சனி, 8 நவம்பர், 2025

பார்பிகுயின் உணவக நிறுவனத்தின் சார்பில் இரண்டாவது ஆண்டு படைப்பாக வர்ணங்கள் ஆயிரம் என்ற தலைப்பில் குழந்தைகளுக்கான மெகா ஓவிய போட்டி. பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு.

பார்பிகுயின் உணவக நிறுவனத்தின் சார்பில் இரண்டாவது ஆண்டு படைப்பாக வர்ணங்கள் ஆயிரம் என்ற தலைப்பில் குழந்தைகளுக்கான மெகா ஓவிய போட்டி. பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு.

பார்பிகுயின் உணவக நிறுவனத்தின் சார்பில் இரண்டாவது ஆண்டு படைப்பாக வர்ணங்கள் ஆயிரம் என்ற தலைப்பில் குழந்தைகளுக்கான மெகா ஓவிய போட்டி. பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு. 

சேலம் உட்பட தமிழகத்தின் பிரபல உணவக நிறுவனமான பார்பிகுயின் சார்பில் ஆண்டுதோறும் குழந்தைகளை நல்வழிப்படுத்தும் விதமாகவும் பொது சேவைக்காகவும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவதில் தனி கவனம் செலுத்தி வருகின்றனர். அதில் மிகுந்த வரவேற்ப்பனையும் பெற்றுள்ள இந்த பார்பி குயின் உணவக நிறுவனம் இரண்டாம் ஆண்டு படைப்பாக குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு குழந்தைகளுக்கான மெகா ஓவிய போட்டி சேலம் குகை பகுதியில் உள்ள பார்பி குயின் உணவக வளாகத்தில் நடத்தியது. 
இந்த போட்டிக்கான துவக்க நிகழ்ச்சிக்கு உணவக நிறுவனத்தின் உரிமையாளர் நவ்ஷத் தலைமை வகித்த நிகழ்வில், சேலத்தைச் சேர்ந்த வணிக வணிக தலைமை பயிற்சியாளரும் மற்றும் உளவியலாளருமான வேள்பாரி நடேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டியினை துவக்கி வைத்தார். 
சேலம் மாநகரத்தின் பல்வேறு பகுதிகள் உட்பட மாவட்டம் முழுவதிலிருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இரண்டாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு வரைபடங்களில் வர்ணம் தீட்டுதல், ஐந்து முதல் ஏழாம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு பண்டிகை கொண்டாட்டங்கள் மற்றும் எட்டு முதல் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு என 2030 தொலைநோக்கு பார்வை என்ற தலைப்பில் மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. 
இதில் வெற்றி பெரும் நோட்டில் போட்டியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் தங்களது முழு திறமைகளை வெளிப்படுத்தி ஓவியங்களை தீட்டி தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டியின் போது நிர்வாக இயக்குனர் நவ்ஷத், வணிக தலைமைத்துவ பயிற்சியாளரும் உளவியலாளருமான வேள்பாரி நடேசன், உதவி நிர்வாக இயக்குனர் பையாஸ் மற்றும் அனைத்து கிளை நிறுவனங்களின் பொது மேலாளர் உமர் உள்ளிட்டோர் மாணாக்கர்களின் வெளிப்பாட்டு திறமையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இதில் வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்கு முதல் பரிசாக மூன்று நபர்களுக்கு மிதிவண்டியும், இரண்டாம் பரிசாக மூன்று நபர்களுக்கு மிக்ஸிகளும் மற்றும் மூன்றாவது பரிசாக மூன்று நபர்களுக்கு குக்கர்களும் ஆகியவற்றுடன் சான்றிதழ்களையும் வழங்கி கௌரவித்தனர். பார்பி குயின் நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்படும் இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பொதுமக்கள் இடையே மிகுந்த வரவேற்பினை பெற்றுள்ளது என்பது மட்டும் நிதர்சனமான உண்மை.

