Latest

சனி, 15 நவம்பர், 2025

சேலத்தில் மாநில அளவில் 2025 ஆம் ஆண்டிற்கான யோகாசன போட்டி. தமிழகம் முழுவதும் இருந்து 700-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்பு.

சேலத்தில் மாநில அளவில் 2025 ஆம் ஆண்டிற்கான யோகாசன போட்டி. தமிழகம் முழுவதும் இருந்து 700-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்பு.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலத்தில் மாநில அளவில் 2025 ஆம் ஆண்டிற்கான யோகாசன போட்டி. தமிழகம் முழுவதும் இருந்து 700-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்பு. 

பள்ளி மாணவ மாணவிகளின் உடல் நலனை பேணிக் காக்கும் வகையில் ஆண்டுதோறும் மாநில அளவில் யோகா போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் நலபாண்டிற்கான யோகா போட்டி  ஸ்ரீ பதஞ்சலி சித்தர் யோகா டிரஸ்ட் மற்றும் மல்லூர் ஸ்ரீ ஜோதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளி ஆகியவை இணைந்து நடத்திய மாநில அளவிலான யோகா போட்டி சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள வேங்கம்பட்டியில் நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் ஜனாப் சையத் சர்புதீன் சாஹிப், சேலம் கோட்டை கிரசன்ட் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியின் செயலாளர் முகமத்  நுமான் சாஹிப், மரபு வழி சித்த மருத்துவரும் சாம்பவி சித்தா கிளினிக் நிறுவனருமான மருத்துவர் தங்கதுரை மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி ஈஸ்வரி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியினை சேலம் மல்லூர் பேரூராட்சி துணை தலைவரும் ஸ்ரீ பூவாயம்மாள் மூவிஸ் தயாரிப்பாளருமான வேங்கை அய்யனார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாநில அளவிலான போட்டியினை துவக்கி வைத்தார். 
இந்த போட்டியில் தமிழக முழுவதும் 38 மாவட்டங்களில் இருந்து 700 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இவர்களில் வயது வாரியாக பொது பிரிவில் கலந்து கொள்ளும் மாணவ மாணவிகளுக்கு மூன்று ஆசனங்களும் மற்றும் பொது பிரிவில் கலந்து கொள்ளும் மாணவ மாணவிகளுக்கு ஐந்து ஆசனங்களும் என போட்டி நடத்தப்பட்டது. போட்டியில் பங்கேற்ற மாணவ மாணவிகள் போட்டி நடுவர்களின் உத்தரவிற்கு ஏற்ப தங்களது உடல்களை வில்லாக வளைத்து ஆசனங்களை செய்து காட்டியது பார்வையாளர்களையும் பெற்றோர்களையும் பிரம்மிக்க வைத்தது. 

இந்த போட்டியில் சிறப்பாக தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் மாணவ மாணவிகள் தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க சிபாரிசு செய்யப்படுவார்கள் என்று போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். மேலும் தமிழக அரசு அனைத்து பள்ளிகளிலும் யோகா கலையை பாடமாக கொண்டு வந்து செயல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.இங்க துவக்க விழா நிகழ்வில் சிவம் யோகாசன சாலை யோகாச்சார்யா சோமசுந்தரம் வேர்ல்ட் டைகர் பிட்னஸ் ஜிம் உரிமையாளர் மணிகண்டன் பசுமை கலாம் நண்பர்கள் அறக்கட்டளை சமூக சேவகர் பாக்யராஜ் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவர் ரூபேஷ் சர்மா சேலம் செவ்வாய்பேட்டை சௌராஷ்ட்ரா வித்யாலயா பள்ளியின் யோகா ஆசிரியர் ஜெயா பிரகாஷ் ராயல் ஸ்போர்ட்ஸ் அகாடமி நிறுவனர் ரமேஷ் யோகா கலை மாமணி ரமேஷ் யோகா ரத்னா பாலாஜி உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.

வியாழன், 13 நவம்பர், 2025

சோனா வள்ளியப்பா பப்ளிக் பள்ளியில் குழந்தைகள் தின விழா மற்றும் தொழில் முனைவு திறன்களை வளர்க்கும் சிறப்புச் சந்தை நடைப்பெற்றது

சோனா வள்ளியப்பா பப்ளிக் பள்ளியில் குழந்தைகள் தின விழா மற்றும் தொழில் முனைவு திறன்களை வளர்க்கும் சிறப்புச் சந்தை நடைப்பெற்றது

சேலம்.
S.K. சுரேஷ் பாபு.

