Latest

செவ்வாய், 25 நவம்பர், 2025

முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் பயணமாக ஈரோட்டுக்கு இன்று வருகிறார்.

முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் பயணமாக ஈரோட்டுக்கு இன்று வருகிறார்.

முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் பயணமாக ஈரோட்டுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) வருகிறார். இதற்காக சென் னையில் இருந்து இன்று விமானத்தில் புறப்பட்டு கோவை செல்கிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மாலை 6.30 மணிக்கு ஈரோடு புறப்படுகிறார்.

ஈரோடு மாவட்ட எல்லையான விஜயமங்கலம் சுங்கச் சாவடி அருகே ஈரோடு மாவட்ட தி.மு.க. சார்பில் முதல் - அமைச்சர் மு.க.ஸ்டா லினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. இது போல் பெருந்துறை மற்றும் ஈரோடு மேட்டுக்கடை பகுதி களில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிர மாண்ட வரவேற்பு அளிக் கப்படுகிறது. இவ்வாறு வழி நெடுகிலும் ஈரோடு தெற்கு, ஈரோடு மத்திய மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க.வினர் வரவேற்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

அதன்பின்னர் இரவு 8.30 மணிக்கு ஈரோடு காலிங்கரா யன் விருந்தினர் மாளிகைக்கு வந்துசேருகிறார். அங்கு இரவு தங்கி ஓய்வு எடுக்கிறார்.
ரூ.605 கோடியில் திட்டங்கள்

காலிங்கராயன் விருந்தினர் மாளிகையில் இருந்து நாளை (புதன்கிழமை) காலை 9.15 மணிக்கு புறப்படும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருந்துறை ரோடு, ரிங் ரோடு, பூந்துறை ரோடு வழி யாக ஜெயராமபுரம் செல்கி றார். காலை 10 மணிக்கு அங்கு புதிதாக அமைக்கப் பட்டுள்ள பொல்லான் உரு வச்சிலையை திறந்து வைத்து, அரங்கையும் திறந்து வைக்கிறார். அங்கிருந்து ஓடாநிலை. செல்லும் அவர், காலை 10.20. மணிக்கு தீரன் சின்னமலை நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்.

அங்கிருந்து புறப்படும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின் காலை 10.45 மணிக்கு சோலாரில் புதிய பஸ்நிலைய வளாகத்தில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்கிறார். விழாவுக்கு தலைமை தாங்கி, ஈரோடு மாவட்டத்தில் முடிவுற்றதிட் லு டப்பணிகள், புதிய திட்டங் கள் என ரூ.605 கோடி மதிப் பிலான வளர்ச்சித்திட்ட பணிகளை தொடங்கி வைக் கிறார்.
நலத்திட்ட உதவிகள்

விழாவில் பல்வேறு அரசுத் துறைகள் சார்பில் 1 லட்சத்து 84ஆயிரத்து 491பேருக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார். காலை 11.45 மணிக்கு அரசு விழா முடிந்து அங்கிருந்து புறப்பட்டு ஈரோடு காலிங்கராயன் விருந்தினர் மாளிகைக்கு வருகிறார். 
நலத்திட்ட உதவிகள்

விழாவில் பல்வேறு அரசுத் துறைகள் சார்பில் 1 லட்சத்து 84 ஆயிரத்து 491பேருக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார். காலை 11.45 மணிக்கு அரசு விழா முடிந்து அங்கிருந்து புறப்பட்டு ஈரோடு காலிங்கராயன் விருந் தினர் மாளிகைக்கு வருகிறார். அங்கு மதிய உணவு சாப்பி டும் முதல்-அமைச்சர் மாலை வரை ஓய்வெடுக்கிறார்.

