புதன், 19 நவம்பர், 2025

பவானி அருகே குடிசை வீட்டில் தீ விபத்து..!

பவானி அருகே குடிசை வீட்டில் தீ விபத்து..!

பவானி அருகே குடிசை வீட்டில் தீ விபத்து..!

பவானி குட்டி
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ஜம்பை நல்லிபாளையத்தை சேர்ந்தவர் மூர்த்தி (45) இவர் கூலித் தொழிலாளி ஆவார். இவர் வேலைக்கு சென்று விட் டார். வீட்டில் இருந்த இவருடைய தாயார் சமையல் செய்வ தற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைத்தார். அப்போது திடீரென தீப்பிடித்து குடிசையில் பரவியது.
 

மூர்த்தியின்  தாயார் வெளியே ஓடி வந்தார். இது குறித்து பவானி தீயணைப்பு துறை நிலை அலுவலர் பழனிச்சாமி தலைமையில் சென்றனர். அந்த குடிசைக்கு தண்ணீரை பீச்சடித்து ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். வீட்டில் இருந்த 2 பவுன் நகை பணம் தீயில் எரிந்து நாசமானது. கியாஸ் கசிவு காரணமாக இந்த விபத்து என்பதை இருக்கலாம் என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

திங்கள், 17 நவம்பர், 2025

கர்நாடக அரசு மேகதாதுவில் அணைக்கட்ட முயற்சித்தால் தமிழக விவசாயிகள் ரத்தம் சிந்தவும் தயங்க மாட்டோம். உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி கடும் எச்சரிக்கை.

கர்நாடக அரசு மேகதாதுவில் அணைக்கட்ட முயற்சித்தால் தமிழக விவசாயிகள் ரத்தம் சிந்தவும் தயங்க மாட்டோம். உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி கடும் எச்சரிக்கை.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

கர்நாடக அரசு மேகதாதுவில் அணைக்கட்ட முயற்சித்தால் தமிழக விவசாயிகள் ரத்தம் சிந்தவும் தயங்க மாட்டோம். உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி கடும் எச்சரிக்கை. 

மேகதாதுவில் அணை கட்ட அனுமதி வழங்க வேண்டும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா பாரதப் பிரதமருக்கு கடிதம் எழுதியதுடன் அதற்கான நிதியையும் ஒதுக்க வேண்டும் என்று கடிதம் எழுதி இருந்தார். இது தொடர்பாக உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கத்தில் மாநிலத் தலைவர் வேலுச்சாமி, கர்நாடக முதல்வர் சித்திராமையாவின் செயல்பாட்டிற்கு, தனது அறிக்கையில், கர்நாடக முதலமைச்சர் சித்த ராமையாவின் இந்த முயற்சிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட நடவடிக்கை மேற்கொண்டால் தமிழகத்தின் உரிமைக்கா தமிழக விவசாயிகள் ரத்தம் சிந்தவும் தயங்க மாட்டோம் என உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் இந்த அறிக்கையின் வாயிலாக கர்நாடக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன் என தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் வேலுச்சாமி தெரிவித்துள்ளார்.
அம்பேத்கர் இந்திய குடியரசு கட்சி மற்றும் தேசிய தலித் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழகத்தில் சிறந்த சமூக சேவை புரிந்தவர்களுக்கான டாக்டர் பி ஆர் அம்பேத்கர் சேவா ரத்னா விருதுகள்.

அம்பேத்கர் இந்திய குடியரசு கட்சி மற்றும் தேசிய தலித் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழகத்தில் சிறந்த சமூக சேவை புரிந்தவர்களுக்கான டாக்டர் பி ஆர் அம்பேத்கர் சேவா ரத்னா விருதுகள்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

அம்பேத்கர் இந்திய குடியரசு கட்சி மற்றும் தேசிய தலித் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழகத்தில் சிறந்த சமூக சேவை புரிந்தவர்களுக்கான டாக்டர் பி ஆர் அம்பேத்கர் சேவா ரத்னா விருதுகள். 

