு மன்றங்களில் உள்ள அனைத்து வழக்குகளிலும் 15% மருத்துவ அலட்சியம் தொடர்பானவை என்றும், நாட்டின் மொத்த மருத்துவ அலட்சிய வழக்குகளில் 9% முதல் 11% வரை தமிழ்நாட்டில் மட்டுமே உருவாகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார். நோயாளிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மருத்துவர்களின் கண்ணியத்தைக் காப்பதற்கும் இடையில் நீதி ஒரு நுட்பமான சமநிலையைப் பேண வேண்டும் என்று திரு. சரவணன் வலியுறுத்தினார். 
வழக்கமான நீதிமன்றங்களைப் போலவே கட்டமைக்கப்பட்ட மற்றும் காலவரையறைக்குட்பட்ட தீர்வை வழங்கும் ஒரு பிரத்யேக மருத்துவத் தீர்ப்பாயத்தை நிறுவுவதே இந்தச் சமநிலையை அடைவதற்கான மிகவும் பயனுள்ள வழி என்று அவர் குறிப்பிட்டார். நிறைவுரையில், தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினரும், வோட்டராலஜியின் நிறுவனருமான மாண்புமிகு டாக்டர் வி. ராமராஜ் அவர்கள், சுகாதார வழக்குகளில் தற்போது நிலவும் நிர்வாகத் தடைகளை எடுத்துரைத்தார். மருத்துவ அலட்சியத்தால் பாதிக்கப்பட்டவர்களும் மருத்துவர்களும், ஒரே ஒரு குறைக்காக நுகர்வோர் நீதிமன்றங்கள், குற்றவியல் நீதிமன்றங்கள் மற்றும் மருத்துவ மன்றங்கள் உள்ளிட்ட பல சிதறலான மன்றங்களை நாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார். இந்த பல மன்ற அணுகுமுறை, சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பெரும் சிரமத்தையும் தாமதத்தையும் ஏற்படுத்துகிறது. கொள்கை வரைவு போன்ற கல்விப் போட்டிகள், சட்ட மாணவர்களை விமர்சன ரீதியாக சிந்திக்கவும், பொதுநலச் சட்டங்களை வடிவமைப்பதில் நேரடியாகப் பங்களிக்கவும் ஊக்குவிக்கின்றன என்று கூறி, டாக்டர் ராமராஜ் இந்த முயற்சியைப் பாராட்டினார்.
மேலும், வழக்கமான நீதிமன்ற அமைப்புக்கு வெளியே முறையான சட்ட மேற்பார்வை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்காக, அனைத்து சுதந்திரமான தீர்ப்பாயங்கள் மற்றும் ஆணையங்களை (மனித உரிமைகள் மற்றும் ஊழல் எதிர்ப்பு அமைப்புகள் போன்றவை) மேற்பார்வையிட ஒரு "அரசின் ஐந்தாவது கிளையை" நிறுவுவதற்கான ஒரு தொலைநோக்கு அரசியலமைப்பு சீர்திருத்தத்தையும் அவர் முன்மொழிந்தார். சென்னை ARMA மருத்துவ அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் எம். அருள்பிச்சை நாராயணன், தனது சிறப்புரையில், சுகாதாரச் சட்டங்கள் குறித்த பொதுமக்களின் புரிதலில் உள்ள இடைவெளியை எடுத்துரைத்தார். பொது விழிப்புணர்வின்மை, உண்மையான மருத்துவ விபத்துகளுக்கும் உண்மையான அலட்சியத்திற்கும் இடையிலான வேறுபாட்டை பெரும்பாலும் மங்கச் செய்கிறது என்று அவர் குறிப்பிட்டார். 
கடுமையாகச் சட்டரீதியான ஒரு சமநிலையான பொறிமுறைக்கு டாக்டர் அருள்பிச்சை அழைப்பு விடுத்தார். முதல்வர் டாக்டர் பேகம் பாத்திமா முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை, பேராசிரியர்களான செல்வி டயானின், திருமதி ஜோபி, திரு. வெங்கடேஷ் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். இதில் சட்ட மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் தீவிரமாகப் பங்கேற்றனர். இது, பொது நலனுக்காக அர்த்தமுள்ள சட்ட சீர்திருத்தங்களை முன்னெடுப்பதில் கல்லூரியின் அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்தியது.

