Latest

ஞாயிறு, 21 டிசம்பர், 2025

*கோபி பகுதி மின்தடை அறிவிப்பு*

*கோபி பகுதி மின்தடை அறிவிப்பு*

*கோபி பகுதி மின்தடை அறிவிப்பு* 

நாள்: 22-12-2025
கிழமை: திங்கள் 

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 


கூகலுார், ஒத்தக்குதிரை, எஸ்.கணபதிபாளையம், கவுண்டன்புதூர், கருங்கரடு, தண்ணீர்பந்தல்பாளையம், புதுக்கரைப்புதுார், பொன்னாச்சிபுதுார், தாழைகொம்புதூர், பொலவக்காளிபாளையம், தாசம்பாளையம், பொம்மநாயக்கன்பாளையம், சக்கரைபாளையம், சாணார்பாளையம், மேவாணி, சென்னிமலைகவுண்டன்புதூர், குச்சலூர், சவண்டப்பூர் ஆண்டிகாடு, பெருமுகை, வரப்பள்ளம் மற்றும் கே.மேட்டுப்பாளையம்.

ஆகிய பகுதிகளில் மாதம் பராமரிப்பு காரணமாக மின் வினியோகம் தடை

*தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் கோபி*
Inauguration of the second branch of Amogham, a high-quality vegetarian restaurant in Salem.  Salem City Mayor Ramachandran inaugurated this new restaurant, which boasts various special features, by cutting the ribbon.

Inauguration of the second branch of Amogham, a high-quality vegetarian restaurant in Salem. Salem City Mayor Ramachandran inaugurated this new restaurant, which boasts various special features, by cutting the ribbon.

Salem.

S.K. Suresh Babu.

Inauguration of the second branch of Amogham, a high-quality vegetarian restaurant in Salem.  Salem City Mayor Ramachandran inaugurated this new restaurant, which boasts various special features, by cutting the ribbon.

It is well known to the people of Salem that Amogham, the high-quality vegetarian restaurant of New Henry Woolsey, Salem, is located on the Karuppur-Salem-Bangalore bypass road. Following the overwhelming support from the people of Salem, the second new branch of this restaurant has been newly opened on Omalur Main Road, opposite Pothys.The ground floor of this three-story restaurant was inaugurated by Salem City Corporation Mayor Ramachandran by cutting the ribbon. The ground floor, which has sufficient seating for 100 people to eat while standing, is designed for self-service. The first floor, with seating for 35 people and offering sweets and snacks, was inaugurated by Mr. Srinath and Mrs. Sadhana, owners of Coimbatore Jewellers.

The second floor, which is air-conditioned and has seating for 70 people, was inaugurated by Mr. Nallathambi and Mrs. Tamizhselvi, owners of Salem Tamizhselvi Towers. This air-conditioned floor will operate from 11:30 AM to 3:30 PM and then from 6:30 PM to 11:00 PM.The owner of Amogham restaurant, Satheeshkumar, stated that their goal is to prepare and serve high-quality vegetarian food in a hygienic manner and with the flavors preferred by the people, given the overwhelming support received from the people of Salem.  He said that Amogam would be a kingdom of vegetarian cuisine, offering seven types of nutritious millet dosas for all seven days of the week, as well as millet puttu and kozhukattai varieties, savory and sweet millet paniyarams, and vegetarian tandoori dishes that young people would love.  He requested that everyone visit the second branch of Amogam, which has been opened in the heart of Salem city in response to public demand, and extend their support. He also mentioned that the Amogam restaurant would be operational from 6 AM onwards.


சேலத்தில் அமோகம் உயர்தர சைவ உணவகத்தின் இரண்டாம் கிளை துவக்க விழா. பல்வேறு சிறப்பம்சங்களுடன் கூடிய இந்த புதிய உணவகத்தினை சேலம் மாநகர மேயர் ராமச்சந்திரன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.

சேலத்தில் அமோகம் உயர்தர சைவ உணவகத்தின் இரண்டாம் கிளை துவக்க விழா. பல்வேறு சிறப்பம்சங்களுடன் கூடிய இந்த புதிய உணவகத்தினை சேலம் மாநகர மேயர் ராமச்சந்திரன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.

சேலம்.
S.K.சுரேஷ் பாபு.

சேலத்தில் அமோகம் உயர்தர சைவ உணவகத்தின் இரண்டாம் கிளை துவக்க விழா. பல்வேறு சிறப்பம்சங்களுடன் கூடிய இந்த புதிய உணவகத்தினை சேலம் மாநகர மேயர் ராமச்சந்திரன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.

