Latest

வெள்ளி, 21 நவம்பர், 2025

சேலத்தில் பள்ளி கல்லூரிகளில் நடைபெற்ற தமிழக கலாச்சார விழாவை பொய்ப்பிக்கும் விதமாக நிகழ்ந்த சேலம் முதியோர் இல்லத்தில் நடந்து தமிழக கலாச்சார விழா. பெற்ற பிள்ளைகள் மட்டும் குடும்பத்தாரை விரிந்த நிலையிலும் முதியோர்கள் உற்சாகம்.

சேலத்தில் பள்ளி கல்லூரிகளில் நடைபெற்ற தமிழக கலாச்சார விழாவை பொய்ப்பிக்கும் விதமாக நிகழ்ந்த சேலம் முதியோர் இல்லத்தில் நடந்து தமிழக கலாச்சார விழா. பெற்ற பிள்ளைகள் மட்டும் குடும்பத்தாரை விரிந்த நிலையிலும் முதியோர்கள் உற்சாகம்.

சேலம். 
எஸ் கே சுரேஷ் பாபு. 

சேலத்தில் பள்ளி கல்லூரிகளில் நடைபெற்ற தமிழக கலாச்சார விழாவை பொய்ப்பிக்கும் விதமாக நிகழ்ந்த சேலம் முதியோர் இல்லத்தில் நடந்து தமிழக கலாச்சார விழா. பெற்ற பிள்ளைகள் மட்டும் குடும்பத்தாரை விரிந்த நிலையிலும் முதியோர்கள் உற்சாகம். 

சேலத்தில் போதிமரம் என்கின்ற அறக்கட்டளையின் சார்பில் தற்பொழுது அன்புச் சோலை என்கின்ற பெயரில் முதியோர் ஆதரவற்றோர் இல்லம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதனை இயக்கி வருபவர்கள் தனி குடும்பத்தார். இந்த அறக்கட்டளையின் தலைவராக ரமேஷ் குமார் என்பவரும், செயலாளராக ராஜராஜேஸ்வரி மற்றும் பொருளாளராக பிரேமா உள்ளிட்டோர் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றனர். வழக்கமாக தமிழர்களின் கலாச்சார விழா பாரம்பரிய விழா என்பது பள்ளி கல்லூரிகளில் மட்டுமே நடைபெறுவது வழக்கம். இதனிடையே பெற்றோர்களை கவனிக்க தவறிய சில பிள்ளைகள் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி அவர்களை பார்த்துக் கொள்வதற்கு நேரம் கூட கிடைக்காமல் தொலைக்காட்சி செல்போன் கணவனுடன் ஊர் சுற்றுவது என்ற கொள்கைகளை பின்பற்றிய பெண்களுக்கு ஆதரவாக செயல்படும் பிள்ளைகள் விடுபட்ட அதாவது பெற்றோர்களை கவனிக்காமல் வீட்டை விட்டு துரத்திய பெற்றோர்கள் ஏராளமான ஒரு உள்ளனர். அவர்களை அப்படியே விட்டுவிடட்டும் என்று பொண்டாட்டி பேச்சை கேட்டு விட்ட பிள்ளைகளும் உள்ளனர், அவர்கள் நன்றாக இருக்க வேண்டும் எங்களை பிரிந்தாலும் கூட என்பதன் அடிப்படையில் அவர்களாகவே பிள்ளைகளாகவே அனாதை ஆசிரமத்தில் சேர்த்துவிடும் அவலமும் தமிழகத்தில் தற்பொழுது நிகழ்ந்து கொண்டுதான் உள்ளது. 

