Latest

புதன், 9 செப்டம்பர், 2026

தமிழகத்தில்நடைபெறவுள்ள இடைத்தேர்தலில்  தமிழக விவசாயிகளை மிகப்பெரிய அளவில் ஒன்று திரட்டி இரு தொகுதியிலும் தவெக கட்சியை தோற்கடிப்பதற்காக பிரச்சாரம் மிகக் கடுமையான மேற்கொள்வோம். தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ஆர். வேலுச்சாமி தமிழக அரசுக்கு கடும் எச்சரிக்கை.

தமிழகத்தில்நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் தமிழக விவசாயிகளை மிகப்பெரிய அளவில் ஒன்று திரட்டி இரு தொகுதியிலும் தவெக கட்சியை தோற்கடிப்பதற்காக பிரச்சாரம் மிகக் கடுமையான மேற்கொள்வோம். தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ஆர். வேலுச்சாமி தமிழக அரசுக்கு கடும் எச்சரிக்கை.

நாமக்கல், 
S.K. சுரேஷ்பாபு.

தமிழகத்தில்நடைபெறவுள்ள இடைத்தேர்தலில்  தமிழக விவசாயிகளை மிகப்பெரிய அளவில் ஒன்று திரட்டி இரு தொகுதியிலும் தவெக கட்சியை தோற்கடிப்பதற்காக பிரச்சாரம் மிகக் கடுமையான மேற்கொள்வோம். தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ஆர். வேலுச்சாமி தமிழக அரசுக்கு கடும் எச்சரிக்கை. 


இது குறித்து, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி கடும் எச்சரிக்கை பதிவினை தமிழக அரசுக்கு வெளியேற்றுள்ளார், அந்த அறிக்கையின் அடிப்படையில், ஏற்கனவே,  ஏற்கனவே, தமிழக விளையாட்டு துறை அமைச்சர் சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் இந்தியாவின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயத்தை காட்டிலும் விளையாட்டுத்துறை மட்டுமே மேம்பட்டது என்று பெருமைப்பட பேசியது மிகப் பெரிய சர்ச்சைக்குரிய விஷயமாகவே தமிழகம் உட்பட அனைத்து மாநில விவசாயிகள் தரப்பிலும் நாள்தோறும் செய்திகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. இந்த நிலையில், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ஆர் வேலுச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் தவெக கட்சி சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், தமிழக விவசாயிகள் கூட்டுறவு தொடக்க வேளாண்மை கடன் சங்கங்களில் வாங்கிய பயிர் கடன் சிறு ,குறு விவசாயிகளுக்கு முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படும்  பெரு விவசாயிகள் வாங்கிய பயிர் பயிர் கடன் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என கவர்ச்சிகரமாக வாக்குறுதி கொடுத்து ஆட்சி பொறுப்பிற்கு வந்தவுடன் பல்வேறு நிபந்தனைகளை விதித்து முறையாக முழுமையாக பயிர் கடன் தள்ளுபடி செய்யவில்லை.