தமிழகத்தில் சிறந்த சமூக சேவை புரிந்தவர்களுக்கு அம்பேட்கர் இந்திய குடியரசு கட்சி மற்றும்  தேசிய தலித் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில்  கடலூர் மாநகர் காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. அம்பேட்கர் இந்திய குடியரசு கட்சி தமிழ் மாநில துணை பொதுச் செயலாளர் மு.சக்திவேல் அவர்களுக்கு டாக்டர்பி.ஆர்.அம்பேட்கர் 
சேவா ரத்னா விருதுகளை தமிழ் மாநில தலைவர் அ.த.ஸ்ரீரங்கன்பிரகாஷ் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அம்பேட்கர் இந்திய குடியரசு கட்சி ARPI தமிழ்மாநில அமைப்புச் செயலாளர் சேலம் சி.விஸ்வநாதன் உடன் சேலம் மாவட்ட அமைப்புச் செயலாளர் ஜி.சங்கர், கடலூர்  மாவட்ட செயலாளர் ஆறுமுகம்,  விழுப்புரம் மாவட்ட செயலாளர் சிவபதி மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். 
சேலம் புத்தூர் அக்ரகாரத்தில் போலி நிறுவனம் கட்டுவதற்காக ஆக்கிரமித்த 9000 சதுர அடி அரசு புறம்போக்கு நிலம் போலி ஆவணங்கள் மூலம் சட்ட விரோதமாக விற்பனை செய்த கிறித்துவ அமைப்பினர் மற்றும் அரசு துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் விரைவில் ஆளுநரை சந்தித்து  மத்திய மாநில அரசுகள் வழங்கிய அடையாள அட்டைகள் ( ஆதார் மற்றும் குடும்ப அட்டை ) ஒப்படைக்கப்படும். தேசிய மக்கள் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் ராம்ஜி கடும் எச்சரிக்கை.

சேலம் புத்தூர் அக்ரகாரத்தில் போலி நிறுவனம் கட்டுவதற்காக ஆக்கிரமித்த 9000 சதுர அடி அரசு புறம்போக்கு நிலம் போலி ஆவணங்கள் மூலம் சட்ட விரோதமாக விற்பனை செய்த கிறித்துவ அமைப்பினர் மற்றும் அரசு துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் விரைவில் ஆளுநரை சந்தித்து மத்திய மாநில அரசுகள் வழங்கிய அடையாள அட்டைகள் ( ஆதார் மற்றும் குடும்ப அட்டை ) ஒப்படைக்கப்படும். தேசிய மக்கள் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் ராம்ஜி கடும் எச்சரிக்கை.

 
சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் புத்தூர் அக்ரகாரத்தில் போலி நிறுவனம் கட்டுவதற்காக ஆக்கிரமித்த 9000 சதுர அடி அரசு புறம்போக்கு நிலம் போலி ஆவணங்கள் மூலம் சட்ட விரோதமாக விற்பனை செய்த கிறித்துவ அமைப்பினர் மற்றும் அரசு துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் விரைவில் ஆளுநரை சந்தித்து  மத்திய மாநில அரசுகள் வழங்கிய அடையாள அட்டைகள் ( ஆதார் மற்றும் குடும்ப அட்டை ) ஒப்படைக்கப்படும். தேசிய மக்கள் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் ராம்ஜி கடும் எச்சரிக்கை. 

சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட புத்தூர் அக்ரஹாரம் பெரியார் நகரில் 1983 ஆம் ஆண்டு கிறித்துவ மதத்தை சார்ந்த தாஸ் செல்லதுரை மற்றும் சேவியர் உள்ளிட்ட ஏழு பேர் கொண்ட குழுவினர் அங்கு வந்து இந்த பகுதி மக்களுக்கு மருத்துவ வசதி மற்றும் கல்வி வசதி செய்து தருவதாக ஆசை வார்த்தை கூறி ஒன்பதாயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து அதனை முறைகேடாக விற்றது தொடர்பாக சம்பந்தப்பட்ட பகுதி மக்கள் பலமுறை அரசு துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் இல்லை. 
இதன் அடிப்படையில் சேலம் புத்தூர் அக்ரஹாரம் பெரியார் நகரை சேர்ந்த பாதிக்கப்பட்ட மக்கள் சேலத்தில் உள்ள தேசிய மக்கள் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் ராம்ஜி அவர்களை அலுவலகத்தில் சந்தித்து முறையிட்டனர். ராம்ஜி அறிவுறுத்தலின் பேரில் இன்று பாதிக்கப்பட்ட பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிருந்தா தேவி அவர்களை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றியம் வழங்கினர். சம்பந்தப்பட்ட தாஸ் உள்ளிட்ட ஏழு பேர் கொண்ட குழுவினர் கடந்த 1983 ஆம் ஆண்டு தங்களது பகுதிக்கு வந்ததாகவும் தங்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்து தருவதாக போலியான ஆசை வார்த்தை கூறி வெளிநாட்டு பணம் பெற்று போலியான  அறக்கட்டளை ஒன்றினை உருவாக்கி பணி செய்து வந்ததாகவும், அப்போது ஐந்தாண்டுகள் கழித்து தங்களது ஊரில் உள்ள நீர்நிலை கூட்டத்தில் ஒரு குடிசையை போட்டு அலுவலகம் செயல்பட்டுக் கொண்டிருந்தது. பின்னர் வெளிநாட்டு பணம் பெற்று அரசு புறம்போக்கு நிலத்தில் சுமார் 9000 சதுர அடி நிலம் எடுத்து குட்டைக்கு மண் நிரப்பி அதில் அலுவலகம் கட்டி நிறுவனம் நடத்தி வந்தார்கள். சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக வெளிநாட்டு பணம் சம்பந்தப்பட்ட அறக்கட்டளைக்கு வராத காரணத்தினால் அறக்கட்டளை செயல்பாட்டில் இல்லை. தாஸ் என்பவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இறந்துவிட்டார். மேலும் எங்கள் ஊர் கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடி நமது ஊருக்கு ஒரு சமுதாயக்கூடம் அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக முதலமைச்சர் சேலம் மாவட்ட ஆட்சியர் வட்டாட்சியர் மற்றும் ஊரக வளர்ச்சி வட்டார அலுவலர் அவர்களை சந்தித்து அனைவரிடத்திலும் சமுதாயக்கூடம் வேண்டி விண்ணப்பம் பலமுறை கொடுத்ததாகவும், இறுதியாக சேலம் ஆதிதிராவிடர் வட்டாட்சியர் அவர்கள் தங்களுக்கு சமுதாயக்கூடம் அமைக்க வேண்டும் என்றால் 8000 சதுர அடி நிலம் அரசு புறம்போக்கு இருந்தால் சொல்லுங்கள் உங்களுக்கு அந்த இடத்தில் மேற்கொண்ட சமுதாயக்கூடம் அமைத்துக் கொடுக்க ஆவணம் செய்கிறோம் என்ற சொன்னதன் அடிப்படையில் ஊர்மக்கள் ஒன்று கூடி போலி நிறுவனம் சுமார் 15 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளதால் எங்கள் ஊரில் நடக்கும் அனைத்து திருமணம் காதணி விழா மஞ்சள் நீராட்டு விழா மற்றும் திருவிழா காலங்களில் அன்னதானம் வழங்கும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் மேற்கண்ட இடத்தில் நடத்தி வந்ததாகவும், அந்த இடத்தில் ஊர் பொது சேவைக்காக சமுதாயக்கூடம் அமைக்க தேர்வு செய்து கொடுக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
அப்பொழுது உயிரிழந்த தாஸ் என்பவர் தங்கள் ஊர் மக்களுக்கு தெரியாமலேயே போலி நிறுவன பெயருக்கு பட்டா வாங்கி உள்ளது தற்பொழுது தெரிய வந்ததாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர். மேலும் தாஸ் பெயரின் பட்டா உள்ளதால் அவர் இறந்து விட்டபடியால் அவரது மனைவி மற்றும் மகன் இருவரும் சேர்ந்து கடந்த 12ஆம் தேதி திலகம் என்பவருக்கு 20 லட்சம் ரூபாய்க்கு தனிநபருக்கு விற்பனை செய்துள்ளார்கள். இதற்கான வில்லங்க சான்றும் இத்துடன் இணைத்து சமர்ப்பித்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்த அந்த மனுவில் மேற்கண்ட இடம் முழுவதும் அரசு சொந்தமான நிலம் ஆகையால் விற்பனை செய்வதை ரத்து செய்து எங்கள் ஊர் பயன்பாட்டிற்கு கொடுக்க ஆவண செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்வதாக புத்தூர் அகர்வாரம் பெரியார் நகர் மக்கள் என்று அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தனர். மனுவனை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் திருமதி டாக்டர் பிருந்தா தேவி அவர்கள் மனு மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். 
தொடர்ந்து தேசிய மக்கள் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் ராம்ஜி தலைமையிலான ஊர் பொதுமக்கள் செய்தியாளர்களிடம் கூறும் போது, ஏற்கனவே பலமுறை அரசுத்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லாத காரணத்தினால், இந்த முறைகேடான சம்பவத்திற்கு துணை போன தாஸ் என்பவரின் மனைவி மற்றும் மகன் உட்பட இதற்கு மூல காரணமாக செயல்பட்ட வருவாய் கோட்டாட்சியர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தற்பொழுது மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு வழங்கியுள்ளதாகவும், மாவட்ட ஆட்சியரும் ஒருவேளை நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில், ஊர் பொதுமக்களில் நலனுக்காக சமுதாயக்கூடம் அமைத்து தரவேண்டும் என்பதை வலியுறுத்தி பலகட்ட போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக கூறிய ராம்ஜி விரைவில் தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து புத்தூர் அக்ரஹாரம் பெரியார் நகர் மக்களை ஒன்றிணைத்து மத்திய மாநில அரசுகள் வழங்கி உள்ள ஆதார் மற்றும் குடும்ப அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டம் நடத்தப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்தார். இதனால் வாரம் தோறும் திங்கட்கிழமை நடைபெறும் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பும் பரபரப்பும் காணப்பட்டது.

