வெள்ளி, 20 செப்டம்பர், 2024

சேலத்தில் கிரிஸ்டல் நிறுவனத்தின் சார்பில் கட்டுமான பொருட்கள் கண்காட்சி. மேயர் ராமச்சந்திரன், டி. எம் .செல்வகணபதி எம் .பி., ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

சேலத்தில் கிரிஸ்டல் நிறுவனத்தின் சார்பில் கட்டுமான பொருட்கள் கண்காட்சி. மேயர் ராமச்சந்திரன், டி. எம் .செல்வகணபதி எம் .பி., ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சேலத்தில்   கட்டுமான பொருட்கள் கண்காட்சியை  
மேயர் ராமச்சந்திரன், டி. எம் .செல்வகணபதி எம் .பி., ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர். 

அழகழகான கட்டிடங்களும், கண்ணை கவரும் வீடுகளும் மாநகரை அழகு படுத்துகின்றன. அந்த வகையில் ஒவ்வொருவருக்கும்   அத்தியாவசிய  தேவையாக வீடுகள், கட்டிடங்கள் உள்ளது.  ஒவ்வொருவரும் தங்கள் கனவு இல்லத்தை தங்களது ரசனைக்கேற்ப வடிவமைத்து வருகிறார்கள்.
அந்த வகையில் தங்களது கனவு இல்லத்தை தாங்கள் நினைத்தபடி பிரமாண்டமாக கட்ட  அனைத்து பொருட்களையும் ஒரே இடத்தில் தேர்வு செய்யும் வகையில் சேலத்தில்  கிறிஸ்டல் ‌ கட்டுமான பொருட்கள் கண்காட்சி சேலம் ஐந்து ரோடு ரத்தினவேல் ஜெயக்குமார் மண்டபத்தில் இன்று காலை தொடங்கியது . இன்று 20ந் தேதி முதல் வருகிற 2 2 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியை கிரிஸ்டல் நிறுவனத்தைச் சார்ந்த திருமதி அர்ச்சனா தலைமையில் நடைபெற்ற இந்த திறப்பு விழாவில்
சேலம் மாநகராட்சி மேயர் ஆ.ராமச்சந்திரன், சேலம் பாராளுமன்ற தொகுதி எம்பியும், மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான டி.எம். .செல்வகணபதி, சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ ஆகியோர் குத்து விளக்கு ஏற்றியும் ரிப்பன் வெட்டியும்   தொடங்கி வைத்தனர்.
இந்த பொருட்காட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுமான பொருட்கள் உள்ள அரங்குகள்  கண்காட்சிக்கும் விற்பனைக்கும் கண்ணை கவரும் வகையில் பார்த்தவுடன் வாங்கும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளன .இதில் குறிப்பாக செந்தூர் பிளைவுட்,  டைகர் சோலார்  பவர் சிஸ்டம்,   விதவிதமான வீட்டை அழகுப்படுத்தும் கண்ணாடிகள், அனைத்து ரகங்களில் டைல்ஸ்கள், கேரள உட் அண்ட் பர்னிச்சர்கள், குடிநீர் குழாய்கள்,    இரும்பு பைப்புகள் , பல்வேறு வகையான குடிநீர் நல்லிகள் , சிசிடிவி மற்றும் சூழலும்  கேமராக்கள், சிமெண்ட் கல்கள், ஹலோ பிளாக்குகள், ஹோம் தியேட்டர், பெயிண்ட் ரகங்கள், வீட்டு அலங்கார பொருட்கள் ,தகர கூரைகள், ஏசி, மின்விசிறிகள் உள்பட எலக்ட்ரானிக் பொருட்கள் , தானியங்கும் சுவிட்ச்சிகள்,ஹார்டுவேர்ஸ் பொருட்கள், வாட்டர் பில்டர் ,சோபா ,கட்டில் ,கல் சிலைகள், லாக்கர்கள், பூட்டுகள் , நிலம் வாங்குவதற்கான ரியல் எஸ்டேட் அரங்குகள், இரும்பு கம்பிகள் , டைனிங் டேபிள்கள் ஊஞ்சல்கள் உட்பட வீடு கட்டவும் வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களும் இந்த அரங்குகளில்  இடம்பெற்றுள்ளன . 
குறைந்த விலையில் தரமாக வீடு கட்ட மற்றும் வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களும் இங்கு வாங்கும் வகையில் சிறப்பான ஏற்பாடுகளும் ,கடன் வசதிகள் செய்து கொடுக்க  ஏற்பாடுகளும் இங்கு செய்யப்பட்டுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை கிறிஸ்டல் கட்டுமான பொருட்கள் கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் அப்சனா மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர். 
இந்த திறப்பு விழாவில் நாமக்கல் மாவட்ட சிவில் இன்ஜினியர் அசோசியேஷன் நிர்வாகிகள் ,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் அன்சர் பாஷா ,தருமபுரி மாவட்ட செயலாளர் சிராஜுதீன் உள்பட பலர் உடன் இருந்தனர்.


