Latest

வியாழன், 14 மே, 2026

அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலை வைத்து விற்பனை செய்தால் கடை பணியாளர்கள் மீது மிகக் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை. டாஸ்மாக் லிமிடெட் நிறுவனத்தின் சேலம் மாவட்ட மேலாளர் பன்னீர்செல்வம் கடும் எச்சரிக்கை.

அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலை வைத்து விற்பனை செய்தால் கடை பணியாளர்கள் மீது மிகக் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை. டாஸ்மாக் லிமிடெட் நிறுவனத்தின் சேலம் மாவட்ட மேலாளர் பன்னீர்செல்வம் கடும் எச்சரிக்கை.

சேலம், 
S.K. சுரேஷ்பாபு. 

அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலை வைத்து விற்பனை செய்தால் கடை பணியாளர்கள் மீது மிகக் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை. டாஸ்மாக் லிமிடெட் நிறுவனத்தின் சேலம் மாவட்ட மேலாளர் பன்னீர்செல்வம் கடும் எச்சரிக்கை. 

தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு அமைந்த உடன் தமிழக முழுவதும் 917 மதுபான கடைகள் மூடப்படுவது என முடிவு செய்து அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை அடுத்து தமிழ்நாடு அரசு மதுபான கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யும் பணியாளர்களை கண்டு கொள்ளாத மாவட்ட மேலாளர்கள் மீது மிகக் கடுமையான துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று இன்று தமிழக அரசு உத்தரவு ஒன்றினை பிறப்பித்தது. இது தொடர்பாக சேலம் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், 
மதுபான சில்லறை விற்பனை கடைகளில் தமிழக அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலை வைத்து விற்பனை செய்வதாக புகார்கள் தலைமை அலுவலகத்திற்கு வந்த வண்ணம் உள்ளது. கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யும் பணியாளர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் பார்வையில் காணும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் தலைமை அலுவலக சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட மேலாளரும் சேலம் மாவட்ட துணை ஆட்சியருமான பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார். எனவே சேலம் மாவட்டத்தில் இயங்கி வரும் மதுபான சில்லறை விற்பனை கடைகளில் பணியாற்றும் பணியாளர்கள் அனைவரும் தலைமை அலுவலக சுற்றறிக்கையை மீறி மதுபானங்களை அரசு நிர்ணயித்த விலையை விட ுதல் விலைக்கு விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட கடை பணியாளர்கள் மீது மிகக் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அனைத்து கடை பணியாளர்களுக்கும் தெரிவிக்கப்படுவதாக சேலம் மாவட்ட மேலாளர் பன்னீர்செல்வம் தனது சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 
கடந்த திமுக ஆட்சி காலத்தில் இதேபோன்று பலமுறை அப்போதைய அமைச்சராக இருந்த முத்துசாமி பல்வேறு வகையான எச்சரிக்கைகள் விடுத்தும், கண்டுகொள்ளாத ஒவ்வொரு மாவட்ட மேலாளர்களும் மாவட்டங்களில் பணியாற்றும் பணியாளர்களும், தற்பொழுது புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசின் உத்தரவை எவ்வாறு செயல்படுத்த போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

புதன், 13 மே, 2026

மருத்துவ காப்பீட்டி சுமார் 6 கோடி ஊழல் செய்த ஊழியரை மிரட்டி பறிமுதல் செய்த தரூன் மருத்துவ நிர்வாகம். பாதிக்கபட்ட சிகிச்சை பெற்ற அனைவருக்கும் திரும்ப கொடுக்க வேண்டும் தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு நிறுவனரும் தலைவர் ஆன சரஸ்ராம் ரவி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தல்.

மருத்துவ காப்பீட்டி சுமார் 6 கோடி ஊழல் செய்த ஊழியரை மிரட்டி பறிமுதல் செய்த தரூன் மருத்துவ நிர்வாகம். பாதிக்கபட்ட சிகிச்சை பெற்ற அனைவருக்கும் திரும்ப கொடுக்க வேண்டும் தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு நிறுவனரும் தலைவர் ஆன சரஸ்ராம் ரவி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தல்.

