சனி, 13 டிசம்பர், 2025

திருவண்ணாமலையில் நடைபெறும் மண்டல இளைஞர் அணி சந்திப்பு நிகழ்வு. நிகழ்வுக்கான முன்னேற்பாடுகளை தீவிரமாக மேற்கொள்ளும் சேலம் கிச்சிப்பாளையம் மற்றும் அம்மாபேட்டை பகுதி இளைஞரணி பொறுப்பாளர் வெங்கடேசன். இளைஞர்கள் ஆர்வத்துடன் கட்சியில் இணைந்து மாநாட்டில் கலந்து கொள்ள முன் வருவதாக உற்சாகம்.

திருவண்ணாமலையில் நடைபெறும் மண்டல இளைஞர் அணி சந்திப்பு நிகழ்வு. நிகழ்வுக்கான முன்னேற்பாடுகளை தீவிரமாக மேற்கொள்ளும் சேலம் கிச்சிப்பாளையம் மற்றும் அம்மாபேட்டை பகுதி இளைஞரணி பொறுப்பாளர் வெங்கடேசன். இளைஞர்கள் ஆர்வத்துடன் கட்சியில் இணைந்து மாநாட்டில் கலந்து கொள்ள முன் வருவதாக உற்சாகம்.

சேலம். 
S.K. சுரேஷ் பாபு.

திருவண்ணாமலையில் நடைபெறும் மண்டல இளைஞர் அணி சந்திப்பு நிகழ்வு. நிகழ்வுக்கான முன்னேற்பாடுகளை தீவிரமாக மேற்கொள்ளும் சேலம் கிச்சிப்பாளையம் மற்றும் அம்மாபேட்டை பகுதி இளைஞரணி பொறுப்பாளர் வெங்கடேசன். இளைஞர்கள் ஆர்வத்துடன் கட்சியில் இணைந்து மாநாட்டில் கலந்து கொள்ள முன் வருவதாக உற்சாகம்.

தமிழகத்தில் வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு தற்பொழுதே அனைத்து அரசியல் கட்சிகளும் களப்பணிகளை எவ்வாறு செய்வது என்பது குறித்து தீவிர ஆலோசனைகள் அதற்கான முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வடக்கு மண்டல திமுக இளைஞர் அணி மண்டல நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இதற்காக கட்சி தலைமையின் சார்பில் தமிழக முதல்வரும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் உத்தரவின் பேரில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரிலும், மாவட்டம் வாரியாக இளைஞர் அணி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கான பணிகள் வழங்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் சேலம் மத்திய மாவட்ட திமுகவிற்கு உட்பட்ட பிச்சிப்பாளையம் மற்றும் அம்மாபேட்டை பகுதிக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் சேலம் மாநகர இணை இளைஞர் அணி துணை அமைப்பாளர் வெங்கடேஷ், 
தனக்கென்று ஒதுக்கப்பட்ட 4,900 உறுப்பினர்களுக்கு தலைவர் மற்றும் இளம் தலைவர் ஆகியோரின் புகைப்படங்கள் பொருத்தப்பட்ட டிஷ்கள் மற்றும் லோயர்கள் வழங்குவதுடன் கூடுதலாக அடையாள அட்டையையும் விநியோகித்து வருகின்றார். எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக திமுக அரசு மீண்டும் தமிழகத்தில் அமைய வேண்டும் என்பதன் ஒரே காரணத்திற்காக எனக்கு ஒதுக்கப்பட்ட பணியினை நான் சிறப்பாக செய்து வருகின்றேன் என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த பணியை மேற்கொண்டு வருவதாகவும், புதிதாக இளைஞர்கள் அனைவரும் திமுகவில் இணைந்து வருவது பெருமையாக உள்ளது என்றும் அவர்களுக்கும் டீஷர்ட்டுகள் லோயர்கள் மற்றும் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு அவர்களை மாநாட்டில் அழைத்து செல்வதில் நான் பெருமிதம் கொள்கிறேன் என்று பெருமைப்பட தெரிவித்தார் சேலம் மத்திய மாவட்ட திமுகவின் சேலம் மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் வெங்கடேஷ்.

