செவ்வாய், 24 செப்டம்பர், 2024

கர்நாடகாவில் இருந்து சத்தியமங்கலத்துக்கு கடத்தப்பட்ட ரூ.9.2 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்: 2 பேர் கைது

கர்நாடகாவில் இருந்து சத்தியமங்கலத்துக்கு கடத்தப்பட்ட ரூ.9.2 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்: 2 பேர் கைது

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூரில் கர்நாடக மாநிலம் கொல்லேகால் செல்லும் சாலையில் பர்கூர் போலீசார் நேற்று வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த ஒரு மினி லாரியை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அதில் சர்க்கரை மூட்டைகள் ஏற்பட்டப்பட்டு இருந்தன.

மேலும், சர்க்கரை மூட்டைகளுக்கு இடையே சந்தேகப்படும் வகையில் சில மூட்டைகள் இருந்தன. உடனே போலீசார் அந்த மூட்டைகளை பிரித்து பார்த்தனர். அதில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தன.

மொத்தம் 129 மூட்டைகளில் 1,220 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்கள் இருந்தன. இதையடுத்து போலீசார் மினி லாரி டிரைவரிடமும், உடன் வந்தவரிடம் விசாரணை நடத்தினர். அதில், மினி லாரியை ஓட்டி வந்தவர் சத்தியமங்கலம் ரங்கசமுத்திரத்தை சேர்ந்த விக்னேஷ்வரன் (வயது 31), உடன் வந்தவர் மினி லாரி உரிமையாளரான ஸ்ரீநாத் (வயது 31) ஆகியோர் என்பது தெரியவந்தது.

இருவரும் கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரிலிருந்து சத்தியமங்கலத்துக்கு விற்பனைக்காக புகையிலை பொருட்களை கடத்தி வந்ததும் தெரிந்தது. இதைத்தொடர்ந்து போலீ சார் விக்னேஷ்வரன், ஸ்ரீநாத் ஆகிய இருவரையும் கைது செய்து, புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.9 லட்சத்து 23 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஈரோடு மாவட்டத்தில் நாளை (செப்.26) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் நாளை (செப்.26) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் காசிபாளையம், கவுந்தப்பாடி, தாளவாடி மற்றும் என்.மேட்டுப்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (செப்டம்பர் 26) வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. 
இதனால், கீழ்க்கண்ட இந்தப் பகுதிகளில் நாளை குறிப்பிட்டுள்ள நேரம் மட்டும் மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு காசிபாளையம் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):-

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- ஈரோடு சூரம்பட்டிவலசு, அணைக்கட்டு ரோடு, சங்குநகர், சேரன்நகர், மாதவி வீதி, டாக்டர் ராதாகிருஷ்ணன் ரோடு, கோவலன்வீதி, காமராஜர் வீதி, நேருவீதி, தாதுக்காடு, நேதாஜி வீதி, சாஸ்திரி ரோடு, ரயில்நகர், கே.கே.நகர், சென்னிமலை ரோடு, ரங்கம்பாளையம், இரணியன் வீதி, பெரியசடையம்பாளையம், சிவம்நகர், அண்ணாநகர், சேனாதிபதிபாளையம், இண்டஸ்டிரியல் எஸ்டேட், காசிபாளையம், சாஸ்திரிநகர், ஜீவாநகர், மூலப்பாளையம், நாடார்மேடு, கொல்லம்பாளையம், பச்சப்பாளி, செந்தில்நகர், காந்திஜிரோடு. ஈ.வி.என்.ரோடு, முத்தம்பாளையம் வீட்டுவசதி வாரியம் பகுதி 1 முதல் 8 வரை, அம்பிகைநகர், அன்னைநகர், நல்லியம்பாளையம், லட்சுமிகார்டன், பாலாஜிகார்டன், லட்சுமிநகர், தெற்குபள்ளம், சுத்தானந்தன்நகர். ஜீவானந்தம்ரோடு, தங்கப்பெருமாள் வீதி, ஈஸ்வரன் பிள்ளை வீதி, கள்ளுக்கடைமேடு மற்றும் பழைய ரயில் நிலையம்.