சேலம் நியூ ஹென்றி வூல்சியின் அமோகம், உயர்தர சைவ உணவகம் கருப்பூர்-சேலம்- பெங்களூர் பை-பாஸ் ரோட்டில் அமைந்துள்ளது சேலம் மக்கள் அனைவரும் அறிந்ததே. சேலம் மக்களின் அமோக ஆதரவினை பெற்ற இவ் உணவகத்தின் 2 வது புதிய கிளையானது, ஒமலூர் மெயின் ரோடு, போத்தீஸ் எதிர்ப்புறத்தில் புதிதாக தொடங்கப்பட்டது. 
மூன்று தளங்களை கொண்ட இவ் உணவகத்தின் தரைத்தளத்தினை, சேலம் மாநகராட்சியின் மேயர் இராமச்சந்திரன் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.100 பேர் நின்று கொண்டு சாப்பிடும் வகையில், போதுமான இருக்கைகளுடன் அமைந்துள்ள 
தரைத்தளம், சுயசேவை எனப்படும் Self-Service வகையில் அமைக்கப்பட்டுள்ளது.ப்35 நபர்கள் உட்கார்ந்து சாப்பிடும் இருக்கைகளுடன், ஸ்வீட்ஸ் மற்றும் ஸ்னாக்ஸ் வகைகளுடன் அமைக்கப்பட்டுள்ள முதல் தளத்தினை, கோயமுத்தூர் ஜுவல்லர்ஸ் நகைக்கடை உரிமையாளர்கள் ஸ்ரீநாத் - சாதனா தம்பதியினர் தொடங்கி வைத்து வாழ்த்தினர். 
70 நபர்கள் அமர்ந்து சாப்பிடும்  வகையில், குளிர்சாதன வசதியுடன் அமைந்திருக்கும் இரண்டாம் தளத்தினை, சேலம் தமிம்ச்செல்வி டவர்ஸின் உரிமையாளர்கள் நல்லதம்பி- தமிழ்ச்செல்வி தம்பதியினர் தொடங்கி வைத்தனர். குளிர்சாதன வசதியுடன் இயங்கும் இத் தளம் காலை 11.30 முதல் மதியம் 3.30 வரையிலும், பின்னர் மாலை 6.30 மணிமதல் இரவு 11 மணிவரை செயல்படும்.
சேலம் மக்களின் ஏகோபித்த ஆதரவினை பெற்ற இவ் உணவகத்தில், மிகவும் தரமான சைவ உணவு வகைகளை, மக்கள் விரும்பும் சுவையில், சுகாதரமான முறையில் தயாரித்து வழங்குவதே தங்களது நோக்கம் என அமோகம் உணவகத்தின் உரிமையாளர் சதீஸ்குமார் தெரிவித்தார்.
வாரத்தின் ஏழு நாட்களுக்கும் சத்தான ஏழு சிறுதானிய வகை தோசைகள், சிறுதானிய புட்டு மற்றும் கொழுக்கட்டை வகைகள்,சிறுதானிய கார, இனிப்பு பணியாரங்கள், இளைஞர்கள் விரும்பும் சைவ தந்தூரி வகைகள் என சைவ உணவுகளின் சாம்ராஜ்ஜியமாக அமோகம் அமையும் என்றார். மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, சேலம் நகரத்தின் மையத்தில் தொடங்கப்பட்டுள்ள அமோகத்தின் இரண்டாவது கிளைக்கும், மக்கள் அனைவரும் வருகை புரிந்து, தங்களது ஆதரவினை நல்குமாறு அவர் கேட்டுக் கொண்டார். அமோகம் உணவகம் காலை 6 மணி முதலே செயல்படும் என்பது தனிச்சிறப்பு.
தமிழக விவசாயிகளின் பெருங்குடி தலைவர் நாராயணசாமி நாயுடுவின் 41 வது ஆண்டு நினைவு தினம். கோவை அருகே உள்ள அவரது மணி மண்டபத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாய பெருங்குடி மக்களும் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்பு. தமிழக விவசாயிகளின் கோரிக்கையை தற்போது வரை ஏற்க மறுத்துள்ள தமிழக அரசுக்கு எதிராக வரும் 29ஆம் தேதி தமிழக முழுவதும் பால்   மாநில சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் கரவை மாடுகளுடன் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றும் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் வேலுச்சாமி அறிவிப்பு.