வெள்ளி, 12 டிசம்பர், 2025

மேச்சேரியில் மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்த அதிகாரிகள் மீதும், மரங்களை வெட்டித் திருடிச் சென்றவர் மீதும் வழக்குப் பதிவு செய்ய, காவல் நிலையத்தில் சேலத்தைச் சேர்ந்த வழக்குறைஞர் மேச்சேரி காவல் நிலையத்தில் புகார்.

மேச்சேரியில் மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்த அதிகாரிகள் மீதும், மரங்களை வெட்டித் திருடிச் சென்றவர் மீதும் வழக்குப் பதிவு செய்ய, காவல் நிலையத்தில் சேலத்தைச் சேர்ந்த வழக்குறைஞர் மேச்சேரி காவல் நிலையத்தில் புகார்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

மேச்சேரியில் மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்த அதிகாரிகள் மீதும், மரங்களை வெட்டித் திருடிச் சென்றவர் மீதும் வழக்குப் பதிவு செய்ய, காவல் நிலையத்தில் சேலத்தைச் சேர்ந்த வழக்குறைஞர் மேச்சேரி காவல் நிலையத்தில் புகார்.

சேலத்தைச் சேர்ந்த சிறந்த சமூக ஆர்வலரும், வழக்குறைஞருமா பூமொழி சேலம் மாவட்டம் மேச்சேரி காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றினை அளித்துள்ளார். அந்த மனுவில்  சேலம் மாவட்டம், மேச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட 3-வது வார்டு மேலாண்டியூர் அருகே உள்ள பாதை புறம்போக்கு வழித்தடத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறோம் என்ற பெயரில், பாதை புறம்போக்கு வழித்தடத்தின் ஓரமாக இருந்த நன்கு வளர்ந்த தென்னை மரம், வேப்பமரம், ஆயமரம் ஆகிய மரங்களை, சென்ற 08.12.2025 அன்று மேட்டூர் தாசில்தார் ரமேஷ் மண்டல துணை தாசில்தார் செந்தில்குமார், 
மேச்சேரி RI கவுசிக்குமார். கிராம நிர்வாக அலுவலர் ராமச்சந்திரன், கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் அர்ச்சுனன் ஆகியோர். மோட்டார் வாகன பதிவு எண் இல்லாத JCB இயந்திரம் கொண்டு சட்டவிரோதமாக தள்ளி வேரோடு பிடுங்கி எறிந்துள்ளனர்.
பிடுங்கி எறியப்பட்ட தென்னைமரம், வேப்பமரம், ஆயமரம் ஆகிய மூன்று மரங்களில், தென்னை மரத்தை தவிர்த்து வேப்பமரம். ஆயமரம் ஆகிய இரண்டு மரங்களை. 11.08.2025 அன்று மேலாண்டியூரைச் சார்ந்த கிருஷ்ணமூர்த்தி த/பெ. பொன்னுசாமி என்ற நபர். 
மரம் அறுக்கும் இயந்திரம் கொண்டு அறுத்து வாகனத்தில் வைத்து திருடிச் சென்றுள்ளார்.
பொதுமக்களுக்கும். சுற்றுச்சூழலுக்கும் பெரிதும் பயனளிக்கும் பொது இடங்களில் உள்ள மரங்களை பாதுகாப்பது ஒவ்வொரு தனிமனித கடமையாகும். குறிப்பாக, அரசு அதிகாரிகளின் முழு கடமையாகும். இந்நிலையில், மேற்கண்ட அரசு அதிகாரிகளே மரங்களை JCB இயந்திரம் கொண்டு சட்டவிரோதமாக தள்ளி வேரோடு பிடுங்கி எறிந்துள்ளனர். மேற்கண்ட அதிகாரிகள் மீதும், இரண்டு மரங்களை வெட்டி திருடிச் சென்றவர் மீதும் மரங்கள் பாதுகாப்புச் சட்டப்படியும், குற்றவியல் சட்டப்படியும் உடனடியாக வழக்குபதிவு செய்து. சம்மந்தப்பட்டர்களை கைது செய்து சட்டப்படி நடவடிக்கைகள் எடுத்திட, தகுந்த ஆதாரங்களுடன் மேச்சேரி காவல் நிலையத்தில், 12.12.2025 நேற்று புகார் அளித்து CSR பெற்றுள்ளேன் என்றும்  நடவடிக்கை எடுக்கவில்லை எனில், நீதிமன்றத்தை நாடி உரிய நீதி பெறுவேன் என்றும் வழக்குறைஞர் பூமொழி புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

