Latest

வியாழன், 27 நவம்பர், 2025

தமிழக துணை முதல்வர் பிறந்த நாள் விழா. சேலம் மத்திய மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் பல்வேறு இடங்களில் உணவு மற்றும்  இனிப்புகள் வழங்கி உற்சாக கொண்டாட்டம்.

தமிழக துணை முதல்வர் பிறந்த நாள் விழா. சேலம் மத்திய மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் பல்வேறு இடங்களில் உணவு மற்றும் இனிப்புகள் வழங்கி உற்சாக கொண்டாட்டம்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

தமிழக துணை முதல்வர் பிறந்த நாள் விழா. சேலம் மத்திய மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் பல்வேறு இடங்களில் உணவு மற்றும்  இனிப்புகள் வழங்கி உற்சாக கொண்டாட்டம்.

தமிழக துணை முதலமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா திமுகவினரால் இன்று தமிழக முழுவதும் வெகு உற்சாகத்துடனும் எழுச்சியுடனும் ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக சேலம் மத்திய மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் பல்வேறு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியாக சேலம் அரிசி பாளையம் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அரிசி பாளையம் பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் பாசில் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில் சேலம் சேலம் மத்திய மாவட்ட திமுகவின் மாநகர செயலாளர் ரகுபதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொது மக்களுக்கு உணவு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தார். இதே போல சேலம் அம்மாபேட்டை ஜோதி திரையரங்கம் அருகே உள்ள அம்மா உணவகம் முன்பு பொதுமக்கள் உட்பட ஏழை எளியவர்களுக்கு இனிப்புகளும் வழங்கிக் கொண்டாடப்பட்டன. நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் மோகன், 34 ஆவது கோட்ட செயலாளர் குணசேகரன் 34 வது கோட்ட மாமன்ற உறுப்பினர் ஈசன் இளங்கோ உட்பட தொண்டர்கள் என திரளானோர் கலந்து கொண்டு துணை முதல்வரின் பிறந்தநாள் விழாவை ஏழை எளியவர்களுக்கு உதவும் நாளாக  சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
தமிழக துணை முதல்வர் பிறந்த நாள் விழா. சேலம் மத்திய மாவட்ட திமுக சார்பில்  பல்வேறு இடங்களில் இனிப்புகள் வழங்கி உற்சாக கொண்டாட்டம்.

தமிழக துணை முதல்வர் பிறந்த நாள் விழா. சேலம் மத்திய மாவட்ட திமுக சார்பில் பல்வேறு இடங்களில் இனிப்புகள் வழங்கி உற்சாக கொண்டாட்டம்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

தமிழக துணை முதல்வர் பிறந்த நாள் விழா. சேலம் மத்திய மாவட்ட திமுக சார்பில்  பல்வேறு இடங்களில் இனிப்புகள் வழங்கி உற்சாக கொண்டாட்டம்.

தமிழக துணை முதலமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா திமுகவினரால் இன்று தமிழக முழுவதும் வெகு உற்சாகத்துடனும் எழுச்சியுடனும் ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக சேலம் மத்திய மாவட்ட திமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிக்கு  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 
ஜாமியா மசூதியின் முன்னாள் மூத்தவல்லியும், திமுக மாநில பொதுக்குழு உறுப்பினருமான அ மான் என்கின்ற நாசர் கான் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுகளில், சேலம் மத்திய மாவட்ட திமுகவின் கோட்டை பகுதி திமுக செயலாளர் சையது  இப்ராஹிம், 31வது கோட்ட திமுக செயலாளர் அப்துல் ரசாக், 29ஆவது கோட்ட திமுக செயலாளர் சிவகுமார் மற்றும் 32 வது கோட்ட திமுக செயலாளர் கபீர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். 
இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பெரியார் சிலை, பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா சிலை, சேலம் அண்ணா பூங்காவில் உள்ள கலைஞர் கருணாநிதி சிலை மற்றும் சேலம் சத்திரம் ஆகிய பகுதிகளில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டன.
குறிப்பாக சேலம் அண்ணா பூங்கா பகுதியில் உள்ள முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் திருவுருவ சிலை அருகே நடைபெற்ற இனிப்புகள் வழங்கும் விழாவின்போது அப்பொழுது கலை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட உடைகளுடன் அந்த பகுதியாக வந்த பள்ளி குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கி திமுகவினர் மகிழ்ந்தனர். இந்த நிகழ்வுகளில் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என திரளானோர் கலந்து கொண்டு துணை முதல்வரின் பிறந்தநாள் விழாவை ஏழை எளியவர்களுக்கு உதவும் நாளாக  சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
தமிழக துணை முதல்வர் பிறந்த நாள் விழா. சேலம் மத்திய மாவட்டம் திமுக இளைஞரணி சார்பில் செவித்திறன் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு சிற்றுண்டி.

