Latest

வெள்ளி, 6 மார்ச், 2026

ஈரோடு மாவட்ட அரசியலில் புதிய அலை… ஈரோட்டில் இளைஞரணிக்கு வாய்ப்பு… திமுகவில் திருவாசகம் பெயர் தீவிர பரிசீலனை..!

ஈரோடு மாவட்ட அரசியலில் புதிய அலை… ஈரோட்டில் இளைஞரணிக்கு வாய்ப்பு… திமுகவில் திருவாசகம் பெயர் தீவிர பரிசீலனை..!

ஈரோடு மாவட்டத்தை குறி வைக்கும் திமுக.. இளைஞரணிக்கு சீட் கிடைக்குமா.? 

சட்டமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், திமுகவில் வேட்பாளர் தேர்வு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை தக்கவைக்க திமுக தலைமையகம் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது.

குறிப்பாக, அதிமுகவின் ஆதிக்கம் அதிகம் காணப்படும் கொங்கு மண்டலமான ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மக்கள் செல்வாக்குள்ள புதிய முகங்களை களமிறக்க திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன் ஒரு பகுதியாக, ஈரோடு கிழக்கு மற்றும் மேற்கு தொகுதிகளில் பழைய வேட்பாளர்களுக்கு பதிலாக இளம் தலைமுறையை களமிறக்க திமுக தலைமை ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஈரோடு தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் ஜெ.திருவாசகத்திற்கு இந்த முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கலாம் என கட்சியினர் மத்தியில் பேசப்படுகிறது.


நீட் எதிர்ப்பு உண்ணாவிரத போராட்டம் முதல் இளைஞரணி அமைப்பை வலுப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகள் வரை தொடர்ந்து செயல்பட்டு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் நம்பிக்கையை பெற்றவராக திருவாசகம் பார்க்கப்படுகிறார்.

மேலும், நாடாளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் பிரகாஷ் அவர்களின் வெற்றிக்காக மாவட்டம் முழுவதும் இளைஞர்களை ஒருங்கிணைத்து பணியாற்றியதாலும் அவர் கட்சியினரிடையே கவனம் பெற்றுள்ளார்.

இளைஞர்களுக்கான விளையாட்டு போட்டிகள், அரசு தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், இயற்கை பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு உதவி செய்வது போன்ற சமூக பணிகளின் மூலம் ஈரோடு மாவட்ட இளைஞர்கள் மத்தியில் திருவாசகம் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.

சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு திருவாசகம் செயல் பட்டாலும்,  முதலியார் சமூக வாக்குகள் இவருக்கு கணிசமாக உள்ள நிலையில், திருவாசகம் போட்டியிட்டால் முதலியார் சமூகம் மட்டுமின்றி பல சமூகங்களின் ஆதரவும் அவருக்கு கிடைக்கும் என கட்சியினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.


மேலும், முதுநிலை பொறியியல் பட்டப்படிப்புடன் எம்.பி.ஏ. படித்துள்ள இளைஞரான திருவாசகம் கல்வி தகுதியும், சமூகப் பணிகளும் இணைந்தவராக பார்க்கப்படுகிறார். 

இதனால், இளம் தலைமுறையை முன்னிறுத்தும் வகையில் அவருக்கு இந்த முறை சீட் கிடைப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

எட்டு வயது முதல் மொழிப் போராட்டம், ஈழத் தமிழருக்கான ஆதரவு போராட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் மற்றும் சமூக இயக்கங்களில் தொடர்ந்து களத்தில் செயல்பட்டு வருவதும் அவருக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.


இதனால், ஈரோடு கிழக்கு அல்லது ஈரோடு மேற்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் ஒன்றை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவாசகத்திற்கு நிச்சயம் பெற்றுக் கொடுப்பார் என்பது ஈரோடு மாவட்ட இளைஞர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

அதுமட்டுமின்றி மாவட்ட செயலாளரும், ஈரோடு மாவட்ட  அமைச்சருமான சு.முத்துசாமியின் ஆதரவும் திருவாசகத்திற்கு இருப்பதாக கூறப்படுவதால், இந்த முறை ஈரோடு கிழக்கு அல்லது ஈரோடு மேற்கு தொகுதிகளில் ஒன்றில் அவர் போட்டியிட வாய்ப்பு அதிகம் என திமுக வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதைத் தொடர்ந்து, இளைஞரணியை சேர்ந்த திருவாசகத்திற்கு இந்த முறை சட்டமன்ற தேர்தலில் சீட் கிடைக்குமா?! என்பது இளைஞர் அணியினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதன், 4 மார்ச், 2026

நாட்டின் முதுகெலும்பாக திகழும்  விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் ஏற்கும் கட்சிகள் மட்டுமே தமிழகத்தில் ஆட்சி பொறுப்பில் அமைய முடியும். தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி அரசியல் கட்சியினருக்கு அறிவுறுத்தல்.