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

மருத்துவ காப்பீட்டி சுமார் 6 கோடி ஊழல் செய்த ஊழியரை மிரட்டி பறிமுதல் செய்த 
தரூன் மருத்துவ நிர்வாகம். பாதிக்கபட்ட சிகிச்சை பெற்ற அனைவருக்கும் திரும்ப கொடுக்க வேண்டும் தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு நிறுவனரும் தலைவர் ஆன சரஸ்ராம் ரவி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தல். 


சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே அமைந்துள்ள தரூன் சிறப்பு மருத்துவமனையில், நிகழ்ந்து வரும் மருத்துவ காப்பீட்டு ஊழல் குறித்து தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு அமைப்பின் நிறுவனரும் தலைவருமான சரஸ்ராம் ரவி அவர்களுக்கு பலகட்ட புகார்கள் வந்ததன் அடிப்படையில், அமைப்பின் தலைவர் சரஸ்ராம் ரவி தலைமையிலான உண்மை கண்டறியும் குழுவினர் அதிரடி விசாரணையில் இறங்கினர். இது குறித்து சரஸ்ராம் ரவி நம்முடைய கூறுகையில், கடந்த பல ஆண்டுகளாக சேலம் சீலநாயக்கன்பட்டி தருண் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெற்ற ஆயிரகணக்கான நோயாளிகளின் மருத்துவ சிகிச்சை செலவை அவர்களது காப்பீடு mediclaim Insurer T.P.A வாயிலாக பெறபட்டதுடன், சில மருத்துவமனை மருத்துவர்,  ஊழியர்கள் இன்சூரன்ஸ் தொகைக்கு மேலாக ஒவ்வொரு உள் சிகிச்சை பெற்ற நோயாளிகளிடமும் அதிகமான பணத்தை வாங்கி  உள்ளதாக தகவல் கிடைத்ததாகவும். அதன் அடிப்படையில் பல கோடி பணம் காப்பீட்டில் ஊழல் நடந்துள்ளதாக தெரிகிறது என்று குறிப்பிட்ட அவர், சில நாட்களுக்கு முன் மருத்துவமனை Audit செய்தபோது ஒரு ஊழியர் மட்டும் 6 கோடிகள் வரை பொது மக்கள் அதாவது தரூன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பொதுமக்களிடம் இன்சூரன்ஸ் தொகைக்கு மேலாக பணம் பெறபட்டு மருத்துவ மனை நிர்வாகத்தை ஏமாற்றி ஊழல் செய்திருப்பதை internal Audit நிர்வாகம்  கண்டுகிடிக்கபட்டுள்ளது என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். 
மேலும் சுமார் 6 கோடி ஊழல் செய்த ஒரு ஊழியரை மிரட்டி அவர் செய்த ஊழல் பணத்தில் வாங்கிய வீடு,  விவசாய நிலம், வங்கி ரொக்கம் சுமார் 50 லட்சம்  ஆக சுமார் 5 கோடி திரும்ப பெற்ற தரூன் மருத்துவ நிர்வாகம் அதை பாதிக்கபட்ட சிகிச்சை பெற்ற அனைவருக்கும் திரும்ப கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு அமைப்பின் நிறுவனரும் தலைவருமான சரஸ்ராம் ரவி தலைமையிலான உண்மை கண்டறியும் விசாரணை குழுவினர் நேற்று மருத்துவமனை நிர்வாகத்திடம் முறையிட்ட போது ஒரு நாள் கால அவகாசம் கேட்டுள்ளதாகவும் தவறும் பட்சத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை வேறு மாதிரியாக இருக்கும் என்றும் சரஸ்ராம்ரவி நமது தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 12 மே, 2026

சேலத்தில் பேரன்களின் ஆசைகளை நிறைவேற்றும் விதமாக இனிப்புகளை வழங்கி கொண்டாடி நிறைவேற்றிய தாத்தா. தமிழக விவசாயிகளின் பிரதான கோரிக்கையான காவிரி கோதாவரி இணைப்பு திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். தமிழக முதல்வர் விஜய் அவர்களுக்கு தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் சிவபெருமாள் வேண்டுகோள்.