வியாழன், 11 டிசம்பர், 2025

சோனா வள்ளியப்பா பப்ளிக் பள்ளியில் மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 143 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 'அச்சம் தவிர்' என்ற தலைப்பில் தமிழ் இலக்கிய விழா. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு சேலம் மாநகராட்சி ஆணையர் பரிசுகள் வழங்கி பாராட்டு.

சோனா வள்ளியப்பா பப்ளிக் பள்ளியில் மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 143 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 'அச்சம் தவிர்' என்ற தலைப்பில் தமிழ் இலக்கிய விழா. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு சேலம் மாநகராட்சி ஆணையர் பரிசுகள் வழங்கி பாராட்டு.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சோனா வள்ளியப்பா பப்ளிக் பள்ளியில் மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 143 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 'அச்சம் தவிர்' என்ற தலைப்பில் தமிழ் இலக்கிய விழா. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு சேலம் மாநகராட்சி ஆணையர் பரிசுகள் வழங்கி பாராட்டு.

சோனாவள்ளியப்பா பப்ளிக் பள்ளியில் மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 143 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 'அச்சம் தவிர்' என்ற தலைப்பில் தமிழ் இலக்கிய விழா நடைபெற்றது. இவ் விழாவில் சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி ,பேச்சுப்போட்டி என்ற தலைப்புகளில் நடைபெற்ற போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். சேலம் மாநகரட்சி ஆணையாளர் இளங்கோவன் விழாவில் கலந்து கொண்டு பாரதி கண்ட கனவு இந்தியாவைப் பற்றி நினைவு கூர்ந்து பேருரையாற்றினார். விழாவிற்கு சோனா கல்வி நிறுவனத்தின் தலைவர் வள்ளியப்பா தலைமை ஏற்று பாரதியாரின் கவிதை நுட்பங்களை எடுத்துக் கூறி தலைமை உரையாற்றினார்.
இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பெரியார் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் இரா‌.வசந்த மாலை கலந்து கொண்டு பாரதியாரின் கவிதைகள் சுதந்திரப் போராட்டக் காலத்தில் எவ்வாறு ஊக்கமளித்தன என்பதைப் பற்றி சிறப்புரையாற்றினார். சோனா வள்ளியப்பா பப்ளிக் பள்ளி இயக்குநர் டாக்டர் கார்த்திகேயன் பாரதியின் புரட்சிப் பாடல்களால் நாம் சுதந்திரம் பெற்றதைப் பற்றி  பள்ளி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார் பள்ளி முதல்வர் திருமதி கவிதா பாரதியின் பிறந்தநாள் விழாவிற்கு வருகை புரிந்த அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக சேலம் மாநகரட்சி ஆணையாளர் மற்றும் சிறப்பு விருந்தினர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர். 
பாரதியாரின் பெருமையைப் போற்றும் விதமாக பல்வேறு பள்ளிகளில் இருந்து போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விழாவில் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மற்றும் மாணவ மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் கரும்பு டன் ஒன்றுக்கு 4000 ரூபாய் வழங்கப்படும் என்று 2025, 26 ஆம் ஆண்டு வழங்கப்படும் என்று அறிவித்து தற்போது வரை வழங்கப்படாமல் உள்ள தமிழக அரசை கண்டித்து,  வரும் 10 ம் தேதி மோகனூர் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு முதற்கட்ட போராட்டம். உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி அறிக்கையின் வாயிலாக அறிவிப்பு.

தமிழகத்தில் கரும்பு டன் ஒன்றுக்கு 4000 ரூபாய் வழங்கப்படும் என்று 2025, 26 ஆம் ஆண்டு வழங்கப்படும் என்று அறிவித்து தற்போது வரை வழங்கப்படாமல் உள்ள தமிழக அரசை கண்டித்து, வரும் 10 ம் தேதி மோகனூர் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு முதற்கட்ட போராட்டம். உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி அறிக்கையின் வாயிலாக அறிவிப்பு.


சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

தமிழகத்தில் கரும்பு டன் ஒன்றுக்கு 4000 ரூபாய் வழங்கப்படும் என்று 2025, 26 ஆம் ஆண்டு வழங்கப்படும் என்று அறிவித்து தற்போது வரை வழங்கப்படாமல் உள்ள தமிழக அரசை கண்டித்து,  வரும் 10 ம் தேதி மோகனூர் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு முதற்கட்ட போராட்டம். உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி அறிக்கையின் வாயிலாக அறிவிப்பு.

தமிழகத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது திமுக அரசால் விவசாயிகளுக்கு என்று  அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எதுவும் தற்பொழுது வரை நிறைவேற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில், உழவர் பெருந்தகை நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி முதற்கட்ட போராட்ட அறிவிப்பினை அறிக்கை வாயிலாக வெளியிட்டுள்ளார். 
அதில், தமிழ்நாடு அரசு 2025 -2026 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையின், மானியக் கோரிக்கையின் போது, தமிழகத்தில் கரும்பு சாகுபடி செய்த விவசாயிகள் நலன் கருதி கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4000/- ம் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டும் தற்போது வரை அரசாணை வெளியிடவில்லை. தற்போது இந்த ஆண்டுக்கு உண்டான கரும்பு அரவை பருவம் தொடங்கியுள்ள நிலையில், கரும்பை வெட்டி சர்க்கரை ஆலைக்கு அனுப்பிய விவசாயிகளுக்கு ஆலை நிர்வாகம் மூலம் பழைய கிரைய தொகையான கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.3290.50 மட்டுமேதான் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மூலம் வழங்கப்பட்டு வருகிறது. 
 
திமுக அரசு கரும்பு டன் ஒன்றுக்கு ரூபாய் நான்காயிரம் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டு எட்டு மாதங்களுக்கு மேலாகியும்  இதுவரையில் கரும்பு டன் ஒன்றுக்கு நான்காயிரம் வழங்கவில்லை.  தமிழகத்தில் உள்ள கரும்பு சாகுபடி செய்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது இதனை கருத்தில் கொண்டு திமுக அரசை கண்டித்து வருகின்ற 10.1.2026 அன்று காலை 11 மணிக்கு நாமக்கல் மாவட்டம் மோகனூர் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு முதற்கட்டமாக  உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. எனவே இந்த ஆர்பாட்டத்திற்கு சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு சப்பளை செய்த  அனைத்து விவசாயிகளும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வேண்டும் என   இந்த அறிக்கையின் மூலம் அழைப்பு விடுக்கிறேன் என்று உழவர் பெருந்தகை நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சேர்ந்த மாநிலத் தலைவர் வேலுச்சாமி தெரிவித்துள்ளார்.


புதன், 10 டிசம்பர், 2025

தமிழகத்தில் தமிழக வெற்றி கழகம் ஒருபோதும் ஆட்சி அமைக்க முடியாது. அவரது மாநாட்டில் திரளும் மூன்றில் இரண்டு பங்கு இளைஞர்களுக்கு வாக்கு உரிமையும் கிடையாது வரக்கூடிய தகுதியும் இல்லை.. ஊடகத் துறைக்கு நான் திருப்பி கேள்வி கேட்கிறேன். சேலத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் ஊடகப் பிரிவு தலைமை ஒருங்கிணைப்பாளர் குமரவேல் சேலத்தில் கடும் காட்டம்.

தமிழகத்தில் தமிழக வெற்றி கழகம் ஒருபோதும் ஆட்சி அமைக்க முடியாது. அவரது மாநாட்டில் திரளும் மூன்றில் இரண்டு பங்கு இளைஞர்களுக்கு வாக்கு உரிமையும் கிடையாது வரக்கூடிய தகுதியும் இல்லை.. ஊடகத் துறைக்கு நான் திருப்பி கேள்வி கேட்கிறேன். சேலத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் ஊடகப் பிரிவு தலைமை ஒருங்கிணைப்பாளர் குமரவேல் சேலத்தில் கடும் காட்டம்.