சோனா வள்ளியப்பா பப்ளிக் பள்ளியில் குழந்தைகள் தின விழா மற்றும் 
தொழில் முனைவு திறன்களை வளர்க்கும் சிறப்புச் சந்தை நடைப்பெற்றது

சேலத்தின் சோனா வள்ளியப்பா பப்ளிக் பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு  மாணவர்களின் தொழில் முனைவுத் திறன்களை வளர்க்கும் நோக்கில் “இளம் தொழில் முனைவோர் சந்தை” என்ற சிறப்புச் சந்தை ஏற்பாடு செய்யப்பட்டது. பள்ளியின் இயக்குனர் டாக்டர் வி. கார்த்திகேயன் தலைமையில் நடைப்பெற்ற இந்த நிகழ்வில்,  முதல்வர் திருமதி கவிதா  முன்னிலை வகித்தார். மேலும் இவ்விழா சிறப்பாக நடைபெற வாய்ப்பு வழங்கிய சோனா கல்வி நிறுவனங்களின் தலைவர் சொ. வள்ளியப்பா, திருமதி சீதா வள்ளியப்பா, துணை தலைவர்கள் சொக்கு வள்ளியப்பா மற்றும்தியாகு வள்ளியப்பா ஆகியோர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக சேலம் பிரணவ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் திருமதி. சீ. சம்யுக்தா அவர்கள்  கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தி உரையாற்றினார். மாணவர்கள் தாங்களே உருவாக்கிய பல்வேறு கைவினைப் பொருட்கள், சுவையான உணவுப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள் மற்றும் புதுமையான பொருட்களை விற்பனைக்காகக் கொண்டு வந்து விற்பனை செய்து தங்களது வணிக நுண்ணறிவை வெளிப்படுத்தினர் மேலும் மாணவர்களின் உற்சாகத்தையும் படைப்பாற்றலையும் அவர் வெகுவாக பாராட்டினர்,
இத்தகைய நிகழ்ச்சிகள் குழந்தைகளின் நம்பிக்கை, குழுபண்பு மற்றும் தொழில் முனைவுத் திறனை வளர்க்கின்றன எனக் பள்ளியின் இயக்குனர் டாக்டர் வி. கார்த்திகேயன் மற்றும் முதல்வர் திருமதி இ.ஜெ.கவிதா ஆகியோர் தெரிவித்தனர். இந்த விழாவில் ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் பெரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு குழந்தைகள் தினத்தைச் சிறப்பித்தனர்.

புதன், 12 நவம்பர், 2025

சேலம் அகர்வால் கண் மருத்துவமனையில் 9 வினாடிகளில் பார்வையை சரி செய்யும் ஸ்மைல் ப்ரோ சிகிச்சை தொடக்கம். சேலம் மாநகர காவல் ஆணையர் அணில் குமார் கிரி தொடங்கி வைத்தார்.

சேலம் அகர்வால் கண் மருத்துவமனையில் 9 வினாடிகளில் பார்வையை சரி செய்யும் ஸ்மைல் ப்ரோ சிகிச்சை தொடக்கம். சேலம் மாநகர காவல் ஆணையர் அணில் குமார் கிரி தொடங்கி வைத்தார்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் அகர்வால் கண் மருத்துவமனையில் 9 வினாடிகளில் பார்வையை சரி செய்யும் ஸ்மைல் ப்ரோ சிகிச்சை தொடக்கம். சேலம் மாநகர காவல் ஆணையர் அணில் குமார் கிரி தொடங்கி வைத்தார். 