இது  தமிழக விவசாயிகளிடம் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சமீபத்தில் உண்டாகியுள்ள கடுமையான வறட்சியின் பொருட்டு அனைத்து விவசாயிகளும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் வாங்கிய பயிர் கடனை பாகுபாடின்றி முழுமையாக தள்ளுபடி செய்ய கோரி, 
தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளின் ஒட்டுமொத்த குரலாக தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாய சங்கங்கள் மற்றும் தமிழக அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தவெக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். தமிழக விவசாயிகள் இரவு பகல் என்றும் பாராமல் கடுமையான உழைப்பின் மூலம் உடல் ரத்தத்தை வியர்வையாக சிந்தி உழைக்கும் தமிழக விவசாயிகளுக்கு தவெக கட்சி கடந்த சட்டமன்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாததையும் சமீபத்தில் தமிழகம் முழுவதும் கடுமையான வறட்சியின் காரணமாக விவசாயிகளுக்கு வருவாய் இழப்பை காரணத்தை கருத்தில் கொண்டு தமிழக விவசாயிகள் அனைவரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் வாங்கிய பயிர் கடன் முழுவதும் தள்ளுபடி செய்ய கோரி வைத்த கோரிக்கையை நிறைவேற்ற தவறிய தவெக அரசுக்கு தமிழக விவசாயிகள் சார்பில் அதற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் அடுத்த மாதம் தமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இரு தொகுதியிலும் தேர்தலில் தமிழக விவசாயிகளை மிகப்பெரிய அளவில் ஒன்று திரட்டி தவெக கட்சி இடைத்தேர்தலில் போட்டியிட்டால்  இரு தொகுதியிலும் தவெக கட்சியை தோற்கடிப்பதற்காக  பிரச்சாரம் மேற்கொள்வோம் என்பதை உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் இந்த அறிக்கையின் வாயிலாக தவெக கட்சிக்கு எச்சரிக்கை விடுக்கிறேன் என்றும் இந்தியாவின் முதுகெலும்பாக உள்ள விவசாயத் தொழிலை கொச்சைப்படுத்தி, தமிழக விவசாயிகளின் நலனில் எந்த அக்கறையும் செலுத்தாமல், தேர்தலில் அறிவித்த அறிக்கையை எதையும் செயல்படுத்தாமல், உட்பட எவ்வளவோ உள்ளது விவசாயிகளை பாதிக்கும் செயல். இவற்றை அனைத்தையும் ஒருங்கிணைத்து கேவலப்படுத்தி விளையாட்டு துறையை மேம்படுத்தும் விதமாக ஆதவ் அர்ஜுனா வின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் கண்டனம் தெரியாமல் வருத்தம் தெரிவிக்காமல் நாளை துபாய் சைடுல உள்ள தமிழக முதல்வர். 
 