அதன் அடிப்படையில் சேலத்தில் போதி மரம் என்ற ஒரு ஆலமரத்தை உருவாக்கி தற்பொழுது ஆதரவற்ற முதியோர்களுக்கு ஆதரவளித்து வரும் இந்த அமைப்பில் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர். யாரிடமும் உதவிகள் கேட்காமலும், யாரிடமும் யாசகத்தை எதிர்பார்க்காமலும், தங்களது சொந்த செலவில் தங்களை நாடிவரும் முதியோர்களை அரவணைத்து அவர்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் செய்து வருவதோடு அவர்களுக்கான பொழுதுபோக்கு உணவு உளித்தவற்றை செய்து வரும் இந்த அறக்கட்டளையின் ஒரு பகுதியாக இன்று தமிழக கலாச்சார திருவிழா என்று சம்பந்தப்பட்ட அந்த முதியோர் இல்லத்தில் நடத்தப்பட்டது.
போதி மரம் அறக்கட்டளையின் தலைவர் ரமேஷ் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் செயலாளர் ராஜ ராஜேஸ்வரி பொருளாளர் பிரேமா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இன்று நடைபெற்ற இந்த தமிழக கலாச்சார விழாவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சேலம் மாவட்ட தலைவர் ராசி சகலவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விழாவினை துவக்கி வைத்து முதியோர்களிடம் பேசி மகிழ்ந்ததுடன் மட்டுமல்லாமல், வயது முதிர்ந்தவர்களை எப்படி பேணி பார்க்க வேண்டும் தனது தந்தையை எப்படி பார்த்துக் கொண்டேன் என்பதையும் அங்கு பதிவிட்டது பாதிக்கப்பட்டு அங்கு அடைக்கலம் நாடியே பெற்றோர்களை கண்கலங்க செய்தது. பாதிக்கப்பட்டவர்களின் அதாவது பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்டு இதுபோன்ற முதியோர் இல்லங்களில் அனுமதிக்கப்பட்ட முதியவர்களை மகிழ்விக்கும் விதமாக சம்பந்தப்பட்ட அன்புச்சோலை ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் தமிழக கலாச்சார விழா என்ற பெயரில் மூத்தோர்களின் பகல் நேர பராமரிப்பு மையத்தில் தமிழக கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையிலான பழமையான தமிழர்களின் நாட்டுப்புற நடனம் கிருஷ்ண பிருந்தாவனம் குழுவினர் வாயிலாக கோலாட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டன. 
ஒரு கட்டத்தில் குழுவினர் மட்டுமே பங்கேற்ற அந்த நிகழ்வில் பாசத்திற்காக ஏங்கும் அந்த தாய்க்குலங்களில் எப்படி சொல்வது என்பது தெரியவில்லை அந்த சங்கலங்களையும் மீறி அவர்களுடன் இணைந்து கோலாட்டம் ஆடியது கண்களில் கண்ணீர் வரவழைப்பது ஆகவே இருந்து.
18 அம்ச கோரிக்கைகளில் வலியுறுத்தி தமிழ்நாடு நில அளவை அலுவலர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தின் ஒரு பகுதியாக, சேலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு கண்டன போராட்டம்.

18 அம்ச கோரிக்கைகளில் வலியுறுத்தி தமிழ்நாடு நில அளவை அலுவலர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தின் ஒரு பகுதியாக, சேலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு கண்டன போராட்டம்.

சேலம். 
எஸ்.கே.சுரேஷ் பாபு.

18 அம்ச கோரிக்கைகளில் வலியுறுத்தி தமிழ்நாடு நில அளவை அலுவலர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தின் ஒரு பகுதியாக, சேலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு கண்டன போராட்டம்.

தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிணைப்பு மாநில மையத்தின் சார்பில் கடந்த 1ம் தேதி மதுரையில் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 18ஆம் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம் மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில்  வேலை நிறுத்த போராட்டத்தை துவங்கிய தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள், வேலை நிறுத்த போராட்டத்தில் ஒரு பகுதியாக களப்பணியாளர்களின் பணி சுமையை போக்கிட பணிகளை முறைப்படுத்த வேண்டும் தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அளவர் பதவிகளை மீளப் பெற்றிட வேண்டும் என்பன உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்ட மையத்தின் சார்பில் சேலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கண்டன காத்திருப்பு  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