சேலத்தில் பேரன்களின் ஆசைகளை நிறைவேற்றும் விதமாக இனிப்புகளை வழங்கி கொண்டாடி நிறைவேற்றிய தாத்தா. தமிழக விவசாயிகளின் பிரதான கோரிக்கையான காவிரி கோதாவரி இணைப்பு திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். தமிழக முதல்வர் விஜய் அவர்களுக்கு தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் சிவபெருமாள் வேண்டுகோள்.

சேலம், 
S.K. சுரேஷ்பாபு. 

சேலத்தில் பேரன்களின் ஆசைகளை நிறைவேற்றும் விதமாக இனிப்புகளை வழங்கி கொண்டாடி நிறைவேற்றிய தாத்தா. தமிழக விவசாயிகளின் பிரதான கோரிக்கையான காவிரி கோதாவரி இணைப்பு திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். தமிழக முதல்வர் விஜய் அவர்களுக்கு தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் சிவபெருமாள் வேண்டுகோள். 

தமிழகத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய சூறாவளியில் சிக்கி பிரதான கட்சிகளான திமுக அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளையும் சின்னாபின்னமாக்கி, தமிழக முதல்வராக பொறுப்பேற்றார் கட்சியின் தலைவர் விஜய். ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாத போதும் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் மற்றும் விசிக ஒலிக்க கட்சிகளின் ஆதரவால் தமிழக முதலமைச்சராக விஜய் நேற்று முன்தினம் பொறுப்பேற்றார். இந்த நிகழ்வை தமிழக முழுவதும் உள்ள விஜய் ரசிகர்களால் வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வந்த நிலையில், சேலத்தில் தமிழக விவசாயிகளின் சங்க மாநில தலைவர் சிவபெருமாள் அவர்களின் பேரன்களும் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றத்தை கொண்டாடும் விதமாக இனிப்புகளை வழங்கி கொண்டாட வேண்டும் என்று தனது தாத்தாவிடம் கேட்டுள்ளனர். 
இதற்கு இசைவு தெரிவித்து தமிழக விவசாயிகளின் சங்க மாநில தலைவர் சிவபெருமாள், சேலம் அழகாபுரம் பகுதியில் உள்ள உணவு விடுதி ஊழியர்கள், அந்த பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள், தேநீர் கடைக்காரர்கள் மற்றும் காவல் துறையினர் என அனைவருக்கும் இனிப்புகளை வழங்கி கொண்டாடி பேரண்களின் ஆசையை பூர்த்தி செய்து வைத்த நிகழ்வு அந்தப் பகுதியில் இடையே மிகுந்த வரவேற்பினை பெற்றுள்ளது. இது குறித்து தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் சிவபெருமாள் நம்முடைய கூறுகையில், 17 வது தமிழக சட்டப்பேரவைக்கான முதல் அமைச்சராக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அவர்கள் முதலமைச்சராக பொறுப்பேற்றதற்கு முதற்கண் தங்களது அமைப்பான தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் இதனை வரவேற்கும் விதமாக இன்று இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டதாகவும் தெரிவித்தார். 
மேலும் தமிழக விவசாயிகளின் தீர்க்கப்படாத கோரிக்கைகள் பல தற்பொழுது வரை தீர்க்கப்படாமல் இருப்பதாகவும், தற்பொழுது உள்ள சூழலில் தமிழக முதலமைச்சர் அவர்களையும் தமிழக விவசாயத்துறை அமைச்சர் அவர்களையும் சந்திக்கும் ஒரு தருவாய் கிடைக்கும் பட்சத்தில் அவர்களிடம் மூன்று பிரதான முக்கிய கோரிக்கைகளை முன்வைக்க உள்ளதாக தெரிவித்த சிவபெருமாள், தமிழக விவசாயிகளின் பிரதான கோரிக்கையான காவிரி கோதாவரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்றினால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து என்பது எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும் என்றும் ஆகவே கர்நாடகாவிடம் பாசன நீருக்காக கையேந்தும் அவசியம் தமிழக விவசாயிகளுக்கு ஏற்படாது என்று குறிப்பிட்டதோடு மேகதாதுவேல் கர்நாடகா அரசு அணை கட்டினால் என கட்டவில்லை என்றால் என்ற ஒரு சூழலும் உருவாகும் ஆகவே தமிழக முதல்வரையும் தமிழக விவசாயத் துறை அமைச்சரையும் சந்திக்கும் தருவாயில் இந்த கோரிக்கையை முன்வைக்கப்பட உள்ளதாக தெரிவித்த அவர் 100 நாள் வேலை திட்டத்தில் 124 நாட்கள் என  மாறுதல்கள் செய்த போதிலும்  குறிப்பாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளையும் சேர்க்க வேண்டும் கூலி குறைவு என பல சிக்கல்கள் உள்ளதால் தமிழக விவசாயிகளுக்கு 124 வேலை திட்டத்தில் பணி வழங்குவதோடு அவர்கள் ஏற்கனவே பணியாற்றும் பணியிடத்தில் பணியாற்றும்போது அவர்களுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் இதற்கு தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும் மற்றும் தமிழக விவசாயிகள் விளைவிக்கும் காய்கறி கனி வகைகளுக்கு உரிய விலை கிடைப்பது இல்லை சார்பாக கத்தரி தக்காளி செடி விதைகளை இலவசமாக தமிழகம் முழுவதும் வழங்க வேண்டும் இது தமிழக விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது என்றும் சிவபெருமாள் தெரிவித்தார்.

