திங்கள், 4 நவம்பர், 2024

ஈரோடு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 'ஏய் தள்ளு தள்ளு' மக்கர் செய்த அரசு அதிகாரியின் வாகனம்

ஈரோடு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 'ஏய் தள்ளு தள்ளு' மக்கர் செய்த அரசு அதிகாரியின் வாகனம்

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று (நவ.4) திங்கட்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு அதிகாரிகள் கலந்து கொள்வதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வாகனத்தில் வந்து உள்ளனர்.
அப்போது, ஒரு அரசு அதிகாரியின் நான்கு சக்கர வாகனமானது (ஜீப்) ஸ்டார்ட் ஆகாமல் பழுதாகி நின்று உள்ளது. இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்த சிலர் பழுதாகி நின்ற அதிகாரியின் நான்கு சக்கர வாகனத்தை தள்ளி ஸ்டார்ட் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்தான வீடியோ பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது. மேலும், அந்த வாகனத்தில் பவானி வட்டாட்சியர் என்று குறிப்பிட்டிருந்தது.
ஈரோட்டில் பெண் குழந்தை விற்பனை புகாரில் மேலும் 4 பேர் கைது

ஈரோட்டில் பெண் குழந்தை விற்பனை புகாரில் மேலும் 4 பேர் கைது

ஈரோடு கனிராவுத்தர் குளம் மசூதி அருகே வசிப்பவர் நித்யா (வயது 28). இவரது சொந்த ஊர் தஞ்சாவூர் திருவையாறு திருப்பள்ளனம் மேல தெரு. இவருக்கு எடிசன் என்பவருடன் திருமணமாகி அம்முராணி என்ற பெண் குழந்தை உள்ளது.

எடிசனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து தற்போது ஈரோடு மாணிக்கம்பாளையம் முனியப்பன் கோவில் வீதி கிழக்குகாடு சந்திர மோகன் மகன் சந்தோஷ்குமாருடன் (வயது 28) இரண்டு ஆண்டாக வசித்து வருகிறார்.

சந்தோஷ்குமார் தற்போது நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மாம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே வசிக்கிறார். இவர்களுக்கு 40 நாட்களுக்கு முன் ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.

அந்த குழந்தையை நான்கரை லட்சம் ரூபாய்க்கு விற்றனர். பின்னர் நித்யா மனம் மாறினார். குழந்தை விற்றது குறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் மூலம் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்விவகாரத்தில் சந்தோஷ் குமார், செல்வி, ரேவதி, பானு, ராதாவை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், குழந்தையை விலைக்கு வாங்கிய தம்பதியான கன்னியாகுமரி தக்கலை கல்லுவிலை மேங்கா மண்டபம் பாலபள்ளியைச் சேர்ந்த ஜெயசந்திரன் (வயது 46), அவரது மனைவி அகிலா ராணி (வயது 38), தென்காசி சங்கரன்கோவில் பெரம்பத்துார் மேற்கு தெருவை சேர்ந்த புரோக்கர் ஜெயபாலன் (வயது 40) மற்றும் குழந்தையின் தாய் நித்யா ஆகிய நால்வரை ஈரோடு வீரப்பன்சத்திரம் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோபியில் தீபாவளி சீட்டு நடத்தி மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார்

கோபியில் தீபாவளி சீட்டு நடத்தி மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார்

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள சாமிநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் மகன் பழனிச்சாமி (வயது 45). மல்லிபாளையத்தை சேர்ந்தவர் மாகாளி மகன் கமலக்கண்ணன் (வயது 46). உறவினர்களான இவர்கள் இருவரும் கடந்த வருடம் முதல் தீபாவளி சீட்டு என்ற பெயரில் வார சீட்டு நடத்தி வந்துள்ளனர்.
இவர்கள் நடத்திய வாரச் சீட்டு திட்டத்தில் சாமிநாதபுரம், சமத்துவபுரம்,வாய்க்கால் ரோடு, பஜனைகோயில் வீதி, கல்ராமணி, மல்லி பாளையம், அளுக்குளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 400க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். வாரம் 100 ரூபாய் செலுத்துபவர்களுக்கு 52 வார முடிவில் தீபாவளி பண்டிகைக்கு ஒரு வாரத்திற்கு முன்பு 6 ஆயிரம் ரூபாய் பணமும், அரை கிலோ இனிப்பு மற்றும் அரை கிலோ காரமும் வழங்குவதாக கூறியுள்ளனர்.