வெள்ளி, 24 ஜூலை, 2026

தமிழக விவசாயிகள் நலன் கருதி, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டில் கர்நாடகா அரசு அணை கட்டக் கூடாது, மீறினால்  டெல்டா பாசன பகுதி முற்றிலும் வறண்ட பாலைவனமாக மாறிவிடும். தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி பங்கீட்டு உரிமை தண்ணீரை கர்நாடகா அரசு,தினந்தோறும் விகிதாசார அடிப்படையில் முறையாக தமிழ்நாட்டிற்கு காவிரி உரிமை பங்கீட்டு தண்ணீரை பாசனத்திற்கு திறந்துவிட வேண்டும். இரு மாநில முதல்வர்கள் சந்திப்பின் போது ஆக 3ம் தேதி தமிழக முதலமைச்சர் தீர்க்கமாக வலியுறுத்த தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி வேண்டுகோள்.

தமிழக விவசாயிகள் நலன் கருதி, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டில் கர்நாடகா அரசு அணை கட்டக் கூடாது, மீறினால் டெல்டா பாசன பகுதி முற்றிலும் வறண்ட பாலைவனமாக மாறிவிடும். தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி பங்கீட்டு உரிமை தண்ணீரை கர்நாடகா அரசு,தினந்தோறும் விகிதாசார அடிப்படையில் முறையாக தமிழ்நாட்டிற்கு காவிரி உரிமை பங்கீட்டு தண்ணீரை பாசனத்திற்கு திறந்துவிட வேண்டும். இரு மாநில முதல்வர்கள் சந்திப்பின் போது ஆக 3ம் தேதி தமிழக முதலமைச்சர் தீர்க்கமாக வலியுறுத்த தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி வேண்டுகோள்.

நாமக்கல், 
S.K சுரேஷ்பாபு. 

தமிழக விவசாயிகள் நலன் கருதி, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டில் கர்நாடகா அரசு அணை கட்டக் கூடாது, மீறினால்  டெல்டா பாசன பகுதி முற்றிலும் வறண்ட பாலைவனமாக மாறிவிடும். 
தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி பங்கீட்டு உரிமை தண்ணீரை கர்நாடகா அரசு,
தினந்தோறும் விகிதாசார அடிப்படையில் முறையாக தமிழ்நாட்டிற்கு 
காவிரி உரிமை பங்கீட்டு தண்ணீரை பாசனத்திற்கு திறந்துவிட வேண்டும். இரு மாநில முதல்வர்கள் சந்திப்பின் போது ஆக 3ம் தேதி தமிழக முதலமைச்சர் தீர்க்கமாக வலியுறுத்த தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி வேண்டுகோள்.

