Latest

திங்கள், 20 ஜூலை, 2026

ஐ.யூ.எம்.எல் கட்சிக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கிய தமிழக முதல்வர் விஜய் அவர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்..!

ஐ.யூ.எம்.எல் கட்சிக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கிய தமிழக முதல்வர் விஜய் அவர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்..!

ஈரோடு 19 ஜூலை,,

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஈரோடு மாவட்ட பொதுக்குழு கூட்டம், செல்ல பாட்ஷா வீதியில் உள்ள எம்.ஐ.எஸ் அரங்கில் மாவட்ட தலைவர் எஸ்.ஏ.அஸ்கர் அலி தலைமையில் நடைபெற்றது. 


மாநில கௌரவ ஆலோசனை குழு உறுப்பினர் அல்ஹாஜ் ஜி.முஹம்மது தாஜ் மொஹதீன் மாநில வர்த்தகரணி பொதுச் செயலாளர் எம்.நூர் முஹம்மது சேட் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக ஈரோடு மாநகர முன்னாள் தலைவரும் மூத்த மார்க்க அறிஞருமான மௌலானா ஹபீப் முஹம்மது கூட்டத்தை இறை வசனம் ஓதி துவக்கி வைத்தார்.

மாவட்ட செயலாளர் எம்.முஹம்மது ஆரிப் வரவேற்புரை மற்றும் கூட்டத்தின் நோக்கத்தை எடுத்துரைத்தார்.


இந்நிகழ்வில் மாவட்டத் துணைத் தலைவர் அலாவுதீன் சேட் மாவட்ட துணை செயலாளர் பவானி பாசித், முஹம்மது அனிபா, ஜாபர் சாதிக் பிரைமரி நிர்வாகிகள் பவானி சிராஜுதீன் சென்னிமலை நூரே ஆலம் பெருந்துறை சான் பாஷா சத்தியமங்கலம் ஷாஜகான் வி.வி.சி.ஆர் நகர் அபுதாகிர் எஸ்.டி.யூ மாவட்ட தலைவர் ரியாசுதீன், வழக்கறிஞர் முஹமத் ஆசிக் உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர்.

கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது :-

1) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பேரியக்கத்திற்கு ஒரு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டதற்கு இக்கூட்டம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

2) இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் தமிழ்நாடு அரசின் சிறுபான்மை மற்றும் வக்பு வாரிய துறை அமைச்சராக பொறுப்பேற்று சிறப்பாக செயல்பட்டு வரும் மாண்புமிகு ஆடுதுறை ஏ.எம்.ஷாஜகான்,முஸ்லிம் லீக் சட்டமன்ற கட்சி தலைவராக பொறுப்பேற்று செயல்பட்டு வரும் வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு எஸ்.எஸ்.பி.சையத் ஃபாரூக் பாஷா மற்றும் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராக தொடர்ந்து வரும் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் மாண்புமிகு கே.நவாஸ் கனி ஆகியோர்களின் அரசாங்க பணிகள் மற்றும் சமுதாயப் பணிகள் சிறக்க  இக்கூட்டம் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறது.


3) தமிழ்நாடு அரசு பொறுப்பேற்றவுடன் பொதுமக்கள்,பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நலன்களை கருத்தில் கொண்டு முதல் கட்டமாக தமிழ்நாட்டில் 717 டாஸ்மாக் கடைகளை குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் 42 டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூடுவதற்கு உத்தரவிட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு இக்கூட்டம்  நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது. 


4) ஈரோடு - பவானி சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடித்திட இக்கூட்டம் வலியுறுத்துகிறது 

5) ஈரோடு மாநகரின் வளர்ச்சிக்கும், பொதுமக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாக உள்ள ஈரோடு - சத்தியமங்கலம் சாலை கணிராவுதர் குளம் புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணியை அரசு விரைந்து துவங்கிட இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

6) ஈரோடு மாநகரில் வசிக்கும் முஸ்லிம்களின் நீண்டகால கோரிக்கையானதும்,அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே வாக்குறுதி அளித்துள்ளதுமான மாநகர எல்லைக்குள் முஸ்லிம்களுக்கான அடக்கஸ்தலம் (கபர்ஸ்தான்) அமைப்பதற்கு அரசு இடம் ஒதுக்கி தந்திட விரைந்து ஆவணம் செய்யுமாறு இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

7) இந்திய விடுதலைப் போராட்ட முன்னோடியும்,உலகம் போற்றும் சமூக நல்லிணக்க நாயகராகவும்,சமூகநீதி காவலராகவும் விளங்கிய மாவீரன் திப்பு சுல்தான் அவர்களுக்கு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் அவரது புகழை போற்றும் வகையில் ஒரு மணிமண்டபம் அமைத்துத் தர இக்கூட்டம் அன்போடு கேட்டுக்கொள்கிறது.


