Latest

திங்கள், 29 டிசம்பர், 2025

தமிழக முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் தேசிய நெடுஞ்சாலைகளில் கரவை மாடுகளுடன் போராட்டத்தின் எதிரொலி. போராட்டத்தை தடுக்க தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் வேலுச்சாமி மற்றும் இளம் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் சௌந்தரராஜன் உள்ளிட்ட  மூன்று பேர் இன்று காலை அதிரடியாக கைது செய்யப்பட்டு பரமத்தியில் உள்ள சமுதாயக்கூடத்தில் அடைப்பு.

தமிழக முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் தேசிய நெடுஞ்சாலைகளில் கரவை மாடுகளுடன் போராட்டத்தின் எதிரொலி. போராட்டத்தை தடுக்க தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் வேலுச்சாமி மற்றும் இளம் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் சௌந்தரராஜன் உள்ளிட்ட மூன்று பேர் இன்று காலை அதிரடியாக கைது செய்யப்பட்டு பரமத்தியில் உள்ள சமுதாயக்கூடத்தில் அடைப்பு.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

தமிழக முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் தேசிய நெடுஞ்சாலைகளில் கரவை மாடுகளுடன் போராட்டத்தின் எதிரொலி. போராட்டத்தை தடுக்க தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் வேலுச்சாமி மற்றும் இளம் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் சௌந்தரராஜன் உள்ளிட்ட  மூன்று பேர் இன்று காலை அதிரடியாக கைது செய்யப்பட்டு பரமத்தியில் உள்ள சமுதாயக்கூடத்தில் அடைப்பு. 

தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் பால் பண்ணை மூலம் தமிழக விவசாயிகளிடமிருந்து பெறப்படும் பசு மற்றும் எருமை பாலிற்கு கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசு தற்போது வரை செவி சாய்க்காததால் 29ஆம் தேதி ஆகிய இன்று தமிழகத்தில் பால் உற்பத்தி நிறுத்த போராட்டம் நடத்துவதுடன், தமிழக முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் கறவை மாடுகளுடன் பால் உற்பத்தியாளர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தது .
உழவர் பெருந்தகை  நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி ஏற்கனவே இன்று தமிழகம் தழுவிய அளவில் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்து இருந்த நிலையில் இன்று காலை அதிரடியாக அவர் இல்லத்தில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்து குறிப்பில், தமிழ்நாடு அரசு, ஆவின் கூட்டுறவு ஒன்றியம் மூலம், விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யும் பசும் பால் மற்றும் எருமைப் பாலின் விலையை தற்போதைய கொள்முதல் விலையில் இருந்து லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 15 ரூபாய் உயர்த்தி அறிவிக்க கோரி உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் பலமுறை தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை வைத்தும் திமுக அரசு செவி சாய்க்காததால் தமிழகம் முழுவதும் உள்ள விவசாய சங்க அமைப்புகள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் அணைவரும் ஒன்றிணைந்து உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் கூட்டமைப்பு சார்பில் இன்று 29.12.2025 காலை 10 மணிக்கு தமிழகம் முழுவதும் கறவை மாடுகளுடன் தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,
உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் எனது தலைமையில் நாமக்கல் மாவட்டம்  நாமக்கல் வட்டம் கோனூர் ஊராட்சி கந்தம்பாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் கறவை மாடுகளுடன் விவசாயிகள் மறியல் போராட்டம் நடைபெற இருந்தது இந்த போராட்டத்தை முரிவுயடிக்கும் விதமாக பரமத்தி காவல் நிலைய ஆய்வாளர் அவர்கள் தலைமையில் காவலர்களுடன் இன்று காலை  உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் R.வேலுசாமி அவர்களைவும் மற்றும் இளம் விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜெ.சௌந்தரராஜன் அவர்கள் உட்பட மேலும் 3 பேரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து முன்கூட்டியே கைது  செய்து பரமத்தி பேரூராட்சி சமுதாய கூடத்தில் தங்கவைத்துள்ளனர்.தமிழக விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான பால் போராட்டம் நடத்துவதை திமுக அரசு முறியடிக்கும் விதமாக சதி செய்துள்ளது. பால் கொள்முதல் விலையை தமிழ்நாடு அரசு உடனடியாக உயர்த்தி அறிவிக்கா விட்டால் மீண்டும் அடுத்தகட்ட போராட்டம் 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் அன்று சென்னை கோட்டை தலைமைச் செயலகத்தை முற்றுகை இடும் போராட்டம் தமிழக விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் அனைவரும் மிகப்பெரிய அளவில் ஒன்றிணைந்து நடத்தப்படும் என உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

மேயர் மற்றும் ஆணையர் ஆகியோரிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பிய திமுக,  அதிமுக மற்றும் விசிக மாமன்ற உறுப்பினர்கள். ஷானவாஸ் என்ற தனிநபரின் செயல்பாட்டிற்கு மாநகராட்சி நிர்வாகம் துணை போவதாக ஆறு மாமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டியதால் பரபரப்பு.

