சேலம்.
S.K.சுரேஷ்பாபு.
தமிழகத்தில் தமிழக வெற்றி கழகம் ஒருபோதும் ஆட்சி அமைக்க முடியாது. அவரது மாநாட்டில் திரளும் மூன்றில் இரண்டு பங்கு இளைஞர்களுக்கு வாக்கு உரிமையும் கிடையாது வரக்கூடிய தகுதியும் இல்லை.. ஊடகத் துறைக்கு நான் திருப்பி கேள்வி கேட்கிறேன். சேலத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் ஊடகப் பிரிவு தலைமை ஒருங்கிணைப்பாளர் குமரவேல் சேலத்தில் கடும் காட்டம்.
தமிழகத்தில் நடைபெற உள்ள 2026 சட்டமன்ற தேர்தல் களம் தமிழகத்தில் கடுமையான உச்சகட்டத்தை அடைந்துள்ளது என்றால் அது மிகை ஆகாது. அந்த வகையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட ஊடகப்பிரிவு நிர்வாகிகளின் கலந்தாய்வுக் கூட்டம் சேலத்தை அடுத்துள்ள கோரிமேடு பகுதியில் நடைபெற்றது. இந்த கலந்தாய்வு கூட்டத்திற்கு தமிழக வாழ்வுரிமை கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர்கள் மோகன்ராஜ் தலைமை தாங்கினார். நிகழ்வில் மாநில நிர்வாகிகள் பலரும் முன்னிலை வகித்த இந்த நிகழ்வில் ஒருங்கிணைந்த மாவட்டமாக கருதப்படும் சேலத்தில் மூன்று மாவட்டங்களை சார்ந்த நிர்வாகிகள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழக வாழ்வுரிமை கட்சியின் ஊடகப்பிரிவு தலைமை ஒருங்கிணைப்பாளர் குமரவேல் கலந்துகொண்டு ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் அவர்கள் மேற்கொண்டு வரும் பணிகள் குறித்து கேட்டிருக்கிறார். தொடர்ந்து கட்சி மற்றும் ஊடகப் பிரிவில் செயல்பாடுகள் குறித்து கலந்து கொண்டவர்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டன. பின்னர் மாநில நிர்வாகிகள் ஒருங்கிணைந்த மாவட்ட பொறுப்பாளர்களில் கருத்துக்களை கேட்ட பிறகு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து இருந்த நிலையில், தமிழக வாழ்வுரிமை கட்சியின் ஊடகப்பிரிவு மாநில செய்தி தொடர்பாளர் குமரவேல் பேசுகையில், ஒவ்வொரு கட்சிக்கும் ஐடி விங் எனப்படும் ஊடகப்பிரிவு செயல் பட்டு வருவதாகவும் அந்த கட்சிகள் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவதாக தெரிவித்த அவர், நமது கட்சியின் ஊடகப் பிரிவு நிர்வாகிகள் பொறுப்புகளை பெற்றுக் கொண்டு சரிவர அவர்களது பணிகளை சரிவர செய்வதிலேயே என்று வேதனை தெரிவித்தார். மேலும் ஊடகப்பிரிவை எவ்வாறு பலப்படுத்துவது, ஒவ்வொரு ஊடகப்பிரிவு நிர்வாகிகளும் தன்னிச்சையாக செயல்பட்டு அவர்களது கருத்துக்களை தனிப்பட்ட முறையில் பதிவிடாமல் கட்சியை ஒருங்கிணைத்து அதனை வெளிப்படுத்தினால் கட்சிக்கு பலம் ஏற்படும் என்றும், இதற்காக 38 மாவட்டங்களிலும் தனித்தனியாக இனி வரும் காலங்களில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைமை சார்பாக ஊடக பிரிவுக்கு என ஒரு இடம் தேர்வு செய்யப்பட்டு, வாரத்தில் இரண்டு நாட்கள் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுவதோடு எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் சேலம் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் கூட்டணி கட்சியில் அறிவிக்கப்படும் வேட்பாளர்களின் வெற்றியை ஊடகப் பிரிவினர் உறுதி செய்ய வேண்டும்.
இதற்கு மாவட்டம் தோறும் கட்சியின் தலைமை சார்பில் நடத்தப்படக்கூடிய ஊடகப்பிரிவு பயிற்சி அலுவலகத்தில் ஊடகப்பிரிவினர் வாரம் தோறும் இரண்டு முறை பங்கேற்று youtube instagram facebook மற்றும் உள்ளிட்ட எத்தனையோ சமூக வலைதளங்கள் உள்ளன அதில் தலைவரின் செயல்பாடுகள் அவர் பணியாற்றிய விதம் இதை பொதுமக்கள் உட்பட அனைத்து கட்சியினருக்கும் எப்படி எடுத்துச் சென்று அவர்களுக்கு புரிய வைத்து தமிழகத்தின் மிகச்சிறந்த தலைவர் வேல்முருகன் தான் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஊடகப் பிரிவினர் பணியாற்ற வேண்டும் என்று இந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஊடகப்பிரிவு தலைமை மாநில ஒருங்கிணைப்பாளர் குமரவேல் செய்தியாளிடம் பேசும் போது ஊடகப் பிரிவு மற்றும் கட்சியை எவ்வாறு பலப்படுத்த வேண்டும் என்று ஊடகப்பிரிவு நிர்வாகிகளுக்கு இந்த ஆலோசனை கூட்டத்தில் தற்போது பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாகவும் இதற்காக 38 மாவட்டங்களிலும் சிறப்பு பயிற்சி மையங்கள் விரைவில் அமைக்கப்படும் என்று தெரிவித்த அவர் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் அவர் கூறிய கருத்து நடிகர் விஜய் அவர்களின் ஒவ்வொரு கூட்டத்திலும் ஒவ்வொரு பிரச்சாரத்திலும் பங்கு இருக்கும் ஒட்டுமொத்த கூட்டத்தில் மூன்றில் இரண்டு பங்கு இளைஞர்களுக்கு வாக்கு உரிமையை கிடையாது என்றும் அந்த வாக்குரிமையை பெறக்கூடிய தகுதியும் அவர்களுக்கு கிடையாது என்று திட்டவட்டமாக கூறிய குமரவேல், தமிழகத்தை எடுத்து தற்பொழுது புதுச்சேரியில் அவர் பங்கேற்ற அந்தக் கூட்டத்தில் அவர் பறைசாற்றுவது 2026 தேர்தலில் தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்கும் தமிழகத்தில் என்று உறுதிப்பட பேசுகிறார் என்று கூறிய அவர், வாக்கு சதவிகிதமே இல்லாத ஒரு கட்சி 2026 தேர்தலில் எப்படி ஆட்சி அமைக்க முடியும் என்று தமிழக ஊடகத்துறைக்கு இந்தக் கேள்வியை முன்வைக்கிறேன் என்று பகிரங்கமாக சவால் விட்டுள்ளார்.
சேலத்தில்.
இந்த கலந்தாய்வு கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் ஊடகப் பிரிவு நிர்வாகிகள் மண்டல செயலாளர் பிரபாகரன் சேலம் மாவட்ட ஊடகப் பிரிவு பொறுப்பாளர் கோபி சுந்தரம் உள்ளிட்ட ஏராளமான ஒரு கலந்து கொண்டனர்.