வியாழன், 19 செப்டம்பர், 2024

அந்தியூரில் வேலை வாங்கித் தருவதாக ரூ.29 லட்சம் மோசடி: அரசு பேருந்து ஓட்டுநர் கைது!

அந்தியூரில் வேலை வாங்கித் தருவதாக ரூ.29 லட்சம் மோசடி: அரசு பேருந்து ஓட்டுநர் கைது!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் சாமிக்கண்ணு (வயது 56). இவர் அரசு போக்குவரத்துக் கழக அந்தியூர் கிளையில் நடத்துநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் விஜய், பி.இ. பட்டப்படிப்பு படித்து உள்ளார். 

இந்நிலையில், சாமிக்கண்ணுக்கும், அரசு போக்குவரத்துக் கழக கோபிசெட்டிபாளையம் கிளையில் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் சாமியப்பன் (வயது 54) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. 

அப்போது, சாமிகண்ணுவிடம் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த மகேந்திர ராஜா என்பவரை தொலைப்பேசி மூலம் அறிமுகப்படுத்தி, விஜய்க்கு வருமான வரித்துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி, அவரிடம் கடந்த 2022ம் தேதி ஆண்டு மே மாதம் 30ம் தேதி ரூ.15 லட்சத்தை சாமியப்பன் பெற்றார். 

இதையடுத்து, கடந்த 2022ம் ஆண்டு ஜூன் மாதம் 27ம் தேதி விஜய்யை டெல்லி அழைத்துச் சென்று மகேந்திரராஜாவை அறிமுகப்படுத்தி வேலை ஆணையை சாமியப்பன் வழங்கியுள்ளார். 

பின்னர், 2022ம் ஆண்டு ஜூலை மாதம் 12ம் தேதி ரூ.14 லட்சத்தை பெற்றுக் கொண்டு, விஜய்யிடம் கொடுத்த ஆணையை சாமியப்பன் மீண்டும் வாங்கிக் கொண்டு, மெயிலில் வேலைக்கான ஆணை வரும் என்று கூறியுள்ளார். 

ஆனால், பல மாதங்கள் ஆகியும் மெயிலில் வேலைக்கான ஆணை வராததால் ஏமாற்றம் அடைந்தததை உணர்ந்த சாமிக்கண்ணு இதுகுறித்து அந்தியூர் காவல் நிலையத்தில் கடந்த 5ம் தேதி புகார் அளித்தார்.

இதனையடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து ரூ.29 லட்சம் பணத்தை பெற்றுக் கொண்டு மோசடி செய்த சாமியப்பனை போலீசார் கைது செய்தனர். மேலும், இதுகுறித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் நாளை (செப்.21) மின்தடை

