சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
திருப்பி கொடுக்கணும் இல்ல.....
தவேகா நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவின் கருத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் பதிலடி.... ஆதவ் அர்ஜுனாவின் கருத்திற்கு த வெ க தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்து சூப்பர் ஸ்டாரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் ஆதவ் அர்ஜுனாவிற்கு முற்றுப்புள்ளி வைப்போம். சேலத்தில் தீவிர ரஜினி ரசிகர் பாரப்பட்டி கனகராஜ் ஆவேசம்.
2026 தமிழக தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிகழக நிர்வாகி ஆதவா அர்ஜுன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து அவரது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் தேவையற்ற அவதூறு கருத்துக்களை வெளியிட்டுள்ளது தமிழகத்தில் தற்பொழுது அரசியல் களத்தில் பேச்சு பொருள் ஆகியுள்ளது. இதற்கு தமிழக எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய இணை அமைச்சர் எல் முருகன் மற்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் எதிராக பல்வேறு கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், தன் மீது அவதூறு கருத்துக்கள் பரப்பிய தமிழக வெற்றிக்கழக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவிற்கு ரஜினி அறிக்கையின் வாயிலாக தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார். அதில் திரைப்படத்தில் இடம்பெறும் வசனத்தை முன்னுறுத்தி திருப்பி கொடுக்கணும் இல்ல... காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும் என்று ஆதார் அர்ஜுனாவிற்கு பதிலடி கொடுத்துள்ளார் உலக திரை உலகின் சூப்பர் ஸ்டாராக கருதப்படும் ரஜினிகாந்த் பதிலடி கொடுத்துள்ளார். ரஜினிகாந்தின் இந்த கண்டன பதிவு தமிழக அரசியல் களத்தில் மிகவும் ஒரு பரபரப்பான சூழ்நிலையில் தமிழக வெற்றி கழகத்திற்கு எதிராக இவ்வளவு கண்டன அறிக்கை தற்பொழுது வெளியாகி உள்ளது என்பது ஒரு பரபரப்பு பேச்சு பொருளாகவே தற்பொழுது தமிழகத்தில் எழுந்துள்ளது. ரஜினிகாந்தின் இந்த தமிழக வெற்றி கழகத்திற்கு எதிரான இந்த கண்டன பதிவு, தமிழகம் உட்பட ஏன் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ள இந்த அவதூறு கருத்திருக்கு சேலம் மாவட்டமும் விட்டு வைக்கவில்லை. தற்பொழுது சேலத்திலும் இந்த பிரச்சனை பூதாகரமாக கிளம்பியுள்ளது.
சேலத்தை சேர்ந்த மிகப் பெரிய தொழில் அதிபரும் ரஜினியின் தீவிர பக்தருமான பாரப்பட்டி கனகராஜ் நம்முடைய கூறுகையில், அரசியலைக் கடந்து அனைவராலும் மதிக்கப்படும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தமிழக வெற்றி கழக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் கட்சியை தொடங்குவதாக அறிவித்து பல்வேறு காரணங்களுக்காக அரசியல் இருந்து விலகியது அவரவருடைய விருப்பம் என்றும் குறிப்பிட்ட சேலம் பாரப்பட்டி கனகராஜ், தற்போது உள்ள சூழலிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா வரமாட்டாரா என்ற பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள ஆதவ் அர்ஜுனாவிற்கு ரஜினி ரசிகர்களாகிய நாங்கள் விரைவில் முற்றுப்புள்ளி வைப்போம் என்றும் குறிப்பிட்டார். மேலும் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி விடுதலை சிறுத்தைகள் கட்சியில் சேர்ந்த அவர் அங்கும் தேவையில்லாத கருத்துக்களை வெளிப்படுத்தி தொல் திருமாவளவன் அவர்களால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஆதவன் அர்ஜுனா தற்பொழுது தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து தான் உண்டு, தன் பணி உண்டு என்று பயணித்துக் கொண்டிருக்கும் உலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மீது அவதூறு கருத்து பரப்பியதற்கு tvk தலைவர் நடிகர் விஜய் ஆதவ் அர்ஜுனாவை கண்டிப்பதோடு ஆதவ் அர்ஜுனா ரஜினிகாந்திடம் மன்னிப்பு கேட்க அறிவுறுத்த வேண்டும் என்று தனது கருத்தை வெளிப்படுத்திய சேலம் பாரப்பட்டி கனகராஜ் தவறும் பட்சத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தமிழக அரசியலில் இல்லை என்றாலும் அவர் கைகாட்டும் கட்சிக்கு வாக்களிக்க தமிழகத்தில் உள்ள அனைத்து ரஜினி ரசிகர்களும் சித்தமாக உள்ளனர் என்றும் அவர் கைகாட்டும் கட்சி மட்டுமே ஆட்சி அமைக்கும் முடியும் என்பது தமிழகத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை. இந்த நிலையில் தேனீ கூட்டில் கல் எறிந்ததை போன்று ஆதம் அர்ஜுனா பேசியதன் விளைவை தமிழக வெற்றி கழகம் வரும் 2026 நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் த வெ க மிகப்பெரிய பின்னடைவை சந்திக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
சேலத்தில் ரஜினி ரசிகர்களின் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவின் கருத்திற்கு அகில உலக சூப்பர் ஸ்டார் என்று கருதப்படும் ரஜினிகாந்த் தனது அறிக்கையில் வெளிப்படுத்தியுள்ள கண்டனம் தமிழக வெற்றி கழகத்திற்கு உண்மையிலேயே இந்த சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை என்பது அரசியல் பிரமுகர்களின் கருத்தாகவே tஉள்ளது. ரஜினிகாந்த் என்ன திருப்பிக் கொடுக்கப் போகிறார் காலம் என்ன பதில் சொல்லும் என்பதை நாமும் பொருத்திருந்து பார்ப்போம்.