தமிழ்நாடு நில அளவைo அலுவலர்கள் ஒன்றிணைப்பின் சேலம் மாவட்ட தலைவர் சுதாகர் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்  மாவட்ட செயலாளர் செல்லமுத்து, துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் பொருளாளர் இளங்கோ உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் அர்த்தனாரி மற்றும் மாவட்டத் தலைவர் அருள் பிரகாஷ்  உள்ளிட்ட பல்வேறு அரசு துறை அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு நில அளவை அதிகாரிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றினார். தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒரு ஆதாரம் மற்றும் ஒப்பந்த முறை பணி நியமனப்பை முற்றிலும் கைவிட வேண்டும், காலியாக உள்ள  நில அளவர் பணியிடங்களை நிரப்பிட வேண்டும், ஊதிய முரண்பாடுகளை கலைஞர் வேண்டும் மற்றும் வட்டம் குறுவட்டம் நகர சார் ஆய்வாளர் ஆய்வாளர் ஓடிட்ட புதிய பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சேலம் மாவட்ட மையத்தின்மாவட்ட தலைவர் சுதாகர்  செய்தியாளிடம் கூறுகையில் நவம்பர் ஒன்றாம் தேதி மதுரையில் நடைபெற்றது.
மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடரும் வேலை நிறுத்த போராட்டத்தின் ஒரு பகுதியாக தற்பொழுது சேலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கண்டன காத்திருப்பு போராட்டம் நடைபெற்றுthuவருவதாகவும், காரணமாக தமிழகத்தில் பட்டா வழங்குதல் மற்றும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீதான உரிய நடவடிக்கை எடுப்பதில் மிகப்பெரிய பாதிப்பு எழுந்துள்ளதாக குறிப்பிட்ட அவர் தங்களது நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு பரிசீலித்து உடனடியாக மாநில நிர்வாகிகளை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். தங்களது போராட்டத்திற்கு தமிழக அரசு செவி சாய்க்காத பட்சத்தில் மாநில மையத்தின் ஒப்புதலோடு அடுத்த கட்ட போராட்டங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார். இந்த போராட்டத்தில் பல்வேறு சங்கங்களை சார்ந்த நிர்வாகிகள்  உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

வியாழன், 20 நவம்பர், 2025

மும்பையிலிருந்து பவானிக்கு கடத்தி கொண்டு வந்த 10 நாள் பெண் குழந்தை மீட்பு – பவானியை சேர்ந்த நபர் கைது... ஈரோடு மாவட்டத்தில் தொடரும் குழந்தை கடத்தல்.. !

மும்பையிலிருந்து பவானிக்கு கடத்தி கொண்டு வந்த 10 நாள் பெண் குழந்தை மீட்பு – பவானியை சேர்ந்த நபர் கைது... ஈரோடு மாவட்டத்தில் தொடரும் குழந்தை கடத்தல்.. !

மும்பையிலிருந்து பவானிக்கு கடத்தி கொண்டு வந்த 10 நாள் பெண் குழந்தை மீட்பு – பவானியை சேர்ந்த நபர் கைது... ஈரோடு மாவட்டத்தில் தொடரும் குழந்தை கடத்தல்.. !

ஈரோடு மாவட்டம் பவானி மீன் மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் குழந்தை கடத்தி கொண்டு வந்து விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது என்கிற ரகசிய தகவல் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு கிடைத்தது.

இதையடுத்து பவானி போலீசார், ஈரோடு சைல்டு லைன் அதிகாரிகளுடன் இணைந்து சம்பந்தப்பட்ட வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு பிறந்து 10 நாட்களே ஆன பெண் குழந்தை இருப்பது தெரியவந்தது.

உடனடியாக அந்த வீட்டின் வசிப்பாளர் பரவீன் (31) என்பவரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். 
விசாரணையில் —
மும்பையில் பிறந்த 10 நாள் பெண் குழந்தையை இரண்டு பெண்கள் பவானிக்கு கொண்டு வந்து, விற்பனைக்காக பரவீன் இடம் ஒப்படைத்தது உறுதி செய்யப்பட்டது.

இந்த குழந்தையை அவர்கள்
• பெற்றோரிடம் மூளைச் செலவு செய்து வாங்கி வந்தார்களா?
• அல்லது நேரடியாக கடத்தி வந்தார்களா?
என்பதையும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மீட்கப்பட்ட குழந்தை பாதுகாப்பு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டது. பரவீன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

குழந்தையை பவானிக்கு கொண்டு வந்த இரு பெண்களை பிடிக்க பவானி காவல் துறை அதிகாரிகள் தற்போது மும்பைக்கு விரைந்து செல்கின்றனர்.

இதற்கு முன்பும்,
• பெங்களூரில் இருந்து 8 மாத பெண் குழந்தை கடத்தி வந்த வழக்கில் இரண்டு பெண்கள் கைது,
• சித்தோடு பகுதியில் ஆந்திராவைச் சேர்ந்த தொழிலாளர்களின் 1.5 வயது பெண் குழந்தை கடத்தப்பட்டு 25 நாட்களில் மீட்பு போன்ற சம்பவங்கள் நடந்துள்ள நிலையில்,

இப்போது மும்பையில் இருந்து 10 நாள் குழந்தை பவானியில் மீட்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரவில் திடீர் ஆய்வு செய்தார் அமைச்சர் திரு.சு.முத்துசாமி...!