மாலை 4.45 மணிக்கு காலிங்கராயன் மாளிகையில் இருந்து புறப்பட்டு சித்தோடு ஆவின் வளாகத்தில் அமைக் - கப்பட்டுள்ள முன்னாள் எம். பி.யும் கூட்டுறவு பால் பண்ணை நிறுவனருமான எஸ்.கே.பரமசிவம் உருவச்சி லையை மாலை 5.30 மணிக்கு திறந்து வைக்கிறார். பின்னர் சித்தோட்டில் நடைபெறும் திருமண விழாவில் பங்கேற்கும் அவர் மாலை 6.20 மணிக்கு கோவை புறப்பட்டு செல்கிறார். இரவு கோவை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை சென்று சேருகிறார்.

முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு வரு கையை முன்னிட்டு அவர் வந்து செல்லும் வழி நெடுகி லும் தி.மு.க. கொடிகள் கட்டப்பட்டுள்ளன.

பாதுகாப்பு பணியில் 3,100 போலீசார்
தனயனுக்கான பாராட்டு விழாவில் நெகிழ்ந்த நிகழ்வு. தன் மகனை சான்றோன் எனக்கேட்ட பெற்றோர்கள் கண் கலங்கிய தருணம். சேலம் சோனா கல்லூரியில் அரங்கேறியது.

தனயனுக்கான பாராட்டு விழாவில் நெகிழ்ந்த நிகழ்வு. தன் மகனை சான்றோன் எனக்கேட்ட பெற்றோர்கள் கண் கலங்கிய தருணம். சேலம் சோனா கல்லூரியில் அரங்கேறியது.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

தனயனுக்கான பாராட்டு விழாவில் நெகிழ்ந்த நிகழ்வு. தன் மகனை சான்றோன் எனக்கேட்ட பெற்றோர்கள் கண் கலங்கிய தருணம். சேலம் சோனா கல்லூரியில் அரங்கேறியது.

சோனா தொழில்நுட்பக் கல்லூரிக்கு தேசிய அளவில்  இரண்டு விருதுகள்
 கேப்ஜெமினி நிறுவனம் நடத்திய போட்டியில் உயரிய விருது மற்றும் ரூ1.லட்சம் பரிசு தொகை வென்று சோனா கல்லூரி மாணவன் சாதனை.
சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரி எலக்ட்ரிக்கல் & எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் (EEE) துறையின்  3 ஆம் ஆண்டு மாணவரான திரு. பி. விஜய், நாட்டின் சிறந்த மாணவர்களை தேர்வு செய்யும் கேப்ஜெமினி பிராண்ட் குவெஸ்ட் 2025 போட்டியில் வெற்றியாளராகத் திகழ்ந்துள்ளார். இப்போட்டியின் இறுதி மேடைச் சுற்று நவம்பர் 21, 2025 அன்று புனேயில் உள்ள கேப்ஜெமினி வளாகத்தில் நடைபெற்றது இந்த நிகழ்வில் உயரிய விருது மற்றும் ரூ1.லட்சம் பரிசு தொகையை கல்லூரியின் மாணவர் விஜய்-க்கு வழங்கப்பட்டது மேலும் சோனா கல்லூரிக்கு சிறந்த பங்கேற்பாளர்கள் விருது கல்லூரியின் முதல்வர் எஸ்.ஆர்.ஆர்.செந்தில்குமார்-க்கு  வழங்கப்பட்டது. சோனா கல்லூரியில் நடைப்பெற்ற பாராட்டு விழாவில் சோனா கல்வி நிறுவனத்தின் தலைவர் வள்ளியப்பா, கல்லூரியின் முதல்வர். செந்தில்குமார், துறை தலைவர் பத்மா ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்க்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி கெளரவித்தனர். மாணவர்களின் உளமார்ந்த ஆர்வம், ஆழமான அறிவு மற்றும் பகுப்பாய்வு திறன்களை மதிப்பிடுவதற்காக இந்தப் போட்டி நடத்தப்படுகின்றன.
கேப்ஜெமினி நிறுவனத்தின் வரலாறு, வளர்ச்சி, வணிக துறைகள், தொழில்நுட்ப தீர்வுகள், சந்தை நிலை, போட்டியாளர்கள் மற்றும் நிதிநிலை போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து மாணவர்கள் எவ்வாறு புரிந்துகொண்டுள்ளனர் என்பதே இத்தேர்வின் முக்கிய அம்சமாகும். எனவும் மேலும் நாட்டின் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட போட்டியாளர்களில் இருந்து, விஜய் தன்னுடைய தனி திறனை வெளிப்படுத்தி முன்னிலை பெற்றுள்ளார் என கல்லூரியின் முதல்வர் செந்தில்குமார் தெரிவித்தார்.
கல்லூரியின் தலைவர் வள்ளியப்பா மற்றும் கல்லூரியின் முதல்வர் ஆகியோர் பேசும் பொழுது ஒரு சாமானிய பெற்றோரின் மகன் இந்த அரிய சாதனையை படைத்து இந்த விருதினை பெற்றது பெருமைக்குரியதாகும் மேலும் சோனா கல்லூரிக்கு சிறந்த பங்கேற்பாளர்கள் விருது என இரண்டு உயரிய விருதுகளை பெற்றுள்ளது  சிறப்புடையதாகும் எனவும் அவர்கள் தெரிவித்த போது ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் என கேட்ட தாய் என்ற வள்ளுவரின் வார்த்தைகளை மெய்ப்பிக்கும் விதமாக தன்னை அறியாமல் பெற்றோர்கள் கண்கலங்கியது அங்கு காண முடிந்தது. 
மாணவர் விஜய் அவர் கலந்து கொண்டு போட்டியில் ஒரு லட்ச ரூபாய் கடந்து கொண்டு வெற்றி பெற்று இருந்தாலுமே கூட மாணவனின் திறமை தனித்துவம் அறிவுத்திறன் ஆகியவற்றை பாராட்டி கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் சம்பந்தப்பட்ட மாணவனுக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என கல்லூரியின் தலைவர் வள்ளியப்பா தெரிவித்தது அங்கு இருந்தவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிகழ்வில் எலக்ட்ரிக்கல் & எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் துறையின்  தலைவர் பத்மா, வேலைவாய்ப்பு துறை இயக்குனர் சரவணன், உள்ளிட்ட பேராசிரியர்கள் மற்றும் வெற்றி பெற்ற மாணவனின் பெற்றோர் ஆகியோர் பங்கேற்றனர்.