8) ஈரோடு மாவட்டத்தில் இது வரை பட்டா வழங்கபடாத பள்ளிவாசல்கள்,கபர்ஸ்தான்கள்,தர்காக்கள் மற்றும் ஆசூர் கானாக்களுக்கு உடனடியாக வருவாய்த் துறை மூலம் பட்டாக்கள் வழங்கிட இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

9) மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களுடைய ஆட்சி காலத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து சமய வழிபாட்டு தலங்களுக்கும் மின் கட்டணம் என்பது சலுகையின் அடிப்படையில் வழங்கப்பட்டு வந்தது.அதற்கு பின்னால் வந்த அரசாங்கங்கள் அச்சலுகைகளை நிறுத்திவிட்டது. இதன் காரணமாக வருவாய் குறைவாக உள்ள வழிபாட்டு தளங்களில் மின் கட்டணம் செலுத்துவதற்கு அதன் நிர்வாகக் பெருமக்கள் மிகுந்த சிரமப்படுகிறார்கள்.


எனவே தமிழ்நாடு அரசு இதை கனிவோடு பரிசீலனை செய்து அனைத்து சமுதாய மற்றும் சமய வழிபாட்டு தலங்களுக்கும் சலுகை அடிப்படையில் மின் கட்டண திட்டம் கொண்டு வர அரசை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது 

10)ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட இஸ்லாமியர்கள் கணிசமாக வாழும் அருக அருகே உள்ள வார்டு எண் 12,15,16,21 ஆகியவை பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டாக உள்ளது.இதனால் ஆண்கள் போட்டியிடுவதற்கு வாய்ப்பில்லாமல் சென்று விடுகிறது எனவே இதை கருத்தில் கொண்டு மேலே குறிப்பிட்டுள்ள வார்டுகளில் இரண்டு வார்டுகளை பொது வார்டுகளாக மறு சீரமைப்பு செய்து தருமாறு இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

இயக்கத் தீர்மானங்கள் :-

11) எதிர்வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரைமரிகளின் பொதுக்குழு கூட்டத்தை மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடத்துவது என கூட்டம் முடிவு செய்கிறது.

12) எதிர்வரும் உள்ளாட்சி மன்ற தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் போட்டியிடும் தொகுதிகளை உடனடியாக கண்டறிந்து அதன் பட்டியலை எதிர்வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதிக்குள் மாவட்ட நிர்வாகத்திடம் அளிப்பது என இக்கூட்டம் முடிவு செய்கிறது.


13) புதிய பிரைமரிகள் அமைப்பதற்கு ஏதுவாக அந்தந்த பகுதிகளில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் நடத்துவது மற்றும் நிர்வாகத்தை முறையாக அமைப்பது என கூட்டம் முடிவு செய்கிறது.

14)சார்பு அணிகளை பலப்படுத்தும் நோக்கில் புதிய உறுப்பினர் சேர்க்கையை நடத்தி அதன் நிர்வாகத்தை விரைவாக அமைப்பது.

15) ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் மஹல்லா ஜமாத் நிர்வாகிகளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட நிர்வாகிகள் அடங்கிய ஒரு குழு நேரில் சென்று சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து அரசு மற்றும் வக்பு வாரியம் மூலமாக வழங்கப்படும் நல திட்டங்களை அவர்களுக்கு பெற்றுத் தர உதவுவது மேலும் மஹல்லா ஜமாத் கட்டமைப்பை பலப்படுத்துவதற்குண்டான அனைத்து ஆலோசனைகளையும் வழங்குவது எனவும் இக்கூட்டம் முடிவு செய்கிறது.


16)2026 மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி குறித்து சமுதாய மக்களிடத்தில் அதில் கேட்கப்படும் 33 கேள்விகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் அனைத்து குடும்பங்களும் அக்கணக்கெடுப்பில் தவறாமல் பதிவு செய்திடும் பொருட்டும் தொடர்ந்து ஜும்மாக்கள் மற்றும் ஐவேளை தொழுகைகளிலும்  தொடர் அறிவிப்பு செய்ய பள்ளிவாசல் முத்தவள்ளிகளையும்,உலமா பெருமக்களையும் இக்கூட்டம் அன்போடு கேட்டுக்கொள்கிறது.


மேலும் ஈரோடு மாநகர எஸ்.டி.யூ அமைப்பாளராக லாயர்ஸ் ஃபோரம் ஏ.அப்துல் சுபான், ஈரோடு  வழக்கறிஞர் அணி அமைப்பாளராக அட்வகேட் எம்.முஹமத் ஆசிக்  ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். 


