திங்கள், 26 ஜனவரி, 2026

சேலம் பள்ளிப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற குடியரசு தின கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து அவமதித்த அதிகாரிகள். இந்திய திருநாட்டை அவமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கிராம மக்களை ஒன்று திரட்டி ஆளுநரிடம் புகார் அளிக்க உள்ளதாக சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை...

சேலம் பள்ளிப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற குடியரசு தின கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து அவமதித்த அதிகாரிகள். இந்திய திருநாட்டை அவமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கிராம மக்களை ஒன்று திரட்டி ஆளுநரிடம் புகார் அளிக்க உள்ளதாக சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை...

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் பள்ளிப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற குடியரசு தின கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து அவமதித்த அதிகாரிகள். இந்திய திருநாட்டை அவமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கிராம மக்களை ஒன்று திரட்டி ஆளுநரிடம் புகார் அளிக்க உள்ளதாக சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை...

இந்திய திருநாட்டில் 77 வது குடியரசு தினம் நாடு முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் இன்று கொண்டாடப்பட்டது. மேலும் குடியரசு தினத்தில் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடத்தி பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை தீர்மானங்களாக நிறைவேற்றி உடனடியாக தீர்த்து வைக்க வேண்டும் என தமிழக அரசு ஏற்கனவே உத்தரவு  பிறப்பித்துள்ளது. அதன் அடிப்படையில் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இன்று குடியரசு தின சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக சேலம் அயோத்தியா பட்டணம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிப்பட்டி கிராமத்தில் ஏரிக்காடு சன்னியாசி முனியப்பன் கோவிலில் குடியரசு தின சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த சிறப்பு கிராம சபை கூட்டம் அயோத்தியபட்டினம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் முத்தழகன் மற்றும் அயோத்தியபட்டினம் பள்ளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தனி அலுவலர் ஆரோக்கியநாதன் கென்னடி ஆகியோரின் முன்னிலையில் இந்த கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று துண்டு பிரசுரங்களும்  ஏற்கனவே அச்சிடப்பட்டு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் விநியோகிக்கப்பட்டு இருந்தது.
11 மணிக்கு தொடங்க வேண்டிய குடியரசு தின கிராம சபை கூட்டம் சுமார் இரண்டு மணி நேரம் ஆகியும் தொடங்கப்படவில்லை என்பது வேதனைக்குரிய விஷயம் காரணம். சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளான முத்தழகன் மற்றும் ஆரோக்கியநாதன் கென்னடி ஆகியோர் இந்திய குடியரசு தினத்தை அவமதிக்கும் வகையில் இந்த கிராம சபை கூட்டத்தில் பங்கேற்காததால் இந்த நிலை. பாதுகாப்பிற்கு காவல்துறை அதிகாரிகளும் வந்துவிட்டனர், குறைகளை கூற துப்புரவு பணியாளர்கள் பொதுமக்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே பங்கேற்று இருந்தனர். ஆனால் கிராம சபை கூட்டத்தை முன்னின்று நடத்த வேண்டிய அரசு துறை அதிகாரிகள் வராமல் இந்திய தேசத்தை அவமதித்தனர் இதனால் இந்த கிராம சபை கூட்டம் தொடங்கு கால தாமதம். கிரிக்கெட் மைதானம் தயார், பந்துவீச்சாளர்  தயார் ஆனால் மட்டை பிடிப்பவர்   எங்கே என்ற நிலை இன்று நடைபெற்ற குடியரசு தின  பள்ளிப்பட்டி ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் நிலவியது. நிலைமை இப்படி இருக்க சமையலுக்கு பயன்படுத்தப்படும் கருவேப்பிலையைபோன்று, வேண்டுமென்றால் பயன்படுத்தலாம் வேண்டாம் என்றால் தூக்கி எறியலாம் என்று கணக்கில் பள்ளிப்பட்டி மற்றும் மேட்டுப்பட்டி தாதனுரை சேர்ந்த ஒரே ஊராட்சி செயலர் அவசர அவசரமாக வரவழைக்கப்பட்டு பெயரளவில் முக்கிய கோப்புகள் இல்லாமல் கூட்டம் தொடங்கியது. அந்த பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் ராம்ஜி தர்மன் மற்றும் சித்தரசன் உள்ளிட்டோர் மற்றும்  பஞ்சாயத்து  பணியாளர்கள் துப்புரவு பணியாளர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் சமூக ஆர்வலர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் அதிகாரி திணறியதையும் பார்க்க முடிந்தது. பிறகு பொதுமக்களின் குறைகளை கேட்டு அறியாமல் எந்த விதமான தீர்மானங்களும் நிறைவேற்றாமல்,  தொடங்கிய சில மணித்துளிகளில் கிராம சபை கூட்டம் நிறைவு பெற்றது என்பது வருத்தமளிப்பதாக உள்ளது என கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.
பள்ளிப்பட்டி பஞ்சாயத்தில் ஏற்கனவே இருந்த வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அவரின் கீழ் செயல்பட்ட அதிகாரிகளின் பேரில்  நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஊழல் புகார் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று கொண்டிருப்பதாகவும் மேலும் பல்வேறு ஊழல்கள் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இந்திய திருநாட்டின் முக்கிய நாள் என்று கூட கருதாமல் சம்பந்தப்பட்ட அதாவது முத்தழகன் மற்றும் ஆரோக்கியநாதன் கென்னடி ஆகிய  அதிகாரிகள் இந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தை அவமதித்தது வேதனைக்குரியதாக உள்ளது என்றும் இன்று நடைபெற்ற கூட்டத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே பொதுமக்கள் கலந்து கொண்டதால் இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தை ரத்து செய்துவிட்டு வேறு ஒரு நாளில் அறிவித்து உரிய அதிகாரிகள் பங்கேற்று திரளான மக்கள் கலந்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  இன்று நடந்த இந்த சம்பவத்தை கண்டித்து அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்படி தவறும் பட்சத்தில் பொது மக்களின் ஒத்துழைப்போடு ஆளுநர் அவர்களை நேரில் சந்தித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து வேறு ஒரு நாளில் குடியரசு தின சிறப்பு கிராம சபை கூட்டத்தை  கூட்டத்தை நடத்த வலியுறுத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.
அயோத்தியாபட்டணம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளும் சரி பள்ளிப்பட்டி பஞ்சாயத்து அதிகாரிகளும் சரி அடிமட்ட ஊழியர்களை மிரட்டி அடிபணிய வைக்கின்றனர் என்ற குற்றச்சாட்டும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 25 ஜனவரி, 2026