திங்கள், 24 நவம்பர், 2025

தமிழக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 17 சதவிகிதமாக உள்ள நெல் ஈரப்பத  கொள்முதலை 22 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி மத்திய அரசுக்கு கோரிக்கை.

தமிழக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 17 சதவிகிதமாக உள்ள நெல் ஈரப்பத கொள்முதலை 22 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி மத்திய அரசுக்கு கோரிக்கை.

சேலம். 
எஸ் கே சுரேஷ் பாபு.

தமிழக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 17 சதவிகிதமாக உள்ள நெல் ஈரப்பத  கொள்முதலை 22 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி மத்திய அரசுக்கு கோரிக்கை.

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் தற்போது குறுவை நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக விவசாயிகள் உற்பத்தி செய்த நெல் மணிகள் மழையில் நனைந்தவாறு  உள்ளது. 
மத்திய அரசு 17% ஈரப்பதம் உள்ள நெல்லை மட்டுமே கொள்முதல் செய்ய அனுமதி கொடுத்து வந்த நிலையில், தற்போது தமிழ்நாடு அரசு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நெல் கொள்முதல் ஈரப்பதத்தை 22% ஆக  உயர்த்த மத்திய அரசிடம் அனுமதி  கேட்டது ஆனால்  மத்திய அரசு 22%  ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதி தரவில்லை.   தமிழக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு உடனடியாக  மறு பரிசீலனை செய்து 22% இருப்பதும் உள்ள நிலை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் இந்த அறிக்கையின் மூலம் மத்திய அரசை வலியுறுத்தி உள்ளார்.
தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 6 பேர் பலி!

தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 6 பேர் பலி!

தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 6 பேர் பலி!