திங்கள், 7 செப்டம்பர், 2026

சேலம் அருகே நிகழ்ந்து கொண்டிருக்கும் மணல் கொள்ளையை தடுக்க அரசு அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. கண்ணில் கருப்பு துணி கட்டிக் கொண்டு சேலம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க வந்த பாஜக நிர்வாகிகள் பரபரப்பு.

சேலம் அருகே நிகழ்ந்து கொண்டிருக்கும் மணல் கொள்ளையை தடுக்க அரசு அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. கண்ணில் கருப்பு துணி கட்டிக் கொண்டு சேலம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க வந்த பாஜக நிர்வாகிகள் பரபரப்பு.

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

சேலம் அருகே நிகழ்ந்து கொண்டிருக்கும் மணல் கொள்ளையை தடுக்க அரசு அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. கண்ணில் கருப்பு துணி கட்டிக் கொண்டு சேலம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க வந்த பாஜக நிர்வாகிகள் பரபரப்பு. 

சேலம்
சன்னியாசி குண்டு விநாயகர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் பூபதி. இவர் தமிழக பாஜகவின் மாநில செயற்குழு உறுப்பினராக இருந்து வருகின்றார். இந்த நிலையில் கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு புகார் மனு ஒன்றினை இன்று நடைபெற்ற சேலம் மாவட்ட ஆட்சியரின் குறைதீர்ப்பு நாள் கூட்டத்திற்கு மனு வழங்குவதற்காக வந்திருந்தார். இதற்கென ஏற்கனவே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சேலம் டவுன் காவல் துறையினர் மற்றும் சேலம் செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு மீட்பு படை குறையினர் பரபரப்பிற்கு உள்ளாகினர். இதுகுறித்து அவரிடம் விசாரிக்கையில் தான் புகார் மனு கொடுப்பதற்காக வந்துள்ளதாகவும் பலமுறை புகார் தெரிவித்தும் அரசுத்துறை அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை வலியுறுத்தும் விதமாக கண்களில் கருப்பு துணி கட்டி புகார் மனு அளிக்க வந்துள்ளதாக கூறியதன் அடிப்படையில் நிலைமை அங்கு சற்று கொஞ்சம் நிம்மதி அடைந்தது. சேலம் சன்னியாசி குண்டு பகுதியைச் சேர்ந்த பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் தனது புகார் மனுவில், 
சேலம் மாவட்டம், அயோத்தியாபட்டினம், மாசிநாயக்கன்பட்டி ஏரி அருகிலுள்ள காட்டுவளவு பகுதியில் இயங்கி வரும் பிளாஸ்டிக்/ஸ்டிக் பேப்பர் உருக்கும் ஆலை மற்றும் தேங்காய் ஓடு எரிக்கும் ஆலை தொடர்பாக,  சுற்றுச்சூழல் விதிமீறல், விவசாய நிலங்கள் மற்றும் ஏரிக்கு பாதிப்பு, தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வசதிகள் இல்லாமை மற்றும் தேவையான அரசு அனுமதிகள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தொடர்புடையது அவரது கோரிக்கை மனுவும். அந்த கோரிக்கை மனுவில் பூபதி என்பவர் குறிப்பிட்டுள்ளதாவது, சேலம் மாவட்டம், அயோத்தியாபட்டினம் பகுதியில் உள்ள மாசிநாயக்கன்பட்டி ஏரி அருகிலுள்ள காட்டுவளவு பகுதியில், சீனிவாசன் என்பவர் பிளாஸ்டிக்/ஸ்டிக் பேப்பர் உருக்கும் ஆலை மற்றும் தேங்காய் ஓடு எரிக்கும் ஆலையை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி ஆலையில் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருவதாகவும், அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் முறையாக வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் தொழிலாளர்களின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படக்கூடிய சூழ்நிலை உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், ஆலையிலிருந்து வெளியேறும் கழிவுகள் மற்றும் பிற பொருட்கள் அருகிலுள்ள விவசாய நிலங்களுக்கும், மாசிநாயக்கன்பட்டி ஏரிக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செல்வதாகவும், கழிவுகள் ஏரியில் கலக்கப்படுவதாகவும் புகார் தெரிவிக்கப்படுகிறது. இதனால் விவசாய நிலங்கள், விவசாயப் பயிர்கள், நீர்நிலைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் பூபதி சம்பந்தப்பட்ட புகார் மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.
சேலம் ஆத்தூரில் 2 கோடி ரூபாய் மதிப்பீடான இரண்டு ஏக்கர் நிலத்தை லஞ்சம் பெற்றுக் கொண்டு சரவணன் என்பவருக்கு போலி பட்டா மூலம் விற்பனை செய்து கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வன்.

