செவ்வாய், 15 ஜூலை, 2025

பாட்டாளி மக்கள் கட்சியின் 37 ஆம் ஆண்டு தொடக்க விழா. மூவர்ண கொடியினை ஏற்றி வைத்து கட்சியினருக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்கிறது பாமக சட்டமன்ற உறுப்பினர்.

பாட்டாளி மக்கள் கட்சியின் 37 ஆம் ஆண்டு தொடக்க விழா. மூவர்ண கொடியினை ஏற்றி வைத்து கட்சியினருக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்கிறது பாமக சட்டமன்ற உறுப்பினர்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

பாட்டாளி மக்கள் கட்சியின் 37 ஆம் ஆண்டு தொடக்க விழா. மூவர்ண கொடியினை ஏற்றி வைத்து கட்சியினருக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்கிறது பாமக சட்டமன்ற உறுப்பினர்.

பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கி 36 ஆண்டுகள் நிறைவடைந்து, இன்று 37 ஆம் ஆண்டு தொடக்க விழா. இந்த நிகழ்வை தமிழகம் முழுவதும் உள்ள பாமகவினர் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.  இதன் ஒரு பகுதியாக சேலம் மாநகர மாவட்ட பாமக அலுவலகத்தில் மூவர்ண கொடியினை ஏற்றி நிர்வாகிகள்  அனைவருக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ந்தார் சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் இரா. அருள். இதனை அடுத்து, பாட்டாளி சொந்தங்களுக்கு மருத்துவர் ஐயா அவர்களின் என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே அன்பு மடல் ஒரு லட்சம் பிரதிகளை சேலம் மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக எம்.பி சதாசிவம் அவர்கள் வெளியிட சிவதாபுரம் PV. மகாதேவன் (PV மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர்) மாவட்ட துணை செயலாளர் பெற்றுக்கொண்டார்.
ஆகஸ்ட் 10ஆம் தேதி பூம்புகாரில் நடைபெறும் மகளிர் மாநாடு குறித்து மாநகர மாவட்ட  நிர்வாகிகளுடன் ஆலோசனையும் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் கதிர்.இராஜரத்தினம், மாநில தேர்தல் பணிக்குழுத்தலைவர் MP சதாசிவம்,மாவட்டதலைவர், கோவிந்தன், மாவட்ட அமைப்பு செயலாளர் சேகர், மாவடட்ட துனை செயலாளர் ராஜமாணிக்கம், பகுதி செயலாளர் சின்னசாமி, பகுதி தலைவர் பூபதி, மாவட்ட மகளிரணி தங்கம், கிருஷ்ணாம்பாள்,மாநில உழவர் பேரியக்க தலைவர் செந்தில், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கல்வித் தந்தையின் 123 வது பிறந்தநாளில்,   சேலம் பாமக சட்டமன்ற உறுப்பினர் இரா. அருள் மாலை அணிவித்து மரியாதை.

கல்வித் தந்தையின் 123 வது பிறந்தநாளில், சேலம் பாமக சட்டமன்ற உறுப்பினர் இரா. அருள் மாலை அணிவித்து மரியாதை.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

கல்வித் தந்தையின் 123 வது பிறந்தநாளில்,   சேலம் பாமக சட்டமன்ற உறுப்பினர் இரா. அருள் மாலை அணிவித்து மரியாதை. 

தமிழக முன்னாள் முதலமைச்சரும் கல்வி தந்தையுமான கர்மவீரர் காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழா அனைத்து தரப்பினராலும் நாடு முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக சேலம் கமலா ஜங்ஷன் பகுதியில் அமைந்துள்ள கர்மவீரர் காமராஜரின் திருஉருவ சிலைக்கு சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் இரா. அருள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சேலம் மாநகர் மாவட்ட பாமக தலைவர் இராசரத்தினம் உள்ளிட்ட நிர்வாகிகள் கல்விக்கண் திறந்த கர்மவீரரின் திருவருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நிகழ்வில் அவரைப் போற்றி பல்வேறு கோஷங்களையும் உறுப்பின. நிகழ்வில், கோவிந்தன்  உழவர் பேரை இயக்க தலைவர் செந்தில் மாவட்டம் அமைப்பு தலைவர்  சேகர் மாநில இளைஞரணி துணைத் தலைவர் அண்ணாமலை மாவட்ட வன்னியர் சங்க செயலாளர்பூபதி மாவட்ட துணை செயலாளர் சுமன் மாவட்ட மகளிர் அணி செயலாளர் தங்கம் மாவட்ட தேர்தல் பணிக்குழு செயலாளர் விஜயகுமார் மாவட்ட இளைஞரணி செயலாளர் விஜயகுமார் அம்மாபேட்டை பகுதி செயலாளர் வால் காடு  காடு கார்த்தி மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர்   தலைவர் காஜாமீதீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



திங்கள், 14 ஜூலை, 2025

கல்வித் தந்தையின் 123 வது பிறந்தநாளில்,  தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் கூட்டமைப்பின் நிறுவனர் டாக்டர் நாகா அரவிந்தன் மாலை அணிவித்து மரியாதை.