ஈரோடு மாவட்டத்தில் நாளை (செப்.21) மின்தடை

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, வெண்டிபாளையம், அந்தியூர், பவானி ஊராட்சிக்கோட்டை, கோபி நல்லக்கவுண்டன்பாளையம், சத்தி செண்பகபுதூர், கொடுமுடி, கஸ்பாபேட்டை ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (செப்.21) சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால், நாளை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு துணை மின் நிலையம் (மின்தடை நேரம் - காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- திருநகர் காலனி, ஈரோடு பேருந்து நிலையம், காந்திஜி ரோடு, ஈ.வி.என்.ரோடு, ஆர்.கே.வி. ரோடு, பிரப் ரோடு, வீரப்பன்சத்திரம், இடையன்காட்டு வலசு, முனிசிபல்காலனி, ஆசிரியர் காலனி, பெருந்துறை ரோடு, சம்பத்நகர், வெட்டுக்காட்டு வலசு, மாணிக்கம்பாளையம், பாண்டியன் நகர், சக்திநகர், வக்கீல்தோட்டம், பெரியவலசு, பாப்பாத்திக்காடு, பாரதிதாசன் வீதி, முனியப்பன்கோவில் வீதி, நாராயணவலக, டவர்லைன் காலனி, திருமால்நகர், கருங்கல்பாளையம், கே.என்.கே.ரோடு, மூலப்பட்டறை, சத்தி ரோடு மற்றும் நேதாஜி ரோடு.

வெண்டிபாளையம் துணை மின் நிலையம் (மின்தடை நேரம் - காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- வெண்டிபாளையம், கோணவாய்க்கால், மோளகவுண்டன்பாளையம், கொல்லம்பாளையம் ஹவு சிங் யூனிட், நாடார் மேடு (ஒரு பகுதி), சாஸ்திரி நகர் (ஒரு பகுதி), நொச்சிக்காட்டுவலசு, ரீட்டா பள்ளி பகுதி, ஜீவா நகர், சேரன் நகர், சோலார், எடீசியா தொழிற்பேட்டை (சோலார்), போக்குவரத்து நகர், சோலார்புதூர், நகராட்சி நகர், லக்காபுரம், புதுவலசு. பரிசல்துறை, கருக்கம்பாளையம், குதிரைப்பாளி. 46 புதூர் (19 ரோடு பகுதி), பச்சபாளி ஒரு பகுதி, சஞ்சய் நகர், பாலுசாமி நகர் மற்றும் சி.எஸ்.ஐ. காலனி.

அந்தியூர் துணை மின் நிலையம் (மின்தடை நேரம் - காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- அந்தியூர், தோட்டகுடியாம்பாளையம், மைக்கேல்பாளையம், வெள்ளையம்பாளையம், பிரம்மதேசம், காட்டூர், செம்புளிச்சாம்பாளையம், பச்சாம்பாளையம், புதுப்பாளையம், சங்கராபாளையம், பருவாச்சி, எண்ணமங்கலம், கோவிலூர், கெட்டிசமுத்திரம், வெள்ளித்திருப்பூர் மற்றும் பர்கூர் மலைப்பகுதி.

பவானி ஊராட்சிக்கோட்டை துணை மின் நிலையம் (மின்தடை நேரம் - காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- பவானி நகர் முழுவதும், 3 ரோடு, ஊராட்சிகோட்டை, ஜீவா நகர், செங்காடு, குருப்பநாயக்கன் பாளையம், நடராஜபுரம், ராணா நகர், ஆண்டிகுளம், என்.ஜி.ஜி.ஓ., காலனி, கூடுதுறை, வி.மேட்டுப்பாளையம், சன்னியாசிபட்டி, வரதநல்லூர், சங்கரகவுண்டன் பாளையம், மொண்டிபாளையம், கன்னடிபாளையம், மைலம்பாடி, ஆண்டிபாளையம், சக்தி நகர், கொட்டுக்காட்டு புதூர், மோளகவுண்டன் புதூர், செலம்பகவுண்டன் பாளையம் மற்றும் வாய்க்கால்பாளையம்.

கோபி நல்லக்கவுண்டன்பாளையம் துணை மின் நிலையம் (மின்தடை நேரம் - காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- ல.கள்ளிப்பட்டி, தமிழ் நகர், மின் நகர், வாய்க்கால் ரோடு, செல்லப்பா நகர், கிருஷ்ணா நகர், திருமால் நகர், வேலுமணி நகர், கலைஞர் நகர், அய்யப்பா நகர், பெரியார் திடல், அரசு மருத்துவமனை வீதி, நல்லகவுண்டன்பாளையம், தொட்டிபாளையம், கலிங்கியம், அவ்வையார்பாளையம், வெள்ளாங்காட்டுபாளையம், மூலவாய்க்கால், அயலூர், செம்மாண்டம்பாளையம், பாலப்பாளையம், வெள்ளைகவுண்டன்புதூர், உருமம்பாளையம் மற்றும் கரட்டடிபாளையம்.