மாநில பிரதிநிதி அந்தியூர் ஹாதிம் தாய் மாவட்டத் துணைத் தலைவர் ஹாஜி கே.சாகுல் அமீது சத்தியமங்கலம் ஹாஜி எஸ்.ஏ. ஷான் பாஷா வர்த்தக அணி மாவட்ட தலைவர் அமீனுதீன் செயலாளர் முகமது யாகூப் இளைஞர் அணி துணை அமைப்பாளர் முகமது பாசித் மாணவரணி அமைப்பாளர் நிகால் அகமது, முகமது ஆசிம் ஊடகத்துறை அமைப்பாளர் லுக்மானுள் ஹக்கீம் காயிதே மில்லத் பேரவை அமைப்பாளர் ஆர்.எஸ்.நாசர் அலி பிரைமரி நிர்வாகிகள் பெருந்துறை சான்பாஷா,கலீல், திங்களூர் குல்பிர் பவானி டி.எஸ்.சிராஜுதீன் முன்னா,சையது அக்பர் ஈரோடு முகமது உசேன் ,சிக்கந்தர் வி.வி. சி.ஆர் நகர் அபுதாஹீர் விவேகானந்தா நகர் முஸ்தபா சங்கன் துறை சையது நாசர் காங்கேயம் பாளையம் அலீம், காஜா பாவா,பஷீர் அகமது சத்தியமங்கலம் ஷாஜகான், முனீர் அகமது,நசீப் உசேன் ஷரீஃப் பி.பி.அக்ரஹாரம் முகமது சாலின் சென்னிமலை நூர் ஆலம், பக்ருதீன் அசோகபுரம் உசேன் ஷரீஃப்,முஜீப்தீன்,ஷெரிஃப் சுல்தான்பேட்டை நியமத்துல்லா உள்ளிட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தின் முடிவில் மாவட்ட பொருளாளர் இ.கே.எம். முஹம்மது கலில் நன்றி கூறினார்.

வெள்ளி, 17 ஜூலை, 2026

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்த சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் கைவினைஞர் நல சங்க தலைவர்.

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்த சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் கைவினைஞர் நல சங்க தலைவர்.

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்த சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் கைவினைஞர் நல சங்க தலைவர்.

வெள்ளி கொலுசு உற்பத்தி என்பது உருக்குதல், கம்பி இழுத்தல், வடிவமைப்பு செய்தல், இணைத்தல், மற்றும் பாலிஷ் செய்தல் ஆகிய பல கட்டங்களைக் கொண்டது. சேலம் மாவட்டத்தில் உள்ள செவ்வாய்ப்பேட்டை, சிவதாபுரம், குகை போன்ற பகுதிகளில் இத்தொழில் பாரம்பரியமாக கைவினைப் பொருட்களாகவும், நவீன இயந்திரங்கள் மூலமாகவும் அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது.வெள்ளி கொலுசு தயாரிக்கும் செயல்முறை உருக்குதல் மற்றும் கலவை (Melting & Alloying): சுத்தமான வெள்ளி, அதனுடன் கடினத்தன்மை மற்றும் உறுதி சேர்க்க குறிப்பிட்ட அளவு செம்பு அல்லது பித்தளை சேர்த்து உயர் வெப்பநிலையில் உருக்கப்பட்டு கட்டிகளாக (Ingots) மாற்றப்படுகிறது. கம்பி இழுத்தல் (Wire Drawing)  வெள்ளிக் கட்டிகள் இயந்திரங்கள் அல்லது உருளைகள் மூலம் மெல்லிய கம்பிகளாக மாற்றப்படுகின்றன. கொலுசின் வடிவத்திற்கு ஏற்ப கம்பியின் தடிமன் தீர்மானிக்கப்படுகிறது. வடிவமைப்பு மற்றும் இணைப்பு (Design & Assembly): மெல்லிய கம்பிகள் முறுக்கப்பட்டு, சிறிய சங்கிலிகளாகவோ அல்லது கொக்கிகளாகவோ வடிவமைக்கப்படுகின்றன. பாரம்பரிய கொலுசுகளில் மணிகள் (குப்பம்) இணைக்கும் பணி கையால் செய்யப்படுகிறது. சோல்டரிங் (Soldering) இணைக்கப்பட்ட பாகங்கள் உறுதியாக ஒட்டிக்கொள்ள மெல்லிய வெள்ளி/செம்பு உலோகக்கலவை கொண்டு சூடுபடுத்தப்பட்டு இணைக்கப்படுகின்றன.பாலிஷ் செய்தல் (Buffing & Polishing): கொலுசுகளுக்கு பளபளப்பான தோற்றத்தை கொடுக்க, ரசாயன கலவைகளுடன் கூடிய பஃபர் (Buffing) இயந்திரங்களைக் கொண்டு தேய்த்து மெருகூட்டப்படுகிறது. தரம் மற்றும் முத்திரை (Hallmarking): இறுதியாக, கொலுசின் தரம் பரிசோதிக்கப்பட்டு ஹால்மார்க் முத்திரை இடப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. 
இந்த நிலையில் வெள்ளி விற்பனையை ஆன்லைனில் மத்திய அரசு கொண்டு வந்தது, இதன் காரணமாக நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெள்ளியின் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வெள்ளித் தொழில் முழுமையுமாக சேலம் மாவட்டத்தில் நலிவடைந்து விட்டது என்றே கூறலாம். என்றாலும் வெள்ளி தொழில் உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் தீர்க்கப்படாத கோரிக்கைகள் எவ்வளவோ இருந்தாலுமே கூட அதில் முக்கியமாக சேலத்தில் உற்பத்தி செய்யப்படும் வெள்ளிப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் வெள்ளி மற்றும் தங்கவேல் நகை செய்யும் தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என்பன கோரிக்கைகள் தற்பொழுது  பிரதானமாக எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் கைவினைஞர் நல சங்கத்தின் தலைவர் ஸ்ரீ ஆனந்தராஜன் இந்த இரண்டு கோரிக்கைகள் தொடர்பாக ஏற்கனவே சேலம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கையை மனமும் கொடுத்துள்ளார். இந்த நிலையில் ஸ்ரீ ஆனந்தராஜன் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் அவர்களை அவரது அலுவலகத்தில் இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதனிடையே மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்ட கோரிக்கை மனு குறித்தும் ஏற்கனவே வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் தீர்க்கப்படாத பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் ஸ்ரீ ஆனந்தராஜன் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் இடம் பேசியதாகவும் கூறப்படுகிறது.
சேலம் கெங்கவல்லியில் அம்பேத்கர் சிலை விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சேலத்தில் இந்திய குடியரசு கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