சேலம் ஆத்தூரில் 2 கோடி ரூபாய் மதிப்பீடான இரண்டு ஏக்கர் நிலத்தை லஞ்சம் பெற்றுக் கொண்டு சரவணன் என்பவருக்கு போலி பட்டா மூலம் விற்பனை செய்து கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வன்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் ஆத்தூரில் 2 கோடி ரூபாய் மதிப்பீடான இரண்டு ஏக்கர் நிலத்தை லஞ்சம் பெற்றுக் கொண்டு சரவணன் என்பவருக்கு போலி பட்டா மூலம் விற்பனை செய்து கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வன்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள  ராமநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் குழந்தைவேலு. இவர் தனது குடும்பத்தாருடன் சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு புகார் மனு கொடுப்பதற்காக வந்திருந்தார். அந்த புகார் மனுவில், விவசாயியான தனக்கு மனைவி மற்றும் மகன்கள் மகள்கள் உள்ளனர். மகன்களுக்கும் மகள்களுக்கும் திருமணம் செய்து கொடுத்து விட்ட நிலையில், சம்பந்தப்பட்ட கிராமத்தில்  குத்தகை மற்றும் அனுபவத்தின் மூலம் நான் சுமார் 4 ஏக்கர் விவசாய நிலத்தை நிர்வகித்து வருகிறேன். அதே நிலத்தில் வீடு கட்டி, எனது மனைவி துளசி மற்றும் மகன்கள் பாலமுருகன், தர்மர் ஆகியோருடன் வசித்து விவசாயம் செய்து வருகிறேன். ராமநாயக்கன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகரின் மனைவியான கனகம் என்பவர், நான் தான் அவருடைய கணவர் என்று பொய்யான தகவலைக் கூறி எனக்குப் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தி வருகிறார். 
தற்போது முல்லைவாடி கிராமத்திcன் கிராம நிர்வாக அலுவலராக (VAO) உள்ள மேற்கூறிய கனகம், எனக்குச் சொந்தமானதும் நான் 50 ஆண்டுகளாக அனுபவத்தில் வைத்திருப்பதுமான ராமநாயக்கன்பாளையம் வடக்கு 9-ல் உள்ள விவசாய நிலத்திற்கு, போலியான பட்டா (பட்டா எண் 1109) மற்றும் ஆத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆவண எண் 1370/2025-ன் கீழ் ஒரு பத்திரப் பதிவையும் தயார் செய்துள்ளார். இதன் மூலம் அவர் எனது நிலத்தைக் அபகரிக்க முயற்சிக்கிறார். மேற்கூறிய நிலம் 50 ஆண்டுகளாக எனது அனுபவத்தில் உள்ளது என்பது கிராமத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும். இந்நிலையில், எனக்குப் படிப்பறிவு இல்லாததால், எனது நிலம் வேறொருவர் பெயரில் 'அ' பதிவேட்டில் (A-Register) பதிவு செய்யப்பட்டது குறித்த விவரங்கள் எனக்குத் தெரியவில்லை. எனது அறியாமையைப் பயன்படுத்தி, மேற்கூறிய கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வன் லஞ்சம் பெற்றுக்கொண்டு இந்த முறையற்ற செயலைச் செய்துள்ளார்.
மேற்கூறிய பட்டா மற்றும் உரிமைப் பத்திரத்திற்குத் தேவையான அசல் ஆவணங்கள் அல்லது அனுபவ ஆதாரம் எதுவும் அந்த நபரிடம் இல்லாதபோதிலும், கிராம நிர்வாக அலுவலர் பணம் பெற்றுக்கொண்டு எனக்கு அந்தப் பட்டாவை வழங்கியுள்ளார். எனது நிலத்தை நேரில் வந்து அளக்காமலும், எனக்கு எந்தத் தகவலும் தெரிவிக்காமலும், மோசடியான போலியான பட்டாவைப் பயன்படுத்தி நிலத்தைப் உட்பிரிவு (subdivision) செய்து எனக்கு வழங்கியுள்ளார்.  மேற்கூறிய போலியான பட்டாவை ரத்து செய்யவும், அந்தப் போலியான பட்டாவை வழங்கிய கிராம நிர்வாக அலுவலர் (VAO) கலைச்செல்வன் மற்றும் நிலத்தை உட்பிரிவு செய்த நில அளவர் ஆகியோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவும் பணிவுடன் கேட்டுக் கொள்வதாக அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். 
இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயி குழந்தைவேலு நம்மிடையே கூறுகையில், வரும் 19ஆம் தேதி பட்டா நிலத்திற்கான அனைத்து ஆவணங்களையும் எடுத்து வர சேலம் மாவட்ட காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளதாகவும், தங்களுக்கு சொந்தமான நிலத்தை மீட்டு தங்களுக்கு வழங்க வேண்டும் என்பதே தங்களது கோரிக்கை என்றும் வேதனையுடன் விவசாய குடும்பத்தினர் தெரிவித்தனர்.

ஞாயிறு, 6 செப்டம்பர், 2026

சேலத்தில் புதிய வெளிச்சம் சேவை அறக்கட்டளையின் சார்பில் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம்.

சேலத்தில் புதிய வெளிச்சம் சேவை அறக்கட்டளையின் சார்பில் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம்.

சேலம், 
S.K. சுரேஷ்பாபு. 

சேலத்தில் புதிய வெளிச்சம் சேவை அறக்கட்டளையின் சார்பில் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம்.