 
சேலம். 
S.K.சுரேஷ்பாபு. 

தமிழகத்தில் தமிழக வெற்றி கழகம் ஒருபோதும் ஆட்சி அமைக்க முடியாது. அவரது மாநாட்டில் திரளும் மூன்றில் இரண்டு பங்கு இளைஞர்களுக்கு வாக்கு உரிமையும் கிடையாது வரக்கூடிய தகுதியும் இல்லை.. ஊடகத் துறைக்கு நான் திருப்பி கேள்வி கேட்கிறேன். சேலத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் ஊடகப் பிரிவு தலைமை ஒருங்கிணைப்பாளர் குமரவேல் சேலத்தில் கடும் காட்டம். 

தமிழகத்தில் நடைபெற உள்ள 2026 சட்டமன்ற தேர்தல் களம் தமிழகத்தில் கடுமையான உச்சகட்டத்தை அடைந்துள்ளது என்றால் அது மிகை ஆகாது. அந்த வகையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட ஊடகப்பிரிவு நிர்வாகிகளின் கலந்தாய்வுக் கூட்டம் சேலத்தை அடுத்துள்ள கோரிமேடு பகுதியில் நடைபெற்றது. இந்த கலந்தாய்வு கூட்டத்திற்கு தமிழக வாழ்வுரிமை கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர்கள் மோகன்ராஜ் தலைமை தாங்கினார். நிகழ்வில் மாநில நிர்வாகிகள் பலரும் முன்னிலை வகித்த இந்த நிகழ்வில் ஒருங்கிணைந்த மாவட்டமாக கருதப்படும் சேலத்தில் மூன்று மாவட்டங்களை சார்ந்த நிர்வாகிகள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 
இந்த ஆய்வுக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழக வாழ்வுரிமை கட்சியின் ஊடகப்பிரிவு தலைமை ஒருங்கிணைப்பாளர் குமரவேல் கலந்துகொண்டு ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் அவர்கள் மேற்கொண்டு வரும் பணிகள் குறித்து கேட்டிருக்கிறார். தொடர்ந்து கட்சி மற்றும் ஊடகப் பிரிவில் செயல்பாடுகள் குறித்து கலந்து கொண்டவர்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டன. பின்னர் மாநில நிர்வாகிகள் ஒருங்கிணைந்த மாவட்ட பொறுப்பாளர்களில் கருத்துக்களை கேட்ட பிறகு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து இருந்த நிலையில், தமிழக வாழ்வுரிமை கட்சியின் ஊடகப்பிரிவு மாநில செய்தி தொடர்பாளர் குமரவேல் பேசுகையில், ஒவ்வொரு கட்சிக்கும் ஐடி விங் எனப்படும் ஊடகப்பிரிவு செயல் பட்டு வருவதாகவும் அந்த கட்சிகள் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவதாக தெரிவித்த அவர், நமது கட்சியின் ஊடகப் பிரிவு நிர்வாகிகள் பொறுப்புகளை பெற்றுக் கொண்டு சரிவர அவர்களது பணிகளை சரிவர செய்வதிலேயே என்று வேதனை தெரிவித்தார். மேலும் ஊடகப்பிரிவை எவ்வாறு பலப்படுத்துவது, ஒவ்வொரு ஊடகப்பிரிவு நிர்வாகிகளும் தன்னிச்சையாக செயல்பட்டு அவர்களது கருத்துக்களை தனிப்பட்ட முறையில் பதிவிடாமல் கட்சியை ஒருங்கிணைத்து அதனை வெளிப்படுத்தினால் கட்சிக்கு பலம் ஏற்படும் என்றும், இதற்காக 38 மாவட்டங்களிலும் தனித்தனியாக இனி வரும் காலங்களில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைமை சார்பாக ஊடக பிரிவுக்கு என ஒரு இடம் தேர்வு செய்யப்பட்டு, வாரத்தில் இரண்டு நாட்கள் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுவதோடு எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் சேலம் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் கூட்டணி கட்சியில் அறிவிக்கப்படும் வேட்பாளர்களின் வெற்றியை ஊடகப் பிரிவினர் உறுதி செய்ய வேண்டும்.
இதற்கு மாவட்டம் தோறும் கட்சியின் தலைமை சார்பில் நடத்தப்படக்கூடிய ஊடகப்பிரிவு பயிற்சி அலுவலகத்தில் ஊடகப்பிரிவினர் வாரம் தோறும் இரண்டு முறை பங்கேற்று youtube instagram facebook மற்றும் உள்ளிட்ட எத்தனையோ சமூக வலைதளங்கள் உள்ளன அதில் தலைவரின் செயல்பாடுகள் அவர் பணியாற்றிய விதம் இதை பொதுமக்கள் உட்பட அனைத்து கட்சியினருக்கும் எப்படி எடுத்துச் சென்று அவர்களுக்கு புரிய வைத்து தமிழகத்தின் மிகச்சிறந்த தலைவர் வேல்முருகன் தான் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஊடகப் பிரிவினர் பணியாற்ற வேண்டும் என்று இந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஊடகப்பிரிவு தலைமை மாநில ஒருங்கிணைப்பாளர் குமரவேல் செய்தியாளிடம் பேசும் போது ஊடகப் பிரிவு மற்றும் கட்சியை எவ்வாறு பலப்படுத்த வேண்டும் என்று ஊடகப்பிரிவு நிர்வாகிகளுக்கு இந்த ஆலோசனை கூட்டத்தில் தற்போது பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாகவும் இதற்காக 38 மாவட்டங்களிலும் சிறப்பு பயிற்சி மையங்கள் விரைவில் அமைக்கப்படும் என்று தெரிவித்த அவர் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் அவர் கூறிய கருத்து நடிகர் விஜய் அவர்களின் ஒவ்வொரு கூட்டத்திலும் ஒவ்வொரு பிரச்சாரத்திலும் பங்கு இருக்கும் ஒட்டுமொத்த கூட்டத்தில் மூன்றில் இரண்டு பங்கு இளைஞர்களுக்கு வாக்கு உரிமையை கிடையாது என்றும் அந்த வாக்குரிமையை பெறக்கூடிய தகுதியும் அவர்களுக்கு கிடையாது என்று திட்டவட்டமாக கூறிய குமரவேல், தமிழகத்தை எடுத்து தற்பொழுது புதுச்சேரியில் அவர் பங்கேற்ற அந்தக் கூட்டத்தில் அவர் பறைசாற்றுவது 2026 தேர்தலில் தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்கும் தமிழகத்தில் என்று உறுதிப்பட பேசுகிறார் என்று கூறிய அவர், வாக்கு சதவிகிதமே இல்லாத ஒரு கட்சி 2026 தேர்தலில் எப்படி ஆட்சி அமைக்க முடியும் என்று தமிழக  ஊடகத்துறைக்கு இந்தக் கேள்வியை முன்வைக்கிறேன் என்று பகிரங்கமாக சவால் விட்டுள்ளார்.
சேலத்தில். 
இந்த கலந்தாய்வு கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் ஊடகப் பிரிவு நிர்வாகிகள் மண்டல செயலாளர் பிரபாகரன் சேலம் மாவட்ட ஊடகப் பிரிவு பொறுப்பாளர் கோபி சுந்தரம் உள்ளிட்ட ஏராளமான ஒரு கலந்து கொண்டனர்.