சேலம் கெங்கவல்லியில் அம்பேத்கர் சிலை விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சேலத்தில் இந்திய குடியரசு கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.


சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

சேலம் கெங்கவல்லியில் அம்பேத்கர் சிலை விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சேலத்தில் இந்திய குடியரசு கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

இந்திய குடியரசு கட்சியின் சேலம் மண்டலத்தின் சார்பில், சேலம் கோட்டை மைதானத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம், சேலம் மண்டல செயலாளர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. கெங்கவல்லி ஒன்றியத்திற்குட்பட்ட ஒதியத்தூரில் டாக்டர் அம்பேத்கர் சிலையை பேரூராட்சி நிர்வாகம் திறந்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், தலித் சமூகத்தைச் சேர்ந்த 15 பேர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் பொய் வழக்குகளை ரத்து செய்து, அவர்களை உடனடியாக விடுதலை செய்ய தமிழக முதலமைச்சர் தலையிட வேண்டும் எனக் கோரியும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர். மேலும், கட்சி சார்பில் முன்வைக்கப்பட்ட 9 தீர்மானங்களை அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதையும் வலியுறுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் மங்காப்பிள்ளை, மாநில பொருளாளர் கௌரிசங்கர், மாநில துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாநில பொறுப்பாளர் வணங்காமுடி கருத்துரையாற்றினார். மாவட்டத் தலைவர் கணேசன் வரவேற்புரையாற்றினார்.
மாவட்ட செயலாளர்கள் தீனா, ரவிக்குமார், மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக விழுப்புரம் மண்டல செயலாளர் இருவேல்பட்டு குமார், மாநில செயற்குழு உறுப்பினர் கண்ணன், தர்மபுரி மாவட்டத் தலைவர் பழனிச்சாமி, கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவர் கண்ணப்பன், மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி செயலாளர் வீரப்பன், மாவட்ட அமைப்பு செயலாளர் ரஜினி, பச்சைப்பட்டி குமார், பனமரத்துப்பட்டி ஒன்றிய செயலாளர் வக்கீல், துணைத் தலைவர் சந்தோஷ், இ.ஆ.து. செயலாளர் விஜய பிரபாகரன் மற்றும் தாசநாயக்கன்பட்டி காந்திபுரம் கிளை செயலாளர் பழனிச்சாமி, ராசநாயக்கன்பட்டி பகுதி செயலாளர் சுபாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாநகர பொருளாளர் தலித் ராஜு நன்றியுரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய குடியரசு கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் தென்னை மற்றும் பனை மரத்தில் இருந்து இறக்கும் கள்ளுக்கு உண்டான தடையை ஏன் நீக்கவில்லை. த.வெ.க அரசுக்கு தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி கேள்வி. நீக்காததற்கு உண்டான காரணத்தையும் தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தல்.

தமிழகத்தில் தென்னை மற்றும் பனை மரத்தில் இருந்து இறக்கும் கள்ளுக்கு உண்டான தடையை ஏன் நீக்கவில்லை. த.வெ.க அரசுக்கு தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி கேள்வி. நீக்காததற்கு உண்டான காரணத்தையும் தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தல்.

சேலம், 
S.K. சுரேஷ்பாபு.

தமிழகத்தில் தென்னை மற்றும் பனை மரத்தில் இருந்து இறக்கும் கள்ளுக்கு உண்டான தடையை ஏன் நீக்கவில்லை. த.வெ.க அரசுக்கு தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி கேள்வி. நீக்காததற்கு உண்டான காரணத்தையும் தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தல்.

