Latest

சனி, 22 நவம்பர், 2025

சேலத்தில் 56 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட ராஜ முருகன் சிலை பிரதிஷ்டை. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்த குடம் எடுத்து சுவாமி தரிசனம்.

சேலத்தில் 56 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட ராஜ முருகன் சிலை பிரதிஷ்டை. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்த குடம் எடுத்து சுவாமி தரிசனம்.

சேலம். 
எஸ் கே சுரேஷ் பாபு.

சேலத்தில் 56 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட ராஜ முருகன் சிலை பிரதிஷ்டை. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்த குடம் எடுத்து சுவாமி தரிசனம். 

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே பேச விளக்கு கிராமம் அணை மேடு பகுதியில் உள்ள அருள்மிகு ராஜ முருகன் ஆசிரமம் 56 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. 56 ஆண்டுகளை நினைவு படுத்தும் விதமாக ஆசிரம வளாகத்தில் பிரம்மாண்ட முருகன் சிலை அமைக்க திட்டமிட்டு அதற்கான படியும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தொடங்கியது. ஆனால் முருகப்பெருமானுக்கு அழகன் முருகன் என்ற பெயரும் உண்டு. அந்த அழகை சீர்குலைக்கும் விதமாக அவளைச் சின்னமாக முதற்கட்டமாக அமைக்கப்பட்ட சிலை அமைந்து தமிழகத்தில் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியது. இதனை அடுத்து சிற்பக் கலை மாமணி விருது பெற்ற ஸ்தபதிகள் முருகன் மற்றும் அசோகன் ஆகியோரின் வாயிலாக ஆசிரம நிர்வாகம் 56 அடி உயரத்தில் அருள்மிகு ஸ்ரீ ராஜமுருகன் திருவுருவச் சிலை அமைக்க முடிவு செய்தது. தனது ஒரு ஆண்டுக்கு முன்பு துவங்கப்பட்ட இந்த சிலை அமைக்கும் பணி கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறைவு பெற்று அழகன் முருகன் என்ற பெயருக்கு ஏற்ப மிக கம்பீரமான முறையில் ராஜா அலங்காரத்தில் காட்சி அமைக்கும் விதமாக அமைக்கப்பட்டு ஆசிரம நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்களையே மிகுந்த வரவேற்பினையும் மகிழ்ச்சியினையும் ஏற்படுத்தியது என்றால் அது மிகை அல்ல. 
இந்த நிலையில், சேலம் மாவட்டத்தில் இரண்டாவது அதிக உயரம் கொண்ட மிகப் பிரமாண்ட முருகப்பெருமானுக்கு நாளை குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இதனிடையே கடந்த 17 ஆம் தேதி முகூர்த்தக்கால் நடுதல் முளைப்பாரி போடுதல் கங்கணம் கட்டுதலுடன் தொடங்கிய கும்பாபிஷேக விழாவில் இன்று காலை மங்கல இசையுடன் கணபதி ஹோமம் நடைபெற்றன. தொடர்ந்து பக்தர்கள் தீர்த்த குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த பகுதியின் முக்கிய வீதிகளின் வழியாக நடைபெற்ற தீர்த்தக்கோட ஊர்வலமானது திருக்கோவிலை அடைந்ததும் விநாயகர் பூஜை புண்ணியாகும் வாஸ்து சாந்தி மிருத்சங்கரனம் கும்பலங்காரம் முதல் கால யாக பூஜைகள் பூர்ணாஹுதியும் நடைபெற்றன. திருக்கோவிலைடைந்து தீர்த்தக்கரை ஊர்வலம் ஆனது நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் 56 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட அருள்மிகு ஸ்ரீ ராஜமுருகன் பாதத்தில் தீர்த்தத்தை ஊற்றி வணங்கி வழிபட்டு சென்றனர். இதனை தொடர்ந்து நாளை இரண்டாம் காலை ஆக பூஜைகள் நாடி சந்தானம் பரிசாஹுதி பூர்ணாஹுதி மற்றும் தீபாராதனை உடன் 56 அடி உயரம் கொண்ட அழகன் எம்பெருமான் ஸ்ரீ ராஜ முருகப்பெருமானுக்கு மகா கும்பாபிஷேகம் மகா அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனைகள் நடைபெற உள்ளன. 
இதனை அடுத்து ஆசிரம நிர்வாகத்தின் சார்பில் நாளை விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரம நிர்வாகிகள் ஞானகுரு வெங்கடாசலம் சுவாமிகள் ராஜேந்திரன் மற்றும் கண்ணன் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.
ஈரோடு பிரைட் ஆப்டிகல்ஸ் 53ம் ஆண்டு விழா! ரேபான் ஏஐ மெட்டா கேமரா கிளாஸ் அறிமுகம்!!

