புதன், 27 ஆகஸ்ட், 2025

சோனா தொழில்நுட்பக் கல்லூரியின் ஓமலூர் செக்காரப்பட்டியில் அமைந்துள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தினை  சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர்  இராஜேந்திரன் துவக்கி வைத்தார்.

சோனா தொழில்நுட்பக் கல்லூரியின் ஓமலூர் செக்காரப்பட்டியில் அமைந்துள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தினை சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் இராஜேந்திரன் துவக்கி வைத்தார்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சோனா தொழில்நுட்பக் கல்லூரியின் ஓமலூர் செக்காரப்பட்டியில் அமைந்துள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தினை  சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர்  இராஜேந்திரன் துவக்கி வைத்தார்.

சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரி  அரசின் திட்டத்தின் கீழ்   சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள செக்காரப்பட்டியில் அமைந்துள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் திறப்பு விழா  நடைப்பெற்றது. சோனா கல்வி நிறுவனங்களின் தலைவர் வள்ளியப்பா தலைமையில் நடைப்பெற்ற இந்த விழாவில் சோனா தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் முனைவர் செந்தில்குமார் அனைவரையும் வரவேற்று வரவேற்புரையாற்றினார். இதனை தொடர்ந்து அறியியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் முதன்மை ஆய்வாளர் முனைவர் சத்தியபாமா திட்ட விளக்க உரையாற்றினார். பின்னர் சந்தியூர், வேளாண்மை கழக திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகதாம்பாள் வாழ்த்துரை வழங்கினார். இந்த விழாவில் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த விழாவில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர்  இராஜேந்திரன் அவர்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தை துவக்கி வைத்து விழா பேருரையாற்றினார். 
அவர் பேசும் பொழுது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், இளைஞர்களை தொழில் முனைவோராக மாற்றுதல், மகளிர் சுயஉதவி குழுக்களை மேம்படுத்துதல், போன்ற செயல்களை முன்னேடுத்து இத்திட்டத்தின் மூலம் செயல்படுத்தி வரும் சோனா கல்வி நிறுவனத்திற்கு தனது வாழ்த்துக்களையும்,  பாராட்டுகளையும் தெரிவித்தார். மேலும் இத்திட்டத்தில் பங்கேற்று பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து பேசிய சோனா கல்வி நிறுவனத்தின் தலைவர் வள்ளியப்பா சோனா நிறுவனம் மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் பொது மக்களுக்கு ஏராளாமான வாய்ப்புகளை வழங்கி வருகின்றது. இத்திட்டத்தின் மூலம் கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருதல் போன்ற ஏரளமான வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றது. இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு பொதுமக்கள் தங்களது  வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்வில் ஒமலூர் செக்காரப்பட்டி பொதுமக்கள், திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக இத்திட்டத்தின் இணை ஆய்வாளர் முனைவர் இராஜேஸ்வரி நன்றி உரையாற்றினார்.
கஜமுகன் அவதரித்த தினம். சேலம் செவ்வாய்பேட்டையில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட புலியின் மீது அமர்ந்து வரும் மணிகண்ட விநாயகர்.

கஜமுகன் அவதரித்த தினம். சேலம் செவ்வாய்பேட்டையில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட புலியின் மீது அமர்ந்து வரும் மணிகண்ட விநாயகர்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

கஜமுகன் அவதரித்த தினம். சேலம் செவ்வாய்பேட்டையில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட புலியின் மீது அமர்ந்து வரும் மணிகண்ட விநாயகர். 

விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. முக்கிய திருக்கோவில்களில் உள்ள விநாயகப் பெருமானுக்கும் இதே போல வீதிகள் தோறும் சிறியது முதல் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்ற வண்ணம் உள்ளன. இதன் ஒரு பகுதியாக சேலம் செவ்வாய்பேட்டை எலைட் அசோசியேஷன் சார்பில் ஆண்டுதோறும் மிகப் பெரிய பொருட்செலவில் மிகப்பிரமாண்டமான முறையில் விநாயகர் சிலை பல்வேறு கான்செப்ட்களில்  அமைக்கப்பட்டு பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்படுவது வழக்கம். 
இதன் தொடர்ச்சியாக 45 ஆவது ஆண்டு படைப்பாக வனப்பகுதியில் விநாயகப் பெருமான் புலி மீது அமர்ந்து வில் அம்பு ஏந்தி வருவது போல மிக தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்று நாட்கள் பக்தர்களின் பார்வைக்காக வைக்கப்பட உள்ளதாகவும் இந்த மூன்று நாட்களும் பள்ளி குழந்தைகளில் பரதம் உள்ளிட்ட கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளதாக எலைட் அசோசியேசன் செயலாளர் சுவாதி சேகர் நம்முடைய தெரிவித்தார். இன்று மாலை முதல் பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட உள்ளது என்றாலும் கூட ஆண்டு தோறும் இந்த அமைப்பின் சார்பில் மிக பிரம்மாண்டமான முறையில் அமைக்கப்படும் விநாயகர் அமைக்கும் பணியின் போது அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து கண்டு களித்து சென்ற வண்ணம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


செவ்வாய், 26 ஆகஸ்ட், 2025

சேலம் சிந்தி இந்து அரசு உதவி பெறும் துவக்க பள்ளியில் தமிழக முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடங்கியது.

சேலம் சிந்தி இந்து அரசு உதவி பெறும் துவக்க பள்ளியில் தமிழக முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடங்கியது.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு.

சேலம் சிந்தி இந்து அரசு உதவி பெறும் துவக்க பள்ளியில் தமிழக முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடங்கியது.

தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களால் காணொளி காட்சி வாயிலாக விரிவு படுத்தப்பட்ட இந்த திட்டத்தினை சேலம் சிறுமலர் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் வழக்கறிஞர்  இராஜேந்திரன் மற்றும் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் பிருந்தாதேவி ஆகியோர் செயல்படுத்தினர். இதன் ஒரு பகுதியாக சேலம் நாராயண நகர் பகுதியில் சுமார் 76 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிந்தி இந்து அரசு உதவி பெறும் துவக்க பள்ளியில், தமிழக முதலமைச்சரின் காலை உணவு திட்டம் இன்று முதல் தொடங்கி வைக்கப்பட்டது. 
பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி லதா தலைமையில் நடைபெற்ற பள்ளி மாணாக்கர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் துவக்க விழாவில், பள்ளியின் தாளாளர் நரேஷ் கிங்கர், கமிட்டி தலைவர் ராம்சந்த் கிங்கர், செயலாளர் ரமேஷ் லால் பதீஜா  மற்றும் பொருளாளர் தீபக் பதீஜா ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்ததுடன் காலை சிற்றுண்டி உண்ணாமல் வந்த பள்ளி குழந்தைகளுக்கு தங்களது கரங்களால் சிற்றுண்டியை வழங்கி மகிழ்ந்தனர். தொடர்ந்து பள்ளி நிர்வாகத்தினர் உணவு உட்கொண்டு கொண்டிருந்த மாணவ மாணவிகளிடம் உரையாற்றும் போது, தமிழக முதலமைச்சர் அவர்களால் விரிவுபடுத்தப்பட்ட இந்த திட்டம் நமது பள்ளியில் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் வீட்டில் உணவு உட்கொள்ள முடியவில்லை என்றாலும் பள்ளியில் உணவு உட்கொண்டு பிறகு நன்கு படித்து பள்ளிக்கு நல்ல பெயரையும் பெருமையையும் பெற்றுத் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். தொடக்கத்தில் அரசு பள்ளிகளில் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வந்த இந்த திட்டமானது தற்பொழுது அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் செயல்படுத்தப்பட்டுள்ளது பெற்றோர்களிடையேயும் மாணவ மாணவிகள் இடையேயும் மிகுந்த வரவேற்பினை பெற்றுள்ளது.

திங்கள், 25 ஆகஸ்ட், 2025

ஆயுஷ்மான் பாரத் ஆகிய திட்டங்களை காலம் தாழ்த்தாமல் முழுமையாக செயல்படுத்த வேண்டும். சேலம் மாநகர் மாவட்ட பாஜக நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் இடத்தில் மனு.