தமிழகத்தில் ஆட்சி பொறுப்பு ஏற்ற உடன் தமிழக அரசு தமிழகத்தில் உள்ள 717 அரசு மதுபான கடைகளை முடியாது. இந்த நிலையில் டாஸ்மாக் மதுபான கடைகள் திறப்பது தொடர்பாக தமிழக அரசு இன்று புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் வேலுச்சாமி த.வெ.க தலைமையிலான தமிழக அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியத்துடன் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். 
அந்த அறிக்கையில், தமிழகத்தை ஒட்டியுள்ள  கேரளம், பாண்டிச்சேரி, ஆந்திரா ஆகிய அண்டை மாநிலங்களைப் போல் தமிழ்நாடு அரசும் டாஸ்மாக் மூலம் உணவகத்துடன் கூடிய மதுக்கடை நடத்தும் என்ற அறிவிப்பு வெளியிட்ட தவெக அரசு,  அதே அண்டை மாநிலங்களில் உள்ளதைப் போல் தமிழக விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான தென்னை மற்றும் பனை மரத்தில் இருந்து இறக்கும் கள்ளுக்கு உண்டான தடையை ஏன் நீக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ள தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி, தடை நீக்கத்திற்கான காரணத்தை தமிழக விவசாயிகளுக்கு த.வெ.க அரசு தெரிவிக்க வேண்டும் என்று  உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் இந்த அறிக்கையின் வாயிலாக  கேட்டுக்கொள்கிறேன் என்று மாநிலத் தலைவர் வேலுச்சாமி தெரிவித்துள்ளார்.

வியாழன், 16 ஜூலை, 2026

ஆடி முதல் நாளில் பொதுமக்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுடன் இணைந்து தேங்காய் சுட்டு இறைவனுக்கு படையலிட்டு வழிபாடு நடத்திய மாமன்ற உறுப்பினர்.

ஆடி முதல் நாளில் பொதுமக்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுடன் இணைந்து தேங்காய் சுட்டு இறைவனுக்கு படையலிட்டு வழிபாடு நடத்திய மாமன்ற உறுப்பினர்.

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

ஆடி முதல் நாளில் பொதுமக்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுடன் தேங்காய் சுட்டு இறைவனுக்கு படையலிட்டு வழிபாடு நடத்திய மாமன்ற உறுப்பினர். 

ஆடி முதல் நாளன்று சேலம் மற்றும் கொங்கு மண்டலப் பகுதிகளில் 'தேங்காய் சுடும் பண்டிகை' கொண்டாடப்படுகிறது. அதர்மத்தை வெல்ல மகாபாரதப் போர் ஆடி 1-ல் தொடங்கியபோது, பாண்டவர்கள் வெற்றி வேண்டி காளி மற்றும் விநாயகரை வழிபட்டதன் அடையாளமாக இது கருதப்படுகிறது. தேய்க்கப்பட்ட தேங்காயினுள் வெல்லம், அவல், பருப்பு உள்ளிட்டவை நிரப்பி நெருப்பில் சுடப்பட்டு பிரசாதமாக படைக்கப்படுகிறது.வரலாறு மற்றும் ஐதீகம்:மகாபாரதப் போர் குருக்ஷேத்திரத்தில் ஆடி மாதம் முதல் தேதியன்று தொடங்கியதாக நம்பப்படுகிறது. இந்தப் போரில் அதர்மம் அழிந்து தர்மம் வெல்ல வேண்டும் என்பதற்காக, பாண்டவர்கள் கிருஷ்ணனின் அறிவுறுத்தலின்படி விநாயகரையும் மற்ற தெய்வங்களையும் வேண்டி விரதம் இருந்தனர். அப்போது, பல மங்களப் பொருட்களைத் தேங்காய்க்குள் வைத்து அதை நெருப்பில் சுட்டு படையலாக இட்டதாகவும், அதன் பின்னரே போர் தொடங்கியதாகவும் ஐதீகம் உள்ளது. இந்த வரலாற்று நிகழ்வை நினைவுபடுத்தும் வகையிலும், விவசாயம் செழிக்கவும், குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கவும் மக்கள் இன்றும் இதனைக் கடைப்பிடிக்கின்றனர்.கொண்டாடும் முறை:பூரணம் தயாரித்தல்: முழுத் தேங்காயின் மேல்தோலைச் சற்றுத் தேய்த்து, அதன் ஒரு கண்ணைத் துளையிட்டு நீர் வெளியேற்றப்படும்.பின்னர் அத்துளை வழியாகப் பச்சரிசி, வெல்லம், பருப்பு, பொட்டுக்கடலை, எள், அவல் மற்றும் ஏலக்காய் ஆகியவற்றைச் சேர்த்து நிரப்புவார்கள்.நீண்ட குச்சியில் தேங்காயைக் குத்தி, வீட்டின் வாசலில் மூட்டப்படும் நெருப்பில் சுடுவார்கள்.நெருப்பின் வெப்பத்தில் உள்ளே இருக்கும் வெல்லம் உருகி, சுவையான பிரசாதமாக மாறும். பின்னர் இது குடும்பத்தினருக்குப் பகிர்ந்தளிக்கப்படுகிறது. 
அந்த வகையில் சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியில் புத்து மாரியம்மன் கோவில் அருகே, சிறந்த வழக்கறிஞர், மிகச் சிறந்த சமூக சேவகர் மற்றும் சேலம் மாநகராட்சி ஒன்பதாவது கோட்டை மாமன்ற உறுப்பினர் என்று பன்முகம் கொண்ட தெய்வேலிங்கம் தனது தனது 9-வது கோட்டத்திற்கு உட்பட்ட பொதுமக்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுடன்  இணைந்து ஆடி பண்டிகையை வரவேற்கும் விதமாக முதல் நாளான இன்று தேங்காய் சுட்டு இறைவனுக்கு படைப்பு சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். இந்த நிகழ்வில் மாமன்ற உறுப்பினர் தெய்வலிங்கத்தின் குடும்பத்தார் உட்பட பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