ஈரோடு பிரைட் ஆப்டிகல்ஸ் 53ம் ஆண்டு விழா! ரேபான் ஏஐ மெட்டா கேமரா கிளாஸ் அறிமுகம்!!

ஈரோடு பிரைட் ஆப்டிகல்ஸ் 53ம் ஆண்டு விழா! ரேபான் ஏஐ மெட்டா கேமரா கிளாஸ் அறிமுகம்!!

ஈரோட்டில் கண் கண்ணாடிகள் மற்றும் பிரேம்களுக்கென பிரத்யேக நிறுவனமாக பிரைட் ஆப்டிகல்ஸ் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் 53ம் ஆண்டு துவக்க  விழா நடைபெற்றது. விழாவை நிறுவன உரிமையாளர் கேசவன்,மங்கையர்க்கரசி கேசவன் கேக் வெட்டி துவக்கி வைத்தனர். வருகை தந்த  அனைவரையும் குமரேசன்,சங்கீதா குமரேசன் ஆகியோர் வரவேற்றனர்.விழாவில் சிறப்பு விருந்தினர்களாக சக்தி மசாலா துரைசாமி,சாந்தி துரைசாமி, பி.வி.பி பள்ளி தாளாளர் டாக்டர். எல்.எம்.ராமகிருஷ்ணன், எஸ்.கே.ஆர். மஞ்சள் மண்டி முத்துக்குமார்,கண் மருத்துவர்கள் எஸ்.எஸ்.சுகுமார், எல்.வி.சண்முகநாதன்,  வி.பன்னீர்செல்வம், என்.வி.கோவிந்தராஜீ, எஸ்.எஸ்.ராகவேந்திரன்,தோல் டாக்டர் சின்னச்சாமி மற்றும் பலர்  கலந்து கொண்டு சிறப்பித்தனர். அப்பொழுது உரிமையாளர் கேசவன் கூறியதாவது: வாடிக்கையாளர்களின் பேராதரவுடன் 
53ம் ஆண்டில்  அடியெடுத்து வைக்கும் இந்த தருணத்தில்  ஈரோட்டில் முதல் முறையாக ரேபான் ஏஐ மெட்டா கேமரா கிளாஸை அறிமுகப்படுத்தி உள்ளோம். இதில் ப்ளூடூத், வாய்ஸ் ரெக்கார்டிங், வீடியோ ரெக்கார்டிங், போட்டோ கேப்சர், வீடியோ கால் வசதி, வாய்ஸ் கால் வசதி ஆகிய அனைத்து சிறப்பம்சங்களும் உள்ளது. மேலும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற டோம் போர்ட், மௌன் பிளாக், குஷி,ஹோஹோ பாஸ், டிடா லேன்சர், மைக்கேல் கோர்ஸ், மினா மோடோ, ரேபான் மெட்டா,  பார்பரி,  போன்ற பிரேம் வகைகளும், மௌவி ஜிம், ரேபான், போலிஸ் போன்ற சன் கிளாஸ்களும்,  பிரசித்தி பெற்ற ஜெய்ஸ், ரோடன் ஸ்டாக், ஹோயா,நிகான் போன்ற லென்ஸ் வகைகளும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் வகையில் விற்பனை செய்து வருகிறோம். 53ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு வருகிற டிசம்பர் 20ந் தேதி வரை சன் கிளாஸ், ஸ்பெக்டக்கல்ஸ் ரூ.3000த்திற்கு மேல் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 10% சிறப்புத் தள்ளுபடி வழங்குகிறோம் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சபா செய்திகளுக்காக 
பவானி குட்டி
விவசாயிகள் உற்பத்தி செய்யும் விலைப் பொருள்களுக்கு M.S.P யை அறிவித்து விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் பீகார் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றதை போல தமிழகத்திலும் விவசாயிகள் வெற்றி பெற வைப்பார்கள். உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி அறிக்கை.