சேலம் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை ஸ்மைல் ப்ரோ ( சிறிய கீறல் வழியாக கருவிழியை சரி செய்தல் ) என்ற உலகின் முதல் மற்றும் ப்ரோ ரோபோடிக் அறுவை சிகிச்சை திட்டத்தை தொடங்கி இருக்கிறது. ஒன்பது நொடிகளில் கிட்ட பார்வை மற்றும் சிதறல் பார்வையை சரி செய்வதற்கு ஒரு குறைவான ஊடுருவல் உள்ள மற்றும் அதிக துல்லியமான சிகிச்சை முறை. இந்த சிகிச்சைக்கு பிறகு கண் கண்ணாடிகளை பயன்படுத்த வேண்டிய சூழல் தேவை இல்லை என்பது மருத்துவர்களின் கூற்று. டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் மருத்துவ சேவைகளுக்கான பிராந்திய தலைவர்கள் டாக்டர் கற்பகவல்லி மற்றும்  ரம்யா சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்த விழாவில், சேலம் மாநகர காவல் துறை ஆணையர் அணில் குமார் கிரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்து ஸ்மைல் ப்ரோ திட்டத்தினை தொடங்கி வைத்தார். 
விழாவில் கலந்துகொண்ட சேலம் மாநகர காவல் துறை ஆணையர் அனில்குமார் கிரி பேசுகையில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையில் நவீன சிகிச்சை முறையான ஸ்மைல் கிளாசிக் செயல் திட்டத்தை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும் இத்தகைய மிக நவீன சிகிச்சையின் பலன் வெகு சிலருக்கு மட்டும் கிடைப்பதாக இருக்கக் கூடாது என்றும் இந்த புரட்சிகரமான சிகிச்சை செயல்முறைகள் அனைத்து இடங்களிலும் அனைவருக்கும் கிடைக்குமாறு செய்யப்படுவது மிக அவசியம் என்றார். தொடர்ந்து மருத்துவமனையின் மருத்துவ சேவைகளுக்கான பிராந்திய தலைவர் டாக்டர் கற்பகவல்லி பேசுகையில் புரட்சிகரமான இந்த நுட்பம் குறைவான ஊடுருவல் உள்ள ஒரு மருத்துவ செயல் முறையாகும் என்று குறிப்பிட்ட அவர் பாரம்பரியமாக மேற்கொள்ளப்படும் லேசர் அறுவை சிகிச்சைகள் போல் அல்லாமல் இந்த நவீன உத்தியில் ஒரு மிகச் சிறிய கீறல் மட்டுமே தேவைப்படுகிறது என்றும் கருவிழியின் நிலைத்தன்மையை பாதுகாப்பதுடன் அறுவை சிகிச்சைக்கு பின்பு வரக்கூடிய இது குறைவாகிறது மிக வேகமாக குணமடைவது மிக குறைவான கண் உலர்வு தன்மை மற்றும் மிக பிரமாதமான பார்வை திறன் பலன்கள் ஆகியவற்றின் மூலம் நோயாளிகள் சிறப்பான ஆதாயங்களை பெறுகின்றனர் என்றார். 
பின்னர் நோயாளிகளுக்கு இந்த புதிய மருத்துவ செயல்முறையின் பொருந்து நிலை குறித்து மருத்துவமனையின் மருத்துவ சேவைக்கான பிராந்திய தலைவர் டாக்டர் ரம்யா சம்பத் பேசுகையில் அதிக அளவு கிட்ட பார்வை உள்ளவர்கள் உட்பட பலருக்கும் இது பொருந்தும் என்றும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் குறைந்தது ஒரு வருடமாக நிலையான கண்ணாடி பவர் உள்ளவர்கள் ராணுவம் காவல்துறை விமானப்படை மற்றும் விளையாட்டு வீரர்கள் போன்ற குறிப்பிட்ட பணிகளில் இருப்பவர்களுக்கு இது மிகவும் உகந்தது என்றும் மெல்லிய கருவிழிப் படலம் உள்ளவர்கள் அல்லது காண்டாக்ட் லென்ஸ் அணிய முடியாதவர்களுக்கும் இந்த சிகிச்சை பெறலாம் என்றும் கண்களில் நடுக்கம் உள்ளவர்களுக்கும் கருவிழியின் தழும்பு ஏற்படுபவர்களுக்கும் கூட ஒளி விலகல் அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்வதில் தங்களுக்கு நல்ல அனுபவம் உள்ளதாக தெரிவித்த அவர் ஒவ்வொரு நோயாளிகளுக்கும் முழுமையான பரிசோதனை செய்து அவர்களின் தனிப்பட்ட தேவைகள் மற்றும் பார்வை குறைபாடுகளை ஆராய்ந்த பின்னரே ஸ்மைல் ப்ரோ அவர்களுக்கு சரியான தேர்வாய் என்பதை நாங்கள் உறுதி செய்கிறோம் என்றும் தெரிவித்தார். ஸ்மைல் ப்ரோ என்பது உலகின் முதல் ரோபோடிக் முறையில் ஆன மடிப்பில்லாத குறைந்த ஊடுருவல் கொண்ட லேசர் திருத்த சிகிச்சை செயல்முறை உத்தியாகும் மென்மையானதாகவும் மற்றும் வெளியேற்ற சிகிச்சை ஆகவும் இது வடிவமைக்கப்படுகிறது என்றும் நவம்பர் 30ஆம் தேதி வரை ஸ்மைல் ப்ரோ பார்வை திறன் மதிப்பீடு மற்றும் ஸ்மைல் ப்ரோ அறுவை சிகிச்சைக்கான கட்டணம் மீது 50 சதவீதம் தள்ளுபடியுடன் செய்து கொள்ளலாம் என்று மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் மருத்துவமனையின் மருத்துவர்கள் செவிலியர்கள் இந்த திட்டத்தின் மூலம் ஏற்கனவே பயன் பெற்றவர்கள் பணியாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செவ்வாய், 11 நவம்பர், 2025