தென்காசி அருகே 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பெண், ஒரு ஆண் என 6 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து, விபத்தில் காயமடைந்தவர்களில் 5க்கும் மேற்பட்டோர் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

தென்காசி அருகே 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி – மதுரை சாலையில் அச்சம்பட்டி அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில், இரண்டு பேருந்துகளிலும் பயணித்த 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து, படுகாயமடைந்த அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தென்காசியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றுகொண்டிருந்த பேருந்தும் கோவில்பட்டியில் இருந்து தென்காசி நோக்கி வந்த பேருந்தும் மோதி விபத்து நிகழ்ந்துள்ளது தெரியவந்துள்ளது.
தொடர்ந்து, காயமடைந்தவர்களில் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளவர்கள் நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்படுகிறன்றனர். இடைக்கால் அருகே துரைசாமிபுரம் என்ற இடத்தில் இந்த விபத்து நடக்கவே, அருகில் இருந்த கிராமத்தை சேர்ந்த பலரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயமடைந்தவர்களை மீட்டு உதவியுள்ளனர். மேலும், உடனடியாக காவல்துறைக்கும், ஆம்புலன்ஸூக்கும் விபத்து குறித்து தகவல் தெரிவித்துள்ளனர்.

பலி எண்ணிக்கை உயரும் அபாயம்:
உடனடியாக சம்பவ இடத்திற்கு 108 ஆம்புலன்ஸ், தனியார் தொண்ட நிறுவன ஊழியர்களும் விரைந்தனர். அவர்கள் விபத்து நடந்த இடத்தில் இருந்து காயமடைந்தவர்களை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனை அழைத்துச் சென்று வருகின்றனர். அதோடு, காயடைந்தவர்களில் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
கனமழையால் சாலைகள் துண்டிப்பு:
ஏற்கெனவே, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக மிக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அந்த மாவட்டங்களில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி, முக்கிய சாலைகள் கூட துண்டிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, காரையோர பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனை அழைத்துச் செல்வது என்பதே சற்று கடினமான காரியமாகியுள்ளது.

ஞாயிறு, 23 நவம்பர், 2025

14-ஆம் ஆண்டு தலைசிறந்த ஆசிரியர் விருது விழா

14-ஆம் ஆண்டு தலைசிறந்த ஆசிரியர் விருது விழா

14-ஆம் ஆண்டு தலைசிறந்த ஆசிரியர் விருது விழா – ஈரோடு

JCI ஈரோடு எக்ஸெல், ஈரோடு எக்ஸெல் பதிப்பகம் மற்றும் வேளாளர் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரி ஆகிய மூன்று அமைப்புகள் இணைந்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் தலைசிறந்த ஆசிரியர்களுக்கான 14-வது ஆண்டு விருது வழங்கும் விழா இன்று திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரி கஸ்தூரீபா கலையரங்கில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த விழாவில் இந்திய உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மற்றும் கேரள மாநில முன்னாள் ஆளுநர் நீதியரசர் P. சதாசிவம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 324 ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார்.
விழாவில் வேளாளர் கல்வி நிறுவனங்களின் செயலாளர் மற்றும் தாளாளர் சந்திரசேகர், டிரஸ்டி யுவராஜா மற்றும் பொறியியல் கல்லூரி முதல்வர் ஜெயராமன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

ஈரோடு, நாமக்கல், திருப்பூர் மாவட்டங்களில் உள்ள வணிக நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் பற்றிய 10,000-க்கும் மேற்பட்ட தகவல்களை கொண்ட JCI Excell Yellow Pages 2025 புத்தகத்தை நீதியரசர் P. சதாசிவம் வெளியிட்டார்.
விழா ஏற்பாடுகளை ஈரோடு எக்ஸெல் பதிப்பக CEO முருகானந்தம், JCI ஈரோடு எக்ஸெல் தலைவர் நம்பி ஆரூரன், எக்ஸெல் எடுகாம் இயக்குநர் ராஜேந்திர பிரசாத், உதவித்தலைவர் பிரபாகரன், Women Empowerment Cell மற்றும் JCI உறுப்பினர்கள் சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.
சேலத்திற்கு அருகே  அதிநவீன உடற்பயிற்சி நிலையம் திறப்பு விழா. பாமக வன்னியர் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் கார்த்தி துவக்கி வைத்தார்.