வெள்ளி, 7 நவம்பர், 2025

சேலம் சாஸ்தா நகர் ஸ்ரீ ஐயப்பா ஆசிரமத்தில் வரும் 17ஆம் தேதி முதல் மண்டல பூஜை ஆரம்பித்து ஜனவரி 14 ஆம் தேதி வரை உற்சவம், மகரஜோதி மற்றும் திரு ஆபரண தரிசனம் நடைபெற  உள்ளதாக ஸ்ரீ ஐயப்பா ஆசிரம டிரஸ்ட் தலைவர் கே பி நடராஜன் தகவல்.

சேலம் சாஸ்தா நகர் ஸ்ரீ ஐயப்பா ஆசிரமத்தில் வரும் 17ஆம் தேதி முதல் மண்டல பூஜை ஆரம்பித்து ஜனவரி 14 ஆம் தேதி வரை உற்சவம், மகரஜோதி மற்றும் திரு ஆபரண தரிசனம் நடைபெற உள்ளதாக ஸ்ரீ ஐயப்பா ஆசிரம டிரஸ்ட் தலைவர் கே பி நடராஜன் தகவல்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் சாஸ்தா நகர் ஸ்ரீ ஐயப்பா ஆசிரமத்தில் வரும் 17ஆம் தேதி முதல் மண்டல பூஜை ஆரம்பித்து ஜனவரி 14 ஆம் தேதி வரை உற்சவம், மகரஜோதி மற்றும் திரு ஆபரண தரிசனம் நடைபெற  உள்ளதாக ஸ்ரீ ஐயப்பா ஆசிரம டிரஸ்ட் தலைவர் கே பி நடராஜன் தகவல். 

சேலம் குரங்கு சாவடி ஸ்ரீ சாஸ்தா நகர் ஸ்ரீ ஐயப்பா ஆசிரமத்தின் தலைவர் கே பி நடராஜ், செயலாளர் சண்முகம் மற்றும் பொருளாளர் சரவணன் பெருமாள் ஆகியோர் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது ஸ்ரீ ஐயப்பா ஆசிரமத்தில் வரும் 17ஆம் தேதி முதல் ஜனவரி 14ஆம் தேதி மண்டல பூஜை தொடங்கி, வரும் ஜனவரி மாதம் 14ஆம் தேதி வரை உற்சவம் மகரஜோதி மற்றும் திரு ஆபரண தரிசனம் நடைபெற உள்ளதாக தெரிவித்த அவர்கள் கார்த்திகை மாதம் முதல் தேதியில் இருந்து நாள்தோறும் மதியம் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சிறப்பு அன்னதானம் கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான நபர்களுக்கு வழங்கப்பட உள்ளதாகவும், கடந்த வருடத்தைப் போல இந்த வருடம் 4500 முதல் 6000க்கும் மேற்பட்ட வெளி மாநில பக்தர்கள் நடைபயணமாக ஆந்திரா விசாகப்பட்டினம் விஜயவாடா ஹைதராபாத் கர்நாடகா மும்பை பெங்களூர் மைசூர் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் இருந்து வர இருப்பதாகவும் அவர்களுக்கு அனைத்து வசதிகளும் அறக்கட்டளை மூலம் செய்து தர உள்ளதாகவும் தெரிவித்தனர். 
மேலும் சேலம் ஸ்ரீ ஐயப்பா ஆசிரமத்தில் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இருமுடி கட்டி சபரிமலை சென்று சுவாமி தரிசனம் செய்து மீண்டும் சேலம் வரும் வரை அவர்களுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்பட உள்ளதாகவும் இந்த ஆசிரமத்திற்கு பொருட்கள் மற்றும் நன்கொடை வழங்குபவர்கள் கோவில் அலுவலகத்தில் முறைப்படி செலுத்தி ரசீதை பெற்றுக் கொள்ளுமாறு அறக்கட்டளை சார்பாக கேட்டுக் கொள்வதாகவும் இந்த ஆசிரமத்தை பொறுத்தவரை ஆசிரமத்தின் பெயரை பயன்படுத்திக்கொண்டு வெளிநபர்கள் பணம் வசூலிப்பதற்கோ பொருட்களை வாங்குவதற்கோ ஸ்ரீ ஐயப்பா அறக்கட்டளை சார்பாக யாரையும் நியமிக்கப்படவில்லை எந்த சங்கத்திற்கும் அனுமதி வழங்கவில்லை அவ்வாறு யாராவது வசூலித்தால் ஐயப்பா ஆசிரமம் டிரஸ்ட் நிர்வாகம் பொறுப்பில்லை என்றும் தெரிவித்தனர்.
காங்கிரஸ் கட்சி மனித உரிமை துறையின் சேலம் பாராளுமன்ற தலைவராக இர்பான் நியமனம். நியமனம் மற்றும் பரிந்துரை செய்த நிர்வாகிகளுக்கு புதிய தலைவர் நன்றி.