தமிழக விவசாயிகளின் நலனில் மத்திய அரசு நடுநிலையோடு செயல்பட வேண்டும். 2026 சட்டமன்றத் தேர்தலில் NDA கூட்டணி ஆட்சி மாற்றத்தை தமிழ் மக்கள் விரும்புவார்கள். பிரதமருக்கு உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி அறிக்கையின் வாயிலாக நினைவூட்டல்.

தமிழக விவசாயிகளின் நலனில் மத்திய அரசு நடுநிலையோடு செயல்பட வேண்டும். 2026 சட்டமன்றத் தேர்தலில் NDA கூட்டணி ஆட்சி மாற்றத்தை தமிழ் மக்கள் விரும்புவார்கள். பிரதமருக்கு உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி அறிக்கையின் வாயிலாக நினைவூட்டல்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

தமிழக விவசாயிகளின் நலனில் மத்திய அரசு நடுநிலையோடு செயல்பட வேண்டும். 2026 சட்டமன்றத் தேர்தலில் NDA கூட்டணி ஆட்சி மாற்றத்தை தமிழ் மக்கள் விரும்புவார்கள். பிரதமருக்கு உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி அறிக்கையின் வாயிலாக நினைவூட்டல்.

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர்கள் வேலுச்சாமி பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு அறிக்கையின் வாயிலாக நினைவூட்டல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் வருகின்ற சட்ட மன்றத் தேர்தலில், பாஜக தேசிய ஜனநாயக கூட்டணியைதான்   தமிழ்நாடு விரும்புகிறது என்று  செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற தேர்தல் பொது கூட்ட பிரச்சாரத்தின் போது தமிழகத்திற்கு வருகை தந்த  இந்திய பாரத பிரதமர் நரேந்திர மோடி  கூறிய வார்த்தை தமிழகமே திரும்பி பார்க்க வைக்கும் வகையில் பேசுபொருளாக இருந்தது தமிழக விவசாயிகள் தேசிய ஜனநாயக கூட்டணியை  விரும்ப வேண்டும் என்றால் மத்திய அரசு ஏற்கனவே நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு கொடுத்த தேர்தல் வாகுறுதியான விவசாயிகள் விளை நிலத்தில் விளைவித்த விளை பொருட்களுக்கு லாபகரமான விளை நிர்ணயம் MSP-யை உடனடியாக அறிவித்தது விவசாயிகள் பயன்பெறும் வகையில் நடைமுறைக்கு மத்திய அரசு கொண்டுவர வேண்டும்.
மேலும் வருகின்ற 2026-2027 ஆம் ஆண்டு மத்திய அரசு நிதிநிலை அறிக்கையில் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் வேளாண்துறை மூலம் வளர்ச்சி பெறும் வகையில்  விவசாயிகளுக்கு  மானிய திட்டம் மூலம் வழங்கப்படும் நிதி இனிவரும் காலங்களில்  நேரடியாக  விவசாயிகள் வங்கி கணக்கு எண்ணிற்கே   மத்திய அரசு வழங்க வேண்டும்.
நாடுமுழுவம் உள்ள விவிசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான விவசாயிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கிய பயிர் மற்றும் பண்ணை அபிவிருத்தி கடன் முழுவதும் மத்திய அரசு உடனடியாக தள்ளுபடி செய்யவேண்டும். தமிழக விவசாயிகள் நலன் கருதி மத்திய அரசு ஏற்கனவே அறிவித்த கோதாவரி காவேரி இணைப்பு திட்டம் விரைந்து செயல்படுத்தி விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் 2026-2027 ஆம் ஆண்டு மத்திய அரசு நிதிநிலை அறிக்கையில் கூடுதலாக நிதி ஒதிக்கீடு செய்யவேண்டும்.
தமிழக விவசாயிகள் வாழ்வாதாரம் வளர்ச்சியடையும்  வகையில் புதிய தொழில்நுட்ப  கண்டுபிடிப்புடன் கூடிய தேசிய வேளாண் கல்லூரியை, மத்திய அரசு வரும் காலங்களில் 2026-2027ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் மத்திய அரசு அறிவித்து தமிழக விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர முன்னேற்பாடு குறித்து தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசு தலையிட்டு தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி உரிமை  பங்கீட்டு தண்ணீரை கர்நாடகா மாநிலத்தில் இருந்து தினந்தோறும் விகிதாச்சார அடிப்படையில் காவிரியில் திறந்து விட மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.காவிரி  தண்ணீரை இனிவரும் காலங்களில்  பருவம் தவறாமல் தமிழ்நாட்டிற்கு காவிரி உரிமை தண்ணீரை கர்நாடகா மாநிலத்தில் இருந்து முறையாக திறந்துவிட இனிவரும் காலங்களில் மத்திய அரசு நடுநிலையோடு செயல்பட வேண்டும். 
எனவே அதன் பிறகுதான் தமிழக விவசாயிகள்  2026 ல் நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மாற்றத்தை தமிழ்நாட்டில் தமிழ் மக்கள் விரும்புவார்கள் என்பதை மாண்புமிகு இந்திய பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் இந்த அறிக்கையின் வாயிலாக நினைவுபடுத்துகி றேன் என்று உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி குறிப்பிட்டுள்ளார்.

செவ்வாய், 20 ஜனவரி, 2026

தமிழகத்தில் கள்ளு குண்டான தடையை நிரந்தரமாக நீக்க கோரி விவசாயிகள் சங்கத் தலைவர் வேலுச்சாமி தமிழக அரசுக்கு கோரிக்கை. ஏற்கனவே தமிழக விவசாயிகளின் கோரிக்கையை நிராகரித்த திமுக அரசை நடைபெற உள்ள 2026 சட்டமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சி வரிசையில் கூட அமர வைக்க மாட்டோம் என்றும் சூளுரை.