புதன், 15 ஜூலை, 2026

காவிரி நீர் விவகாரம்: தமிழக எல்லை ஓசூரில் விவசாயிகள் அதிரடி போராட்டம். கர்நாடகா நோக்கிச் சென்ற நூற்றுக்கணக்கான தமிழக விவசாய பெருங்குடி மக்கள்  கைது!

காவிரி நீர் விவகாரம்: தமிழக எல்லை ஓசூரில் விவசாயிகள் அதிரடி போராட்டம். கர்நாடகா நோக்கிச் சென்ற நூற்றுக்கணக்கான தமிழக விவசாய பெருங்குடி மக்கள் கைது!

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

காவிரி நீர் விவகாரம்: தமிழக எல்லை ஓசூரில் விவசாயிகள் அதிரடி போராட்டம். கர்நாடகா நோக்கிச் சென்ற நூற்றுக்கணக்கான தமிழக விவசாய பெருங்குடி மக்கள்  கைது!

காவிரி நீரைத் திறக்கக் கோரி தமிழக எல்லையான ஓசூரில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் திரண்டதால் பரபரப்பு!

கர்நாடக அணை நோக்கிப் பேரணியாகச் செல்ல முயன்ற விவசாயிகளைத் தடுத்து நிறுத்திய போலீசாருடன் தள்ளுமுள்ளு!

விதிகளை மீறிச் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் ஒட்டுமொத்தமாகக் கைது!

"தண்ணீர் தராவிட்டால் ₹1 லட்சம் கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடருவோம்" - அய்யாக்கண்ணு அதிரடி பேட்டி!*

"ஏரோட்டம் இல்லையென்றால் கோட்டையில் காரோட்டம் இல்லை" - தமிழக அரசுக்கு விவசாயச் சங்கத் தலைவர் வேலுசாமி எச்சரிக்கை!.

காவிரி நீர் பங்கீட்டு விவகாரத்தில் தமிழக-கர்நாடக எல்லையான கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இன்று பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது. இந்த ஆண்டுக்குரிய காவிரித் தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விடாததைக் கண்டித்து, தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு விவசாயிகள் சங்க அமைப்புகள் ஒன்றிணைந்து கர்நாடக எல்லையை நோக்கிப் பேரணியாகச் செல்ல முயன்றனர். அப்போது போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான தள்ளுமுள்ளைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கான விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 
உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம், இளம் விவசாயிகள் சங்கம், விவசாய முன்னேற்ற கழகம் உள்ளிட்ட பல்வேறு விவசாய அமைப்புகள் இந்தத் தொடர் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன.
காவிரியை நீர் ஆதாரமாகக் கொண்டுள்ள தமிழகத்தின் 22 மாவட்டங்களைச் சேர்ந்த பாசன விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் என நூற்றுக்கணக்கானோர் இன்று காலை ஓசூர் மூக்கண்டப்பள்ளி தோப்பு மாரியம்மன் கோவில் வளாகத்தில் திரண்டனர்.

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுசாமி தலைமையிலும், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க நிறுவனர் அய்யாக்கண்ணு முன்னிலையிலும் இப்பேரணி தொடங்கியது. சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாகக் கர்நாடக மாநிலத்திற்குள் நுழைந்து, அங்குள்ள அணைகளை முற்றுகையிட்டுத் தண்ணீரைத் திறப்பதுதான் தங்களின் இலக்கு என முழக்கமிட்டவாறு விவசாயிகள் முன்னேறினர்.
இருப்பினும், பேரணி ஓசூர் இ.எஸ்.ஐ ரிங் ரோடு சாலை சந்திப்புப் பகுதியை அடைந்தபோது, அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு அரண் அமைத்து விவசாயிகளைத் தடுத்து நிறுத்தினர். 