ஆயுஷ்மான் பாரத் ஆகிய திட்டங்களை காலம் தாழ்த்தாமல் முழுமையாக செயல்படுத்த வேண்டும். சேலம் மாநகர் மாவட்ட பாஜக நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் இடத்தில் மனு.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

ஆயுஷ்மான் பாரத் ஆகிய திட்டங்களை காலம் தாழ்த்தாமல் முழுமையாக செயல்படுத்த வேண்டும். சேலம் மாநகர் மாவட்ட பாஜக நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் இடத்தில் மனு. 

சேலம் மாநகர் மாவட்ட பாஜக முன்னாள் மாவட்ட செயலாளர் தங்கராஜ் தலைமையில் பாஜக நிர்வாகிகள் கிருஷ்ணராஜ் காளிமுத்து முருகராஜ் உட்பட பத்துக்கும் மேற்பட்டோர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு கொடுப்பதற்காக வந்திருந்தனர். அந்த மனுவில் பாரத பிரதமரால் கொண்டுவரப்பட்ட ஏழைகளின் கனவு திட்டங்கள் ஆன ஆகாஷ் யோஜனா மற்றும் ஆயுஷ்மான் பாரத் ஆகிய திட்டங்களை தற்பொழுது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால் ஏழை எளிய மக்களின் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள முடியாத நிலையில் உள்ளனர். ஆகாஷ் யோஜனா திட்டத்தின் மூலம் வீடு கட்டிக் கொள்ள பயனாளிகளுக்கு மானிய தொகை ஓராண்டு காலமாக சென்றடையவில்லை ஆயுஷ்மான் பாரத் திட்டமான மருத்துவ காப்பீடு திட்டமும் தனியார் மருத்துவமனையில் பயனாளிகளுக்கு மருத்துவம் செய்து கொடுக்க முன்வருவதில்லை இப்படிப்பட்ட சூழ்நிலையில் பாரத பிரதமரால் கொண்டுவரப்பட்ட திட்டத்தை வேண்டும் என்று புறக்கணிக்கப்படுவதாக பொதுமக்களின் வாயிலாக தெரிய வருகிறது. எனவே இந்த திட்டங்களை ஏழை எளிய மக்கள் பயனடைய வேண்டி சம்பந்தப்பட்ட நிர்வாகத்தின் மூலமாக பயனாளிகள் பயனடைய வேண்டும் என்பதை பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக கேட்டுக் கொள்வதாக அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர். இதே போல சேலம் மாநகராட்சியின் கொண்டலாம்பட்டி மண்டலத்திற்கு உட்பட்ட ஜாதகப்பட்டி அம்பாள் ஏரிக்கரையில் அமைக்கப்பட்டுள்ள மின்விளக்குகள் இரவு நேரங்களில் எரியாதது சம்பந்தமாக பொது மக்களின் சார்பாக பாஜகவினர் சேலம் மாநகராட்சி ஆணையாளர் அலுவலகத்திலும் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
சேலம் அரசு இசைப்பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு மண்டல உதவி இயக்குனர் பதவி. முக்கிய பிரமுகர்கள் இசை கலைஞர்கள் வாழ்த்து.

சேலம் அரசு இசைப்பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு மண்டல உதவி இயக்குனர் பதவி. முக்கிய பிரமுகர்கள் இசை கலைஞர்கள் வாழ்த்து.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு.

சேலம் அரசு இசைப்பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு மண்டல உதவி இயக்குனர் பதவி. முக்கிய பிரமுகர்கள் இசை கலைஞர்கள் வாழ்த்து. 