கல்வித் தந்தையின் 123 வது பிறந்தநாளில், தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் கூட்டமைப்பின் நிறுவனர் டாக்டர் நாகா அரவிந்தன் மாலை அணிவித்து மரியாதை.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

கல்வித் தந்தையின் 123 வது பிறந்தநாளில்,  தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் கூட்டமைப்பின் நிறுவனர் டாக்டர் நாகா அரவிந்தன் மாலை அணிவித்து மரியாதை. 

தமிழக முன்னாள் முதலமைச்சரும் கல்வி தந்தையுமான கர்மவீரர் காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழா அனைத்து தரப்பினராலும் நாடு முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக சேலம் கமலா ஜங்ஷன் பகுதியில் அமைந்துள்ள கர்மவீரர் காமராஜரின் திருஉருவ சிலைக்கு தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் கூட்டமைப்பின் நிறுவனரும் ஆரிய வைசிய முன்னேற்ற பேரவையின் தலைவர் மான டாக்டர் நாக அரவிந்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் அமைப்புகளின் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.



கல்வித் தந்தையின் 123 வது பிறந்தநாளில், தேசிய மக்கள் கட்சியின் சேலம் மாவட்ட தலைமை அலுவலகம் திறப்பு.

கல்வித் தந்தையின் 123 வது பிறந்தநாளில், தேசிய மக்கள் கட்சியின் சேலம் மாவட்ட தலைமை அலுவலகம் திறப்பு.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

கல்வித் தந்தையின் 123 வது பிறந்தநாளில், தேசிய மக்கள் கட்சியின் சேலம் மாவட்ட தலைமை அலுவலகம் திறப்பு. 

தமிழக முன்னாள் முதலமைச்சரும், கல்வி தந்தையுமான கர்மவீரர் காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழா இன்று அனைத்து தரப்பினராலும் நாடு முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக சேலம் கமலா ஜங்ஷன் பகுதியில் அமைந்துள்ள கர்மவீரர்  காமராஜரின் திருஉருவ சிலைக்கு தமிழ்நாடு தேசிய மக்கள் கட்சியின் சார்பில் கல்வி தந்தைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது அந்த கட்சியின் மாநில செயலாளர் ராம்ஜி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாநில தலைவர் ஸ்ரீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருவரும் ஒரு சேர்ந்தவாறு கர்மவீரரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 
இதனை அடுத்து அதே பகுதியில் தமிழ்நாடு தேசிய மக்கள் கட்சியின் சேலம் மாவட்ட தலைமை அலுவலகம் திறப்பு விழாவும் நடைபெற்றது. சேலம் மாவட்ட தலைமை அலுவலகத்தினை அந்த கட்சியின் மாநிலத் தலைவர் சீனிவாசன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து கட்சியில் பணிகளையும் செயல்பாடுகளையும் துவக்கி வைத்தார். மேலும் கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் கட்சி நிர்வாகிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். இந்த நிகழ்வில் கிழக்கு மாவட்ட தலைவர் தர்மன் விவசாய அணி மாவட்ட தலைவர் ராமன் விவசாய அணியின் மாவட்ட பொதுச் செயலாளர்கள் விக்னேஷ் செல்வராஜ் சித்தேஸ்வரன் சரவணன் உட்பட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
ஈரோட்டில் நாவலடியான் பியூல்ஸ் நிறுவனத்தின் புதிய பெட்ரோல் பங்குகள் உதயம்

ஈரோட்டில் நாவலடியான் பியூல்ஸ் நிறுவனத்தின் புதிய பெட்ரோல் பங்குகள் உதயம்


ஈரோட்டில் நாவலடியான் பியூல்ஸ் நிறுவனத்தின் சார்பில் புதிய பெட்ரோல் பங்குகள் உதயமானது...

ஈரோடு ஆனைக்கல் பாளையம் பாளையம் ரிங் ரோட்டில் இன்று நாவலடியான் பியூல்ஸ் நிறுவனத்தின் சார்பில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனங்களின் புதிய பெட்ரோல் பங்குகள் திறப்பு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

இவ்விழாவில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளரும், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈ ஆர் ஈஸ்வரன் எம் எல் ஏ,  தமிழ்நாடு வீட்டு வசதி துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி, ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ பிரகாஷ், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வி.எஸ் மாதேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்று பெட்ரோல் பங்குகளை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்,


இவ்விழாவில் ஈரோடு மாநகராட்சி மேயர் எஸ் நாகரத்தினம், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.கே சரஸ்வதி,  கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் எஸ் சூரியமூர்த்தி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொருளாளர் கே.கே.சி பாலு, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.பிரபாகரன், அஇஅதிமுக எம் ஜி ஆர் மன்ற இளைஞர் அணி இணைச் செயலாளர் வி.பி சிவசுப்பிரமணியம், எம்.எஸ்.கே தங்கராஜ் உள்ளிட்ட பலர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனர்,


நவலடியான் பியூல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர்கள் நவலடியான் ஆர்.வேலுச்சாமி, வி.பொன் விக்னேஷ் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.