இதை நம்பிய சுமார் 400க்கும் மேற்பட்டோர் வாரம் தோறும் 100 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை சீட்டு தொகையாக செலுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கு ஒரு வாரத்திற்கு முன்னரே முதிர்வு தொகை வழங்குவதாக கூறிய இருவரும் உறுதியளித்தவாறு முதிர்வு தொகையை வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இவ்வாறாக அவர்கள் பணம் வசூலித்து ரூ.15 லட்சம் வரை மோசடி செய்திருப்பதாக தெரிகிறது. இதனால் பணம் செலுத்தியவர்கள் ஏமாற்றம் அடைந்த நிலையில் பழனிசாமி மற்றும் கமலக்கண்ணனை தேடிய போது இருவரும் தலைமறைவாகி இருப்பது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 50 பேர் ஏமாற்றிய நபர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என கோபி காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர். 
ஈரோட்டில் தனியார் கல்லூரி வாகன ஓட்டுநருக்கு வலிப்பு: மரத்தில் மோதி விபத்து

ஈரோட்டில் தனியார் கல்லூரி வாகன ஓட்டுநருக்கு வலிப்பு: மரத்தில் மோதி விபத்து

ஈரோடு மாவட்டம் திண்டல் அருகே தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இன்று வழக்கம் போல் கல்லூரி முடிந்து மாணவர்கள் வீடு திரும்புவதற்காக கல்லூரி வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது, செங்கோடம்பாளையம் என்ற பகுதியில் உள்ள சாலையில் கல்லூரி வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால், வாகனம் நிலை தடுமாறிய அருகே இருந்த மரத்தின் மீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது.

இதில் கல்லூரி வாகனத்தில் பயணித்த 15 மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு காயங்கள் ஏற்பட்டு, அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும் கல்லூரி வாகன ஓட்டுநரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

கல்லூரி வாகன ஓட்டுநருக்கு திடீர் வலிப்பு ஏற்பட்டு வாகனம் விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மொடக்குறிச்சி அருகே அரசு பள்ளி தலைமை ஆசிரியை வீட்டில் 17 பவுன் நகை, ரூ.3 லட்சம் கொள்ளை

மொடக்குறிச்சி அருகே அரசு பள்ளி தலைமை ஆசிரியை வீட்டில் 17 பவுன் நகை, ரூ.3 லட்சம் கொள்ளை

ஈரோடு மாவட்டம், நஞ்சை ஊத்துக்குளி அடுத்த செல்லப்பநாயக்கன்பாளையம், ஈ.பி நகரில் வசித்து வருப்பவர் விவசாயி சுப்பிரமணியம் (வயது 54). இவரது மனைவி அம்சாதேவி (வயது 52). 60 வேலம்பாளையம் நொச்சிக்காட்டுவலசில் உள்ள அரசு பள்ளி தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். 

இந்நிலையில், இன்று (நவ.4) காலை வழக்கம்போல் சுப்பிரமணியம் மற்றும் அவரது மனைவி அம்சாதேவி தங்களது பணிக்கு சென்று விட்ட நிலையில், சுப்பிரமணியம் மதியம் 1.30 மணியளவில் மீண்டும் வீடு திரும்பி உள்ளார். அப்போது, வீட்டின் முன்பக்க கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த மெயின் கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 17 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், இதுகுறித்து ஈரோடு மொடக்குறிச்சி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

இதனை தொடந்து, ஈரோடு மாநகர காவல் துறை துணை கண்காணிப்பாளர் முருகேசன் தலைமையில், மொடக்குறிச்சி காவல் ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தினர்.  விசாரணையில், காலை 11 மணிக்கு மேல் மதியம் 1.30க்குள் பட்டப்பகலில் இக்கொள்ளைச் சம்பவம் அரங்கேறி இருப்பது தெரியவந்தது. மேலும், இக்கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டுத்தியதோடு, பொதுமக்கள் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஓமலூர் அருகே உள்ள 200 அருந்ததிய குடும்பங்கள் வாழும் பகுதிக்கு மயான வழி பாதை அமைத்து தர கோரி ஊர் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

ஓமலூர் அருகே உள்ள 200 அருந்ததிய குடும்பங்கள் வாழும் பகுதிக்கு மயான வழி பாதை அமைத்து தர கோரி ஊர் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

சேலம்.
S.K. சுரேஷ்பாபு. 