காங்கிரஸ் கட்சி மனித உரிமை துறையின் சேலம் பாராளுமன்ற தலைவராக இர்பான் நியமனம். நியமனம் மற்றும் பரிந்துரை செய்த நிர்வாகிகளுக்கு புதிய தலைவர் நன்றி.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

காங்கிரஸ் கட்சி மனித உரிமை துறையின் சேலம் பாராளுமன்ற தலைவராக இர்பான் நியமனம். நியமனம் மற்றும் பரிந்துரை செய்த நிர்வாகிகளுக்கு புதிய தலைவர் நன்றி. 

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மனித உரிமை துறைக்கு பாராளுமன்ற தொகுதி வாரியாக தலைவர்கள் நியமனம் அறிவிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியுறது நல்லாசியுடன், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மனித உரிமை துறையின் தலைவர் அபிஷேக் மாங் சிங்வி ஆலோசனையின் படி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை அவர்களின் ஒப்புதலின்படியும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மனித உரிமை துறைக்கு பாராளுமன்ற தொகுதி வாரியாக புதிய தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு சுரேந்தர், திருவள்ளூர் தொகுதிக்கு பிரகாஷ் குமார், வடசென்னை தொகுதிக்கு சென்னை விஷ்வா, மத்திய சென்னை தொகுதிக்கு ஷாம் ஜெயகரன்,  சேலம் தொகுதிக்கு இர்பான் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதே போல ராமநாதபுரம் தொகுதிக்கு முகமது அபுதாஹிர், தென்காசி தொகுதிக்கு ராஜாராம் மற்றும் கன்னியாகுமரி தொகுதிக்கு டான் பெரின் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மனித உரிமை துறை சேலம் மாவட்ட தலைவராக இருந்த இர்பான், தற்போது சேலம் பாராளுமன்ற தொகுதிக்கு தலைவராக நியமிக்கப்பட்டதற்கு, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மனித உரிமை துறை மாநில தலைவர் புரட்சித் தோழர் மகாத்மா ஸ்ரீனிவாசன் அவர்களுக்கும், பரிந்துரை செய்த பர்மா பஜார் நாகூர் கனி அவர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள சேலம் பாராளுமன்ற தொகுதி  காங்கிரஸ் மனித உரிமை துறையின் புதிய தலைவர் இர்பான் அவர்களுக்கு சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
தமிழர்களின் கலாச்சாரத்தை சீரழித்து திருச்சி சரத் என்பவர் நடத்திவரும் மன்மதன் கானா பாய்ஸ் ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகளுக்கு தடை விதிப்பதோடு சரத் உள்ளிட்ட ஆபாச நடனம் ஆடும் பெண்களை கடுமையான சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். தமிழ்நாடு கிராமிய நாட்டுப்புற மேடை நடன கலைஞர்கள் மற்றும் திருநங்கை மாற்று திறனாளி அனைத்து கலைஞர்கள் நலச் சங்கத்தினர் சேலம் S.P அலுவலகத்தில் புகார் மனு.