தமிழக துணை முதல்வர் பிறந்த நாள் விழா. சேலம் மத்திய மாவட்டம் திமுக இளைஞரணி சார்பில் செவித்திறன் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு சிற்றுண்டி.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

தமிழக துணை முதல்வர் பிறந்த நாள் விழா. சேலம் மத்திய மாவட்டம் திமுக இளைஞரணி சார்பில் செவித்திறன் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு சிற்றுண்டி. 

தமிழக துணை முதலமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா திமுகவினரால் இன்று தமிழக முழுவதும் வெகு உற்சாகத்துடனும் எழுச்சியுடனும் ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக சேலம் மத்திய மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் பல்வேறு நிகழ்ச்சிக்கு  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியாக சேலம் கோரிமேடு பகுதியில் உள்ள தமிழக அரசு செவித்திறன் குறைபாடு பள்ளி சிறார்களுக்கு சிற்றுண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 
இந்த நிகழ்ச்சியில் 31வது கோட்ட திமுக செயலாளர் சையது இப்ராஹிம், 32வது கோட்ட டிவிசன் 31வது கோட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் திலீபன், 31வது கோட்ட  இளைஞர் அணி அமைப்பாளர் சிவா, 22 ஆவது கோட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சத்யா மற்றும் 29ஆவது கோட்ட டிவிசன் செயலாளர் உட்பட இளைஞரணி நிர்வாகிகள் தொண்டர்கள் என திரளானூர் கலந்து கொண்டு துணை முதல்வரின் பிறந்தநாள் விழாவை ஏழை எளியவர்களுக்கு உதவும் நாளாக  சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
காங்கிரஸ் உயிர் போடு தான் இருக்கிறது. களத்தில் பணியாற்றினால் நிச்சயம் வாய்ப்பு உண்டு. காங்கிரஸ் தேர்தல் பார்வையாளர் சோபா ஹோஜா சேலத்தில் பேட்டி.

காங்கிரஸ் உயிர் போடு தான் இருக்கிறது. களத்தில் பணியாற்றினால் நிச்சயம் வாய்ப்பு உண்டு. காங்கிரஸ் தேர்தல் பார்வையாளர் சோபா ஹோஜா சேலத்தில் பேட்டி.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

காங்கிரஸ் உயிர் போடு தான் இருக்கிறது. களத்தில் பணியாற்றினால் நிச்சயம் வாய்ப்பு உண்டு. காங்கிரஸ் தேர்தல் பார்வையாளர் சோபா ஹோஜா சேலத்தில் பேட்டி. 

சேலம் மாநகர் மாவட்ட மற்றும் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியால் அமைப்பு மறுசீரமைப்பு மேற்கொள்வதற்கான கட்சி நிர்வாகிகளிடம் கருத்து கேட்க தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அகில இந்திய மகிலா காங்கிரஸ் தலைவி சோபா ஹோஜா சேலம் வந்தார். அவர் கடந்த இரண்டு நாட்களாக சேலம் மேற்கு மாவட்டத்தில் மாவட்ட தலைவர் தேர்வுக்காக கருத்துக்களை கேட்டறிந்தார். சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியில் அமைப்பு மறுசீரமைப்பு மேற்கொண்டு புதிய மாவட்ட தலைவர் தேர்வு செய்வது குறித்து கருத்து மற்றும் விண்ணப்பங்கள் பெரும் பணி முள்ளுவாடி கேட் பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. தேர்தல் மேலிட பார்வையாளர் சோபா ஹோஜா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாணவர் மாவட்ட தலைவர் ஏ ஆர் பி பாஸ்கர், துணை மேயர் சாரதா தேவி மாணிக்கம் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து சோபா ஹோஜா‌ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது காங்கிரஸில் மாவட்ட கமிட்டிகளை அமைப்பு ரீதியாக மறுசீரமைப்பு செய்யும் இயக்கம் தமிழ்நாட்டிலும் ஆந்திராவிலும் தற்போது நடைபெற்று வருவதாகவும் ஒவ்வொரு நிர்வாகிகளையும் தனித்தனியாக சந்தித்து பேசி வருவதாக கூறிய அவர், கட்சிக்கு வலு சேர்க்கும் விதமாக கட்சி வளர்ச்சி அடைய செய்யும் வகையிலும் செயல்படும் நபர் மாவட்ட தலைவர் பதவியில் நியமிக்கப்படுவார் என்றும் தெரிவித்தார். 
இதற்காக விண்ணப்பம் வழங்கும் நபர்களில் இருந்து ஐந்து பேரை தேர்வு செய்து கட்சி தலைமைக்கு வழங்குவேன் என்று கூறியதுடன் அதில் இருந்து நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள் என்றும் 58 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத போதும் காங்கிரஸ் உயிர் போடு இருக்கிறது என்றார். களத்தில் பணியாற்ற தயாராக இருக்கின்றார்கள் என்றும் இந்த மாவட்ட தலைவர் நியமனத்தில் எஸ்சி எஸ்டி ஓபிசி மகளிர் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் பிரதமர் மோடி ஒடிசா பீகாரில் தமிழர்களை இழிவு படுத்தி பேசிவிட்டு தற்பொழுது தமிழகத்தில் தேர்தல் வருவதால் பாசாங்கு செய்து உயர்த்திப் பேசுவதாகவும் குற்றம் சாட்டிய அவர் இது தேர்தல் நடக்கும் மாநிலங்களில் அவர் நடத்தும் நாடகம் என்றார். தொடர்ந்து பேசிய அவர் தேர்தல் ஆணையம் விசாரணை அமைப்புகளை கையில் வைத்து கொண்டு பாரதிய ஜனதா கட்சி ஆட்டம் போடுவதாகவும் விமர்சித்தார். இந்த நிகழ்வில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