விவசாயிகள் உற்பத்தி செய்யும் விலைப் பொருள்களுக்கு M.S.P யை அறிவித்து விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் பீகார் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றதை போல தமிழகத்திலும் விவசாயிகள் வெற்றி பெற வைப்பார்கள். உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி அறிக்கை.

சேலம், 
எஸ் கே சுரேஷ் பாபு. 

விவசாயிகள் உற்பத்தி செய்யும் விலைப் பொருள்களுக்கு M.S.P யை அறிவித்து விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் பீகார் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றதை போல தமிழகத்திலும் விவசாயிகள் வெற்றி பெற வைப்பார்கள். உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி அறிக்கை.

கோவையில் நடைபெற்ற ‌தென்னிந்திய‌ இயற்கை விவசாயிகள் மாநாடுட்டிற்கு கடந்த 19.11.2025 அன்று மாண்புமிகு  பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வருகை தந்து மாநாட்டு விழாவில் உரையாற்றிய போது விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் உற்சாகத்தையும் ஆரவாரத்தையும் கண்டு மேடையில் இருந்தவாறு  சமீபத்தில் பீகார் மாநிலத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி கட்சிகள் அமோக வெற்றி பெற்றததைப்போல தமிழ்நாட்டிலும் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி கட்சிகள் அமோக வெற்றி பெறுவது போல் அலை வீசுகிறது என்று பேசிய வார்த்தை மாநாட்டில் பங்கேற்ற தென்னிந்திய விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் முக்கிய பேசு பொருளாக பார்க்கப்பட்டது. 
பீகார் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி கட்சிகள் அமோக வெற்றி பெற்றததைப்போல் தமிழ்நாட்டிலும் வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் வெற்றி அலை வீச வேண்டுமென்றால்  நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையாக உள்ள விவசாயிகள் உற்பத்தி செய்த விளைபொட்களுக்கு  உண்டான குறைந்தபட்ச ஆதார விலை MSP_ யை மத்திய அரசு விரைவில் அறிவித்து நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். மேலும் மாண்புமிகு பாரத பிரதமர்  அவர்கள்  விவசாயம் சார்ந்த மத்திய அரசு கூட்ட மேடைகளில்  பேசும் போது விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு ஆக்கப்படும் என கூறியது போல விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு பெறுவதற்கு உண்டான நடைமுறை சாத்தியக்கூறுகளை   காலம் தாழ்த்தாமல் நடைமுறைக்கு கொண்டு வரும் பட்சத்தில் மட்டுமே சமீபத்தில் பீகார் மாநிலத்தில் நடந்தது முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி கட்சிகள் அமோக வெற்றி பெற்றததைப்போல் தமிழ்நாட்டிலும் தமிழக விவசாயிகள் வெற்றி பெற வைப்பார்கள் என மாண்புமிகு  பாரத பிரதமர் பேசிய வார்த்தைக்கு உண்டான விளக்க அறிக்கையை உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில்  இந்த செய்தி குறிப்பின் வாயிலாக தெரிவித்துக்கொள்கிறேன் என அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 21 நவம்பர், 2025

தமிழ்நாடு விசைத்தறி சங்கங்கள் கூட்டமைப்பு அவசர ஆலோசனை..

தமிழ்நாடு விசைத்தறி சங்கங்கள் கூட்டமைப்பு அவசர ஆலோசனை..