ஞாயிறு, 10 மே, 2026

தமிழக  விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து விவசாயிகளின்  வாழ்வாதாரம் மேம்பட வழிவகை செய்வீர்கள் என நம்புகிறேன். உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க தலைவர் வேலுச்சாமி தமிழக முதல்வருக்கு வாழ்த்து கடிதம்.

தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட வழிவகை செய்வீர்கள் என நம்புகிறேன். உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க தலைவர் வேலுச்சாமி தமிழக முதல்வருக்கு வாழ்த்து கடிதம்.

சேலம், 
S.K. சுரேஷ்பாபு. 

தமிழக  விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து விவசாயிகளின்  வாழ்வாதாரம் மேம்பட வழிவகை செய்வீர்கள் என நம்புகிறேன். உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க தலைவர் வேலுச்சாமி தமிழக முதல்வருக்கு வாழ்த்து கடிதம்.

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி வெளியிட்டுள்ள வாழ்த்து மடலில், 50 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சிக்கு மாற்றாக இன்று புதிதாக தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள மாண்புமிகு C. ஜோசப் விஜய் அவர்களுக்கு, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசாவது தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து, அவர்களுக்கு தீர்க்கப்படாத உள்ள நீண்ட நெடுநாள் கோரிக்கைகளை, விவசாயிகளின்  வாழ்வாதாரம் மேம்பட வழிவகை செய்வீர்கள் என நம்புகிறேன் என்று உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி வாழ்த்து மடலின் வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளார்.
சேலம் ஸ்ரீ ராமானுஜர் மணி மண்டபத்தில் சகஸ்ர 1001 கலசபிஷேக வைபவம். கங்கை முதலான புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பலன் கிட்டும் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் பங்கேற்பு.

சேலம் ஸ்ரீ ராமானுஜர் மணி மண்டபத்தில் சகஸ்ர 1001 கலசபிஷேக வைபவம். கங்கை முதலான புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பலன் கிட்டும் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் பங்கேற்பு.

சேலம், 
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் ஸ்ரீ ராமானுஜர் மணி மண்டபத்தில் சகஸ்ர 1001 கலசபிஷேக வைபவம். கங்கை முதலான புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பலன் கிட்டும் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் பங்கேற்பு. 