தமிழகத்தில் கள்ளு குண்டான தடையை நிரந்தரமாக நீக்க கோரி விவசாயிகள் சங்கத் தலைவர் வேலுச்சாமி தமிழக அரசுக்கு கோரிக்கை. ஏற்கனவே தமிழக விவசாயிகளின் கோரிக்கையை நிராகரித்த திமுக அரசை நடைபெற உள்ள 2026 சட்டமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சி வரிசையில் கூட அமர வைக்க மாட்டோம் என்றும் சூளுரை.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

தமிழகத்தில் கள்ளு குண்டான தடையை நிரந்தரமாக நீக்க கோரி விவசாயிகள் சங்கத் தலைவர் வேலுச்சாமி தமிழக அரசுக்கு கோரிக்கை. ஏற்கனவே தமிழக விவசாயிகளின் கோரிக்கையை நிராகரித்த திமுக அரசை நடைபெற உள்ள 2026 சட்டமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சி வரிசையில் கூட அமர வைக்க மாட்டோம் என்றும் சூளுரை.

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயி சங்க மாநிலத் தலைவர் வேலுசாமி அவர்கள் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசுகையில், தமிழக விவசாயிகள் நிலத்தில் தென்னை மற்றும் பனைமரத்தில் இருந்து இறக்கி எடுக்கப்படும் கள்ளுக்கு   தடையை நீக்க கோரி உழவர் பெருந்தலைவர் நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பாக பலமுறை தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தது தமிழ்நாடு அரசு விவசாயிகளின் கோரிக்கையை மறுத்து விட்டு மதுவுக்கு தான் இன்று முக்கியத்துவம் கொடுக்கிறது டாஸ்மாக் மதுக்கடை தமிழ்நாட்டில் அதிகப்படியாக திறந்து விட்டு அதற்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டு இயற்கையான பானமான தென்னை மற்றும் பனை மரத்திலிருந்து இறக்கப்படும்  கள்ளு மனிதன் உடலில் உள்ள நோய் பிணியை போக்கூடிய அருமருந்தாக உள்ளது.இன்னும்  இந்த  இயற்கை பானத்திற்கு மட்டும் தடையை  நீக்கவில்லை பக்கத்து மாநிலத்தில் கேரளா பாண்டிச்சேரி ஆந்திரா தெலுங்கானா கர்நாடகா ஆகிய மாநிலத்தில் கள்ளுக்கு தடையில்லை தமிழ்நாட்டில் மட்டும்தான் கள்ளுக்கு  உண்டான தடை இந்த தடையை நீக்க  திமுக அரசு செவி சாயிக்காத காரணத்தை முன்னிட்டு உழவர் பெருந்தலைவர்  நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் முதல் முதலாக எனது விவசாய நிலத்தில்  உள்ள தென்னந் தோப்பில் கள்ளு கட்டி முதல் முதலாக சந்தைப்படுத்தினேன் கடந்த ஒன்பதாவது மாதம் அதனைப் பொறுத்துக் கொள்ளாமல் தமிழ்நாடு முதலமைச்சர்  காவல்துறையை ஏவல் துறையாக பயன்படுத்தி என் மீது கள்ளு இறக்கிய வழக்கை பதிவு செய்து இன்று நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் நீதிமன்றத்தில் காவல்துறை என்னை ஆஜர் படுத்திருக்கின்றது. தமிழக விவசாயிகளின் கோரிக்கைக்கும் உரிமைக்காகவும் விவசாயிகள் சங்க தலைவர்கள் போராடினால் தமிழகத்தில் ஆட்சி பொறுப்பில் இருக்கும் திராவிட மாடல அரசு பொறுத்துக் கொள்ளாமல் வழக்கைப்பதிவு விவசாயிகள் சங்க தலைவர்களை தமிழகம் முழுவதும் கைது செய்துள்ளது. இந்த திராவிட மடல் அரசை 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஓட ஓட விரட்டி அடித்து இன்னும் எத்தனை ஆண்டு காலம் வந்தாலும் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் அமர விட மாட்டோம் என சூளுரை ஏற்று உள்ளோம் என உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழக முதலமைச்சருக்கு எச்சரிக்கை விடுக்கின்றது. வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கள்ளுக்கு  உண்டான தடையை நீக்குகிறோம் எனக் வாக்குறுதி   கூறுகிறதோ அந்த கட்சிக்கு தமிழக விவசாயிகள் சங்கம் முழு ஆதரவு கொடுக்கும் என தெரிவித்தார்.மிழகத்தில் கள்ளுக்கு குண்டான தடையை நிரந்தரமாக நீக்க கோரி தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் வேலுச்சாமி தமிழக அரசுக்கு கோரிக்கை.
உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயி சங்க மாநிலத் தலைவர் வேலுசாமி அவர்கள் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசுகையில், தமிழக விவசாயிகள் நிலத்தில் தென்னை மற்றும் பனைமரத்தில் இருந்து   இறக்கி எடுக்கப்படும் கள்ளுக்கு   தடையை நீக்க கோரி உழவர் பெருந்தலைவர் நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பாக பலமுறை தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்ததும் தமிழ்நாடு அரசு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்க்க மறுத்து விட்டு மதுவுக்கு தான் இன்றுவரை முக்கியத்துவம் கொடுக்கிறது டாஸ்மாக் மதுக்கடை தமிழ்நாட்டில் அதிகப்படியாக திறந்து விட்டு அதற்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டு இயற்கையான பானமான தென்னை மற்றும் பனை மரத்திலிருந்து இறக்கப்படும்  கள்ளு மனிதன் உடலில் உள்ள நோய் பிணியை போக்கூடிய அருமருந்தாக உள்ளது.இன்னும்  இந்த  இயற்கை பானத்திற்கு மட்டும் தடையை  நீக்கவில்லை தமிழகத்தை ஒட்டியுள்ள பக்கத்து மாநிலமான கேரளா பாண்டிச்சேரி ஆந்திரா தெலுங்கானா கர்நாடகா ஆகிய மாநிலத்தில் கள்ளுக்கு தடையில்லை தமிழ்நாட்டில் மட்டும்தான் கள்ளுக்கு  உண்டான தடை இந்த தடையை நீக்க  திமுக அரசு செவி சாயிக்காத காரணத்தை முன்னிட்டு உழவர் பெருந்தலைவர்  நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் முதல் முதலாக நாமக்கல் மாவட்டம் கோனூர் ஊராட்சி எனது விவசாய நிலத்தில்  உள்ள தென்னந் தோப்பில் கள்ளு கட்டி இறக்கி முதல் முதலாக சந்தைப்படுத்தினேன் கடந்த 2025 ஆம் ஆண்டு ஒன்பதாவது மாதம் அதனைப் பொறுத்துக் கொள்ளாமல் தமிழ்நாடு முதலமைச்சர்  காவல்துறையை ஏவல் துறையாக பயன்படுத்தி என் மீது கள்ளு இறக்கிய வழக்கை பதிவு செய்து இன்று நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் மதுவிலக்கு காவல்துறை என்னை ஆஜர் படுத்தப்பட்டது. தமிழக விவசாயிகளின் கோரிக்கைக்கும் உரிமைக்காகவும் விவசாயிகள் சங்க தலைவர்கள் தமிழகத்தில் போராடினால் தமிழகத்தில் ஆட்சி பொறுப்பில் இருக்கும் திராவிட மாடல் அரசு பொறுத்துக் கொள்ளாமல் வழக்கைப்பதிவு விவசாயிகள் சங்க தலைவர்களை தமிழகம் முழுவதும் கைது செய்துள்ளது. இந்த திராவிட மடல் அரசை 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஓட ஓட விரட்டி அடித்து இன்னும் எத்தனை ஆண்டு காலம் வந்தாலும் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் அமர விட மாட்டோம் என சூளுரை ஏற்று உள்ளோம் என உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழக முதலமைச்சருக்கு எச்சரிக்கை விடுக்கின்றது. வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கள்ளுக்கு  உண்டான தடையை நீக்குகிறோம் எனக் வாக்குறுதி   கூறுகிறதோ அந்த கட்சிக்கு தமிழக விவசாயிகள் சங்கம் முழு ஆதரவு கொடுத்து ஆட்சி பொறுப்பில் அமரவைப்போம் என தெரிவித்தார்.