நாட்டின் முதுகெலும்பாக திகழும் விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் ஏற்கும் கட்சிகள் மட்டுமே தமிழகத்தில் ஆட்சி பொறுப்பில் அமைய முடியும். தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி அரசியல் கட்சியினருக்கு அறிவுறுத்தல்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

நாட்டின் முதுகெலும்பாக திகழும்  விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் ஏற்கும் கட்சிகள் மட்டுமே தமிழகத்தில் ஆட்சி பொறுப்பில் அமைய முடியும். தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி அரசியல் கட்சியினருக்கு அறிவுறுத்தல்.

தமிழக விவசாயிகளின் நலன் கருதியும் அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் அழிந்து வரும் விவசாய தொழிலை பாதுகாக்கவும் தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தமிழக அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் முன்வைத்தும் தற்பொழுது வரை நிறைவேற்றப்படவில்லை என்பது மாநிலத் தலைவர் வேலுச்சாமியின் ஒட்டுமொத்த குற்றச்சாட்டாகவே தற்போது வரை உள்ளது. இந்த நிலையில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் திருவண்ணாமலையில் தனது 27ஆம் தேதி நடைபெற்ற மகாசபை கூட்டத்திலும் கூட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிறுத்தி அரசியல் கட்சிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. இந்த நிலையில், எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தல் சம்பந்தமாக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினருக்கும் அறிக்கையின் வாயிலாக உழவர் பெருந்தலைவர்  நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி அறிகையின் வாயிலாக கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளார். 
அதன் அடிப்படையில், தமிழகத்தில் 2026ல் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் தமிழக அரசியல் கட்சிகள் வெற்றி பெற்று, ஆட்சி பொறுப்பில் அமர வேண்டும் என்றால் நாட்டின் முதுகெலும்பாக திகழும் தமிழக விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் ஏற்க வேண்டும். விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் ஏற்கும் அரசியல் கட்சி மட்டுமே ஆட்சி பொறுப்பில் அமர முடியும் என உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் தமிழக அரசியல் கட்சி தலைவர்களுக்கு இந்த அறிக்கையின் வாயிலாக நினைவுபடுத்துகிறது என்று உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுசாமி அறிக்கையின் வாயிலாக வலியுறுத்தி உள்ளார்.



திங்கள், 2 மார்ச், 2026

சேலம் சோனா வள்ளியப்பா பப்ளிக் பள்ளியின் ஆண்டு விளையாட்டு விழா. பல்வேறு போட்டுகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு மகிழ்ந்து கிரிக்கெட்டர் சாய் கிஷோர்.

சேலம் சோனா வள்ளியப்பா பப்ளிக் பள்ளியின் ஆண்டு விளையாட்டு விழா. பல்வேறு போட்டுகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு மகிழ்ந்து கிரிக்கெட்டர் சாய் கிஷோர்.

சேலம்.
S.K. சுரேஷ் பாபு.

சேலம் சோனா வள்ளியப்பா பப்ளிக் பள்ளியின் ஆண்டு விளையாட்டு விழா. பல்வேறு போட்டுகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு மகிழ்ந்து கிரிக்கெட்டர் சாய் கிஷோர்.