கவுந்தப்பாடி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- கவுந்தப்பாடி, கொளத்துப்பாளையம், ஓடத்துறை, பெத்தாம்பாளையம், எல்லீஸ்பேட்டை, சிங்காநல்லூர், பெருந்தலையூர், வெள்ளாங்கோவில், ஆப்பக்கூடல், கிருஷ்ணாபுரம், தருமாபுரி, கவுந்தப்பாடிபுதூர், மாரப்பம்பாளையம், தன்னாசிபட்டி, பாண்டியம்பாளையம், குஞ்சரமடை, ஓடமேடு, கருக் கம்பாளையம், கண்ணாடிபுதூர், மாணிக்கவலசு, அய்யன்வலசு, மணிபுரம், விராலிமேடு, தங்கமேடு செந்தாம்பாளையம், செட்டிபாளையம், ஆவரங்காட்டு வலசு, ஆலந்தூர், கவுண்டன்பாளையம், செரயாம்பாளையம் மற்றும் பி.மேட்டுப்பாளையம்

தாளவாடி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- தாளவாடி,தொட்டகாஜனூர்,சூசையபுரம், அருளவாடி,சிமிட்டஹள்ளி,கெட்டவாடி, சிக்கள்ளி மற்றும் தலமலை.

என்.மேட்டுப்பாளையம் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- திருமநாதம்பாளையம், சூரியப்பம்பாளையம், மாமரத்துப்பாளையம், ஆலம்பாளையம், கடசெல்லிபாளையம், குறிச்சி, தோட்டத்துப்பாளையம், கடுக்காமடை, காளியப்பம்பாளையம், என். மேட்டுப்பாளையம், நல்லிகவுண்டம்பாளையம், சொக்குமாரிபாளையம், பாப்பநாயக்கன் பாளையம், மற்றும் அரசன் குட்டைபுதூர்.
பெத்தாம்பாளையம், நல்லாம்பட்டி பேரூராட்சிகளில் ரூ.2.60 கோடியில் புதிய பணிகள்

பெத்தாம்பாளையம், நல்லாம்பட்டி பேரூராட்சிகளில் ரூ.2.60 கோடியில் புதிய பணிகள்

ஈரோடு மாவட்டம், பெத்தாம்பாளையம் மற்றும் நல்லாம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி ரூ.2.60 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், பெத்தாம்பாளையம் பேரூராட்சி, வார்டு எண்.09 பொன்னான்டாவலசு தேவாளிபாறை நெசவாளர்காலனியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் ரூ.52 லட்சம் மதிப்பீட்டில் 750 மீ நீளத்திற்கு மண்சாலையினை தார்சாலையாக அமைக்கும் பணியினை அமைச்சர் முத்துசாமி துவங்கி வைத்தார்.
தொடர்ந்து, அதேப் பகுதியில் நகர்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ஈரோடு திங்களூர் மெயின்ரோடு கரிச்சிகாடு பிரிவிலிருந்து பொன்னான்டாவலசு மாரியம்மன்கோவில் உள்ள பழுதுபட்ட தார்சாலையினை ரூ.52 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பித்தல் பணியினையும் அவர் துவக்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, மாநில நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.77.89 லட்சம் மதிப்பீட்டில் காலனி பகுதியில் பழுதுபட்ட தார்சாலை புதுப்பித்தல் பணியினையும், பெத்தாம்பாளையம் பேரூராட்சி வார்டு எண். 13, கருக்கம்பாளையம் புதூர் பகுதியில் ரூ.36.50 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய கூடம் பராமரிப்பு பணி மற்றும் முதல் தளத்தில் சமையல் அறை, உணவு உண்ணும் அறை அமைக்கும் பணியினையும் துவக்கி வைத்தார்.