ஓமலூர் அருகே உள்ள 200 அருந்ததிய குடும்பங்கள் வாழும் பகுதிக்கு மயான வழி பாதை அமைத்து தர கோரி ஊர் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

சேலம் மாவட்ட ஓமலூர் வட்டம் சமுத்திரம் பணிக்கனூர் பகுதியில் சுமார் அருந்ததியர்கள் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.  அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட மயானத்தில் சடலங்களை எடுத்து செல்லும் பாதை மிகவும் மோசமாகவும் உள்ளது சடலத்தை எடுத்து செல்ல முடியாத அளவிற்கு உள்ளது. மழைக்காலங்களில் மழை நீர் தேங்கி நிற்பதால் மயானத்திற்கு பொதுமக்களால் செல்லமுடியவில்லை இந்த அவல நிலையை போக்க 50 ஆண்டுகளாகவே பலமுறை அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை தொடர்ந்து மழை பெய்து வருவதால் மயானத்துக்கு செல்ல புதிய பாதையை அமைத்து தர வேண்டி கிராம பஞ்சாயத்து நிர்வாகத்திற்கு பஞ்சாயத்து ராஜ் இடமும் கேட்டுள்ளோம்.
நீண்ட கால கோரிக்கையாக மயான பாதை வசதி ஏற்படுத்திக் கொடுக்க வலியுறுத்தி பல்வேறு மனுக்களையும் கொடுத்தோம்
தற்போது மழை பெய்து வருகிறது உடனடியாக நடவடிக்கை எடுத்து வழிப்பாதை செய்தி தரவேண்டும். தற்போது அதற்கான பணிகளை செய்து தர வேண்டி சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வருகை தந்து வருகை புரிந்து சேலம் மாவட்ட ஆட்சியரை கூட்டு நடவடிக்கை குழு தலைவர் சரஸ்ராம் ரவி தலைமையில் கோரிக்கை மனுவை வழங்கப்பட்டது இதனை அடுத்து நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மிகப்பெரிய அளவில் போராட்டத்தை கையில் எடுக்க உள்ளதாக கூட்டு நடவடிக்கை குழு சார்பில் சரஸ்ராம் ரவி தெரிவித்தார்.

ஞாயிறு, 3 நவம்பர், 2024

சேலம் அருகே தாக்குதல் நடைபெற்ற சம்பவத்தில் தா.வெ.க., நிர்வாகிகள் மற்றும் சிலர் ஈடுபட்டுள்ளனர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான் பேட்டி

சேலம் அருகே தாக்குதல் நடைபெற்ற சம்பவத்தில் தா.வெ.க., நிர்வாகிகள் மற்றும் சிலர் ஈடுபட்டுள்ளனர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான் பேட்டி

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சேலம் அருகே தாக்குதல் நடைபெற்ற சம்பவத்தில் தா.வெ.க., நிர்வாகிகள் மற்றும் சிலர் ஈடுபட்டுள்ளனர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான் பேட்டி

சேலம் இரும்பாலை அருகே பூச நாயக்கன்பட்டியில் இரு தரப்பினர்கள் இடையே சமூக இளைஞர்கள் மீது நேற்று முன்தினம் தாக்குதல் நடைபெற்றன மக்கள் அதிக நடமாட்டம் மிகுந்த இடத்தில் மது அருந்தியதை தட்டி கேட்ட தால் நடைபெற்ற இந்த தாக்குதலில் வீடுகளை சூறையாடி சதீஷ் குமார் ஜெயக்குமார் செல்வராஜ் வெங்கடாசலம் தமிழரசி உள்ளிட்டோர் மீது தாக்குதல் தாக்குதல் நடைபெற்றது இதில் காயமடைந்தவர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க ஆதித்தமிழர் பேரவையின் தலைவர் அதியமான் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளிடம் கூறும் போது பூச நாயக்கன்பட்டி பகுதியில் நடைபெற்ற சம்பவம் ஒரு தரப்பு மற்றொரு தரப்பினர் மீது தாக்குதல் நடைபெற்று உள்ளது இதில் சம்பந்தப்பட்ட 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் ஆனால் இந்த சம்பவத்திற்கு தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் வேறொரு சமூகத்தை சேர்ந்த சிலர் ஈடுபட்டுள்ளனர் அவர்கள் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர் தமிழக முழுவதும் ஆதிக்க சமூகத்தை அடக்கும் நிலை நீடித்து வருகிறது குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் குறிப்பாக பட்டியலின மக்களின் சொத்துக்களை அழிப்பதற்காகவே இதுபோன்று செயல்பட்டு வருகின்றனர். போலீசார் இனிவரும் காலங்களில் பட்டியல் இன சமூகத்தில் வசிக்கக்கூடிய பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தி இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் இந்த சம்பவத்திற்கு காரணமாக இருக்கின்ற தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் வேறொரு சமூகத்தை சேர்ந்த சிலர் உள்ளனர் அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார் பேட்டியின் போது ஆதித்தமிழர் பேரவை நிர்வாகிகள் ஏ டி ஆர் சந்திரன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.