சத்தி செண்பகபுதூர் துணை மின் நிலையம் (மின்தடை நேரம் - காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- சத்தியமங்கலம், காந்திநகர், நேரு நகர், ரங்கசமுத்திரம், பேருந்து நிலையம், கோணமூலை, வி.ஐ.பி. நகர், செண்பகப்புதூர், உக்கரம், அரியப்பம்பாளையம், சுண்டக்காபாளையம், சின்னாரிபாளையம், சிக்கரசம்பாளையம், மற்றும் தாண்டம்பாளையம்.

கொடுமுடி துணை மின் நிலையம் (மின்தடை நேரம் - காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- கொடுமுடி, சாலைப்புதூர், வடக்கு மூர்த்திபாளையம், அரசம்பாளையம், சோளக்காளிபாளையம், நாகமநாய்க்கன்பாளையம்.குப்பம்பாளையம், ராசாம்பாளையம், பிலிக்கல்பாளையம் மற்றும் தளுவம்பாளையம், 

கஸ்பாபேட்டை துணை மின் நிலையம் (மின்தடை நேரம் - காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- கஸ்பாபேட்டை, முள்ளம்பரப்பு, சின்னியம்பாளையம், வேலங்காட்டுவலசு, பொட்டி நாயக்கன்வலசு, வீரப்பம்பாளையம், 46 புதூர், ரங்கம்பாளையம், பாரதிநகர், மூலப்பாளையம், செட்டிபாளையம், சடையம்பாளையம், திருப்பதி கார்டன், முத்துகவுண்டன்பாளையம், கருந்தேவன்பாளையம், சாவடிபாளையம் புதூர், கிளியம்பட்டி, ரகுபதிநாயக்கன்பாளையம், காகத்தான்வலசு, குறிக்காரன்பாளையம், செல்லப்பம்பாளையம், கோவிந்தநாயக்கன் பாளையம், நஞ்சை ஊத்துக்குளி, ஈபி நகர், என்ஜிஜிஓ நகர், கேஏஎஸ் நகர், இந்தியன் நகர் மற்றும் டெலிபோன் நகர்.
சேலத்தை அடுத்துள்ள பள்ளிப்பட்டியில் நிழல் தலைவராக செயல்படும் பெண் பஞ்சாயத்து தலைவரின் சித்தப்பா. தரமற்ற திட்ட பணிகளை செய்து கல்லா கட்டும் பெண் பஞ்சாயத்து தலைவர் மற்றும் அவரது சித்தப்பா. இவர்கள் மீதான புகார்கள் குறித்து கண்டும் காணாமலும் உள்ள அரசு துறை அதிகாரிகள்......

சேலத்தை அடுத்துள்ள பள்ளிப்பட்டியில் நிழல் தலைவராக செயல்படும் பெண் பஞ்சாயத்து தலைவரின் சித்தப்பா. தரமற்ற திட்ட பணிகளை செய்து கல்லா கட்டும் பெண் பஞ்சாயத்து தலைவர் மற்றும் அவரது சித்தப்பா. இவர்கள் மீதான புகார்கள் குறித்து கண்டும் காணாமலும் உள்ள அரசு துறை அதிகாரிகள்......

சேலம். 
S.K. சுரேஷ்பாபு.

சேலத்தை அடுத்துள்ள பள்ளிப்பட்டியில் நிழல் தலைவராக செயல்படும் பெண் பஞ்சாயத்து தலைவரின் சித்தப்பா. தரமற்ற திட்ட பணிகளை செய்து கல்லா கட்டும் பெண் பஞ்சாயத்து தலைவர் மற்றும் அவரது சித்தப்பா. இவர்கள் மீதான புகார்கள் குறித்து கண்டும் காணாமலும் உள்ள அரசு துறை அதிகாரிகள்......