மேயர் மற்றும் ஆணையர் ஆகியோரிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பிய திமுக, அதிமுக மற்றும் விசிக மாமன்ற உறுப்பினர்கள். ஷானவாஸ் என்ற தனிநபரின் செயல்பாட்டிற்கு மாநகராட்சி நிர்வாகம் துணை போவதாக ஆறு மாமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டியதால் பரபரப்பு.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

மேயர் மற்றும் ஆணையர் ஆகியோரிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பிய திமுக,  அதிமுக மற்றும் விசிக மாமன்ற உறுப்பினர்கள். ஷானவாஸ் என்ற தனிநபரின் செயல்பாட்டிற்கு மாநகராட்சி நிர்வாகம் துணை போவதாக ஆறு மாமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டியதால் பரபரப்பு. 

சேலம் மாநகராட்சியின் மாதாந்திர இயல்பு கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. சேலம் மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு ஆணையாளர் டாக்டர் இளங்கோவன் மற்றும் துணை மேயர் திருமதி சாரதா தேவி மாணிக்கம் ஆகியோர்  முன்னிலை வகித்தனர். உதவி ஆணையர்கள் செயற்பொறியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த கூட்டத்தில் 60 கோட்ட மாமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டு அவரவர் கோட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பல்வேறு குறைகளையும் முன் வைத்தனர். 
இதில் பெரும்பாலான திமுக மாமன்ற உறுப்பினர்கள் தங்களது கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சரிவர திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை என்றும், குறிப்பாக சேலம் மாநகராட்சியின் 59 வது கோட்டம் சேலம் மாநகராட்சியால் புறக்கணிக்கப்படுகிறதா என்று கேள்வியையும் திமுக மாமன்ற உறுப்பினர் முன்வைத்ததால் மாமன்ற இயல்பு கூட்டத்தில் திடீரென நிசப்தம். இவர்களின் குற்றச்சாட்டிற்கு மாநகர மேயரோ, ஆணையரோ மற்றும் உதவி ஆணையர்களோ பதிலளிக்காமல் இருந்தது சலசலப்பையும் ஏற்படுத்தியது. அப்போது சேலம் வ உ சி, பூ மார்க்கெட் வியாபாரிகள் உட்பட சாலையோர வியாபாரிகளிடம் சானவாஸ் என்ற தனிநபர் ஐந்து பேர் கொண்ட குழுவை அமைத்து சட்டவிரோதமாக அதிகப்படியான பண வசூலில் ஈடுபட்டு வருவதாகவும், சேலம் மாநகரம் உட்பட மாவட்டத்தை சேர்ந்த எந்த ஒரு வியாபாரிகளுக்கும் அவர் முன்னுரிமை அளிக்காமல் வெளியூர் வியாபாரிகளுக்கு அதிக பணம் பெற்றுக்கொண்டு இடங்களை ஒதுக்கி தருவதாக குற்றம் சாட்டினர். இந்த நபரின் செயலுக்கு சேலம் மாநகராட்சி அதிகாரிகள் உட்பட மாநகராட்சி நிர்வாகமே துணை நிற்பதாக பகிரங்கமாக மாமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர். இந்த தனி நபர் மீது அம்மாபேட்டை மண்டல அலுவலகத்தில் அவருக்கு எதிராக ஏற்கனவே தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு உள்ளதாகவும், சேலம் மாநகராட்சி நிர்வாகம் சானவாஸ் என்பவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து காவல்துறையில் புகார் அளித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். 
சம்பந்தப்பட்ட ஷானவாஸ் என்பவர் மீது மாமன்ற உறுப்பினர்கள் புகார் அளித்தால் மாநகராட்சி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்று மேயர் பதிலளித்தார். தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த கூட்டத்தில் ஆறு மாமன்ற உறுப்பினர்கள் கொண்டு வந்த இந்த பிரச்சனையை தனி தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்த மாமன்ற உறுப்பினர்கள், ஒரு கட்டத்தில் ஆறு மாமன்ற உறுப்பினர்கள் ஒரே நேரத்தில் பேசத் தொடங்கிய போது 44-வது கோட்ட மாமன்ற உறுப்பினர் இமையவரம்பன் குறுக்கிட்டு ஆறு மாமன்ற உறுப்பினர்களின் குற்றச்சாட்டுக்கு மாநகர மேயரோ அல்லது ஆணையரோ பதிலளிக்காமல் மௌனம் காப்பது ஏற்புடையதல்ல என்றும் ஆறு பேரின் குற்றச்சாட்டிற்கு மாநகராட்சி நிர்வாகம் என்ன பதில் அளிக்க போகிறது என்று கேள்வியையும் முன் வைத்தார். இதனால் சேலம் மாநகராட்சி இயல்புக்கூட்டத்தில் பெரும் பரபரப்பு காணப்பட்டது. இதன் எடுத்து பேசத் தொடங்கிய சேலம் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் யாதவமூர்த்தி சேலம் மாநகராட்சியில் அனைத்து திட்டங்களிலும் முறைகேடு நடப்பதாகவும் ஒவ்வொரு மாமன்ற உறுப்பினர் பேசும்போதும் மாமன்ற உறுப்பினர் இமையவரம்மன் குறுக்கிட்டு பேசிய செயலை கண்டித்தும் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கூட்டு அரங்கில் கோஷம் எழுப்பியவாறு வெளியேறினார்.

