Latest

வியாழன், 1 மே, 2025

பவானி: சித்தோடு அருகே சாராயம் காய்ச்சும் பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா தீவிர சோதனை!

பவானி: சித்தோடு அருகே சாராயம் காய்ச்சும் பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா தீவிர சோதனை!

பவானி அடுத்த சித்தோடு அருகே சாராயம் காய்ச்சும் பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா நேற்று தீவிர சோதனை மேற்கொண்டார்.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த சித்தோடு அருகே உள்ள நரிப்பள்ளம் கிராமத்தில் கடந்த மாதம் 27ம் தேதி சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதைத்தொடர்ந்து, அவரது உத்தரவின்பேரில் கோபி மதுவிலக்கு போலீசார் நரிப்பள்ளம் பகுதிக்கு சென்று தீவிர சோதனை நடத்தினர். இதில், சாராயம் காய்ச்சியதாக அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவருடைய மகன் ரவியை போலீசார் கைது செய்தனர். மேலும், விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 8 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு 20 லிட்டர் ஊறல் அழிக்கப்பட்டது.

இந்த நிலையில், மீண்டும் அதே பகுதியில் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா நேற்று அந்த பகுதிக்கு சென்று ஆய்வு செய்தார். சாராயம் காய்ச்சி விற்கப்படுகிறதா? எனவும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா எனவும் ஆய்வு செய்யப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா கூறுகையில், சாராயம், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி விற்பனை செய்பவர்கள் மீதும், அதே போல் லாட்டரி விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள்' என்றார்.

அப்போது அவருடன் கோபி மதுவிலக்கு காவல் துணை கண்காணிப்பாளர் சண்முகம், பவானி காவல் துணை கண்காணிப்பாளர் ரத்தினகுமார், காவல் ஆய்வாளர்கள் ரவி, முருகையன், கோமதி ஆகியோர் உடன் இருந்தனர்.

புதன், 30 ஏப்ரல், 2025

ஈரோட்டில் காங்கிரஸ் நிர்வாகி கடத்தல்.. போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்ததால் பரபரப்பு...!

ஈரோட்டில் காங்கிரஸ் நிர்வாகி கடத்தல்.. போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்ததால் பரபரப்பு...!


ஈரோட்டில் காங்கிரஸ் நிர்வாகி கடத்தல்..! போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்ததால் பரபரப்பு...!

ஈரோட்டில், ரியல் எஸ்டேட் தரகர் ஒருவரை, இரண்டு கார்களில் வந்த கும்பல் வலுக்கட்டாயமாக ஏற்றி கடத்தி சென்றதாக அவரது குடும்பத்தினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அழுது புரண்டு கதறிய நிலையில், கோடிக்கணக்கில் அவர் பண மோசடி செய்ததாக காரில் ஏற்றிச்சென்றவர்கள் காவல் நிலையத்தில்   ஒப்படைத்ததால் பரபரப்பு நிலவியது. 

ஈரோடு லக்காபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜூபைர் அகமது.. இவர் , காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவராக உள்ளார். ரியல் எஸ்டேட், கார் வாங்கி விற்பனை செய்யும் தரகராகவும் மற்றும் கறி கடையும் நடத்தி வருகிறார். இன்று காலை ஈரோடு பேருந்து நிலையம் அருகே மூலப்பட்டறையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அவர் இருந்தபோது, இரண்டு கார்களில் வந்த மர்ம நபர்கள் அவரை வலுக்கட்டாயமாக ஏற்றி கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி, தாய் மற்றும் உறவினர்கள், இது தொடர்பாக ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்தனர்.கடத்திச் செல்லப்பட்ட ஜூபையரை உடனடியாக மீட்க கோரி உறவினர்கள் கதறி அழுது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானப்படுத்திய போலீசார் உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

இதற்கிடையே மாவட்ட எல்லைகள் கண்காணிக்கப்பட்டு அவரை கண்டறியும் பணியும் முடுக்கி விடப்பட்டது. இதற்கிடையே, கடத்தல் புகாரில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. கடத்தப்பட்டதாக கூறப்பட்ட ஜூபைர், ராமநாதபுரத்தை சேர்ந்த ஜமாத் நிர்வாகிகளிடம் பணம் பெற்று மோசடி செய்த்தாகவும், அவரை தேடி வந்தவர்கள் ஜூபைரை அழைத்து கொண்டு கருங்கல்பாளையம் காவல் நிலையம் சென்றது தெரியவந்தது. ஆனால், அதற்குள் ஜூபைர் கடத்தப்பட்டதாக  எஸ்.பி அலுவலகத்தில் அழுது புரண்டு ஆர்பாட்டம் செய்த உறவினர்களை போலீசார் அங்கிருந்து கருங்கல்பாளையம் காவல் நிலையம் அனுப்பி வைத்தனர். 


கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட ஜூபைர் மற்றும் ஜமாத் நிர்வாகிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர். ராமநாதபுரம், திருச்சி, தஞ்சாவூர், திருப்பூர் என பல்வேறு ஊர்களில் வெவ்வேறு பெயர்களில் ஜமாத் நிர்வாகிகளிடம் அறிமுகமாகி, போலியான தகவல்களை அளித்து உடல்நலம் பாதித்தவர்களுக்கு உதவுமாறு லட்சக்கணக்கில் பணம் பெற்றிருப்பதும், கண்டெய்னரில் வரும் பழைய இருப்புகளை வாங்கும் தொழில் செய்வதாகவும், தனக்கு பணம் கொடுத்தால் கூடுதலான லாபம் தருவதாகவும் கூறி ஜூபைர் கோடிக்கணக்கில் பலரிடம் பணம் பெற்றிருப்பதாகவும் புகார் தெரிவித்தனர். இது்தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் வக்பு சட்ட திருத்தம் தொடர்பான போராட்ட காட்சியை, சமூக வலை தளத்தில் ஜூபைர் பதிவு செய்திருந்தார். அதன் மூலம் அவர் ஒரு ஈரோட்டில் இருப்பதை அறிந்து ராமநாதபுரத்தில் இருந்து வந்தவர்கள் அவரை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழா தென்னிந்திய அளவிலான மாபெரும் ஆணழகன் போட்டி சேலத்தில். அதற்கான முன்னேற்பாட்டு பணிகளை தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் வழக்கறிஞர் ராஜேந்திரன் துவக்கி வைத்தார்.

தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழா தென்னிந்திய அளவிலான மாபெரும் ஆணழகன் போட்டி சேலத்தில். அதற்கான முன்னேற்பாட்டு பணிகளை தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் வழக்கறிஞர் ராஜேந்திரன் துவக்கி வைத்தார்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழா தென்னிந்திய அளவிலான மாபெரும் ஆணழகன் போட்டி சேலத்தில். அதற்கான முன்னேற்பாட்டு பணிகளை தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் வழக்கறிஞர் ராஜேந்திரன் துவக்கி வைத்தார்.
.
சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும் சுற்றுலா துறை அமைச்சருமான ராஜேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது,
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி தென்னிந்திய அளவிலான ஆணழகன்  போட்டி சேலம் நேரு கலையரங்கில் வருகிற மே 17 மற்றும் 18-ம் தேதி ஆகிய 2  நாட்கள் நடைபெறுகிறது.
 இந்த போட்டியை இந்தியன் பாடி பில்டர் பெடரேஷன் ,தமிழ்நாடு அமைச்சூர் பாடி பில்டிங் அசோசியேசன், சேலம் மாவட்ட அமைச்சூர் பாடி பில்டிங் அசோசியேசன் ஆகியோர் இணைந்து நடத்துகிறார்கள்.  இந்த போட்டியை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தொடங்கி வைக்கிறார். இந்த போட்டியில் தமிழ்நாடு கேரளா கர்நாடகா ஆந்திரா தெலுங்கானா புதுச்சேரி ஆகிய 6 மாநிலங்களை சேர்ந்த 350 பேர் பங்கேற்கிறார்கள். 13 பிரிவுகளாக நடைபெறும் இந்த போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 5  இடங்களை பிடிக்கும் வீரர்களுக்கு தலா 10,000 7,000 5,000 3,000 2,000 என ரொக்க பரிசு ,மெடல் ,  சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. 
மேலும் இறுதிப்போட்டியில் முதலிடம் பிடிக்கும் வீரருக்கு ஒரு லட்சம் ரொக்க பரிசம், ஒரு லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான இருசக்கர வாகனம் , இரண்டாம் இடம் பிடிக்கும் வீரருக்கு 50,000  மூன்றாம் இடம் பிடிக்கும் வீரருக்கு 25 ஆயிரம் மற்றும் அனைவருக்கும்  பதக்கம் சான்றிதழ் பட்டயமும் வழங்கப்படுகிறது. இறுதி போட்டியில்  வெற்றிபெறும்  சேலம் மாவட்டத்தைச்  சேர்ந்த வீரருக்கு  ரூபாய் 25,000 பணம் எல் இ டி டிவி, சீல்டுபதக்கம், சான்றிதழ் ஆகியவற்றை சேலம் மாவட்ட அமைச்சூர் ஆணழகன் சங்க தலைவர் சுரேஷ்குமார் சிறப்பு பரிசாக வழங்குகிறார். இந்த போட்டி சிறப்பாக நடைபெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் .இவ்வாறு அவர் கூறினார் பேட்டியின் போது
 சேலம் பாராளுமன்ற தொகுதி எம்.பி. டி.எம். செல்வகணபதி, சேலம் மாவட்ட அமைச்சூர் ஆணழகன் சங்கத் தலைவர் சுரேஷ்குமார், தமிழ்நாடு அமைச்சூர் ஆணழகன் சங்க சேர்மன் அரசு, தலைவர் பாஸ்கர் ,செயலாளர் பாலமுருகன் ,சேலம் மாவட்ட செயலாளர் மயில்சாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

செவ்வாய், 29 ஏப்ரல், 2025

ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஏப்.30ம் தேதி) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிப்பு!

ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஏப்.30ம் தேதி) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிப்பு!

ஈரோடு மாவட்டத்தில் மேட்டுக்கடை துணை மின் நிலைய காரைவாய்க்கால் மின் பாதை மற்றும் சென்னம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (ஏப்ரல் 30ம் தேதி) புதன்கிழமை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால், நாளை கீழ்க்கண்ட இந்த இடங்களில் குறிப்பிட்ட நேரம் மின்சாரம் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேட்டுக்கடை துணை மின் நிலைய காரைவாய்க்கால் மின் பாதை (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):- 

மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:- சிந்தன்குட்டை, நாலுவல்லக்காடு, காரைவாய்க்கால், கந்தாம்பாளையம், வாவிகடை நீரேற்று நிலையம், பெருந்துறை நீரேற்று நிலையம், ஊணாச்சிபுதூர் மற்றும் சின்னியம்பாளையம்.

சென்னம்பட்டி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):- 

மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:- ஜர்த்தல், கண்ணாமூச்சி, சித்தாகவுண்டனூர் மற்றும் பாப்பாத்திக்காட்டு புதூர்.
பெருந்துறை அருகே தலையில் ரத்த காயத்துடன் இறந்து கிடந்த இளம்பெண்: போலீசார் விசாரணை!

பெருந்துறை அருகே தலையில் ரத்த காயத்துடன் இறந்து கிடந்த இளம்பெண்: போலீசார் விசாரணை!

ஈரோடு மாவட்டம், பெருந்துறையை அருகே உள்ள விஜயமங்கலம் அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் கணேஷ்ராஜ் (வயது 40). இவரது மனைவி ஜானகி (30). இவர்களுக்கு 5 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
கணேஷ்ராஜ் அப்பகுதியில் உள்ள தனியார் ஸ்பின்னிங் மில் ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். ஜானகி வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில், நேற்று இரவு வழக்கம் போல வேலைக்கு சென்ற கணேஷ்ராஜ் வேலையை முடித்துக் கொண்டு நள்ளிரவு 12.15 மணியளவில் வீட்டுக்கு வந்துள்ளார்.

அப்போது, வீட்டின் கதவு வெளிபுறமாக தாழிடப்பட்டிருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த கணேஷ்ராஜ் கதவைத் திறந்து வீட்டுக்குள் சென்று பார்த்துள்ளார். அங்கு அவரது மனைவி ஜானகி, தலையில் ரத்த காயத்துடன் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக இதுகுறித்து பெருந்துறை போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் ஜானகி உடலை மீட்டு பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

ஜானகி கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு என்ன காரணம் என்பது குறித்து பெருந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

பிரேத பரிசோதனை முடிவில் தான் இது கொலையா அல்லது வேறு என்ன காரணம் என்று தெரிய வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்ட நீதிபதிகள் பணி இடமாற்றம்!

ஈரோடு மாவட்ட நீதிபதிகள் பணி இடமாற்றம்!

இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் எஸ்.அல்லி பிறப்பித்துள்ள அறிவிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஈரோடு மாவட்ட முதன்மை நீதிபதி பி.முருகேசன், சென்னை 8-வது சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதியாகவும், தேனி பெரியகுளம் கூடுதல் மாவட்ட நீதிபதி எஸ்.சமீனா ஈரோடு மாவட்ட முதன்மை நீதிபதியாகவும், ஈரோடு முதலாம் கூடுதல் மாவட்ட நீதிபதி ஜே.ஏ.கோகிலா திருப்பூர் மகளிர் நீதிமன்றம நீதிபதியாகவும், அவருக்கு பதிலாக கரூர் குடும்ப நல கோர்ட்டு நீதிபதி எஸ்.எழில் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல் சேலம் 2-வது மாவட்ட கூடுதல் நீதிபதி ஏ.எம்.ரவி பவானி 4-வது கூடுதல் மாவட்ட நீதிபதியாகவும். ஈரோடு குடும்ப நல கோர்ட்டு நீதிபதி எஸ்.ஹேமா நெல்லை போக்சோ கோர்ட்டு நீதிபதியாகவும், தூத்துக்குடி குடும்ப நல நீதிமன்ற நீதிபதி வி.சுரேஷ் ஈரோடு 2-வது கூடுதல் மாவட்ட நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல், மதுரை குடும்ப நல கோர்ட்டு நீதிபதி வி.அனுராதா ஈரோடு குடும்பநல கோர்ட்டு நீதிபதியாகவும், கோபி 3-வது கூடுதல் மாவட்ட நீதிபதி கே.தயாநிதி நாமக்கல் குடும்ப நல கோர்ட்டு நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
பெருந்துறையில் மயோனைஸ் தயாரிப்பு, பயன்பாடு குறித்து உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு!