திங்கள், 8 டிசம்பர், 2025

சேலம் அயோத்தியாபட்டணம் ரயில்வே கேட்டில் மேம்பாலம் கட்டி தர வேண்டி மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம். பாமகவினரின் இந்த போராட்டத்தின் போது இரண்டு முறை ரயில்வே கேட் மூடப்பட்டு கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்ட அவலம்.

சேலம் அயோத்தியாபட்டணம் ரயில்வே கேட்டில் மேம்பாலம் கட்டி தர வேண்டி மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம். பாமகவினரின் இந்த போராட்டத்தின் போது இரண்டு முறை ரயில்வே கேட் மூடப்பட்டு கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்ட அவலம்.

 
சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் அயோத்தியாபட்டணம் ரயில்வே கேட்டில் மேம்பாலம் கட்டி தர வேண்டி மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம். பாமகவினரின் இந்த போராட்டத்தின் போது இரண்டு முறை ரயில்வே கேட் மூடப்பட்டு கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்ட அவலம். 

சேலத்தை அடுத்துள்ள அயோத்தியா பட்டணம் ரயில்வே கேட் பகுதி என்பது 24 மணி நேரமும் மிகக் கடுமையான போக்குவரத்தை கொண்ட பகுதியாகும், சேலத்தில் இருந்து ஆத்தூர் ஆத்தூர் வழியாக சென்னை மார்க்கம் செல்லும் அரசு பேருந்துகளும், இதே போல சேலத்தில் இருந்து அயோத்தியாப்பட்டணம் வழியாக திருப்பத்தூர் செல்லும் அரசு பேருந்துகள் உட்பட இதர இரு சக்கரை, நான்கு சக்கர மற்றும் கனரக வாகனங்கள் நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கில் பயணித்து வருகின்றன. இதனுடைய சம்பந்தப்பட்ட அயோத்தியாபட்டினம் ரயில்வே கேட் நாள் ஒன்று இருக்கு பத்துக்கும் மேற்பட்ட நேரங்களில் மூடப்படுவதால் வாகனங்கள் பெரும் நெருக்கடியில் போக்குவரத்து முடங்கி விடுகிறது. இதனால் ஆம்புலன்ஸ் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் அரசு அலுவலகம் வியாபாரிகள் என அனைத்து பொதுமக்களும் கடும் எச்சரிக்கை காலதாமதத்தையும் சந்தித்து வருவதை அனைவரும் அன்றாடம் காணக்கூடிய ஒன்றே. இந்த அவல நிலையை போக்க பாமக மாநில தலைவர் முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி வாயிலாக மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி அவர்களை நேரில் சந்தித்து நிலைமையை விளக்கி கடந்த ஜனவரி மாதம் மனுவும் வழங்கப்பட்டது. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சேலம் வடக்கு மாவட்ட அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் பொதுமக்களின் 25 ஆண்டு கால கோரிக்கையான அயோத்தியபட்டினம் ரயில்வே கேட் முன்பாக மேம்பாலம் கட்டி தர வேண்டி மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அயோத்தியபட்டணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் மாவட்ட ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவரும் வடக்கு மாவட்ட செயலாளருமான நாராயணன் தலைமையில் நடைபெற்ற இந்த கவனத்தில் ஆர்ப்பாட்டத்தில் பாமக மாநில மாணவர் அணி தலைவர் வழக்கறிஞர் விஜயராஜா உட்பட நிர்வாகிகள் குமாரசாமி ராஜா மாது மற்றும் வேணும் ஊழிய விட்டு ஒரு முன்னிலை வகித்தனர். பாமக முன்னால் சட்டமன்ற உறுப்பினரும், மாநில நிர்வாக குழு உறுப்பினரும் மற்றும் வன்னியர் சங்க மாநில ஒருங்கிணைப்பாளருமான மு.  கார்த்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அயோத்தியபட்டணம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மக்களின் கடந்த 25 ஆண்டு கால கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கடும் போக்குவரத்து நெரிசலை சந்தித்து வரும் அயோத்தியபட்டணம் ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் கட்டி தர வேண்டும், ரயில்வே கேட் முதல் வெள்ளையப்பன் கோவில் வரை நான்கு வழிச்சாலையாக அமைத்து தர வேண்டும் மற்றும் அரூர் ரோடு பழுதடைந்து உலகை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். 
அந்தப் பகுதி பொதுமக்களின் 25  ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றி தர மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி பாமகவினர் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படும் போது இரண்டு முறை ரயில்வே கேட் மூடப்பட்டு கடுமையான போக்குவரத்து நெரிசலையும், பாமக தலைவரும் முன்னாள் மதிய சுகாதாரத்துறை அமைச்சர் ஆன அன்புமணி கொண்டு வந்த தீயிட்டு ஆம்புலன்ஸ் இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கி நோயாளியை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாத அவல நிலையையும், சம்பந்தப்பட்ட அயோத்தியா பட்டணம் பகுதி சந்தித்தது என்பது மறுக்க முடியாத உண்மை. பாமக தலைவரும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி கொண்டுவந்த 108 ஆம்புலன்ஸ் கூட உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் தவித்த அந்த போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய மத்திய மாநில அரசுகள் உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து அயோத்தியாபட்டினம் ரயில்வே கேட் முன்பு மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்குமா பொருத்திருந்து பார்ப்போம். சபா நியூஸ் தமிழ் செய்திகளுக்காக சேலத்தில் இருந்து எஸ் கே சுரேஷ் பாபு.