ஈரோடு : 

*தமிழ்நாடு விசைத்தறி சங்கங்கள் கூட்டமைப்பு அவசர ஆலோசனை: மத்திய அரசின் ரயான் இறக்குமதி விதிகள் ரத்து குறித்து உண்மைக்குப் புறம்பான தகவல் வெளியீடு - உற்பத்தி அதிகரிப்புக்கு சாத்தியமில்லை என தீர்மானம்..!*

**************************

ஈரோடு, சித்தோடு, லக்காபுரம், வீரப்பன் சத்திரம் உள்ளிட்ட தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

சமீபத்தில் மத்திய அரசு, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ரயான் பஞ்சுக்கு (Rayon Staple Fibre - RSF) மட்டும் தரக் கட்டுப்பாட்டு ஆணை (Quality Control Order - QCO) நடைமுறையில் இருந்து விலக்கு அளித்து அரசாணை வெளியிட்டது. இந்நிலையில், தமிழ்நாடு நெசவாளர்கள் கூட்டமைப்பு சார்பாக ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், இந்த விலக்கு சலுகை தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நூலுக்கும் QCO நடைமுறை இருந்ததாகவும், ஏற்றுமதி செய்யப்படும் ரயான் துணிகளுக்கும் QCO நடைமுறை இருந்ததாகவும், அவை ரத்து செய்யப்பட்டதால், ஈரோடு, சித்தோடு, லக்காபுரம், மாணிக்கம்பாளையம் பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் 15 லட்சம் மீட்டர் ரயான் துணி உற்பத்தியானது 25 லட்சம் மீட்டராக உயரும் என்றும், இதனால் விசைத்தறியாளர்கள் மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் கலந்துகொண்ட விசைத்தறி சங்கங்களின் நிர்வாகிகள், தமிழ்நாடு நெசவாளர்கள் கூட்டமைப்பின் இந்த அறிக்கை உண்மைக்குப் புறம்பானதும், தவறானதும் எனக் கூறி வன்மையாகக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றினர். அறிக்கையில் தெரிவித்தது போன்று, உற்பத்தி இலக்கு அதிகரிக்க எவ்வித சாத்தியக்கூறும் இல்லை என்றும், தீபாவளிக்குப் பிறகு விசைத்தறிக் கூடங்களில் ஆள் பற்றாக்குறை காரணமாக விசைத்தறிகளை இயக்க முடியாமல் விசைத்தறியாளர்கள் தவித்து வரும் நிலையில், நூல் விலை குறையும், அதிக ஆர்டர்கள் வரும் என்று தவறான தகவலைத் தெரிவித்திருப்பதும், விசைத்தறியாளர்கள் பலவித இன்னல்களை சந்தித்து வரும் நிலையில் மகிழ்ச்சி என்றும் அறிக்கையில் தெரிவித்தது, கண்டிக்கத்தக்கது என்றும் அதன் முக்கிய அம்சங்களாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில், 

ஈரோடு விசைத்தறி உரிமையாளர் சங்கத்தின் தலைவரும் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில  தலைவருமான எல்.கே.எம். சுரேஷ், சித்தோடு விசைத்தறி உரிமையாளர் சங்கத்தின் சார்பாக தலைவர் ராக்கி அண்ணன், வீரப்பன் சத்திரம் விசைத்தறி உரிமையாளர் சங்கத்தின் சார்பாக செயலாளர் அசோகன்,
 லக்காபுரம் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பாக நிர்வாகி செந்தில்குமார், மற்றும் அனைத்து சங்கங்களின் சார்பாக செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்கள் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினர்.
சேலத்தில் பள்ளி கல்லூரிகளில் நடைபெற்ற தமிழக கலாச்சார விழாவை பொய்ப்பிக்கும் விதமாக நிகழ்ந்த சேலம் முதியோர் இல்லத்தில் நடந்து தமிழக கலாச்சார விழா. பெற்ற பிள்ளைகள் மட்டும் குடும்பத்தாரை விரிந்த நிலையிலும் முதியோர்கள் உற்சாகம்.

சேலத்தில் பள்ளி கல்லூரிகளில் நடைபெற்ற தமிழக கலாச்சார விழாவை பொய்ப்பிக்கும் விதமாக நிகழ்ந்த சேலம் முதியோர் இல்லத்தில் நடந்து தமிழக கலாச்சார விழா. பெற்ற பிள்ளைகள் மட்டும் குடும்பத்தாரை விரிந்த நிலையிலும் முதியோர்கள் உற்சாகம்.