புதன், 26 நவம்பர், 2025

உலக அளவில் நடைபெற்ற திறன் விளையாட்டுப் போட்டியில் சேலம் இளைஞர், வட்டு எறிதல் ஈட்டி எறிதல் போட்டிகளில் தங்கம் வென்று சாதனை....சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு....

உலக அளவில் நடைபெற்ற திறன் விளையாட்டுப் போட்டியில் சேலம் இளைஞர், வட்டு எறிதல் ஈட்டி எறிதல் போட்டிகளில் தங்கம் வென்று சாதனை....சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு....

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

உலக அளவில் நடைபெற்ற திறன் விளையாட்டுப் போட்டியில் சேலம் இளைஞர், வட்டு எறிதல் ஈட்டி எறிதல் போட்டிகளில் தங்கம் வென்று சாதனை....சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு....

உலக அளவில் தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற சர்வதேச உலக திறனறிதல் போட்டியில் இந்தியாவின் சார்பாக பங்கேற்ற சேலம் பெரிய புதூர் பகுதியை சேர்ந்த கே.சஞ்சய் கண்ணா  வட்டு எறிதல் மற்றும்  ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கமும், குண்டு எறிதல் போட்டியில் வெள்ளி பதக்கமும் வென்று சாதனை படைத்தார்.
இதனையடுத்து
சேலம் வருகை தந்த அவருக்கு சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விளையாட்டு வீரரின் தந்தை கண்ணன், நாமக்கல் கபடி கழக செயலாளர் தமிழ்ச்செல்வன், முன்னாள் ஆவின் மேலாளர் சிவலிங்கம், முன்னாள் கபடி வீரரும் காவல்துறை அதிகாரியுமான கென்னடி ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியில் சூர்யா ஸ்போர்ட்ஸ் அகாடமி சூர்யா,கராத்தே குமார், பேட்மிட்டன் பயிற்சியாளர் கிரிவாசன், பெரிய புதூர் பொதுமக்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.
 

செவ்வாய், 25 நவம்பர், 2025

முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் பயணமாக ஈரோட்டுக்கு இன்று வருகிறார்.

முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் பயணமாக ஈரோட்டுக்கு இன்று வருகிறார்.

முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் பயணமாக ஈரோட்டுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) வருகிறார். இதற்காக சென் னையில் இருந்து இன்று விமானத்தில் புறப்பட்டு கோவை செல்கிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மாலை 6.30 மணிக்கு ஈரோடு புறப்படுகிறார்.