சேலத்தில் அன்னை தெரசா அறக்கட்டளை என்ற பெயரில் 3000 கோடி மோசடி செய்த நபர்களின் சொத்துக்களை முடக்கி, குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். மோசடி பணத்தை மீட்டு உரியவருக்கு வழங்க தவறும் பட்சத்தில் பல கட்ட போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாக பாதிக்கப்பட்ட மக்கள் கடும் எச்சரிக்கை.

சேலத்தில் அன்னை தெரசா அறக்கட்டளை என்ற பெயரில் 3000 கோடி மோசடி செய்த நபர்களின் சொத்துக்களை முடக்கி, குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். மோசடி பணத்தை மீட்டு உரியவருக்கு வழங்க தவறும் பட்சத்தில் பல கட்ட போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாக பாதிக்கப்பட்ட மக்கள் கடும் எச்சரிக்கை.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு.

சேலத்தில் அன்னை தெரசா அறக்கட்டளை என்ற பெயரில் 3000 கோடி மோசடி செய்த நபர்களின் சொத்துக்களை முடக்கி, குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். மோசடி பணத்தை மீட்டு உரியவருக்கு வழங்க தவறும் பட்சத்தில் பல கட்ட போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாக பாதிக்கப்பட்ட மக்கள் கடும் எச்சரிக்கை. 

சேலம் அம்மாபேட்டையில் அன்னை தெரசா அறக்கட்டளை என்ற பெயரில் பெண்களுக்கு பல்வேறு இலவச பயிற்சி அளித்து வந்ததோடு தங்களது அறக்கட்டளையில் பணம் முதலீடு செய்தால் அதனை இரட்டிப்பு செய்து தருவதாக ஆசை வார்த்தை கூறி சேலம் மாநகரம் உட்பட மாவட்ட முழுவதும் சுமார் 80,000 நபர்களை ஏமாற்றி மூன்றாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்த சம்பவம் சேலத்தில் கடும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது. 
இந்த வழக்கு தொடர்பாக அன்னை தெரசா அறக்கட்டளை நிர்வாகிகள் விஜய பானு, பாதிரியார் செந்தில்குமார் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு தற்பொழுது பொருளாதார குற்றப்பிரிவில் கையெழுத்து இடுவது என்ற நிபந்தனை ஜாமினில் தற்பொழுது வெளியில் உள்ளனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களிடம் பெறப்பட்ட தொகைகளை திருப்பி வழங்குவதாக ஒரு பொய்யான புகாரை கூறிவிட்டு காவல்துறை உதவியுடன் விஜயபானு பாதிரியார் செந்தில்குமார் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்டோர் தங்களை ஏமாற்றி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து இருந்தது.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் ஒருங்கிணைந்து சேலம் அன்னை தெரசா அறக்கட்டளை அமைப்பால் பாதிக்கப்பட்டவர்கள் நலச்சங்கம் என்ற ஒரு அமைப்பினை உருவாக்கி முதலீடு செய்த பணத்தை பெறுவதில் தீவிரம் காட்டி பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இந்த நலச் சங்கத்தின் சார்பில் சேலம் கோட்டை மைதானத்தில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நலச் சங்கத்தின் தலைவர் அன்பரசு தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் அஜித் முன்னிலை வகித்த இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் ஆண்கள் என 200க்கும் மேற்பட்டவர் கலந்து கொண்டு எதற்காக தாங்கள் எவ்வாறு எதற்காக பணம் சேகரித்து வைத்திருந்தோம், ஆசை வார்த்தையை நம்பி எவ்வாறு பணம் முதலீடு செய்தோம்,  தற்பொழுது முதலீடு செய்த பணம் திரும்ப கிடைக்காததனால் என்ன மாதிரியான பிரச்சினைகளை சந்தித்து வருகிறோம் என்றும் தங்களது குமுறல்களை வெளிப்படுத்தினர். மேலும் அறக்கட்டளை நிர்வாகி விஜயபானுவை அணுகியபோது நான் ஏற்கனவே காவல்துறையில் பணியாற்றியவர் என்றும் காவல்துறையை வைத்து தங்களால் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்றும் மிரட்டியதோடு எங்கு வேண்டுமானாலும் சென்று பார்த்து கொள்ளுங்கள் என்று எச்சரிக்கை விடுத்து அனுப்பியதாக பதிவு செய்த அந்த நலச் சங்கத்தின் தலைவர் அன்பரசு செய்தியாளர்களும் கூறுகையில், 
தாங்கள் ஏமாற்றப்பட்ட விரக்தியில் தற்பொழுது வரை முப்பதுக்கு அதிகமானோர் தங்களது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாகவும் இனியும் ஒரு உயிரிழப்பு கூட நீங்களா வண்ணம் தடுக்க,  பண மோசடியில் ஈடுபட்டவர்களின் பிணையை ரத்து செய்து அவர்களை உடனடியாக கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைப்பதோடு முதலீடு செய்த பணங்களை மீட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் வழங்க வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் மக்களை ஒன்று திரட்டி பல கட்ட போராட்டங்களை முன்னெடுக்க போவதாகவும் எச்சரிக்கை விடுத்தார்.