சேலம். 
எஸ் கே சுரேஷ் பாபு. 

சேலத்தில் பள்ளி கல்லூரிகளில் நடைபெற்ற தமிழக கலாச்சார விழாவை பொய்ப்பிக்கும் விதமாக நிகழ்ந்த சேலம் முதியோர் இல்லத்தில் நடந்து தமிழக கலாச்சார விழா. பெற்ற பிள்ளைகள் மட்டும் குடும்பத்தாரை விரிந்த நிலையிலும் முதியோர்கள் உற்சாகம். 

சேலத்தில் போதிமரம் என்கின்ற அறக்கட்டளையின் சார்பில் தற்பொழுது அன்புச் சோலை என்கின்ற பெயரில் முதியோர் ஆதரவற்றோர் இல்லம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதனை இயக்கி வருபவர்கள் தனி குடும்பத்தார். இந்த அறக்கட்டளையின் தலைவராக ரமேஷ் குமார் என்பவரும், செயலாளராக ராஜராஜேஸ்வரி மற்றும் பொருளாளராக பிரேமா உள்ளிட்டோர் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றனர். வழக்கமாக தமிழர்களின் கலாச்சார விழா பாரம்பரிய விழா என்பது பள்ளி கல்லூரிகளில் மட்டுமே நடைபெறுவது வழக்கம். இதனிடையே பெற்றோர்களை கவனிக்க தவறிய சில பிள்ளைகள் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி அவர்களை பார்த்துக் கொள்வதற்கு நேரம் கூட கிடைக்காமல் தொலைக்காட்சி செல்போன் கணவனுடன் ஊர் சுற்றுவது என்ற கொள்கைகளை பின்பற்றிய பெண்களுக்கு ஆதரவாக செயல்படும் பிள்ளைகள் விடுபட்ட அதாவது பெற்றோர்களை கவனிக்காமல் வீட்டை விட்டு துரத்திய பெற்றோர்கள் ஏராளமான ஒரு உள்ளனர். அவர்களை அப்படியே விட்டுவிடட்டும் என்று பொண்டாட்டி பேச்சை கேட்டு விட்ட பிள்ளைகளும் உள்ளனர், அவர்கள் நன்றாக இருக்க வேண்டும் எங்களை பிரிந்தாலும் கூட என்பதன் அடிப்படையில் அவர்களாகவே பிள்ளைகளாகவே அனாதை ஆசிரமத்தில் சேர்த்துவிடும் அவலமும் தமிழகத்தில் தற்பொழுது நிகழ்ந்து கொண்டுதான் உள்ளது. 