சோனா வள்ளியப்பா பப்ளிக் பள்ளியின் ஆண்டு விளையாட்டு விழாவானது, சோனா கல்லூரி விளையாட்டு மைதானத்தில் மிக உற்சாகத்துடன் நடைபெற்றது. சோனா கல்வி நிறுவனத்தின் தலைவர் வள்ளியப்பா தலைமையில் நடைப்பெற்ற இந்த நிகழ்வில் துணைத்தலைவர்கள் சொக்கு வள்ளியப்பா, தியாகு வள்ளியப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  
இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கிரிக்கெட்டர் சாய் கிஷோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து மாணவர்களின் விளையாட்டுத் திறனை வெளிப்படுத்தும் விதமாக அமைந்த இந்த விழாவில் வீரர்களின் அணிவகுப்பு மற்றும் தடகளப் போட்டிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.
விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர் கிரிக்கெட்டர் சாய் கிஷோர் பரிசுக் கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி, கல்வியோடு விளையாட்டும் இணையும் போது தான் ஒரு மாணவனின் தன்னம்பிக்கையும் ,போட்டி மனப்பான்மையும் வளர்கிறது என்று கூறி அவர் மாணவர்களை வெகுவாக பாராட்டினார். இந்த விளையாட்டு விழாவில் சோனா வள்ளியப்பா பப்ளிக் பள்ளியின் தாளாளர் திருமதி .சீதா வள்ளியப்பா, திருமதி விசாலாட்சி சொக்கு, இயக்குநர் கார்த்திகேயன், பள்ளியின் முதல்வர் திருமதி.இ.ஜெ.கவிதா, ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என திரளாக கலந்து கொண்டனர்.

ஞாயிறு, 1 மார்ச், 2026

தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் சமூக கூட்டமைப்பு திமுக கூட்டணிக்கு முழு ஆதரவு.

தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் சமூக கூட்டமைப்பு திமுக கூட்டணிக்கு முழு ஆதரவு.

சேலம். 
S.K. சுரேஷ் பாபு. 

தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் சமூக கூட்டமைப்பு திமுக கூட்டணிக்கு முழு ஆதரவு. 

2026 சட்டமன்றத்திற்கான தேர்தல் ஏப்ரல் இறுதி மற்றும் மே முதல் வாரத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள பிரதான கட்சிகள் ஒவ்வொரு தலைப்புகளில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவிற்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்து தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையும் அவ்வப்போது நடைபெற்று கொண்டு உள்ளது. இந்த நிலையில் தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் சமூக கூட்டமைப்பு மற்றும் ஆரிய வைசிய முன்னேற்ற பேரவையின் மாநில தலைவர் நாகா.அரவிந்தன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திமுக அரசு செயல்படுத்திய திட்டங்கள், தமிழக மக்களிடம் பெற்ற வரவேற்பு ஆகியவற்றை பட்டியலிட்டு கூறிய அவர் தமிழகத்தில் நடைபெற உள்ள 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான வெற்றி கூட்டணிக்கு தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் சமூக கூட்டமைப்பு தங்களது முழு ஆதரவை வழங்குகிறது என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஆக மீண்டும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களை ஆட்சி கட்டிலில் அமர்த்த கூட்டமைப்பு தமிழக முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்ளும் என்றும் தெரிவித்தார். இதுவரை நடைபெற்று முடிந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது சேலத்தில் பல்வேறு நடிகர் மற்றும் நடிகைகளை அழைத்து வந்து தாங்கள் ஆதரவு தெரிவித்த கட்சிகளுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டதை போலவே இந்த தேர்தலிலும் தங்களது பிரச்சாரம் என்பது புதிய யுக்தியை பின்பற்றி இருக்கும் என்று குறிப்பிட்ட நாகா அரவிந்தன், சேலம் மாவட்டத்தை பொருத்தவரை 11 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்களே வெற்றி பெறுவார்கள் என்றும் குறிப்பாக எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் அதிமுகவின் பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான பழனிச்சாமி டெபாசிட் இழப்பார் என்றும் ஆருடம் தெரிவித்தார்.
மேலும் திமுகவுக்கு தங்களது முழு ஆதரவு என்றும் இந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தங்களது அமைப்பிற்கு சீட் கேட்க போவதில்லை என்று கூறியதோடு மட்டுமல்லாமல் நிபந்தனை அற்ற ஆதரவு திமுகவிற்கு வழங்குவதாகவும் நாகா.அரவிந்தன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பலமுறை அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்திருந்த தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் சமூக கூட்டமைப்பின் மாநில தலைவர் நாகா.அரவிந்தன் தற்பொழுது, எடப்பாடி தொகுதியில் பழனிச்சாமி அவர்கள் டெபாசிட் இழப்பார் என்று தெரிவித்துள்ளது சேலம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 78வது பிறந்தநாளையொட்டி ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியில அதிமுக சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் – ஏராளமான பொதுமக்கள் பயனடைந்தனர்..!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 78வது பிறந்தநாளையொட்டி ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியில அதிமுக சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் – ஏராளமான பொதுமக்கள் பயனடைந்தனர்..!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 78வது பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியில மாபெரும் இலவச மருத்துவ முகாம் – ஏராளமான பொதுமக்கள் பயனடைந்தனர்

முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78வது பிறந்த நாளை முன்னிட்டு,
அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான
எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க,
ஈரோடு மாநகர் மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதி, அனைத்துலக எம்ஜிஆர் மன்றம், KIMS மருத்துவமனை இணைந்து,
ஈரோடு மாவட்டம் முள்ளாம்பரப்பு ஆர்.பி.டி திருமண மண்டபத்தில் மாபெரும் இலவச பொது மருத்துவ சிகிச்சை முகாம் சிறப்பாக நடைபெற்றது.

அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வி.பி. சிவசுப்பிரமணி தலைமையில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமை, முன்னாள் அமைச்சரும் கழக அமைப்புச் செயலாளருமான தங்கமணி மற்றும் ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.வி. ராமலிங்கம் ஆகியோர் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தனர்.


இந்த நிகழ்ச்சியில் மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் மயில் என்கிற சுப்பிரமணி, மொடக்குறிச்சி வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் சாலை மாணிக்கம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். தென்னரசு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகுமார் சின்னையன், முன்னாள் அமைச்சர் பி.சி. ராமசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு முகாமை சிறப்பித்தனர். 


மேலும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய மற்றும் பேரூர் கழக செயலாளர்கள், மாநில மற்றும் மாவட்ட சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள், கிளை கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


இந்த மருத்துவ முகாமில் கிம்ஸ் மருத்துவமனையை சேர்ந்த  மருத்துவ நிபுணர்கள் பல்துறை மருத்துவ சேவைகளை வழங்கினர். 

குறிப்பாக இருதய நோய் சிகிச்சை, மூளை நரம்பியல் சிகிச்சை, எலும்பியல் சிகிச்சை, சிறுநீரக சிகிச்சை, பெண்களுக்கான மகப்பேறு மருத்துவம், பொது மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, 


பொதுமக்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
மேலும் முகாமில் பங்கேற்ற பொதுமக்களுக்கு உயர்தர மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன. 

இந்த இலவச மருத்துவ முகாமில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு பயனடைந்தனர்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த மருத்துவ முகாம், பொதுமக்களுக்கு பெரும் பயன் அளித்ததாகவும், பொதுமக்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பாராட்டினர்.
சேலத்தில் JCI மண்டல மீடியா  அமைப்பின் சார்பில் பொதுமக்களை நல்வழிப்படுத்தும் விதமாக விழிப்புணர்வு பதாகை திறப்பு விழா. சேலம் ஜங்ஷன் பிரதான சாலையில் நடைபெற்ற விழாவில் அமைப்பின் தேசிய துணை தலைவர் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

சேலத்தில் JCI மண்டல மீடியா அமைப்பின் சார்பில் பொதுமக்களை நல்வழிப்படுத்தும் விதமாக விழிப்புணர்வு பதாகை திறப்பு விழா. சேலம் ஜங்ஷன் பிரதான சாலையில் நடைபெற்ற விழாவில் அமைப்பின் தேசிய துணை தலைவர் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சேலத்தில் JCI மண்டல மீடியா  அமைப்பின் சார்பில் பொதுமக்களை நல்வழிப்படுத்தும் விதமாக விழிப்புணர்வு பதாகை திறப்பு விழா. சேலம் ஜங்ஷன் பிரதான சாலையில் நடைபெற்ற விழாவில் அமைப்பின் தேசிய துணை தலைவர் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