சேலம் மாவட்டம் அயோத்தியபட்டணம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது பள்ளிபட்டி கிராமம். இந்த கிராம பஞ்சாயத்தின் தலைவராக இருப்பவர் ரோஷினி. இவரது சித்தப்பா கிருஷ்ணன். இவர்கள் இருவரின் மீதும் ஏராளமான குற்றச்சாட்டுகள் உள்ளன. ஒரு பெண் தலைவராக இருக்கும் பட்சத்தில் ஒன்று அவரது கணவர் பெண் தலைவருக்கு வழிகாட்டியாக இருந்து செயல்படலாம். ஆனால் இந்த பள்ளிப்பட்டி பஞ்சாயத்தில் பெண் தலைவருக்கு வழிகாட்டியாக நின்று சம்பந்தமே இல்லாமல் அவரது சித்தப்பா கிருஷ்ணன் செயல்பட்டு வருவது தற்பொழுது வரை பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. 
குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்கள் வசித்து வரும் பகுதிகளுக்கு ஒரு மாதிரியாகவும் உயர் வகுப்பை சார்ந்தவர்கள் வசித்து வரும் பகுதிகளுக்கு நிறைவாகவும் ஒவ்வொரு த்திட்ட பணி செய்து வருவது, தாழ்த்தப்பட்ட பகுதி மக்களின் வேதனை குரலாகவே உள்ளது. இந்த பஞ்சாயத்தில் சாதி பாகுபாடுகள் குறித்தும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் உயர் வகுப்பை சார்ந்தவர்கள் வசித்து வரும் பகுதிகளுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்தும் பலமுறை புகார்கள் குறித்தும் எந்த விதமான நடவடிக்கையும் இல்லை என்பது பாதிக்கப்பட்டுள்ள தாழ்த்தப்பட்ட பகுதி மக்களின் வேதனை குரலாகவே உள்ளது. 
இது சம்பந்தமாக தாழ்த்தப்பட்ட பகுதிகளில் நிலவி வரும் அடிப்படை தேவைகள் குறித்தும் மேம்படுத்தப்படாமல் உள்ள திட்ட பணிகள் குறித்தும் தமிழ்நாடு பாரத ரத்னா டாக்டர் அம்பேத்கர் கட்டிட தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனர் ராம்ஜி என்பவர் பள்ளிப்பட்டி பஞ்சாயத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் வழங்கப்பட்ட கோரிக்கைகள் அடங்கிய மனு தீர்மானங்களாகவும் நிறைவேற்றப்பட்டது. தீர்மானம் அடங்கிய கோரிக்கைகள் அனைத்தும் விரைவில் சரி செய்து தரப்படும் என்று கிராம சபை கூட்டத்தில் கலந்துகொண்ட வட்டார வளர்ச்சி உதவி அலுவலர்கள் உறுதியளித்தனர் ஆனால் தற்பொழுது வரை கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்பது வேதனைக்கு உரியதாகவே உள்ளது. 
இது போன்ற எந்தவிதமான அடிப்படை வசதிகளையும் செய்து தராமல் ஒப்பந்த பணிகளை மட்டுமே எடுத்து தரமற்ற சாலைகளை அமைத்தும் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு கமிஷன் தொகைகளை வழங்கி மீதமுள்ள திட்டப் பணிக்கான தொகைகளை தாங்களே பெற்றுக் கொள்வதிலும் முனைப்பு காட்டி வருகின்றனர் பஞ்சாயத்து தலைவரும் அவருக்கு நிழலாக செயல்பட்டு வரும் அவரது சித்தப்பா கிருஷ்ணன் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. 