தமிழக விவசாயிகளின் நலன் கருதி, தமிழகத்தில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி அறிவிப்பின் பேரில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு அதற்கு தீர்வும் காணப்பட்டு வருகின்றனர். இதனிடையே தமிழக விவசாயிகள் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் மீறி கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டிய தீருவோம் என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் மீறி தற்போது வரை முயற்சி மேற்கொண்டு வருகின்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி அவர்கள் தலைமையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு கர்நாடக எல்லை பகுதியில் குவிந்து அங்கிருந்து ஊர்வலமாக சென்று கர்நாடகா அணைகளில் உள்ள தண்ணீரை திறக்க போராட்டம் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டபோது, தமிழக கர்நாடக காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்ட சம்பவமும் நிகழ்ந்தது. இந்த நிலையில், டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை கூட்டத்திலும் கூட கர்நாடகா அணைகளில் போதிய தண்ணீர் இல்லை என்பதாலும் குடிநீருக்கு மட்டுமே உள்ள நிலையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட இயலாது என்று கர்நாடக அரசு கை விரித்து இருந்தது. நிலைமை எப்படி இருக்க, மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் தற்போது வரை மௌனம் காத்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்த நிலையில் தற்பொழுது கர்நாடக முதலமைச்சர் இந்த விவகாரம் தொடர்பாக பேசுவதற்கு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 
இது சம்பந்தமாக உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி அவர்கள் தமிழக முதலமைச்சருக்கு, தீர்க்கமான முடிவை வெளிப்படுத்தும் வகையில் அறிக்கையை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் வேலுச்சாமி குறிப்பிட்டு உள்ளதாவது, தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு ஜோசப் விஜய் அவர்களை கர்நாடகா முதலமைச்சர் மாண்புமிகு .டி.கே.சிவக்குமார் அவர்கள், தமிழ் நாட்டிற்கு உண்டான காவிரி உரிமை பங்கீட்டு தண்ணீர் மற்றும் மேகதாது அணை விவகாரம் சம்பந்தமாக பேசுவதற்கு அழைத்துள்ளார். அது தொடர்பாக  வருகின்ற 3 ந் தேதி அனறு தமிழக முதல்வர் அவர்கள் பெங்களூர் செல்லவுள்ள நிலையில்  இரு மாநில முதல்வர்கள் சந்திப்பின் போது தமிழக விவசாயிகள் நலன் கருதி, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டில் கர்நாடகா அரசு அணை கட்டினால் தமிழ்நாட்டில் காவிரி தண்ணீர் வரத்து இல்லாமல் டெல்டா பாசன பகுதி முற்றிலும் வறண்ட பாலைவனமாக மாறிவிடும் என்பதை கருத்தில் கொண்டு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டில் அணை கட்டக் கூடாது எனவும் தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி பங்கீட்டு உரிமை தண்ணீரை கர்நாடகா அரசு அங்குள்ள அணைகளில் தேக்கி வைக்க எந்தவிதமான தார்மிக உரிமையும் கிடையாது, தினந்தோறும் விகிதாசார அடிப்படையில் முறையாக தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி உரிமை பங்கீட்டு தண்ணீரை பாசனத்திற்கு திறந்துவிட வேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் கர்நாடகா முதலமைச்சர் மாண்புமிகு டி.கே.சிவக்குமார் அவர்களிடம் விளக்கமாக எடுத்துரைக்க வேண்டும் என வேலுச்சாமி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தமிழ்நாட்டில் இந்த ஆண்டுக்கு உண்டான சம்பா தாளடி பருவத்தில் பயிர் செய்வதற்கு காவிரி உரிமை பங்கீட்டு தண்ணீரை பெற்று தரும் வகையில் தமிழ்நாடு அரசின் செயல்பாடு அமைய வேண்டும் என உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை இந்த அறிக்கையின் மூலம் வலியுறுத்துகிறேன் என தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி, தீர்க்கமாக அறிக்கையின் வாயிலாக குறிப்பிட்டுள்ளார்.

புதன், 22 ஜூலை, 2026

கர்நாடகாவிற்கு மின்சாரத்தை நிறுத்துங்கள். காவிரி நீருக்காக தமிழக முதல்வருக்கு விவசாயிகள் சங்கம் அதிரடி வேண்டுகோள்.

கர்நாடகாவிற்கு மின்சாரத்தை நிறுத்துங்கள். காவிரி நீருக்காக தமிழக முதல்வருக்கு விவசாயிகள் சங்கம் அதிரடி வேண்டுகோள்.

சேலம், 
S.K. சுரேஷ்பாபு. 

கர்நாடகாவிற்கு மின்சாரத்தை நிறுத்துங்கள். காவிரி நீருக்காக தமிழக முதல்வருக்கு விவசாயிகள் சங்கம் அதிரடி வேண்டுகோள். 