பன்னாட்டு ஜூனியர் சேம்பர் (Junior Chamber International - JCI) என்பது 18 முதல் 40 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் தலைமைத்துவத் திறன்சமூகப் பொறுப்புணர்வு மற்றும் தொழில்முனைவோரை மேம்படுத்தும் ஒரு இலாப நோக்கற்ற சர்வதேச தன்னார்வத் தொண்டு அமைப்பாகும். 1944-ல் தொடங்கப்பட்ட இவ்வமைப்பு, 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் உறுப்பினர்களைக் கொண்டுநேர்மறையான சமூக மாற்றத்தை உருவாக்க செயல்படுகிறது. அந்த வகையில் சேலம் JCI அமைப்பின் சேலம் மண்டல தலைவர் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது இந்த விழிப்புணர்வு பதாகை திறக்கும் விழா சேலம் ஜங்ஷன் பிரதான சாலையில் உள்ள சூரமங்கலம் காவல் நிலையம் அருகே நடைபெற்றது. அமைப்பின் மண்டல மீடியா ஒருங்கிணைப்பாளர் கிரித்திகா முன்னிலை வகித்த இந்த நிகழ்வில் அமைப்பின் தேசிய துணை தலைவர் ஜித்தேஷ் அத்வானி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகன ஓட்டிகள் பயணிக்க வேண்டும் மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்கக் கூடாது என் மனம் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பலகையை திறந்து வைத்தார். இது குறித்து பன்னாட்டு ஜூனியர் சேம்பர் அமைப்பின் தேசிய துணை தலைவர் ஜித்தேஷ் அத்வானி மற்றும் சேலம் மண்டல தலைவர் மணிவண்ணன் ஆகியோர்  செய்தியாளர்களிடம் கூறுகையில், 
எந்த நோக்கத்திற்காக இந்த அமைப்பு தொடங்கப்பட்டதோ அந்த நோக்கத்தை நோக்கி இந்த அமைப்பு தொடர்ச்சியாக பயணித்துக் கொண்டிருப்பதாகவும் இளைய சமுதாயத்தினரை மட்டுமே கொண்டு அவர்களை ஊக்குவிக்கும் மொபைல் பல்வேறு நிகழ்வுகளை நடத்தி அவர்களுக்கான தேவைகள் அனைத்தும் பயிற்சிகளின் வாயிலாக பூர்த்தி செய்து கொடுத்து அவர்களை நல்வழிப்படுத்தும் விதமாக ஒவ்வொரு இளைய சமுதாயத்தினரையும் ஆண் பெண் உட்பட அனைத்து தரப்பினரையும் இது இந்தியாவில் மிகச் சிறந்த இடத்தில் அமர வைத்துள்ளது தங்களது அமைப்புக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று பெருமிதம் தெரிவித்தார். இது போக அமைப்பின் எதிர்கால லட்சியம் நோக்கம் என்று பல்வேறு வகையில் இருந்தாலுமே கூட எதிர்கால இந்திய தூண்களை நிர்ணயிக்கும் விதமாக படித்த இளம் வயதினருக்கு தேவையான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து அவர்களை நல்வழிப்படுத்துவது மட்டுமே தங்களது இலக்கு என்றும் அதற்கான காலகட்ட நிர்ணயம் தங்கள் நிர்ணயிக்கவில்லை என்று குறிப்பிட்ட அவர், எதிர்காலத்தில் 100க்கு 1000 சதவீதம் இந்த இலக்கை நாங்கள் எட்டி இந்தியாவில் படித்த இளைஞர்களை நல்வழிப்படுத்துவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் உறுதிப்பட தெரிவித்தார்.
மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் பொங்கல் தொகுப்புடன் புது பானை மற்றும் அடுப்பு வழங்கிட வேண்டும். தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.

மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் பொங்கல் தொகுப்புடன் புது பானை மற்றும் அடுப்பு வழங்கிட வேண்டும். தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் பொங்கல் தொகுப்புடன் புது பானை மற்றும் அடுப்பு வழங்கிட வேண்டும். தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.

மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்கு பகுதியில் பொங்கல் தொகுப்புடன் புதுப்பானை மற்றும் அடுப்பு வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் சேலத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனைத்து மண்பாண்ட தொழிலாளர்களுக்கும் மழைக்கால நிவாரணம் வழங்கிட வேண்டும் மழைக்கால நிவாரணம் ரூபாய் 5 ஆயிரத்தில் இருந்து பத்தாயிரம் ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.ஏரி மற்றும் குளங்களிலிருந்து எவ்வித நிபந்தனையும் இன்றி களிமண் எடுத்து தொழில் செய்வதற்கு அரசு ஆவணம் செய்ய வேண்டும். அனைத்து மண்பாண்ட தொழிலாளர்களுக்கும் மின்சக்கரம் வழங்கி இலவச மின்சாரம் வழங்க வேண்டும் குடியிருக்கும் வீட்டிற்கு குடிமனை பட்டா வழங்கிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 
வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு வாக்களிப்பது எனவும் மன்றத்தில் தங்களின் கோரிக்கைகளுக்காக குரல் எழுப்ப பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து சேலம் மாவட்ட புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது .