சனி, 15 பிப்ரவரி, 2025
பவானி நகராட்சி பகுதியில் குடிநீர் திட்டப் பணிகள்: ஈரோடு ஆட்சியர் ஆய்வு
வெள்ளி, 14 பிப்ரவரி, 2025
திமுக மாமன்ற உறுப்பினர் தெய்வலிங்கம் புதிய அறக்கட்டளை துவக்கம். ஏழை எளியவர்களுக்கு உதவும் நோக்கில் துவங்கியுள்ளதாக மாமன்ற உறுப்பினர் தெய்வலிங்கம் தகவல்.
சித்தோடு: விவசாயிகளுக்கான மானிய விலை யூரியா தனியார் குடோனில் பதுக்கி கடத்தல்: 90 டன் பறிமுதல்
குத்துச்சண்டை போட்டியில் சாதனை.சேலம் மாணவர்களுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் ராஜேந்திரன் பாராட்டு.
சாமானிய மக்களுக்கு எதிராக செயல்படும் மாஃபியாக்களை இரும்பு கரம் கொண்டு கைது செய்ய வேண்டும். தமிழக முதல்வருக்கு மக்கள் தேசம் கட்சியின் தலைவர் ஆசை தம்பி சேலத்தில் வலியுறுத்தல்.
வியாழன், 13 பிப்ரவரி, 2025
ஈரோடு: பொதுக்கூட்ட மேடையில் வைக்கப்பட்டிருந்த பேனரில் எடப்பாடி பழனிசாமிக்கு இணையாக செங்கோட்டையன் புகைப்படம்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த அத்தாணியில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. வழக்கமாக அ.தி.மு.க. பொதுக்கூட்ட மேடையில் அமைக்கப்படும் பேனரில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவப்படங்கள். இடம்பெறும். மேலும் இந்த பேனரில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உருவப்படம் பெரிதாகவும், அதற்கடுத்து உள்ளூர் தலைவர்களின் படங்கள் சிறியதாகவும் இருக்கும்.
இந்த நிலையில், அத்தாணி அ.தி.மு.க. பொதுக்கூட்ட மேடையில் அமைக்கப்பட்ட பேனரில் வலது புறத்தில் ஜெயலலிதாவின் முழு உருவப்படமும், சிறியதாக இரட்டை இலை சின்னமும், இடது புறத்தில் எம்.ஜி.ஆரின் முழு உருவப்படமும், சிறியதாக முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் உருவப்படமும், நடுவில் எடப்பாடி பழனிசாமிக்கு நிகராக செங்கோட்டையனின் புகைப்படமும் இருக்குமாறு அமைக்கப்பட்டிருந்தது. இந்த பேனர் அ.தி.மு.க. வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.