சனி, 15 நவம்பர், 2025

சேலத்தில் மாநில அளவில் 2025 ஆம் ஆண்டிற்கான யோகாசன போட்டி. தமிழகம் முழுவதும் இருந்து 700-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்பு.

சேலத்தில் மாநில அளவில் 2025 ஆம் ஆண்டிற்கான யோகாசன போட்டி. தமிழகம் முழுவதும் இருந்து 700-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்பு.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலத்தில் மாநில அளவில் 2025 ஆம் ஆண்டிற்கான யோகாசன போட்டி. தமிழகம் முழுவதும் இருந்து 700-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்பு. 

பள்ளி மாணவ மாணவிகளின் உடல் நலனை பேணிக் காக்கும் வகையில் ஆண்டுதோறும் மாநில அளவில் யோகா போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் நலபாண்டிற்கான யோகா போட்டி  ஸ்ரீ பதஞ்சலி சித்தர் யோகா டிரஸ்ட் மற்றும் மல்லூர் ஸ்ரீ ஜோதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளி ஆகியவை இணைந்து நடத்திய மாநில அளவிலான யோகா போட்டி சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள வேங்கம்பட்டியில் நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் ஜனாப் சையத் சர்புதீன் சாஹிப், சேலம் கோட்டை கிரசன்ட் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியின் செயலாளர் முகமத்  நுமான் சாஹிப், மரபு வழி சித்த மருத்துவரும் சாம்பவி சித்தா கிளினிக் நிறுவனருமான மருத்துவர் தங்கதுரை மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி ஈஸ்வரி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியினை சேலம் மல்லூர் பேரூராட்சி துணை தலைவரும் ஸ்ரீ பூவாயம்மாள் மூவிஸ் தயாரிப்பாளருமான வேங்கை அய்யனார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாநில அளவிலான போட்டியினை துவக்கி வைத்தார். 
இந்த போட்டியில் தமிழக முழுவதும் 38 மாவட்டங்களில் இருந்து 700 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இவர்களில் வயது வாரியாக பொது பிரிவில் கலந்து கொள்ளும் மாணவ மாணவிகளுக்கு மூன்று ஆசனங்களும் மற்றும் பொது பிரிவில் கலந்து கொள்ளும் மாணவ மாணவிகளுக்கு ஐந்து ஆசனங்களும் என போட்டி நடத்தப்பட்டது. போட்டியில் பங்கேற்ற மாணவ மாணவிகள் போட்டி நடுவர்களின் உத்தரவிற்கு ஏற்ப தங்களது உடல்களை வில்லாக வளைத்து ஆசனங்களை செய்து காட்டியது பார்வையாளர்களையும் பெற்றோர்களையும் பிரம்மிக்க வைத்தது. 