காவிரி மேலாண்மை கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கர்நாடகா அணைகளில் குடிநீர் தேவைக்காக மட்டுமே தண்ணீர் உள்ளதாகவும், ஆகவே தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க இயலாது என்றும் கர்நாடகா அரசு தெரிவித்தது. எனவே இனிவரும் காலங்களில் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து கர்நாடகா அணைகளுக்கு நீர் வரத்தை இருந்தால் மட்டுமே தமிழகத்திற்கான தண்ணீர் பகிர்வு கொடுக்க முடியும் என காவிரி மேலாண்மை தலைவர் தகவல் தெரிவித்து இருந்தார். மேலும் வரும் கூட்டத்தில் தமிழகத்திற்கான காவிரி தண்ணீர் பகிர்வு தொடர்பாக முடிவு செய்யப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார். காவிரி மேலாண்மை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு மற்றும் தகவல் தமிழக விவசாயிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி டி வி கே தலைமையிலான தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு அதிரடி வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார். 
அதில், கர்நாடக அணைகளில் போதிய நீர் இருப்பு இருந்தும், வறட்சி என்று காரணம் கூறி காவிரி நீரை கர்நாடகா அரசு மறுக்கிறது என்றும், தமிழக விவசாயிகளின் நலன் கருதி தமிழகத்தில் இருந்து கர்நாடகாவிற்கு செல்லும் மின்சாரத்தை ஒரு யூனிட் கூட வழங்காமல் நிறுத்துவோம் என தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் உடனடியாக பதிலடி எச்சரிக்கை விடுத்த வேண்டும் என உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சொன்ன மாநில தலைவர் அதிரடி வேண்டுகோள் ஒன்றினை வெளிப்படுத்தி உள்ளார்.

திங்கள், 20 ஜூலை, 2026

ஐ.யூ.எம்.எல் கட்சிக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கிய தமிழக முதல்வர் விஜய் அவர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்..!

ஐ.யூ.எம்.எல் கட்சிக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கிய தமிழக முதல்வர் விஜய் அவர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்..!

ஈரோடு 19 ஜூலை,,

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஈரோடு மாவட்ட பொதுக்குழு கூட்டம், செல்ல பாட்ஷா வீதியில் உள்ள எம்.ஐ.எஸ் அரங்கில் மாவட்ட தலைவர் எஸ்.ஏ.அஸ்கர் அலி தலைமையில் நடைபெற்றது. 


மாநில கௌரவ ஆலோசனை குழு உறுப்பினர் அல்ஹாஜ் ஜி.முஹம்மது தாஜ் மொஹதீன் மாநில வர்த்தகரணி பொதுச் செயலாளர் எம்.நூர் முஹம்மது சேட் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக ஈரோடு மாநகர முன்னாள் தலைவரும் மூத்த மார்க்க அறிஞருமான மௌலானா ஹபீப் முஹம்மது கூட்டத்தை இறை வசனம் ஓதி துவக்கி வைத்தார்.

மாவட்ட செயலாளர் எம்.முஹம்மது ஆரிப் வரவேற்புரை மற்றும் கூட்டத்தின் நோக்கத்தை எடுத்துரைத்தார்.


இந்நிகழ்வில் மாவட்டத் துணைத் தலைவர் அலாவுதீன் சேட் மாவட்ட துணை செயலாளர் பவானி பாசித், முஹம்மது அனிபா, ஜாபர் சாதிக் பிரைமரி நிர்வாகிகள் பவானி சிராஜுதீன் சென்னிமலை நூரே ஆலம் பெருந்துறை சான் பாஷா சத்தியமங்கலம் ஷாஜகான் வி.வி.சி.ஆர் நகர் அபுதாகிர் எஸ்.டி.யூ மாவட்ட தலைவர் ரியாசுதீன், வழக்கறிஞர் முஹமத் ஆசிக் உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர்.

கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது :-

1) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பேரியக்கத்திற்கு ஒரு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டதற்கு இக்கூட்டம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

2) இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் தமிழ்நாடு அரசின் சிறுபான்மை மற்றும் வக்பு வாரிய துறை அமைச்சராக பொறுப்பேற்று சிறப்பாக செயல்பட்டு வரும் மாண்புமிகு ஆடுதுறை ஏ.எம்.ஷாஜகான்,முஸ்லிம் லீக் சட்டமன்ற கட்சி தலைவராக பொறுப்பேற்று செயல்பட்டு வரும் வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு எஸ்.எஸ்.பி.சையத் ஃபாரூக் பாஷா மற்றும் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராக தொடர்ந்து வரும் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் மாண்புமிகு கே.நவாஸ் கனி ஆகியோர்களின் அரசாங்க பணிகள் மற்றும் சமுதாயப் பணிகள் சிறக்க  இக்கூட்டம் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறது.


3) தமிழ்நாடு அரசு பொறுப்பேற்றவுடன் பொதுமக்கள்,பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நலன்களை கருத்தில் கொண்டு முதல் கட்டமாக தமிழ்நாட்டில் 717 டாஸ்மாக் கடைகளை குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் 42 டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூடுவதற்கு உத்தரவிட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு இக்கூட்டம்  நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது. 


4) ஈரோடு - பவானி சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடித்திட இக்கூட்டம் வலியுறுத்துகிறது 

5) ஈரோடு மாநகரின் வளர்ச்சிக்கும், பொதுமக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாக உள்ள ஈரோடு - சத்தியமங்கலம் சாலை கணிராவுதர் குளம் புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணியை அரசு விரைந்து துவங்கிட இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

6) ஈரோடு மாநகரில் வசிக்கும் முஸ்லிம்களின் நீண்டகால கோரிக்கையானதும்,அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே வாக்குறுதி அளித்துள்ளதுமான மாநகர எல்லைக்குள் முஸ்லிம்களுக்கான அடக்கஸ்தலம் (கபர்ஸ்தான்) அமைப்பதற்கு அரசு இடம் ஒதுக்கி தந்திட விரைந்து ஆவணம் செய்யுமாறு இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

7) இந்திய விடுதலைப் போராட்ட முன்னோடியும்,உலகம் போற்றும் சமூக நல்லிணக்க நாயகராகவும்,சமூகநீதி காவலராகவும் விளங்கிய மாவீரன் திப்பு சுல்தான் அவர்களுக்கு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் அவரது புகழை போற்றும் வகையில் ஒரு மணிமண்டபம் அமைத்துத் தர இக்கூட்டம் அன்போடு கேட்டுக்கொள்கிறது.


8) ஈரோடு மாவட்டத்தில் இது வரை பட்டா வழங்கபடாத பள்ளிவாசல்கள்,கபர்ஸ்தான்கள்,தர்காக்கள் மற்றும் ஆசூர் கானாக்களுக்கு உடனடியாக வருவாய்த் துறை மூலம் பட்டாக்கள் வழங்கிட இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

9) மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களுடைய ஆட்சி காலத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து சமய வழிபாட்டு தலங்களுக்கும் மின் கட்டணம் என்பது சலுகையின் அடிப்படையில் வழங்கப்பட்டு வந்தது.அதற்கு பின்னால் வந்த அரசாங்கங்கள் அச்சலுகைகளை நிறுத்திவிட்டது. இதன் காரணமாக வருவாய் குறைவாக உள்ள வழிபாட்டு தளங்களில் மின் கட்டணம் செலுத்துவதற்கு அதன் நிர்வாகக் பெருமக்கள் மிகுந்த சிரமப்படுகிறார்கள்.


எனவே தமிழ்நாடு அரசு இதை கனிவோடு பரிசீலனை செய்து அனைத்து சமுதாய மற்றும் சமய வழிபாட்டு தலங்களுக்கும் சலுகை அடிப்படையில் மின் கட்டண திட்டம் கொண்டு வர அரசை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது 

10)ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட இஸ்லாமியர்கள் கணிசமாக வாழும் அருக அருகே உள்ள வார்டு எண் 12,15,16,21 ஆகியவை பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டாக உள்ளது.இதனால் ஆண்கள் போட்டியிடுவதற்கு வாய்ப்பில்லாமல் சென்று விடுகிறது எனவே இதை கருத்தில் கொண்டு மேலே குறிப்பிட்டுள்ள வார்டுகளில் இரண்டு வார்டுகளை பொது வார்டுகளாக மறு சீரமைப்பு செய்து தருமாறு இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

இயக்கத் தீர்மானங்கள் :-

11) எதிர்வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரைமரிகளின் பொதுக்குழு கூட்டத்தை மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடத்துவது என கூட்டம் முடிவு செய்கிறது.