சேலம் எருமாபாளையத்தில்  உள்ள ஸ்ரீ பகவத் ராமானுஜர் கைங்கரிய சொசைட்டி ஸ்ரீ ராமானுஜர் மணி மண்டபத்தில் உலக நன்மை கருதி சகஸ்ர 11 கலசாபிஷேக வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. நேற்று தொடங்கிய இந்த விழாவில் முதல் பூஜையாக கோ பூஜையுடன் தொடங்கியது. தொடங்கு மகா சுதர்சன ஹோமம் 1001 கலச ஸ்தாபடும் வேத பிரபந்த பாராயணம் சாற்றுமுறை உள்ளிட்ட நிகழ்வுடன் தொடங்கிய இந்த விழாவில் இன்று கோ பூஜை சுப்ரபாதம் விஸ்வரூபம் தோமாலை அர்ச்சனை திருவாராதனம் தீர்த்த பிரசாதம் உள்ளிட்டவைகள் நடைபெற்றது தொடர்ந்து ஸ்ரீ ரங்கநாத பெருமாள் உற்சவருக்கும் ஸ்ரீ ராமானுஜர் உற்சவருக்கும் 1001 சகஸ்ர கலச அபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றன. 
ஸ்ரீ ராமானுஜர் மணிமண்டபத்தில் மேல்கோட்டை ஸ்ரீ யதுகிரி, யதிராஜா 
நாராயண ராமானுஜர் ஜி எஸ் சுவாமிகள் திருக்கோவிலூர் எம்பெருமானார் தேஹளீச ராமானுஜர் ஜி எஸ் சுவாமிகள் மற்றும் திருச்சித்ர கூடம் ரங்காச்சாரியார் சுவாமிகள் திருக்கடையூர் நம்பிகள் சுவாமிகள் ஆகியோர் மங்களா சாசனத்துடன் நடைபெற்ற இந்த விழாவில், கங்கை முதலான புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பலன் கிட்டும் எல்லா யாகங்களின் பலன் தீட்டும் எல்லா தானியங்களின் பலன் கிட்டும் அனைத்து பாவங்களையும் போக்க வல்லது என்பன உள்ளிட்ட 8 ம்ச காரணிகளின் காரணத்தால் சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் சேர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கலசாபிஷேக விழாவினை சிறப்பித்தனர். 
விழா குறித்து ஸ்ரீ பகவத் ராமானுஜர் கைங்கரிய சொசைட்டியின் செயலர் முரளிதரன் கூறுகையில் கடந்த 2021 ஆம் ஆண்டு சேலம் கோட்டை பெருமாள் திருக்கோவிலில் ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் பக்தி சபையினர் நடத்தியதற்கு பிறகு தற்பொழுது இப்பொழுதுதான் இந்த சகஸ்ர கலசாபிஷேக நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகவும் இதில் கலந்துகொண்டால் ஏராளமான புண்ணியங்கள் கட்டும் என்பதால் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு எம்பெருமானை வழிபட்டு சென்றதாக தெரிவித்தார். 
விழாவிற்கான ஏற்பாடுகளை தலைவர் ஸ்ரீராமன் பொருளாளர் நரசிம்மமூர்த்தி சேலம் ராமகிருஷ்ணா எலெக்ட்ரிக்கல்ஸ் ரவிச்சந்திரன் சேலம் ஜெயகிருஷ்ணா பெஸ்டிசைட்ஸ் பிரைவேட் லிமிடெட் இன் ரவி சுந்தர் மற்றும் துணைச் செயலாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் மிகவும் சிறப்பாக செய்திருந்தனர்.

வெள்ளி, 8 மே, 2026

சேலம் மாவட்ட ரெட் கிராஸ் சொசைட்டி சார்பாக World Red Cross Day கொண்டாடப்பட்டம். JEAN HENDRY DUNANT திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து, பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கிக் கொண்டாடப்பட்டது.

சேலம் மாவட்ட ரெட் கிராஸ் சொசைட்டி சார்பாக World Red Cross Day கொண்டாடப்பட்டம். JEAN HENDRY DUNANT திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து, பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கிக் கொண்டாடப்பட்டது.

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

சேலம் மாவட்ட ரெட் கிராஸ் சொசைட்டி சார்பாக World Red Cross Day கொண்டாடப்பட்டம். JEAN HENDRY DUNANT திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து, பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கிக் கொண்டாடப்பட்டது.