தமிழக விவசாயிகளின் பெருங்குடி தலைவர் நாராயணசாமி நாயுடுவின் 41 வது ஆண்டு நினைவு தினம். கோவை அருகே உள்ள அவரது மணி மண்டபத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாய பெருங்குடி மக்களும் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்பு. தமிழக விவசாயிகளின் கோரிக்கையை தற்போது வரை ஏற்க மறுத்துள்ள தமிழக அரசுக்கு எதிராக வரும் 29ஆம் தேதி தமிழக முழுவதும் பால் மாநில சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் கரவை மாடுகளுடன் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றும் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் வேலுச்சாமி அறிவிப்பு.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

தமிழக விவசாயிகளின் பெருங்குடி தலைவர் நாராயணசாமி நாயுடுவின் 41 வது ஆண்டு நினைவு தினம். கோவை அருகே உள்ள அவரது மணி மண்டபத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாய பெருங்குடி மக்களும் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்பு. தமிழக விவசாயிகளின் கோரிக்கையை தற்போது வரை ஏற்க மறுத்துள்ள தமிழக அரசுக்கு எதிராக வரும் 29ஆம் தேதி தமிழக முழுவதும் பால்   மாநில சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் கரவை மாடுகளுடன் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றும் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் வேலுச்சாமி அறிவிப்பு.

தமிழக விவசாயிகள் படும் துயரத்தில் இருந்து அவர்களை மீட்டெடுத்து அவர்களுக்கான கொள்முதல் விலையை பெற்று தர வேண்டும் என்பதற்காக தனி ஒரு மனிதராக தமிழக விவசாயிகள் சங்கம் என்ற ஒரு அமைப்பினை உருவாக்கியவர் உழவர் பெருந்தகை நாராயணசாமி நாயுடு. அவர்கள் அமைப்பை உருவாக்கியதோடு மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து விவசாயிகளையும் ஒருங்கிணைத்து, விவசாயிகளின் தேவைக்காக பலகட்ட போராட்டங்களை அறிவித்து அதனை முறைப்படி நடத்தி அதில் வெற்றியும் கண்டவர் நாராயணசாமி நாயுடு அவர்கள். தற்பொழுதும் தமிழக விவசாய குடி பெருமக்களால் போற்றப்படும் உழவர் பெருந்தகை நாராயணசாமி நாயுடு அவர்களின் 41 வது நினைவு தினம் இன்று அனைத்து விவசாய பெருங்குடி மக்களாலும் கடைபிடிக்கப்பட்டது. இந்த புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக ஏற்கனவே தமிழக விவசாயிகள் சங்கத்தில் மாநில தலைவர் வேலுச்சாமி அறிக்கையின் வாயிலாக தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாய பெருமக்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.
அதன் அடிப்படையில், கோவை மாவட்டம் அன்னூர் வட்டம் கோயில்பாளையம் அருகே உள்ள வையம்பாளையம் கிராமத்தில் தமிழக விவசாயிகள் சங்கத்தை  தோற்றிவித்த மறைந்த உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்களின் 41 வது ஆண்டு  நினைவு நாளில் அன்னாரது மணிமண்டபத்தில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் அதன் மாநிலத் தலைவர் வேலுசாமி  தலைமையில், நாராயணசாமி நாயுடு அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டத்துடன், அவரது நினைவிடத்திற்கு மலர்வளையம் வைத்து மலர்தூவி புகழ் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் மோகன் குமார், மாநில துணைத் தலைவர் ராஜா பெருமாள், திருப்பத்தூர் கணதி, சேலம் மாவட்ட தலைவர் ஏழுமலை உட்பட தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில மாவட்ட நிர்வாகிகள், விவசாய பெருங்குடி மக்கள் மற்றும் தமிழகத்தின் முக்கிய பிரமுகர்கள் ஏராளமான ஒரு கலந்து கொண்டு புஷ்பாஞ்சலி செலுத்தி மரியாதை தெரிவித்தனர். அப்போது உழவர் பெருந்தகை நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் வேலுச்சாமி செய்தியாளிடம் கூறுகையில், நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலின் போது தமிழக விவசாயிகளின் கோரிக்கையை தேர்தல் அறிக்கையாக அறிவித்த தமிழக அரசு தற்பொழுது வரை அதனை நிறைவேற்றி தரவில்லை என்றும் இதற்காக பலகட்ட போராட்டங்கள் நடந்தப்பட்டுள்ளதாகவும், தற்பொழுது தமிழகத்தில் பிரதானமாக உள்ள பசும்பால் மற்றும் எருமை பாலிற்கு கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டதாகவும், தமிழக அரசின் நிறைவேற்றாத பட்சத்தில், தமிழகத்தில் பால் உற்பத்தி எடுத்த போராட்டம் நடத்தப்படுவது உடன் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு பால் கொண்டு வருவதை தடுக்க மாநில தேசிய நெடுஞ்சாலைகளில் கரவை மாடுகளுடன் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றும் ஏற்கனவே இரண்டு மாதங்களுக்கு முன்பு தலைவர் வேலுச்சாமி அவர்களால் அறிவிக்கப்பட்டிருந்தது என்றும் புயல் கனமழையின் காரணமாக  அந்தப் போராட்டம் கைவிடப்பட்ட நிலையில் வரும் 29ஆம் தேதி ஏற்கனவே அறிவித்ததை போன்று தமிழகம் முழுவதும்  கரவை மாடுகளுடன் தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலையில் தமிழக விவசாயிகள் சங்க விவசாய பெருங்குடி மக்கள் அனைவரும் மறியல் போராட்டத்தில்  ஈடுபட போவதாகவும் இந்த 41 வது நினைவு தினத்தில் கடுமையான எச்சரிக்கையை தமிழக அரசுக்கு விடுத்துள்ளார்.