மேலும், நல்லாம்பட்டி பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.41.50 லட்சம் மதிப்பீட்டில் வார சந்தையில் கூடுதல் கட்டிடம் கட்டும் பணி என மொத்தம் ரூ.2.60 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

இதனையடுத்து, பெத்தாம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் செங்கோடம்பாளையம் பகுதியில் 211 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில், பகுதிநேர நியாய விலைக்கடையினை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

முன்னதாக, பெருந்துறை சாலை, வாய்க்கால்மேடு நந்தா கல்லூரி அருகில் பனை விதை நடும் விழாவினை துவக்கி வைத்து, பனை விதைகளை நட்டு வைத்தார். மேலும், பெத்தாம்பாளையம் பேரூராட்சியில் இரண்டாயிரமாவது மரக்கன்று நடும் பணியினை துவக்கி வைத்து, மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, ஈரோடு மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் கணேசன் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஈரோட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாமில் 40 பேருக்கு பணி ஆணை

ஈரோட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாமில் 40 பேருக்கு பணி ஆணை

ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கராவின் வழிகாட்டுதலின்படி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், மாவட்ட நிர்வாகம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமை இன்று (24ம் தேதி) நடத்தியது.

இந்த முகாமில் 14க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்களும், 5 திறன் பயிற்சி மையங்களும் பங்கேற்றன. 100-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக நடைபெற்ற இம்முகாமில் 135 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டதில், 40 மாற்றுத்திறனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, தேர்வு பெற்றதற்கான சான்று வழங்கப்பட்டது. மேலும், இம்முகாமில் இலவச திறன் பயிற்சி பதிவு, சுயதொழில் செய்வதற்கான இலவச வழிகாட்டுதல் வழங்கப்பட்டது.

இம்முகாமில், உதவி இயக்குநர் (மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்) ராதிகா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பூபதி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சாந்தி உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சேலம் எடப்பாடி வெள்ள கவுண்டனூர் அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோவிலுக்கு சொந்தமான 15 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து மதிப்பிலான ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு திருக்கோவிலுக்கு சுவாதீனம் செய்யப்பட்டது.

சேலம் எடப்பாடி வெள்ள கவுண்டனூர் அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோவிலுக்கு சொந்தமான 15 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து மதிப்பிலான ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு திருக்கோவிலுக்கு சுவாதீனம் செய்யப்பட்டது.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் எடப்பாடி வெள்ள கவுண்டனூர் அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோவிலுக்கு சொந்தமான 15 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து மதிப்பிலான ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு திருக்கோவிலுக்கு சுவாதீனம் செய்யப்பட்டது.

சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டம் மொரசம்பட்டி வெள்ள கவுண்டனூர் அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோவிலுக்கு சொந்தமான வெள்ளரி வெள்ளி கிராமம் சர்வே எண் 104/1, புஞ்சை பரப்பு - 2.18.50. 104/2 புஞ்சை பரப்பு 0.18.00, சர்வே எண் 281/1 பரப்பு 1.39.00 மொத்த பரப்பு 9.27 ஏக்கர் கொண்ட நிலங்கள் மற்றும் அந்நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள திருமண மண்டபம் 12675 சதுர அடி ஆகியவைகள் சேலம் இணை ஆணையர் நீதிமன்ற பலவகை மனு எண் 09/2017 மற்றும் 10/2017.மற்றும் உயர் நீதிமன்ற ரிட் மனு 1390/2019 உத்தரவுகளின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 
சேலம் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் திரு கே ராஜா அவர்களால் ஆலய நிலங்கள் தனி வட்டாட்சியர் திரு பாலாஜி எடப்பாடி காவல் ஆய்வாளர் திருமதி எஸ் பேபி சரக ஆய்வாளர் திருமதி ஜோதிலட்சுமி பரம்பரை அறங்காவலர்கள் திரு ஜே கிரிதரன் திரு ரவிச்சந்திரன் மற்றும் இத்துறை அலுவலர்கள் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சுவாதீனம் பெறப்பட்டது இதன் தற்கால சந்தை மதிப்பு தோராயமாக ரூபாய் 15 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. 
ஈரோடு பெரும்பள்ளம் ஓடையில் ஆகாயத்தாமரை அகற்றும் பணியை துவக்கி வைத்த அமைச்சர்