அதன் அடிப்படையில் சேலத்தில் போதி மரம் என்ற ஒரு ஆலமரத்தை உருவாக்கி தற்பொழுது ஆதரவற்ற முதியோர்களுக்கு ஆதரவளித்து வரும் இந்த அமைப்பில் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர். யாரிடமும் உதவிகள் கேட்காமலும், யாரிடமும் யாசகத்தை எதிர்பார்க்காமலும், தங்களது சொந்த செலவில் தங்களை நாடிவரும் முதியோர்களை அரவணைத்து அவர்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் செய்து வருவதோடு அவர்களுக்கான பொழுதுபோக்கு உணவு உளித்தவற்றை செய்து வரும் இந்த அறக்கட்டளையின் ஒரு பகுதியாக இன்று தமிழக கலாச்சார திருவிழா என்று சம்பந்தப்பட்ட அந்த முதியோர் இல்லத்தில் நடத்தப்பட்டது.
போதி மரம் அறக்கட்டளையின் தலைவர் ரமேஷ் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் செயலாளர் ராஜ ராஜேஸ்வரி பொருளாளர் பிரேமா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இன்று நடைபெற்ற இந்த தமிழக கலாச்சார விழாவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சேலம் மாவட்ட தலைவர் ராசி சகலவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விழாவினை துவக்கி வைத்து முதியோர்களிடம் பேசி மகிழ்ந்ததுடன் மட்டுமல்லாமல், வயது முதிர்ந்தவர்களை எப்படி பேணி பார்க்க வேண்டும் தனது தந்தையை எப்படி பார்த்துக் கொண்டேன் என்பதையும் அங்கு பதிவிட்டது பாதிக்கப்பட்டு அங்கு அடைக்கலம் நாடியே பெற்றோர்களை கண்கலங்க செய்தது. பாதிக்கப்பட்டவர்களின் அதாவது பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்டு இதுபோன்ற முதியோர் இல்லங்களில் அனுமதிக்கப்பட்ட முதியவர்களை மகிழ்விக்கும் விதமாக சம்பந்தப்பட்ட அன்புச்சோலை ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் தமிழக கலாச்சார விழா என்ற பெயரில் மூத்தோர்களின் பகல் நேர பராமரிப்பு மையத்தில் தமிழக கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையிலான பழமையான தமிழர்களின் நாட்டுப்புற நடனம் கிருஷ்ண பிருந்தாவனம் குழுவினர் வாயிலாக கோலாட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டன. 
ஒரு கட்டத்தில் குழுவினர் மட்டுமே பங்கேற்ற அந்த நிகழ்வில் பாசத்திற்காக ஏங்கும் அந்த தாய்க்குலங்களில் எப்படி சொல்வது என்பது தெரியவில்லை அந்த சங்கலங்களையும் மீறி அவர்களுடன் இணைந்து கோலாட்டம் ஆடியது கண்களில் கண்ணீர் வரவழைப்பது ஆகவே இருந்து.
18 அம்ச கோரிக்கைகளில் வலியுறுத்தி தமிழ்நாடு நில அளவை அலுவலர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தின் ஒரு பகுதியாக, சேலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு கண்டன போராட்டம்.

18 அம்ச கோரிக்கைகளில் வலியுறுத்தி தமிழ்நாடு நில அளவை அலுவலர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தின் ஒரு பகுதியாக, சேலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு கண்டன போராட்டம்.

சேலம். 
எஸ்.கே.சுரேஷ் பாபு.

18 அம்ச கோரிக்கைகளில் வலியுறுத்தி தமிழ்நாடு நில அளவை அலுவலர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தின் ஒரு பகுதியாக, சேலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு கண்டன போராட்டம்.

தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிணைப்பு மாநில மையத்தின் சார்பில் கடந்த 1ம் தேதி மதுரையில் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 18ஆம் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம் மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில்  வேலை நிறுத்த போராட்டத்தை துவங்கிய தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள், வேலை நிறுத்த போராட்டத்தில் ஒரு பகுதியாக களப்பணியாளர்களின் பணி சுமையை போக்கிட பணிகளை முறைப்படுத்த வேண்டும் தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அளவர் பதவிகளை மீளப் பெற்றிட வேண்டும் என்பன உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்ட மையத்தின் சார்பில் சேலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கண்டன காத்திருப்பு  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



தமிழ்நாடு நில அளவைo அலுவலர்கள் ஒன்றிணைப்பின் சேலம் மாவட்ட தலைவர் சுதாகர் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்  மாவட்ட செயலாளர் செல்லமுத்து, துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் பொருளாளர் இளங்கோ உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் அர்த்தனாரி மற்றும் மாவட்டத் தலைவர் அருள் பிரகாஷ்  உள்ளிட்ட பல்வேறு அரசு துறை அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு நில அளவை அதிகாரிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றினார். தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒரு ஆதாரம் மற்றும் ஒப்பந்த முறை பணி நியமனப்பை முற்றிலும் கைவிட வேண்டும், காலியாக உள்ள  நில அளவர் பணியிடங்களை நிரப்பிட வேண்டும், ஊதிய முரண்பாடுகளை கலைஞர் வேண்டும் மற்றும் வட்டம் குறுவட்டம் நகர சார் ஆய்வாளர் ஆய்வாளர் ஓடிட்ட புதிய பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சேலம் மாவட்ட மையத்தின்மாவட்ட தலைவர் சுதாகர்  செய்தியாளிடம் கூறுகையில் நவம்பர் ஒன்றாம் தேதி மதுரையில் நடைபெற்றது.
மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடரும் வேலை நிறுத்த போராட்டத்தின் ஒரு பகுதியாக தற்பொழுது சேலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கண்டன காத்திருப்பு போராட்டம் நடைபெற்றுthuவருவதாகவும், காரணமாக தமிழகத்தில் பட்டா வழங்குதல் மற்றும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீதான உரிய நடவடிக்கை எடுப்பதில் மிகப்பெரிய பாதிப்பு எழுந்துள்ளதாக குறிப்பிட்ட அவர் தங்களது நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு பரிசீலித்து உடனடியாக மாநில நிர்வாகிகளை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். தங்களது போராட்டத்திற்கு தமிழக அரசு செவி சாய்க்காத பட்சத்தில் மாநில மையத்தின் ஒப்புதலோடு அடுத்த கட்ட போராட்டங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார். இந்த போராட்டத்தில் பல்வேறு சங்கங்களை சார்ந்த நிர்வாகிகள்  உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

