சேலம்,
S.K. சுரேஷ்பாபு.
சேலம் அருகே மூதாட்டிக்கு கால் மாற்றி அறுவை சிகிச்சை செய்த அரசு மருத்துவர். தவறிழைத்த மருத்துவர், வெளியில் கூறினாள் கொலை மிரட்டல் விடுவதாக, பாதிக்கப்பட்ட மூதாட்டி மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் புகார்.
நாமக்கல் மாவட்டம் குமார பாளையத்தை சேர்ந்தவர் காலம் சென்ற மாதேஸ்வரன். இவரது மனைவி கோமதி. இவரது ராதிகாவை சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த ராஜேஷ்குமார் என்பவருக்கு திருமணம் முடித்து கொடுத்துள்ளார். இந்த நிலையில் சுமார் 60 வயதுக்கு மேலான கோமதிக்கு வலது காலில் ஏற்பட்ட மூட்டு வலி காரணமாக மிகவும் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனை அடுத்து மூதாட்டி கோமதி மகள் மற்றும் மருமகன் உதவியோடு சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, அரசு மருத்துவர் பாலாஜி என்பவரை அணுகி உள்ளனர். பரிசோதித்த மருத்துவர் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி அதற்கான காலக்கடுவையும் நிர்ணயித்ததாகவும் தெரிகிறது. இதற்காக கடந்த 2022 ஆம் ஆண்டு மூதாட்டி கோமதிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாகவே முடிந்துள்ளது. ஆனால் மயக்கம் தெளிந்து பார்த்த மூதாட்டி கோமதி மற்றும் அவரது குடும்பத்தாருக்கு அதிர்ச்சி மட்டுமே காத்திருந்தது. காரணம் ஒரு அரசு மருத்துவர் வலது காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு பதிலாக இடது காலில் அறுவை சிகிச்சை செய்த அவலம் வெளியே தெரிய வந்தது.
இதுகுறித்து அரசு மருத்துவரான பாலாஜி என்பவரை பாதிக்கப்பட்ட கோமதி மற்றும் அவரது குடும்பத்தார் அணுகியபோது, மருத்துவர்களுக்கான கோட்ரசிற்கு வரவழைத்து இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் என் மானம் மரியாதை போய்விடும் அதனால் வெளியில் யாரிடமும் கூறி விடாதீர்கள் இதற்கு நன்றிக்கடன் ஆக நான் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் தங்களுக்கு வழங்குவதாக கூறி வீடியோ எடுத்துக் எடுத்துக் கொண்டது மட்டுமல்லாமல், படுபாதகச் செயலில் ஈடுபட்ட அரசு மருத்துவர் பாலாஜி வீடியோவை கட் செய்து விட்டு பாதிக்கப்பட்ட கோமதியை கண்மூடித்தனமாக மிரட்டியதோடு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இது சம்பந்தமாக எடப்பாடி காவல் நிலையத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் எடப்பாடி காவல் துறையினரும் சம்பந்தப்பட்ட அரசு மருத்துவர் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வேதனையின் உச்சம். நிலைமை இப்படி இருக்கு ஏற்கனவே பாதிக்கப்பட்ட வலது காலிருக்கும் மாறாக இடது காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டதன் அடிப்படையில் நாள்தோறும் தனது அன்றாட அத்தியாவசிய தேவைகளையும் காலை கடன்களையும் கூட பூர்த்தி செய்ய முடியாமல் மூதாட்டி தவித்து வந்துள்ளார்.
அதன் பிறகு சம்பந்தப்பட்ட அரசு மருத்துவர் பாலாஜியை தங்களால் பார்க்கவே முடியவில்லை என்பது பாதிக்கப்பட்ட மூதாட்டியின் வேதனையாக இருந்து வந்த நிலையில், மகள் ராதிகா மற்றும் மருமகன் ராஜ்குமார் ஆகியோரின் உதவியுடன் கோமதி வழக்கறிஞர் கலைச்செல்வன் என்பவரை அணுகி உள்ளார். வழக்கறிஞர் கலைச்செல்வனின் அறிவுறுத்தலின் பேரில், சேலம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து இன்று புகார் மனு ஒன்றினையும் பாதிக்கப்பட்ட மூதாட்டி கோமதி மற்றும் அவரது குடும்பத்தார் வழங்கினர். இதனிடையே வழக்கறிஞர் கலைச்செல்வன் இந்த அறுவை சிகிச்சையால் மூதாட்டி கோமதிக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்தும், அவருக்கு அரசு மருத்துவரால் ஏற்படுத்தப்பட்ட அநீதி குறித்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உலக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சம்பந்தப்பட்ட கோமதி இழைக்கப்பட்ட கொடுமை குறித்து விசாரணை குழு அமைத்து உரிய விசாரணை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட கோமதிக்கு உரிய தீர்வு ஏற்படுத்தி தரவேண்டும் என்று சேலம் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனருக்கு உத்தரவினையும் பிறப்பித்திருந்தது.
இந்த நிலையில் மீண்டும் அந்த விசாரணைக்காக சேலம் மாவட்ட ஆட்சியரை சந்தித்த மூதாட்டி கோமதி நம்மிடையே கூறியது வேதனையை ஏற்படுத்துவதாகவே இருந்தது. மேலும் தனக்கு தவறான சிகிச்சை செய்து அநீதி இழைத்த அரசு மருத்துவர் மீது துரை ரீதியான நடவடிக்கை எடுத்து எனக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்குவதோடு மட்டுமல்லாமல் எனக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை சரி செய்து தர வேண்டும் என்றும் கண்ணீர் மல்க கோரிக்கை முன்வைத்தார்.