சனி, 20 டிசம்பர், 2025

CMAI ஆடை ஏற்றுமதி மற்றும் உற்பத்தியாளர் சங்கம் சார்பில், நம் ஈரோட்டில் செயல்பட்டு வரும் நெசவுத் தொழிலில் ஈடுபட்டவர்களுக்காக மும்பை நகரில் ஒரு பெரிய நெசவுக் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது.

CMAI ஆடை ஏற்றுமதி மற்றும் உற்பத்தியாளர் சங்கம் சார்பில், நம் ஈரோட்டில் செயல்பட்டு வரும் நெசவுத் தொழிலில் ஈடுபட்டவர்களுக்காக மும்பை நகரில் ஒரு பெரிய நெசவுக் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது.


CMAI ஆடை ஏற்றுமதி மற்றும் உற்பத்தியாளர் சங்கம் சார்பில், நம் ஈரோட்டில் செயல்பட்டு வரும் நெசவுத் தொழிலில் ஈடுபட்டவர்களுக்காக மும்பை நகரில் ஒரு பெரிய நெசவுக் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது.

இந்தக் கண்காட்சியின் சிறப்பு என்னவென்றால்,
வெளிநாடுகளில் இருந்து பத்து நாடுகளைச் சேர்ந்த நேரடி வாங்குநர்கள், இதில் பங்கேற்க உள்ளனர்.

அதோடு, இந்தியா முழுவதிலும் இருந்து சுமார் 320 வாங்குநர்களை அழைத்து வந்து,கண்காட்சி அரங்குகளில் நேரடியாக சந்தித்து வணிகஉரையாடல் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.

இதன் மூலம்,நம் தமிழ்நாட்டில் குறிப்பாக ஈரோடு மற்றும் திருப்பூர் பகுதிகளில் உள்ள அனைவரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைக்கிறோம், இது அனைவருக்கும் பயன் அளிக்கும் வாய்ப்பாகும்.
CMAI என்பது 65 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்திய ஆடை உற்பத்தியாளர்களின் சங்கமாகும்.

இந்திய அளவில் ஆடை உற்பத்தியாளர்களுக்கான மிகப்பெரிய சங்கங்களில் இதுவும் ஒன்று, இதன் முக்கிய நோக்கம், நேரடி உற்பத்தியாளர்களும் தொழில்துறை குழுமங்களும் இதில் பங்கேற்பதுதான், இந்த வர்த்தகக் கண்காட்சி மூலம், முழு தொழில்துறை அமைப்பிற்கும் பயன் கிடைக்கும், துணி வழங்குநர்களுக்கும் ஆடை உற்பத்தியாளர்களுக்கும் சமமான நன்மை ஏற்படும் என தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் ( ஈரோடு டிஸ்ட்ரிக்ட் சேம்பர் ஆப் காமர்ஸ் & இன்ட்ரஸ்ட்ரி )
ஈரோடு மாவட்ட தொழில் வர்த்தக சபையின் தலைவர் வி.பி.சுப்பிரமணியம், செயலாளர் பிரேம் நாராயணன், ( எக்ஸிக்யூடிவ் பிரசிடெண்ட் ) செயல் தலைவர் வி.டி கருணாநிதி, டெக்ஸ்வேலி நிர்வாக இயக்குனர் குமார், ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர் சிவனந்தன், FATIA தலைவர் வி.கே ராஜமாணிக்கம், ரவிச்சந்திரன், 

CMAI பொதுச்செயலாளரும், பேப் ஷோ சேர்மன் நவீன், CMAI சேர்மன் வெண்டர் ஆனந்த் உட்பட ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் என ஜவுளி வர்த்தகர்கள் பங்கேற்றனர்.