ஈரோடு மாவட்ட எல்லையான விஜயமங்கலம் சுங்கச் சாவடி அருகே ஈரோடு மாவட்ட தி.மு.க. சார்பில் முதல் - அமைச்சர் மு.க.ஸ்டா லினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. இது போல் பெருந்துறை மற்றும் ஈரோடு மேட்டுக்கடை பகுதி களில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிர மாண்ட வரவேற்பு அளிக் கப்படுகிறது. இவ்வாறு வழி நெடுகிலும் ஈரோடு தெற்கு, ஈரோடு மத்திய மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க.வினர் வரவேற்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

அதன்பின்னர் இரவு 8.30 மணிக்கு ஈரோடு காலிங்கரா யன் விருந்தினர் மாளிகைக்கு வந்துசேருகிறார். அங்கு இரவு தங்கி ஓய்வு எடுக்கிறார்.
ரூ.605 கோடியில் திட்டங்கள்

காலிங்கராயன் விருந்தினர் மாளிகையில் இருந்து நாளை (புதன்கிழமை) காலை 9.15 மணிக்கு புறப்படும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருந்துறை ரோடு, ரிங் ரோடு, பூந்துறை ரோடு வழி யாக ஜெயராமபுரம் செல்கி றார். காலை 10 மணிக்கு அங்கு புதிதாக அமைக்கப் பட்டுள்ள பொல்லான் உரு வச்சிலையை திறந்து வைத்து, அரங்கையும் திறந்து வைக்கிறார். அங்கிருந்து ஓடாநிலை. செல்லும் அவர், காலை 10.20. மணிக்கு தீரன் சின்னமலை நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்.

அங்கிருந்து புறப்படும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின் காலை 10.45 மணிக்கு சோலாரில் புதிய பஸ்நிலைய வளாகத்தில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்கிறார். விழாவுக்கு தலைமை தாங்கி, ஈரோடு மாவட்டத்தில் முடிவுற்றதிட் லு டப்பணிகள், புதிய திட்டங் கள் என ரூ.605 கோடி மதிப் பிலான வளர்ச்சித்திட்ட பணிகளை தொடங்கி வைக் கிறார்.
நலத்திட்ட உதவிகள்

விழாவில் பல்வேறு அரசுத் துறைகள் சார்பில் 1 லட்சத்து 84ஆயிரத்து 491பேருக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார். காலை 11.45 மணிக்கு அரசு விழா முடிந்து அங்கிருந்து புறப்பட்டு ஈரோடு காலிங்கராயன் விருந்தினர் மாளிகைக்கு வருகிறார். 
நலத்திட்ட உதவிகள்

விழாவில் பல்வேறு அரசுத் துறைகள் சார்பில் 1 லட்சத்து 84 ஆயிரத்து 491பேருக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார். காலை 11.45 மணிக்கு அரசு விழா முடிந்து அங்கிருந்து புறப்பட்டு ஈரோடு காலிங்கராயன் விருந் தினர் மாளிகைக்கு வருகிறார். அங்கு மதிய உணவு சாப்பி டும் முதல்-அமைச்சர் மாலை வரை ஓய்வெடுக்கிறார்.

மாலை 4.45 மணிக்கு காலிங்கராயன் மாளிகையில் இருந்து புறப்பட்டு சித்தோடு ஆவின் வளாகத்தில் அமைக் - கப்பட்டுள்ள முன்னாள் எம். பி.யும் கூட்டுறவு பால் பண்ணை நிறுவனருமான எஸ்.கே.பரமசிவம் உருவச்சி லையை மாலை 5.30 மணிக்கு திறந்து வைக்கிறார். பின்னர் சித்தோட்டில் நடைபெறும் திருமண விழாவில் பங்கேற்கும் அவர் மாலை 6.20 மணிக்கு கோவை புறப்பட்டு செல்கிறார். இரவு கோவை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை சென்று சேருகிறார்.

முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு வரு கையை முன்னிட்டு அவர் வந்து செல்லும் வழி நெடுகி லும் தி.மு.க. கொடிகள் கட்டப்பட்டுள்ளன.

பாதுகாப்பு பணியில் 3,100 போலீசார்
தனயனுக்கான பாராட்டு விழாவில் நெகிழ்ந்த நிகழ்வு. தன் மகனை சான்றோன் எனக்கேட்ட பெற்றோர்கள் கண் கலங்கிய தருணம். சேலம் சோனா கல்லூரியில் அரங்கேறியது.

தனயனுக்கான பாராட்டு விழாவில் நெகிழ்ந்த நிகழ்வு. தன் மகனை சான்றோன் எனக்கேட்ட பெற்றோர்கள் கண் கலங்கிய தருணம். சேலம் சோனா கல்லூரியில் அரங்கேறியது.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

தனயனுக்கான பாராட்டு விழாவில் நெகிழ்ந்த நிகழ்வு. தன் மகனை சான்றோன் எனக்கேட்ட பெற்றோர்கள் கண் கலங்கிய தருணம். சேலம் சோனா கல்லூரியில் அரங்கேறியது.