இதனிடையே பள்ளிப்பட்டி பஞ்சாயத்து தலைவர் ரோஷினி மற்றும் அவரது சித்தப்பா கிருஷ்ணன் ஆகியோரின் செயல்பாடுகள் குறித்தும் பள்ளிப்பட்டி கிராமத்தில் அவர்கள் வெளிப்படுத்தி வரும் சாதிய பாகுபாடுகள் குறித்தும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அயோத்தியாபட்டினம் ஊராட்சி ஒன்றிய தலைவர் விஜயகுமாரிடம் பலமுறை தெரிவித்தும் அவர் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல் கண்டும் காணாமலேயே இருப்பது பாதிக்கப்பட்டுள்ள கிராம மக்களின் விரக்தி ஆகவே உள்ளது. இதனிடையே நடைபெற்று முடிந்த பள்ளிப்பட்டி கிராம சபை கூட்டத்தில் தாழ்த்தப்பட்ட பகுதி மக்களின் அடிப்படை தேவைகள் குறித்து கோரிக்கைகளாக வழங்கி அதனை தீர்மானமாகவும் நிறைவேற்றி தற்போது வரை எந்த விதமான அடிப்படை வசதிகளையும் செய்து தராமல் இருப்பதை அயோத்தியாபட்டினம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கவனத்திற்கு கொண்டு சென்ற தமிழ்நாடு பாரத ரத்னா டாக்டர் அம்பேத்கர் கட்டிட தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனர் ராம்ஜி கோரிக்கையை ஏற்று வட்டார வளர்ச்சி அலுவலர் பள்ளிப்பட்டி பஞ்சாயத்தில் நிறைவேற்றப்படாமல் உள்ள பணிகள் குறித்து நேற்று ஆய்வு மேற்கொண்டார் 
இந்த ஆய்வின் போது உயர் வகுப்பை சார்ந்தவர்கள் வசித்து வரும் பகுதிகளில் தரமான சாலைகளும் தாழ்த்தப்பட்ட பகுதி மக்கள் வசித்து வரும் பகுதிகளில் தரமற்ற சாலைகளும் அமைக்கப்பட்டது தெரியவந்தது அதுமட்டுமில்லாமல் தாழ்த்தப்பட்ட பகுதியில் வசித்து வரும் பொது மக்களின் குடிநீர் தேவைக்காக அமைக்கப்பட்ட பைப்புகள் அனைத்தும் சாக்கடைக்கு நடுவிலும் சாக்கடையை ஒட்டியும் அமைக்கப்பட்டுள்ளது கண்டு வட்டார வளர்ச்சி அலுவலர் அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து பணிகள் அனைத்தும் தரமான முறையில் செய்து பொதுமக்களிடம் அர்ப்பணிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட அயோத்தியபட்டினம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பந்தப்பட்ட பகுதி மக்களின் குறைகளையும் கேட்டறிந்தார். நிலைமை இப்படி இருக்க பள்ளிப்பட்டி பஞ்சாயத்தில் பணியாற்றி வந்த அலமேலு என்பவர் 100 நாள் வேலை வாய்ப்பு திட்ட பணிகளில் 95 லட்ச ரூபாய் மோசடி செய்ததாகவும் போலியாக குற்றம் சுமத்தி அவரை அவமானப்படுத்தி அலமேலு என்பவரை பணிநீக்கம் செய்தும் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர் பஞ்சாயத்து தலைவர் மற்றும் அவரது சித்தப்பா கிருஷ்ணன். ஒரு திட்டப் பணிக்கான தொகையை வழக்கும் அதிகாரம் தலைவரிடம் உள்ள நிலையில் 2 கோடி ரூபாய் அலமேலு என்பவர் எப்படி மோசடி செய்தார் என்ற கேள்வியும் எழாமல் இல்லை. மேலும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண் என்றும் தன்னை கேவலப்படுத்தியதாகவும் அலமேலு என்ற பெண் கொடுத்த புகார் மனு வீராணம் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. புகாரினை  பெற்றுக் கொண்ட வீராணம் காவல் துறையினர், பள்ளிப்பட்டி பஞ்சாயத்து தலைவர் ரோஷினி மற்றும் அவரது சித்தப்பா கிருஷ்ணன் ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் செய்யப்பட்ட வழக்கு தற்பொழுது வரை நிலுவையில் உள்ளது என்பது கூடுதல் தகவலாக உள்ளது.
இது போன்றவர்கள் மீது தமிழக அரசு எப்பொழுதுதான் நடவடிக்கை எடுக்கும் என்பது மட்டுமே பள்ளிப்பட்டி கிராம மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாகவே உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் 18 போலீசார் பணியிட மாற்றம்