ரெட் கிராஸ் சொசைட்டி நிறுவனர் JEAN HENDRY DUNANT அவர்களின் பிறந்த நாளை கௌரவிக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் MAY 8 WORLD RED Cross Day ஆக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நாள் போர் மற்றும் இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் மனிதாபிமானப் பணிகளைப் போற்றுகிறது. சேலம் மாவட்ட ரெட் கிராஸ் சொசைட்டி சார்பாக இன்று World Red Cross Day கொண்டாடப்பட்டது. 
JEAN HENDRY DUNANT திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து, பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப் பட்டது . இந்த நிகழ்வில் சேலம் மாவட்ட  ரெட் கிராஸ் சொசைட்டி சேர்மன் ராஜா சுந்தர் சிங், செயலரும், சிந்தி இந்து தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியையும் ஆன திருமதி. T.லதா, துணை சேர்மன் ஜெய் சந்த் லோதா, மாநில பிரதிநிதி சகாயராஜ்,  ஜூனியர் ரெட் கிராஸ் கன்வீனர், பிரபாகர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

வியாழன், 7 மே, 2026

இந்த இக்கட்டான அரசியல் சூழலில் கம்னியூஸ்ட் கட்சிகள் மற்றும்  விசிக விற்கு தலா ஒரு மந்திரி பதவி. இந்த இக்கட்டான அரசியல் சூழலில் த. வெ.க தலைவர் விஜய் அவர்களுக்கு, தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசின் நிறுவனரும் தலைவருமாள் சரஸ் ராம் ரவி, கோரிக்கை.

இந்த இக்கட்டான அரசியல் சூழலில் கம்னியூஸ்ட் கட்சிகள் மற்றும் விசிக விற்கு தலா ஒரு மந்திரி பதவி. இந்த இக்கட்டான அரசியல் சூழலில் த. வெ.க தலைவர் விஜய் அவர்களுக்கு, தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசின் நிறுவனரும் தலைவருமாள் சரஸ் ராம் ரவி, கோரிக்கை.

சேலம், 
S.K. சுரேஷ்பாபு.

இந்த இக்கட்டான அரசியல் சூழலில் கம்னியூஸ்ட் கட்சிகள் மற்றும்  விசிக விற்கு தலா ஒரு மந்திரி பதவி. இந்த இக்கட்டான அரசியல் சூழலில் த. வெ.க தலைவர் விஜய் அவர்களுக்கு, தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசின் நிறுவனரும் தலைவருமாள் சரஸ் ராம் ரவி, கோரிக்கை.

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டிற்கான 17 வது தமிழக சட்டப்பேரவை அமைப்பதில் பிரதான கட்சிகள் இடையே பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் ஏற்கனவே ஆதரவு தெரிவித்து ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களை வழங்கி இருந்த நிலையில், தற்பொழுது விசிக இடதுசாரிகள் கட்சிகளுடன் த.வெ.க  தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்திய வண்ணமே உள்ளன. என்றாலும் இனமும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. இந்த நிலையில் தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசின் நிறுவனரும் தலைவருமான சரஸ்ராம் ரவி, தமிழக வெற்றி கழக தலைவருக்கு கோரிக்கை ஒன்றினை முன் வைத்துள்ளார்.
அதில், ஒருவேளை இடதுசாரி கட்சிகளும், விடுதலை சிறுத்தை கட்சியும் ஆதரவு அளிக்கும் பட்சத்தில், கம்னியூஸ்ட் கட்சிகள் மற்றும் விசிக கட்சியின் தங்களது 6  உறுப்பினர்களும் TVK. ஆட்சி அமர  முழ ஆதரவு தரபட வேண்டும். கம்னியூஸ்ட் கட்சிகள் மற்றும் விசிக விற்கு தலா ஒரு மந்திரி பதவி வழங்க வேண்டும். திருச்சி இடை தேர்தலில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் அவர்களுக்கு TVK  ஆதரவு அளித்து  வெற்றி பெற செய்ய வேண்டும். தொல். திருமாவிற்கு துணை முதல்வர் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள சரஸ் ராம் ரவி அவர்கள் தமிழகம் காக்கபட வேண்டும் என்றும் தனது கோரிக்கை பதிவில் குறிப்பிட்டுள்ளார்.