சனி, 6 டிசம்பர், 2025

மலபார் கோல்ட் & டைமண்ட்ஸ் சேலத்தில் புதுப்பிக்கப்பட்ட பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா

மலபார் கோல்ட் & டைமண்ட்ஸ் சேலத்தில் புதுப்பிக்கப்பட்ட பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

மலபார் கோல்ட் & டைமண்ட்ஸ் சேலத்தில் புதுப்பிக்கப்பட்ட பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா 


மலபார் கோல்ட்  &  டைமண்ட்ஸ் சேலத்தில் தனது புதுப்பிக்கப்பட்ட பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழாவை முன்னிட்டு திறப்பு விழா சலுகையாக டிசம்பர் 16 2025 வரை ஒவ்வொரு முறை தங்க நகைகள் வாங்கும் போதும் வெள்ளி நாணயம் இலவசமாக வழங்குகிறார்கள். உலகின் சில்லறை நகை விற்பனையில் வேகமாக வளர்ந்து வரும் முன்னணி நிறுவனமும் இந்தியாவில் பல்வேறு துறைகளில் கால் பதித்து தனது வர்த்தகத்தை விரிவாக்கி கொண்டுள்ள மலபார் குழுமத்தின் முன்னோடி நிறுவனமான மலபார் கோல்ட் & டைமண்ட்ஸ் நிறுவனம் சேலத்தில் பிரமாண்டமாக புதுப்பிக்கப்பட்ட ஷோரூமை  திறந்துள்ளது. இந்த ஷோரூமில் அதிகமான இடவசதி, புதிய மாடல்கள் மற்றும் டிசைன்களில் தங்கம், வைரம் மற்றும் வெள்ளி நகைகளின் கலெக்சன்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இந்த ஷோரூமை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் இராஜேந்திரன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தலைவர் தமிழ்நாடு மண்டல தலைவர் யாசர், சபீர் அலி, நௌசாத், முகமது அசரப், மேலாண்மை உறுப்பினர்கள் மற்றும் கிளை ஊழியர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
மலபார் கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ் தற்போது 14 நாடுகளில் 425-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களுடன் உலகில் மிகப்பெரிய நகை விற்பனை நிறுவனமாக உருவெடுத்துள்ளது தமிழ்நாட்டில் சென்னை கோவை மதுரை நாகர்கோவில் திருநெல்வேலி சேலம், புதுச்சேரி  உள்ளிட்ட  பல்வேறு நகரங்களில் 32 கிளைகளை கொண்டுள்ளது.

 மலபார் கோல்ட் & டைமண்ட்ஸ் விற்பனையகத்தில் கலை நியமிக்க அணிகலன்கள் கிடைப்பது சிறப்பம்சமாகும். அணிந்தாலே ஜொலிக்கும் வைர நகைகளான 'மைன்', பிரம்மாண்டமான வடிவமைப்புகளை கொண்டுள்ள வெட்டாத வைரத்தால் செய்யப்பட்ட ஏரா, மிகவும் பொக்கிஷமாக கருதப்படும் விலையுயர்ந்த கற்களால் செய்யப்பட்ட நகை தொகுப்பான பிரீசியா நகைகள், கைவினை கலைஞர்களால் கையால் நேர்த்தியாக செய்யப்பட்ட நகைகளின் தொகுப்பான எத்தினிக், கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பாரம்பரிய இந்திய நகை வடிவங்களில் உருவான டிவைன், குழந்தைகளுக்கான நகை தொகுப்பான ஸ்டார்லெட் ஆகியவை இந்த ஷோரூமில் இடம் பெற்றுள்ளன.