ஈரோடு மாவட்டத்தில் 18 போலீசார் பணியிட மாற்றம்

ஈரோடு மாவட்டத்தில் தனிப்பிரிவில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய போலீசார் 18 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். அதன்படி, பங்களாப்புதூர் காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக பணியாற்றிய மஞ்சுநாதன் கடம்பூர் காவல் நிலைய தலைமை காவலராகவும், ஆப்பக்கூடல் தனிப்பிரிவு காவலராக பணியாற்றிய செந்தில்குமார் அந்தியூர் காவல் நிலைய தலைமை காவலராகவும், காஞ்சிக்கோவில் தனிப்பிரிவு தலைமை காவலராக பணியாற்றிய பாலசுப்பிரமணியம் சித்தோடு காவல் நிலைய தனிப்பிரிவுக்கும். சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக பணியாற்றிய சதாசிவம், அதே காவல் நிலையத்தில் தலைமை காவலராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

அதேபோல், புஞ்சைபுளியம்பட்டி காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக பணியாற்றிய பாலகிருஷ்ணன் சத்தியமங்கலம் காவல் நிலைய தலைமை காவலராகவும், பவானிசாகர் காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக பணியாற்றிய ரமேஷ் புஞ்சைபுளியம்பட்டி காவல் நிலைய தலைமை காவலராகவும், ஆசனூர் காவல் நிலையத்தில் தனிப்பிரிவில் பணியாற்றிய மூர்த்தி, அதே காவல் நிலையத்தில் தலைமை காவலராகவும், கடம்பூர் காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக பணியாற்றிய கங்காதரன், அதே காவல் நிலையத்தில் தலைமை காவலராகவும், சித்தோடு காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக பணியாற்றிய சந்தோஷ்குமார், அதே போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராகவும், தாளவாடி தனிப்பிரிவு காவலராக பணியாற்றிய சதீஷ்குமார் பங்களாப்புதூர் காவல் நிலைய தலைமை காவலராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

இதேபோல், தாளவாடி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றிய இளங்கோ, அதே காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராகவும், சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றிய கனகராஜ், அதே காவல் நிலையத்தில் தனிப்பிரிவுக்கும், புஞ்சைபுளியம்பட்டி காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றிய மகாதேவன், அதே காவல் நிலையத்தில் நிலைய தனிப்பிரிவுக்கும், நசியனூர் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பிரிவு முதல் நிலை காவலர் திருமூர்த்தி காஞ்சிக்கோவில் காவல் நிலைய தனிப்பிரிவுக்கும், பவானிசாகர் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றிய சக்திவேல், அதே காவல் நிலையத்தில் தனிப்பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

மேலும், பங்களாப்புதூர் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றிய பூபதி, கடம்பூர் காவல் நிலைய தனிப்பிரிவுக்கும், தாளவாடி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றிய அழகேசன் ஆசனூர் காவல் நிலையத்தில் தனிப்பிரிவுக்கும். மாவட்ட கியூ பிரிவு போலீஸ் ஏட்டு மெய்ந்தன் பங்களாப்புதூர் காவல் நிலைய தனிப்பிரிவு காவலராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் பிறப்பித்துள்ளார்.

உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த ஈரோட்டைச் சேர்ந்த 3 மாத குழந்தை

உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த ஈரோட்டைச் சேர்ந்த 3 மாத குழந்தை

ஈரோட்டில் 3 மாத குழந்தை ஒன்று உலக சாதனை படைத்துள்ள நிகழ்வு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஈரோடு பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் சுனில் ஹரிபாஸ்கர் ஐடி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி லோகித் சோனாலி. இந்த தம்பதிக்கு ஆதிரன் என்கிற 3 மாத ஆண் குழந்தை உள்ளது. 