CMI துணிக்காட்சி, மும்பை நகரில், ஏப்ரல் மாதம் 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
காரமடையில் சர்வதேச மனித உரிமைகள் தின விழா

காரமடையில் சர்வதேச மனித உரிமைகள் தின விழா

காரமடையில் சர்வதேச மனித உரிமைகள் தின விழா

மனித உரிமைகள் காப்பாளர்கள் சார்பாக 78 ஆம் ஆண்டு சர்வதேச மனித உரிமைகள் தின விழா காரமடை நகராட்சி அலுவலகம் முன்பு ஈரோடு மாவட்ட தலைவர் ரசூல் மொய்தீன் தலைமையில் நடை பெற்றது.

சிறப்பு விருந்தினராக தேசிய தலைவர் சின்னராஜ் ராமசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 

நிகழ்ச்சியில், தேசிய செயலாளர் செந்தில்குமார் தமிழ்நாடு மாநில தலைவர் அந்தோணி ராஜ், தமிழ்நாடு மாநில மகளிர் அணி தலைவி லோகநாயகி, தமிழ்நாடு மாநில மகளிர் அணி செயலாளர் மகேஸ்வரி, கோவை மாவட்ட அமைப்பாளர் இப்ராஹிம் பாஷா, கோவை வடக்கு மாவட்ட தலைவர் மோகனசுந்தரம், கோவை மாவட்ட அமைப்புச்செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் மனித உரிமைகள் குறித்து சிறப்புரையாற்றினர். முடிவில் கோவை மாவட்ட செயலாளர் நண்பரசன் நன்றி கூறினார்.
ஈரோட்டில் த.மா.கா.வுடன் காமராஜர் மக்கள் கட்சியை இணைக்கும் விழா - ஜி.கே.வாசன் எம்.பி. முன்னிலை நடந்தது.

ஈரோட்டில் த.மா.கா.வுடன் காமராஜர் மக்கள் கட்சியை இணைக்கும் விழா - ஜி.கே.வாசன் எம்.பி. முன்னிலை நடந்தது.

*ஈரோட்டில் த.மா.கா.வுடன் காமராஜர் மக்கள் கட்சியை இணைக்கும் விழா - ஜி.கே.வாசன் எம்.பி. முன்னிலை நடந்தது.*

**************************

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் காமராஜர் மக்கள் கட்சியை இணைக்கும் விழா ஈரோடு வில்லரசம்பட்டியில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. விழாவுக்கு த.மா.கா.தலைவர் .ஜி.கே வாசன் எம்.பி தலைமை தாங்கினார்.

மாநில பொதுச்செயலாளர் யுவராஜா, துணைத் தலைவர் விடியல் சேகர், மாவட்ட தலைவர்கள் விஜயகுமார், சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

காமராஜர் மக்கள் கட்சி தலைவர் தமிழருவி மணியன் தலைமையில் அந்த கட்சியைச் சேர்ந்தவர்கள் ஜி. கே.வாசன் முன்னிலையில்  த.மா.கா.வில் இணைத்து கொண்டனர்.  

நிகழ்ச்சியை ஒட்டி ஈரோடு மாநகர் முழுவதும் கட்சிக்கொடி தோரணைகள் கட்டப்பட்டிருந்தன. விழா நடைபெறும் இடத்திற்கு தமிழக முழுவதும் இருந்து கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். குறிப்பாக கொங்கு மண்டல நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மா பழ வாழை எனத் தொண்டர்கள் கொண்டு வந்து அன்பளிப்பாக வழங்கினர்.

காமராஜர் மற்றும் மூப்பனார் ஆகியோர் படத்திற்கு ஜிகே வாசன் எம்பி, தமிழருவி மணியன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

மாநில துணைத்தலைவர் விடியல் சேகர், மாநில பொதுச்செயலாளர் யுவராஜா, மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார் ஆகியோர் வரவேற்று பேசினர். 
தமிழகம் முழுவதும் வந்திருந்த நிர்வாகிகள் அவர்கள் பாரம்பரிய படி நினைவு பரிசுகளை வழங்கினர்.
விழாவில் இளைஞர் சங்க நிர்வாகி ரமேஷ், பொருளாளர் ராமன், பிரகாஷ் ஜெயின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.