சேலம்,
S.K. சுரேஷ்பாபு.
டெல்டா பாசனத்திற்கு திறக்கப்பட்ட காவிரி நீர் கடை மடையான மயிலாடுதுறையை அடைந்தது. குருவை சாகுபடி பொய்த்த நிலையில் 45 நாள் தண்ணீர் தரப்பு என்பது போதுமானதாக இருக்காது என்பதால், காவிரி பங்கீட்டு நீரை கர்நாடகாவிடம் முறையாக பேசி தமிழக முதலமைச்சர் பெற்று தர வேண்டும். மயிலாடுதுறையில் காவிரி நீரை வரவேற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி தமிழக முதல்வருக்கு கோரிக்கை....
தமிழகத்தின் பாசன பகுதிகளான டெல்டா மாவட்டங்களின் விவசாய தேவையை பூர்த்தி செய்யும் அணையாக சேலம் மாவட்டத்தில் மேட்டூர் அணை விவசாயிகளின் உயிர்நாடியாக விளங்கி வருகிறது. அதன் அடிப்படையில் மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்ட பிறகு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12 ந் தேதி முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை தண்ணீர் திறக்கப்பட வேண்டும் என்பது நிர்ணயிக்கப்பட்ட விதி. மேட்டூர் அணையில் நீர் வரத்து அதிகரித்து அணை முழு கொள்ளளவை எட்டியிருக்கும் நிலையில் ஜூன் 12க்கு முன்பாகவே மேட்டூர் அணை திறக்கப்படுவதும், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 80 அடிக்கும் மேலாக இருக்கும் போது நீர்வரத்து என்பது அதிகமாக உள்ள நிலையில் நிர்ணயிக்கப்பட்ட தேவையான ஜூன் 12 மேட்டூர் அணை திறப்பதும், இதே போல அணையின் நீர்மட்டம் எதிர்பார்த்த அளவு இல்லாமல் நீர்வரத்து என்பது குறைந்து காணப்படும் நிலையில் காலம் தாழ்த்தி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவது தற்பொழுது வரை நடைமுறையில் இருந்து வருகிறது. அந்த வகையில் 2026 ஆவது நடப்பாண்டான கடந்த ஜூன் மாதத்தில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து இருந்த நிலையில் நீர்வரத்து என்பது மிக மிக குறைந்த அளவில் இருந்ததாலும், இதனிடையே கர்நாடக அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி பங்கீட்டு தண்ணீரை முறையாக வழங்காததாலும் ஜூன் 12 மேட்டூர் அணை திறப்பது தள்ளிப்போனது. இதனை அடுத்து காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியதும்,
உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகளில் சங்கம் உட்பட தமிழகத்தில் உள்ள பல்வேறு விவசாய அமைப்புகள் தொடர்ச்சியாக தமிழக முதலமைச்சர் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில், தமிழக அரசின் முயற்சியாலும், உச்ச நீதிமன்ற உத்தரவு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அறிவுறுத்தல் ஆகியவற்றின் பெயரில் கர்நாடக அரசு தமிழகத்திற்கு திறக்க வேண்டிய முழுமையான நீரை திறக்காவிட்டாலும் குறைந்த அளவு தண்ணீரை திறந்து விட்டது. இதனை அடுத்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து நீர்வரத்து அதிகரித்த நிலையில், தமிழக முதலமைச்சர் மேட்டூர் அணைக்கு நேரில் சென்று கடந்த 1.9.2026 அன்று டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அனையை டெல்டா பாசத்திற்கு திறந்துவிட்ட நிலையில், காவிரியின் கடைமடை மாவட்டமான மயிலாடுதுறை பகுதிக்கு வந்தடைந்தது. 14.9.2026 அன்று விவசாயிகள் பாசனத்திற்கு தண்ணீர் வந்தடைந்தது.
இதனை 15.9.2026 ஆன இன்று உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் R.வேலுசாமி பார்வையிட்டு வணங்கினார். இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் R. வேலுச்சாமி கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் பாசனத்திற்கு ஜூன் 12 தண்ணீர் திறக்கப்பட வேண்டும் ஆனால் மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் தண்ணீர் திறப்பு என்பது கடந்த செப்டம்பர் 1 - ம் தேதி காலம் தாழ்த்தி திறக்கப்பட்டது. இதன் காரணமாக முப்போக விளைச்சல் மேற்கொள்ளப்படும் டெல்டா மாவட்டங்களில் குருவை சாகுபடி என்பது முற்றிலும் பொய்த்து போன நிலையில், எஞ்சியுள்ள சம்பா மற்றும் தாளடி போகங்களை விவசாயிகள் உற்சாகமாக மேற்கொள்ளலாம் என்ற கனவு நிறைவேறுமா என்பதன் அடிப்படையில் தொடர்ந்து 45 நாட்களுக்கு மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்து இருந்தார்.
ஏற்கனவே குருவை பொய்த்து போன நிலையில், எச்சியுள்ள சம்பா மற்றும் தாளடி ஆகிய போகங்களை முழுமையாக மேற்கொள்ள முடியாது என்பது போன்ற பல்வேறு கருத்துக்கள் தமிழக விவசாயிகள் சங்கங்களின் சார்பில் தமிழக அரசுக்கு முன் வைக்கப்பட்டது. 45 நாள் தண்ணீர் தரப்பு என்பது எஞ்சியுள்ள இரண்டு பாகங்களுக்கு போதுமானதாக இருக்காது என்பதாலும், ஏற்கனவே தமிழகத்திற்கு கர்நாடக அரசு வழங்க வேண்டிய காவிரி பங்கீட்டு தண்ணீரை முறையாக வழங்காமல் ஏமாற்றி வருவதாலும் தமிழக முதலமைச்சர் விரைவில் கர்நாடக முதல்வரிடம் பேசி காவிரி பங்கீட்டு தண்ணீரை முறையாக பெற்றால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிக்கும் என்பதும் எஞ்சியுள்ள இரண்டு போக விளைச்சலையும் தமிழக டெல்டா மாவட்ட விவசாயிகள் பெறுவார்கள் என்றும் கூறிய உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் R. வேலுச்சாமி,
தமிழக அரசு துரித நடவடிக்கை மேற்கொண்டு, எஞ்சியுள்ள இரண்டு போக விளைச்சல் முழுமை அடைய வழிவகை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.


