சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
வருவாய் கிராம ஊழியர்களின் நியாயமான கோரிக்கையை தமிழக முதல்வர் நிறைவேற்றி தர வேண்டும். சேலத்தில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில் சேலம் வட்ட வருவாய் கிராம ஊழியர்கள் சங்கத்தில் வலியுறுத்தல்.
தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முழுவதும் தமிழ்நாடு முழுவதும் வருவாய் கிராம ஊழியர்கள் சங்கத்தினர் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து காத்திருப்பு போராட்டம் மேற்கொண்டனர். இதன் ஒரு பகுதியாக சேலம் வட்டத்தின் சார்பில் அஸ்தம்பட்டியில் உள்ள சேலம் வருவாய் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் வட்டத் தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த காத்திருப்பு போராட்டத்தில் நிர்வாகிகள் சரவணன் இளவேந்தன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இந்த காத்திருப்பு போராட்டத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநில துணை தலைவர் அர்த்தனாரி, கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் மோகன்ராஜ் மற்றும் அருள் பிரகாசம் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு வருவாய் கிராம ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
தொடர்ந்து நடைபெற்ற போராட்டத்தின்போது வருவாய் கிராம ஊழியர்களின் நியாயமான கோரிக்கையை தமிழக முதல்வர் நிறைவேற்றி தர வேண்டும் என்றும், தமிழக அரசின் திட்டங்களை கடைகோடிக்கு கொண்டு சேர்க்கும் கிராம ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட கால முறை ஊதியம் வழங்கப்பட வேண்டும், தமிழக முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ள உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தின் கீழ் தமிழக முழுவதும் பணியாற்றும் கிராம ஊழியர்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் மற்றும் கிராம ஊழியர்கள் பணியின் போது உயிரிழக்கும் சூழல் ஏற்பட்டால் அவர்களது வாரிசுகளுக்கு கல்வி தகுதியின் அடிப்படையில் அரசு பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசிய தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாநிலத் துணைத் தலைவர் அர்த்தனாரி, தமிழக முதலமைச்சர் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் சங்க நிர்வாகிகளை அழைத்து பேசி உரிய தீர்வை ஏற்படுத்தி தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
மேலும் அடுத்த கட்டமாக தொடர் காத்திருப்பு போராட்டம் மேற்கொள்ளப் போவதுடன் வரும் 24ஆம் தேதி முதல் வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்துடன் இணைந்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்திலும் மேற்கொள்ளப் போவதாக வட்டத் தலைவர் சரவணன் தெரிவித்தார்.


