வெள்ளி, 5 ஜூன், 2026

NCCF நிறுவனம் கொள்முதல் செய்துள்ள ஐந்து மாவட்ட விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய 400 கோடி ரூபாய்க்கும் மேலாக உள்ள நிலுவைத் தொகையை பெற்றுத் தர நடவடிக்கை எடுத்திடுக. தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி தமிழக அரசுக்கு கோரிக்கை.

NCCF நிறுவனம் கொள்முதல் செய்துள்ள ஐந்து மாவட்ட விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய 400 கோடி ரூபாய்க்கும் மேலாக உள்ள நிலுவைத் தொகையை பெற்றுத் தர நடவடிக்கை எடுத்திடுக. தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி தமிழக அரசுக்கு கோரிக்கை.

சேலம், 
S.K. சுரேஷ்பாபு. 

NCCF நிறுவனம் கொள்முதல் செய்துள்ள ஐந்து மாவட்ட விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய 400 கோடி ரூபாய்க்கும் மேலாக உள்ள நிலுவைத் தொகையை பெற்றுத் தர நடவடிக்கை எடுத்திடுக. தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி தமிழக அரசுக்கு கோரிக்கை. 

தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்று உள்ள த.வெ.க தலைமையிலான தமிழக அரசுக்கு வாழ்த்துக்களையும், தமிழக விவசாயிகளுக்கான அத்தியாவசிய கோரிக்கைகள் குறித்தும் அவ்வப்போது தமிழக அரசுக்கு பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றார் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுசாமி. 
அந்த வகையில் திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் விவசாயிகள் விளைவித்த நெல்மணிகளை மத்திய அரசு நிர்ணயம் செய்த தனியார் நிறுவனமான NCCF நிறுவனம் கொள்முதல் செய்து வந்துள்ளது. மூன்று மாதங்கள் கொள்முதல் செய்த நெல்லுக்கு உண்டான தொகையை விவசாயிகளுக்கு தற்பொழுது வரை வழங்கவில்லை. விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய 400 கோடி ரூபாய்க்கும் மேல் உள்ள நிலுவைத் தொகையினை தமிழக அரசு உடனடியாக விவசாயிகளுக்கு பெற்றுத்தர தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், தமிழக அரசை இந்த அறிக்கையின் வாயிலாக வலியுறுத்துவதாக சங்கத்தின் மாநில தலைவர் வேலுசாமி குறிப்பிட்டுள்ளார்.

வியாழன், 4 ஜூன், 2026

கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிக்கு திரும்பிய மாணவச் செல்வங்கள். சேலம்  முருங்கப்பட்டியில் வாசனை மலர்களை கொடுத்து, குழந்தைச் செல்வங்களை  வரவேற்ற பள்ளியின் தலைமை ஆசிரியர்.

கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிக்கு திரும்பிய மாணவச் செல்வங்கள். சேலம் முருங்கப்பட்டியில் வாசனை மலர்களை கொடுத்து, குழந்தைச் செல்வங்களை வரவேற்ற பள்ளியின் தலைமை ஆசிரியர்.

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிக்கு திரும்பிய மாணவச் செல்வங்கள். சேலம்  முருங்கப்பட்டியில் வாசனை மலர்களை கொடுத்து, குழந்தைச் செல்வங்களை  வரவேற்ற பள்ளியின் தலைமை ஆசிரியர்.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு நாளில் புதிய மாணவ மாணவிகளை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு மற்றும் முன்னாள் மாணவர்கள் மலர் தூவி, இனிப்பு வழங்கி வரவேற்கும் நிகழ்வு அதிகாரப்பூர்வமாக 2022-2023 கல்வி ஆண்டு முதல், தமிழக அரசின் வழிகாட்டுதலில் தீவிரப்படுத்தப்பட்டு அன்புடன் வரவேற்கிறோம் என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி 2026 ஆம் ஆண்டு கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிக்கு திரும்பிய மாணவ செல்வங்களை வரவேற்கும் நிகழ்ச்சி சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட முருங்கபட்டி இருவழி அரசு தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. கோடை விடுமுறைக்குப் பின் வரும் மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைத்து, பள்ளி மீதான ஆர்வத்தை  அதிகரிக்கும் வகையில் நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைவர் கு. சரவணன் தலைமை வகித்தார். 
பள்ளிகளில் தோரணங்கள் கட்டப்பட்டு, மேள தாளங்களுடன், ஆசிரியர்கள் மலர் கொடுத்து மாணவர்களை ஆசிரியர் பயிற்றுனர் திருமதி தேன்மொழி வாசனை மலர்களை கொடுத்து வரவேற்றார். புதிய பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் விலையில்லாப் பொருட்கள் முதல் நாளிலேயே வழங்கப்படுகின்றன. இந்த பாரம்பரியம், 2026-27 கல்வி ஆண்டில், ஜூன் 4, 2026 அன்று, கோடை வெப்பம் காரணமாக சற்று தாமதமாகத் திறக்கப்பட்டது என்பதும், விழா கோலாகலமாக நடைமுறைப்படுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 2 ஜூன், 2026