சேலத்திற்கு அருகே அதிநவீன உடற்பயிற்சி நிலையம் திறப்பு விழா. பாமக வன்னியர் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் கார்த்தி துவக்கி வைத்தார்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலத்திற்கு அருகே  அதிநவீன உடற்பயிற்சி நிலையம் திறப்பு விழா. பாமக வன்னியர் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் கார்த்தி துவக்கி வைத்தார். 

சேலத்தை அடுத்துள்ள சர்க்கார் கொல்லப்பட்டி, சாமியார் கடை பேருந்து நிறுத்தம் அருகே அதிநவீன முறையில் மாஸ்டர்ஸ் ஜிம் பிட்னஸ் ஸ்டுடியோ என்ற பெயரில் உடற்பயிற்சி 3 வது மையம் திறப்பு விழா நடைபெற்றது. பாமக முன்னால் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ்  அவர்களின் நல்லாசியுடன் துவக்கப்பட்ட இந்த புதிய அதி நவீன உடற்பயிற்சி  மையத்தின் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு, பயிற்சி மையத்தின் உரிமையாளர் இளங்கோ  தலைமை தாங்கினார். பயிற்சி மையத்தின் திறப்பு விழா நிகழ்ச்சியில், பாமக வன்னியர் சங்க மாநில ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கார்த்தி சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி புதிய உடற்பயிற்சி மையத்தினை துவக்கி வைத்தார். 
தொடர்ந்து பயிற்சி மையத்தினை பார்வையிட்ட அவர் உடற்பயிற்சியையும் மேற்கொண்டு அசத்தினார்.
சேலம் மாநகரில் எத்தனையோ உடற்பயிற்சி நிலையங்கள் இறந்தபோதிலும், தற்பொழுது சேலத்திம் சர்க்கார் கொல்லப்பட்டியில் புதிதாக துவங்கப்பட்டுள்ள  மாஸ்டர்ஸ் ஜிம் பிட்னஸ் ஸ்டுடியோ பயிற்சி மையத்தில், வழக்கமான உடற்பயிற்சிகளுடன், கூடுதலாககொழுப்பு குறைப்பு, கார்டியோ பயிற்சி, எடை பயிற்சி, தசை பயிற்சி, தனிப்பட்ட பயிற்சி, உணவு திட்டமிடல் ஆகிய பயிற்சிகளும், இது போக தரமான உபகரணங்கள், சிறந்த பயிற்சி, விளையாட்டு சார்ந்த பயிற்சி,  உடற்பயிற்சி மற்றும் ஆற்றல் நிலைகள், பாடி பில்டர் & பவர் லிஃப்டிங் பயிற்சி ஆகியவை வழங்கப்பட உள்ளதாக பயிற்சி மையத்தின் உரிமையாளர் இளங்கோ தெரிவித்தார். 

அதுமட்டுமல்லாமல் இந்த பயிற்சி மையத்தில் உடற்பயிற்சி மேற்கொள்ள ஆண்கள், பெண்களுக்கு மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு என தனித்தனியாக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
இந்த பயிற்சி மையத் துவக்க விழாவில் பாமக மாவட்ட செயலாளர் சரவண கந்தன் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் குமார் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தங்கராசு மேற்கு தொகுதி பொறுப்பாளர் சண்முகம் அமைப்பு செயலாளர் சிவா மற்றும் பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பயிற்சி மைய உரிமையாளருக்கும், அவர்தம் குடும்பத்தாருக்கும்தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

சனி, 22 நவம்பர், 2025

சேலத்தில் 56 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட ராஜ முருகன் சிலை பிரதிஷ்டை. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்த குடம் எடுத்து சுவாமி தரிசனம்.

சேலத்தில் 56 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட ராஜ முருகன் சிலை பிரதிஷ்டை. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்த குடம் எடுத்து சுவாமி தரிசனம்.

சேலம். 
எஸ் கே சுரேஷ் பாபு.