திங்கள், 19 ஜனவரி, 2026

வாசன் கண் மருத்துவமனை சார்பில் சேலத்தில் சாலை பாதுகாப்பு வார விழா. ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியினை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மற்றும் சேலம் மேற்கு போக்குவரத்து ஆய்வாளர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

வாசன் கண் மருத்துவமனை சார்பில் சேலத்தில் சாலை பாதுகாப்பு வார விழா. ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியினை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மற்றும் சேலம் மேற்கு போக்குவரத்து ஆய்வாளர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

வாசன் கண் மருத்துவமனை சார்பில் சேலத்தில் சாலை பாதுகாப்பு வார விழா. ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியினை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மற்றும் சேலம் மேற்கு போக்குவரத்து ஆய்வாளர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். 

சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள வாசன் கண் மருத்துவமனை சார்பில் ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் கண் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவில் சேலம் வாசன் கண் மருத்துவமனையின் மருத்துவர்கள் டாக்டர் செல்வகுமாரி, டாக்டர் சந்தனா,  டாக்டர் லாவண்யா மற்றும்  டாக்டர் சுவர்ணலதா ஆகியோர் முன்னிலை வகித்த விழாவில்,  சேலம் வட்டார போக்குவரத்து அலுவலர் கோகிலா மற்றும் சேலம் மாநகர மேற்கு போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் கிட்டு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு குத்து விளக்குகளை ஏற்றி வைத்ததோடு மட்டுமல்லாமல் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கான பதாகையும் வெளியிட்டு விழாவினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினர். 
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜனவரி 11ஆம் தேதி முதல் பிப்ரவரி 11ஆம் தேதி வரை சேலம் வாசன் கண் மருத்துவமனையில் அனைத்து ஓட்டுநர்களுக்கும் இலவச கண் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என நிர்வாகம் தெரிவித்த இந்த நிகழ்வில் கண் பாதுகாப்பு சாலை பாதுகாப்பு குறித்து விரிவாக விளக்கி கூறப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ டாக்ஸி மற்றும் கனரக வாகன ஓட்டுநர்கள் கலந்து கொண்டு இலவச கண் பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்று பயன் பெற்றனர்.

வெள்ளி, 16 ஜனவரி, 2026

சேலத்தில் கலை கட்டிய மாட்டுப்பொங்கல். என்று பாமக மாநில மாநில ஒருங்கிணைப்பாளர்  கார்த்தி குடும்பத்தாருடன் உற்சாகம்.

சேலத்தில் கலை கட்டிய மாட்டுப்பொங்கல். என்று பாமக மாநில மாநில ஒருங்கிணைப்பாளர் கார்த்தி குடும்பத்தாருடன் உற்சாகம்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு.

சேலத்தில் கலை கட்டிய மாட்டுப்பொங்கல். என்று பாமக மாநில மாநில ஒருங்கிணைப்பாளர்  கார்த்தி குடும்பத்தாருடன் உற்சாகம். 

சேலத்தில்  மாட்டுப் பொங்கல் சீறும் சிறப்புமாக கொண்டாடப்பட்டது. ஏற்காடு அடிவாரம் அருகே உள்ள  வினாயகம்பட்டி பகுதியில் பாமக மாநில ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கார்த்தி. விவசாய குடும்பத்தை சார்ந்தவர் ஆன இவர் இன்று தமிழக முழுவதும் கலைக்கட்டி உள்ள மாட்டுப் பொங்கல் தனது இல்லத்தில் புது பானையில் பொங்கலுக்கு தங்களது வீட்டில் உள்ள உள்ள கால்நடைகளுக்கு சிறப்பு பூஜை மேற்கொண்டு பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தார்.  மேளதாளம் முழங்க கால்நடைகளுக்கு சீர்வரிசை கொண்டு வந்து அவைகளுக்கு மாலை அணிவித்து பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தினார்.
பின்னர் இயற்கை வணங்கும் விதமாக பூஜை செய்து தான் வளர்த்து வந்த பசுக்களுக்கு உணவளித்து மகிழ்ந்தனர். கிராமப்புறத்திற்கே உரித்தான சில சம்பிரதாயங்களுடன் கொண்டாடப்பட்ட இந்த பொங்கல் திருவிழாவில் பெற்றோர் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