இந்த போட்டியில் சிறப்பாக தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் மாணவ மாணவிகள் தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க சிபாரிசு செய்யப்படுவார்கள் என்று போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். மேலும் தமிழக அரசு அனைத்து பள்ளிகளிலும் யோகா கலையை பாடமாக கொண்டு வந்து செயல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.இங்க துவக்க விழா நிகழ்வில் சிவம் யோகாசன சாலை யோகாச்சார்யா சோமசுந்தரம் வேர்ல்ட் டைகர் பிட்னஸ் ஜிம் உரிமையாளர் மணிகண்டன் பசுமை கலாம் நண்பர்கள் அறக்கட்டளை சமூக சேவகர் பாக்யராஜ் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவர் ரூபேஷ் சர்மா சேலம் செவ்வாய்பேட்டை சௌராஷ்ட்ரா வித்யாலயா பள்ளியின் யோகா ஆசிரியர் ஜெயா பிரகாஷ் ராயல் ஸ்போர்ட்ஸ் அகாடமி நிறுவனர் ரமேஷ் யோகா கலை மாமணி ரமேஷ் யோகா ரத்னா பாலாஜி உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.

வியாழன், 13 நவம்பர், 2025

சோனா வள்ளியப்பா பப்ளிக் பள்ளியில் குழந்தைகள் தின விழா மற்றும் தொழில் முனைவு திறன்களை வளர்க்கும் சிறப்புச் சந்தை நடைப்பெற்றது

சோனா வள்ளியப்பா பப்ளிக் பள்ளியில் குழந்தைகள் தின விழா மற்றும் தொழில் முனைவு திறன்களை வளர்க்கும் சிறப்புச் சந்தை நடைப்பெற்றது

சேலம்.
S.K. சுரேஷ் பாபு.

சோனா வள்ளியப்பா பப்ளிக் பள்ளியில் குழந்தைகள் தின விழா மற்றும் 
தொழில் முனைவு திறன்களை வளர்க்கும் சிறப்புச் சந்தை நடைப்பெற்றது

சேலத்தின் சோனா வள்ளியப்பா பப்ளிக் பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு  மாணவர்களின் தொழில் முனைவுத் திறன்களை வளர்க்கும் நோக்கில் “இளம் தொழில் முனைவோர் சந்தை” என்ற சிறப்புச் சந்தை ஏற்பாடு செய்யப்பட்டது. பள்ளியின் இயக்குனர் டாக்டர் வி. கார்த்திகேயன் தலைமையில் நடைப்பெற்ற இந்த நிகழ்வில்,  முதல்வர் திருமதி கவிதா  முன்னிலை வகித்தார். மேலும் இவ்விழா சிறப்பாக நடைபெற வாய்ப்பு வழங்கிய சோனா கல்வி நிறுவனங்களின் தலைவர் சொ. வள்ளியப்பா, திருமதி சீதா வள்ளியப்பா, துணை தலைவர்கள் சொக்கு வள்ளியப்பா மற்றும்தியாகு வள்ளியப்பா ஆகியோர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக சேலம் பிரணவ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் திருமதி. சீ. சம்யுக்தா அவர்கள்  கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தி உரையாற்றினார். மாணவர்கள் தாங்களே உருவாக்கிய பல்வேறு கைவினைப் பொருட்கள், சுவையான உணவுப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள் மற்றும் புதுமையான பொருட்களை விற்பனைக்காகக் கொண்டு வந்து விற்பனை செய்து தங்களது வணிக நுண்ணறிவை வெளிப்படுத்தினர் மேலும் மாணவர்களின் உற்சாகத்தையும் படைப்பாற்றலையும் அவர் வெகுவாக பாராட்டினர்,
இத்தகைய நிகழ்ச்சிகள் குழந்தைகளின் நம்பிக்கை, குழுபண்பு மற்றும் தொழில் முனைவுத் திறனை வளர்க்கின்றன எனக் பள்ளியின் இயக்குனர் டாக்டர் வி. கார்த்திகேயன் மற்றும் முதல்வர் திருமதி இ.ஜெ.கவிதா ஆகியோர் தெரிவித்தனர். இந்த விழாவில் ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் பெரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு குழந்தைகள் தினத்தைச் சிறப்பித்தனர்.