வியாழன், 20 நவம்பர், 2025

மும்பையிலிருந்து பவானிக்கு கடத்தி கொண்டு வந்த 10 நாள் பெண் குழந்தை மீட்பு – பவானியை சேர்ந்த நபர் கைது... ஈரோடு மாவட்டத்தில் தொடரும் குழந்தை கடத்தல்.. !

மும்பையிலிருந்து பவானிக்கு கடத்தி கொண்டு வந்த 10 நாள் பெண் குழந்தை மீட்பு – பவானியை சேர்ந்த நபர் கைது... ஈரோடு மாவட்டத்தில் தொடரும் குழந்தை கடத்தல்.. !

மும்பையிலிருந்து பவானிக்கு கடத்தி கொண்டு வந்த 10 நாள் பெண் குழந்தை மீட்பு – பவானியை சேர்ந்த நபர் கைது... ஈரோடு மாவட்டத்தில் தொடரும் குழந்தை கடத்தல்.. !

ஈரோடு மாவட்டம் பவானி மீன் மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் குழந்தை கடத்தி கொண்டு வந்து விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது என்கிற ரகசிய தகவல் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு கிடைத்தது.

இதையடுத்து பவானி போலீசார், ஈரோடு சைல்டு லைன் அதிகாரிகளுடன் இணைந்து சம்பந்தப்பட்ட வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு பிறந்து 10 நாட்களே ஆன பெண் குழந்தை இருப்பது தெரியவந்தது.

உடனடியாக அந்த வீட்டின் வசிப்பாளர் பரவீன் (31) என்பவரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். 
விசாரணையில் —
மும்பையில் பிறந்த 10 நாள் பெண் குழந்தையை இரண்டு பெண்கள் பவானிக்கு கொண்டு வந்து, விற்பனைக்காக பரவீன் இடம் ஒப்படைத்தது உறுதி செய்யப்பட்டது.

இந்த குழந்தையை அவர்கள்
• பெற்றோரிடம் மூளைச் செலவு செய்து வாங்கி வந்தார்களா?
• அல்லது நேரடியாக கடத்தி வந்தார்களா?
என்பதையும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மீட்கப்பட்ட குழந்தை பாதுகாப்பு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டது. பரவீன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

குழந்தையை பவானிக்கு கொண்டு வந்த இரு பெண்களை பிடிக்க பவானி காவல் துறை அதிகாரிகள் தற்போது மும்பைக்கு விரைந்து செல்கின்றனர்.

இதற்கு முன்பும்,
• பெங்களூரில் இருந்து 8 மாத பெண் குழந்தை கடத்தி வந்த வழக்கில் இரண்டு பெண்கள் கைது,
• சித்தோடு பகுதியில் ஆந்திராவைச் சேர்ந்த தொழிலாளர்களின் 1.5 வயது பெண் குழந்தை கடத்தப்பட்டு 25 நாட்களில் மீட்பு போன்ற சம்பவங்கள் நடந்துள்ள நிலையில்,

இப்போது மும்பையில் இருந்து 10 நாள் குழந்தை பவானியில் மீட்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.