திங்கள், 10 நவம்பர், 2025

முதலாம் உலகப் போரில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு, சேலம் வரலாற்றுச் சங்கத்தின் சார்பில் 107 வது ஆண்டு நினைவு அஞ்சலி.

முதலாம் உலகப் போரில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு, சேலம் வரலாற்றுச் சங்கத்தின் சார்பில் 107 வது ஆண்டு நினைவு அஞ்சலி.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

முதலாம் உலகப் போரில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு, சேலம் வரலாற்றுச் சங்கத்தின் சார்பில் 107 வது ஆண்டு நினைவு அஞ்சலி. 

முதலாம் உலகப் போரில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு ஆண்டு தோறும் நவம்பர் 11ஆம் தேதி வீரவணக்க நாள் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அதன்படி 107-வது ஆண்டான என்று வீர மரணம் அடைந்த போர் வீரர்களுக்கான அஞ்சலி செலுத்தும் நிகழ்வு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முதலாம் உலகப் போரில் உயிர் நீத்த வீரர்களுக்கான நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. 
சேலம் வரலாற்றுச் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு அதன் பொதுச் சயலாளர் பர்னபாஸ் தலைமை வகித்தார். தலைவர் இமானுவேல் ஜெய்சி, செயல் தலைவர் தாரை குமரவேல், ஜென்னிஸ் அகாடமி தலைவர் கரோலின் எபி உள்ளிட்டோர்  முன்னிலை வகித்த நிகழ்வில், சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதலாம் உலகப்போரில் வீர மரணம் அடைந்த வீரர்களின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்,
தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட அனைவரும் போர் வீரர்களின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதையும் செய்தனர். மேலும் சேலம் மாநகரம் உட்பட மாவட்டம் முழுவதும் உள்ள வீர மரணம் அடைந்த போர் வீரர்களின் வாரிசுகளுக்கு பொன்னாடை போர்த்தி நினைவு பரிசுகளையும் வழங்கினார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் முதலாம் உலகப் போரின் போது போரில் கலந்து கொண்டு வீர மரணம் அடைந்த வீரர்களின் செயல்கள் நினைவு கூறப்பட்டன. நிகழ்வில் சேலம் வரலாற்றுச் சங்கத்தின் உறுப்பினர்கள் பாபு என்கின்ற சாணவாஸ்கான், புகழேந்தி சாம்ராஜ் பிரதீப் உட்பட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

ஞாயிறு, 9 நவம்பர், 2025

சேலம் தாதகாப்பட்டி சோழிய வேளாளர் சங்கத்தின் சார்பில் ஐம்பெரும்புழா எழுச்சியுடன் நடைபெற்றது.