12) எதிர்வரும் உள்ளாட்சி மன்ற தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் போட்டியிடும் தொகுதிகளை உடனடியாக கண்டறிந்து அதன் பட்டியலை எதிர்வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதிக்குள் மாவட்ட நிர்வாகத்திடம் அளிப்பது என இக்கூட்டம் முடிவு செய்கிறது.


13) புதிய பிரைமரிகள் அமைப்பதற்கு ஏதுவாக அந்தந்த பகுதிகளில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் நடத்துவது மற்றும் நிர்வாகத்தை முறையாக அமைப்பது என கூட்டம் முடிவு செய்கிறது.

14)சார்பு அணிகளை பலப்படுத்தும் நோக்கில் புதிய உறுப்பினர் சேர்க்கையை நடத்தி அதன் நிர்வாகத்தை விரைவாக அமைப்பது.

15) ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் மஹல்லா ஜமாத் நிர்வாகிகளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட நிர்வாகிகள் அடங்கிய ஒரு குழு நேரில் சென்று சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து அரசு மற்றும் வக்பு வாரியம் மூலமாக வழங்கப்படும் நல திட்டங்களை அவர்களுக்கு பெற்றுத் தர உதவுவது மேலும் மஹல்லா ஜமாத் கட்டமைப்பை பலப்படுத்துவதற்குண்டான அனைத்து ஆலோசனைகளையும் வழங்குவது எனவும் இக்கூட்டம் முடிவு செய்கிறது.


16)2026 மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி குறித்து சமுதாய மக்களிடத்தில் அதில் கேட்கப்படும் 33 கேள்விகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் அனைத்து குடும்பங்களும் அக்கணக்கெடுப்பில் தவறாமல் பதிவு செய்திடும் பொருட்டும் தொடர்ந்து ஜும்மாக்கள் மற்றும் ஐவேளை தொழுகைகளிலும்  தொடர் அறிவிப்பு செய்ய பள்ளிவாசல் முத்தவள்ளிகளையும்,உலமா பெருமக்களையும் இக்கூட்டம் அன்போடு கேட்டுக்கொள்கிறது.


மேலும் ஈரோடு மாநகர எஸ்.டி.யூ அமைப்பாளராக லாயர்ஸ் ஃபோரம் ஏ.அப்துல் சுபான், ஈரோடு  வழக்கறிஞர் அணி அமைப்பாளராக அட்வகேட் எம்.முஹமத் ஆசிக்  ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். 


மாநில பிரதிநிதி அந்தியூர் ஹாதிம் தாய் மாவட்டத் துணைத் தலைவர் ஹாஜி கே.சாகுல் அமீது சத்தியமங்கலம் ஹாஜி எஸ்.ஏ. ஷான் பாஷா வர்த்தக அணி மாவட்ட தலைவர் அமீனுதீன் செயலாளர் முகமது யாகூப் இளைஞர் அணி துணை அமைப்பாளர் முகமது பாசித் மாணவரணி அமைப்பாளர் நிகால் அகமது, முகமது ஆசிம் ஊடகத்துறை அமைப்பாளர் லுக்மானுள் ஹக்கீம் காயிதே மில்லத் பேரவை அமைப்பாளர் ஆர்.எஸ்.நாசர் அலி பிரைமரி நிர்வாகிகள் பெருந்துறை சான்பாஷா,கலீல், திங்களூர் குல்பிர் பவானி டி.எஸ்.சிராஜுதீன் முன்னா,சையது அக்பர் ஈரோடு முகமது உசேன் ,சிக்கந்தர் வி.வி. சி.ஆர் நகர் அபுதாஹீர் விவேகானந்தா நகர் முஸ்தபா சங்கன் துறை சையது நாசர் காங்கேயம் பாளையம் அலீம், காஜா பாவா,பஷீர் அகமது சத்தியமங்கலம் ஷாஜகான், முனீர் அகமது,நசீப் உசேன் ஷரீஃப் பி.பி.அக்ரஹாரம் முகமது சாலின் சென்னிமலை நூர் ஆலம், பக்ருதீன் அசோகபுரம் உசேன் ஷரீஃப்,முஜீப்தீன்,ஷெரிஃப் சுல்தான்பேட்டை நியமத்துல்லா உள்ளிட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தின் முடிவில் மாவட்ட பொருளாளர் இ.கே.எம். முஹம்மது கலில் நன்றி கூறினார்.