சேலத்தில் புதிய வெளிச்சம் சேவை அறக்கட்டளை மற்றும் அன்னபூர்ணா மருத்துவமனை ஆகியவற்றின் சார்பில்  மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அமைப்பின் நிறுவனத் தலைவர் தனபால் தலைமை தாங்கினார். தொழிலதிபர்கள் கோல்டு தேவராஜ் மற்றும் ரவிவர்மா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு இலவச பொது மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தனர். சேலம் அன்னபூர்ணா மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்ட இந்த பொது மருத்துவ முகாமில் அனைத்து விதமான நோய்களுக்கும் சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இந்த முகாமில் பொன்னம்மாபேட்டை அம்மாபேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்று சென்றனர். இந்த பொது மருத்துவ முகாம் குறித்து புதிய வெளிச்சம் சேவை அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் தனபால் செய்தியாளர்களிடம் கூறுகையில், எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் மக்களின் நலனுக்காகவே  கடந்த 30 ஆண்டுகளாக அனைத்து விதமான சேவைகளை பொதுமக்களுக்கு செய்து வருவதாகவும், தற்பொழுது இரண்டாவது ஆண்டாக இந்த பொது மருத்துவம் முகாம் நடத்தி வருவதாக தெரிவித்தார். தனியார் அமைப்புகளின் சார்பில் பல்வேறு ஆதரவற்றோர் இல்லங்கள் இருந்தாலுமே கூட தற்பொழுதும் சாலையில் ஆதரவின்றி தவித்து வரும் பொது மக்களின் நலன் கருதி விரைவில் தங்களது அமைப்பின் சார்பில் இலவச சேவை ஆதரவற்றோர் இல்லம் தொடங்குவதே தங்களது அமைப்பின் தலையாய நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருவதாகவும் இதற்கு தமிழக அரசு தங்களுக்கு போதுமான ஒத்துழைப்பும் உதவிகளையும் வழங்க வேண்டும் என்றும் தனபால் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார். 
இந்த பொது மருத்துவ முகாமில் புதிய வெளிச்சம் சேவை அறக்கட்டளை நிர்வாகிகள் அன்பு சரவணன் ரமேஷ் மணிவண்ணன் சரவணன் சாந்தகுமார் சாரதி சின்னத்தம்பி மற்றும் பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வியாழன், 3 செப்டம்பர், 2026

சேலம் சிறுமலர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா. அரசு தேர்வுகளில் 100% வெற்றி பெற உதவியாக இருந்த ஆசிரியர் பெருமக்களுக்கும், தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த வீரர்களுக்கும் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன.

சேலம் சிறுமலர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா. அரசு தேர்வுகளில் 100% வெற்றி பெற உதவியாக இருந்த ஆசிரியர் பெருமக்களுக்கும், தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த வீரர்களுக்கும் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன.

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

சேலம் சிறுமலர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா. அரசு தேர்வுகளில் 100% வெற்றி பெற உதவியாக இருந்த ஆசிரியர் பெருமக்களுக்கும், தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த வீரர்களுக்கும் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன.

சேலம் சிறுமலர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் மேதகு ஆயர் அருள்செல்வம் ராயப்பன் அவர்கள் தலைமையேற்று  பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வில் நூறு சதவீதம் வெற்றியைப் பெற்றுத் தந்த  ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கியும் பொன்னாடை அணிவித்தும் பாராட்டு தெரிவித்தார். 
ஆசிரியர் தின விழாவை முன்னிட்டு ஆசிரியர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பரிசுகள் வழங்கி பாராட்டினார். மாணவர் ரீகன், மாணவர் ரித்திக்,மாநில  தேசிய டேக்வாண்டோ  போட்டியிலும் தங்கப்பதக்கம் மற்றும் வெண்கல பதக்கங்கள் வென்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தார். 
புதியதாக கட்டப்பட்ட சுகாதார கட்டிடத்தை மேதகு ஆயர் அவர்கள் திறந்து வைத்தார். அருட்பணி எட்வின் ஆயரின் செயலர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இவ்விழாவிற்கு தலைமை ஆசிரியர் அருட்பணி A. ஜோதி பெர்னாண்டோ அவர்களும், அருட்பணி A. டேவிட்  உதவி தலைமை ஆசிரியர் அவர்களும் அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டார்கள்.
ஈரோட்டில் இளையராஜாவின் இசை வெள்ளம்..! 50 ஆண்டுகால இசைப் பயணத்தை கொண்டாடும் பிரம்மாண்ட நேரடி இன்னிசை விழா

ஈரோட்டில் இளையராஜாவின் இசை வெள்ளம்..! 50 ஆண்டுகால இசைப் பயணத்தை கொண்டாடும் பிரம்மாண்ட நேரடி இன்னிசை விழா


ஈரோட்டில் இளையராஜாவின் இசை வெள்ளம்..!