புதன், 12 நவம்பர், 2025

சேலம் அகர்வால் கண் மருத்துவமனையில் 9 வினாடிகளில் பார்வையை சரி செய்யும் ஸ்மைல் ப்ரோ சிகிச்சை தொடக்கம். சேலம் மாநகர காவல் ஆணையர் அணில் குமார் கிரி தொடங்கி வைத்தார்.

சேலம் அகர்வால் கண் மருத்துவமனையில் 9 வினாடிகளில் பார்வையை சரி செய்யும் ஸ்மைல் ப்ரோ சிகிச்சை தொடக்கம். சேலம் மாநகர காவல் ஆணையர் அணில் குமார் கிரி தொடங்கி வைத்தார்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் அகர்வால் கண் மருத்துவமனையில் 9 வினாடிகளில் பார்வையை சரி செய்யும் ஸ்மைல் ப்ரோ சிகிச்சை தொடக்கம். சேலம் மாநகர காவல் ஆணையர் அணில் குமார் கிரி தொடங்கி வைத்தார். 

சேலம் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை ஸ்மைல் ப்ரோ ( சிறிய கீறல் வழியாக கருவிழியை சரி செய்தல் ) என்ற உலகின் முதல் மற்றும் ப்ரோ ரோபோடிக் அறுவை சிகிச்சை திட்டத்தை தொடங்கி இருக்கிறது. ஒன்பது நொடிகளில் கிட்ட பார்வை மற்றும் சிதறல் பார்வையை சரி செய்வதற்கு ஒரு குறைவான ஊடுருவல் உள்ள மற்றும் அதிக துல்லியமான சிகிச்சை முறை. இந்த சிகிச்சைக்கு பிறகு கண் கண்ணாடிகளை பயன்படுத்த வேண்டிய சூழல் தேவை இல்லை என்பது மருத்துவர்களின் கூற்று. டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் மருத்துவ சேவைகளுக்கான பிராந்திய தலைவர்கள் டாக்டர் கற்பகவல்லி மற்றும்  ரம்யா சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்த விழாவில், சேலம் மாநகர காவல் துறை ஆணையர் அணில் குமார் கிரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்து ஸ்மைல் ப்ரோ திட்டத்தினை தொடங்கி வைத்தார். 
விழாவில் கலந்துகொண்ட சேலம் மாநகர காவல் துறை ஆணையர் அனில்குமார் கிரி பேசுகையில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையில் நவீன சிகிச்சை முறையான ஸ்மைல் கிளாசிக் செயல் திட்டத்தை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும் இத்தகைய மிக நவீன சிகிச்சையின் பலன் வெகு சிலருக்கு மட்டும் கிடைப்பதாக இருக்கக் கூடாது என்றும் இந்த புரட்சிகரமான சிகிச்சை செயல்முறைகள் அனைத்து இடங்களிலும் அனைவருக்கும் கிடைக்குமாறு செய்யப்படுவது மிக அவசியம் என்றார். தொடர்ந்து மருத்துவமனையின் மருத்துவ சேவைகளுக்கான பிராந்திய தலைவர் டாக்டர் கற்பகவல்லி பேசுகையில் புரட்சிகரமான இந்த நுட்பம் குறைவான ஊடுருவல் உள்ள ஒரு மருத்துவ செயல் முறையாகும் என்று