பெருந்துறையில் மயோனைஸ் தயாரிப்பு, பயன்பாடு குறித்து உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு!

பெருந்துறையில் மயோனைஸ் தயாரிப்பு மற்றும் பயன்பாடு குறித்து உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு!
தமிழகத்தில் பதப்படுத்தப்படாத பச்சை முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ் உண்பதால் சால்மொனெல்லா வகை பாக்டீரியா மற்றும் லிஸ்ட்டீரியா மோனோசைட்டோ ஜீன்ஸ் மூலம் இரைப்பை மற்றும் குடல் தொற்று ஏற்பட்டு உடல் நலக்குறைவு ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் பதப்படுத்தப் படாத பச்சை முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ் தயாரிப்பு ,சேமிப்பு ,விநியோகம் மற்றும் விற்பனைக்கு தமிழக அரசு கடந்த 08.04.2025 முதல் ஓராண்டுக்கு தடை விதித்துள்ளது.

எனவே உணவுபாதுகாப்புத்துறை ஆணையர் மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் உத்தரவின் படியும்,உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலரின் அறிவுரையின்படியும் பெருந்துறை நகரிலும் பைபாஸ் மற்றும் விஜயமங்கலம் டோல்கேட் பகுதியில் உள்ள தந்தூரி சிக்கன் கிரில் சிக்கன் உள்ளிட்ட அசைவ உணவுகள் விற்பனை செய்யப்படும் 30க்கும் மேற்பட்ட உணவகம் மற்றும் பாஸ்ட்புட் கடைகளில் மையோனைஸ் தயாரிப்பு மற்றும் பயன்பாடு குறித்து பெருந்துறை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் எம்.முத்துகிருஷ்ணன் தலைமையிலான அதிகாரிகள் 29.04.25 அன்று ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது தடை செய்யப்பட்ட மையோனைஸ் பயன்பாடு எங்கும் கண்டறியப்படவில்லை.

உணவகங்களில் உணவருந்திக் கொண்டிருந்த பொது மக்களிடமும் மையோனைஸ் வழங்கப்படுகிறதா என விசாரித்து பச்சை முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் மையோனைஸ் உண்பதால் ஏற்படும் தீங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. உணவக உரிமையாளர்களிடம் சைவமயோனைஸ் பயன்படுத்துவது குறித்தும் சவர்மா, கிரில் சிக்கன் ,தந்தூரி சிக்கன் உள்ளிட்ட அசைவ உணவு வகைகளை நன்றாக வேக வைத்து 4 மணி நேரத்திற்குள் விற்பனை செய்யப்பட வேண்டும் எனவும் வேக வைக்கப்பட்ட அசைவ உணவுகளை பிரீசரில் வைத்து மறு பயன்பாடு செய்யக்கூடாது எனவும் அறிவுறுத்தினர். மேலும் தடை செய்யப்பட்ட பாலிதீன் கவர் மற்றும் கேரி பேக் மூலம் உணவுப் பொருள்கள் பார்சல் செய்யக்கூடாது எனவும் எண்ணெயில் பொறிக்கப்பட்ட வடை போண்டா பஜ்ஜி போன்ற பலகாரங்களை செய்தித்தாள்களில் வைத்து பொது மக்களுக்கு வழங்கக்கூடாது எனவும் அறிவுறுத்தினர். ஆய்வின் போது தடை செய்யப்பட்ட கேரிபேக் மற்றும் செய்தித்தாள்களில் உணவு பொருட்கள் வைத்து வழங்கிய பேக்கரி உரிமையாளருக்கு 3000 ரூபாய் அபராதமும் தடை செய்யப்பட்ட பாலிதீன் கவரில் உணவு பொருள்கள் பேக் செய்து விற்பனை செய்த உணவக உரிமையாளருக்கு 2000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. 

இது குறித்து மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் தங்க விக்னேஷ் கூறுகையில், ஈரோடு மாவட்டம் முழுவதும் இதுபோன்ற ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும் எனவும் எவரேனும் தடை செய்யப்பட்ட மையோனைஸ் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தாலோ அல்லது உணவு பொருளில் ஏதாவது குறைபாடுகள் இருந்தாலோ பொதுமக்கள் 9444042322 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும் கூறினார்.