சேலம் எடப்பாடியில் தீபம் அறக்கட்டளையின் சார்பில் 15 வது ஆண்டாக மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.

சேலம் எடப்பாடியில் தீபம் அறக்கட்டளையின் சார்பில் 15 வது ஆண்டாக மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.

சேலம்,
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் எடப்பாடியில் தீபம் அறக்கட்டளையின் சார்பில் 15 வது ஆண்டாக மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா. 

சேலம் தீபம் அறக்கட்டளையின் சார்பில் ஆண்டுதோறும் சேலம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அரசு பள்ளி மாணவ மாணவிகளின் நலன் கருதி பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள குஞ்சாம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு கல்வி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளியின் தலைமை ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் தீபம் அறக்கட்டளையின் தலைவர் முனைவர் பழனிச்சாமி மற்றும் செயலாளர் சிட்டிசன் ஹரி பாஸ்கர் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நடைபெற்ற முடிந்த அரசு பொது தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கும் பள்ளி அளவிலும், மாவட்ட அளவிலும் மற்றும் மாநில அளவில் விளையாடி பள்ளிக்கு பெருமை சேர்த்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கௌரவித்தனர். 15 வது ஆண்டாக நடைபெற்ற இந்த நிகழ்வில்,  பள்ளியின் ஆசிரியர் பெருமக்கள் மாணவ மாணவிகள் எடப்பாடி நகரின் முக்கிய பிரமுகர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

திங்கள், 1 ஜூன், 2026

தவெக அரசு குறுவை சாகுபடி செய்ய இந்தாண்டு திட்டமிட்டபடி ஜூன் 12க்குள் தமிழ்நாட்டிற்கு உண்டான  காவிரி உரிமை பங்கீட்டு தண்ணீரை பெற்றுத் தர மறுத்தால், தனது தலைமையில் கர்நாடக அணைக்கு சென்று தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி உரிமை பங்கீட்டு தண்ணீரை திறப்போம். தமிழக அரசுக்கு தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி நினைவூட்டல்.

தவெக அரசு குறுவை சாகுபடி செய்ய இந்தாண்டு திட்டமிட்டபடி ஜூன் 12க்குள் தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி உரிமை பங்கீட்டு தண்ணீரை பெற்றுத் தர மறுத்தால், தனது தலைமையில் கர்நாடக அணைக்கு சென்று தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி உரிமை பங்கீட்டு தண்ணீரை திறப்போம். தமிழக அரசுக்கு தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி நினைவூட்டல்.

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

தவெக அரசு குறுவை சாகுபடி செய்ய இந்தாண்டு திட்டமிட்டபடி ஜூன் 12க்குள் தமிழ்நாட்டிற்கு உண்டான  காவிரி உரிமை பங்கீட்டு தண்ணீரை பெற்றுத் தர மறுத்தால், தனது தலைமையில் கர்நாடக அணைக்கு சென்று தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி உரிமை பங்கீட்டு தண்ணீரை திறப்போம். தமிழக அரசுக்கு தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி நினைவூட்டல்.