50 ஆண்டுகால இசைப் பயணத்தை கொண்டாடும் பிரம்மாண்ட நேரடி இன்னிசை விழா

ஈரோடு, செப். 3:
இசைஞானி இளையராஜாவின் 50 ஆண்டுகால இசைப் பயணத்தை கொண்டாடும் வகையில், ஈரோடு டெக்ஸ்வேலியில் வரும் அக்டோபர் 25-ம் தேதி பிரம்மாண்டமான நேரடி இன்னிசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

அருண் ஈவென்ட்ஸ் மற்றும் மெர்குரி நிறுவனம் சார்பில் நடைபெறும் இந்நிகழ்ச்சிக்கான செய்தியாளர் சந்திப்பு ஈரோடு டெக்ஸ்வேலியில் நடைபெற்றது.

முக்கியஸ்தர்கள் பங்கேற்பு

நிகழ்ச்சியின் முக்கிய விளம்பரதாரர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக மில்கி மிஸ்ட் டெய்ரி ஃபுட் லிமிடெட் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சதீஷ் குமார், முழுநேர இயக்குநர் அனிதா சதீஷ் குமார், ஏற்றுமதி மற்றும் சில்லறை விற்பனை மேலாளர் சஞ்சய் சதீஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், ஃபார்ச்சூன் சிட்டி டெக்ஸ்வேலி நிர்வாக இயக்குநர் ராஜசேகர், செயல் இயக்குநர் டி.பி. குமார், இயக்குநர் உமா சேகர், தலைமை நிர்வாக அதிகாரி கோவர்த்தனன் ஆகியோரும் பங்கேற்றனர்.

எம்.சி.ஆர். டெக்ஸ்டைல்ஸ் நிறுவனர்களான எம்.சி. ராபின், எம்.சி. ரிக்சன், பி.என்.ஐ. நிர்வாக இயக்குநர் மகேஷ் பி.வி. கிரி, ரெனாட்டஸ் ப்ரோகான் தலைமை நிர்வாக அதிகாரி பகலா வெங்கடேஷ், வால்யூம் ஸீரோ நிர்வாக இயக்குநர் ராஜாராம் முருகையா உள்ளிட்ட தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.


மேலும், பாண்டியன் எலக்ட்ரிக்கல்ஸ் & பைப்ப்ஸ் நிர்வாக இயக்குநர் எல்லாளன், தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி சேலம் மண்டலத் தலைவர் ராஜவேலு, பிராண்டிங் பீஸ் & கோ நிறுவனர் விக்னேஷ் வேலுசாமி, அனில் ஃபுட்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி பிரபாகர் யுவராஜன், சர்வேஷ் எக்ஸ்போர்ட்ஸ் மற்றும் தியா எக்ஸ்போர்ட்ஸ் உரிமையாளர் பி.எஸ். கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் பங்கேற்றனர்.

செந்தில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை டாக்டர் பி.எஸ். கௌரி சங்கர், V சோடா மற்றும் 369 நிறுவனர் அருண் மாதேஸ்வரன், MJM கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளர் அவ்வை.ஆர். முருகன், யெஸ் ப்ரின்டிங்ஸ் உரிமையாளர் ஆனந்த் அர்தநாரீஸ்வர் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

50 ஆயிரம் ரசிகர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்ப்பு

கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 50,000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை வழங்கும் வகையில், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பிரம்மாண்ட மேடை மற்றும் காட்சியமைப்புகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

‘ஜெயிலர்’, ‘டாக்டர்’, ‘பீஸ்ட்’, ‘விடுதலை’ உள்ளிட்ட திரைப்படங்களுக்கு பிரம்மாண்ட அரங்குகள் மற்றும் காட்சியமைப்புகளை உருவாக்கிய கலை இயக்குநர் கிரண், இந்நிகழ்ச்சிக்கான மேடை அமைக்கும் பணியில் ஈடுபட உள்ளார்.