வெள்ளி, 17 ஜூலை, 2026

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்த சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் கைவினைஞர் நல சங்க தலைவர்.

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்த சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் கைவினைஞர் நல சங்க தலைவர்.

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்த சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் கைவினைஞர் நல சங்க தலைவர்.

வெள்ளி கொலுசு உற்பத்தி என்பது உருக்குதல், கம்பி இழுத்தல், வடிவமைப்பு செய்தல், இணைத்தல், மற்றும் பாலிஷ் செய்தல் ஆகிய பல கட்டங்களைக் கொண்டது. சேலம் மாவட்டத்தில் உள்ள செவ்வாய்ப்பேட்டை, சிவதாபுரம், குகை போன்ற பகுதிகளில் இத்தொழில் பாரம்பரியமாக கைவினைப் பொருட்களாகவும், நவீன இயந்திரங்கள் மூலமாகவும் அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது.வெள்ளி கொலுசு தயாரிக்கும் செயல்முறை உருக்குதல் மற்றும் கலவை (Melting & Alloying): சுத்தமான வெள்ளி, அதனுடன் கடினத்தன்மை மற்றும் உறுதி சேர்க்க குறிப்பிட்ட அளவு செம்பு அல்லது பித்தளை சேர்த்து உயர் வெப்பநிலையில் உருக்கப்பட்டு கட்டிகளாக (Ingots) மாற்றப்படுகிறது. கம்பி இழுத்தல் (Wire Drawing)  வெள்ளிக் கட்டிகள் இயந்திரங்கள் அல்லது உருளைகள் மூலம் மெல்லிய கம்பிகளாக மாற்றப்படுகின்றன. கொலுசின் வடிவத்திற்கு ஏற்ப கம்பியின் தடிமன் தீர்மானிக்கப்படுகிறது. வடிவமைப்பு மற்றும் இணைப்பு (Design & Assembly): மெல்லிய கம்பிகள் முறுக்கப்பட்டு, சிறிய சங்கிலிகளாகவோ அல்லது கொக்கிகளாகவோ வடிவமைக்கப்படுகின்றன. பாரம்பரிய கொலுசுகளில் மணிகள் (குப்பம்) இணைக்கும் பணி கையால் செய்யப்படுகிறது. சோல்டரிங் (Soldering) இணைக்கப்பட்ட பாகங்கள் உறுதியாக ஒட்டிக்கொள்ள மெல்லிய வெள்ளி/செம்பு உலோகக்கலவை கொண்டு சூடுபடுத்தப்பட்டு இணைக்கப்படுகின்றன.பாலிஷ் செய்தல் (Buffing & Polishing): கொலுசுகளுக்கு பளபளப்பான தோற்றத்தை கொடுக்க, ரசாயன கலவைகளுடன் கூடிய பஃபர் (Buffing) இயந்திரங்களைக் கொண்டு தேய்த்து மெருகூட்டப்படுகிறது. தரம் மற்றும் முத்திரை (Hallmarking): இறுதியாக, கொலுசின் தரம் பரிசோதிக்கப்பட்டு ஹால்மார்க் முத்திரை இடப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. 
இந்த நிலையில் வெள்ளி விற்பனையை ஆன்லைனில் மத்திய அரசு கொண்டு வந்தது, இதன் காரணமாக நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெள்ளியின் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வெள்ளித் தொழில் முழுமையுமாக சேலம் மாவட்டத்தில் நலிவடைந்து விட்டது என்றே கூறலாம். என்றாலும் வெள்ளி தொழில் உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் தீர்க்கப்படாத கோரிக்கைகள் எவ்வளவோ இருந்தாலுமே கூட அதில் முக்கியமாக சேலத்தில் உற்பத்தி செய்யப்படும் வெள்ளிப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் வெள்ளி மற்றும் தங்கவேல் நகை செய்யும் தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என்பன கோரிக்கைகள் தற்பொழுது  பிரதானமாக எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் கைவினைஞர் நல சங்கத்தின் தலைவர் ஸ்ரீ ஆனந்தராஜன் இந்த இரண்டு கோரிக்கைகள் தொடர்பாக ஏற்கனவே சேலம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கையை மனமும் கொடுத்துள்ளார். இந்த நிலையில் ஸ்ரீ ஆனந்தராஜன் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் அவர்களை அவரது அலுவலகத்தில் இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதனிடையே மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்ட கோரிக்கை மனு குறித்தும் ஏற்கனவே வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் தீர்க்கப்படாத பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் ஸ்ரீ ஆனந்தராஜன் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் இடம் பேசியதாகவும் கூறப்படுகிறது.
சேலம் கெங்கவல்லியில் அம்பேத்கர் சிலை விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சேலத்தில் இந்திய குடியரசு கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