புதன், 14 ஜனவரி, 2026

சேலத்தில் பிரசித்தி பெற்ற அரிசிபாளையம் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் தை  பெருவிழாவையொட்டி மகா சக்தி அழைப்பு நிகழ்ச்சி. ஆயிரக்கணக்கான வீர குமாரர்கள் தங்களது உடலில் கத்தி போட்டு அம்மனை வரவேற்றனர்.

சேலத்தில் பிரசித்தி பெற்ற அரிசிபாளையம் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் தை பெருவிழாவையொட்டி மகா சக்தி அழைப்பு நிகழ்ச்சி. ஆயிரக்கணக்கான வீர குமாரர்கள் தங்களது உடலில் கத்தி போட்டு அம்மனை வரவேற்றனர்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலத்தில் பிரசித்தி பெற்ற அரிசிபாளையம் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் தை  பெருவிழாவையொட்டி மகா சக்தி அழைப்பு நிகழ்ச்சி. ஆயிரக்கணக்கான வீர குமாரர்கள் தங்களது உடலில் கத்தி போட்டு அம்மனை வரவேற்றனர். 

சேலம் அரிசி பாளையத்தில் 120 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் தை பெருவிழா ஜனவரி மாதம் 15 ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன் அடிப்படையில் நட்பாண்டிற்கான ஸ்ரீ  சௌடேஸ்வரி அம்மன் தை  பெருவிழாவை முன்னிட்டு இன்று திருக்கோவில் மகா சக்தி அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக சேலம் அரிசி பாளையம் தெப்பக்குளம் அருகே உள்ள விநாயகர் ஆலயத்தில் இருந்து சக்தி அழைப்பு நிகழ்வு தொடங்கியது.அலங்கரிக்கப்பட்ட அம்மனின் உற்சவமூர்த்திக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 
தொடர்ந்து அங்கு திரண்டு இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களின் சரண கோஷங்கள் முழங்க சக்தி அழைப்பு ஊர்வலம் தொடங்கியது. அப்பொழுது கலந்த ஒரு மாத காலங்களாக அம்மனுக்கு விரதம் இருந்து வீர குமாரர்கள் வழி நெடுங்கிலும் தங்களது உடல்களில் கத்தி போட்டு ரத்தம் வடிய வடிய ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மணி வரவேற்று சென்றனர். அரிசி பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளின் முக்கிய வீதிகளின் வழியாக நடைபெற்ற இந்த சக்தி அழைப்பு நிகழ்வானது இறுதியில் திருக்கோவிலை அடைந்தது. தொடர்ந்து மூலவரான ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு விழா இனிதே தொடங்கியது.
தொடர்ந்து மாலை வெள்ளம் கரும்பு ஆகியவற்றை கொண்டு அலங்கார பந்தலில் சிறப்பு பூஜையும், நாளை பதினாறாம் தேதி பண்டாரி மற்றும் சாமுண்டி அழைத்தல் நிகழ்வும் தொடர்ந்து 19ஆம் தேதி மஞ்சள் நீர் மேலமனை தொடர்ந்து மாலை சதாபரண நிகழ்வுடன் இந்த ஆண்டிற்கான விழா இனிதே நிறைவு பெற உள்ளது. அரிசிபாளையம் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில் தைப்பிருவிழாவில் மகா சக்தி அழைப்பு நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவு பெற்றது. 
அப்பொழுது திரண்டு இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கைகளை தட்டியும் அம்மனின் சரண கோஷங்களை எழுப்பியும் வழிபட்டது விண்ணை பிளக்கும் வகையில் அமைந்திருந்தது. 
பட்டக்காரர் செட்டி தனக்காரர்கள் பெரிய தனக்காரர் மற்றும் குலமக்கள் அனைவரின் முன்னிலையிலும் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு மகாதீப ஆராதனைகள் காட்டப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை சேலம் அரிசிபாளையம் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் பெருவிழா கமிட்டி தலைவர் ரசம். ரவி செயலாளர், ஆட்ர. கார்த்திகேயன் மற்றும் பொருளாளர் ஆட்ர.  மோகன் உள்ளிட்ட கௌரவ தலைவர்கள் துணைத் தலைவர்கள் துணைச் செயலாளர்கள் ஆலோசனை குழு உறுப்பினர்கள் துணைப் பொருளாளர்கள் பெருவிழா கமிட்டி செயல் உறுப்பினர்கள் என விழா கமிட்டியினர் மிகவும் சிறப்பாக செய்திருந்தனர்.