இரவில் திடீர் ஆய்வு செய்தார் அமைச்சர் திரு.சு.முத்துசாமி...!

மாண்புமிகு அமைச்சர் திரு.சு.முத்துசாமி அவர்களுடன், ஈரோடு மாவட்டம், சித்தோடு ஆவின் பால்பண்ணை வளாகத்தில் பால்வளத்தந்தை ஐயா திரு.எஸ்.கே.பரமசிவன் அவர்களின், முழு திருவுருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளதை கழக துணைப் பொதுச்செயலாளர் மாண்புமிகு அமைச்சர்  திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கே.இ.பிரகாஷ் அவர்கள், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.சி.சந்திரகுமார் அவர்கள், இணை இயக்குநர் (நினைவகங்கள், சென்னை) திரு.தமிழ்செல்வராஜன் அவர்கள் உட்பட பலர் உடனிருந்தார்கள்.

சபா செய்திகளுக்கான 
பவானி குட்டி
மும்பையில் இருந்து பவானிக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட பிறந்து 10 நாட்களே பெண் குழந்தை மீட்பு..!

மும்பையில் இருந்து பவானிக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட பிறந்து 10 நாட்களே பெண் குழந்தை மீட்பு..!

மும்பையில் இருந்து பவானிக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட பிறந்து 10 நாட்களே பெண் குழந்தை மீட்பு

வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை

பவானி, நவ. 20-

ஈரோடு மாவட்டம் பவானி மீன் மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் குழந்தை கடத்தி கொண்டு வரப்பட்டு  விற்பனைக்கு வைக்கப்பட்டு இருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

அதன் பேரில் பவானி போலீசார் ஈரோடு சைல்டு லைன் அதிகாரிகள் பவானி மீன் மார்க்கெட் பகுதியில் உள்ள சம்பந்தப்பட்ட வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வீட்டில் பிறந்து 10 நாட்களே ஆனா பெண் குழந்தை இருப்பது தெரியவந்தது. 

இந்த அடுத்து வீட்டில் இருந்த பிரவீன் (31) என்ற வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

மும்பையில் இருந்து பிறந்து 10 நாட்களே ஆனா .
 பெண் குழந்தையை இரு பெண்கள் பவானிக்கு கொண்டு வந்து பிரவீன் இடம் விற்பனைக்கு கொடுத்தது தெரியவந்தது. அந்த  குழந்தையை அவர்கள் பெற்றோர்களின் மூளை செலவை செய்து வாங்கி வந்தார்களா? அல்லது கடத்தி வந்தார்களா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை அடுத்து அந்த  குழந்தையை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து பிரவீன் இடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பாக பெங்களூரில் இருந்து 8 மாத பெண் குழந்தை கடத்தி வரப்பட்ட வழக்கில் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

 அதேபோல் கடந்த மாதம் சித்தோடு பகுதியில்  தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் கீழ் உறங்கிக் கொண்டிருந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த துடைப்பம் பின்னும் தொழிலாளர்களின் ஒன்றரை வயது பெண் குழந்தை கடத்தப்பட்டு 25 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டு கணவன் -மனைவி இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மும்பையிலிருந்து பிறந்து 10 நாட்களே ஆனா ஆண் குழந்தை கடத்தி வரப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சபா செய்திகளுக்காக
பவானி குட்டி..
அஇஅதிமுக  எழுச்சி பயணத்திக்கான அனுமதி கோரி மனு...

அஇஅதிமுக எழுச்சி பயணத்திக்கான அனுமதி கோரி மனு...

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான அவர்கள், கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதியில் எழுச்சி பயணம் (Political Awareness/Revival Yatra) மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்

இப்பயணத்தை நடத்துவதற்கான தேதி, பாதை மற்றும் நிகழ்ச்சி திட்டங்கள் அனைத்தும் முடிவுசெய்யப்பட்ட நிலையில், பொதுமக்கள் கூட்டம், ஊர்வலம், வாகனப் பேரணி போன்ற அரசியல் நிகழ்வுகளை நடத்த, காவல் துறையின் அனுமதி அவசியம் என்பதால், அதற்கான அதிகாரப்பூர்வ செயல்முறை தொடங்கப்பட்டுள்ளது.
அனுமதி கோரிக்கை மனு வழங்கப்பட்டது