ஞாயிறு, 28 டிசம்பர், 2025

சேலத்தில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா மாரத்தான் போட்டி. மாநில அளவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் பங்கேற்பு.

சேலத்தில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா மாரத்தான் போட்டி. மாநில அளவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் பங்கேற்பு.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சேலத்தில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா மாரத்தான் போட்டி. மாநில அளவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் பங்கேற்பு.

சேலம் வீரபாண்டி தெற்கு ஒன்றிய தி.மு.கசார்பில் துணை முதல் - அமைச்சர் உதயநிதி
ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி மாநிலஅளவிலான மாரத்தான் போட்டி இன்றுகாலை அரியனூரில் நடந்தது. 20 கிலோமீட்டர் ஆண்கள் பிரிவு, 8 கிலோமீட்டர்ஆண்கள், பெண்கள் பிரிவு, ஆறு கிலோமீட்டர் பெண்கள் பிரிவு, 5 கிலோ மீட்டர்
ஆண், பெண்கள், 2 கிலோ மீட்டர் ஆண்கள்,பெண்கள் என பல்வேறு பிரிவுகளாகமாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டிகளை டாக்டர் எழில்வேந்தன், வீரபாண்டி ஒன்றிய திமுக செயலாளர் வெண்ணிலா சேகர், 
தொகுதி பொறுப்பாளர் கிருபாகரன்,
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாவட்டதலைவர் ரத்தினவேல், இளைஞரணிசெயலாளர் மணிகண்டன், விளையாட்டு
பிரிவு ரமேஷ், உள்பட பலர் தொடங்கிவைத்தனர். 
இந்த மாரத்தான் போட்டியில்
வெற்றி பெற்றவர்களுக்கு சேலம்
கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளர்
எஸ்.ஆர்.சிவலிங்கம் எம்.பி, மேற்கு மாவட்டசெயலாளர் டி.எம். செல்வகணபதி எம்.பி
ஆகியோர் கலந்து கொண்டு பரிசு மற்றும்சான்றிதழ் வழங்கினர். இந்த மாரத்தான்போட்டிக்கான ஏற்பாடுகளை வீரபாண்டி
ஒன்றிய செயலாளர் வெண்ணிலாசேகர்
செய்திருந்தார். இந்த மாரத்தான்
போட்டியையொட்டி வழி நெடுங்கிலும்தண்ணீர் பாட்டில்கள், ஆம்புலன்ஸ்வசதி, போலீசார் பாதுகாப்பு வசதிகள்
செய்திருந்தனர். இதில் டாக்டர் தருண், ஏ.ஏஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு பாஜக நெசவாளர்பிரிவு சார்பாக 100 நெசவாளர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கல்.....

தமிழ்நாடு பாஜக நெசவாளர்பிரிவு சார்பாக 100 நெசவாளர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கல்.....

சேலம்.
S.K. சுரேஷ் பாபு.

தமிழ்நாடு பாஜக நெசவாளர்பிரிவு சார்பாக 100 நெசவாளர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கல்.....