சேலம் கெங்கவல்லியில் அம்பேத்கர் சிலை விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சேலத்தில் இந்திய குடியரசு கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.


சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

சேலம் கெங்கவல்லியில் அம்பேத்கர் சிலை விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சேலத்தில் இந்திய குடியரசு கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

இந்திய குடியரசு கட்சியின் சேலம் மண்டலத்தின் சார்பில், சேலம் கோட்டை மைதானத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம், சேலம் மண்டல செயலாளர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. கெங்கவல்லி ஒன்றியத்திற்குட்பட்ட ஒதியத்தூரில் டாக்டர் அம்பேத்கர் சிலையை பேரூராட்சி நிர்வாகம் திறந்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், தலித் சமூகத்தைச் சேர்ந்த 15 பேர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் பொய் வழக்குகளை ரத்து செய்து, அவர்களை உடனடியாக விடுதலை செய்ய தமிழக முதலமைச்சர் தலையிட வேண்டும் எனக் கோரியும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர். மேலும், கட்சி சார்பில் முன்வைக்கப்பட்ட 9 தீர்மானங்களை அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதையும் வலியுறுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் மங்காப்பிள்ளை, மாநில பொருளாளர் கௌரிசங்கர், மாநில துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாநில பொறுப்பாளர் வணங்காமுடி கருத்துரையாற்றினார். மாவட்டத் தலைவர் கணேசன் வரவேற்புரையாற்றினார்.
மாவட்ட செயலாளர்கள் தீனா, ரவிக்குமார், மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக விழுப்புரம் மண்டல செயலாளர் இருவேல்பட்டு குமார், மாநில செயற்குழு உறுப்பினர் கண்ணன், தர்மபுரி மாவட்டத் தலைவர் பழனிச்சாமி, கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவர் கண்ணப்பன், மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி செயலாளர் வீரப்பன், மாவட்ட அமைப்பு செயலாளர் ரஜினி, பச்சைப்பட்டி குமார், பனமரத்துப்பட்டி ஒன்றிய செயலாளர் வக்கீல், துணைத் தலைவர் சந்தோஷ், இ.ஆ.து. செயலாளர் விஜய பிரபாகரன் மற்றும் தாசநாயக்கன்பட்டி காந்திபுரம் கிளை செயலாளர் பழனிச்சாமி, ராசநாயக்கன்பட்டி பகுதி செயலாளர் சுபாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாநகர பொருளாளர் தலித் ராஜு நன்றியுரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய குடியரசு கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.