குறிப்பிட்ட அவர் பாரம்பரியமாக மேற்கொள்ளப்படும் லேசர் அறுவை சிகிச்சைகள் போல் அல்லாமல் இந்த நவீன உத்தியில் ஒரு மிகச் சிறிய கீறல் மட்டுமே தேவைப்படுகிறது என்றும் கருவிழியின் நிலைத்தன்மையை பாதுகாப்பதுடன் அறுவை சிகிச்சைக்கு பின்பு வரக்கூடிய இது குறைவாகிறது மிக வேகமாக குணமடைவது மிக குறைவான கண் உலர்வு தன்மை மற்றும் மிக பிரமாதமான பார்வை திறன் பலன்கள் ஆகியவற்றின் மூலம் நோயாளிகள் சிறப்பான ஆதாயங்களை பெறுகின்றனர் என்றார். 
பின்னர் நோயாளிகளுக்கு இந்த புதிய மருத்துவ செயல்முறையின் பொருந்து நிலை குறித்து மருத்துவமனையின் மருத்துவ சேவைக்கான பிராந்திய தலைவர் டாக்டர் ரம்யா சம்பத் பேசுகையில் அதிக அளவு கிட்ட பார்வை உள்ளவர்கள் உட்பட பலருக்கும் இது பொருந்தும் என்றும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் குறைந்தது ஒரு வருடமாக நிலையான கண்ணாடி பவர் உள்ளவர்கள் ராணுவம் காவல்துறை விமானப்படை மற்றும் விளையாட்டு வீரர்கள் போன்ற குறிப்பிட்ட பணிகளில் இருப்பவர்களுக்கு இது மிகவும் உகந்தது என்றும் மெல்லிய கருவிழிப் படலம் உள்ளவர்கள் அல்லது காண்டாக்ட் லென்ஸ் அணிய முடியாதவர்களுக்கும் இந்த சிகிச்சை பெறலாம் என்றும் கண்களில் நடுக்கம் உள்ளவர்களுக்கும் கருவிழியின் தழும்பு ஏற்படுபவர்களுக்கும் கூட ஒளி விலகல் அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்வதில் தங்களுக்கு நல்ல அனுபவம் உள்ளதாக தெரிவித்த அவர் ஒவ்வொரு நோயாளிகளுக்கும் முழுமையான பரிசோதனை செய்து அவர்களின் தனிப்பட்ட தேவைகள் மற்றும் பார்வை குறைபாடுகளை ஆராய்ந்த பின்னரே ஸ்மைல் ப்ரோ அவர்களுக்கு சரியான தேர்வாய் என்பதை நாங்கள் உறுதி செய்கிறோம் என்றும் தெரிவித்தார். ஸ்மைல் ப்ரோ என்பது உலகின் முதல் ரோபோடிக் முறையில் ஆன மடிப்பில்லாத குறைந்த ஊடுருவல் கொண்ட லேசர் திருத்த சிகிச்சை செயல்முறை உத்தியாகும் மென்மையானதாகவும் மற்றும் வெளியேற்ற சிகிச்சை ஆகவும் இது வடிவமைக்கப்படுகிறது என்றும் நவம்பர் 30ஆம் தேதி வரை ஸ்மைல் ப்ரோ பார்வை திறன் மதிப்பீடு மற்றும் ஸ்மைல் ப்ரோ அறுவை சிகிச்சைக்கான கட்டணம் மீது 50 சதவீதம் தள்ளுபடியுடன் செய்து கொள்ளலாம் என்று மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் மருத்துவமனையின் மருத்துவர்கள் செவிலியர்கள் இந்த திட்டத்தின் மூலம் ஏற்கனவே பயன் பெற்றவர்கள் பணியாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.