இதனால் இருதரப்பிற்கும் இடையே கடுமையான வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. எல்லையைத் தாண்ட போலீஸ் அனுமதி மறுத்ததால், ஆத்திரமடைந்த விவசாயிகள் சாலையிலேயே அமர்ந்து கர்நாடக மற்றும் மத்திய அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர். 

இதனைத் தொடர்ந்து, சாலையில் மறியலில் ஈடுபட்ட அய்யாக்கண்ணு, வேலுசாமி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான விவசாயிகளைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்து தனியார் மண்டபங்களில் தங்கவைத்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க நிறுவனர் அய்யாக்கண்ணு 

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடகா மாதா மாதம் தண்ணீர் திறந்து விட்டால், தமிழகத்தின் 28 மாவட்டங்களின் குடிநீர் தட்டுப்பாடு நீங்கும்; விவசாயிகளும் குறுவை, சம்பா, கோடை சாகுபடியைச் செய்ய முடியும். ஆனால், கர்நாடகா தண்ணீர் தராததால் டெல்டா பகுதியை வறட்சியாக்கி, அங்கிருந்து மீத்தேன், பெட்ரோல், டீசல் எடுக்க மத்திய அரசு வஞ்சிக்கிறது.
இங்கிருக்கும் தமிழக அரசோ, தண்ணீர் வராத நேரத்தில் மணல் விற்கப் பார்க்கிறது. ஏற்கனவே முசிறி முதல் வாத்தலை வரை மணல் அள்ளியதால் 50,000 தென்னை மரங்களும், காவிரி-கொள்ளிடம் கரைகளில் இருந்த லட்சக்கணக்கான பனை மரங்களும் காய்ந்து இயற்கையே அழிந்துவிட்டது. மீண்டும் அத்தகைய சூழலை உருவாக்கக் கூடாது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்காத கர்நாடக அரசுக்கு எதிராக நாங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளோம். விவசாயிகளுக்குக் ஏற்பட்ட இழப்பீடாக ₹1 லட்சம் கோடி நஷ்டஈடு வேண்டும், ஒரு விவசாயிக்கு ₹50,000 வழங்க வேண்டும் என மனுத் தாக்கல் செய்யவுள்ளோம். மேலும், கோதாவரி - காவிரி இணைப்பின் மூலம் 1,000 டிஎம்சி தண்ணீர் தருவதாகக் கூறிய வாக்குறுதியையும் மத்திய அரசு நிறைவேற்றவில்லை. 

அமெரிக்காவில் ஒப்பந்தம் செய்து இறக்குமதி செய்யப்படும் மரபணு மாற்றப்பட்ட உணவுகளால் (GM Seeds) இளம்தலைமுறையினருக்குப் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதையெல்லாம் கண்டித்து எங்கள் போராட்டம் டெல்லியிலும் சென்னையிலும் தொடரும்.

அதேபோல தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுசாமி அளித்த பேட்டியில், 

உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி கர்நாடகா தண்ணீர் தர மறுக்கிறது. இதுகுறித்துத் தமிழக அரசிடம் முறையிட்டால், செவிடன் காதில் சங்கூதியது போல மெத்தனமாக இருக்கிறது. விவசாயிகளின் கோரிக்கையைத் தற்போதைய அரசு முற்றிலும் மறந்துவிட்டது. அதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், எல்லையைத் தாண்டிச் சென்று அணைகளின் ஷட்டர்களை உடைத்தாவது தண்ணீரைத் திறக்க வேண்டும் என்ற நோக்கில் நாங்கள் வந்தோம். ஆனால், தமிழக அரசு தன் காவல்துறையை ஏவல்துறையாகப் பயன்படுத்தி விவசாயிகளின் குரல்வளையை நசுக்குகிறது.
விவசாயிகளை ஏளனமாக நினைக்கும் இந்த அரசுக்கு ஒன்று கூறிக்கொள்கிறோம்... 'விவசாயிகளின் ஏரோட்டம் இல்லை என்றால், கோட்டையிலே ஆட்சியாளர்களுக்குக் காரோட்டம் இல்லை'. வரும் தேர்தல்களில் அரசியல்வாதிகள் ஓட்டுக் கேட்டு வரும்போது விவசாயிகள் அவர்களை விரட்டியடிப்பார்கள். காவிரியிலிருந்து கொள்ளை லாபத்திற்காக மணல் அள்ளும் குவாரிகளைத் திறக்க அரசு முயன்றால், விவசாயிகள் சங்கம் அதற்குப் பூட்டுப் போடும் மூடுவிழாவை நடத்தும் என எச்சரிக்கிறோம்.