ஈரோடு பெரும்பள்ளம் ஓடையில் ஆகாயத்தாமரை அகற்றும் பணியை துவக்கி வைத்த அமைச்சர்

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட மண்டலம்-3 , முத்தம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் உள்ள பெரும்பள்ளம் ஓடையில் ஆகாயத்தாமரை அகற்றும் பணியினை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி இன்று (24ம் தேதி) துவக்கி வைத்தார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது, ஈரோடு சூரம்பட்டி அணைக்கட்டில் இருந்து நஞ்சை ஊத்துக்குளி வரை 13 கிலோமீட்டர் உள்ள பெரும்பள்ளம் ஓடையில், ரூ.21 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தூர்வாருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில், முதற்கட்டமாக 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல இந்த ஓடையிலே குப்பைகளை போடாமல் இருப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் குப்பைகள் அதிகளவில் கொட்டப்படும் இடங்களில் வேலி அமைத்திடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இன்றைக்கு ஏறத்தாழ 12 ஏக்கர் கொண்ட இந்த குளத்தில் இருக்கிற ஆகாயத்தாமரை சுத்தம் செய்வதற்காக ஈரோடை அமைப்பின் மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவாக அப்பணிகள் முடிக்கப்படும். அந்த 12 ஏக்கர் முழுவதும் ஆகாயத்தாமரைதான் இருக்கிறது. எனவே அனைத்தையும் சுத்தம் செய்யவதற்கு ஈரோடை அமைப்பு முன்வந்துள்ளது. தூர்வாருகிற பணி நடைபெற்று வருகிறது. அப்பணிகளும் விரைவில் முடிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம், துணை மேயர் வே.செல்வராஜ், ஆணையாளர் மனீஷ், மாநகர பொறியாளர் விஜயகுமார், கண்காணிப்பு பொறியாளர் (நீர்வள ஆதாரத் துறை) ஜெகதீசன், செயற்பொறியாளர் (கீழ்பவானி வடிநில கோட்டம்) திருமூர்த்தி, 1ம் மண்டல குழு தலைவர் பி.கே.பழனிசாமி, ஈரோடை அமைப்பின் தலைவர் டாக்டர்.சுதாகர் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


சேலத்தில் காந்தி பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்தான ஆலோசனைக் கூட்டம் சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் நடைபெற்றது.

சேலத்தில் காந்தி பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்தான ஆலோசனைக் கூட்டம் சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் நடைபெற்றது.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலத்தில் காந்தி பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்தான ஆலோசனைக் கூட்டம் சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் நடைபெற்றது. 

சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்திற்கு கட்சியின் சேலம் மாநகர் மாவட்ட தலைவர் A.R.B. பாஸ்கர் கிளம்பிட்டாகினார். கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை மற்றும் தேசிய தலைவர்களில் ஒருவரான K.V. தங்கபாலு ஆகியோரின்  அறிவுறுத்தலின் பேரிலும் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி, துணைத் தலைவர்கள் திருமுருகன் மற்றும் மொட்டையாண்டி, பொதுக்குழு உறுப்பினர் பச்சப்பட்டி பழனிச்சாமி, வர்த்தக பிரிவு தலைவர் M.D.சுப்பிரமணி உள்ளிட்ட ஒரு முன்னிலை வகித்த இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது. 
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் வரும் அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி பிறந்த நாள் விழாவை தொடர்ந்து எட்டு தினங்களுக்கு சேலம் மாநகர் மாவட்ட பகுதிகளில் எவ்வாறெல்லாம் சிறப்பாக கொண்டாடுவது என்றும் ஆலோசித்து முடிவு செய்யப்பட்டது. மேலும் காந்தி பிறந்தநாள் விழாவின் போது நடை பயணத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் சேலம் மாநகர் மாவட்ட தலைவர் பாஸ்கர் தெரிவித்தார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில், கட்சி நிர்வாகிகள் குமரேசன், சாந்தமூர்த்தி, நிசார், 42 வது டிவிஷன் தலைவர் சிவாஜி உட்பட கட்சி நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.