சேலம் தாதகாப்பட்டி சோழிய வேளாளர் சங்கத்தின் சார்பில் ஐம்பெரும்புழா எழுச்சியுடன் நடைபெற்றது.

சேலம். 
S.K. சுரேஷ் பபு
சேலம் தாதகாப்பட்டி சோழிய வேளாளர் சங்கத்தின் சார்பில் ஐம்பெரும் விழா எழுச்சியுடன் நடைபெற்றது. 

சேலம் தாதகாப்பட்டி சோழிய வேளாளர் சங்கத்தின் சார்பில் கப்பலோட்டிய தமிழர் வ உ சிதம்பரனார் 154வது பிறந்தநாள் விழா, தாதை சோழிய வேளாளர் திருமண தகவல் மையத்தின் 16 ஆம் ஆண்டு துவக்க விழா, சாதனையாளர்களுக்கு பாராட்டு விழா, தையல் பயிற்சி முடித்த மகளிருக்கு சான்றிதழ் வழங்கும் விழா மற்றும் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா ஆகியவை சேலம் தாதகாப்பட்டியில் உள்ள வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த ஐம்பெரும் விழாவிற்கு சேலம் தாதை சோழிய வேளாளர் சங்கத்தின் தலைவர் அன்புமணி தலைமையில் நடைபெற்ற விழாவில் நிர்வாகிகள் தங்கவேல் பரமசிவம் சங்கர் குமரவேல் நாதன் அசோக்குமார் மற்றும் சேகோ. ரவிக்குமார் உள்ளிட்டூர் முன்னிலை வகித்தனர். 
தொடர்ந்து நடைபெற்ற ஐம்பெரும் விழா கூட்டத்தில்  சங்கத்தின் செயல்பாடுகள் குறித்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இனிவரும் காலங்களில் சோழிய வேளாளர் சமூக நலனுக்காக என்னென்ன செய்வது என்பது உள்ளிட்ட யோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் தற்போதைய செயல் தலைவராக உள்ள அன்புமணி தலைவராக தேர்ந்தெடுப்பது, ஒவ்வொரு வருடமும் பொதுக்குழு முடிந்தவுடன் செயற்குழு மாற்றி அமைத்திடவும் மற்றும் உறுப்பினர்கள் ஒவ்வொரு வருடமும் தவறாமல் பத்து ரூபாய் வருட சந்தா செலுத்த வேண்டும் என்றும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டன.
அதுமட்டுமல்லாமல், அதே மண்டபத்தில் சேலம் தாதை சோழிய வேளாளர் நலச்சங்கம் மற்றும் சுவாமி விவேகானந்தா மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய இலவச பொது மருத்துவ முகாமும் நடத்தப்பட்டது. இந்த மருத்துவ முகாமில் பொது மருத்துவர்கள் ஆலோசனை மகளிர் நல மருத்துவ ஆலோசனை எலும்பு மருத்துவர் ஆலோசனை ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டன. எடை ரத்த அழுத்தம் சர்க்கரை அளவு ஆகியவற்றுடன் மருத்துவர் ஆலோசனையின் படி தேவைப்படுபவர்களுக்கு இசிஜி எலும்பு அடர்த்தி பரிசோதனை நுரையீரல் தன்மை  பரிசோதனை ஆகியவற்றுடன் மருந்து மாத்திரைகள் இலவசமாகவும் வழங்கப்பட்டது சோழிய வேளாளர் உட்பட அந்த பகுதி மக்களிடையே வரவேற்பினை பெற்றது. இந்த நிகழ்வுகளில் நிர்வாகிகள் திருநாவுக்கரசு அசோக்குமார் தங்கவேல் உட்பட நிர்வாகிகள் சங்க உறுப்பினர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சேலம் அமரகுந்தி அரசு உயர்நிலைப் பள்ளியில் உடற்கல்வி இயக்குனர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய 12 ஆம் வகுப்பு மாணவனை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி சேலம் மண்டல உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள் சங்கத்தினர் சேலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம். ஆசிரியப் பெருமக்களுக்கு தமிழகத்தில் ஆதரவற்ற சட்ட திட்டங்களை உள்ளதாகவும் வேதனை.