தமிழர்களின் கலாச்சாரத்தை சீரழித்து திருச்சி சரத் என்பவர் நடத்திவரும் மன்மதன் கானா பாய்ஸ் ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகளுக்கு தடை விதிப்பதோடு சரத் உள்ளிட்ட ஆபாச நடனம் ஆடும் பெண்களை கடுமையான சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். தமிழ்நாடு கிராமிய நாட்டுப்புற மேடை நடன கலைஞர்கள் மற்றும் திருநங்கை மாற்று திறனாளி அனைத்து கலைஞர்கள் நலச் சங்கத்தினர் சேலம் S.P அலுவலகத்தில் புகார் மனு.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு.

தமிழர்களின் கலாச்சாரத்தை சீரழித்து திருச்சி சரத் என்பவர் நடத்திவரும் மன்மதன் கானா பாய்ஸ் ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகளுக்கு தடை விதிப்பதோடு சரத் உள்ளிட்ட ஆபாச நடனம் ஆடும் பெண்களை கடுமையான சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். தமிழ்நாடு கிராமிய நாட்டுப்புற மேடை நடன கலைஞர்கள் மற்றும் திருநங்கை மாற்று திறனாளி அனைத்து கலைஞர்கள் நலச் சங்கத்தினர் சேலம் S.P அலுவலகத்தில் புகார் மனு. 


தமிழகத்தில் கோவில் திருவிழாக்கள் மற்றும் முக்கிய விழாக்களின் போது, மேடை நடன நிகழ்ச்சிகள் நடத்தி பொதுமக்களை மகிழ்விப்பது வாடிக்கையான ஒன்று. ஆனால் தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் மேடை நடன நிகழ்ச்சிகளில் ஆபாச நடனமும் எந்த ஒரு ஜாதியை ஊக்கப்படுத்தும் பாடல்கள் ஒளிபரப்பு செய்யக்கூடாது என்று என்னை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மதுரை கிளை ஆணை பிறப்பித்துள்ளது. 
தற்போதுள்ள சூழ்நிலையில் தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் இது போல நிகழ்ச்சிகள் நடைபெறுவதால் அசம்பாவிதங்களும் குற்றங்களும் நடந்துவிடும் என்று ஐயம் உள்ளது. இந்த நிலையில் சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கட்சி பள்ளி கோணாங்கியூர் ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மன்மதன் பாய்ஸ் ஆடல் பாடல் கலை நிகழ்ச்சி கடந்த நான்காம் தேதி நடைபெற்றது. இதில் பங்கேற்ற திருச்சி சரத் பெங்களூரை சேர்ந்த லட்சுமி அஞ்சாம் ப்ரீத்தி தியா பாண்டி மானிய மற்றும் நிலா உள்ளிட்டூர் அருவருக்கத்தக்க மிகவும் மோசமான முறையில் ஆபாச நடனம் ஆடியுள்ளனர்.
தமிழர்களின் கலாச்சாரத்தை சீரழிக்கும் விதமாக நிகழ்த்தப்படும் இதுபோன்ற நிகழ்வுகள் சம்பந்தமாக தமிழ்நாடு கிராமிய நாட்டுப்புற மேடை நடன கலைஞர்கள் மற்றும் திருநங்கை மாற்றுத்திறனாளி அனைத்து கலைஞர்கள் நலச் சங்கத்தின் சார்பில் அதன் மாநில பொது  செயலாளர் பார்த்திபன் உள்ளிட்ட நிர்வாகிகள் சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றினை அளித்தனர். அந்த மனுவில் ஏற்கனவே திருச்சியை சார்ந்த மதன் என்பவர் மன்மதன் கானா பாய்ஸ் ஆடல் பாடல் கலை நிகழ்ச்சி என்ற பெயரில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
இவர் நடத்தக்கூடிய நிகழ்ச்சிகள் அனைத்தும் மிக மிக ஆபாசமான முறையில் உடைகளை அணிந்து பெண்களை நடனமாக வைப்பதாகவும் கணவன் மனைவி இருவருக்கும் நான்கு சுவற்றுக்குள் நடக்கக்கூடிய நிகழ்வை போல மேடையில் ஒளிபரப்ப கூடிய பாடலுக்கு பெண்களை உடலில் தொடக்கூடாது இடத்தில் தொட்டு நடனமாட வைக்கின்றார் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக பலமுறை காவல் நிலையங்களில் திருச்சி சரத் என்பவர் மீது புகார் அளிக்கும் இதற்கு உண்டான எஃப் ஐ ஆர் பதிவு செய்யாமல் சிஎஸ்ஆர் காப்பி மட்டுமே வழங்கி தங்களை அலைக்கழிப்பதோடு தங்கள் புகார் மனு மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை குறிப்பிடப்பட்டிருந்த மனுவில், திருச்சி சிவா என்பவர் ஒவ்வொரு முறையும் அவர் செய்யும் தவறுக்கு மன்னிப்பு கேட்டுவிட்டு மீண்டும் மீண்டும் அதே தவறை செய்து வருவதை வாடிக்கையாக வைத்துள்ளதால் திருச்சி சரத் பெங்களூர் லட்சுமி அஞ்சாம் ப்ரீத்தி தியா பாண்டி மானிய நிலா சுமிதா இவர்கள் அனைவரையும் கடுமையான சட்டத்தின் கீழ் உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்குமாறு சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை கேட்டுக் கொள்வதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர். கிராம கோவில்களில் இது போன்று நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகளில் அருவருக்கத்த மற்றும் ஆபாசமான முறையில் நடத்தப்படும் இது போன்ற நடன நிகழ்ச்சி குழுக்களை உடனடியாக தமிழக அரசும் சேலம் மாவட்ட நிர்வாகமும் தடை விதிக்க வேண்டும் என்று அந்த சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பார்த்திபன் கேட்டுக்கொண்டார்.