கர்நாடக அரசிடமிருந்து உரிய காவிரித் தண்ணீரைப் பெற்றுத் தரக் கோரியும், காவிரிப் படுகையில் மணல் அள்ளக் கூடாது என வலியுறுத்தியும் எல்லையில் விவசாயிகள் நடத்திய இந்தப் போராட்டம் ஓசூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைதான விவசாயிகள் தங்களின் போராட்டம் ஓயாது என்றும், அடுத்தகட்டமாகச் சென்னை மற்றும் டெல்லியில் பெருந்திரள் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.
 
அய்யாக்கண்ணு, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க நிறுவனர் 
வேலுசாமி, மாநிலத் தலைவர், உழவர் பேரியக்கதலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்.


பாட்டாளி மக்கள் கட்சி மருத்துவர் ராமதாஸ் அணியில் இருந்த நிர்வாகிகள் முக்கிய முடிவு எடுக்க உள்ளதாக தகவல் ....16ஆம் தேதி காலை பிசிசி திருமண மண்டபத்தில் தமிழகம் முழுவதும் நிர்வாகிகள் வருகை தர உள்ளதாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருள் பேட்டி....

பாட்டாளி மக்கள் கட்சி மருத்துவர் ராமதாஸ் அணியில் இருந்த நிர்வாகிகள் முக்கிய முடிவு எடுக்க உள்ளதாக தகவல் ....16ஆம் தேதி காலை பிசிசி திருமண மண்டபத்தில் தமிழகம் முழுவதும் நிர்வாகிகள் வருகை தர உள்ளதாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருள் பேட்டி....

சேலம்,
S.K. சுரேஷ் பாபு. 

பாட்டாளி மக்கள் கட்சி மருத்துவர் ராமதாஸ் அணியில் இருந்த நிர்வாகிகள் முக்கிய முடிவு எடுக்க உள்ளதாக தகவல் ....
16ஆம் தேதி காலை பிசிசி திருமண மண்டபத்தில் தமிழகம் முழுவதும் நிர்வாகிகள் வருகை தர உள்ளதாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருள் பேட்டி....

அரசியல் துரோகம் என ராமதாஸ் தெரிவித்தது தொடர்ந்து நாங்கள் என்ன செய்வது என தெரியவில்லை - அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முக்கிய நிர்வாகிகள் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது - தமிழகம் முழுவதும் இருக்கும் முக்கிய நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர் அடுத்த கட்ட முடிவுகள் குறித்து இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட உள்ளதாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருள் தெரிவித்தார்
மாநில மாவட்ட பொறுப்பாளர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர் அவர்களின் ஆலோசனை கேட்ட பிறகு முக்கிய முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவித்தார். டாக்டர் அன்புமணி ராமதாஸ் ராமதாஸ் இருவரும் பிரியவே கூடாது என நாங்கள் வலியுறுத்தினோம் 5.8 சதவீதம் வாக்குகள் உள்ள பாட்டாளி மக்கள் கட்சிகளின் வாக்குகள் சிதறும் என தெரிவித்தோம் நாளை நடைபெற உள்ள கூட்டத்தில் மேற்பட்ட நிர்வாகிகள் வருவார்கள் அவர்களுக்கு ஒரு சீட்டு கொடுக்கப்படும் அதில் தங்களது கருத்துக்கள் தெரிவிக்க வலியுறுத்த உள்ளம் என தெரிவித்தார்.
பெரும்பாலான பொறுப்பாளர்கள் பாமக கட்சியுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தினால் அவர்களின் முடிவு அமல்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார். அருள் ஜி கே மணி இருவரும் அன்புமணியை அதிகம் விமர்சித்துஉள்ளீர்கள் தற்போது பாமகவில் உங்களை அவர்கள் நினைத்துக் கொள்ள அன்புமணி ஒத்துக் கொள்வாரா என கேட்ட கேள்விக்கு நாங்கள் பெரிய தவறு ஒன்றும் செய்யவில்லை என தெரிவித்தார் அன்புமணி சம்பந்தமாக நான் பேசிய அனைத்து உரையாடல்களும் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் கூறிய நாங்கள் பேசினோம் எனவும் தெரிவித்தார். தந்தை மகன் இருவரும் இணைந்த பிறகு மருத்துவர் ராமதாசை தனியாக தன்னை சந்திக்க அனுமதிக்கவில்லை என அருள் தெரிவித்தார். ஜிகே மணி மற்றும் காந்திமதி அவர்களுக்கு நாளை நடைபெற உள்ள கூட்டத்தில் பங்கேற்க வருமாறு அழைப்பு கொடுத்துள்ளோம் என தெரிவித்தார்.
நாளை கட்சி துவங்கி 38 ஆண்டுகள் துவங்க உள்ளது இனிப்புகள் வழங்கி கொண்டாடும் நிகழ்ச்சி நாளை நடைபெறும் எனவும் தெரிவித்தார் மருத்துவர் ராமதாஸ் அவர்களுடன் 40 ஆண்டுகளாக பயணித்த அனைவரும் நாளை நடைபெற உள்ள கூட்டத்தில் பங்கேற்பார்கள் எனவும் தெரிவித்தார்.