திங்கள், 4 நவம்பர், 2024
ஈரோட்டில் பெண் குழந்தை விற்பனை புகாரில் மேலும் 4 பேர் கைது
கோபியில் தீபாவளி சீட்டு நடத்தி மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார்
ஈரோட்டில் தனியார் கல்லூரி வாகன ஓட்டுநருக்கு வலிப்பு: மரத்தில் மோதி விபத்து
ஈரோடு மாவட்டம் திண்டல் அருகே தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இன்று வழக்கம் போல் கல்லூரி முடிந்து மாணவர்கள் வீடு திரும்புவதற்காக கல்லூரி வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது, செங்கோடம்பாளையம் என்ற பகுதியில் உள்ள சாலையில் கல்லூரி வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால், வாகனம் நிலை தடுமாறிய அருகே இருந்த மரத்தின் மீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது.
இதில் கல்லூரி வாகனத்தில் பயணித்த 15 மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு காயங்கள் ஏற்பட்டு, அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும் கல்லூரி வாகன ஓட்டுநரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
கல்லூரி வாகன ஓட்டுநருக்கு திடீர் வலிப்பு ஏற்பட்டு வாகனம் விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மொடக்குறிச்சி அருகே அரசு பள்ளி தலைமை ஆசிரியை வீட்டில் 17 பவுன் நகை, ரூ.3 லட்சம் கொள்ளை
ஈரோடு மாவட்டம், நஞ்சை ஊத்துக்குளி அடுத்த செல்லப்பநாயக்கன்பாளையம், ஈ.பி நகரில் வசித்து வருப்பவர் விவசாயி சுப்பிரமணியம் (வயது 54). இவரது மனைவி அம்சாதேவி (வயது 52). 60 வேலம்பாளையம் நொச்சிக்காட்டுவலசில் உள்ள அரசு பள்ளி தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், இன்று (நவ.4) காலை வழக்கம்போல் சுப்பிரமணியம் மற்றும் அவரது மனைவி அம்சாதேவி தங்களது பணிக்கு சென்று விட்ட நிலையில், சுப்பிரமணியம் மதியம் 1.30 மணியளவில் மீண்டும் வீடு திரும்பி உள்ளார். அப்போது, வீட்டின் முன்பக்க கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த மெயின் கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 17 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், இதுகுறித்து ஈரோடு மொடக்குறிச்சி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
இதனை தொடந்து, ஈரோடு மாநகர காவல் துறை துணை கண்காணிப்பாளர் முருகேசன் தலைமையில், மொடக்குறிச்சி காவல் ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், காலை 11 மணிக்கு மேல் மதியம் 1.30க்குள் பட்டப்பகலில் இக்கொள்ளைச் சம்பவம் அரங்கேறி இருப்பது தெரியவந்தது. மேலும், இக்கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டுத்தியதோடு, பொதுமக்கள் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.