வியாழன், 6 நவம்பர், 2025

மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சிக்கும் விவகாரம். தமிழக காவிரி டெல்டா பாசன விவசாயிகள் உரிமைகளை தமிழக அரசு பெற்று தரும் வகையில் முனைப்புடன் செயல்பட வேண்டும்.. தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி அறிக்கை.

மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சிக்கும் விவகாரம். தமிழக காவிரி டெல்டா பாசன விவசாயிகள் உரிமைகளை தமிழக அரசு பெற்று தரும் வகையில் முனைப்புடன் செயல்பட வேண்டும்.. தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி அறிக்கை.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சிக்கும் விவகாரம். தமிழக காவிரி டெல்டா பாசன விவசாயிகள் உரிமைகளை தமிழக அரசு பெற்று தரும் வகையில் முனைப்புடன் செயல்பட வேண்டும்.. தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி அறிக்கை. 

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் கர்நாடக துணை முதலமைச்சர் நீர் பாசனத்துறை அமைச்சருமான சிவகுமார் டெல்லி சென்று மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பான வழக்கு தாமதமாவது விரும்பவில்லை. மேகதாது விவகாரம் தொடர்பாக வழிகாட்டுதலை வெளியிட வேண்டும். மேகதாது அணை கட்டுவதால் பாதிப்பு இல்லை என உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் உடனான ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் இந்த கருத்தை சிவக்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார். மேகதாதுவில் அணை  கட்டுவதால் தமிழக காவிரி டெல்டா பாசன பகுதிகளில் ஆண்டுக்கு 20 லட்சம் ஏக்கர் பரப்பளவிற்கு மேல் நெல் விளைச்சல் இல்லாமல் பாலைவனம் ஆகும். மேகதாது வழக்கு சம்பந்தமாக தமிழகத்தின் உரிமையை உச்ச நீதிமன்றம் மூலம் நிலைநாட்டி தமிழக டெல்டா பாசன விவசாயிகளின் உரிமைகளை திமுக அரசு பெற்றுத்தர முனைப்பு காட்ட வேண்டும். மேலும் திமுக கூட்டணியின் காங்கிரஸ் தான் கர்நாடகாவில் ஆட்சி செய்கிறது. எனவே மேகதாது விவகாரம் தொடர்பாக பாரபட்சத்திற்கு இடம் கொடுக்காமல் தமிழகத்தின் உரிமைக்காகவும் தமிழக அரசு செயல் பட வேண்டும் என்றும் தனது அறிக்கையின் வாயிலாக தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் வேலுச்சாமி தெரிவித்துள்ளார்.