செவ்வாய், 13 ஜனவரி, 2026

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை சமத்துவ பொங்கல் ஆக கொண்டாடி மகிழ்ந்த ராகுல் இளைஞர்கள் மற்றும் அனைத்து தற்காப்பு கலைத்துறை நிர்வாகிகள்.

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை சமத்துவ பொங்கல் ஆக கொண்டாடி மகிழ்ந்த ராகுல் இளைஞர்கள் மற்றும் அனைத்து தற்காப்பு கலைத்துறை நிர்வாகிகள்.

சேலம். 
S.K. சுரேஷ் பாபு. 

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை சமத்துவ பொங்கல் ஆக கொண்டாடி மகிழ்ந்த ராகுல் இளைஞர்கள் மற்றும் அனைத்து தற்காப்பு கலைத்துறை நிர்வாகிகள். 

தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழா போகையுடன் தொடங்கி, தொடர்ந்து நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் நகர்ப்புறம் உட்பட கிராமப்புறங்களிலும் வெகு உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், ராகுல் இளைஞர்கள் மற்றும் அனைத்து தற்காப்பு கலை துறையின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா அம்மாப்பேட்டை காமராஜர் நினைவு வளைவு அருகே உள்ள விநாயகர் கோவிலில் நடைபெற்றது. அமைப்பின் தேசிய தலைவர் விஜய லட்சுமணன் தலைமையில் நடைபெற்ற விழாவில் புது பானையில் பொங்கலிட்டு மகிழ்ந்த நிர்வாகிகள் அனைவரும், ஸ்ரீ வாசவி கணபதி திருக்கோவில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகளை மேற்கொண்டனர். 
விஜய லட்சுமணன் உட்பட நிர்வாகிகளுக்கு திருக்கோவிலின் சார்பில் பரிவட்டம் கட்டப்பட்டு முதல் மரியாதை செலுத்தப்பட்டு ஸ்ரீ வாசவி கணபதிக்கு மகா தீபாராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து குழந்தைகள் உட்பட பெரியவர்கள் அனைவருக்கும் சுவாமிக்கு படைத்த பொங்கல் பிரசாதமாக வழங்கி மகிழ்ந்தனர். தேசிய அளவில் டென்னிஸ் கிரிக்கெட் பால் அணியில் நமது பிள்ளைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது இந்த பொங்கல் விழாவிற்கு தங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு என்றும் விரைவில் ஏழை எளியவர்கள் பயன்பெறும் வகையில் அடுத்த ஆண்டு தமிழர் திருநாளிற்குள் மிகப்பெரிய அளவிலான அகாடமி ஒன்று அமைக்கப்படும் என்று ராகுல் இளைஞர்கள் மற்றும் அனைத்து தற்காப்பு கலை துறையின் தேசிய தலைவர் விஜயலட்சுமணன் தெரிவித்தார். 
இந்த விழாவில் காங்கிரஸ் சிறுபான்மை துறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் இர்பான் உட்பட நிர்வாகிகள் ஸ்ரீனிவாசன் ராஜேஷ் தில்லை யுவராஜ் பகத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.