சேலம் மாநகர் மாவட்ட நெசவாளர் பிரிவு செயற்குழு கூட்டம் சேலம் அன்னதானபட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நெசவாளர் பிரிவின் மாநிலத்தலைவர் அண்ணாதுரை தலைமையில நடைபெற்றது. இந்த கூட்டதில் ஏழை நெசவாளர்கள் 100 பேருக்கு பொங்கல்பரிசு வழங்கப்பட்டது.
சேலம் மாவட்டம் முழுவதும் பாஜக நெசவாளர் பிரிவு சார்பாக நவம்பர் ,டிசம்பர் மாதங்களில் நெசவாளர்களுக்கு 25 இலவச கண் சிகிச்சை முகாம்கள் நடத்தி 4 ஆயிரம் பேருக்கு கிட்ட பார்வை கண்ணாடிகளும் 1325 பேருக்கு இலவச  பவர் கண்ணாடிகளும் வழங்கப்பட்டது. நெசவாளர்கள் மற்றும் ஜவுளித்துறைக்கு  மத்திய  அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள்  புத்தகம் வெளியிடப்பட்டது. மத்திய அரசின் e Pachaan கார்டுகள் நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த் கார்டை கொண்டு நெசவாளர் குடும்பத்தில் உள்ள குழந்தைகள் ஜவுளி சம்மந்தமான படிப்பவர்களுக்கு ஆண்டுக்கு 2 லட்ச ரூபாய் மானியம் கிடைக்கும். 
நெசவாளர்களுக்கு மேலும் ஓய்வூதியம்  கிடைக்கும் எண்ணற்ற பயன் உள்ள கார்டு
நெசவாளர் பிரிவு சார்பாக ,YouTube சேனல் துவக்கப்பட்டது. மேலும்  முன்னாள் பாரதப்பிரதமர் பாரத ரத்னா திரு அட்டல் பிஹாரி வாஜ்பாஜ் அவர்களது வாழ்க்கை பயணம் புகைப்பட தொகுப்பு.  கண்காட்சி திறந்து வைக்கப்பட்டது. 
நிகழ்ச்சியில் மாநில சுற்றுசூழல் தலைவர் கோபிநாத், நெசவாளர் பிரிவு மாநிலதுணைத்தலைவர்கள் செல்வராஜ், வஜ்ஜிரவேல், செயலாளர்கள் மணிகண்டன்,ஐயப்பன், மாவட்டதலைவர் தங்கமணி , காளிமுத்து உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழக கட்டுமான தொழிலாளர் நல வாரியத்துடன் ஒலிபெருக்கி மின் அலங்காரம் மற்றும் ஜெனரேட்டர் அமைப்பாளர்களையும் இணைக்க வேண்டும். சேலம் மாவட்ட ஒலிபெருக்கி மின் அலங்காரம் மற்றும் ஜெனரேட்டர் அமைப்பாளர்கள் முன்னேற்ற நலச் சங்கத்தின் 53 வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் தமிழக அரசுக்கு கோரிக்கை.

தமிழக கட்டுமான தொழிலாளர் நல வாரியத்துடன் ஒலிபெருக்கி மின் அலங்காரம் மற்றும் ஜெனரேட்டர் அமைப்பாளர்களையும் இணைக்க வேண்டும். சேலம் மாவட்ட ஒலிபெருக்கி மின் அலங்காரம் மற்றும் ஜெனரேட்டர் அமைப்பாளர்கள் முன்னேற்ற நலச் சங்கத்தின் 53 வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் தமிழக அரசுக்கு கோரிக்கை.

 
சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

தமிழக கட்டுமான தொழிலாளர் நல வாரியத்துடன் ஒலிபெருக்கி மின் அலங்காரம் மற்றும் ஜெனரேட்டர் அமைப்பாளர்களையும் இணைக்க வேண்டும். சேலம் மாவட்ட ஒலிபெருக்கி மின் அலங்காரம் மற்றும் ஜெனரேட்டர் அமைப்பாளர்கள் முன்னேற்ற நலச் சங்கத்தின் 53 வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் தமிழக அரசுக்கு கோரிக்கை. 

சேலம் மாவட்ட ஒலிபெருக்கி மின் அலங்காரம் மற்றும் ஜெனரேட்டர் அமைப்பாளர்கள் முன்னேற்ற நலச் சங்கத்தின் 53வது ஆண்டு சங்க உறுப்பினர்கள் பொதுக்குழு கூட்டம் சேலம் அன்னதானப்பட்டி பகுதியில் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் அர்ஜுனன் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்குழு கூட்டத்தில் செயலாளர் வினோத் பாபு மற்றும் பொருளாளர் பாஸ்கரன் முக்கிய நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் செயல்பாடுகள் குறித்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்ட இந்த பொதுக்குழு கூட்டத்தில் இந்த தொழிலையே நம்பி உள்ள பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் நலன் பெற வேண்டி பல்வேறு முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டன.
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் ஒலிபெருக்கி மின் அலங்காரம் மற்றும் ஜெனரேட்டர் அமைப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் நலன் கருதி நல சங்கத்திற்கு என புதிதாக நிலம் வாங்கி அதில் நல சங்கத்திற்கான ஒரு கட்டிடம் கட்டி அந்த கட்டிடத்தில் இனி வரும் நாட்களில் சங்க கூட்டங்களை நடத்துவது என்றும் தமிழகத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் உள்ளதை போன்று அதே கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் ஒலிபெருக்கி மின் அலங்காரம் மற்றும் ஜெனரேட்டர் அமைப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்களையும் இணைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் நலச் சங்கத்திற்கு என்று தனியாக ஒரு அறக்கட்டளையை தொடங்கி அறக்கட்டளைக்கு என பெறப்படும் நன்கொடைகளை சங்கத்தின் முன்னேற்றத்திற்காகவும் தொழிலாளர்களின் நலனுக்காகவும் பயன்படுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. 
இது தவிர பல்வேறு முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. இந்த பொதுக்குழு கூட்டத்தில் சேலம் மாநகரம் உட்பட மாவட்ட முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

வெள்ளி, 26 டிசம்பர், 2025

த.வெ.க உயர் மட்ட குழு மாநில ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்த தேசிய மக்கள் கட்சி நிர்வாகிகள்.

த.வெ.க உயர் மட்ட குழு மாநில ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்த தேசிய மக்கள் கட்சி நிர்வாகிகள்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

த.வெ.க உயர் மட்ட குழு மாநில ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்த தேசிய மக்கள் கட்சி நிர்வாகிகள்.

தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை ஒட்டி தற்பொழுது தமிழக தேர்தல் களம் தற்பொழுதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் உயர்மட்ட குழு மாநில ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் தமிழக அமைச்சருமான செங்கோட்டையன் அவர்களை ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில், தேசிய மக்கள்  கட்சியின் மாநிலத் தலைவர் சீனிவாசன், தேசிய செயலாளர் அசோக் சாமி மற்றும் தமிழ்நாடு மாநில செயலாளர் ராம்ஜி மற்றும் ஈரோடு மாவட்ட தலைவர் தங்கவேல் உள்ளிட்ட நிர்வாகிகள்  மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
அப்போது செங்கோட்டையன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தியும் பூங்கொத்து கொடுத்தும் மரியாதை செய்த தேசிய மக்கள் கட்சி நிர்வாகிகளுக்கு, பதிலுக்கு செங்கோட்டையன் அவர்களும்  அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி தனது மரியாதையை திரும்ப செலுத்தினார். மரியாதை நிமித்தமாகவும் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு கூட்டணி அமைப்பது தொடர்பாகவும் நடைபெற்ற சிறிய ஆலோசனை கூட்டத்தில்,
இரு கட்சிகளின்  செயல்பாடுகள் குறித்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகவும், இதுபோக பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் தெரிகிறது. இந்த மரியாதை நிமித்த நிகழ்வின் போது தேசிய மக்கள் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் தர்மன் உள்ளிட்ட மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.
தமிழக காங்கிரஸ் சிறுபான்மையினர் துறை மாநில ஒருங்கிணைப்பாளராக சேலம் இர்ஃபான் நியமனம்.

தமிழக காங்கிரஸ் சிறுபான்மையினர் துறை மாநில ஒருங்கிணைப்பாளராக சேலம் இர்ஃபான் நியமனம்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

தமிழக காங்கிரஸ் சிறுபான்மையினர் துறை மாநில ஒருங்கிணைப்பாளராக சேலம் இர்ஃபான் நியமனம். 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறையின் மாநில ஒருங்கிணைப்பாளராக சேலம் இர்ஃபான் இப்ராஹீமை சிறுபான்மை துறையின் மாநில தலைவர் முகமது ஆசிப் நியமித்துள்ளார். 
இந்த செய்தியை சிறுபான்மை  துறை மாநிலத் தலைவர் வெளியிட்டுள்ள நியமன கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த பொறுப்பிற்கு தன்னை பரிந்துரை செய்த சிறுபான்மையினர் துறை மாநில முதன்மை துணைத் தலைவர் பர்மா பஜார் நாகூர் கனி அவர்களுக்கு சேலம் இர்ஃபான் தனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டுள்ளார்.