இவரது மனைவி லோகித் சோனாலி தனது மகனுக்கு 2 மாதம் முதலே கருப்பு வெள்ளை நிற புகைப்படங்களை காண்பித்து வந்துள்ளார். இதன் பின்னர் சமூக வலைதளங்களில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நான்கு மாத பெண் குழந்தை புகைப்படங்களை காண்பித்து சரியாக சொல்லும் பிரிவில் நோபல் வேல்ட் ரெக்கார்ட்ஸ் செய்து இருப்பதை பார்த்துள்ளார்.

இந்நிலையில், தனது 3 மாத குழந்தை ஆதிரனுக்கு அவ்வப்போது புகைப்படங்களை காண்பித்து குழந்தை நினைவாற்றல் திறனை அதிகரித்து வந்துள்ளார். பின்னர், நோபல் வேல்ட் ரெக்கார்ட்ஸ் செய்வதற்காக வீடியோ எடுத்து அனுப்பி உள்ளார்.

இதனை ஆய்வு செய்த நோபல் வேல்ட் ரெக்கார்ட்ஸ் குழுவினர், 3 ஆண் குழந்தை ஆதிரன் பழங்கள்,காய்கறிகள்,எண்,வண்ணம் மற்றும் வடிவம் அடங்கிய 130 புகைப்பட அட்டைகளை சரியாக அடையாளம் காண்பித்து வெற்றி பெற்றான்.

இக்குழந்தை உலக சாதனைக்கு தகுதியானவர் என்று முடிவு செய்த நிலையில் குழந்தைக்கு சிறப்பு சான்றிதழை நோபல் வேல்ட் ரெக்கார்ட்ஸ் குழு வழங்கியுள்ளது. இந்நிலையில் உலக சாதனை படைத்த குழந்தையாக மாறியுள்ளார் 3 மாத குழந்தையான ஆதிரன்.

புதன், 18 செப்டம்பர், 2024

பேருந்து நிலைய கழிப்பிடத்தை சுத்தம் செய்ய மனு குடுங்க..! எம்எல்ஏவிடம் சுகாதார ஆய்வாளர் பகீர்..!

பேருந்து நிலைய கழிப்பிடத்தை சுத்தம் செய்ய மனு குடுங்க..! எம்எல்ஏவிடம் சுகாதார ஆய்வாளர் பகீர்..!

ஈரோடு மாவட்டம் புன்செய்புளியம்பட்டி நகராட்சி பேருந்து நிலையத்தில் பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் அ.பண்ணாரி ஆய்வு மேற்கொண்டார்.  அப்போது, பேருந்து நிலைய இலவச கழிப்பிடம் துர்நாற்றம் வீசியது. இதனை, சுத்தமாக வைத்துக் கொள்ள நகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அதற்கு, சுகாதார ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி, கோரிக்கை எதுவாக இருந்தாலும் மனுவாக எழுதிக் கொடுங்கள் நடவடிக்கை எடுக்கிறோம்‌ என மிரட்டியுள்ளார். இதனால் ஆவேசம் அடைந்த சட்டமன்ற உறுப்பினர் பண்ணாரி ஒவ்வொன்றையும் கோரிக்கையாக எழுதி கொடுத்தால்தான் வேலை செய்வீர்களா என சரமாரியாக கேள்வி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர், இதுகுறித்து சட்டமன்ற உறுப்பினர் பண்ணாரி கூறியதாவது, நகராட்சி நிர்வாகம் நகராட்சியாக செயல்படவில்லை. சர்வாதிகார போக்குடன் செயல்படுகிறது. இதற்கு, மாவட்ட ஆட்சியர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளேன். மனுவாக எழுதி கொடுத்தால் நடவடிக்கை எடுப்போம் என்று எம்எல்ஏவான என்னயே மிரட்டுகிறார்கள். இங்கு, அதிகாரிகள் யாரும் வேலை செய்வதில்லை.

எனவே, உடனடியாக, ஆட்சியர் இதுகுறித்து விசாரித்து நகராட்சி ஆணையாளர், சுகாதார ஆய்வாளர் ஆகிய இருவரையும் பணி நீக்கம் செய்ய வேண்டும். இல்லையெனில், அதிமுக சார்பில் மாபெரும் போராட்டங்கள் நடத்தப்படும் என்று கூறினார்.