மேலும் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பொறுப்பாளர்கள் சி எஸ் சதீஷ்குமார் டி.டி சுரேஷ் சந்திரசேகர் தேஷ்முக், குமார் கவுரவ், பிரதீப் குமார் மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் நிர்வாகிகள் பங்கஜ் மீனா, ஆர் ஷங்கர், வருண் யாதவ், ஜீவன் அவினாஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

வியாழன், 10 ஜூலை, 2025

சேலம் ஆத்தூர் புத்தரகவுண்டன் பாளையத்தில் உலகிலேயே மிக உயரமான முத்து மலை முருகன் கோவிலில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சாமி தரிசனம்.

சேலம் ஆத்தூர் புத்தரகவுண்டன் பாளையத்தில் உலகிலேயே மிக உயரமான முத்து மலை முருகன் கோவிலில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சாமி தரிசனம்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சேலம் ஆத்தூர் புத்தரகவுண்டன் பாளையத்தில் உலகிலேயே மிக உயரமான முத்து மலை முருகன் கோவிலில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சாமி தரிசனம்

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புத்திர கவுண்டன் பாளையத்தில் உலகிலேயே அதிக உயரமான 146 அடி உயரம் கொண்ட முத்துமலை முருகன் கோவில் அமைந்துள்ளது.  விழுப்புரம் மாவட்டத்தில் இன்று அதிமுக பொதுச் செயலாளரும்,  சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மன எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் எழுச்சி பயணத்திற்காக சென்றார். அப்பொழுது வழியல் முத்துமலை முருகன் கோவிலில் சேலம் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர் இளங்கோவன் பூரண கும்ப மரியாதை அளித்து கோவிலில் தீபாராதனை பெற்று சுவாமி தரிசனம் செய்தார். அப்பொழுது அவருக்கு வெள்ளி வால் வழங்கப்பட்டது. வால் கையில் ஏந்தி கோவிலில் வலம் வந்து 146 அடி உயரம் கொண்ட முருகன் சுவாமியின் மேலே சென்று வேலுக்கு பன்னீர் அபிஷேகம் செய்து வழிபாடு செய்த அவர்,  மீண்டும் தனது பயணத்தை விழுப்புரத்திற்கு தொடங்கினார்.  அதிமுக நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டு எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

புதன், 9 ஜூலை, 2025

சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா.

சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா.

சேலம் சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் விதமாக  கல்லூரியின் ஸ்ரீ வள்ளியப்பா கலையரங்க கூடத்தில் நடைபெற்றது. கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் விதமாக நடைபெற்ற இந்த விழாவிற்கு கல்லூரியின் தலைவர் வள்ளியப்பா தலைமை வகித்தார். கல்லூரியின் துணைத் தலைவர்கள் சொக்கு வள்ளியப்பா மற்றும் தியாகு வள்ளியப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் முதல்வர் முனைவர் காதர் நவாஸ் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை வரவேற்று பேசினார்.
இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக வருகை புரிந்த ராம் குமார் சேசு எழுத்தாளர் பெற்றோர் மாணவர்களிடையே சிறப்புரை நிகழ்த்தினார். பள்ளி காலத்தில் இருந்து கல்லூரி வாழ்க்கைக்கு அடி எடுத்து வைக்கும் சிறப்பினையும், மாணவர்கள் எவ்வாறு தங்களது திறமைகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதையும் குறித்து பேசினார். கல்லூரியின் தலைவர் திரு .சி.வள்ளியப்பா அவர்கள் பேசும் பொழுது மாணவர்கள் கல்லூரி பருவத்தை நன்முறையில் அமைந்து கொண்டு பெற்றோர்களை பேணி பாதுகாக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
மேலும் கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் மாநிலக் கல்வி பிரிவில் பயின்று 550 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த மாணவர்களுக்கும், மத்திய கல்வியில் (சிபிஎஸ்சி) பயின்று 450க்கு மேல் மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கும் தலா ஐந்தாயிரம் ரூபாய் வீதம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
 இந்த நிகழ்வின் நிறைவாக கணினி பயன்பாட்டியல் துறைத்தலைவர் முனைவர். எஸ். மோகனப்பிரியா அவர்கள் நன்றி உரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சோனா நிறுவனங்களின் இயக்குனர் டாக்டர்.கார்த்திகேயன், முதல்வர் எஸ்.ஆர்.ஆர்.செந்தில்குமார், முதலாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் கலந்துகொண்டு பெருமை சேர்த்தனர்.