புதன், 5 நவம்பர், 2025

கொட்டும் மழையிலும் குடை பிடித்தவாறு தனது அறப்பணியை இடைவிடாது செய்த சமூக செயற்பாட்டாளர்.

கொட்டும் மழையிலும் குடை பிடித்தவாறு தனது அறப்பணியை இடைவிடாது செய்த சமூக செயற்பாட்டாளர்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

கொட்டும் மழையிலும் குடை பிடித்தவாறு தனது அறப்பணியை இடைவிடாது செய்த சமூக செயற்பாட்டாளர்.

சேலம் பொன்னம்மாப்பேட்டை புத்துமாரியம்மன் கோவில் பகுதியை சார்ந்தவர் தயவுலிங்கம். வழக்கறிஞர் பணி செய்து வரும் இவர் சேரும் மாநகராட்சி ஒன்பதாவது கோட்டை மாமன்ற உறுப்பினராகவும் இருந்து வருகிறார். அது மட்டுமல்லாமல் அனாதை சடலங்களை மீட்டு அவர்களை நல்லடக்கம் செய்வது இலவச அமரர் உறுதி உள்ளிட்ட பல்வேறு சேவைகளை எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்து வரும் இவர் தெய்வா என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை உருவாக்கி, நாள்தோறும் ஏழை எளிய ஆதரவற்ற முதியவர்களுக்கு காலை சிற்றுண்டிகளை  வழங்கி வருகிறார். பருவநிலையின் காரணமாக இன்று காலை முதலே சேலம் மாநகரம் முழுவதும் மழை பெய்த நிலையிலும் கூட, தனது அறப்பணியை நிறுத்தி விடாமல் ஏழை எளியவர்களின் பசியை போக்க வேண்டும் என்ற ஒரே நோக்கில் குடைகளை பிடித்தவாறு தெய்வா அறக்கட்டளை நிறுவனர் வழக்கறிஞர் தெய்வீக லிங்கம் மற்றும் நிர்வாகிகள் சிற்றுண்டிகளை வழங்கி மகிழ்கிறனர். கூப்பிட்ட குரலுக்கு ஓடி தனது கோட்ட மக்களுக்கு உதவி செய்து வரும் தெய்வலிங்கத்தின் இந்த செயலும் அந்த பகுதி மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பினையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
கார்த்திகாவிற்கு தங்கத்தால் ஆன நினைவு பரிசு மற்றும் 50 ஆயிரம் ரொக்கம்.

கார்த்திகாவிற்கு தங்கத்தால் ஆன நினைவு பரிசு மற்றும் 50 ஆயிரம் ரொக்கம்.

சேலம்.
S.K.சுரேஷ்பாபு.

சேலம் மாவட்ட தூய்மை பணியாளர்கள் சார்பாக கண்ணகி நகர் கார்த்திகாவிற்கு தங்கத்தால் நினைவுப்பரிசும்,  ரூபாய் 50000 ம் பணமும் சேலம் மாமன்ற உறுப்பினர் ஜெ.மு.இமயவரம்பன் வழங்கினார்