“இளையராஜாவின் இசைப் பயணத்தில் நாமும் பங்கேற்பது பெருமை”

நிகழ்ச்சி குறித்து மில்கி மிஸ்ட் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சதீஷ் குமார் கூறுகையில், தமிழகத்தின் பெருமைமிகு அடையாளமாக விளங்கும் இளையராஜாவின் 50 ஆண்டுகால இசைப் பயணத்தை ஈரோட்டில் கொண்டாடுவது பெருமைக்குரிய விஷயம் என்றும், வாழ்நாள் முழுவதும் அவரது இசைப் பயணத்தில் நாமும் பங்கேற்றிருப்பது சிறப்பான ஒன்று என்றும் தெரிவித்தார்.

டிக்கெட் விற்பனை தொடக்கம்

நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனையை சதீஷ் குமார் தொடங்கி வைத்தார். தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களின் நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் டிக்கெட்டுகளை பெற்றுக் கொண்டனர்.

அக்டோபர் 25-ம் தேதி நடைபெறும் இந்நிகழ்ச்சிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை தற்போது entrypasses.com இணையதளத்தில் நடைபெற்று வருகிறது.

புதன், 2 செப்டம்பர், 2026

சேலம் - ஓமலூர் சுங்கச்சாவடி நிர்வாகத்தின் சட்டவிரோதக் கட்டண வசூலைக் கண்டித்து, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருள் தலைமையில் சாலை மறியல் போராட்டம்.

சேலம் - ஓமலூர் சுங்கச்சாவடி நிர்வாகத்தின் சட்டவிரோதக் கட்டண வசூலைக் கண்டித்து, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருள் தலைமையில் சாலை மறியல் போராட்டம்.

சேலம்,
S. K.சுரேஷ்பாபு.

சேலம் - ஓமலூர் சுங்கச்சாவடி நிர்வாகத்தின் சட்டவிரோதக் கட்டண வசூலைக் கண்டித்து, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருள் தலைமையில் சாலை மறியல் போராட்டம்.

சேலம் மாநகராட்சியின் நுழைவாயிலாக அமையும் ஓமலூர் சுங்கச்சாவடி, விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டுள்ளது. உண்மையில், தோப்பூரிலிருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள மல்லூருக்கு அப்பால், நாமக்கல் மாவட்ட நுழைவாயிலில் அமைக்கப்பட்டிருக்க வேண்டிய இந்தச் சுங்கச்சாவடி, ஓமலூரில் அமைக்கப்பட்டுள்ளதாகப் புகார்கள் உள்ளன. உள்ளூர் வாகனங்களுக்கான கட்டணம் ரூ.15-லிருந்து ரூ.60-ஆகவும், கனரக வாகனங்களுக்கான கட்டணம் ரூ.25-லிருந்து ரூ.200-ஆகவும் (ஒன்பது மடங்கு) உயர்த்தப்பட்டதை அறிந்ததும், சேலம் மேற்கு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஐ. அருள் தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் சுங்கச்சாவடி மற்றும் அதன் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
அப்போது காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையின்போது, ​​டெல்லியில் உள்ள உயர் அதிகாரிகளிடம் பேசி கட்டணத்தைக் குறைக்க நடவடிக்கை எடுப்பதாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய (NHAI) திட்ட இயக்குநர் உறுதியளித்தார். இருப்பினும், உள்ளூர் மக்களுக்குக் கட்டணச் சலுகை வழங்கப்படாவிட்டால் விதிமுறைகளின்படி ஓமலூர் சுங்கச்சாவடி மூடப்பட வேண்டும் என்று வலியுறுத்திய போராட்டக்காரர்கள், ஒரு மாத கால அவகாசம் அளித்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் கோவிந்தன், இளைஞரணிச் செயலாளர் தமிழன் துரை செந்தில்குமார், மாங்கனி பாலு, மாவட்டச் செயலாளர் இளம்பிள்ளை பச்சமுத்து, செல்லப்பிள்ளைக்குட்டை கோவிந்தராஜ், கோணகப்பாடி ரத்தினவேல், விஜயராயா, என். சேகர், மகாதேவன், சக்தி, மணிகண்டன், கரிசல் குணா, சித்திவேல்முருகன், ஐ. தங்கம், மா. கோகிலா, மணி, கார்த்தி, சின்னசாமி, அருண், நிர்மல் மற்றும் பிற நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.