சேலம் அமரகுந்தி அரசு உயர்நிலைப் பள்ளியில் உடற்கல்வி இயக்குனர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய 12 ஆம் வகுப்பு மாணவனை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி சேலம் மண்டல உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள் சங்கத்தினர் சேலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம். ஆசிரியப் பெருமக்களுக்கு தமிழகத்தில் ஆதரவற்ற சட்ட திட்டங்களை உள்ளதாகவும் வேதனை.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு.

சேலம் அமரகுந்தி அரசு உயர்நிலைப் பள்ளியில் உடற்கல்வி இயக்குனர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய 12 ஆம் வகுப்பு மாணவனை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி சேலம் மண்டல உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள் சங்கத்தினர் சேலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம். ஆசிரியப் பெருமக்களுக்கு தமிழகத்தில் ஆதரவற்ற சட்ட திட்டங்களை உள்ளதாகவும் வேதனை. 

சேலம் மாவட்டம் அமரகுந்தியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 12 வது வகுப்பு படிக்கும் மாணவன் லோகேஷ் என்பவன் கடந்த மாதம் பத்தாம் தேதி அதே பள்ளியில் பணியாற்றி வரும் உடற்கல்வி ஆசிரியர் முத்துசாமி என்பவரை தனது பெற்றோர் முன்னிலையில் கண்மூடித்தனமாக கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் சேலம் மாவட்டம் உட்பட தமிழகம் முழுவதும் மிகப் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் நாமக்கல் ஈரோடு தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் சங்கங்கள் இணைந்து சேலத்தில் மண்டல அளவிலான கண்டன ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டனர். சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளர் இளங்கோ தலைமை வகிக்க மாநில தலைவர் தேவி செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டு பள்ளியில் காவல்துறை விசாரணை செய்த பின் ஆசிரியர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு திரும்பியதாகவும், சம்பவம் நடந்து பல நாட்கள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அமைப்புகள் களம் இறங்கிய பின்னர் காவல் துறை சி எஸ் ஆர் மட்டும் பதிவு செய்ததும் பல போராட்டங்களுக்குப் பிறகு எஃப் ஐ ஆர் போட்டதும் வேடிக்கையாக உள்ளது என்று குற்றம் சாட்டினர். மேலும் மாணவன் மீது கைது நடவடிக்கையில் காவல்துறை பின்வாங்குகிறது என்று வேதனை தெரிவித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட உடற்கல்வி இயக்குநர்கள், தகாத மற்றும் ஆபாச வார்த்தைகளால் திட்டியும் கொலை வெறி தாக்குதல் நடத்திய மாணவன் லோகேஷ் மற்றும் அவரது பெற்றோர்களை காவல்துறை மூலம் கைது நடவடிக்கை மேற்கொள்வதன் மூலம் தமிழகத்தில் வேறு எங்கும் இதுபோன்ற குற்றங்கள் நடைபெறாத வகையில் தடுத்திட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். 
இந்தப் போராட்டம் குறித்து சங்கத்தின் மாநில அமைப்பு செயலாளர் இளங்கோ செய்தியாளர்களிடம் கூறுகையில் ஒரு காலகட்டத்தில் ஆசிரியர்களுக்கு பயந்து மாணவ மாணவிகள் பள்ளிக்கு சென்று கல்வி பயின்று திரும்பிய காலம் போய் இன்று ஒவ்வொரு ஆசிரியரும் மாணவர்கள் இன்று என்ன செய்வார்களோ என்ற உயிர் பயத்துடன் பள்ளிக்கு சென்று திரும்ப வேண்டிய ஒரு சூழல் தமிழகத்தில் நிலவி வருவதாகவும், ஆசிரியப் பெருமக்களுக்கு உயிர் பாதுகாப்பற்ற சட்டங்களை தமிழகத்தில் உள்ளதாக குற்றம் சாட்டியா அவர்கள் இது போன்ற சட்டங்களை திருப்பி மாணவ மாணவிகளை நல்வழிப்படுத்த ஆசிரியர் பெருமக்களுக்கு வழிவகை செய்யும் வகையில் புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் தவறும் பட்சத்தில் தமிழக அளவில் இந்த போராட்டத்தை ஒன்றிணைத்து சென்னையில் விரைவில் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் தேவபிரபு முத்துக்குமரன் ரமேஷ் உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் ஆசிரியர் பெருமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.