சேலத்தில் 56 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட ராஜ முருகன் சிலை பிரதிஷ்டை. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்த குடம் எடுத்து சுவாமி தரிசனம். 

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே பேச விளக்கு கிராமம் அணை மேடு பகுதியில் உள்ள அருள்மிகு ராஜ முருகன் ஆசிரமம் 56 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. 56 ஆண்டுகளை நினைவு படுத்தும் விதமாக ஆசிரம வளாகத்தில் பிரம்மாண்ட முருகன் சிலை அமைக்க திட்டமிட்டு அதற்கான படியும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தொடங்கியது. ஆனால் முருகப்பெருமானுக்கு அழகன் முருகன் என்ற பெயரும் உண்டு. அந்த அழகை சீர்குலைக்கும் விதமாக அவளைச் சின்னமாக முதற்கட்டமாக அமைக்கப்பட்ட சிலை அமைந்து தமிழகத்தில் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியது. இதனை அடுத்து சிற்பக் கலை மாமணி விருது பெற்ற ஸ்தபதிகள் முருகன் மற்றும் அசோகன் ஆகியோரின் வாயிலாக ஆசிரம நிர்வாகம் 56 அடி உயரத்தில் அருள்மிகு ஸ்ரீ ராஜமுருகன் திருவுருவச் சிலை அமைக்க முடிவு செய்தது. தனது ஒரு ஆண்டுக்கு முன்பு துவங்கப்பட்ட இந்த சிலை அமைக்கும் பணி கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறைவு பெற்று அழகன் முருகன் என்ற பெயருக்கு ஏற்ப மிக கம்பீரமான முறையில் ராஜா அலங்காரத்தில் காட்சி அமைக்கும் விதமாக அமைக்கப்பட்டு ஆசிரம நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்களையே மிகுந்த வரவேற்பினையும் மகிழ்ச்சியினையும் ஏற்படுத்தியது என்றால் அது மிகை அல்ல. 
இந்த நிலையில், சேலம் மாவட்டத்தில் இரண்டாவது அதிக உயரம் கொண்ட மிகப் பிரமாண்ட முருகப்பெருமானுக்கு நாளை குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இதனிடையே கடந்த 17 ஆம் தேதி முகூர்த்தக்கால் நடுதல் முளைப்பாரி போடுதல் கங்கணம் கட்டுதலுடன் தொடங்கிய கும்பாபிஷேக விழாவில் இன்று காலை மங்கல இசையுடன் கணபதி ஹோமம் நடைபெற்றன. தொடர்ந்து பக்தர்கள் தீர்த்த குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த பகுதியின் முக்கிய வீதிகளின் வழியாக நடைபெற்ற தீர்த்தக்கோட ஊர்வலமானது திருக்கோவிலை அடைந்ததும் விநாயகர் பூஜை புண்ணியாகும் வாஸ்து சாந்தி மிருத்சங்கரனம் கும்பலங்காரம் முதல் கால யாக பூஜைகள் பூர்ணாஹுதியும் நடைபெற்றன. திருக்கோவிலைடைந்து தீர்த்தக்கரை ஊர்வலம் ஆனது நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் 56 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட அருள்மிகு ஸ்ரீ ராஜமுருகன் பாதத்தில் தீர்த்தத்தை ஊற்றி வணங்கி வழிபட்டு சென்றனர். இதனை தொடர்ந்து நாளை இரண்டாம் காலை ஆக பூஜைகள் நாடி சந்தானம் பரிசாஹுதி பூர்ணாஹுதி மற்றும் தீபாராதனை உடன் 56 அடி உயரம் கொண்ட அழகன் எம்பெருமான் ஸ்ரீ ராஜ முருகப்பெருமானுக்கு மகா கும்பாபிஷேகம் மகா அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனைகள் நடைபெற உள்ளன. 
இதனை அடுத்து ஆசிரம நிர்வாகத்தின் சார்பில் நாளை விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரம நிர்வாகிகள் ஞானகுரு வெங்கடாசலம் சுவாமிகள் ராஜேந்திரன் மற்றும் கண்ணன் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.