சோனா தொழில்நுட்பக் கல்லூரிக்கு தேசிய அளவில்  இரண்டு விருதுகள்
 கேப்ஜெமினி நிறுவனம் நடத்திய போட்டியில் உயரிய விருது மற்றும் ரூ1.லட்சம் பரிசு தொகை வென்று சோனா கல்லூரி மாணவன் சாதனை.
சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரி எலக்ட்ரிக்கல் & எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் (EEE) துறையின்  3 ஆம் ஆண்டு மாணவரான திரு. பி. விஜய், நாட்டின் சிறந்த மாணவர்களை தேர்வு செய்யும் கேப்ஜெமினி பிராண்ட் குவெஸ்ட் 2025 போட்டியில் வெற்றியாளராகத் திகழ்ந்துள்ளார். இப்போட்டியின் இறுதி மேடைச் சுற்று நவம்பர் 21, 2025 அன்று புனேயில் உள்ள கேப்ஜெமினி வளாகத்தில் நடைபெற்றது இந்த நிகழ்வில் உயரிய விருது மற்றும் ரூ1.லட்சம் பரிசு தொகையை கல்லூரியின் மாணவர் விஜய்-க்கு வழங்கப்பட்டது மேலும் சோனா கல்லூரிக்கு சிறந்த பங்கேற்பாளர்கள் விருது கல்லூரியின் முதல்வர் எஸ்.ஆர்.ஆர்.செந்தில்குமார்-க்கு  வழங்கப்பட்டது. சோனா கல்லூரியில் நடைப்பெற்ற பாராட்டு விழாவில் சோனா கல்வி நிறுவனத்தின் தலைவர் வள்ளியப்பா, கல்லூரியின் முதல்வர். செந்தில்குமார், துறை தலைவர் பத்மா ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்க்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி கெளரவித்தனர். மாணவர்களின் உளமார்ந்த ஆர்வம், ஆழமான அறிவு மற்றும் பகுப்பாய்வு திறன்களை மதிப்பிடுவதற்காக இந்தப் போட்டி நடத்தப்படுகின்றன.
கேப்ஜெமினி நிறுவனத்தின் வரலாறு, வளர்ச்சி, வணிக துறைகள், தொழில்நுட்ப தீர்வுகள், சந்தை நிலை, போட்டியாளர்கள் மற்றும் நிதிநிலை போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து மாணவர்கள் எவ்வாறு புரிந்துகொண்டுள்ளனர் என்பதே இத்தேர்வின் முக்கிய அம்சமாகும். எனவும் மேலும் நாட்டின் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட போட்டியாளர்களில் இருந்து, விஜய் தன்னுடைய தனி திறனை வெளிப்படுத்தி முன்னிலை பெற்றுள்ளார் என கல்லூரியின் முதல்வர் செந்தில்குமார் தெரிவித்தார்.
கல்லூரியின் தலைவர் வள்ளியப்பா மற்றும் கல்லூரியின் முதல்வர் ஆகியோர் பேசும் பொழுது ஒரு சாமானிய பெற்றோரின் மகன் இந்த அரிய சாதனையை படைத்து இந்த விருதினை பெற்றது பெருமைக்குரியதாகும் மேலும் சோனா கல்லூரிக்கு சிறந்த பங்கேற்பாளர்கள் விருது என இரண்டு உயரிய விருதுகளை பெற்றுள்ளது  சிறப்புடையதாகும் எனவும் அவர்கள் தெரிவித்த போது ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் என கேட்ட தாய் என்ற வள்ளுவரின் வார்த்தைகளை மெய்ப்பிக்கும் விதமாக தன்னை அறியாமல் பெற்றோர்கள் கண்கலங்கியது அங்கு காண முடிந்தது. 
மாணவர் விஜய் அவர் கலந்து கொண்டு போட்டியில் ஒரு லட்ச ரூபாய் கடந்து கொண்டு வெற்றி பெற்று இருந்தாலுமே கூட மாணவனின் திறமை தனித்துவம் அறிவுத்திறன் ஆகியவற்றை பாராட்டி கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் சம்பந்தப்பட்ட மாணவனுக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என கல்லூரியின் தலைவர் வள்ளியப்பா தெரிவித்தது அங்கு இருந்தவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிகழ்வில் எலக்ட்ரிக்கல் & எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் துறையின்  தலைவர் பத்மா, வேலைவாய்ப்பு துறை இயக்குனர் சரவணன், உள்ளிட்ட பேராசிரியர்கள் மற்றும் வெற்றி பெற்ற மாணவனின் பெற்றோர் ஆகியோர் பங்கேற்றனர்.