இந்த எழுச்சி பயணத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து ஒழுங்கு, சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு போன்றவற்றை கருத்தில் கொண்டு, அதிமுக நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் தலைவர்கள் இணைந்து,
 கூடுதல் மாவட்ட கண்காணிப்பாளர் (Additional District Superintendent of Police) அவர்களை சந்தித்து ஒரு முறையீட்டு மனுவை வழங்கினர்.
மனுவில் குறிப்பிடப்பட்டிருக்கும் அம்சங்கள் பொதுவாக:

எழுச்சி பயணத்தின் தேதி மற்றும் நேரம்
தொடக்கம் மற்றும் முடிவு செய்யப்படும் இடங்கள்
பங்கேற்கும் கட்சித் தலைவர்கள் பற்றிய விவரம்

எதிர்பார்க்கப்படும் பொதுமக்கள் திரளின் மதிப்பீடு

போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள்

சாலைப் பயண பாதை

சட்டம்-ஒழுங்கு சிக்கல்கள் இல்லாமல் நிகழ்ச்சி நடைபெற தேவையான அமைப்புகள்

அரசியல் கட்சிகள் பொதுவெளியில் நடத்தும் பெரிய நிகழ்ச்சிகளுக்கு:
பொதுமக்கள் பாதுகாப்பு
வாகன போக்குவரத்து கட்டுப்பாடு
சாத்தியமான மோதல்களைத் தடுக்கும் நடவடிக்கைகள்

அரசியல் கூட்டங்களுக்கு விதிக்கப்பட்ட அரசு/தேர்தல் ஆணைய வழிமுறைகள்

இவை அனைத்தையும் பின்பற்றுவதை உறுதிப்படுத்தும் விதமாக காவல் துறையை அறிவிப்பது கட்டாயமாகிறது.

தொடர்ந்த நடவடிக்கைகள்
மனு அளிக்கப்பட்ட பிறகு, 
காவல் துறை பாதையை ஆய்வு செய்யும்
பாதுகாப்பு ஏற்பாடுகளை திட்டமிடும்
தேவையான நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கும் அனுமதி கிடைத்ததன் பின்னர் மட்டுமே எழுச்சி பயணம் அதிகாரப்பூர்வமாக நடைபெறும்.
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் லஞ்ச வீடியோ பரபரப்பு...!

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் லஞ்ச வீடியோ பரபரப்பு...!

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் லஞ்ச வீடியோ பரபரப்பு — பிட்னஸ் சர்டிபிகேட்டுக்கு மாணவிகளின் பெற்றோரிடம் பணம் கோரப்பட்டதாக குற்றச்சாட்டு..!

ஈரோட்டையை சேர்ந்த இரண்டு என்.சி.சி. மாணவிகள் உடல் தகுதி சான்றிதழ் (பிட்னஸ் சர்டிபிகேட்) பெறுவதற்காக நேற்று அரசு தலைமை மருத்துவமனைக்கு சென்றதாக கூறப்படுகிறது. தேவையான சோதனைகளுக்காக அவர்கள் கண் பரிசோதனை மையத்துக்கு செல்ல, அங்கு பணியாற்றிய ஜி.எச். ஊழியர் ஒருவர் அவர்களிடம் தொடர்பு கொண்டதாக தகவல்

அப்போது அந்த ஊழியர், மருத்துவ சான்றிதழில் டாக்டரின் கையெழுத்து பெற வேண்டுமெனில் பணம் கொடுக்க வேண்டும் என்று இரு மாணவிகளின் பெற்றோரிடம் கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து சான்றிதழைப் பெறும் நோக்கத்தில், பெற்றோர் லஞ்சம் வழங்கும் காட்சி வீடியோவாக பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரல் ஆகி வருகிறது

இவ்வீடியோ வெளிவந்ததை அடுத்து, பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது
“லஞ்சம் வாங்கிய அந்த ஊழியர் மட்டுமல்ல, இதில் தொடர்புடைய டாக்டர்மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்

அரசு மருத்துவமனைக்குள்ளேயே இப்படிப்பட்ட சம்பவம் நடந்து இருப்பது பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
ஈரோட்டில் இந்த விடியம் தற்போது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி, மருத்துவமனை நிர்வாகத்தையும் பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

பவானி குட்டி.