சேலம் அரசு இசைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தவர் சங்கரராமன். கடந்த 27 ஆண்டுகளாக இவரின் இசைப்பள்ளி சேவையை பாராட்டி கௌரவிக்கும் விதமாக தமிழக அரசின் கலை பண்பாட்டு மையத்தின் சேலம் மண்டல உதவி இயக்குனராக பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதனை அடுத்து சேலம் ஆவின் பால் பண்ணை எதிரே உள்ள சேலம் அரசு இசைப்பள்ளியில் முன்னாள் தலைமை ஆசிரியரும் தற்பொழுது புதிதாக பொறுப்பேற்றுள்ள உதவி இயக்குனர் ஆன சங்கரராமன் பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் சேலம் மாவட்ட முன்னாள் முதன்மை கல்வி அலுவலர் உதயகுமார், சேலம் மாநகரின் முக்கிய பிரமுகர்களான ராசி சரவணன் மற்றும் தாரை குமரவேல் உள்ளிட்ட பலருடன் பள்ளியின் இசை ஆசிரியர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் ஆகியோர் புதிதாக பொறுப்பேற்றுள்ள உதவி இயக்குனர் சங்கர் ராமன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தனர். இது குறித்து சேலம் மண்டல கலை பண்பாட்டு மையத்தின் உதவி இயக்குனராக பொறுப்பேற்றுள்ள சங்கரராமன் நம்மிடையே கூறுகையில், இது ஒரு மகிழ்ச்சியான தருணம் என்றும் இதற்காக தமிழக முதலமைச்சருக்கும் கலை பண்பாட்டு துறையின் இயக்குனர் அவர்களுக்கும் தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும், இசைக் கலைஞர்களுக்கு என தமிழக அரசின் சார்பில் ஏராளமான நல்ல பல திட்டங்கள் உதவிகள் அனைத்தும் வழங்கப்பட்டு வருவதாகவும் அது அனைத்து கலைஞர்களுக்கும் முறையாக சென்று சேர வழிவகை மேற்கொள்ளப்படும் என்றும் அரசு இசைப்பள்ளியில் பயின்ற மாணாக்கர்கள் பலர் தற்பொழுது பல்வேறு அரசு பள்ளிகளில் இசை ஆசிரியர்களாக பணியாற்றி வருவதாகவும் இதே போல தனியார் துறையில் அவர்களுக்கான பணி வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதே தனது கனவு லட்சியமாக உள்ளது என்றார்.

வெள்ளி, 22 ஆகஸ்ட், 2025

பனமரத்துப்பட்டி பேரூரில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் துவங்கி வைக்கப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் முகாம்.

பனமரத்துப்பட்டி பேரூரில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் துவங்கி வைக்கப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் முகாம்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

பனமரத்துப்பட்டி பேரூரில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் துவங்கி வைக்கப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் முகாம்.

சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி பேரூர் , ஒன்டிக்கடை சமுதாய கூடத்தில்  நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமை  வட்டாட்சியர் மற்றும் கூட்டுறவு சார் பதிவாளர் அலுவலர்களுடன் சேலம் கிழக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர்  பாரப்பட்டி சுரேஷ்குமார் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற முகாமில் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, பெண்களுக்கான மாதாந்திர உரிமை தொகை உட்பட ஏராளமான கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த முகாமில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு விண்ணப்ப மனுவை வழங்கினர். தொடர்ந்து நடைபெற்ற முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு தமிழக அரசின் சார்பில் வழங்கப்படக் கூடிய நல உதவிகளுக்கான அரசு ஆணைகளை சேலம் மாவட்ட கிழக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த முகாமில் 36 அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுத்து படம் கிடைக்க வழிவகை செய்யப்படும் என உறுதி அளித்ததன் பேரல் மனு வழங்கிய மக்கள் மகிழ்வுடன் தமிழக முதலமைச்சர் ககு தங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தனர். பல்வேறு நல உதவிகள் தொடர்பாக இந்த முகம் நடைபெற்றாலும் பெண்களுக்கான உரிமை தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை அதிகப்படியாக பெறப்பட்டு வருகிறது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் திமுக பனமரத்துப்பட்டி ஒன்றிய செயலாளர் உமாசங்கர், பேரூர் கழக செயலாளர் ரவிக்குமார், பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரி வரதராஜன், துணைத் தலைவர் பிரபு கண்ணன், அவைத் தலைவர் பி எஸ் பார்த்திபன், தொண்டரணி அமைப்பாளர் தீபா,  வார்டு கவுன்சிலர்கள், வார்டு செயலாளர்கள், அரசு உயர் அதிகாரிகள், கட்சியின் கிளை செயலாளர்கள், சார்பணி நிர்வாகிகள், கழக முன்னோடிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். 
திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் அவர்களிடம் நடிகர் விஜய் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். தவறும் பட்சத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டப்படும். தேசிய தலைவர் சிறுபான்மையினர் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் நாகா. அரவிந்தன் சேலத்தில் கடும் எச்சரிக்கை.

திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் அவர்களிடம் நடிகர் விஜய் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். தவறும் பட்சத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டப்படும். தேசிய தலைவர் சிறுபான்மையினர் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் நாகா. அரவிந்தன் சேலத்தில் கடும் எச்சரிக்கை.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு. 

திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் அவர்களிடம் நடிகர் விஜய் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். தவறும் பட்சத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டப்படும். தேசிய தலைவர் சிறுபான்மையினர் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் நாகா. அரவிந்தன் சேலத்தில் கடும் எச்சரிக்கை.

நேற்றைய தினம் மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தினுடைய கூட்டத்திலே பேசிய கட்சியினுடைய தலைவர் நடிகர் விஜய் அவர்கள் நாவடக்கத்துடன் பேச வேண்டும் பொது மேடைகளில் பொதுக்கூட்டத்திலே எவ்வாறு பேச வேண்டும் என்று சிறிதளவும் தெரியாமல் இன்றைய தினம் கட்சி ஆரம்பித்து,  நான் தலைவன் என்று உலறிக் கொண்டிருக்க கூடிய விஜய்க்கு எங்களுடைய தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர்  கூட்டமைப்பு சார்பிலே கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.  மேலும் பொதுக் கூட்டத்திலே பேசத் தெரியாமல் கடந்த 40, 45 அன்று ஆண்டு காலமாக அரசியல் வரலாற்றிலேயே தனக்கென ஒரு அங்கீகாரமாக இன்றைய தினம் தமிழகத்தின்  முதலமைச்சர் திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய தலைவர் மரியாதைக்குரிய அண்ணன் ஸ்டாலின்  அவர்களை நாவடக்கம் இல்லாமல் அங்கிள் அங்கிள் என்று பேசி இன்றைய தினம் தமிழக மக்களினுடைய கொந்தளிப்புக்கு காரணமாகி உள்ள விஜய் அவர்கள் உடனடியாக ஸ்டாலின் அவர்களிடம்  மன்னிப்பு கேட்க வேண்டும்.  இல்லையென்றால் தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் கூட்டமைப்பின் சார்பில் நடிகர் விஜய் மீது கைது செய்ய வேண்டி வலியுறுத்தி தமிழக முழுவதும் நாங்கள் தமிழக டிஜிபி இடம் நேரில் புகார் மனு தருவோம் என்று இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் விஜயகாந்த் அவர்கள் கூட  மரியாதையாக தான்  அனைவரையும் பேசி இருக்கின்றார். ஆனால் இப்படிப்பட்ட தமிழ்நாட்டிலேயே பாரம்பரிய கட்சியை வளர்த்த மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் கூட அன்றைய முதல்வராக இருந்த ஜெயலலிதா அவர்களை கூட அம்மையார் என்று தான் பேசிய வரலாறு இந்த தமிழ்நாட்டில் இருக்கின்றது.  அப்படிப்பட்ட தமிழ்நாட்டிலே இன்றைய தினம் தமிழகத்தில் உளறிக் கொண்டிருக்கக்கூடிய விஜய் அவர்கள் உடனடியா நேற்று பேசிய தமிழகத்தினுடைய முதலமைச்சரை அங்கிள் அங்கிள் என்று பேசிய வார்த்தை திரும்பி பெறவேண்டும். விஜய் அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இந்த நேரத்திலே நாங்கள் தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர்  கூட்டமைப்பு சார்பிலே வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றோம். மேலும் அவர் இதுபோன்று இனிவரும் கூட்டங்களிலோ இல்ல மாநாடு இவ்வாறு பேசினால் 2026 நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் விஜய் அவர்களுக்கு தக்க பாடம் புகட்டப்படுவோம் என்று இந்த நேரத்திலே நாங்கள் தெரிவித்துக் கொள்கின்றோம் என தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் கூட்டமைப்பின் நிறுவன தலைவர் டாக்டர் நாக அரவிந்தன் சேலத்தில் மிகக் கடுமையான எச்சரிக்கையை பதிவு செய்துள்ளார். தங்களது அமைப்பின் எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக நடிகர் விஜயின் உருவப்படத்தில் வாயில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உடன் அமைப்பின் நிர்வாகி ஓஷோ முரளி உடன் இருந்தார்.