டெல்டா மாவட்டங்களின் ஜீவாதாரமாக விளங்கி வரும் சேலம் மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்ட பிறகு, டெல்டா பாசனத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டு ஜனவரி மாதம் 28ஆம் தேதி வரை தண்ணீர் திறந்து விட வேண்டும் என்பது விதி. அந்த வகையில் மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளும் குருவை சம்பா மற்றும் தாளடி விவசாயத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட தேதியான ஜூன் 12 தண்ணீர் திறந்து விடப்படுமா என்ற சந்தேகம் டெல்டா மாவட்ட விவசாயிகள் இடையே எதிர்பார்ப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி தமிழக அரசுக்கு நினைவூட்டல் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். 
அந்த கடிதத்தில், தமிழ்நாடு அரசு காவிரி டெல்டா விவசாயிகள் நலன் கருதி ஆண்டுதோறும் குறுவை சாகுபடிக்காக ஜூன் மாதம் 12ஆம் தேதி மேட்டூர் அணையை திறப்பது வழக்கம். இதில் சுமார் 5 லட்சம் ஏக்கருக்கு மேலான நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த ஆண்டு வருகின்ற 12 ந் தேதி குறுவை சாகுபடி செய்ய மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடுவது குறித்து இதுவரையிலும் தவெக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது  காவிரி டெல்டா விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று பதிவிட்டுள்ள தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி, தவெக அரசு குறுவை சாகுபடி செய்ய இந்தாண்டு திட்டமிட்டபடி தமிழ்நாட்டிற்கு உண்டான  காவிரி உரிமை பங்கீட்டு தண்ணீரை கர்நாடகா அரசிடம் பேசி உரிய நேரத்தில் தண்ணீரை பெற்று தர முன்வர வேண்டும் என்றும் தவெக அரசு வருகின்ற 12 ந் தேதி அன்று மேட்டூர் அணையில் இருந்து உரிய நேரத்தில் கர்நாடகா அரசிடம் உரிய காவிரி உரிமை பங்கீட்டு தண்ணீரை தமிழ்நாட்டிற்கு பெற்று தராமல் கர்நாடகாவில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக நடந்துகொண்டால் இதனை முறியடிக்கும் விதமாக உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் எனது தலைமையில் தமிழக காவிரி டெல்டா பாசன விவசாயிகளை மிகப்பெரிய அளவில் ஒன்று திரட்டி வருகின்ற 12 ந் தேதி அன்று தமிழக எல்லையான ஓசூர் ஜீவ்ஜீவ்வாடியில் இருந்து புறப்பட்டு கர்நாடக அணைக்கு சென்று தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி உரிமை பங்கீட்டு தண்ணீரை திறப்போம் என   தமிழக அரசுக்கு நினைவுபடுத்துகிறேன் அந்த கடிதத்தில் வேலுச்சாமி குறிப்பிட்டுள்ளார்.

சனி, 30 மே, 2026

எம்.சாண்ட், பி. சாண்ட், ஜல்லி, சிப்ஸ் ஏற்றி வரும் லாரி ஓனர் மற்றும் டிரைவர்கள் மீது வழக்கு போடுவதை கனிம வளத்துறை அமைச்சர் கைவிட வேண்டும். சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த மணல் லாரி உரிமையாளர்கள் நல சங்க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.

எம்.சாண்ட், பி. சாண்ட், ஜல்லி, சிப்ஸ் ஏற்றி வரும் லாரி ஓனர் மற்றும் டிரைவர்கள் மீது வழக்கு போடுவதை கனிம வளத்துறை அமைச்சர் கைவிட வேண்டும். சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த மணல் லாரி உரிமையாளர்கள் நல சங்க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

எம்.சாண்ட், பி. சாண்ட், ஜல்லி, சிப்ஸ் ஏற்றி வரும் லாரி ஓனர் மற்றும் டிரைவர்கள் மீது வழக்கு போடுவதை கனிம வளத்துறை அமைச்சர் கைவிட வேண்டும். சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த மணல் லாரி உரிமையாளர்கள் நல சங்க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம். 

சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த மணல் லாரி உரிமையாளர்கள் நல சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில் குரங்கு சாவடியில் நடந்தது. மாவட்ட செயலாளர் கண்ணயன் வரவேற்று பேசினார். பொருளாளர் சந்திரன், மாவட்டத் துணைத் தலைவர் செல்வம், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத்தலைவர் ஏ.கே.பழனிச்சாமி
சிறப்புரையாற்றினார். மாவட்ட தலைமை நிலைய செயலாளர் மாரியப்பன் உட்பட சங்க நிர்வாகிகள் மணல் லாரி உரிமையாளர்கள் ஓட்டுநர்கள் என பலரும் கலந்து கொண்ட இந்த செயற்குழு கூட்டத்தில் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், மணல் லாரி உரிமையாளர்கள், டிப்பர், ஜே.சி.பி சில்லரை வியாபார சங்க நிர்வாகிகள் கலந்து
கொண்டனர். கூட்டத்தில் தமிழக முதல் அமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர்களுக்கு சேலம் மாவட்டம் மணல் லாரி உரிமையாளர் சங்கம் சார்பில் நன்றி தெரிவித்துக்
கொள்கிறோம். எம்.சாண்ட், பி. சாண்ட், ஜல்லி, சிப்ஸ் ஏற்றி வரும் லாரி ஓனர் மற்றும் டிரைவர்கள் மீது வழக்கு போடுவதை கனிம வளத்துறை அமைச்சர் கைவிட வேண்டும். டிரான்ஸ் பாஸ் உடனடியாக அரசு
வழங்க வேண்டும் எந்தெந்த குவாரி என்ற விவரங்களை அரசு வெளியிட வேண்டும் என தமிழ அரசை வலியுறுத்துகிறோம்.காவேரி
படுகைகளில் ஆங்காங்கே அதிக அளவு மணல் தேங்கியுள்ளது. தமிழக முதல்வர் மணல் லாரி உரிமையாளர்கள் பாதுகாக்க
வேண்டியும், டிரைவர்கள், என்ஜினியர்கள், கொத்து வேலை செய்பவர்கள் செங்கல் சூளை செய்பவர்கள் என அனைத்து கட்டுமான தொழில் சார்ந்தவர்கள் 25 லட்சம் பேரின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு உடனடியாக மணல் குவாரிகளை திறக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் திருட்டு மணலை ஒழிக்க தனி சிறப்பு படையை உருவாக்க வேண்டும். பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறைக்க மத்திய மாநில அரசுகள் பெட்ரோல் டீசல் மீதான கலால், வாட் வரியை குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன.

புதன், 27 மே, 2026

தியாகத் திருநாளில் சேலம் கோட்டை ஷபி பாய் அவர்களின் பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

தியாகத் திருநாளில் சேலம் கோட்டை ஷபி பாய் அவர்களின் பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

முக்கிய திருவிழாக்களின் போது, இயன்றதை இல்லாதவருக்கு கொடுத்து உதவும்  உயரிய குணம் கொண்ட *சேலம் கோட்டை ஷபி பாய்*  தியாகத் திருநாளில் வேற்றுமை நீங்கி ஒற்றுமை ஓங்கட்டும் என பக்ரீத் திருநாள் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

செவ்வாய், 26 மே, 2026

தமிழக முதலமைச்சரை சந்திக்க விடாமல், தமிழக விவசாயிகள் சங்க நிர்வாகிகளை தடுத்து நிறுத்திய காவல்துறையினரால் பரபரப்பு. தமிழக விவசாயிகளே காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாகவும் கீழ்த்தரமாகவும் நடத்துவதாகவும் தமிழக விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் வேலுச்சாமி ஆவேசம்.

தமிழக முதலமைச்சரை சந்திக்க விடாமல், தமிழக விவசாயிகள் சங்க நிர்வாகிகளை தடுத்து நிறுத்திய காவல்துறையினரால் பரபரப்பு. தமிழக விவசாயிகளே காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாகவும் கீழ்த்தரமாகவும் நடத்துவதாகவும் தமிழக விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் வேலுச்சாமி ஆவேசம்.

சேலம், 
S.K. சுரேஷ்பாபு. 

தமிழக முதலமைச்சரை சந்திக்க விடாமல், தமிழக விவசாயிகள் சங்க நிர்வாகிகளை தடுத்து நிறுத்திய காவல்துறையினரால் பரபரப்பு. தமிழக விவசாயிகளே காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாகவும் கீழ்த்தரமாகவும் நடத்துவதாகவும் தமிழக விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் வேலுச்சாமி ஆவேசம். 

தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றி கழக தலைமையிலான தமிழக அரசின் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களை சந்திக்க நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் உட்பட மாநில நிர்வாகிகள் சென்னை சென்றிருந்தனர். தமிழக விவசாயிகளின் தீர்க்கப்படாத பிரதான கோரிக்கைகளை வலியுறுத்துவதற்கு நேரம் கேட்பதற்காக தமிழக முதலமைச்சரை சந்திக்க சென்ற தமிழக விவசாய பெருங்குடி மக்களை சென்னை காவல்துறையினர், தமிழக முதலமைச்சரை சந்திக்க அனுமதிக்காமல், தடுத்து நிறுத்தியதோடு மட்டுமல்லாமல் அவர்களை அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டது தமிழக அளவில் விவசாயிகள் இடையே கடும் கொந்தளிப்பினை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையைச் சேர்ந்த தமிழக காவல்துறையினரின் இந்த அநீதியான செயலை கண்டித்து, நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் செய்தியாளர்களிடம் ஆவேசமாக பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள TVK தலைவரும் தமிழக முதலமைச்சர் ஆன ஜோசப் விஜய் அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும் தெரிவித்து தமிழக விவசாயிகளின் நீண்ட கால பிரச்சனைகளான மேகதாது அணை விவகாரம், தென்னை மற்றும் பனை மரங்களில் இருந்து கள்ளிறக்க விதிக்கப்பட்ட தலையை நீக்க கோருவது, நதிநீர் இணைப்பு விவகாரம் மற்றும் பயிர் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு பிரதான பிரச்சனைகள் குறித்து பேசுவதற்கு நேரம் ஒதுக்கி தர வேண்டும் என்று தமிழக முதல்வரை சந்தித்து கடிதம் கொடுப்பதற்காக வந்த தங்களை தமிழக காவல்துறையை சார்ந்த சென்னை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதோடு மட்டுமல்லாமல் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்ட செயலை நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் வன்மையாக தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் தலைவர் வேலுச்சாமி. 
மேலும் அவர் கூறுகையில் அனுமதி கேட்டு நேரம் ஒதுக்கி தர அனுமதி கேட்க வந்தபோது தமிழக முதலமைச்சர் சந்திக்க விடாமல் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதோடு மட்டுமல்லாமல் தமிழக விவசாயிகளை கீழ்த்தரமாக காவல்துறையினர் நடத்துகின்றனர் என்று குற்றம் சுமத்திய வேலுச்சாமி, தமிழக விவசாயிகளுக்கு சென்னையில் ஏற்பட்ட அநீதியை தமிழக முதல்வரின் கவனத்திற்கு கண்டிப்பாக கொண்டு செல்வோம் என்றும், தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட பயிர் கடன் தள்ளுபடி என்பதை ஏற்க முடியாது என்றும், தமிழக முதலமைச்சர் மறுபரிசீலனை செய்து கடந்த காலங்களை போன்று பிரித்தாலும் சூழ்ச்சி இல்லாமல் தமிழக விவசாயிகளின் நலன் கருதி முழு விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். தொடர்ந்து பேசிய அவர் விவசாயிகளின் நலன் கருதி தமிழக அரசு அறிவிக்கும் திட்டங்கள் ஆகட்டும் செயல்பாடுகள் ஆகட்டும் முன்கூட்டியே விவசாய சங்க பிரதிநிதிகளை அழைத்து பேசி மட்டுமே சிறு குறு விவசாயிகளின் பாதுகாக்கும் வகையில் திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்பதோடு மட்டுமல்லாமல் இது போன்ற பயிர் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சரின் இந்த அறிவிப்பு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளதால் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தமிழக அரசு தவருபட்சத்தில் தமிழகத்தில் மிகப்பெரிய அளவிலான தொடர்ச்சியான போராட்டங்கள் மேற்கொள்ள ப்படும் என்று எச்சரிக்கை விடுத்த தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி, தமிழக முதல்வரை சந்திக்க காவல்துறையினர் தடுத்து நிறுத்திய சம்பவம் குறித்து ஊடகங்களில் செய்தி வெளியான பிறகு சென்னையை சேர்ந்த காவல்துறையினர் விவசாயிகள் மீது பற்று உள்ளவர்களை போன்று காட்டிக் கொள்வது வேதனையின் உச்சமாக உள்ளதாகவும் தனது வருத்தத்தை பதிவிட்டால் விவசாயிகள் சங்கத் தலைவர் வேலுச்சாமி. 
இந்த சம்பவம் சென்னை மட்டுமல்லாது தமிழக விவசாயிகள் இடையே கடும் கொந்தளிப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது என்பது மட்டும் நிதர்சனம்.